பின்பற்றுபவர்கள்

31 மே, 2007

நீயே அள்ளு !

ஞாயங்கள் குறித்து பேசுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று எப்போதும் தங்களை 'அறிவாளிகள்' என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இட ஒதுக்கீடு பற்றி பேச வேண்டுமென்றால் அவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டுமாம். நீயெல்லாம் சிங்கபூரில் உட்கார்ந்து கொண்டு ஞாயம் பேசுவதைவிட களத்தில் இறங்கி வேலை செய்து முன்னேற்றலாமே, அதைவிட்டு பிளாக்கில் ஏன் உளறுகிறாய் ? என்று அறிவாளிகள் சொல்லுகின்றனர்.

அப்படியே தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் வந்து போராடினால், நீ தான் விழிப்புணர்வு பெற்று போராட்டம் வரை வந்துவிட்டாயே ? நீ பாதிக்கப்படுகிறாயான்னு ? அதே அறிவாளிகள் கேட்கிறார்கள்.

இவர்களெல்லாம் கேள்வியைப் பற்றி எரிச்சல் அடைவதைவிட 'இவனெல்லாம் கேட்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டானே' என்ற எரிச்சல் தான் அதிகம். அதிகமானல் கீழ்பாக்கத்துக்கு சென்று சரியான மருத்துவரை அனுகுங்கள் என்று அன்புடன் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

ஒருவர் அறிவு கெட்டுப் போய் 'நீ ஏன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு புலம்புகிறாய் ?' என்ற கேள்விக்கு நான் ஒரு பெரிய முன்னோட்டம் கொடுக்கனுமாம்.

அதாவது நான் யார் ?, எந்த சாதி, தாழ்த்தப்பட்டவனா ? எனக்கும் பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன சம்பந்தம், இந்தியாவில் படித்துவிட்டு அடுத்த நொடியே வெளிநாட்டுக்கு ஓடிவந்தவனா ? எனது அனுபவம் என்ன ? இது போன்று நான் சொல்லனுமாம். இங்கு முக்கால் வாசிப்பேர் அமெரிக்காவிலும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு தங்கள் சமூகமே விழுந்துக் கொண்டிருப்பதாக கவலைப் பட்டு இணையம் தோறும் பொய்யும் அவதூரும் பரப்புகிறார்களே அவர்கள் ஏன் களத்தில் இறங்கி உயர்ந்த சமூகத்து ஏழைகளை தூக்கி நிறுத்தக் கூடாது. காசு இருக்கிறது என்று காண்வெண்டில் படித்துவருபவன் ஏன் அரசாங்க கல்லூரியில், வேலைவாய்ப்பில் இட ஒதிக்கீடு கேட்கவேண்டும் ?

அறிவுபூர்வ கேள்வி கேட்பவர்கள் இதையெல்லாம் என்னை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்துவிட்டு 'நீ ஏன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு புலம்புகிறாய் ?' என்று கேட்கலாமே ?

ஒற்றை வார்த்தையில் மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ளும் அறிவாளிகளே, நீங்கள் ஏன் எதிராக போராடுகிறீர்கள் ? உங்களது சமூகத்தில் படிக்காதவர்களே இல்லையே ? பீ அள்ளும் தொழிலுக்கு அவர்களை அனுப்பலாமே செய்வீர்களா ? எங்களாலும் பீ அள்ள முடியும், பிணம் அறுக்க முடியும், வெட்டியானாக இருக்க முடியும் என்று செய்து காட்டிவிட்டு தகுதி, திறமை பற்றி அதற்கு மேல் ஞாயம் குறித்து பேசவாருங்கள்.

19 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் உடனே புது பதிவு

சரி நீங்க பீ அள்றவங்களை எல்லாம் இந்தியா வந்து காப்பாதாலாமே
நீங்க மட்டும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டில் படித்து விட்டு ரொம்ப சொகுசா இங்க வலைபூவில் ஜாதி சண்டை போடுவீராம்
ஒன்று தெரிந்து கொள்ளும் இங்கு நீங்க என்ன எழுதினாலும் ஒன்னும் நடக்க போவதில்லை .உண்மையில் உமக்கு உம் ஜாதி மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்தியாவிற்க்கு வந்து சேவை செய். இப்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு ஜாதி சண்டை போட வேண்டாம்

Unknown சொன்னது…

ஜி கே இப்ப்போ தெரியுதா ஏன் நாங்கள்ளாம் இப்படி கடுமையாவே "எழுதறோமுன்னு? "

இப்படித்தான் பின்னூட்டம் போடலாம்ம்னு இருந்தேன் ஆனா வேனாம் இது பதிவை திசைதிருப்பிவிடும் ஆகையால் அப்பீட்டு அப்றமா வருவேன் ரிப்பீட்டு

சிவபாலன் சொன்னது…

GK,

Cool Down!

அனானியாக வந்து கமென்ட் போடும் அவர்களுக்கெல்லாம் பதில் கூறி ஏன் உங்கள் ஆற்றல் வீணடிக்கிறீர்கள்.

பெயரில்லா சொன்னது…

உன் குடும்பம் பரம்பரை பரம்பரையா பீ அள்ளியுதோ !! நீயும் தானே அவங்களை நசுக்குறே

நீ ஒரு ஆம்பிளியா இருந்தா உன் அம்மா ஒருத்தனுக்கு தான் உன்னை பெத்தவளா இருந்தா நீ முதல்ல இந்தியாவுக்கு வந்து இதை எல்லாம் பேசு. சரியா

பெயரில்லா சொன்னது…

இப்படியே கிறுக்கு தனமாக பேசிகிட்டு இருந்தே உன்னை சிங்கபூரில் இருந்து உன்னை விரட்டி விட ரொம்ப நேரம் ஆகாது.உன் ஐபி நீ வேலை பார்க்கும் இடம் எல்லாம் எல்லாம் தெரியும்.பொதிதிகிட்டு போடா பாடு.

கோவி.கண்ணன் சொன்னது…

Anonymous said...
//உன் குடும்பம் பரம்பரை பரம்பரையா பீ அள்ளியுதோ !! நீயும் தானே அவங்களை நசுக்குறே

நீ ஒரு ஆம்பிளியா இருந்தா உன் அம்மா ஒருத்தனுக்கு தான் உன்னை பெத்தவளா இருந்தா நீ முதல்ல இந்தியாவுக்கு வந்து இதை எல்லாம் பேசு. சரியா
//

மேற்கண்ட் ஒரு அதிமேதாவி கண்டுபிடிப்பாளரின் அன்பான பின்னூட்டத்திற்கு பிறகு அனானி கமெண்ட் பெட்டி மூடப்பட்டது

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
இப்படியே கிறுக்கு தனமாக பேசிகிட்டு இருந்தே உன்னை சிங்கபூரில் இருந்து உன்னை விரட்டி விட ரொம்ப நேரம் ஆகாது.உன் ஐபி நீ வேலை பார்க்கும் இடம் எல்லாம் எல்லாம் தெரியும்.பொதிதிகிட்டு போடா பாடு.
//

பதிவை ஒழுங்க படிங்க...இல்லாட்டி எனக்கு தெரிந்த மருத்துவரிடம் உங்களை சிபாரிசு செய்கிறேன்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் உடனே புது பதிவு

சரி நீங்க பீ அள்றவங்களை எல்லாம் இந்தியா வந்து காப்பாதாலாமே
நீங்க மட்டும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டில் படித்து விட்டு ரொம்ப சொகுசா இங்க வலைபூவில் ஜாதி சண்டை போடுவீராம்
ஒன்று தெரிந்து கொள்ளும் இங்கு நீங்க என்ன எழுதினாலும் ஒன்னும் நடக்க போவதில்லை .உண்மையில் உமக்கு உம் ஜாதி மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்தியாவிற்க்கு வந்து சேவை செய். இப்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு ஜாதி சண்டை போட வேண்டாம்
//

ஏண்டாப்பா,

நீ மட்டும் பாதிக்கட்டு இருக்கீறா, இணையம் வரை வந்து கமெண்ட் போடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறாய் அல்லவா ? எங்கள் ஆளுங்க அள்ளிவிட்டு அந்த கூடையை வச்சிருக்காங்க...வந்து தூக்கிட்டுப்போ

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒன்று தெரிந்து கொள்ளும் இங்கு நீங்க என்ன எழுதினாலும் ஒன்னும் நடக்க போவதில்லை //

இதுபோல் எழுதும் பெரிய மனிதர் யார் என்பது அனைவரும் அறிந்ததே...நானும் மரியாதையாகவே 'போங்க ஜாட்டாரே' என்று சொல்லிக் கொள்கிறேன்

சதுர் சொன்னது…

கோவி.கண்ணன் நண்பரே,

நீங்கள் புரியாமல் பேசுகின்றீர்கள். விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வதற்காகவே படைக்கப்பட்ட பிறப்புகள் சிலர் இருக்கின்றனர்.

இறைவன் தெரியாமலா வைத்து இருக்கிறார்?

யார் யார் எதைச் செய்ய வேண்டுமோ அவரவர் அதை அதைத்தான் செய்ய வேண்டும்.

திடீரென நீங்கள் வந்து மாற்ற முயல்வது சரியல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுர்வேதி said...
கோவி.கண்ணன் நண்பரே,

நீங்கள் புரியாமல் பேசுகின்றீர்கள். விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வதற்காகவே படைக்கப்பட்ட பிறப்புகள் சிலர் இருக்கின்றனர்.

இறைவன் தெரியாமலா வைத்து இருக்கிறார்?

யார் யார் எதைச் செய்ய வேண்டுமோ அவரவர் அதை அதைத்தான் செய்ய வேண்டும்.//

இரு ஆண்டுகளுக்கு முன் சதுர்வேதி என்று ஒரு போலி சாமியாரின் பெயர் பலமாக அடிபட்டது. நீங்கள் அவர் இல்லை என்று நம்புகிறேன்.

நீங்க சொல்வதை பலர் மிறி இருக்கின்றனரே. அதாவது சத்திரியன் தொழிலை சத்திரியர்கள் மாட்டும் செய்யவில்லையே ? பணம் கொழிக்கும் தொழில் பலரும் இருக்கின்றனரே ? இது விதி மீறல் இல்லையா ? உதாரண புருசர்கள் உதரணமாகவே திகழ்ந்தால் குழப்பம் வராது என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

bala சொன்னது…

ஜிகே அய்யா,
நாற்பது ஆண்டு கால கிருமி லேயர் திராவிட OBC ஆட்சியில எம்மக்கள்(அதாங்க,நம்ம ராஜ்வனஜ் அய்யாவோட சகோதரர்கள்) கையில் கொடுக்கப்பட்டது, மலம்.கொடுத்தது கிருமி லேயர் OBC கும்பல். ஒடுக்கியவர்களே,ஒடுக்கப்பட்டவர்கள் என்று ஜல்லி அடித்து,கேவலமா பாக்வார்ட் அந்தஸ்த்து வாங்கி ஓசி அடிக்கும் நம்ம கட்சி கிருமி லேயர் கும்பலுக்கு வெட்கமில்லையா என்று கேட்கிறார்களே?இதற்கு செம்மையா பதில் சொல்லுங்கய்யா.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
ஜிகே அய்யா,
நாற்பது ஆண்டு கால கிருமி லேயர் திராவிட OBC ஆட்சியில எம்மக்கள்(அதாங்க,நம்ம ராஜ்வனஜ் அய்யாவோட சகோதரர்கள்) கையில் கொடுக்கப்பட்டது, மலம்.கொடுத்தது கிருமி லேயர் OBC கும்பல். ஒடுக்கியவர்களே,ஒடுக்கப்பட்டவர்கள் என்று ஜல்லி அடித்து,கேவலமா பாக்வார்ட் அந்தஸ்த்து வாங்கி ஓசி அடிக்கும் நம்ம கட்சி கிருமி லேயர் கும்பலுக்கு வெட்கமில்லையா என்று கேட்கிறார்களே?இதற்கு செம்மையா பதில் சொல்லுங்கய்யா.

பாலா
//

பாலா ஐயா,

OC யில் கீரிமீ லேயர் ஆளுங்களே இல்லையா ? எப்படி ஐயா ஐஐடி வரைக்கு அவங்களால போக முடியுதுன்னு கேட்கிறாங்க இதுக்கும் செம்மையாக பதில் சொல்லுங்க பாலா ஐயா.

SurveySan சொன்னது…

கோவி, அந்த கேடு கெட்ட அனானி கமெண்டெல்லாம் தூக்கிடலாமே?

பாதிக்கப்பட்டவன் மட்டும்தான் பேசணும்னு யாராச்சும் சொன்னா, அது முட்டாள் தனமே.

//OC யில் கீரிமீ லேயர் ஆளுங்களே இல்லையா ? எப்படி ஐயா ஐஐடி வரைக்கு அவங்களால போக முடியுதுன்னு கேட்கிறாங்க இதுக்கும் செம்மையாக பதில் சொல்லுங்க பாலா ஐயா//

OCயிலும், பல கோடி கிருமிகள் இருக்கத்தான் செய்யுது, அதுக்காக அவங்களுக்கு கல்லூரியில் இடமே கொடுக்கக் கூடாதுங்கறீங்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

// SurveySan said...
கோவி, அந்த கேடு கெட்ட அனானி கமெண்டெல்லாம் தூக்கிடலாமே?//

சர்வேஷ்,
காழ்புணர்வுகளை வெளிச்ச மிடவில்லையென்றால் இப்படிப் பட்ட ஆள்கள் இருப்பதை எப்படி பலரும் புரிந்து கொள்ள முடியும்.

பதிவின் வாதங்களை மறுக்க எதிர்வாதம் வைக்க விசயம் ஒன்றும் இல்லை என்று கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. ஆற்றாமையில் பொறிபவர்கள் பொறியட்டுமே. மனசாந்தி கிடைக்குமே அவர்களுக்கு.
:))

//OCயிலும், பல கோடி கிருமிகள் இருக்கத்தான் செய்யுது, அதுக்காக அவங்களுக்கு கல்லூரியில் இடமே கொடுக்கக் கூடாதுங்கறீங்களா?

11:16 AM, June 01, 2007
//

நான் அப்படி சொல்லவில்லை. கிரிமிகள் எல்லா சமூகத்திலும் இருக்கிறது என்று சொல்லவே அப்படிச் சொன்னேன். வசதியுள்ளவர் நான்கு படிநிலைகளில் எதில் இருந்தாலும் அவர்களும் கிரிமிகளே.

bala சொன்னது…

//நான் அப்படி சொல்லவில்லை. கிரிமிகள் எல்லா சமூகத்திலும் இருக்கிறது என்று சொல்லவே அப்படிச் சொன்னேன். வசதியுள்ளவர் நான்கு படிநிலைகளில் எதில் இருந்தாலும் அவர்களும் கிரிமிகளே//

ஜீகே அய்யா,
இருக்கலாம்.ஆனா அந்த கும்பல்,நம்ம கும்பல் மாதிரி தங்களைத்தானே பாக்வேர்ட் என்று பொய்சொல்லி ஓசி அடிக்கறாங்களா?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...

ஜீகே அய்யா,
இருக்கலாம்.ஆனா அந்த கும்பல்,நம்ம கும்பல் மாதிரி தங்களைத்தானே பாக்வேர்ட் என்று பொய்சொல்லி ஓசி அடிக்கறாங்களா?

பாலா
//

பாலா ஐயா,

எல்லோரும் முன்னோடி என்று சொல்லிக்கிறவங்க தானே முதலில் OC ஐ விட்டு வெளியில் வரனும் ?

பாலா ஐயா, முனிசிபால் பள்ளிக்கூடம் அரசு பள்ளி என்று முகம் சுளிச்சிட்டு நர்சரிக்கு அனுப்புறாங்க அப்பறம் ஏன் அரசு கல்லூரிகளை மட்டும் அப்படி நினைக்காம இட ஒதுக்கீடூ கூடாதுன்னு சொல்றாங்க ?

தெளிவு படுத்துங்க பாலா ஐயா

bala சொன்னது…

//அப்பறம் ஏன் அரசு கல்லூரிகளை மட்டும் அப்படி நினைக்காம இட ஒதுக்கீடூ கூடாதுன்னு சொல்றாங்க //

ஜிகே அய்யா,
ஏன்னாக்க, தனியார் கல்லூரிகள் எல்லாமே கிருமி லேயர் கும்பல் நடத்தும்,அரசு கல்லூரிகளை விட மிக மிக கேவலமான தரத்துடன் இயங்கும், லூட் அடிக்கும் கல்லூரிகள்.இது ஏன்னாக்க நம்ம கிருமி லேயர் OBC அரசு,சக கிருமி லேயர் OBC திருட்டு கும்பலுக்கு மட்டும் தனியார் கல்லூரி தொடங்க அனுமதி அளித்திருப்பது தான்.higher education துறை ரிஃபார்ம் செய்யப்பட்டால் இந்த அவலம் மறைந்து விடும்.அது சரி நீங்க/உங்க குழந்தைங்க .மத்த கிருமி லேயர் ஓ பி சி கும்பல் எல்லாம் அரசு பள்ளியில் படிச்சவங்களா அய்யா?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...


ஜிகே அய்யா,
ஏன்னாக்க, தனியார் கல்லூரிகள் எல்லாமே கிருமி லேயர் கும்பல் நடத்தும்,அரசு கல்லூரிகளை விட மிக மிக கேவலமான தரத்துடன் இயங்கும், லூட் அடிக்கும் கல்லூரிகள்.இது ஏன்னாக்க நம்ம கிருமி லேயர் OBC அரசு,சக கிருமி லேயர் OBC திருட்டு கும்பலுக்கு மட்டும் தனியார் கல்லூரி தொடங்க அனுமதி அளித்திருப்பது தான்.higher education துறை ரிஃபார்ம் செய்யப்பட்டால் இந்த அவலம் மறைந்து விடும்.அது சரி நீங்க/உங்க குழந்தைங்க .மத்த கிருமி லேயர் ஓ பி சி கும்பல் எல்லாம் அரசு பள்ளியில் படிச்சவங்களா அய்யா?

பாலா
//

பாலா ஐயா,

தஞ்சாவூர் வல்லம் பக்கத்தில் ஒரு கும்பல் யுனிவர்சிட்டி நடத்துகிறது. அங்கு OC க்கு ஓசி சீட் கிடைக்காதா ? நீங்க மேற்குறிப்பிட்ட திருட்டு கும்பலில் இது வரலையா பாலா ஐயா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்