பின்பற்றுபவர்கள்

26 ஜூலை, 2007

மன்னாதி மன்னா ... :)

அமைச்சர் : மன்னா ! எதிரி மன்னன் நம்மீது படையெடுத்து வருவதாக ஓலை அனுப்பி இருக்கான்...
மன்னர் : ஓ !!அப்படியா ? யானை படையை கிழக்கு திசையில் அனுப்பு, குதிரை படையை மேற்கு திசையில் அனுப்பு, காலாட் படையை தெற்கு திசையில் அனுப்பு...
அமைச்சர் : வடக்கு திசையில்...
மன்னர் : அந்த திசையில் தான் தப்பி ஓடப் போகிறேன்

அமைச்சர் : மன்னாதி மன்னா...! நீடூழி வாழ்க ! எதிரி நாட்டு மன்னன் போருக்கு வருகிறார்
மன்னர் : கடுப்பேத்தாதிங்க அமைச்சரே, நான் எப்படியும் மண்ணோடு மண்ணாகப் போகிறேன்...இந்த நேரத்தில் வாழ்த்துக்கள் வேறா. யாரங்கே இவனை என் முதுகோடு சேர்த்து கட்டுங்கள். நான் ஓடும் போது அமைச்சர் மார்பில் வேல் பட்டு வீர மரணம் அடையட்டம்.


அமைச்சர் : மன்னா உங்களைப் பார்க்க பெப்சி கம்பெணி காரங்க வந்திருக்காங்க
மன்னர் : எதுக்காம் ?
அமைச்சர் : நீங்கள் புறமுதுகிட்டு ஓடும் போது உங்க முதுகில் பெப்சி விளம்பரம் இருந்தால் நல்ல ரீச் ஆகி வியாபாரம் பெருகுமாம்.
மன்னர் : எதுக்கும் கோகோ கோலா விடம் இருந்து அதிக தொகை கிடைக்கிறதா என்றும் கேட்டுவர ஆள் அனுப்புங்க

பின்குறிப்பு : நண்பர் ஜே.கண்ணன் என்பவர் ஜிடாக்கில் பரிமாறியது இவை...கடியாக இருந்தால் நான் புறமுதுகு காட்டிவிடுகிறேன்....

2 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

வெரி நைஸ் ஜோக்ஸ்!

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
நல்லா இருக்குங்க...

10:58 PM, July 26, 2007


நாமக்கல் சிபி said...
வெரி நைஸ் ஜோக்ஸ்!
//

வாங்க பாலாஜி மற்றும் சிபியாரே,

இன்னிக்கு மொக்கைப் போட ஒண்ணும் கிடைக்கல...சாட்டில் ஒரு அப்பாவி வந்தார் ...அவரிடம் மொக்கை போட்டு வங்கி எழுதியது இது.

உங்கள் பாராட்டு அவருக்கு சேரும்
நன்றி !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்