பின்பற்றுபவர்கள்

11 ஜூன், 2006

பெரிய இடத்து வெவகாரம்...

அப்பன் செத்த முப்பதாவது நாள் நம்ப மாதிரி பொது செனம் யாராவது பார்டி கொடுத்து கூத்தடிப்போமா ?

பாஜாகவை கீழறுக்க காங்கிரஸ் ராகுல் மகாஜனை கிளறுவது அரசியல் அடிப்படையில் என்றாலும், முன்பு மத்திய அமைச்சரைவியில் ஆதிக்கம் பெற்றவரின் மகன் என்ற முறையில் நம்மை போன்ற படிப்பறிவு அற்றோருக்கு புலிக்கு பிறந்தது ஏன் புல்லை உண்டது என்ற கேள்வி எழமல் இல்லை.

இந்த லட்சனத்தில் தந்தையின் இடத்திற்கு தனயனை கொண்டுவருவதாக பாஜகவிடம் திட்டம் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. பிரமோத் மகாஜனுக்கு மகனைப்பற்றி நன்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் மகனை அரசியலில் ஈடுபடுத்தாமல் இருந்திருக்கிறார்.

ஒழுங்கீன வாதிகள் அரசியல் வாதிகளாக இருந்தால் அவர்கள் பற்றிய குற்றச் சாட்டு எவ்வாறெல்லாம் பூசி மொழுகப்படும் என்பதற்கு பாஜக நிலைப்பாடுகளே சாட்சி.

பிரமோத் மகாஜன் 50 ஆண்டுகளாக சேர்த்துவைத்த புகழை அவர் இறந்த ஒரே மாதத்தில் கெடுத்துவிட்டார்.

ராகுல் மகாஜன் தான் குற்றவாளியல்ல என்பதை எவ்வாறு நிறுபித்து அதிலிருந்து தப்பிக்கிறா ? என்று பார்ப்போம்.

எதற்கும் இருக்கட்டுமே என்று தற்காலிகமாக பாஜக, ராகுல் மகாஜன் விவகாரத்தால் பாஜகவின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்று சொல்லி வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்