பின்பற்றுபவர்கள்

25 பிப்ரவரி, 2008

மாயக்கண்ணாடி (சேரன் படமல்ல) !

மனம் ஒரு மாயக் கண்ணாடி, யாருக்கு சொந்தமோ அவர்களுக்குத்தான் அவர் மனதில் எண்ண நினைத்திருக்கிறார்கள் என்றே தெரியும். வெளிவேசம், உள்நோக்கம் எல்லாம் அவரவருக்குத்தான் தெரியும்.

மாயா பஜார் படத்தில் ஒரு மாயக்கண்ணாடி இருக்கும், யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்கள் முகம் அதில் தெரியுமாம், அபிமன்யு பார்த்த போது அவன் மாமன் மகள் சுபத்திரா தெரிந்தாள், அடுத்து கண்ணனைப் பார்க்கச் சொன்னார்கள், கண்ணனுக்கு அதில் யார் தெரிவார்கள் என்பது நன்றாகவே தெரியும், தயங்கினான், பிறகு கண்ணாடி எதிரில் அவன் நின்றபோது அதில் தெரிந்த முகத்தைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். வேறு யார் ?பகடையை உருட்டி பாரத போர் மூள்வதற்கு தந்திரம் செய்த சகுனி மாமாதான் கண்ணனுக்கு மிகவும் பிடித்தவராம். ஏனென்றால் பூமி பாரத்தைக் குறைப்பதற்கு பாரத யுத்தத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் கண்ணன், அவனுக்கு அந்த வேலையை இலகுவாக்கித் தந்தது சகுனி.

நடைமுறை வாழ்க்கையில் நண்பர்களைவிட நம்மை விரோதமாக நினைப்பவர்களை ( நாம் அவ்வாறு நினைத்திருக்க மாட்டோம்) த்தான் ஒவ்வொருவரின் மனமும் நினைத்துக் கொண்டிருக்குமாம், காரணம் உளவியல், அவனுக்கு முன்பு நான் வெற்றிப் பெற்றே ஆகவேண்டும் என்று உள்மன உந்தல், அவனையே நினைத்துக் கொண்டிருக்க வைக்குமாம். மன உளைச்சல் தானே. மன உளைச்சல் உடல் நலத்தைக் கெடுக்கும். பழிவாங்கத் துடிப்பதைவிட விலகி இருந்தால் வேறு வேலையைப் பார்க்க முடியும். சனியன் விட்டுச்சே என்று நினைப்பதே சாலச் சிறந்தது !

நாள் முழுதும் மகிழ்வைத் தரும் அன்புடையவர்களின் முகங்களைவிட, நாள் முழுதும் உளைச்சலைத் தருவதில் நம்மை விரோதமாக நினைப்பவர்களின் முகத்துக்கு சக்தி அதிகம். அவர்களை நினைக்காமல் இருக்க ஒரே வழி, நல்லவர்கள் பிரிந்து போனால் ஏங்களாம், நம்மை புரியாதவர்கள் தூற்றிவிட்டுச் செல்லும் போது நமக்கு நட்டம் இல்லை. தக்க சமயத்தில் புரிந்துக் கொண்டு, விலகிச் செல்ல சந்தர்பம் கொடுத்தார்கள் என்று போற்றவேண்டும்.

இருவருக்கும் பிரச்சனை வந்துவிட்டது, நாம் நல்லவரா ? கெட்டவரா ? உங்கள் மனது உங்களுக்குத் தெரியும், நாம் பழிவாங்க சந்தர்பம் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் நல்லவர் கிடையாது. மனக் கண்ணாடிதான் சோதித்துப் பார்த்தால் சோதனையில் சொல்லிவிடும்.

1 கருத்து:

சதங்கா (Sathanga) சொன்னது…

அருமை அருமை. சிந்திக்கத் தூண்டும் பதிவு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்