பின்பற்றுபவர்கள்

14 ஜனவரி, 2008

மோடியை கண்டு பயப்படுவது ஏன் ?

மோடியை கண்டு பயந்து வயிறு எரிகிறார்கள் - இல.கணேசன் ஐயா தெரிவித்து இருக்கிறார்.

மோடியின் மதவெறி உலக பிரசித்தம். ருத்திராட்ச பூனைக் குட்டியை மடியில் கட்ட விரும்பம் இன்றி அமெரிக்கா மோடியின் விசாவை நிராகரித்து. இத்தனைக்கும் அமெரிக்கா 'தீவிரவாதிகளை தம் வீட்டு நாய்குட்டிகள் போல ஊட்டச்சத்து கொடுத்து வளர்த்தவர்கள்' என்ற பேச்சு இருக்கிறது. மோடியை அமெரிக்காவுக்குள் அனுமதித்தால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆள் ஆவோம் என்று நினைத்தும், மதச்சார்புடையவர் என்பதால் நிராகரித்தார்கள். அத்தகைய உலக பிரசித்தி பெற்ற மோடியை,

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், "நரேந்திர மோடியின் அமோக வெற்றியை பொறுக்க முடியாமல் வயிறு எரிபவர்கள், பாஜகவின் செல்வாக்கை நினைத்து பயந்து போன ஒரு சிலர்தான் அவரை எதிர்த்து போராட போவதாக அறிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் வேலை செய்த காரணத்துக்காக முஸ்லீம் அமைப்புகள் மீது மென்மையான போக்கை அரசு கடை பிடிக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது. வன்முறை மற்றும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்

குஜராத்திகள் "பெரும்பாண்மை" என்ற பேச்சில் மயங்கி, இந்துநாடு, இந்தியா என்ற சொல்லாடலில் மயங்கி தன் தலையில் தானே தீ வைத்துக் கொண்டால் அதை தமிழகமும் பாராட்ட வேண்டுமா ? தமிழகத்தில் கோத்ரா ரயில் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்று நினைப்பதில் என்ன தவறு ? தமிழகத்தில் இந்து முஸ்லிம் கிறித்துவர் அனைவரும் சிறு சிறு பூசல் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வேலை செய்த முஸ்லிம் அமைப்புகள் மீது மென்மையான போக்கை அரசு கடைபிடிக்கிறதாம். தேர்தல் நேரத்தில் தமுமுகவில் ஒரு பிரிவு ஜெ வின் பக்கம் தான் நின்றார்கள். அவர்களும், கம்யூனிஸ்டுகளும், மகஇக ஆகியோர்கள் மோடியின் வருகையை பலமாக எதிர்கிறார்கள். இல.கனேசன் பேச்சில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் அனைத்துமே தீவிரவாத போக்கு உள்ளது போலவும், அதற்கு திமுக அரசு ஆதரவு கொடுப்பதும் போலவும், அதையும் தனது குயுக்தியால் "மக்களிடம் எண்ணம்" ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்.

மக்களுக்கு தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருப்பதாகவே, மோடி என்பவர் தமிழகத்தில் ஜெ வீட்டில் விருந்து சாப்பிட வருகிறார் என்றோ தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளும் தமிழக மக்கள் இல்லை. எதிர்பவர்கள் அனைவரும் கட்சிக்காரர்களே அடுத்ததாக வன்முறை மற்றும் தேசவிரோத நடவடிக்கைப் பற்றி இவர் கூறும் போது "தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் "

குஜராத்தில் நடந்த சம்பவங்கள் சுதந்திர போராட்ட மகாத்மா காந்தி தலைமை ஏற்ற அமைதி பேரணி போலவும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போகிபண்டிகைக்கு டயர் கொளுத்துவது போலவும் நினைக்கிறார் போலும். மத்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்திருந்து அங்கு ஒரு ஆண்டுக்காவது கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி இருந்தால் குஜராத் மக்கள் தாம் மதவெறியில் சென்று கொண்டிருப்பது தவறு என்று புரிந்திருக்கும், அதற்கெல்லாம் அவகாசம் கொடுக்காமல் தேர்த்தலை நடத்ததால் மோடியின் நடவடிக்கையை மத்திய அரசு ஆசிர்வதித்து போலவும், மற்றவர்கள் எல்லோரும் தேசவிரோதிகள் போலவும் இல.கனேசன் சொல்கிறார்.

இல.கனேசன் போன்ற இந்துத்துவாக்கள், தீவிரவாதிகள் - என்ற அடைமொழியை மற்ற மதத்தினருக்கு வழங்கும் போது பட்டம் வழங்குவது போல் நினைக்கிறார்கள். இந்து மதம் காவி தீவிரவாதிகளின் கையில் விழும் நாள் தொலைவில் இல்லை. அதன் பிறகு இந்துமதம் ஒரு சாத்வீக மதம் என்றோ,உலக மக்களை உய்விக்க வந்த மதம் என்றோ, எல்லா மதமும் இந்து மதத்தில் இருந்து வந்தது என்ற பம்மாத்து எல்லாம் செய்ய முடியாது. இந்து தீவிரவாதம் வளர வளர வெளிநாடு வாழும் இந்துக்கள், இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது, அவை ஏற்கனவே மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தேறிவருகிறது, இந்துக்கள் மோடியை கண்டு பயப்படுவதற்கும், பதுங்குவதற்கும் இதுவே காரணம்.

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

வெறிநாயைப் பார்த்தால் மனிதனுக்கு ஒரு உணர்வு வருமே, அதே உணர்வுதான் தன்மானமுள்ள தமிழனுக்கும் மோடியின் வருகையினால் ஏற்படுகிறது. அது வயிற்றெரிச்சல் என்று சிலருக்கு தெரிவது அவர்களுக்கு உள்ள காவி காமாலை எனும் கொடிய நோயினால்தான்.

கோவை சிபி சொன்னது…

//தமிழகத்தில் கோத்ரா ரயில் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்று நினைப்பதில் என்ன தவறு //
சரியாக சொன்னீர்கள்.மெல்ல மெல்ல இதை மேட்டுப்பாளையம்,தாராபுரத்திலும் புகைய விட்டுள்ளார்கள்.

Sathiyanarayanan சொன்னது…

இந்த செ. தே.... மோதீ நாய்க்கு அவன் வெற்றிக்கு விருந்து வைக்கிறாளா அல்லது அவன் 3000ம் மனிதர்களைக் கொன்றதற்கு விருந்து வைக்கிறாளா

உதயம் சொன்னது…

//இல.கனேசன் போன்ற இந்துத்துவாக்கள், தீவிரவாதிகள் - என்ற அடைமொழியை மற்ற மதத்தினருக்கு வழங்கும் போது பட்டம் வழங்குவது போல் நினைக்கிறார்கள். இந்து மதம் காவி தீவிரவாதிகளின் கையில் விழும் நாள் தொலைவில் இல்லை. அதன் பிறகு இந்துமதம் ஒரு சாத்வீக மதம் என்றோ,உலக மக்களை உய்விக்க வந்த மதம் என்றோ, எல்லா மதமும் இந்து மதத்தில் இருந்து வந்தது என்ற பம்மாத்து எல்லாம் செய்ய முடியாது.//


மிகவும் சிந்திக்க வேண்டிய அற்புதமான வரிகள்.

zeenee சொன்னது…

vantharai vazha vaikkum tmailakathil modi varukaikku mattum ethirppu therivippathu muttalthanam!!!!!!! makkalal thernthu edukkappatta cm i varakkodaathu enru solla yarukkum urimai illai

தடாகம் சொன்னது…

//இல.கனேசன் போன்ற இந்துத்துவாக்கள், தீவிரவாதிகள் - என்ற அடைமொழியை மற்ற மதத்தினருக்கு வழங்கும் போது பட்டம் வழங்குவது போல் நினைக்கிறார்கள். இந்து மதம் காவி தீவிரவாதிகளின் கையில் விழும் நாள் தொலைவில் இல்லை. அதன் பிறகு இந்துமதம் ஒரு சாத்வீக மதம் என்றோ,உலக மக்களை உய்விக்க வந்த மதம் என்றோ, எல்லா மதமும் இந்து மதத்தில் இருந்து வந்தது என்ற பம்மாத்து எல்லாம் செய்ய முடியாது.//

அது விழுந்துவிட்டது ஐயா...எப்போது அந்த வடநாட்டு சாது வேதாந்தி கருணாநிதியின் தலைக்கு விலை வைத்தானோ (fatwa) அப்போதே அது நடந்துவிட்டது.

Ram Ravishankar சொன்னது…

I think your this post and some of the responses are very emotionally charged and one sided. It perhaps is worth for a balanced mind to look at what Modi did to Gujarat and why people of Gujarat reelected him inspite of media frenzy against him.

I think majority of folks are very biased and blast posts like these inorder to just ride the prevailing waves.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்