பின்பற்றுபவர்கள்

1 அக்டோபர், 2007

ஆன்மீகம் சைவமா ? அசைவமா ?

அனைத்தையும் படைத்தது இறைவன், எனவே மனிதருக்கான உணவு பொருள்களாக விலங்குகளையும், கடல்வாழ் உயிரினங்களையும் படைத்திருக்கிறார் என்கிறது இந்திய தத்துவம் சாராத வெளிநாட்டு மதங்கள். விலங்குகளை உணவுக்காக கொல்லும் போது கடவுள் பெயரில் கொன்றால் பாவம் இல்லை என்கிறது அவைகள். இந்திய மதங்கள் அனைத்தையும் படைத்தது இறைவன், கருணை வடிவானவன், எனவே அவன் படைப்பான விலங்குகளை கொல்வது பாவம் என்கிறது இந்திய தத்துவங்கள்.

இரண்டும் வேறு வேறு நம்பிக்கையை கொண்டிருந்தாலும் இந்தியம் சாராத இறை கோட்பாடுகளிலும் உயிர்களைக் கொள்வது 'பாவம்' என்ற கருத்து இருந்ததன் பின்பே அவற்றை இறைவனின் பெயரில் கொள்வது பாவமில்லை என்ற கருத்து தோன்றி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 'பாவம்' குறித்து எதுவுமே சொல்லி இருக்காது என்றே நினைக்கிறேன்.

பாவம் / புண்ணியம் என்பதைத் தவிர்த்து பார்த்தால், அசைவம் உண்ணுவது / விலங்குகளை பலி இடுவது இழிவு என்று வலியுறுத்தப்பட்டு சமண/புத்தர் மதங்கள் வளர்ந்தபோது, அம்மதங்களின் உயிர்கொல்லாமை என்பது பாரதம் தழுவிய கருத்தாக இருந்திருக்கிறது. அந்த இழிவிலிருந்து விலக்கிக் கொள்ளவே வைதீக சநாதன தர்மமும் புலால் உணவையும் / வேள்வி பலிகளையும் விலக்கிக் கொண்டது.

காலப்போக்கில் புலால் உணவு உண்ணுபவர் / உண்ணாதாவர் என்ற இருபிரிவுகளாக இந்தியர்ர் இருந்திருக்கின்றனர். இதில் புலால் உண்ணுபவர்கள் அனைவரையும் ஒதுக்கி வைத்திருந்தனர். புலால் உண்ணுவதை திருவள்ளுவரும் 'அண்ணாத்தல் செய்யாது அளறு' என்று கடுமையாகவே சாடி இருக்கிறார்.

'புலால் உண்ணுவது பாவம்' என்ற கருத்து வலுப்பட்டு, அப்படி உண்ணுபவர்களை பாவிகள் என்ற அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர், 'தீண்டாமையின் தோற்றம்' என்பது ஆரம்பத்தில் 'அசைவம் சாப்பிடுபவர்' என்ற அளவிலேயே தொடங்கி இருக்க வேண்டும்.

ஒருமதத்தை ஏற்றுக் கொள்ளும் போது அதை ஏற்றுக் கொண்டு அந்த மதத்தை போற்றுபவர், அம்மதக் கொள்கைகளை முனைந்து கடைபிடிப்பர். மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை நாளடைவில் விட்டுவிடுவர்... ஆனாலும் அந்த மதங்களைச் சேர்ந்தவர்களாகவே அவர்கள் இருப்பர். இதை மதம்மாறியவர் அனைவரின் நிலையை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். ஆரம்பத்தில் சைவமாகிய மதப்பிரிவுகள் அனைத்தும் புலாலை மறுத்து இருக்கின்றனர். ஆனால் பின்பு சென்ற நூற்றாண்டுக்கு முன்பே இந்திய சாதிகள் அனைத்தும் புலால் உணவை தொட(ர) ஆரம்பித்துவிட்டன.

மதக்கோட்பாடுகளை கடைபிடிப்பவருக்கு மதம் சொல்லியுள்ளபடி ஏற்பதும், அவை கூடாது என்று சொல்லி இருப்பதை விலக்குவது எளிது. ஆனால் அந்தந்த மதம் சாரதவர்களுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. மதக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை பல்வேறு மதங்களும் பழித்தே வந்திருக்கிறது. மதங்கள் இந்த நூற்றாண்டில் இருப்பது போன்று முன்பெல்லாம் 'ஆள்பிடிப்பு' வேலைகளில் இரங்கவில்லை. மதங்கள் என்பது.. இன அடையாளம் மற்றும், உயர் வகுப்பு அடையாளமாகவே இன்றும் இருக்கிறது என்பதை, அந்தந்த மதங்களின் தலைமை இடத்தை பற்றி இருக்கும் கரங்களை வைத்தே சொல்லிவிட முடியும்.

புலால் உணவில் தடையில்லை என்பதால் வெளிநாட்டில் கருப்பர்கள் மீதான தீண்டாமை என்பது இன/மத வெறியின் வழி வந்திருக்கிறது. இந்தியாவில் ஒற்றையாக பரிணமித்த மதம் என்பது இந்துமத ஒருங்கிணைப்புக்கு முன்பு இருந்ததே இல்லை. எனவே தீண்டாமை என்பது சைவமா ? அசைவமா ? என்னும் உணவு பழக்கத்தை வைத்தே வந்திருக்கிறது. அப்படி விலக்கி வைத்து அறியப்பட்டவர்களை சாதிய கட்டமைப்பாக்கி அதை தக்கவைத்துக் கொள்ளவும், உயர்வை தாங்கிப்பிடிக்கவும் மனுபோன்ற அரண்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. பறையர் / பள்ளர் எனப்படும் தமிழர் பிரிவில் பறையர் நத்தை சாப்பிடுபவர். பள்ளர் நத்தை சாப்பிடமாட்டார் இது ஒரு வேறுபாடாம். இதுபோன்றே அதாவது அசைவம் சாப்பிடுவதிலும் பன்றி போன்ற விலங்குகளை சாப்பிடுவது தாழ்வாம். இது மதக் கோட்பாடுகளாகவும் இருக்கிறது.

விலங்குகளை உணவின் தேவைக்காக உண்ணுவது பாவ / புண்ணியம் சேர்ந்த கருத்தே அல்ல. விலங்குகள் / இயற்கை மீது அன்பு செலுத்துதல் என்பதற்காக கொல்லாமை வலியுறுத்தப்பட்டு பின்பு, அதை கடுமையாக சொல்ல பாவ / புண்ணியங்களுடன் அது இணைக்கப்பட்டு இருக்கிறது.

சைவம் என்பது கொல்லாமை அடிப்படை கொண்டிருப்பதாலேயே அது மற்றவையை விட உயர்ந்தது என்று சொல்ல முடியாது. மாடு உயிருடன் உழவுக்காக வைத்திருப்பவனுக்கு, மாடு செத்தால் தான் இறைச்சி உணவே கிடைக்கும். இதை மறந்து... இறந்த மாட்டை தோலை உறித்து தின்றார்கள் என்பதற்காக நான்கு தலித்துக்கள் அடித்தே கொல்லப்பட்டார்கள். இன்று சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வைதீகர்கள் முன்பு வேள்வியில் பசுக்களை பலி இட்ட உண்டவர்களே. தற்போதும் வேள்வியில் கொள்ளப்பட்ட விலங்குகளை புசிக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. அவ்வாறு உண்பது கருநாடகத்தில் ஒரு வைதிக கிராமத்தில் நடைமுறையில் இருப்பதாக நக்கீரனின் ஒருமுறை படித்திருக்கிறேன்.

சைவம் உயர்ந்தது என்று நினைப்பவர்களில் 95 விழுக்காட்டினர் வீட்டில் சமைக்காவிட்டாலும் வெளியில் சுவையுடன் இருந்தால் உண்ணுபவர்களாகவே உள்ளனர். சீன புத்தமதத்தின், ஒரு பிரிவினர் முட்டை முட்டை சாப்பிடுவது ஏற்கத்தக்கதாக சொல்கிறார்கள். அதில் சிலர் இந்தியாவில் பல இந்துக்களைப் போலவே மாட்டிறைச்சி உண்ணுவது இல்லை. இந்தியாவில் சில மாநிலங்களில் 'மீன்' சைவ உணவாக கருதப்படுக்கிறது.

புலால் உண்ணுவது பாவமோ / புண்ணியமோ சார்ந்ததல்ல... மாறாக விலங்குகளும் ஒரு உயிர்... அறுக்கும் போது நிச்ச்சயம் துடிக்கும்... என்பதால் அவற்றை தவிர்க்கச் சொல்லுவது, அனைத்து உயிர்கள் மீதான அன்பு சார்ந்த உணர்வு கொள்ளச் சொல்வது மட்டுமே.

மற்றபடி புலால் உணவு கொள்கைக்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன். அப்படி இருந்தால் கொசுக்களையும், மூட்டை பூச்சிகளையும், எலிகளையும் மருந்து வைத்து கொள்ளவேண்டாம் என்று இறைவன் சொல்லி இருப்பார். :)).

உணவு சுழற்சி என்ற அமைப்பில்...விலங்குகளின் உயிர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றால் ...ஆடு/கோழிகளை பலியிட்டு கடவுளின் பெயரால் தாரளமாக சாப்பிடலாம். புலால் உணவு உண்ணாமைக்கும் 'தகுதி' க்கும் தொடர்பு இல்லை. புலால் உண்ணுவதை ஆன்மிகத்துடன் முடிச்சு போடுவது தவறு என்றே நினைக்கிறேன்.


ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
- திருநாவுக்கரசர்

16 கருத்துகள்:

jeevagv சொன்னது…

அன்புதான் ஆன்மீகம்,
ஓருவர் ஏன் புலால் மறுக்க வேண்டும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவா (Jeeva Venkataraman) said...
அன்புதான் ஆன்மீகம்,
ஓருவர் ஏன் புலால் மறுக்க வேண்டும்?
//

ஜீவா,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் இடுகையை படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்.
உங்களிடம் ஒரு கேள்வி.

மற்ற மதங்கள் 'அன்பை' போதிக்கவில்லை என்கிறீர்களா ? தேவைக்கு மட்டுமே தானே கொல்லச் சொல்லி இருக்கிறார்கள்.

அனுசுயா சொன்னது…

//புலால் உண்ணுவது பாவமோ / புண்ணியமோ சார்ந்ததல்ல... மாறாக விலங்குகளும் ஒரு உயிர்... அறுக்கும் போது நிச்ச்சயம் துடிக்கும்... என்பதால் அவற்றை தவிர்க்கச் சொல்லுவது, அனைத்து உயிர்கள் மீதான அன்பு சார்ந்த உணர்வு கொள்ளச் சொல்வது மட்டுமே.//

உண்மையான கருத்து.

கையேடு சொன்னது…

மனிதன் தோன்றிய காலமாக சொல்லப்படுகின்ற பல இலட்சம் ஆண்டுகளையும், அவன் ஒரே இடத்தில் தங்கி தனக்கென்று ஒரு நாகரிகத்தையும், விவசாயம் என்று தாமே உணவு உற்பத்தி செய்து கொள்ளும் திறனை பெண்கள் கண்டுபிடித்த காலத்தையும் ஒப்பிட்டால், விவசாயம் மற்றுப் உணவு உற்பத்தி என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது மட்டுமே. ஆதலால் இந்த உணவு பற்றிய பாகுபாடு அவன் தங்கியிருந்த அல்லது அவனது சூழலுக்கு ஏற்ப உட்படுத்திக் கொண்ட ஒரு சமூக விதியாக இருக்கலாமே தவிர அது ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்கின்ற உங்கள் கருத்து நிச்சயம் ஏற்புடையது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுசுயா said...
//புலால் உண்ணுவது பாவமோ / புண்ணியமோ சார்ந்ததல்ல... மாறாக விலங்குகளும் ஒரு உயிர்... அறுக்கும் போது நிச்ச்சயம் துடிக்கும்... என்பதால் அவற்றை தவிர்க்கச் சொல்லுவது, அனைத்து உயிர்கள் மீதான அன்பு சார்ந்த உணர்வு கொள்ளச் சொல்வது மட்டுமே.//

உண்மையான கருத்து.
//

அனுசுயா அவர்களே,

இந்த கருத்துடன் தாங்களும் உடன்படுவதற்கு மிக்க மகிழ்ச்சி,

நன்றி !

சிவபாலன் சொன்னது…

நல்ல பதிவு ஜிகே.

பகிர்வுக்கு மிக்க நன்றி!

jeevagv சொன்னது…

்க்வ்ச்வ்க்ட்ச்கோவி, நீங்கள் கேட்டது:
One who partakes of human flesh, the flesh of a horse or of another animal, and deprives others of milk by slaughtering cows, O King, if such a fiend does not desist by other means, then you should not hesitate to cut off his head.

Rig Veda Samhita 10.87.16

Protect both our species, two-legged and four-legged. Both food and water for their needs supply. May they with us increase in stature and strength. Save us from hurt all our days, O Powers!

Rig Veda Samhita 10.37.11

O vegetable, be succulent, wholesome, strengthening; and thus, body, be fully grown.

Rig Veda

Those noble souls who practice meditation and other yogic ways, who are ever careful about all beings, who protect all animals, are the ones who are actually serious about spiritual practices.

Atharva Veda Samhita 19.48.5

You must not use your God-given body for killing God's creatures, whether they are human, animal or whatever.

Yajur Veda Samhita 12.32

The ignoble ones who eat flesh, death's agents bind them fast and push them quick into the fiery jaws of hell (Naraka, lower consciousness).

Tirumantiram

In waves of ahimsa, all living beings cease their enmity in the presence of such a person.

Yoga Sutras 2.35

Ahimsa is not causing pain to any living being at any time through the actions of one's mind, speech or body.

Sandilya Upanishad

Having well considered the origin of flesh and the cruelty of fettering and slaying of corporeal beings, let one entirely abstain from eating flesh.

Manu Samhita

The purchaser of flesh performs himsa (violence) by his wealth; he who eats flesh does so by enjoying its taste; the killer does himsa by actually tying and killing the animal. Thus, there are three forms of killing: he who brings flesh or sends for it, he who cuts off the limbs of an animal, and he who purchases, sells or cooks flesh and eats it—all of these are to be considered meat-eaters.

Mahabharata, Anu. 115.40

He who desires to augment his own flesh by eating the flesh of other creatures lives in misery in whatever species he may take his birth.

Mahabharata, Anu. 115.47

Those high-souled persons who desire beauty, faultlessness of limbs, long life, understanding, mental and physical strength and memory should abstain from acts of injury.

Mahabharata 18.115.8

How can he practice true compassion who eats the flesh of an animal to fatten his own flesh?

Tirukural Verse 251

Riches cannot be found in the hands of the thriftless. Nor can compassion be found in the hearts of those who eat meat.

Tirukural Verse 252

Goodness is never one with the minds of these two: one who wields a weapon and one who feasts on a creature's flesh.

Tirukural Verse 253

If you ask, "What is kindness and what is unkind?" it is not killing and killing. Thus, eating flesh is never virtuous.

Tirukural Verse 254

Life is perpetuated by not eating meat. The clenched jaws of hell hold those who do.

Tirukural Verse 255

If the world did not purchase and consume meat, there would be none to slaughter and offer meat for sale.

Tirukural Verse 256

When a man realizes that meat is the butchered flesh of another creature, he must abstain from eating it.

Tirukural Verse 257

Greater than a thousand ghee offerings consumed in sacrificial fires is to not sacrifice and consume any living creature.

Tirukural Verse 259

All that lives will press palms together in prayerful adoration of those who refuse to slaughter and savor meat.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவா (Jeeva Venkataraman) said...
்க்வ்ச்வ்க்ட்ச்கோவி, நீங்கள் கேட்டது:
One who partakes of human flesh, the flesh of a horse or of another animal, and deprives others of milk by slaughtering cows, O King, if such a fiend does not desist by other means, then you should not hesitate to cut off his head.
//

ஜிவா,

திருக்குறள் மற்றும் சைவ சித்தாந்த நூல்களில் உள்ள சைவம் வலியுறுத்தல் தெரியும்.

நீங்கள் கொடுத்திருக்கும் வடமொழி நூல்களின் ஆங்கில விளக்கங்கள் புதிதாக இருக்கிறது.

ஆனால் வேத வழிவேள்விகள் அனைத்தும் பலி இடுவதை வழக்கமாக கொண்டிருந்தன என்றும் பல தகவல்கள் இதைத் தவிர்த்து அரியக் கிடக்கின்றன.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
நல்ல பதிவு ஜிகே.

பகிர்வுக்கு மிக்க நன்றி!

11:33 PM, October 01, 2007
//

சிபா,

நன்றிநவிழலுக்கு நன்றி !

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

எனக்கு சீரியசாகவே ஒரு சந்தேகம்!
சிரிக்காதீங்க! :-)
அசைவம்-னு நாம சாப்பிடறது எல்லாம் சைவம் சாப்பிடும் விலங்கினங்களை மட்டும் தானா? அசைவம் சாப்பிடும் விலங்குகளைச் சாப்பிடுவர் அதிகம் இல்லையே!:-)

//புலால் உணவு உண்ணாமைக்கும் 'தகுதி' க்கும் தொடர்பு இல்லை. புலால் உண்ணுவதை ஆன்மிகத்துடன் முடிச்சு போடுவது தவறு என்றே நினைக்கிறேன்//

மிகவும் சரி!
புலால் உண்பதால் எந்த ஒரு 'தகுதிக்குறைவும்' வருவதில்லை! ஆன்மிக அன்பர்கள் பலரும் ஒரு காலத்தில் புலால் உண்போராகவே இருந்துள்ளனர்! (என்னையும் வேண்டுமானால் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள் :-)

ஆன்மீக சாதனைகள் மற்றும் யோகம்/தவம் வளரத் தான் சில உணவுகளைத் தள்ளி வைக்கச் சொன்னது சமயம் சார்ந்த மருத்துவம். அது வெறும் புலால் மட்டுமல்ல; ஒரு சில கிழங்கு, மரக்கறி வகைகளும் கூடத் தான்!

ஆன்மீக நிலை படிப்படியாக வளர, ஜீவ காருண்யம் தலை தூக்குவதால், புலாலைத் தாமே விட்டொழிக்கின்றனர் பெரும்பாலான ஆன்மீக அன்பர்கள்! அவ்வளவு தான்!
புலான் மறுத்தலை மிகவும் மதிப்பதால் புலால் உண்போரைப் பழிக்கும் அவசியம் ஆன்மீகத்துக்குக் கிடையாது!

நாக்கைக் கட்டாது, மட்டன்,சிக்கன், கருவாடு இல்லாமல் சோறு இறங்காது என்பவரும், நெய் தள தள என்று விட்டுத் தரும் சர்க்கரைப் பொங்கலுக்காகவே நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுவோரும் - இருவருமே ஆன்மிகத்தின் பார்வையில் சமம் தான்! :-))

வள்ளுவர் ஆணித்தரமாகச் சொன்னாலும் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது
கள்ளுண்ணாமை என்று உண்ணவே கூடாது என்று சொல்பவர்
புலால் மறுத்தல் (Renunciation of flesh) என்று "மறுத்தலை" தான் குறிப்பிடுகிறார்! ஆக Renunciation - கொஞ்சம் கொஞ்சமாக விட்டொழிப்பது - ஜீவ காருண்யத்தின் பாற்பட்டது!

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
எனக்கு சீரியசாகவே ஒரு சந்தேகம்!
சிரிக்காதீங்க! :-)
அசைவம்-னு நாம சாப்பிடறது எல்லாம் சைவம் சாப்பிடும் விலங்கினங்களை மட்டும் தானா? அசைவம் சாப்பிடும் விலங்குகளைச் சாப்பிடுவர் அதிகம் இல்லையே!:-)
.../

கேஆர்எஸ்,

அசைவம் சாப்பிடும் விலங்கு என்றால் ?கோழி கூட அசைவம் சாப்பிடுவதுதானே. பல்லி, பாம்பு எதையும் விட்டு வைக்காது.

உங்களின் மற்ற கருத்துக்களை ஏற்கிறேன். ஆனாலும் புண்ணியமா ? பாவமா ? என்று சொல்லாமல் நழுவிவிட்டீர்கள்.
:))

அசைவம் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நானும் 100 விழுக்காட்டு சைவம் தானுங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ஆனாலும் புண்ணியமா ? பாவமா ? என்று சொல்லாமல் நழுவிவிட்டீர்கள்.
:))//

அட, நீங்க ஒன்னு, பாவம் இல்ல-ன்னு சொல்லிட்டா, நானே திரும்பி சாப்பிட ஆரம்பிச்சிட்டேனா, என்ன பண்ணுவீங்க? :-))

இதுல புண்ணியமா/பாவமா என்ற கேள்வியே தேவையற்றது என்பது தான் என் கருத்து!
பாவம் தான்-னு சொன்னால், அப்போ ஹிட்லர் புண்ணியனாகி விடுவான்! அவன் சைவ உணவுக் காரன்.

வள்ளலார் வழியே இதற்கு உகந்தது;
புண்ணியமா/பாவமா-விவை விட கருணையா/சுவையா என்பது தான் சரி. அவரவர் அவருக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!

அக்னி சிறகு சொன்னது…

மகரிஷி வேதாத்திரி அவர்களின் பார்வையோ இந்த உணவுப்பழக்கத்தில் முற்றிலும் அறிவியல் ரீதியானது. அதை இங்கு என்னால் முடிந்த அளவு விளக்கியுள்ளேன்.
http://agnisiraku.blogspot.com/2007/05/blog-post_09.html

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்னி சிறகு said...
மகரிஷி வேதாத்திரி அவர்களின் பார்வையோ இந்த உணவுப்பழக்கத்தில் முற்றிலும் அறிவியல் ரீதியானது. அதை இங்கு என்னால் முடிந்த அளவு விளக்கியுள்ளேன்.
http://agnisiraku.blogspot.com/2007/05/blog-post_09.html
//

அக்னி சிறகு,
உங்கள் இடுகையையும் படித்துவருகிறேன். இதையும் படிப்பேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said... இதுல புண்ணியமா/பாவமா என்ற கேள்வியே தேவையற்றது என்பது தான் என் கருத்து!
பாவம் தான்-னு சொன்னால், அப்போ ஹிட்லர் புண்ணியனாகி விடுவான்! அவன் சைவ உணவுக் காரன்.

வள்ளலார் வழியே இதற்கு உகந்தது;
புண்ணியமா/பாவமா-விவை விட கருணையா/சுவையா என்பது தான் சரி. அவரவர் அவருக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!//

KRS,
உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். நண்பர் குமரன் மற்றும் ஜிரா ஆகியோர் இதுபற்றி இதுவரை கருத்து சொல்லவில்லை :) அவர்களும் சொல்லுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

Chittoor Murugesan சொன்னது…

கோ.வி.அவர்களே !
மனிதர்கள் பல நிலைகளில் உள்ளனர்( இது சாதியை பற்றியதல்ல) உடல் நிலையில் வாழ்பவர்கள் புலாலை தவிர்த்தால் அவர்களுக்கும் நல்லது. சமுதாயத்துக்கும் நல்லது.
அதே நேரத்தில் புலால் உண்பதை பாவம் என்பதும் ஜேஜி கண்ணை குத்திரும் என்பதும், இது காரணமாய் ஒதுக்கி வைப்பதும் பீலா , உட்டாலக்கடி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்