பின்பற்றுபவர்கள்

9 ஜனவரி, 2012

ஒருவார்த்தை சில எச்சம் !

விஜய் தொலைகாட்சியில் ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, நிகழ்ச்சிப்பற்றி தமிழ் பற்றிய பொது அறிவை வளர்ப்பது தமிழ் சொற்களை அறிந்து கொள்ள வைப்பது என்று தான் முன்மொழியப்படுகின்றன, அதில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ் பற்றிய தெளிந்த அறிவு இருக்க வேண்டுமோ என்ற எண்ணத்தை காண்போருக்கு ஏற்படுத்துகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த அளவில் அது சொல் குறித்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சி அவற்றில் சிற்சில தமிழ் சொற்களும் உள்ளன.

எனக்கு தெரிந்து தமிழ் அடையாளங்களில் ஒன்றான வேட்டியுடன் கலந்து கொண்டவர் வேணு அரவிந்த் மற்றும்ஆஜய் ரத்தினம் மட்டுமே, அதன் பிறகு கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் பொது உடையில் தான் வந்தனர். உடைபற்றி பெரிதாக விவாதம் செய்ய ஒன்றும் இல்லை என்றாலும், தமிழ் சார்ந்த நிகழ்ச்சி என்று முன்மொழியப்படுவதில் பண்பாட்டு உடைகளுக்கு முதன்மைத்துவம் அளிப்பது நன்று. பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் பண்டிகைகால ஒளிபரப்புகளில் அவற்றில் வந்து போகும் பெண்கள் மட்டுமே பட்டுப் புடவை அணிந்துவருகிறார்கள், நிகழ்ச்சி நடத்தும் ஆண்களில் இந்திய வடிவமைப்பு உடைகளை அணிந்துவருவது கிட்டதட்ட இல்லை என்ற அளவில் தான்.

ஒருவார்த்தை ஒரு லட்சம் என்பதில் இருக்கும் 'வார்த்தை' என்பது தமிழ் சொல்லே அல்ல, உண்மையில் தமிழ் பற்றுடன் தமிழ்சார்ந்த தலைப்பு வைத்திருக்க வேண்டுமெனில் ஒரு சொல் ஒரு லட்சம் என்றே இருக்க வேண்டும். இந்த 'வார்த்தை' என்ற வடமொழிச் சொல் திராவிட மொழிகள் பிறவற்றில் 'செய்தி' என்ற பொருளிலும் தமிழில் சொல் என்ற பொருளிலும் திணிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சரி அது தான் போகிறது என்று பார்த்தாலும் அவர்கள் குறிப்புக் கொடுக்கும் விளையாட்டுச் சொற்கள் பலவற்றிலும் பரவலான வடசொற்களே இடம் பெற்றுள்ளன. இவர்கள் இப்படி தொடர்ந்து வடசொற்களை மறுபுழகத்தில் விடும் போது அவற்றிகு மாற்றாக புழங்கிவரும் தமிழ் சொற்கள் மறையும் நிலையைத்தான் ஏற்படுத்துகின்றன. எடுத்துகாட்டிற்கு 'நமஸ்காரம்' என்ற சொல்லைப் பற்றி குறிப்புக் கொடுக்கச் சொல்கிறார்கள், விளையாடுபவர் அதை குறிப்புகளின் வழியாக கண்டுபிடித்துவிடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். நமஸ்காரம் என்பது தமிழ் சொல்லா ? அது நமஸ்கார் என்றோ வடமொழிச் சொல் தமிழில் புழங்கிவரும் வடிவம் தான், ஆனால் நாம் நமஸ்காரத்தை என்று விட்டு 'வணக்கம்' சொல்வதற்கு மாற்றிக் கொண்டுள்ளோம், மீண்டும் திரைகளில் இது போன்ற சொற்களை தமிழ் சொல் என்று காட்டுவதால் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் சொல் பற்றி மறந்துவிடும் கூறுகள் மிகுதியாகிறது.

அது தவிர நிகழ்ச்சியில் சொல்லை கண்டுபிடிக்கும் முறையை தற்போது விளையாட வரும் அனைவருமே ஒன்றுபோலவே பின்பற்றுகிறார்கள், கிட்டதட்ட அவை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒன்றும் கடினமான ஒன்று அல்ல என்ற முதல் படிநிலைகளில் அச்சொற்கள் மிக எளிதாக கண்டுபிடிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு 'எச்சம்' என்ற சொல்லைப் பற்றி விளையாடுபவர்களில் ஒருவர் குறிப்புக் கொடுக்க மிகவும் கடினப்படத் தேவை இல்லை, அவர்கள் ஏற்கனவே வரிசைப்படி அறிந்துள்ள சொற்றொடர்களின் ஒவ்வொரு சொல்லையும் வரிசையாகச் சொன்னாலே போதும், எச்சம் - இதற்கு எவ்வாறு குறிப்பு கொடுப்பது ?

விளையாடுபவர் 1 : தலைவர்
விளையாடுபவர் 2 : தொண்டர்
விளையாடுபவர் 1 : சிலையில்
விளையாடுபவர் 2 : மாலை
விளையாடுபவர் 1 : காக்கை
விளையாடுபவர் 2 : 'எச்சம்'

அதாவது எச்சம் என்று கண்டுபிடிக்க 'தலைவர் சிலையில் காக்கை' என்று சொல்லி முடிக்கும் போது நமக்கு அதன்விடை 'எச்சம்' என்று தெரிந்துவிடும். இப்படித்தான் மிக எளிதாக கண்டுபிடிக்கும் படி விதிமுறைகள் உள்ளன

விளையாடுபவர் 1 : ஜெயலலிதா
விளையாடுபவர் 2 : கருணாநிதி
விளையாடுபவர் 1 : மீண்டும்
விளையாடுபவர் 2 : மறுபடியும்
விளையாடுபவர் 1 :ஆனார்
விளையாடுபவர் 2 : 'முதல்வர்'

அதாவது முதலமைச்சர் என்ற சொல்லுக்கு 'ஜெயலலிதா மீண்டும் ஆனார்' என்ற குறிப்பின் முடிவில் விடைத்தெரிந்துவிடும். 30 ஆயிரம் ரூபாய்க்கான போட்டிச் சொற்களில் பெரும்பாலும் வழக்கில் இல்லாத வடசொற்களே எடுத்துகாட்டிற்கு 'எதோச்சிகாரம், விவாஹம், முகூர்த்தம், வஸ்து, வாஸ்தவம், வஸ்திரம்' போன்ற வடசொற்களே தமிழ்சொற்கள் என்பதாக போட்டியில் வைக்கப்படுகின்றன.

ஒருவார்த்தை ஒரு லட்சம் - நிகழ்ச்சி என்ற அளவில் பார்க்க சுவையார்வமாக இருக்கிறது, ஆனால் அதை தமிழ் நிகழ்ச்சி, தமிழைத் தாங்கும் நிகழ்ச்சி என்றெல்லாம் முன்மொழியப்படாமல் 'பொழுது போக்கு விளையாட்டு நிகழ்ச்சி' என்று சொன்னால் தகும். இதில் சிலபடிகள் வெற்றிபெற பெரிய அளவில் தமிழ் சொற்கள் குறித்த அறிவு தேவை இல்லை, 'தலைவர் சிலையில் காக்கை' போன்று சொற்கோர்வைகளை அமைக்கத் தெரிந்திருந்தாலே போதும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

i read this..nice comment given by u.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்