பின்பற்றுபவர்கள்

23 ஜூன், 2008

அப்பா அம்மா சம்மதிக்கனும்... (சிறுகதை) !

"வர்ற முகூர்தத்தில் கல்யாணத்தை வச்சிக்குவோம்...ஆனால் எப்படி அப்பாவிடம் விசயத்தைச் சொல்வது என்று தெரியவில்லை"

"சுரேஷ்...அவங்க சம்மதிக்கனுமே"

"இல்லே காஞ்சனா...இந்த வருசம் செஞ்சே ஆகனும்....இரண்டாவது இதை தள்ளிப் போடவும் முடியாது..."

"நாம மூன்று வருடமாக ப்ளான் பண்ணி வச்சிருக்கோம்...பணம் எல்லாம் போதிய அளவு சேமிச்சாச்சு..."

"பிறகு என்ன ? நீயே சாயங்காலம் மொதுவாகப் பேசிப்பாரு..."

"சரி...பேசுவோம்...கல்யாண மண்டபம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்தாச்சு...பத்திரிக்கைக் கூட கொடுத்தாச்சு..."

"ஆமாம்...எல்லோருக்கும் பத்திரிக்கைக் கொடுக்கும் முன்பாவது அவர்களிடம் விசயத்தை சொல்வது சரி"

"அம்மா இருக்காங்களே சரியான வீம்பு புடுச்சவங்க...கடைசி நேரத்தில் எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிடுவாங்க..."

"அப்படிங்கிறியா ?"

"ஆமாம் அப்பாவும் அம்மா சொல்வதைத்தான் கேட்பாரு...எதுக்கும் மற்ற ஏற்பாடுகள் செய்வதற்கு முன்பு அவர்கள் காதில் போட்டு வைப்பது நல்லது...அவங்க ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கனும் அதுதான் முக்கியம்"

"சரிடி...நான் அமெரிக்காப் போகிறேன்...அதுக்குள்ளே எல்லாம் சுபமாக முடியனும்... நீயே பேசிப்பாறேன்"

"அப்பாவிடம் பேச எனக்கு இன்னும் பயம் தான்...இருந்தாலும் இந்த விசயத்தில் அஞ்சுவது நமக்கு நஷ்டம் தான்"

"அப்பாடி ஒருவழியாக ஒத்துக் கொண்டியே...அப்படியே சாயங்காலம் பேசி நேராக ஹோட்டலுக்கு வரச்சொல்லு...அங்கே வச்சு மற்ற விபரங்களையெல்லாம் சொல்லலாம்"

*****

அப்பா...உங்களுக்கு அறுபது வயச்சாச்சு....உங்களுக்கும் அம்மாவுக்கும் உங்க பிறந்த நட்சத்திரத்திலேயே மூகூர்த்த நாள் வர்றதால...அன்னிக்கே அறுபதாம் கல்யாணம் பண்ணிப் பார்க்க நானும் அண்ணனும் தீர்மாணிச்சிருக்கோம்...க்யூக் க்யூக் கிளம்புங்க ... ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுக் கொண்டே மற்றதைப் பேசுவோம்"

பெருமகிழ்ச்சியில் அப்பா என்னை பார்க்க....அவருக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்த அதே வினாடியில்

இதை அருகில் இருந்து கேட்ட அம்மாவிற்கு வெட்கத்தைப் பார்க்கனுமே.....

ஆக அப்பா சம்பதிச்சுட்டார். இதைவிட அண்ணனுக்கு எனக்கு மகிழ்ச்சி என்னவாக இருக்கும் ?

1 கருத்து:

பரிசல்காரன் சொன்னது…

அட! இப்படியொரு நல்ல கதைக்கு நாந்தான் மொத கமெண்ட் போடணும்னு இருக்கு!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்