சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

மதவாதிகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழ்மணம் !

Saturday, January 28, 2012

இந்த இடுகைக்கு விளக்கம் தேவை இல்லை, இருந்தாலும் ஒரு சில விவரங்களைக் கூறிக் கொள்கிறேன்.

ஆக்கப்பூர்வமான படைப்புகளும், நல்ல விவாதங்களையும் எழுதுவதை ஊக்குவிக்க திரட்டிகள் பயன்படுகின்றன, அண்மைக் காலமாக மதவாதிகளின் பிரச்சாரக் கூடமாகவே பலர் எழுதுகிறார்கள், என்னைப் போன்றவர்கள் திரட்டிகளில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறோம். நான் தமிழ்மணம் தமிழ்வெளி தவிர்த்து வேறு எந்த திரட்டிகளுக்கும் அடிக்கடிச் செல்வதில்லை.

தமிழ்மணம் முகப்பை திறந்தாலே எதோ ஒரு மதபிரச்சாரப் பதிவும், சூடான இடுகைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டும், மகுடம் பகுதியில் தங்கள் இடுகையே நிற்கவேண்டும் என்று வாக்குக் குத்தி நிறுத்துகிறார்கள், தனித்துக் குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை, அனைவருக்குமே இது தெரியும் என்பதால் தனியாகச் சொல்லி நான் மதவாதிகளின் கோபத்தைக் கிளறவிரும்பவில்லை, ஆம் நான் மதவாதிகளுக்கு பயப்படுகிறேன், அவர்களின் அவதூறுகளுக்காகப் பயப்படுகிறேன் என்று சொல்ல வெட்க்கப்படவில்லை, அது தான் உண்மை. என் பெயரில் அவர்களாவே பல இடங்களில் பின்னூட்டங்கள் கூடப்போட்டுக் கொள்கிறார்கள், அங்கெல்லாம் சென்று நான் விளக்கம் சொல்ல விரும்வும் இல்லை.

முன்பு தமிழ்மணம் மதவாதிகளையும், சோதிடப் பதிவர்களையும் கட்டம் கட்டியது, பின்னர் நாங்கள் மதம் பற்றி மட்டுமே எழுதவில்லை, 'இட்டலி பொடி செய்வது எப்படி ?' என்றும் போட்டுள்ளோம் என்று கூறி புரட்சி செய்து தமிழ்மணத்தின் வாயை மூடி மு(ம)டக்கினார்கள். பவர் ஸ்டார் லத்திகா படத்தை 300 நாள் ஓட்டியது போல் மதவாதிகளின் பதிவுகள் குழுவாக வாக்குக் குத்தப்பட்டு மிகச் சிறந்த இடுகை என்பது போல் காட்டப்படுகிறது. புதிதாக பதிவு எழுதவருபவர்கள் பதிவுலகில் மதம் தான் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியதோ, எழுத வேண்டியதோ என்று நினைத்து விலகி ஓட வைக்கும் ஆபத்து உண்டு.

திரட்டிகளும், பதிவுலகும் மேம்பட மதவாதிகளைப் புறக்கணிக்க வேண்டும், நானும் ஒரு சில மதவாதிகளின் சர்சைகளுக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறேன், எதிர்வினை எழுதி இருக்கிறேன் இப்போது அது தவறு என்றே நினைக்கிறேன்.

இது இப்படியே போனால் பீடி சாமியார், கேடி சாமியார் கதைகள் கூட ஆன்மிகம் போன்று மதவாதிகளால் கடைவிரிக்கப்படும்.

பின்குறிப்பு : மைனஸ் ஓட்டு விழும் என்றாலும் கூட இது மிகவும் தேவையான ஒரு தகவல் தான், மதவாதிகளின் மைனஸ் ஓட்டுகள் வரவேற்கப்படுகின்றன, ஆனால் அவை பாசிட்டிவ் வாக்காக் கருதப்படும்.

Read more...

அரசியல்வாதிகள் இவர்களின் காலில் விழலாம் !

Thursday, January 26, 2012

வேறெந்த விலங்குகளைக் காட்டிலும் மனித விலங்கின் அடிப்படை குணம் நேர்மை, உண்மை, அன்பு, ஈகை, அரவணைத்தல் ஆகிய மற்றும் பிற நற்குணங்கள், ஆனால் கட்டுக்கடங்காமல் வளர்ந்த மக்கள் தொகை பெருக்கம் அதனால் போதிய உணவின்றி பஞ்சம் பட்டினி மற்றும் அரசியல் வாதிகளின் சுரண்டல் ஆகியவற்றால் மனித இனத்தின் அடிப்படை குணங்களை செய்தித்தாளில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது, யாருடையது என்று தெரியாமல் கீழே கிடக்கும் ஒரு விலை உயர்ந்த பொருள் நம்முடையது இல்லை என்றால் நேரம் இல்லை என்றால் அதை கண்டும் காணாமல் செல்வது போதிய நேரம் இருந்தால் உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சி செய்வது இது தான் மனித குணமாக இருக்க வேண்டும், ஆனால் நடைமுறையில் தனதாக்கிக் கொள்வர், திருடினால் தானே தப்பு என்ற வியாக்கியானமும் தமக்குள்ளே செய்து கொள்வர், இது ஒருவகையில் திருட்டு தான் என்றாலும் கை நீட்டிக் குற்றம் சொல்ல முடியாத ஆனால் நமக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை வைத்திருக்கிறோம் என்பதை தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இது போன்ற அதிர்ஷ்டங்கள் பிறரின் இழப்பின் எதிர்வினையான நிகழ்வு மட்டுமே. மனித குணம் தன்னலமாக மாறியதற்கு முதலில் மக்கள் தொகை பெருக்கமும், அதற்கு தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றிற்கு போதிய பொருளாதார வசதி இன்மையே. ஓரளவு பொருளியல் வளர்ச்சியில் உள்ள நாடுகளில் திருட்டுப் பழக்கம் குறைவு தான், பிறர் பொருளை எடுப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், அங்கெல்லாம் களவு என்பது அன்றாட நிகழ்வு அல்ல, ஆனால் நிகழ்ந்தால் அது அன்றைய செய்தியாகிவிடும். ஆயிரம் மதங்களும் அதில் நாலாயிரம் பிரிவுகளும் இருந்தாலும் அவற்றைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலனவர்கள் அடிப்படை நேர்மைகளை கற்றுக் கொண்டுள்ளார்கள் என்று சொல்ல எதுவுமில்லை, காரணம் வயிற்றுப் பாட்டுக்கு முன்பு மதமாவது மண்ணாங்கட்டியாவது. அவற்றையெல்லாம் மீறி மனிதனில் சிலர் நேர்மையாளனாக இருப்பதற்கு காரணம் தன்னளவில் அவற்றை விரும்புகின்றனர் அதற்கு மதமோ மண்ணாங்கட்டியோ காரணமாக அமைவதும் இல்லை. ஏழைப் பணக்காரன் இவற்றிற்கு இடையேயான பொருளாதார இடைவெளி மனித நேர்மையை தொலைவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

மேலே புகைப்படத்தில் உள்ள அம்மா இரயில் பெட்டியை தூய்மை செய்யும் ஒரு துப்புரவாளர் தான், அவர் நினைத்திருந்தால் பணத்தை பதுக்கி இருக்க முடியும், ஆனால் மிகவும் நேர்மையாக அவற்றை ஒப்படைத்திருக்கிறார். இந்த தகவல் வாரம் பழையது என்றாலும் நான் இதனை இங்கு குறிப்பிடக் காரணம், நேர்மையாளர்களை தேடிப் பிடிக்கும் அளவுக்குத்தான் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நாட்டில் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை. வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கே நேர்மையாளர்கள் தென்படுகிறார்கள்.

இன்னும் ஒருவர் அவர் பெயர் 'பரிஜத் சாஹா'. தன் பெயரில் தவறாக செலுத்தப்பட்ட 49000 கோடி இருப்புக் கணக்கை வங்கியிடம் திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லி தானாகவே முன்சென்றிருக்கிறார்

நம்பிக்கை அடிப்படையில் ஆட்சிக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியல்வாதிகள் திருடர்களாகவே மாறியுள்ளனர், கோடிகளில் ஊழல் புரியும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் இவர்களது காலில் விழுந்து வணங்க மிகவும் தகுதியானவர், திருத்திக் கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகள் இவரின் சிறு நீரைக் கூட குடிக்கலாம்.

Read more...

18 வயதிற்கு மேற்பட்டோருக்கானது !

Wednesday, January 25, 2012

முன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க்கவும். மற்றபடி 18 வயதிற்கு மேலான ஆண்கள் பெண்கள் படிக்கலாம், பதின்ம வயதை கடந்த பெண்கள் அறிந்து கொள்வதினால் தவறு அல்ல.

கழுவதா ? துடைப்பதா எது சிறந்தது ? : இதை நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை, 'கால் கழுவி வந்தான்' - இடக்கரடக்கல் (நன்றி திரு டோண்டு) என்ற தமிழ் இலணக்கத்தை கற்று தான் வந்திருப்பீர்கள், பொதுவாகவே வெளிநாட்டினரை பேப்பரை வைத்துத் துடைத்துக் கொள்பவர்கள் சுத்தமற்றவர்கள் என்று நம்மவர்கள் கேலி செய்து தமக்குள் நகையாடுவார்கள், அதை வெளிநாட்டுக்காரர்களிடம் சொல்லி இருக்கிறார்களா ? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை, குளிர் நாடுகளில் கழுவ எப்போதும் சுடுநீர் கிடைக்காத சூழலில் இலை தழை, துணிகளில் துடைத்துக் கொள்ளுதல் எளிய வழியாக இருந்து, நடுங்கும் குளிரில் பச்சைத் தண்ணீரும் குளிராகத்தான் இருக்கும், அதைப் பயன்படுத்திப் பார்த்தால் தான் அந்த கொடுமையே தெரியும். தாள்கள் கண்டுபிடிப்பின் பிறகு தண்ணீர் உறிஞ்சும் தாள்களைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். நாங்களெல்லாம் தண்ணீர் ஊற்றி கையினால் கழுவுவோம் என்று கூறினால் இந்தியர்களுக்கு கைகுலுக்க வருபவர்கள் யாரும் உவந்து கொடுப்பார்களா ? நம்மில் எத்தனை பேர் கழுவும் போதும் கழிவிய பின்பும் சோப்புகளைப் பயன்படுத்துகிறோம், சென்னைப் போன்ற பெருநகரங்களில் கழுவதற்கு ஒரு கப் தண்ணீர் தான் என்ற நிலையில் கைச் சுத்தம் என்று எதைக் கூறுவோம் ? இருந்தாலும் பிறரைப் போல் தான் நாமும் என்பதால் நம் தயக்கங்கள் நம்மிடையே கைகுலுக்களின் போது வருவதில்லை.

நாங்கள் தண்ணீர் விட்டுக் கழுவோம் என்றதும் ஒரு சீனர், அருவெறுபான பார்வையுடன் 'நாங்கள் அங்கே வெறும் கையை வைத்துப் பார்ப்பதையே அருவெறுப்பாக நினைத்து தான் தாளை பயன்படுத்துகிறோம், உங்களால் எப்படி முடிகிறது ? தவிர நீங்கள் கையினால் பிசைந்து சாப்பிடுபவர்கள் அல்லவா ? (நாம அதுக்கென்றே கை ஒதுக்கி வைத்திருப்பது அவர்களுக்கு தெரியாது) வெறுங்கையால் கழுவீர்களா ? என்று கேட்டார், பின்னர் 'சாக்கடையில் கையை விட்டு சோப்பு போட்டு கழுவினாலும் நமக்கு அறுவெறுபாகத் தானே இருக்கும் என்றார் ?' எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை, 'இல்லை நாங்கள் சாப்பிட வேறு கையைப் பயன்படுத்துவோம்' என்று சொல்லும் முன் இரண்டு கையினால் தட்டப்பட்டு சாப்பிடப்படும் மசால் வடை மனசாட்சி தடுத்தது. தண்ணீரில் கழுவதினால் தான் நாகரீகம் என்பது இல்லை, இப்பொழுதெல்லாம் ஈரத் தன்மையுடன் கூடிய உறிஞ்சு தாள் வந்துவிட்டது, அதில் கிரிமி நாசினியும் சேர்த்தே வருகிறது, வெறும் பேப்பரில் துடைப்பதைக் காட்டிலும், தண்ணீரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நலமேன்மை கொண்டது, நன்றாக உறிஞ்சு தாளால் துடைத்துவிட்டு பின்னர் தண்ணீரால் கழுவி, பின்னர் கையையும் சோப்புப் போட்டுக் கழுவினால் பின்னர் யாருக்கும் கைகொடுக்கும் முன்பும் மனசாட்சி உறுத்தாது.

*********

விருத்த சேதனம் : நண்பர் சுவனப்பிரியன் மிக அழகாக விருத்த சேதனம் பற்றி கட்டுரை எழுதியுள்ளார், அவர் எழுதியதற்கு எதிர்வினை அல்ல இப்பதிவு, மாறுபட்ட கருத்து மட்டுமே. விருத்த சேதனம் என்றால் என்ன ? எனக்கு தெரிந்து இந்த சொல் பழைய ஏற்பாட்டு பைபிள்களின் மொழிப் பெயர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது, பின்னர் சிலர் பயனபடுத்துகிறார்கள், பழைய ஏற்பாட்டு பைபிளின் மொழிப் பெயர்ப்பில் நிறைய வடமொழிச் சொற்கள் இடம் பெற்றிருக்கும், விருத்த சேதனம் என்ற சொல் வடமொழியில் 'ஆண் குறி முன் தோல் நீக்கம்' என்பதன் மொழிப் பெயர்ப்பு ஆகும், விருத்தம் என்பது ஆண் குறி - இன 'விருத்தி'க்கான உறுப்பு என்பதன் சுறுக்கம்
சேதனம் - என்றால் சிதைத்தால், அதாவது ஆண் குறி சிதைப்பு என்ற பொருளில் தான் அந்த சொல்லின் வடமொழிப் பொருள் உள்ளது, ஆண் குறியின் முனைவரை மூடியிருக்கும் தோலின் முன்பகுதியை வெட்டி எடுப்பதே விருத்த சேதனமாம். இதை ஆங்கிலத்தில் ( circumsion) என்பர், இதற்கு தமிழில் 'முன் தோல் நீக்கம்' என்று பொருள், இவை தொடர்புடைய இடத்தில் (Contextual) பயன்படுத்தும் போது புரிந்து கொள்ள முடியும் என்பதால் முழுதாக 'ஆண் உறுப்பு முன் தோல் நீக்கம்' என்று எழுதத் தேவை இல்லை. இவ்வாறு எளிதாக புரியக் கூடிய தமிழ் சொற்கள் இருக்க இவை இன்னமும் விருத்த சேதனம் என்றும், சுன்னத் என்றும் சொல்லப்படுவதற்கு காரணம் இவை இன்னமும் மதரீதியான சடங்காக இருக்கிறது என்பதே காரணம். தண்ணீர் கிடைக்காத பண்டையை பலதார பாலைவன தேசங்களில் முந்தோல் நீக்கம் ஆண் குறி கிரிமித் தொற்றினையும் அவற்றினால் ஏற்பட்ட அரிப்பு பாதிப்புகளை ஓரளவு தடுத்தது.

நண்பர் சுவனப்பிரியன் இவை என்னமோ ஒட்டு மொத்த ஆண்களின் தேவை போன்று மிகைப்படுத்தே எழுதியுள்ளார், இதை செய்து கொள்வதால் 60 விழுக்காடு உயிர்கொல்லி (எய்ட்ஸ்) பாதிப்பில் இருந்து பாலியல் தொழிலாளியிடம் சென்று வருபவர்களைக் காக்குமாம். உண்மை என்றாலும் மீதம் 40 விழுக்காட்டிற்கு எந்த உத்திரவாதமும் அதில் இல்லை. இவர் சொல்வதைப் படித்துவிட்டு முன் தோல் நீக்கிக் கொண்டவர்களில் ஒரு சிலர் பத்தாம் பசலியாக இருந்து தொலைந்து பாலியல் தேவைக்காக விலைமாந்தரை நாடுபவராக இருந்தால், அவர் தாம் ஆண் உறை இன்றி நாடமுடியும் என்று எண்ணி செயல்பட்டு நோயையும் நாடிவிடும் ஆபத்து உண்டு.


என்னதான் முந்தோலை வெட்டிவிட்டு ஆண் குறிமுனைப் பகுதி மரத்துப் போய் இருந்தாலும் உடலுறவு நேரங்களில் சிறுநீர்பாதையின் துளை (Urethra) சிறுது திறந்து திறந்து மூடுவதால் பாலியல் கிருமி தொற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது, இது தான் அந்த 40 விழுக்காட்டு ஆபத்து, இதை சுவனப்பிரியன் சொல்லவில்லை,
சுவனப்பிரியன் சொல்லும் 60 விழுக்காட்டு வாய்ப்பு என்பது முந்தோலின் உட்புறத்தில் கிரிமி தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் தான். இவற்றின் பாதிப்பை உடலுறவு முடிந்த பிறகு கழுவதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும், ஆனால் மேற்சொன்ன 40 விழுக்காடு வாய்ப்பில் முன் தோல் நீக்கியவரும் நீக்காதவரும் தகுந்த ஆணுறை பயன்படுத்தாவிட்டால் ஒன்றே.

முந்தோல் நீக்கம் என்பது யூதர்களாலும், அவர்களின் மத வழியின் பிரிவுகளில் ஒன்றான இஸ்லாமியர்களும் பின்பற்றி வரும் மதச் சடங்கு ஆகும், தற்போது யூதர்களிடையே இப்பழக்கம் குறைந்துவருகிறது, இஸ்லாமியர்களிடம் கட்டாயக் கடமை என்று தெரிகிறது, மற்றபடி இதில் அறிவியல் பயன் மருத்துவ பயன் என்று எதுவுமே இல்லை, முன்பல் நீட்டிக் கொண்டிருபவர்களுக்கு அவற்றை பின் தள்ளி சரி செய்யும் பல் மருத்துவம் போன்றதே, முந்தோலை தள்ள முடியாத மதவழக்கமாக அதை ஏற்கனவே செய்திருக்காதவர்கள் அதை நீக்கிக் கொண்டால் ஆண் குறி விரைப்பின் போது வழி ஏற்படாது,

அடுத்த நீடித்த இன்பம் தர முனைத்தோல் நீக்கம் பயன் அளிக்கிறது என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள், இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை, காரணம் முன் தோல் நீக்கிக் கொள்வதால் குறி முனை உடல் தோல் போன்று தடிப்பாகி உணர்வு நரம்புகள் கட்டுப்பட்டிருக்கும் என்பதால் அவை உண்மையே என்றாலும் நீடித்த உடலுறவை பெண்கள் விரும்புகிறார்களா ? என்பதும் முக்கியம், பெண் குறி பாறையின் துளை அல்ல அதுவும் உணர்வுச் சதையே தேவைக்கு மிஞ்சிய உராய்வு பெண்ணுக்கு எரிச்சலையே தரும் என்றே நினைக்கிறேன்.

முன்தோல் நீக்கிக் கொள்ளாதன் பயன் என்று மருத்துவர்களாலும், ஆண்களாலும் உணர்ந்து சொல்லப்படுவை, உடலுறவு உராய்வின் போது முந்தோல் முன்னும் பின்னும் நகர்ந்து விரிவதால் ஆண்களுக்கு கூடுதல் இன்பம் கிடைக்கிறது, மேலும் உணர்ச்சி மிக்க ஆண் குறி முனையும் மென்மையும் முந்தோலால் பாதுக்காப்பட்டு மிக எளிதிலேயே விறைப்படைய உதவுகிறது, குறிப்பாக ஆண்களின் சுய இன்பத்தில் முந்தோலின் பங்கு என்னவென்றால் உடலுறவுக்கு நெருக்கமான இன்பத்தைக் கொடுக்கும், ஆனால் இதையெல்லாம் முன் தோலை சிறுவயதில் இருந்தே நீக்கப்பட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது சோகமே.

*********

பாலியல் நோய் பரவலை 60 விழுக்காடு முந்தோல் நீக்கம் கட்டுப்படுத்துகிறது என்பதும் உண்மை என்றாலும் அந்த உண்மை பாலியல் தொழிலாளியை நாடுபவர்களுக்கும் திருமணத்தைத் தாண்டி கள்ள உறவு வைத்திருப்பவர்களுக்கும் தேவைப்படலாம், ஒழுக்கமாக குடும்பம் நடத்துபவர்களுக்கும் குளிக்கும் போது முன்தோலை பின் தள்ளிக் கழுவி தூய்மையாக வைத்திருப்பவர்கள்க்கும் தேவையற்றது. ஒருவருக்கு ஒருவர் என்று வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையான ஒன்று சுவனப்பிரியன் கூறுவதை நான் கடுமையாகவே மறுக்கிறேன், நகைப்புக்கு இடமான கூற்று, காரணம் எதோ ஒரு மதச்சடங்குகளில் ஒரு காதை அறுத்துக் கொள்வது காது கேட்கும் திறனை அதிகரிக்கும் என்று ஒரு கேணப்பயல் அறிவியல் / மருத்துவ உண்மை என்று கொளுத்திப் போட்டு அனைவரையும் காதுகளை அறுத்துக் கொள்வது தான் மனித குல நன்மை என்று சொல்லுவது போன்றது தான் இவை.

மதச்சடங்காக நீக்கிக் கொண்ட அமெரிக்க யூதர்களும், இஸ்லாமியர் அல்லாத பிறரும் அவற்றை மீண்டும் வளர்த்து எடுக்கின்றனர், நீக்கிக் கொண்ட தோலை வளர்த்தெடுக்க மருத்துவ முறைகளும் உண்டு. முன் தோல் நீக்கம் ஏன் செய்யக் கூடாது ? அல்லது முன் தோல் நீக்கம் செய்வதை தவர்க்க வேண்டும் ? என்பதற்கு 1000க் கணக்கான சுட்டிகள் உள்ளன, அவற்றில் ஒன்றை இரண்டையாவது சுவனப்பிரியன் படித்திருப்பார் என்பது ஐயமே,

நண்பர் சுவனப்பிரியன் மதப்புத்தகங்கள் தவிர்த்து பிறவற்றையும் படிக்க வேண்டும் என்று கீழ்கண்ட சுட்டியைத் தருகிறேன்

Foreskin restoration

Circumcision_controversies

பின்குறிப்பு: குற்றவாளிகள் நிறைந்த நாடுகளில் சட்டம் கடுமை மிக மிகத் தேவையான ஒன்று, அது போல் பாலியல் தொழிலாளியை மிகுதியாக நாடும் நாட்டினருக்கும் தேவையான ஒன்றாக முன் தோல் நீக்கம் இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அதன் மூலம் பாலியல் நோய் தடுப்பை 60 விழுக்காடு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை என்றாலும் அதன் பொருள் 60 விழுக்காடு தடுக்கப்பட்டதாக ஆகாது, அந்த 60 விழுக்காட்டின் பாதிப்பில் இல்லாதவர்கள் இன்னொருநாள் பாலியல் தொழிலாளிடம் செல்லும் போது சிக்கிக் கொள்வார்களா ? இல்லையா ? என்பதை முன் தோல் நீக்கம் முடிவு செய்யாது, சென்று வரும் எண்ணிக்கையே அதை முடிவு செய்யும்.

மதச் சடங்கு என்ற பெயரில் காதை அறுத்துக் கொள்ளட்டும், விரலை வெட்டிக் கொள்ளட்டும், காது குத்திக் கொள்ளட்டும், ஆனால் அது பொதுவான முக அழகையும், விரல் அழகையும் தரும் என்பது வெறும் பொய்யுரை தான்.

Read more...

பக்வா (சீன வகை உப்பு கண்டம் ) !

Thursday, January 19, 2012

சீனப் புத்தாண்டு நேரங்களில் சீனர்களிடையே வாங்கப்படும் மிக முக்கியமான பொருள்களில் இந்த 'பக்வா' உண்டு (肉干 - rou-gan,- dried meat). சீன உணவு வகைகளில் விலை உயர்ந்த உணவு பண்டமும் இது தான், மொழிப் பெயர்ப்பு என்ற அளவில் உப்பு கண்டம் என்று குறிப்பிட்டுள்ளேன், ஆனால் உப்பு கண்டமென்பது நமக்கெல்லாம் தெரியும் (மீன்) கருவாட்டைப் போன்று உப்பு சேர்த்து காய வைத்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தான் உப்பு கண்டம் என்று சொல்கிறோம், அவற்றில் உப்பு சேர்ப்பது அவை ஆண்டு கணக்கில் கெடாமல் இருக்கும் அதை தேவைப்படும் போது எடுத்து சமைக்கப் பயன்படுத்த முடியும், உப்பு கண்டம் என்படுவது ஊறுகாய் (முக்காலம் உணர்த்தும் வினைத்தொகையில் அமைந்த பெயர்ச் சொல்) போன்று ஊறூண் (அதாவது ஊறும் ஊண்) என்று சொல்ல முடியும், உப்பு கண்டம் என்றால் என்னவென்று தெரியாவதர்களுக்காக அவற்றைக் குறிப்பிட்டுள்ளேன், தமிழ் ஆராய்ச்சிகளை சற்று தள்ளி வைத்துவிட்டு மீண்டும் பக்வா வின் பக்குவம் பற்றிப் பார்ப்போம்.

பக்வா ஆடு, மாடு, பன்றி இறைச்சி என்ற வகைகளில் செய்யப்படுகிறது, இருந்தாலும் விழாக்காலங்களில் பன்றி இறைச்சிக்கே முன்னுரிமை, மற்றும் அது விரும்பி வாங்கப்படும் ஒன்றாகும். பாரம்பரிய வகையான சுவை என்ற அடிப்படையில் மூலப் பொருளான பக்வா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது, அதை வாங்கி பக்குவமாக (தணல் அல்லது நெருப்பில்) வாட்டி சிங்கை மற்றும் மலேசியாவில் விற்கிறார்கள், இவை மிளகு அடை போன்று தட்டையாக கருஞ்சி சிவப்பு நிறத்தில் இருக்கும். சுவை ? தட்டையாக்கி இதை பதப்படுத்தும் போதே இதனுடன் காரம், இனிப்பு, சோயாச் சாறு மற்றும் உப்பு சேர்த்து வெயிலில் பாறைகளின் மீது காய வைப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு காய வைக்கப்பட்டதை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி எடை பார்த்து காற்றுப் போகாமல் அடைக்கப்பட்டு ஏற்று மதி செய்யப்படுகிறது, அதை கடைகள் வாங்கி நெருப்புத் தணலில் இரு பக்கமும் வாட்டி சுட சுட விற்பனை செய்கிறார்கள்.

சீனப்புத் தாண்டு சீசனில் இவற்றிற்கென சிறப்புக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும், விளக்குகள் அலங்காரங்களுடன் குறிப்பிட்ட சில கடைகளின் பக்வா சுவை மிகுந்தது என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவே இருக்காது (இருட்டுக்கடை அல்வா போன்று), அதற்கு வாடிக்கையளர் சொல்லும் காரணம், அவர்கள் தரமான மூலப் பொருள்களை நம்பிக்கையான இடங்களில் இருந்து வாங்கி பக்குவமாக செய்து தருகிறார்கள், உடல் நலத்திற்கு பாதுகாப்புடன் சுவைக்கும் குறைவில்லை என்பதே.

நம் மீனவர்கள் விற்காத அல்லது நொந்து போன மீனைக் குறுக்காக வகுந்து உப்பு சேர்த்து மணலில் காய வைத்து கருவாடு போடுவார்கள், வஞ்சிரம், கொடுவா மற்றும் வவ்வாள் மீன்கள் வீணாகமல் கருவாடு ஆக்கப்படுகிறது. பக்வா முன்பெல்லாம் விற்காமல் அல்லது பயன்படுத்தி மீதமான இறைச்சியை பதப்படுத்து பக்குவா செய்யப்பட்டதாம், தற்பொழுது இருமுறைகளில் அவற்றை தயாரிக்கிறார்கள், மெல்லப் பொடித்த இறைச்சியை தட்டையாக்கி செய்வது மற்றொன்று பெரிய துண்டங்களை சிறு சிறு தட்டையாக்கி செய்வது, இரண்டாம் முறையில் செய்வது விலை மிகுதி. இவ்வகை பாக்வா பெரும்பாலும் சதுர, செவ்வக வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது, மிகவும் தரமாக தாயரிக்கப்பட்டு அவை 5 செமி விட்டமுள்ள வட்டவடிவிலும் விற்கப்படுகிறது, அதற்கு பெயர் தங்கக் காசு (Golden Coin), இவை பெரும்பாலும் பரிசு பைகளாக வாங்கிக் உறவினர்களுக்கு அளிக்க தயாரிக்கப்படுகிறது.


மதம் சார்ந்த சீன விழாக்கள் மற்றும் சீன பாரம்பரிய திருமணத்தில் பக்வா கண்டிப்பாக இருக்கும் உணவு வகைகளில் ஒன்று. தரமான பக்வா கிலோ 60 வெள்ளி வரையில் விற்கப்படுகிறது என்றாலும் பக்வா விலை கிலோவிற்கு 40 வெள்ளி என்பது மலிவான விலை. பெரிய சீன நிறுவனங்கள் தங்களுக்குள் விற்பனை உறவை பேன பக்வா அடங்கிய பெரிய பரிசு பொட்டலங்கள் மற்றும் பைகளை அனுப்பும். காரமும் இனிப்பும் சேர்ந்த இறைச்சி சுவையுடன் இருந்தாலும் காரம் மிகுந்த, இனிப்பு மிகுந்த, காரம் குறைந்த, இனிப்பு குறைந்த வகைகளில் பல்வேறு தரங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

நம்மக்களிடையே கருவாட்டுக் குழம்பு, மற்றும் உப்பகண்ட விரும்பம் போல், 40 வயதிற்கு கீழ் உள்ள சீனர்கள் இதை விரும்பி உண்ணுவது இல்லை, நன்கு பழகிய நாக்குகள் அந்த சுவையைத் தேடித் தேடி வாங்குகின்றனர். மென் ரொட்டி (ப்ரட்)யின் நடுவே வைத்து (சாண்ட்விச்) உண்ணப்படுகிறது, மிளகு அடை (தட்டை) போன்று தனியாகவும் கடித்து உண்ணுகிறார்கள், இது பார்க்க மென்மையாக வளைக்கத் தக்கதாகத் தான் இருக்கிறது.

உணவுகள் பலவகை ஒவ்வொன்றும் ஒரு சுவை, இதில் பக்வாவுக்கு மட்டும் இடம் இல்லையா என்ன ?

நான் என் சீன நண்பர்கள் சிலரிடம் இந்த புத்தாண்டுக்கு பக்வா வாங்கியாச்சா ? என்று கேட்டால் சிலர் 'ஐயே......' என்பது போல் பார்கிறார்கள், சிலர் 'யெஸ்....' என்று சொல்லி மகிழ்கிறார்கள்.

இன்னொரு நாள் 'பக்குத்தே' என்ற பன்றி இறைச்சி வகை உணவு பற்றி எழுதுகிறேன். அவை பெரும்பாலும் உள்ளுறுப்புகள் எனப்படும் பன்றி ஆர்கன்களில் செய்யப்பட்ட ஒரு வகையாக சூடான சாறு வகை. கணவாய் மீன், அக்டோபஸ் மற்றும் பாம்பு கருவாடுகளையெல்லாம் இங்கு தான் பார்க்கிறேன்.

இவற்றையெல்லாம் நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் சாப்பிடுபவர்களின் ரசனையை ரசித்து இருக்கிறேன்.


அன்றைய விற்பனையில் 'பக்வா' தீர்ந்து போன அறிவிப்பின் பிறகும் வரிசையில் நிற்பவர்கள் ()

'பக்வா' வாங்க 8 மணி நேரமாக காத்திருப்பவர்கள் (S'poreans queuing overnight for bak kwa)


'பக்வா' வாங்கி வர அனுப்பி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் (சர்சை My boss told me to come, so I came, cannot argue. I'm very tired,' )

Read more...

மீண்டும் வந்துவிட்டது டிராகன் !

Wednesday, January 18, 2012

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் ராசி விலங்கு (Shēngxiào (Chinese: 生肖)) டிராகனாம், நான் சிங்கையில் பார்ப்பது இரண்டாவது டிராகன், 12 ஆண்டுக்கு ஒரு முறை 12 விலங்குகளின் சின்னம் மாறி மாறி வரும். எலி, எருது, புலி, முயல், டிராகன்(யாளி), பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகியன பணிரெண்டு விலங்குகள்.

சீனர்கள் பிறரின் வயதை அறிந்து கொள்ள நீங்கள் எந்த விலங்கில் பிறந்தீர்கள் என்று கேட்பார்கள், அதை வைத்து அகவை (வயதை) கணக்கிடுவார்கள், உடல் தோற்றம், தலை மயிர் அடர்த்தி, நிறம், தோல் அமைப்பு வைத்து நாம் பார்க்கும் எவரையும் கிட்டதட்ட வயது முடிவு செய்யமுடியும், ஒருவர் குதிரை ஆண்டு பிறந்திருந்தால் அவரது தோற்றத்தை வைத்து அந்த சுழற்சில் 12, 24, 36, 48 என்ற அளவில் கிட்டதட்ட அவரது வயது தெரிந்துவிடும், கூடவே இந்த ஆண்டு என்ன விலங்கு என்ன ? என்று தெரிந்து வைத்திருப்பதால் சரியான வயதை கண்டுபிடிக்க முடியும். இந்த ஆண்டு டிராகன் என்றால் 40+ வயது மதிக்கத் தக்கவர் தாம் குதிரை ஆண்டு பிறந்தவர் என்று சொன்னால் அவரது சரியான வயது 46 என்று அறிய முடியும், டிராகனில் இருந்து குதிரை ஆண்டு வர இரு ஆண்டுகள் ஆகும் அப்போது தான் அவருக்கு 48 ஆக இருக்கும். வயதை மறைப்பதையே அவர்களும் விரும்புகிறார்கள் என்பதால் எதாவது பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த விலங்கு ?' என்று போட்டு வாங்கித் தான் கண்டுபிடிப்பார்கள். சீனர்கள் இந்த பனிரெண்டு விலங்கு பெயர்களையும் அவை வந்து சென்ற ஆண்டையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள், 1970 ஆ ஆண்டு என்ன விலங்கு ? என்று கேட்டால் 12 வாய்ப்பாட்டில் கூட்டிக் கழித்து அந்த ஆண்டு என்ன விலங்கு (சேவல்) என்று உடனேயே சொல்லிவிடுவார்கள்.

சீனர்களின் சோதிடம் இந்த 12 விலங்குகளையே சார்ந்தது, அதாவது குறிப்பிட்ட ஆண்டில் பிறந்த அனைவருக்கும் ஒன்று போல பலன் தான், மொத்தம் 12 வகையான பலன்களில் ஒவ்வொருவருக்கும் மான பலன் பார்க்கப்படுகிறது, அதாவது 12 பேரில் ஒருவருக்கு ஒருவர் பலன் மாறுபடும், இந்த ஆண்டில் (டிராகனில்) பிறந்தவர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு பிறப்பவர்களுக்கும், 2000 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் ஒரே பலன் தான், பிற ஆண்டுகளில் பிறந்தவர்களின் பலன் ஆண்டில் விலங்கு ஏற்றவாறு மாறி இருக்கும்.

ஆண் குழந்தை மோகம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமே இல்லை, பொதுவாக ஆசிய இனத்தின் பண்பாகத்தான் இருக்கிறது, சீனர்களும் குடும்பத்தின் அடுத்தகட்ட தொடர்சிக்கும், கடைசி கால பாதுக்காப்பிற்கும் ஆண் குழந்தை கட்டாயம் தேவை என்பதை விரும்புவர்களாக இருக்கிறார்கள், சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாட்டினால் வேறு வழியின்றி அரசை பின்பற்றுகின்றனர். என்னுடன் பணி புரியும் சீனப் பெண் இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு மூன்றாவதாக ஆண் குழந்தைப் பெற்றதும் மிக மகிழ்ச்சியாக இப்போது என்னால் குழந்தை உற்பத்தியை நிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறினாள்.

மேற்சொன்ன விலங்கு ஆண்டுகளில் டிராகன் மற்றும் புலிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது, பல சீனர்கள் இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், மற்ற விலங்குகளை விட இந்த இரு விலங்குகள் மிகவும் அதிர்ஷடம் வாய்ந்ததாம். திருமணம் ஆனவர்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவர்களாகவும் பலர் இருக்கின்றனர், மற்ற ஆண்டுகளைவிட சீன மக்கள் தொகையில் பிறப்பு விகிதம் இந்த இரு ஆண்டுகளில் ஓரளவு கூடுதலாகவே இருக்கும்.

******

சீனப் புத்தாண்டின் போது சீனா முழுவதும் ஒருவார அரசு விடுமுறை, அரசு அலுவலங்கங்கள், பொது நிறுவனங்கள் இயங்காது, அவரவர் அவரவரது பிறப்பிடங்களில் தொடர்பு இருந்தால் சென்றுவிடுவார்கள், வனிக வளாகங்கள் வெறிச்சோடி கிடக்கும், சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மை என்பதால் அவர்கள் நடத்தும் உற்பத்தி சார்ந்த நிறுவங்கள் பெரும்பாலானவை ஒருவார விடுமுறையை கடைபிடிக்கின்றனர். எங்கள் அலுவலகமும் ஒருவாரம் விடுப்பு தான், சீனப் புத்தாண்டு இரண்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது, பழைய பொருளில் பயன்படுத்த முடியாதவற்றை வெளியே தூக்கி வைத்துவிடுவார்கள், பழைய கணிணி, தொலைகாட்சி பெட்டிகள் கூட வெளியே வைக்கப்பட்டு பார்த்திருக்கிறேன்,

சீனப் புத்தாண்டுக்கு சீனர்கள் பெரும் செலவு செய்வார்கள், ஏராளமான இனிப்பு பண்டங்கள், ரொட்டிகளை வாங்குவார்கள், குழந்தைகளுக்கு ஹங்பாவ் (ரெட் பாக்கெட்) எனப்படும் பணப்பரிசு கொடுப்பார்கள், அதற்கே அவர்களுக்கு ஆயிரம் வெள்ளிகள் வரை தேவைப்படுமாம், சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளில் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று அல்லது பொது இடங்களில் குடும்பங்களாகக் கூடி உண்டு மகிழ்வர். சீனப்புத்தாண்டின் இருநாட்களும் சிங்கையில் பொதுப் போக்குவரத்தில் சீனர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், பெரும்பாலும் அன்றைக்கு உறவினர்கள் வீடு அல்லது பிற இடங்களுக்குச் செல்ல வாகன வசதி இல்லாதவர்கள் வாடகைக்காரில் தான் செல்வார்கள். இந்த இரு நாட்களில் சுற்றுலா தளங்களில் சீனர்களைப் பார்ப்பதே அரிது. பேருந்துகள், தொடர்வண்டிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும். சிங்கையில் வசிக்கும் சீனர்களில் ஏரத்தாள முப்பது விழுக்காட்டு சீனர்கள் அண்டை நாடு மலேசியாவில் இருந்து வந்து தங்கியவர்கள், சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது மலேசியாவிற்கு திரும்பிவிடுவர். அது போலவே பிற நாட்டு சீனர்களும் தாயகம் திரும்பி இருப்பார்கள்.

சீனரின் பாரம்பரிய நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை இன்றும் தொடர்கின்றனர், குறிப்பாக இறந்த உறவினர்களுக்கு தாள்களை எரிப்பது, தாள்களினால் செய்யப்பட்ட இறந்தவர்களுக்கு விருப்பமான பொருள்களை செய்து எரிப்பது, சுற்றுச் சூழல் கெடுதல் என்ற வகையில் சிங்கப்பூர் அரசு அவற்றை தடுக்காவிட்டாலும் எரிக்கும் இடங்கள், அவற்றின் புகை, கரி பரவல் குறித்த கட்டுபாடுகளை விதித்திருக்கிறது. சீனர் நம்பிக்கை பழங்காலத் தொடர்பில் இருந்தாலும் எங்களுடைய நம்பிக்கையே உயர்ந்தது என்று அவர்கள் பிறரை வலியுறுத்துவதோ, தாழ்த்துவதோ கிடையாது. என்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு குழுவும், அமைப்பும் மூட நம்பிக்கையைக் கடைபிடித்தாலும் அவற்றினால் பிறருக்கு தீங்கு இல்லாவிட்டால் அவற்றை விமர்சனம் செய்ய ஒன்றுமே இல்லை.

சீனப் புத்தாண்டுகள் அடிப்படையில் சீனர்கள் விரும்பும் சிவப்பு வண்ணம் மயமானது, பாரம்பரிய சோதிட நம்பிக்கையின் தொடர்சி, ஆண்டு முறையின் தொடர்சி என்றாலும் அவற்றை பல்வேறு மதத்தைச் சார்ந்த சீனர்கள் யாவரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர். சீனர்களைப் பொருத்த அளவில் முதலில் சீன இனம், பிறகு பேசும் மொழி, பிறகு பழக்கவழக்கம் பண்பாடு, அதன் பிறகு இறுதியில் தான் மதம் சார்ந்தவற்றிற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள்.

மனித இனம் நிறங்களினாலும், தோற்றங்களினாலும் பல்வேறு இனகளாக அடையாளம் கொண்டுள்ளது என்னும் போது அவ்வினங்களுக்குள்ளான பொது அடையாளத்தை தொடர்ந்து பேணுவதால் மட்டுமே அவர்களுக்குள் ஒற்றுமையை நிலைத்திருக்க முடியும் என்று சீனர்கள் நம்புவதால் சீனப்புத்தாண்டு சீனர்களுக்கு பொதுவானதாகும்.

*****

மனிதர்கள் தங்களுக்குள் பல்வேறு இனங்களுடன் பழகிவருவதால் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான முயற்சி எடுத்துவருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது சமூக நல்லிணக்கத்தின் நோக்கங்களுள் ஒன்று தான், ஆனால் அந்த எண்ணம் மட்டுமே அவற்றை ஏற்படுத்திவிடாது, காரணம் மனிதன் பல்வேறு இனங்களுடன் இணக்கம் கொண்டிருக்க விரும்பினாலும் தத்தமது இன அடையாளங்கள் காக்கப்படவேண்டும் மற்றும் தாமே ஆளுமை மையமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறான். பல்வேறு இனங்கள் வசிக்கும் ஒரு நாட்டில் புதிதாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் ஆணா பெண்ணா என்பதைவிட நம் மனம் கணக்கிடுவது இவர் இந்த இனம் சார்ந்தவர் என்பதைத் தான். பல்வேறு தோற்றங்களுடன் மனித இனம் பரிணாமம் பெற்றிருப்பது இயற்கையின் சதியா ? இயற்கையின் ரசிப்பா ? ஒரே வகைப் பூக்களை, நாய்களை பல்வேறு நிறத்தில் பரிணமிக்கப்பட்டு அழகு காட்டுவதைப் போல் மனிதனின் நிறத்தை/ தோற்றத்தை ஒருவித ரசனைக்காக இயற்கை ஏற்படுத்திவிட்டு இருக்கலாம். ஆனால் இனத்தோற்றங்களை வைத்து மனிதர்கள் தான் உயர்வு, தாழ்வு மற்றும் ஆளுமை எண்ணங்களை ஆறாம் அறிவின் தொடர்பில் வளர்த்துக் கொண்டுள்ளனர்.

பிற இனங்கள் சீனர்களைப் பழிக்க அவர்கள் பாம்புகறி உண்ணுபவர்கள், பன்றி இறைச்சி உண்ணுபவர்கள், பூரான் பல்லி வகைகளைக் கூட விட்டுவைக்காதவர்கள் என்று அவர்களில் சிலரின் உணவு முறையே சுட்டிக் காட்டப்படுகிறது. சீனர்கள் இடம் பெயரும் போது அங்கு ஒரு நாட்டை அமைத்துவிடுகிறார்கள், தங்களது பண்பாடுகளை அங்கு கொண்டு வந்துவிடுகிறார்கள், குறிப்பாக இடம் பெயர்ந்தால் பிறகு அங்கு திரும்பிச் செல்வதே இல்லை, அதனால் தான் சீன இனம் பல்வேறு நாடுகளில் நீண்டுள்ளது மேலும் சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஆளுமை சக்தியாக வளர்ந்துள்ளது. இடம் பெயரும் ஊரை சொந்த நாடாகவே மாற்றி அங்கேயே உழைத்து வாழ்பவர்கள் ஆசியாவில் சீனர்கள் தான். சிங்கப்பூரில் இந்தியர்களின் பெருமூச்சுகளில் ஒன்று 'நம்மால் பெரிய அளவில் சீனர்களுக்கு போட்டியாக வரமுடியவில்லை' என்பது தான், காரணம் கால் காசு சேர்த்தாலும் அதை இந்தியாவில் முதலீடு செய்துவிட்டு ரிடையர்மெண்ட் காலத்தில் அங்கு சென்று அமைதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலோர் செயல்படுவது தான், ஒரு நிலையான அடித்தளத்தை சிங்கையிலோ பிற நாடுகளிலோ தமிழர்களாலும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது, இந்தியர்கள் சீனர்களை ஒப்பிட மிகச் சிலரே சென்ற நாட்டையும் முன்னேற்றி தானும் முன்னேறி இருக்கிறார்கள், சீனர்களில் பெரும்பான்மையினர் அவ்வாறு இல்லை, சென்று வசிக்கும் இடமே அவர்களது எதிர்கால தாய்நாடு.

Read more...

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP