பின்பற்றுபவர்கள்

25 மே, 2012

மேம்பட்டுவரும் திருநங்கைகள் சமூகம் !


ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் எனது வலைப்பதிவு பற்றி குறிப்பிட்டு இருந்த போது திருநங்கைகள் குறித்து நான் எழுதி இருந்ததன் வரிகள் இடம் பெற்றிருந்தன.  

"உலக முன்மாதிரியாக தமிழக கிறிஸ்தவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர், திருநங்கைகளை அர்சகராக ஆக்குவதால் ஏற்கனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அப்பணிக்கு கொண்டை போட்டுக் கொள்வது எளிது மேலும் ஆண் அர்சகரைப் போன்று மேலாடை இல்லாத அரைமனிதனாக வலம் வந்து அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்கள், மூன்று நாள் வீட்டு விலக்கு மாதவிலக்கெல்லஅம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இந்துமதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது, பார்பன அர்சகர்கள் இதனை எதிர்த்தாலும் பிற கோவில்களில் பூசாரிகளாக அவர்களை பணிக்கலாம், எந்த ஒரு ஆகமவிதிகளிலும் திருநங்கை அர்சகராகும் / பூசாரி ஆவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன். நாயகிபாவம் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் இந்து மத வழக்கங்களில் ஆண் கடவுளை கணவனாக நினைத்து உருகும் முக்தி தேடும் வழிகள் இருக்கிறதாம், அவற்றைச் செய்ய சரியானவர்கள் திருநங்கைகள் தான்"

கூத்தாண்டவர் திருவிழாவில் கூடும் திருநங்கைகளை கேலிப் பொருளாக பார்த்துவரவும், அவர்களிடம் சில்மிசம் செய்யவும் செல்வோர்கள் அதிகம். இத்தகைய அவமான அங்கீகாரம் தவிர இந்து மதம் சார்பில் திருநங்கைகளுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

திருநங்கைகள் குறித்த பல்வேறு தரப்பினர்கள் கூறும் கருத்துகள் கவனமாக படிக்கப்படுகிறது என்பதைத்தான் ஆனந்தவிகடனில் அந்த தகவல் இடம் பெற்றிருந்த போது தெரியவந்தது. பாதிரியார் ஆன திருநங்கை யார் அவர் பெயர் என்ன, எந்த சூழலில் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது  போன்ற தகவல்கள் அந்தப் பதிவை  எழுதும் போது எனக்கு கிடைக்கவில்லை, நேற்று விஜய் தொலைகாட்சியில் 'குற்றமும் பின்னனியும்' என்ற நிகழ்சியின் இரண்டாம் பாகமாக பாதிரியார் ஆன திருநங்கையைப் பற்றீய தகவல்களை, அவரது பேட்டியுடன் கொடுத்தனர், இவற்றைக் காட்டவேண்டிய நிகழ்ச்சியின் பெயர் சற்று உறுத்தல் என்பது தவிர்த்து, அது பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்பதால் அதில் அந்தத் தகவல் வந்திருந்தது பலரை அடைந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 'பாரதி ராஜா' என்ற பெயரில் ஆண் குழந்தையாகப் பிறந்து வழக்கம் போல் திருநங்கைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளால் தன்னை ஒரு பெண்ணாக நினைக்கத் துவங்கி பல்வேறு சிக்கல்கள், குடும்பத்தினரின் வெறுப்பு, கோபம் ஆகியவற்றை எதிர்நோக்கத் திறன் இல்லாமல் சென்னைக்கு வந்து பிற திருநங்கைகளுடன் சேர்ந்து கடை கேட்கும் (கை தட்டி பிச்சை எடுத்தல்) செய்து வந்தாராம், அதில் ஏற்பட்ட அவமானங்கள் 'எவ்வளவு பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த எனக்கு இவ்வளவு அவமானமா ?' கூனிக் குறுகி தத்தளிக்கும் போது, சமூக ஆர்வலர் மூலமாக ஒரு கன்னியாஸ்திரி அறிமுகமாக அவர் வழியாக கிறிஸ்துவ சமய்ப் படிப்பைப் மதுரையில் தங்கிப் படித்துவிட்டு. அவரின் பரிந்துரையின் மூலமாக செங்கல்பட்டு கிறிஸ்துவ சமய ஆயர் என்னும் பதவியைப் பெற்று இறைப் பணி செய்துவருகிறார்.

நேற்று அவர் பேட்டியைப் பார்க்கும் போது அவருடைய கண்ணில் அதன் பெருமிதம் தெரிந்தது, மறைவாக பாலியல் தொழில் அதில் அடி உதை, பொய் வழக்கு, பாலியல் நோய், கடன், கொலைகள் என்பதாகத்தான் அவரைப் போன்ற மற்ற திருநங்கைகளின் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது என்பதைப் நினைக்க அவரது பெருமிதத்தின் மீதான பொருள் ஆழமாக விளங்கியது.

பாரதி பாதிரியாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாரதியை ஒரு பெண்ணாகவும், மதபோதகராகவும் பார்த்து மிகவும் மரியாதையாகவே நடத்துகின்றனர் என்பதையும் நிகழ்ச்சியில் காட்டினார்கள், 'என் தம்பி தனது திருமணத்திற்கு வரக்கூடாது என்று கூறினான், ஆனால் இன்றோ என் தலைமையில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன, இது எனக்கும் திருநங்கைகள் சமுகத்திற்கும் பெருமையானது' என்று கூறினார் பாரதி.

ஆண் உடல் வலிவும் பெண் மனமும் இருப்பதால் அவர்களால் பண்பாட்டு கலைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும். ஆனால் சமூகம் தான் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிவிட்டு தொடர்ந்து அவமானமும் படுத்துகிறது. ஆண் பெண் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இவர்களால் செய்ய முடியும், தலைமை ஏற்கவும் முடியும். அவர்களை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பது அவர்களுடைய பெற்றோர்களும், பின்னர் சமூகமும் தான். பாரதி மூலமாக திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கையும், பொதுமக்களுக்கு மாற்றுப் பார்வையும், அவர்களை சமூகத்தின் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் வாய்க்கும் என்றே தெரிகிறது, இது ஒரு நல்ல முன்னோட்டம். ஆனால் இதையும் மதப் பிரச்சாரத்திற்கு திருநங்கையை வளைத்த கிறிஸ்துவம் என்று தூற்றி அவர்களை இழிவுப்படுத்தத் தான் முயல்வர். ஏனென்றால் மதவெறி மனிதாபிமானங்களை என்றுமே மதித்தது இல்லை, இதைவீடக் கொடுமையானது இஸ்லாமிய சமூகம் திருநங்கைகள் முற்றிலுமாகவே நிராகரிக்கிறார்கள், வெறும் நம்பிக்கை தான் என்றாலும் ஆதாம் ஏவாள் இல்லாமல் தனித்து உருவாக்கப்பட்டது அவனுள் சரிபாதி பெண்மை இருந்தது, திருநங்கையாக இருந்தான் என்றாவது ஒப்புக் கொண்டால் திருநங்கைகள் பற்றிய தெளிவாவது கிடைக்கும். சிந்திப்பவர்களுக்கு இதில் நல் அத்தாட்சி இருக்கிறது என்று கூறி இதை நான் மத அரசியலாகத் தொடரவிரும்பவில்லை, 

தகவலின் சாரம் திருநங்கைகளை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதே, அவர்கள் முன்னேற்றம் தொடர்வது சமூகம் தன்னை மாற்றிக் கொண்டு இருப்பதன் அடையாளமாகத் தெரிகிறது. ஆஷா பாரதி, நர்தகி நட்ராஜ், லிவிங்க் ஸ்மைல் வித்யா, சிஙகப்பூரில் ஒரு குமார், இப்படிக்கு ரோஸ் என்று திருநங்கைகள் பிரபலங்களாக வளர்ந்துவருகிறார்கள், அவர்களுக்கு மகுடம் வைத்தது போல் பாதிரியாராக பாரதி. தமிழ் சமூகம் நாட்டிலேயே முன்னோடியாக திருநங்கைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருப்பதால் பண்பாட்டு வளர்ச்சியில் நாம் முன்னோடி என்பது நமக்கு பெருமையானது. நல்வாழ்த்துகள்


கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்