பின்பற்றுபவர்கள்

26 ஆகஸ்ட், 2011

கலவை 26/ஆகஸ்ட்/2011 !

புதிய(பழைய) தலைமைச் செயலகம் பற்றி என்னன்னெவோ பரிந்துரைகளெல்லாம் செய்கிறார்கள். பு.த (புரட்சி தலைவி) அம்மா, மருத்துவ மனையாக மாற்றப் போகிறேன் என்று சொல்கிறார், வீம்பு எண்ணத்தை மாற்றிக் கொள்ள இவ்வளவு சிரமப்படனுமா ? கருணாநிதிக்கும், ஜெ தாவுக்கும் வருங்கால வரலாறு முறையெஎ தன்னிச்சையாளர், பிடிவாதக்காரர் என்ற பட்டங்களைத்தான் கொடுக்கும். தமிழனுக்கு நல்ல தலைமை கிடைக்கமால் போனதற்கு ஒற்றுமைகள் இல்லாததும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லாததும் ஆகும். நல்லதொரு தலைவர்கள் உருவாக நாட்டில் பொது மக்கள் வாழ்வு உரிமையே கேள்விக்கு உட்படுத்தப்பட்டதாக இருந்தால் தான் உருவாகுவார்களோ என்னவோ. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தலைமைகள் தேவைப்படாததால் பொம்மைகளும், அறிவித்துக் கொள்ளாத சர்வாதிகாரிகளும் ஆளுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது, நாட்டுமக்கள் ஒற்றுமையாகவும் போராட்ட குணத்துடன் இருக்க அந்நிய படையெடுப்புகள் தேவை தான் என்றே நினைக்கிறேன், சரியா ?

1000 கோடிகளை விழுங்கிவிட்டு மாநகராட்சி குப்பைத் தொட்டி போன்று கவனிப்பாரின்றி கிடக்கிறது, கருணாநிதி புலம்புகிறார். தொட்டுத் தொட்டு பார்த்து கட்டியதாம், இராணி மேரிக் கல்லூரியில் கட்ட முயற்சித்த போது திமுக அதனை தடுத்ததால் தான் திமுக கட்டிய தலைமைச் செயலகத்தை ஜெ புறக்கணிக்கிறாராம், இவர்களுக்கு பொது மக்களின் வரிப்பணம் எவ்வளவு தன்மான விளையாட்டுகளாகப் போய்விட்டது பாருங்கள், 1000 கோடிக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெ ஆணை இடாதவரை உபிகள் பெருமூச்சு விடலாம். அந்தக் கட்டிடத்தை எது எதற்கோ பயன்படுத்துவதைவிட மாவட்டந்தோறும் இருக்கும் கலைப் பொக்கிசங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து கண்காட்சியாகவும், கலைக் கூடமாக, ஓவியக் கூடமாகவும், தொல்பொருள் காட்சிக் கூடமாகவும் ஆக்கி, 200 ரூபாய் நுழைவுக்கட்டணம் வைத்தால், சுற்றுலா வருமானமாவது கிடைக்கும்.

***

எங்கள் ஊரில் அதிபர் தேர்தல் நடக்கிறது, இந்தியாவில் ஜனாதிபதி என்று இந்தியில் சொல்லப்படும் பதவி தான் சிங்கையில் அதிபர் பதவி, போட்டிக்கு நான்கு சீனத் தலைகள் போட்டி இடுகிறார்கள், ஒருவர் துணைப்பிரதமராக இருந்து பின்னர் 2006ல் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தவர், மற்றவர்கள் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், நான்கு பேர்களின் இல்லப் பெயர்களும் 'டான்' தான். சிங்கையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடக்கிறது, தற்போதைய அதிபர் மேதகு எஸ் ஆர் நாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளாகத் தொடர்கிறார், பதவிக்காலம் அடுத்த திங்கள் நிறைவுறுகிறது. புதிய அதிபராகப் போட்டி இடுபவர்கள் அனைவருமே அதிபர் பதவியை அதிகாரப் பதவியாக மாற்ற முயற்சிப்பதாக சொல்லிவருகின்றனர். சிங்கப்பூர் பல இன சமூகம், அனைத்துக் குடிமக்களின் அடிப்படை உரிமையில் மாற்றம் இல்லை, என்பதால் இந்திய சமூக முன்மொழிவுக்கு அரசியல் ரீதியில் தனியாகத் தலைவர்கள் தேவைப்படுவதில்லை, இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்களில் கனிசமான அளவுக்கு இந்தியர்கள் உள்ளனர். பார்க்க எளியவராகவும், பொலிவான தோற்றம் கொண்டவராகவும் இருக்கும் எஸ் ஆர் நாதன் இந்தியர்கள் பெருமைப்படும்படியும் சிங்கப்பூர் முன்னேற்றங்களில் முனைந்து செயல்படுவராகவும் இருந்துவருகிறார் என்பது பெருமைக்குரிய, பாராட்டத்தக்க ஒன்று. அடுத்து இந்தியர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட ஆண்டுகள் பல ஆகலாம்.
இப்போதைக்கு வருங்கால அதிபர் பெயர் மிஸ்டர் டான், ஆனால் அது எந்த டான் என்பது இந்த சனிக்கிழமைக்குப் பிறகு தெரியும்.

***

அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு நான் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை, இந்தியாவிற்கு தேவைப்படும் புனிதச் சின்னத்திற்கான அத்தனை தகுதிகளையும் பெற்று இருக்கிறார் ஹசாரே, காந்தியை விட கூடுதல் நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு அவருக்கு கடவுளின் ஆசி இருக்கிறது, காந்தி பெயரைக் கேட்டாலே வாந்தி எடுக்கும் இந்துத்துவா கும்பல்கள் அன்னா ஹசாரேவை ஆதரிப்பது காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றவைக்க முடியும் என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம். இன்னொரு தேசத் தந்தையாக புனிதப்படுத்தி உட்கார வைக்க ஆள் கிடைத்துவிட்டார். எவ்வளவு நாளைக்குத்தான் காந்தியையே அகிம்சையும் உதாரணாமக் கூறிக் கொண்டிருக்க முடியும், வரலாற்றுக்குத் தேவை புதிய தேசத் தந்தைகள், அன்னா ஹசாரே சரியான பாதையில் அவ்விலக்கு நோக்கி ஊடகங்களால் தள்ளப்பட்டு இருக்கிறார். காந்திப் பேரைச் சொல்லி ஆட்சி நடத்தும் காங்கிரசை விமர்சனம் செய்து போராடும் காந்தியவாதி அன்னா ஹசாரே...உம் போராட்டம் வெற்றி பெருக, ஆனால் அதே சமயத்தில் இராஜிவ் கொலை வழக்குத் தொடர்பில் தூக்கு தண்டனையை எதிர்நோக்குபவர்களுக்கான ஆதரவுக் குரல்கள் இவ் அவசர வேளைகளில் அன்னா ஹசரேவின் ஆதரவாளர்களின் ஆதரவுக் கூச்சல்களால் அமிழ்த்தப்படுகிறது என்பது வருத்தம் தான். அன்னாஹசாரேவுக்கு ஆதரவு என்று வெளியே சொல்லாதவர்கள் தேசத் துரோகிகளாகவும் தூற்றப்படுகிறார்கள். உங்களில் யார் யார் தேசத் துரோகி ?

***

காஞ்சி மட சாமியார் ஜெயந்திரர் (எ) சுப்ரமணியன் நீதிபதியிடம் பேரம் பேசிய ஆடியோ சர்சைக் குறித்து செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று எல்லோரையும் விட ஜெயந்திரர் தான் ரொம்பவும் பயந்தார் என்றது நக்கீரன் உள்ளிட்ட செய்தி இதழ்கள். ஜெவிடம் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்படாத உடன்பாடு இப்போது ஏற்படுமா ? சங்கரராமன் படுகொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா ? இது சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவே தீர்புகள் வழங்கப்பட்டாலும் அதன் பிறகு உச்ச நீதிமன்ற மேல்முறையீடு என பெரியவா ஆயுசுக்கும் வழக்கு நடக்கும் என்றே நினைக்கிறேன். தெய்வம் உட்கார்ந்தும் கொல்லாது நின்றும் கொல்லாது.....தண்டனைகள் அதிகாரமட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டவை அல்ல.

***

"ஆட்சி மாறினாலும் அண்ணன் செல்வாக்கு அசைச்சிக்க முடியாது........"

"எதை வச்சுச் சொல்றே....."

"அங்கப் பாரு, 'தமிழ் நாட்டின் அன்னா ஹசாரேவேன் போட்டு அண்ணன் படத்தை அன்னா ஹசாரேவாக மார்பிங்க் செய்து ஒட்டி இருக்காங்க...."

"தலை நகரில் இளையத் தளபதிக்கும், கேப்டனுக்கும் கூட ஒட்டி இருக்காங்களாமே"

****
அடுத்தவன் புகழ் நிழலில் புகழ் தேடும் அசிங்கம்........அடங்கவே மாட்டா(னு)ங்களோ...........!

****

சிங்கைப்பதிவர்கள் நடத்தும் மணற்கேணி 2010 ன் நிறைவாக வெற்றியாளர்கள் சிங்கப்பூர் அழைப்பட்டுள்ளார்கள், அவர்களுடன் ஆன நிகழ்ச்சிகள் குறித்த விவரம் இங்கே.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பதிவுகளின் கலவை நன்றாக இருந்தது நண்பரே!

Andersson Jesica சொன்னது…

சக்தி வாய்ந்த முஸ்லீம் பாரம்பரிய ஹீலேர் / இஸ்லாம் மருந்தல் துபாய் மற்றும் ஜின்கள் / திரும்ப பெற LOVE / திரும்ப ஏ.வி. LOVE / பணம் SPELL DUA / FERTILITY MAGIC RING WHATSAPP +79268011965
(dr.oduduwaspellcaster@gmail.com) சக்தி வாய்ந்த முஸ்லீம் பாரம்பரிய ஹீல் / இஸ்லாம் மருந்தை டுஏ மற்றும் ஜின்கள் / திரும்ப பெற LOVE / பி.இ. இ EX LO / பணம் SPELL DUA / FERTILITY MAGIC RING +79268011965 இழந்த காதல் மயக்கங்கள் நனவு தட்டுவதன் மூலம் வேலை வேலை & உங்கள் முன்னாள் காதலனின் ஆன்மாவின் மனோபாவத்தை அவர்களை ஆராய்ந்து, அவர்களது ஆத்ம துணையை காதலிக்கவும். சில நேரங்களில் ஒளி, காதல் ஆற்றல், ஒரு மனிதனின் மனநிலை மற்றும் ஆன்மா ஆகியவை நித்திய தாக்கங்களால் சிதைந்து போகும். இந்த அவர்களின் ஆன்மா துணையை காதலன் ஒரு உறவு அல்லது திருமணம் உடைக்க வழிவகுக்கும்.என் திரும்ப இழந்த காதல் மயக்கங்கள் நபர் உங்கள் முன்னாள் காதலனை மீண்டும் இணைக்க குறிப்பாக நீங்கள் இலக்காக இல்லை, அவர்கள் உங்கள் முன்னாள் காதலன் ஆன்மா துணையை காதலனை இலக்கு. நீங்கள் உங்கள் முன்னாள் காதலனின் ஆத்ம துணையை காதலிக்கிறீர்கள், என் சிறப்பு மனநல சக்திகள் உன்னை கண்டுபிடித்து உன்னை மீண்டும் இணைக்கின்றன.உணவு உறவுகளின் அண்ட ஒழுங்குமுறை நீ என்னுடைய இழப்புக்கு என் முன்னாள் காதலனின் ஆத்ம துணையை காதலிக்க வேண்டும் காதலிக்கிறேன் உன்னை காதலிக்கிறேன். இழந்த காதல் மயக்கங்கள் நேரடியாக மனித ஆற்றல் அமைப்பில் நேரடியாக வேலை செய்கின்றன. சில நேரங்களில் வாழ்க்கையின் தொந்தரவுகள் மற்றும் சுவாரசியங்கள் ஆன்மாவை சேர்ந்த காதலர்களுக்கு இடையேயான ஆன்மீக தரத்தை disorientates. ஆரிய குணப்படுத்துதல் மற்றும் நேர்மறையான ஆற்றலின் மனநல சேனல்கள் & அனைத்து எதிர்மறையான சக்திகளையும் சிதைப்பதன் மூலம் உங்கள் பிரியமான ஆற்றலில் உள்ள அன்பின் பிரபஞ்சத்தை அன்பைக் கொண்டுவரும், நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் முன்னாள் காதலருடன் மீண்டும் இணைக்கப்படுவீர்கள். PROF YUSUFU இன் குணப்படுத்துதலும், உங்கள் ஆற்றலுக்கும் ஆத்ம துணையை நேசிக்கும் மனித ஆற்றல் நனவை முறையை சரிசெய்யட்டும். காதல் போட்டியாளர்களுடன் நட்புறவுள்ள அனைத்து நட்பு உறவுகளும் விலக்கப்படும், மற்றும் நீங்கள் பிரிக்க முடியாத அன்பின் பிணைப்பு இருக்கும். பிரச்சினைகளைத் தெரிந்துகொள்வதற்கும் ஆன்மா துணையை நேசிப்பவர்களுடன் இணைக்கும் அன்பின் ஆற்றல் வயலில் அவர்களைத் தீர்ப்பதற்கும் ஒத்துழைக்க உதவுகின்ற பல்வேறு தொலைதூர கருவி கருவிகள் உள்ளன. NB: WhatsApp மேலும் தொடர்புக்கு மற்ற டாக்டர்களிடமிருந்து அனைத்து UNFINISHED வேலைகள் தேதியை டெல்: +79268011965

என் மனைவி வீட்டுக்கு என்ன வேண்டும்

உங்கள் மனைவியை வீட்டிற்கு திரும்பி வர தயாராக இருக்கிறீர்களா?

உங்கள் மனைவியை வீட்டிற்கு கொண்டு செல்ல நீங்கள் மிகவும் ஆசைப்படுகிறீர்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்