பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2007

ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா (2) ?

எனது முந்தைய இடுகைக்கான பின்னூட்டமாக அனானி ஒருவர் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு

//பல நல்லுரைகளும், நல்லெண்ணங்களுமே ஒருவனை பக்திமான் ஆக்குகிறது. அப்படிபட்டவன் எதற்காக தவறுகள் செய்வான். அப்படியே அவன் தவறான பாதையை பார்க்கும் போதே, அவன் நம்பும் சக்தியே அவனை தடுத்தாட்கொண்டுவிடும். உண்மையான பக்திமான் மனமறிந்து ஒருபோதும் தவறு செய்ய மாட்டான். //

நல்லது. நாத்திகன் என்பவன் யார் ? சமூக விரோதியா ? அறை'குறை'களாக சொல்லும் அறை'குறை' பக்திமான்கள் கூட எதையும் ஆராயாமல் நாத்திகம் என்பது ஒரு ஒழுங்கீனமான குறியீட்டுச் சொல் என்பது போலவே 'இறை நம்பிக்கை' அற்றவர்களைப் பார்த்து செய்யும் அவதூறே பாவ-புண்ணியத்துக்கு பயந்தவர்கள் பக்தியாளர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம். நம்பிக்கையாளர்களே பாவ-புண்ணியத்திற்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வது தான் சரி. அதை விடுத்து நம்பிக்கையாளர்கள் பாவ-புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள் என்பது எவ்விதத்தில் ஏற்புடையது. கேடுகளான பல நிகழ்வுகள் அதை உறுதிப்ப்டுத்திக் கொண்டிருக்கிறது. எவன் நாத்திகன் என்று முன்பு ஆத்திகர்களால் பழிக்கப்பட்டானோ அவனையே வணங்கும் நிலைக்குத் தான் ஆத்திகர்கள் ஆனார்கள் என்ற பேருண்மை புத்தர் மற்றும் சமணர் வாழ்க்கை வரலாறுகள் மூலம் தெரிவது கண்கூடு. நாளைக்கு பெரியார் ஈ.வெ.ரா க்கும் அதே போல் மரியாதை அவரே விரும்பாவிட்டாலும் அவருக்கு கிடைகலாம். :) அவர் வாழ்த்த காலங்களிலேயே ராஜாஜி அவர்களால் 'பெரியாழ்வார்' என்று அழைக்கமுற்பட்டார் என்பது இங்கே நினைவு கொள்ளத் தக்கது.

குரு என்று சொல்லிக் கொள்பவர்களே கூலிப்படையை நாடும் போது. -என்று சொல்லி இருந்தேன்//
அதற்கு திருவாளர் அனானி இட்ட மறுமொழி...

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்று நம்புகிறேம். ஆசான் சொல்வதை அப்பால் தள்ளுகிறேம்.நல்லார் ஒருவருக்காக பெய்யும் மழையில் தானே நாமும் நர்த்தனமாடுகிறேம்.

இதுவும் நல்ல கருத்தே.... ஆனால் தீரவிசாரித்து குற்றவாளிகள் என்று நிருபித்துவிட்டால் மட்டும் போதுமா ? உடனே சொல்லிவிடுவார்கள் 'தவறு செய்வது மனித இயல்பு' என்ற ஒற்றை வரியை பதிலாக. இங்கு கண்ணால் கண்டது காதால் கேட்டது எல்லாவற்றையும் தாண்டி மெய்பொருளால் கண்ட அறிவையும் கூட அந்த ஒற்றை வரி பதிலால் முடக்கிவிடமுடியுமா ? அதாவது மனிதன் தவறு செய்வது என்பது இயல்பு என்றால் நல்லது செய்வது மட்டும் இறைநம்பிக்கை என்ற ஒன்றால் கிடைப்பது என்றாகிவிடுமா ?

பழிபாவாத்துக்கு அஞ்சவேண்டும் என்ற அறிவுரைகள் அரைகுறை பக்தியாளர்களுக்குத் தான் சொல்லப்பட வேண்டுமேயன்றி எல்லோருக்கும் அல்ல. சமூக அக்கரை ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன ? அனைவருக்குமே இருக்கிறது. மேலும் சொல்ல விரும்பியது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்துக்கு அஞ்சுபவர்களாம் ? என்ன ஒரு அபத்தமான செய்தி !!! நாம் அனைவரும் தகவல் தொடர்பு சாதனங்களைப் அறியாதவர்களா ? பி.சி சோர்கார் ஒரு ரயிலையே மேஜிக் வித்தையினால் மறைத்தாராம்...இங்கு சாவர்காரின் பக்தர்கள் கோத்ரா ரயிலையே மறைக்கிறார்கள். அந்த திட்டமிட்ட சதியும் அதன் பின்னால் பல இஸ்லாமிய குடும்பங்கள் சிதைந்ததையும், ஒரிசாவில் பாதிரியார் அன்பு மகன்களுடன் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களையெல்லாம் சாவர்கார் வித்தையால் மறைந்துவிட்டது என நினைக்கிறார் போலும். இந்த சம்பவத்தில் கோர தாண்டவமாடியவர்கள் எல்லோரும் நாத்திகர்களா ? அல்லது அந்த சம்பவம் வரலாற்று சிறப்புமிக்க இன்பமான ஒரு நிகழ்வு எனவே அதை பாவ-புண்ணியம் என்ற வகைப்படுத்தலுக்கே இட்டுச் செல்லக் கூடாதா ?

அந்த ஆர்.எஸ்.எஸ் அனானி மேலும் பின்னூட்டத்தில் சொல்கிறார்,

//நீங்க ஒரு நாத்திகராக இருப்பதால் இதுபற்றி உங்களுக்கு பேச அருகதையும் இல்லை. இனி பதில் தரும் எண்ணமும் எனக்கில்லை. //

அதாவது இவர்களைப் பொறுத்தவரையில் தொடர்பு உடையவர்கள் மட்டுமே ஒரு செய்தியைப் பற்றி பேசவேண்டுமாம். ஆத்திகவாதிகள் சாதிகளைப் பிரித்து ஒருபிரிவினர் அள்ளுவதே சரி என்பார்களாம் அதை நாத்திகன் ஏன் என்று கேட்கக்கூடாதாம். நண்பரே பெரியார் என்ற நாத்திகன் கேள்வி கேட்டதால் தான் கோட்டை கதவுகள் போல் பலமாக திறக்காத கோவில் கதவுகள் இன்று அனைவருக்காகவும் திறக்கிறது. முதலில் நீங்கள் ஆத்திகனாக இருந்தாலும் அதற்கு உள்ள உரிமையைப் பெற்று தந்தவன் ஒரு நாத்திகனே என்று நினைவு கொள்க. அநியாயம், அக்கிரமம் நடக்காவிட்டால் தொடர்பு இல்லாதவர்கள் மட்டுமல்ல தொடர்பு உள்ளவர்கள் கூட அது பற்றிப்பேசப்போவதில்லை. சாலையில் ஒருவன் உயிருக்குப் போராடினால் உனக்கு தொடர்பு இல்லையென்றால் கண்டும் காணாதது போல் ஓடிவிடு என்பது போன்ற பொறுப்பற்ற பேச்சு எனவே அதை தள்ளுகிறேன்.

27 ஏப்ரல், 2007

ஆப்புக்கு வவாச... சிறப்பு பதிவு

ஆப்பத்துக்கு பாயா என்பது போல் ஆப்புக்கு வவாசங்கிற புதுமொழியோட ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிக்கப் போகிறேன்.

வறுத்து எடுக்கும் பதிவர்களும் பதிவுகளும் ஆரம்பத்தில் படிக்க சுவையார்வமாக இருக்கும்... நாளைடைவில் அதே போன்று பதிவுகளைப் படித்து படித்து விவாதங்கள் என்ற பெயரில் இனிமா குடித்த ஆயாசத்தில் இருக்கும் பதிவர்களை... பாயசம் குடிக்க வைத்து கலகலப்பாக்கும் ஒரு குழுவாக ... வம்பு வாதம் சற்றுமில்லாத (வவாச) பதிவுகளைப் அளிக்கும் பதிவுக் குழுக்களில் நம் வருத்தப்படாத வாலிபர்களின் பதிவுகள் முதன்மையானவை.

கு'பீர்' கு'பீர்' னு வயிறு கலங்க சிரிக்க வைக்கும் சிபி, ஸ்டெடியாக பின்னூட்ட கட்டிடத்தை வேகமாக எழுப்பும் கொத்தனார், ஊறுகாய்க்குக்கூட நக்கலில் சிக்கல் வைக்காத நாகை சிவா, எவ்வளவு 'அடித்தாலும்' நின்னு சமாளிக்கும் கைப்பு, பேதையில் மயங்காத ஜொள்ளுபாண்டி, 'காய்த்து' எடுக்கும் விவசாயி, 'தண்ணி' இல்லாக்காட்டில் தாக சாந்திக்கு வேண்டும் தேவ் என தள்ளாடமல் லொள்ளித் திரிபவர்களின் எகத்தாளமில்லாத நக்கல்கள், நையாண்டிகள்.. ஆப்புரேசன் (அளவோடு ஆப்பு வைப்பது) ... மட்டின்றி அவ்வபோது வந்து இளமையை புதுப்பித்து செல்லும் பதிவர்களின் பதிவுகளும் குறிப்பாக திரும்பிப் பார்க்கும் ஜோசப் ஐயா என நகைச்சுவையில் வகைகளை பரிமாறும் பதிவுகளை வவாசவில் படித்து வயிற்றுவலியயல் துடித்து இருக்கிறேன்.

இவிங்கெல்லாம் யாருன்னு கூகுளாண்டவரை வேண்டிக் கேட்டுக் கிட்டதில்... எனக்கு மட்டும் அந்த வரலாற்று ரகசியத்தைச் சொல்லி மறைந்தார்.
*********

ஒரு முறை 100 கைகளுடன் ஒரு கடவுள் ஒரு பெண்மணியின் கனவில் தோன்றினார்.

'பொன்மணி இந்த பதிவுலகில் சதாகாலமும் சாதிச் சண்டைகளும், மதச்சண்டையும் நடந்து வருகிறது இவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி எனக்கில்லை ... எனவே நீ பதிவுலகில் அவதரித்து ... யானை மீது அமர்ந்து சண்டைகளிலிருந்து பதிவர்களை மீட்டு எடுக்கும் பொறுப்பை உனக்கு கொடுக்கிறேன்' என்று கூறி மறைந்துவிட்டார்...'

அதன்படி வ.வா.சங்கம் தோன்றியதாக வரலாற்று குறிப்புகளை வைத்து ஆய்வாளர்கள் குறி சொல்லி இருக்கின்றனர். அகழ்வாராய்ச்சி மேலும் செய்து பார்க்கையில் இரும்பினால் ஆன ஆயுதம் கைப்பற்ற பெற்றதாகவும் அந்த ஆயுதமே உலகில் தோன்றிய முதல் இரும்பு ஆயுதமாக இருக்க முடியும் என்று தெரிகிறது. ஆம் நண்பர்களே 'ஆப்பு' ஆயுதம் ஹராப்பா காலத்திற்கு பிறகு தோன்றியதாக அறியப்படுகிறது. ஆப்பு என்ற சொல் இருந்தே தகப்பன்மார்கள் அடிக்கடி தாய்மார்களிடம் ஆப்பு வாங்குவதாலேயே ஆப்பா என்று அழைக்கப்பட்டதாகவும் அந்த ஆப்பா மறுவி தற்பொழுது அப்பா, அப்பு என்று அழைக்கப் படுகின்றதாம். இங்கு அபிஅப்பாவை நினைத்தால் நான் பொறுப்பல்ல :) அப்படிபட்ட பெருமைக் குறிய ஆப்புக்கு மேலும் பெருமை சேர்த்த வவாசவின் செயல்பாடுகள் மாபெரும் ஆப்பார்வமாக நினைக்க முடிகிறது.

********

நானும் தேடி தேடிப் பார்த்ததில் பெரும் குழப்பமே மிஞ்சுகிறது. பதிவுகளில் இருக்கிற ஆப்புகள் அதிகமா ? பின்னூட்ட ஆப்புகள் அதிகமாக என்று எண்ணி எண்ணிப் பார்த்து பெரும் குழப்பமே அடைந்திருக்கிறேன். பற்றாக்குறைக்கு அங்காங்கே காலில் இரத்தம் வழியும் அளவுக்கு வெட்டிப்பயல், சிவா, இராம் போன்றவர்களால் பிடுங்கப்பட்ட ஆனிகளும் பெரும் அளவுக்கு பதிவும், பின்னூட்டமாக இரைந்து கிடக்கிறது.

எல்லா ஆப்பும் ஆப்பல்ல; சொல்லாமல்
கொல்லாமல் வைப்பதே ஆப்பு !

அதாகப்பட்டது சொல்லி வைக்காமல் ஆப்பு வைக்க வேண்டும் எவர் மனதையும் கொல்லாமல் வைக்க வேண்டும் என்ற ஆப்பு அதிகாரம் 7 ஆவது குறளில் திருவாப்பார் எழுதியுள்ள நல்லொழுக்க நெறிபடி சங்கத்தை நடத்தி செல்கிறார்கள் இளம் சிங்கங்கங்கள்

நீங்களும் கொடுங்க, வாங்குங்க ஆப்புகள் இலவசம். ஓராண்டு நிறைவை ஒட்டி வாவச வில் மேடையேறி வெற்றிகரமாக ஆப்புவாங்கிக் கொண்ட
சங்கத்தின் சிங்கங்களும்,
போட்டு வாங்கிய சிறப்பு எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இரண்டு பதிவுகளான கோவியாரின் நாடக சபா 1, மற்றும் 2 ஐ ஏற்றுக் கொண்டு என்னை பாராட்டி மகிழ்வித்தற்கு வவாச க்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேடை ஏறி வாலிபர்களாக மாறிய பெரிய சிங்கள், தல கைப்புள்ளை மற்றும் இளம் சிங்கக்குட்டிகளான இளா, இராம், வெட்டிப்பயல், மற்றும் அனைத்து சிங்கங்களுக்கும் பாராட்டுக்கள்.

பின்குறிப்பு : பதிவே எழுத தெரியாவதர்களுக்கு முப்பது நாட்களில் 300 மொக்கை பதிவுகள் போடுவது எப்படி ? 40 வது பதிப்பு - என்ற நாமக்கல்லாரின் எழுதி வடித்த இலவச கையேடுகளை (ஈபுக் வடிவத்தில்) பின்னூட்டம் போடுபவர்களுக்கு இலவசக் கொத்தனார் உபயத்தில் .... வழங்கப் போவதாக இளா என்னிடம் தெரிவித்தார்.
:)))))))

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

26 ஏப்ரல், 2007

ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா ?

கடவுள் நம்பிக்கை இருப்பதால் மனிதர்கள் தப்பு செய்வது குறையும் என்று பொதுவாக சொல்லி வைக்கிறார்கள். மாசி பதிவில் ஒரு அனானி குறிப்பிட்டு இருந்தார். அதாவது //-- ஆர் எஸ் எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்திற்கு பயப்படுவதால் நீங்க இந்தமாதிரி ஜெல்லியடிக்க முடிகிறது// ( அதாவது மாற்று மததினர் எல்லோரும் நாத்திகர்கள் ? இதைப்பற்றி சொல்லப் போவதில்லை)

பாவ புண்ணியத்துக்கு பயப்படுகிறவர்கள் என்பதால் தப்பு செய்வது இல்லையாம். நாம் அன்றாடம் படிக்கும் செய்திகளில் திருட்டு, கொலை கொள்ளை ஆகியவைகளில் ஈடுபடுபவர்கள் எவருக்கும் கடவுள் நம்பிக்கைகள் இல்லையா ? மக்களை ஏமாற்றி கையும் களவுமாக பிடிபடும், அல்லது பிடியில் நழுவிக் கொண்டிருக்கும் போலி சாமியார்களெல்லாம் கடவுள் நம்பிக்கை அற்றவர்களா ?

நான் கடவுள் நம்பிக்கை சரியா ? தவறா என்று எதும் சொல்ல வரவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சாதுக்கள் போலவும், பாவ புண்ணியத்திற்கு பயப்பாடுபவர்கள் போலவும் சொல்வதை ஏற்கமுடியவில்லை. திருப்பதி கோவில் உண்டியலில் நாள் தோறும் நிறையும் முக்கால் பங்கு செல்வங்களெல்லாம் பாவ மூட்டையில் இருந்து எடுத்துப் போடப்பட்டது தான். ஆபரகாமிய மதங்களில் மனப் பூர்வமாக பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று வேதப்புத்தகத்தில் எழுதியிருப்பதாக சொல்கிறார்கள். பாவம் செய்தது உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்துவதை விட மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை திமிரில் செய்யப்படும் பாவங்களே அதிகம்.

இப்பொழுதெல்லாம் திரைப்பட வில்லன் கூட கழுத்தில் கொட்டையும், நெற்றியில் பட்டை குங்கும பொட்டு சகிதமாகத்தான் வருகிறார்கள். கோவில் சிலையை கடத்துபவன், கோவில் சொத்தை டிரஸ்டி என்ற பெயரில் அபகரிப்பவன், கோவில் நகைகளை கொள்ளை அடிப்பவன் போன்ற எல்லோரும் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். இதில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டவர்களில் எவரும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் தான் திருவடுவது பாவம் இல்லை என்று நினைப்பதால் அப்படி செய்துவிட்டேன் என்று சொல்லும் ஒருவர் கூட இருந்ததே இல்லை. ஆனாலும் பொதுவாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பாவ புண்ணியத்துக்கு பயந்தவங்களாகவே சொல்லிக் கொண்டு எல்லோர் காதிலும் பூ சுற்றியே வருகின்றனர் நம்பிக்கையாளர்கள்.

காஞ்சியில் நடந்த கொலையில் தொடர்பு உடையவர்கள் என்று பத்திரிக்கை மற்றும் காவல் துறையால் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் முதல் குற்றவாளி முதல் கடைசி ஆள் வரை எவரும் நாத்திகர் இல்லையே. அதே போல் கடத்தல் தொழில்களில் பிடிப்பட்டதாக அறிவிக்கப்படுபவர்களில் எவரும் நாத்திகர்கள் இல்லை. நாத்திகர்கள் நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்தினால் கேடு செய்யலாம் என்று நினைப்பர் எவரும் இல்லை.

கடவுளை கண்டுபிடித்தவுடனே கடவுளை எப்படி(யும்) ஏமாற்ற முடியும் என்று கண்டுபிடித்தனர் ஆத்திகர்கள், பாவ மன்னிப்பு, பரிகாரம் என்ற பெயரில் பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பதைவிட, மன்னிப்புக் கேட்டுக் கொள்ளல்லாம் என்று செய்யும் பாவங்களே மிகுதியானது. கடவுள் நம்பிக்கை இருப்பதால் பாவ புண்ணியத்துக்கு பயப்படுகிறார்கள் என்று சொல்கிறார்களே. அது நாத்திகர்களை பழித்து அவர்கள் செய்யும் பாவம். நிவர்த்தி கிடையாது. :) அந்த கருத்தினால் ஆத்திகம் மேன்மை அடைவதாக தெரியவில்லை. ஆத்திகமோ, நாத்திகமோ அயோக்கிய தனங்களுக்கு தனிமனித செயல்கள் தான் காரணம் அன்றி அவன் ஆத்திகனாக இருப்பதால் யோக்கியன் என்றும் இவன் நாத்திகன் என்பதால் அயோக்கியன் என்பதும் குப்பை வாதம்.

25 ஏப்ரல், 2007

மொக்கை நன்றே! மொக்கை நன்றே !!

சர்சையை விட மொக்கைப் பதிவுகளே சிறந்தது எனவே நண்பர் நாமக்கல்லாரை மொக்கப் பதிவு ஒன்றை போட்டு அதன் பின் அவர் ஆவிகளை அழைத்து மொக்கைப் பதிவுகளை போடச் சொல்லவேண்டும் ...
மேலும் மொக்கை பதிவுகளின் புகழை பதிவு பின்னூட்டம் தோறும் பரப்பி ஆவன செய்ய வேண்டும்.

பதிவர் சந்திப்புக்கு சென்ற ஆவிகளில் சில நடேசன் பூங்காவின் மரத்தில் தங்கிவிட்டதாகவும் இன்று வரை கோவை திரும்பவில்லை என கேள்விப்பட்டேன். எதாவது ஒரு ஆவி தான் சந்திப்பு பற்றி பதிவு எழுதி எனது ஐயத்தை நீக்க வேண்டும்.

பட்டை போடச் சொல்கிறார்கள். நானும் போட்டு இருக்கிறேன். பட்டை போடவில்லை தமிழ் மணத்திற்கு பட்டைப் போட்டதாக சக பதிவர்கள் தவறாக நினைப்பார்கள் என யாரும் நினைக்க வேண்டாம். காலையில் நன்றாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று போட்டுக் கொள்ளுங்கள்.

பொன்ஸ் கூட பட்டை போட்டு இருக்காங்களாம்,

படம் இதோ !

24 ஏப்ரல், 2007

மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எதிரிகளா ?

மாற்றுக் கருத்துச் சொல்பவர்களை எதிர்கருத்துச் சொல்பவர்களாக நினைப்பது மட்டுமின்றி எதிரியாகவே நினைத்து மனம் பிறழ்ந்தவன், மன நிலைபாதிக்கப்பட்டவரின் உளறல்கள் என்பது போன்ற விமர்சனைங்களை முன் வைத்து, இறுதியில் குடும்பம், சாதி என்ற ரீதியில் ஆபாச விமர்சனங்கள் எழுந்து மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது பதிவுலகம்.

இதில் மாறுவேடம், ஆபாசப் பதிவுகள் என்ற ரீதியில், நல்ல பதிவுகளை எழுதியவர்கள்கூட சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். இவற்றிற்கெல்லாம் என்ன காரணம் ? நாம் உயர்வு என்று நினைத்துப் சொல்வதை பாதிக்கப்பட்டோர் ஏற்காததுதான். ஏற்கவேண்டும் என்று என்ன இருக்கிறது ? சான்றுகளுடன் சொன்னால் எவரும் மறுக்கப் போவதில்லை. பொதுவாக ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு அடுத்தவர்களிடமும் நாம் கண்டதே உண்மை என்று சொல்ல முயன்று வாதம் தோற்றுப் போவதால் ஏற்படும் காழ்ப்புணர்வுகளின் கோர வெளிப்பாடாக ஆபாசதாக்குதல்கள் நடக்கின்றன. அண்மையில் பாலபாரதி ஒரு நடவடிக்கையின் போது ஒரு பதிவரைப் பற்றிக் குறிப்பிட்டார் என்பதற்காக அவரை ரவுடி என்றும் விரைவில் கம்பி எண்ணுவார் என்றும் அதீத வெறுப்புணர்வுகளில் அவரைப் பற்றி விமர்சனங்களை பதிவுகள்தோறும் திட்டித் தீர்த்தது பத்தாது என்று இதில் தொடர்புடையவர் என்று கருதப்படுபவர் எந்த கருத்தும் சொல்லாத நிலையில் இவர்கள் கற்பனையால் திரட்டியின் மீதும் சேறு வாரிப் பூச முயன்று , இந்து முஸ்லிம் பிரச்சனை ஆக்கி ஆட்டம் போட்டு இருந்தனர் ஒரு சிலபதிவர்கள். திரட்டி நடவடிக்கை எடுத்ததும் தற்பொழுது கண்டிப்பவர்கள் முன்பு விடாது கருப்பை நீக்கிய போது திரட்டியை வாழ்த்தினார்கள். பெறும்பாலோர் கருத்து சுதந்திரம் என்று நினைப்பது தான் சொல்லும் கருத்து மட்டுமே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் ஆகிவிட்டது.

மாசியும் அரவிந்தன் நீலகண்டனும் நேருக்கு நேர் சந்தித்து இருந்து பரஸ்பரம் பழக்கம் இருந்தாலும் மாசி ஆர் எஸ் எஸ் பற்றி எழுதுகிறார் என்றதும், எதிர்வினையாக மாசி பற்றிய தனிமனித தாக்குதலில் ஆரம்பித்து ஒரு பதிவை எழுதி இருந்தார் அரவிந்தன். மாசி தனித் தாக்குதல்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பதிவர்கள் வெவ்வேறு உணர்வு நிலையில் இருந்து எழுதுகிறார்கள் என்று அவர் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மாசி பதிவிலேயே நண்பர் அசுரன் ஏன் அரவிந்தனை கடல் கன்னி பதிவில் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் ? என்று அன்புடன் (?)) கேட்டார். அதற்கு மிகப்பொறுமையாக தம் நிலை எது என தெளிவாக எடுத்துச் சொன்னார் மாசி. இது அவரிடம் உள்ள ஒரு முதிர்வு நிலையாகப் பார்க்கிறேன். இது போன்று கருத்துக்களை எதிர்க்கலாம்; கருத்துக் கூறுபவரை அல்ல என்று பதிவர்களுக்குள் புரிந்துணர்வு வளரவேண்டும்.

நானும் நண்பர் [வீ]எஸ்கேவும் எப்பொழுதும் சர்சைக்களுக்கு குறிய செய்திகளையே கூகுள் சாட்டில் பேசுவோம். பல சமயங்களில் விவாதம் காரசாரமாகச் செல்லும். ஆனாலும் ஒருவர் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு வைத்திருப்பதில்லை. பாபா, பார்பனீயம், பெரியார் மற்றும் அனைத்து சர்சைக்குரிய விசயங்களைப் பற்றியும் விவாதிப்போம் மாற்றுக் கருத்துக்கள் சூடானதாக இருந்தாலும் மனதைப் பொசுக்கும் அளவுக்கு நட்பையும், கருத்தையும் ஒன்றாக நினைப்பதில்லை. மாற்றுக் கருத்து சொல்வதாலேயே எதிரி என்று நினைக்க வேண்டியதில்லை என்று இதுவரை பழகிய பழக்கங்கள் அவற்றை உறுதிப்படுத்தியது. அதற்காக தம் சொந்த கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் நட்பிற்காக அடகு வைப்பதும் இல்லை.

விவாதம் என்பதே இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்களாக இருப்பதால் செய்யமுடிகிறது. இவ்வாறு இல்லாமல் விவாதத்தின் போது முகம் முறிய பேசிவிட்டால் நாம் கருத்துக்களை எவரிடம் பேசமுடியும் ? ஒத்த கருத்துள்ளவர்களிடம் விவாதம் செய்ய முடியுமா ? நடைமுறைகளில் கருத்தும் எதிர்க்கருத்தும் தேவையே. இரவு இல்லை என்றால் பகலுக்கு ஓய்வேது ? காழ்ப்புணர்வுகளை விட்டுவிட்டு கருத்துணர்வோடு விவாதங்கள் செல்வது பதிவுலகிற்கு நல்லது. எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது அவற்றை கருத்துரிமையோடு மறுக்க அணுகலாம், தேவையற்ற தனிமனித வெறுப்புகளால் நம் உள்ளத்தில் பொதிந்து இருக்கும் கருத்துக் குவியலுக்கு நாமே சமாதி கட்டிவிட்டு தனிமையில் செல்வதால் எந்த பயனும் இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்