பின்பற்றுபவர்கள்

23 ஏப்ரல், 2023

Legend - யாரை வைத்து செய்துள்ளது ?

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடித்த அந்த படத்தை ஓடிடியில் வெளியான நிலையிலும் பார்க்க விரும்பியதில்லை.

நம்மைப் போல் எளிய மனிதனாக வயதானவன் நடித்த ஒரு படத்தை பார்க்க நமக்கு என்ன மனத்தடை ? மனதளவில் ஏன் ஏற்க முடியவில்லை, அது வெறும் ‘இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்’ என்ற பொறாமை உணர்வு தானா ? என்று யோசித்துப் பார்த்தேன்.

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த பிறகு கூட பலர் ‘இவனெல்லாம் பெரிய திரைக்கு வந்துட்டான், இவனெல்லாம் ஹீரோவாக ஆகனும்னு தமிழ் சினிமா தலையெழத்து இருக்கு’ என்று பலர் குமைந்தனர்

சிவகார்த்திகேயன் நடிக்க வந்து அவர் தன்னை வளர்த்துக் கொண்டு நிற்கும் இன்றைய நிலைக்கும் சரவணா ஸ்டோர் அதிபர் நடிக்க வந்ததும் ஒன்றா ? கண்டிப்பாக இல்லை.

ஒரு நடிகனாக அந்த துறையில் நுழைவது வாரிசு நடிகர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு எளிதன்று, சிறு சிறு வேடங்கள் நடித்து பல இயக்குனர்கள் அறிமுகம் கிடைத்து, தனக்கு கிடைத்த சிறு வேடங்களிலும் தனித்துவம் காட்டி, பின்னர் நாயகனாக நடிக்கும் தகுதி வாய்ந்தவன் என்ற நம்பிக்கையை இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்படுத்தி வாய்ப்புக் கிடைத்த முதல் படத்தில் முத்திரை படைத்து அடுத்த அடுத்த படங்களில் வெற்றியை தக்க வைக்க தேர்ந்தெடுத்த படங்களை நடித்து மக்கள் மத்தியில் மற்றொரு கதை நாயகனாக மனதில் நிற்க வைக்க ஒரு நடிகனுக்கு அந்த துறையில் குறைந்த பட்சமாக பத்தாண்டு உழைப்புத் தேவைப்படுகிறது, சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய சேதுபதி இவ்வாறு தான் வளர்ந்து தனக்கான இடத்தை பிடித்தனர், அதன் பின்னரே 50 கோடிகளுக்கு மேல் செலவு பிடிக்கும் பெரிய பட்ஜட் படங்களில் அவர்களால் நடிக்கவே முடிந்தது.

ஒரு மனிதன் கடுமையாக உழைத்து ஒரு துறையில் தனக்கான இடத்தை அடையும் பத்தாண்டு கால உழைப்பையும் அலட்சியப்படுத்தி அந்த இடத்தை பணம் படைத்தவன் அடைய முடியும் என்று நினைப்பதே பணத் திமிர் என்று மட்டுமே சொல்ல முடியும், பெரும்பாலும் பணத்தில் உச்சமடைந்த என்ன செலவு செய்யலாம் என்ற நிலையில் பெரும்பாலான இந்திய பணக்கார ஆசை நடிகைகளுடன் ஒருமுறை படுக்க அவர்களை சம்மதிக்க வைக்க பெரிய விலை கொடுப்பது, அதைத் தாண்டி யோசித்துள்ளார் அண்ணாச்சி. நாமே பெரிய பட்ஜெட் படம் எடுத்து நாயகனாக நடித்தால் என்ன ? இந்த பணக் கொழுப்பு தனக்குத் தானே படம் எடுத்து எளிய மக்கள் வைத்துக் கொள்ளும் ஒருநாள் திருமண கட்அவுட் போல அவரும் அவரைச் சார்ந்தோரும் பார்க்க எடுத்துக் கொண்டால் நமக்கு அதில் எந்த விமர்சனமும் இல்லை, திரை சார்ந்த திரைப்பட சந்தையில் எந்த நம்பிக்கையில் தரமற்ற ஒரு பொருளை தயாரித்து நடித்து அதை ஐந்து மொழிகளில் வெளியிட்டது ஏற்கனவே அந்த துறையில் உள்ளவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் செயலாகத் தான் நான் பார்த்தேன்

எப்படி நினைத்துப் பார்த்தாலும் இதை பணத்திமிர் என்பது தாண்டி ஞாயப்படுத்த எந்த சிறு துரும்பு கூட படத்திலோ செயலிலோ உள்ளது என்று யாராலும் கூற இயலுமா ?

ஒரு பணக்காரன் தன் பணத்தினால் ஒரு கலைஞன் அடையும் உயரத்திற்கு விலைவைத்திருப்பது ஒட்டுமொத்த கலைத்துறையையும் கேவலப்படுத்தும் செயல்

பணத்தினால் எல்லாம் செய்ய முடியும் என்றால் இது போன்ற அசிங்கத்தையும் தான் செய்ய முடியும் என்றே இதைப் பார்க்கிறேன்

போட்டி நிறைந்த கல்லூரிகளில் பணத்தை கொடுத்து சீட் வாங்ஙி அதை வீணடித்துவிட்டு “படிப்பெல்லாம் என் பணத்துக்கு முன் மயிர்” என்று மார்த்தட்டுவது போன்ற பணத்திமிராகத் தான் இதைப் பார்க்கிறேன். பணத்தினால் கல்வித் தகுதியையும் கலையையும் கேவலப்படுத்துவதை பணத்திமிர் என்று தான் சொல்ல முடியும்



பணத்தின் பக்க விளைவுகள் பெருங்கொடுமை

கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்