பின்பற்றுபவர்கள்

14 ஜூன், 2007

சிங்கையில் சிவாஜி இன்று வெளியாகிறது

பெரும் எதிர்(பார்ப்)பை ஏற்படுத்தி இருக்கும் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி இன்று சிங்கையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

காட்சிகள் விபரம்:

கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 7 : இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 12:45 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 9 : இரவு 9.30 மணி மற்றும் நள்ளிரவு 1:10 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 10 : இரவு 9.20 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி

தொலைபேசி 6554 4747


பிளாசா டெக்ஸ்டைல் (200 ஜலான் சுல்தான்): இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி
தொலைபேசி 6295 6417

டிக்கெட் விலை : S$15/-

திரை அரங்கில் "சிவாஜி" படம் பொறிக்கப்பட்ட பணியன்கள் கையிருப்பு இருக்கும் வரை விற்பனைக்கு உள்ளதாம்.


உலகிலேயே... ஏன் பிரபஞ்சத்திலேயே....சிவாஜி படம் முதலில் பார்த்த தமிழர்கள் என்ற பெருமை சிங்கை வாழ் தமிழர்களுக்கு கிடைக்கப் போகிறது !!!
:)))

12 ஜூன், 2007

வாங்க மூனுக்கு போகலாம் !


உலக தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற நாள் !


உலக மக்களை உயர்த்தும் நாள் !

சரித்திரத்தில் சரித்திரம் படைக்கும் நாள் !

நாளைய பிரதமரின் இன்றைய வெளியீடு !

சிங்கத் தமிழன் சினந்து எழுகிறான் !

எவெரெஸ்ட்டு இனி கீழே தான் !

உலகின் தலையெழுத்தை மாற்றும் ஒரே நாள் !

இந்த நாள் போல் இனி ஒரு நாள் இல்லை !

இறைவன் இன்று உலகமக்கள் அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார் !

இன்று ஒரு புதிய உலகம் பிறக்கிறது !

நெப்போலியனுக்கு பிறகு உலகம் பார்க்கப் போகும் ஒரே வீரன்

தலைவனின் தலைமை நாடுவோம், அவன் பாதம் போற்றுவோம்.

சி வா ஜி

:))))))))))))



நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிவாஜி வெளியீட்டு நாள் வாசகத்தை பகிர்ந்து கொண்டு ரஜினி ரசிகர்களுக்கு உதவுங்கள்.

என்னது ... தமிழ்நாட்டு மேல் ஏன் இன்னும் எவனும் குண்டு போடலையா ?

ன்னு கேட்கிறிங்களா ?

ஆளைவிடுங்க சாமி !!!

11 ஜூன், 2007

வழிபாட்டுத் தலங்களைவிட உயர்ந்தது எது ?

இந்து மதத்தில் விழுந்த சாக்கடையில் நெழியும் புழுக்களில் சில 'பிற மதத்தினர் கோவிலுக்குள்' வரக்கூடாது என்ற ஆகாத ஆகாமம் மற்றும் அதை ஏற்படுத்தியவர்கள். தோற்றமில்லாத மதம் என்று ஒருபக்கம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் இரட்டை வேடதாறிகளின் எச்சில் வார்த்தைகள் அவை. மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய மதத்தில் பிறமதத்தைக் குறித்த கட்டுப் பாடுகள் இருக்க முடியும் ?

இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் நன்கொடை கொடுத்தால் தீட்டுக் கழிக்காமல் 'தொட்டு' எடுத்துக்கொள்ளப்படம் காசுகளுக்கு இல்லாதா தடை ஏன் அவர்களுக்கு மட்டும் இருக்க வேண்டும் ? இந்துக் கோவில்களின் எக்ஸ்டன்சன்களாக பல வெளிநாடுகளில் கோவில்கள் எழும்பிவிட்டன. அங்கெல்லாம் சென்று இதே ஆகாதவாதிகள் ஆகமம் குறித்துப் பேசினால் கோவில்கள் அங்கு இருக்காது. கிறித்துவ நாடுகளில் இந்துக் கோவில்கள் கட்ட அனுமதிக்கப் படும் போது ஏன் கிறித்துவர்கள் என்பதால் இந்திய இந்து கோவிலில் இன்னும் இந்த இழிவான ஆகமம் இருக்கிறது ?

சர்வேசன் பதிவில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதாவது தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்ட மதங்கள் என்று பிறமதங்களும் தாழ்த்தப்பட்டவையாக பார்த்து அனுமதி மறுக்கப்பட்டு இருக்கவேண்டும். அல்லது பிறமதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் என்று ஒட்டுமொத்தமாக பிறமதத்தினருக்கு அனுமதி இல்லை என்று எழுதிவைத்திருக்கிறார்கள்.

மனிதனுக்குத்தான் மதங்களெல்லாம். அனைத்தையும் படைத்துக் காக்கும் இறைவன் என்று ஆத்திகர்களால் நம்மபடும் இறைவனுக்கு எங்கே மதம் ? அப்படி ஒருவேளை தீட்டுப்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் சக்தி இழந்து போகும் அளவுக்கு பலவீனமானவனா இறைவன் ?ஒருகாலத்தில் சூத்திரன் வரக் கூடாது என்ற கோவில் களெல்லாம் இன்று சூத்திரன் நுழையமுடிகிறதே கோவில் கோபுரங்கள் சரிந்துவிட்டதா ?

சில ஆபாத்பாண்டவர்கள் உளறுகிறார்கள் அதாவது கோவிலுக்குள் பிறமதத்தினரைவிட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் ஐயா இந்த ஆகாத ஆகமவிதிகள் பாபர் மசூதிக்கு இடிப்புக்கு முன்பு மட்டுமல்ல பல நூற்றாண்டுகளாவே இருந்துவருகின்றன. மத வழிபபட்டுத் தளங்களைவிட பொது கழிவறைகள் புனிதமானவை ஏனென்றால் அங்கே தான் இனம்,மதம்,சாதி பார்க்காது எல்லோருடைய அழுக்குகளும் களையப்பட்டு, ஏற்கப்பட்டு அழுத்ததில் மீண்டு உடல் சுத்தமாவது கிடைக்கிறது. அதையும் தூய்மைபடுத்தி அங்கு வருவோர் எல்லோரையும் சமமாக பார்த்தும் தோட்டி என்று இழிபெயரால் பலரால் அழைக்கப்டுபவனே கடவுள்.

6 ஜூன், 2007

ஐஏஎஸ் ஐபிஸ் கனவுகள் !

நான் கலெக்டர், ஐஜி, டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் கடும் முயற்சிக்குப் பின் அதனை சாதிக்கிறார்கள். இந்த சாதனையின் பலனாக அவர்களுக்கு கிடைத்த உயர்ந்தபதவிகளில் அமர்ந்து மக்கள் வரிப்பணத்தால் கிடைகும் ஐந்து இலக்க ஊதியத்தையும், அரசாங்க ஆடம்பர பங்களா, ஏவலாட்கள், காவலாட்கள் என்று அவர்களுக்கு அனைத்து வசதிகளுக்கும் கிடைக்கிறது. அமைச்சர்களுடன் உலக நாடுகளுக்கு உல்லாசப் பயணம், சைரன் வைத்த உயர்ரக கார் என சொகுசான வாழ்கையை ஓய்வு பெரும்வரை அனுபவிக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் இந்தியாவின் ஏழ்மையின் புள்ளிவிபரங்கள் அனைத்தும் தெரியும். சாதிப் பிரச்சனைகள் தெரியும் மற்றும் வாழ்வாதரமான அனைத்துப் பிரச்சனைகளும் தெரியும். இவற்றில் சிலவற்றை நேரிடையாகவே பார்த்து உணர்ந்தவர்கள். ஐந்தாண்டு இருக்கும் மக்கள் பிரதிநிதியைவிட மக்கள் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர்கள் அதிகாரிகள்தான். இவர்களில் பலர் தங்கள் பதவிகாலத்திலேயெ அதிகார துஷ்பிரயோகம் செய்து தனக்கு சாதமானவற்றை சாதிப்பவர்களாகவும், வேண்டியவர்களுக்கும், லஞ்சம் பெற்றுக் கொண்டு சொத்துக்களை மலைப்போல் சேர்ப்பவர்களாகவுமே உள்ளனர்.

பதிவிகாலத்தில் தான் இவ்வாறு செய்கிறார்களா ? பதவி முடிந்தாலும் உயர் அதிகாரிகளாக இருந்த புகழ் இருகிறதே சாகும் முன் சாதிப்போம் என்று எதோ ஒரு கட்சியில் இணைந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் இத்தகைய அதிகாரிகள் இணைவது எதாவது ஒரு ஜாதிக் கட்சியாகவே இருக்கிறது. இப்பொழுது புதிதாக கட்சி தொடங்கிய விஜயகாந்த், சரத்குமார் கூட தங்கள் கட்சியில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கனிசமான அளவு இருப்பதாக பெருமையாகவே சொல்கிறார்கள். சாதி சங்களுக்கு தூண்டுதலாக இருந்து இயக்குபவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், நீதிபதிகள், கலைக்டர்கள் மற்றும் தேர்தல் (தேர்வாணைய) இயக்குனர் போன்றவர்களே.

எல்லோரும் படித்துவிட்டால் இந்தியா எங்கேயோ போகும் என்று பொதுவாக சொல்லுவதை நினைத்துக் கொண்டு இவர்களைப் பார்க்கும் போது நமக்கு நகைப்பாகவே இருக்கிறது. பதவிகாலத்திலேயே ஊழல் வழக்குகளில் சிக்கி 'நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கும் படித்தவர் பாரீர்' என்று துப்ப வேண்டி இருக்கிறது. உயர்ந்த கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் இவர்களின் குறுகிய எண்ணங்களினால் சமத்துவம் காணும் முயற்சியில் இந்தியா பின்னடைவில் முன்னனியில் இருக்கிறது.

உங்களுக்கு தெரிந்த உயர்அதிகாரி கூட ஒருநாள் சாதிக் கட்சிக்குள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வார் பாருங்கள். இவையே அவர்களின் சாதி(க்கும்) கனவு.

1 ஜூன், 2007

மே மாத அக்னியில் - 9632 பேர் பாதிப்பு


மே 1, 2007 முதல் ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக, வரலாறு காணாதவகையில் (காலங்களில்) வீசிய வெப்பத்தின் தாக்கத்தில் 9632 தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் பிறந்துவிட்டதால் இனி வெயில் தனிவதற்கு வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
:)

May (26)
நீயே அள்ளு !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..
சலுகைகளின் பெயரில் அரசாங்க மோசடி ?
வாஜ்பேயி மற்றும் அடுத்த ஜனாதிபதி பற்றி...
குமரன் முருகனும் பெரியார் இராமசாமியும் - ஒப்பீடு
தீட்டு கழிக்கும் வைபவம் !
பரண் 2004 - மேல் மாடி காலி
பிறப்பின் அடிப்படையில் ?
மதமாற்றம் என்றால் என்ன ?
காலில் விழுவதன் பெருமை மற்றும் மாயாவதி !
இந்துமதம் எப்போதும் மறுமலர்ச்சியை நோக்கியது !
தேவாரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும் !
பார'தீய' ஜெகதால கட்சி !
திராவிட அரசியல் எதிர்ப்பு ஏன் ?
வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?
சன் டிவிக்கு பொன்னான வாய்ப்பு !
சொர்கமா ? நரகமா ? எதுவாக இருந்தாலும் ... !
'ஆ' ன்னா 'உ' ன்னா ஆட்சியைக் கலைக்கனும் !
மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி
சன் டிவியின் கழுத்து அறுப்பு :
தாத்தா சொத்து பேரனுக்கா ?
நான் 'கண்ட' பெரியார் !
தமிழ்தான் இந்தியாவின் வேர் - ஜெயகாந்தன் !
சிரிக்கலாம் வாங்க (1) !
மொழி, கடவுள், அடிமைத்தனம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்