பின்பற்றுபவர்கள்

19 ஆகஸ்ட், 2011

மணிரத்னத்தின் அடுத்தப்பட திரைக்கதை !

மீனவ பிரச்சனைகள் படமாகிறதாம், மணிரத்னம் இயக்குகிறாராம், ஜெயமோகன் வசனம் எழுதுகிறாராம்.

சரி சரி கற்பனை கதை விவாததிற்குள் செல்வோம்

**********

மணி : நம்ம அரவிந்த்சாமி இப்ப இருக்கிற கெட்டப்புல அவரைத்தான் கட்டுமரக்கார மாரிமுத்துவாப் போடனும்னு நினைக்கிறேன்

ஜெமோ : நல்ல சாய்ஸ், அப்படியே குஷ்புவை அவரோட சம்சாரமாக போட்டுவிடுங்க

மணி : கதை என்னான்னா ? நம்ம பையன் மாதவன் மாதிரி ஒரு புதுமுகத்தைக் காட்டலாம்னு இருக்கேன்

ஜெமோ : மீன்காரனாக நடிக்க மீசை இல்லாத ஹீரோவா ?

மணி : மீன்காரனாக இல்லை, மொத்தமாக மீன் வாங்கும் தொழில் அதிபராகத்தான் காட்டுறோம்

ஜெமோ : அதை எப்படி கடலுக்குள் நடக்கும் கதைக்குள் நுழைப்பிங்க ?

மணி : பையன் ஒரு நாள் ஆர்வத்துடன் மீன்பிடி படகுல ஏறிக் கடலைப் பார்க்கப் போறான்

ஜெமோ : அப்பறம்

மணி : எதிரில சிங்களப் கடற்படை.. அதுல கடற்படை அதிகாரியாக ஒரு கன்னிப் பொண்ணு

ஜெமோ : ஒய்யாவோ ஒய்யாவோ அட என்னா ஓ....ன்னு பாடிக் கிட்டே வருகிறார்களா ?

மணி : அதிகாரி எப்படிங்க அப்படி பாடுவாங்க, கதையக் கேளுங்க, சிங்களப் படை நம்ம ஹீரோவை நெற்றியில் துப்பாக்கி வச்சு புடிக்குது

ஜெமோ : அப்படியே இலங்கைக்கு கொண்டு போய்டுறாங்களா ?

மணி : ஆமாம், ஜட்டியெல்லாம் கழட்டிட்டு நிர்வாணமாக போட்டு சக்கரை தண்ணி தெளிச்சு வெயிலில் போட்டுட்டு போய்டுறாங்க

ஜெமோ : ஷங்கர், பாலா டச் கொஞ்சம் வருது..இதுக்கப்பறம் நான் சொல்றேன்

மணி : ம் சொல்லுங்க ஒங்க கதை என் கதையோடு ஒட்டுதான் பார்க்கிறேன்

ஜெமோ : அந்த கடற்கன்னி யாருக்கும் தெரியாமல் வந்து நம்ம ஹீரோவை பாத்ரூமுக்கு கூட்டிப் போய் குளுப்பாடி தலையெல்லாம் துவட்டி விடுது, அந்த நேரமாகப் பார்த்து கடற்படை ஆளுங்க வந்து கோபமாகி அந்த பொண்ணு அதான் நம்ம படத்தோடு ஹீரோயின் அவங்களை மாருல எட்டி உதைக்கிறாங்க

மணி : ம் அட என்னோட தீ(ம்)மை வீட இது நல்லா இருக்கே

ஜெமோ : திரும்பவும் ஹீராவை கட்டிப் போட்டு, ஜீப்புல தூக்கிப் போட்டுட்டு அந்த ஹீரோயினை அங்கேயே விட்டுட்டுப் போறாங்க, போகும் போது பொட்டுத் துணி இல்லாமல் அந்த பொண்ணு ரெத்தவிளாறாக் கிடக்குது

மணி : இதுக்கப்பறம் நான் கதையைச் சொல்றேன்......

ஜெமோ : ம்

மணி : இந்த இடத்தில இன்னொரு பாட்டு வைக்கிறோம்

ஜெமோ : மொதப்பாட்டு எங்கே வைக்கிறோம்னு சொல்லவில்லையே......

மணி :மொதப்பாட்டு : அந்திமழை மேகம் ரேஞ்சுக்கு மீனவ கிராமத்தில் தான் துவங்குது.......யோவ் அதையெல்லாம் நான் ஏற்கனவே ரஹ்மான் கிட்ட டிஸ்கெஸ் பண்ணிட்டேன்யா

ஜெமோ : சரி சரி எனக்கு தெரியாது அதான் கேட்டேன்

மணி : இப்ப கதையைக் கேளுங்க.... தூக்கி வந்த ஹீரோவை கடற்படை அப்படியே கடலில் தூக்கிப் போடுது, அங்க இண்டர்வெல்

ஜெமோ : குறும்படம் எடுக்கப் போறோமா ?......

மணி : யோவ்.....இது திரைக்கதை தான், இடையிடையே சிங்களப் படை தமிழக மீனவர்களை அடிச்சுக் கொல்றது, வலையறுக்கிறது, படகை மூழ்கடிக்கிறதெல்லாம் காட்டினால் 1.15 மணி நேரம் ஓடிவிடும், இன்னும் ஹிரோ இராமஸ்வரம் கோவிலுக்கு வரும் பெண்களை சைட் அடிக்கும் மேட்டரெல்லாம் கூட முன்பே வருது, அதுக்கெல்லாம் வசனம் நீ தான் டெவலப்பண்ணனும், சுகாசினியை எழுதச் சொன்னால், எல்லா வரியிலும் 'லே' போட்டுட்டு இது தான் திருநெல்வேலி / ராமேஸ்வரம் பாசைன்னு சொல்லிடும்.

ஜெமோ : அதுவும் சரிதான்

மணி : கடலில் தூக்கிப் போட்ட ஹீரோ மறுபடியும் இலங்கை கடறகரையில் ஒதுங்கிறார், கடலையே வெறிச்சுப் பார்த்து சிலையாய் நின்ற ஹீரோயின் பார்த்துடுறாங்க, மறுபடியும் காப்பாற்றி அங்கிருந்து கட்டுமரத்துல தூக்கிப் போட்டு இராமேஷ்வரம் வற்ராங்க, வரும் போது மீண்டும் கடற்படை கண்ணுல உப்புத் தண்ணியைத் தூவி தப்பிக்கிறாங்க, அவங்களுக்கு ராமேஷ்வரம் கோவிலில் கல்யாணம் நடக்குது, அங்க ஒரு பாட்டு, பின்னர் அவங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்குது, ஒரு குழந்தைக்கு தமிழ்பேரும், இன்னொரு குழந்தைக்கு சிங்களப் பேரும் வைக்கிறாங்க

ஜெமோ : இண்டர்வலுக்கு பிறகு முக்கால் மணி நேரம் ஓடும் திரைக்கதை ஆச்சு, பின்னர் ?

மணி : திடிரென்று ஒருநாள் ஹிரோயினுக்கு தன்னோட அம்மா அப்பாவைப் பார்க்கத் தோணுது, யாருக்கும் தெரியாமல் அதிகாலை 4 மணிக்கு படகுல போறாங்க, அதிர்ச்சியடைந்த ஹீரோ தன்னோட குழந்தைகளை கூட்டிட்டு இன்னொரு படகுல இருட்டுல தொடருகிறார், மறுபடியும் கடற்படை எல்லோரையும் சுற்றி வளைக்குது, ரிடையர் ஆகும் வயதில் இருக்கும் மேஜர் சுட்டுறான். சிங்களப் பேரு வச்சிருக்க குழந்தை காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மயங்கி கடலுக்குள் விழுந்துடுது. எல்லோரையும் சுத்தி வளைக்கிறாங்க.

ஜெமோ : சுத்தி வளைக்காமல் க்ளைமாக்ஸ் சொல்லுங்க.

மணி : இதோ....இப்ப தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடக்குது, இலங்கை கடற்படை மேஜரை நோக்கி, அந்த ஹிரோயின்.......'அப்பா நீங்களே உங்க பேரனை சுட்டுட்டிங்களே' ன்னு சிங்களத்தில் கதறி கதறி சொல்றார். அப்போ நல்லா பொழுது விடிஞ்சிருக்கு, மகள் உருவம் மாறி இருந்ததால் அடையாளம் தெரிந்து கொள்ளாத அப்பா அதிர்ச்சி அடைந்து தன்னோட தவறுகளை உணர்கிறார், கடற்படை ஆட்களுக்கு ஆணையிட்டு குழந்தையை கடலுக்குள் தேடுறாங்க, மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிக் கிடக்கும் குழந்தை, ஒரு சோகப் பாடல் முடியும் போது உதடு அசைய எல்லோர் முகத்திலும் சிரிப்பு, சிங்களத் மேஜர் தாத்தா குழந்தையை அணைத்துக் கொள்கிறார். தன்னோட வேலையை அன்றே ராஜினாமா செய்துவிட்டு, மருமகனையும் பேரனையும் ராமேஷ்வரம் நோக்கி அனுப்பிவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கடலில் வீழ்கிறார்.

ஜெமோ : க்ளாஸ். ஆனால் இது எப்படி மீனவ பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்னு நாம சொல்லவே இல்லையே....

மணி : இதெல்லாம் யாரு கேட்டார்கள் ? கடற்கரை, மீன் பிடிக்கிறது, சிங்கள ராணுவம், சித்திரவதை, செண்டிமெண்ட்ஸ் இதெல்லாம் இருக்கே.....தீர்வு கிடைச்சுடாதா ? ம் சொல்ல மறந்துட்டேன் படத்தோட பேர் இராமேஸ்வரம் இல்லை, அது ஏற்கனவே வேறொரு படப்பெயராக வந்துள்ளது, படத்தோட பெயர் 'கோடியக்கரை' இல்லை என்றால் 'கச்சத்தீவு' சீட்டுக் குழுக்கிப் போட்டு ஒண்ணு எடுக்கனும்







********

ரோஜா, மும்பை மூலம் தேசிய பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு கிடைச்சுதோ, அதில் குறையாமல் இந்தப்படத்திலும் எதாவது சொல்லி இருப்பார் மணி, நாம் தேடித் தேடி விவாதிப்போம்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மீனவ பிரச்சனைகள் படமாகிறதாம், மணிரத்னம் இயக்குகிறாராம்,//
செம காமெடி..மணிரத்னம் எப்பவும் இண்டர்நேஷனல் வியாபாரம் யோசிச்சு செய்வாரே...மகாபாரதம்,ராமயணம் கதையை உருவியவர் இப்போ எம்.ஜி.ஆரின் மீனவ நண்பன் படத்தை உட்டாலக்கடி செய்வார்னு நினைக்கிறேன்

Anand சொன்னது…

நிச்சயமாக பொய்களை திணிப்பார்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

தமிழகத்துக்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கும் பிரச்சினையை பரவலாக இந்தியா முழுதும் கொண்டு செல்ல மணிரத்னம் படம் உதவக்கூடுமென்ற நேர் பார்வையை முன்வைக்கிறேன்.

கானா பிரபா சொன்னது…

;) good one

Anand சொன்னது…

// ராஜ நடராஜன் said...

தமிழகத்துக்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கும் பிரச்சினையை பரவலாக இந்தியா முழுதும் கொண்டு செல்ல மணிரத்னம் படம் உதவக்கூடுமென்ற நேர் பார்வையை முன்வைக்கிறேன்.


மணிரத்னம் உண்மை நிலையை திசை திருப்பும் வேலையைத்தான் செய்வார்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்