பின்பற்றுபவர்கள்

5 மார்ச், 2012

தி.க தோழர்கள் படித்த திருவாசகம் !

நேற்று சிங்கை இலக்கிய வட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெரியவர் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீ சுந்தரம் அவர்களின் 'கம்பனுக் கை கொடுத்தவர்கள்' என்ற தலைப்பில் நிகழ்த்திய 2 மணி நேர உரையைக் கேட்க நேர்ந்தது. சுமார் இரண்டு மணி நேரம் அருவியாக மேடைப் பேச்சு இலக்கியம் இடையே நகைச்சுவை, கிளைக் கதைகள் என கம்பராமாயண சிறப்பைப் பற்றியும் அதைப் புகழ்ந்தவர்கள் மற்றும் அவர்களது சிறப்புகளையும் பேசினார். கேட்கக் கேட்க அது போன்று அடுத்தத் தலைமுறைகளுக்கு பேச்சாளர்கள் கிடைப்பார்களா என்ற எண்ணமே எனக்கு தனியாக ஓடியது, ஆம் ! பொருளியல் மற்றும் வசதியான வாழ்க்கைத் தேடலின் ஓட்டங்களின் இடையே இளைப்பாறும் பொழுது போக்குகளாக மேற்கத்திய இசையும், திரைபடங்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன, பாரம்பரிய இசை மற்றும் தமிழர் இலக்கியமெல்லாம் வெறும் ஆவணங்களாக தொகுக்கப்பட்டு பாதுகாப்பாக திறந்து பார்க்கப்படாமலேயே முடங்கிக் கிடக்கின்றன, விரல்விட்டு எண்ணும் அளவுக்கே அதுவும் ஐம்பது அகவையைக் கடந்தவர்களாக இன்றைய இலக்கிய பேச்சாளர்களின் எண்ணிக்கை உள்ளது. அவர்களும் இன்னும் 20 - 30 ஆண்டுகளில் மறைந்து போக ஒருவேளை தமிழன் தன் இலக்கிய பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ளும் போது டைனசர்களின் படிவங்களைத் தேடிக் காட்சிக்கு வைத்து டைனசர் இப்படி இருந்தது, இவ்வளவு வலிவு மிக்கது என்று காட்டுவது போல் தமிழ் இலக்கியம் மற்றும் அதன் சுவைகளைத் தேட வேண்டி இருக்கும்.

******

பெரியவர் சொ.சொ.மீ.சுந்தரம் கம்பனைப் போற்றியவர்கள் என்று பேச்சுகளின்டையே கம்பனைப் போற்றிய திரு வி கலியாண சுந்தரம் என்கிற திருவிக பற்றியும் குறிப்பிட்டார். ஒரு முறை திருவிக திருச்சிக்கு கம்பராமயண சொற்பொழிவிற்காக இரயிலில் வந்தார், அவரை வரவேற்க ஏராளமான அன்பர்கள் (பக்தர்கள்) மற்றும் ஏற்பாட்டாளர்கள் இரயில் நிலையத்தில் குழுமி இருந்தனர், வேறொரு நிகழ்ச்சிகாக பெரியாரும் அதே இரயில் நிலையத்தில் இறங்கி திருவிகவும் அன்று திருச்சி வருவாத அறிந்த பின்னர் திருவிகவைப் பார்த்துவிட்டுச் செல்ல நினைத்து காத்திருந்தாராம்.

திருவிக வந்து இறங்கிய பின்னர் அவரை வரவேற்க வந்தவர்கள் அழைக்க, பெரியாரைக் கண்ட திருவிக தாம் தற்போது பெரியாருடன் செல்ல விரும்புவதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பாட்டாளர்களில் நிகழ்ச்சிக்கு வந்துவிடுவதாகவும் கூறி பெரியாருடன் சென்றுவிட்டாரம், ஏற்பாட்டாளர்களுக்கு திருவிக 'நாத்திகன் இராமசாமி நாயகனுடன்' சென்றுவிட்டாரே என்ற வருதத்துடன், திருவிகவை பெரியாருடன் செல்லவேண்டாம் என்று வற்புறுத்தவும் முடியாமல் சென்றுவிட்டனராம்.

அதன் பிறகு திருவிக மற்றும் பெரியார் திருச்சி முக்கொம்பு காவேரிக் கரைக்குச் சென்று பேசிக் கொண்டு இருந்துவிட்டு திருவிக நிகழ்ச்சிக்குச் செல்லும் முன் தீர்த்த குளியல் (ஸ்னானம்) முடித்துவிட்டு ஆற்றில் இறங்கிக் குளிக்க, குளித்து முடித்து வந்ததும் திருவிகவின் பையில் இருந்து திருநீரை எடுத்து பூசிக் கொள்ளக் கொடுத்தாராம் பெரியார். அதன் பிறகு அன்றைக்கு தாம் பேசம் போகும் கம்பராமயணப் பகுதிகளைப் பற்றி பெரியாரிடம் கூறிக் கொண்டு வந்தவர் இடையே திருவாசகம் பற்றிக் குறிப்பிட்டு நெகிழ்ந்தவராக திருவிக சொன்னாராம், தாம் இறந்தால் இறுதிச் சடங்கின் போது திருவாசகம் படிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். பெரியாரும் அதை அமைதியாக கேட்டுக் கொண்டுவந்தாரம், பிறகு திருவிக தன் சொற்பொழிவுக்குப் போக, பெரியாரும் அவரது நிகழ்சிக்கு செல்ல விடை பெற்றுக் கொண்டார்கள்.

பாரதி தாசன், அண்ணா போன்று திருவிகவும் பெரியாருக்கு முன்பே மறைந்துவிட்டார், பெரியாருக்கு தம் அருமை நண்பர் திருவிக சொன்னது நினைவுக்கு வந்தது, திருவிகவின் இறுதிச் சடங்கிற்குச் சென்றவர். தம் தொண்டர்களை அழைத்து திருவிகவின் இறுதிச் சடங்கு ஆசையான திருவாசகத்தை திருவிகவின் உடல் அருகே நின்று படிக்க சொல்லி பணித்தாரம். திருவிகவின் ஆசை நிறைவேற்றப்பட்டது.

*****

பெரியார் தூற்றிகள் இவற்றை அறிந்திருந்தாலும் இது பற்றி எழுதினால் பெரியாரை புகழ்ந்தது போல் ஆகிவிடும் என்று மறைத்துவிடுவர். பெரியார் பிழைப்புவாதிகளான தற்கால திக குழுவினர் இது பற்றி எழுதினால் 'பெரியார் திருவாசகம் படிக்கச் சொன்னார் என்பது நாத்திகத்திற்கு இழுக்கு' என்று அடக்கிக் கொள்வர். பெரியாரை வெறும் பார்பன எதிர்பாளராகவும் நாத்திகராகவும் காட்டுவதற்கான முயற்சியில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள், மனித நேயம் தெரிந்த மாமனிதன், மனித இழிவுகளை அகற்ற பெரியாருக்கு நூற்றாண்டு வாழ்க்கைத் தேவை என்பதால் தான் இயற்கையும் பெரியரை 90 அகவைக்கும் மேல் விட்டு வைத்திருந்தது, இன்னும் 200 நூற்றாண்டுகளுக்கு சாதி மதப் பேய்கள் ஒழியும் வரை பெரியார் எம்போன்றவர்களால் எடுத்துச் சொல்லப்படுவார்.

இணைப்பு:

2 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

:))

Tamil Nenjan சொன்னது…

பெரியார் மதித்த மனித நேயத்தில் திருவாசகம் இருந்தது இதுவரை வெளிவராத புதிய தகவல். நன்றி தகவலுக்கு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்