பின்பற்றுபவர்கள்

30 ஜனவரி, 2009

மாமன்னரை போற்றுதும் !

உலகக் காவலன், உலகத்தார் காதலன், கழக கண்ணன், காண்போருக்கெல்லாம் அண்ணன், வயதொரு தடையென்பதால் பெயரைச் சொல்லத் தயங்குகிறேன். அண்ணனுக்காக 5 கோடி செலவில் மதுரை மாநகரெங்கும் கட் அவுட் திருவிழா, திரும்பிய இடமெல்லாம் சிரித்த முகத்துடன் அண்ணன், அங்கங்கே கர்ம வீரன் அட்டாக் பாண்டியனும் சேர்ந்தே சிரிக்கிறார். இன்று ஜெனவரி 30 அண்ணனின் 58 ஆவது பிறந்தநாள், மதுரை சுவாசத்திலும் கூடவே மாநகரெங்கும் உள்நாவில் தங்குதே பிரியாணியின் வாசம் ! இப்படி ஒரு கொண்டாட்டத்தை இதுவரை எவரும் கண்டதில்லை.

அண்ணன் வாழ்கவே ! வாழ்க வாழ்க !









10 கருத்துகள்:

Athisha சொன்னது…

த்தூ கேடு கெட்ட சனியன்கள்..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அய்யகோ!

பரிசல்காரன் சொன்னது…

Neengalumaa periyavare?

narsim சொன்னது…

ஏ!!!!!!!!! எங்க ஊரு..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ஜனவரி 30 காந்தி இறந்த நாள்...துக்கநாள்
ஜனவரி 30..அழகிரி பிரந்தநாள்..???????????????????

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

மதுரையில் நீங்கள் ஆற்றிய செம்பணி வாழ்க...

நீங்கள் எடுத்த படத்துடன் இந்த வலைதளத்தில் இருக்கும் படத்தையும் இணைக்கவும்...

http://sajayravee.blogspot.com/2009/01/blog-post_29.html


எங்கள் அண்னனை பற்றி தெரியாமல் பதிவு போட்டுவிட்டீர்கள்..
சிங்கைக்கு போனாலும் எங்கள் அண்ணன் விடமாட்டர்..
சிங்கை அவரின் தங்கையை கொடுத்த இடமல்லவா?

சி தயாளன் சொன்னது…

நீங்களும் அவர் விழாவில் கலந்து கொள்ளத்தான் சென்றீர்களா...?

இராம்/Raam சொன்னது…

கோரிபாளையம் பக்கமே சுத்தியிருக்கீங்க போலே.... பழங்காநத்தம் போயிருந்தா இன்னும் எங்கூரூ பாசகாராய்ங்க பவுசு தெரிஞ்சுருக்கும்.... :)

பாண்டித்துரை சொன்னது…

ஊருக்கு போனது இதுக்கு த்தானா!

கட்டபொம்மன் சொன்னது…

கடந்த வாரம் நண்பர்களுடன் மதுரை போயிருந்தேன். டிஜிடல் போர்டுகாரருக்கு நல்ல பண மழை. தங்கள் தலைவரை வாழ்த்த வேண்டியது தான் அதுகாக நேதாஜி, இயந்திரன் ரஜினி ரெம்ப ஓவர்., பசங்க சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு, வடிவேலு பாணில சொல்லனும்னா, என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலயே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்