பின்பற்றுபவர்கள்

2 ஆகஸ்ட், 2011

நட்பு நாளில் கிடைத்த நண்பர் - முக நூலுக்கு நன்றி !

80களின் இறுதியில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அலுவலகம் மூலமாக கிடைத்த நட்பு, அலுவலகம் மாறிய பின் தொடர்வது அரிதாகவே நிகழ்ந்தது, காரணம் அப்போதெல்லாம் இன்றைய அலைபேசிகள் போன்ற இணைப்புகள் இல்லை, அதையும் மீறி நட்புகள் தொடர குறிப்பிட்ட நண்பர் நமக்கு நன்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும், அவர் வாடகை வீடு அல்லாத தன்னுடைய வீட்டில் வசித்துவருபவராகவும், அவரது பெற்றோர்கள் மற்றும் இல்லத்தினர் வரை நாம் நட்பு பாராட்டி இருக்க வேண்டும், அப்படியான சூழலில் மட்டும் தான் தொடர்புகளை அவ்வப்போது மீண்டும் இணைத்துக் கொண்டிருக்கவே முடியும். மற்றபடி நன்கு பழகி இருந்தும் தொடர்பு விட்டுப் போனால் அதன் பிறகு அவர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனையோ நண்பர்களை பின்னாளில் தேடிப் போக அவர்கள் வாடகை வீட்டை காலி செய்து கொண்டு எப்போதே சென்றிருப்பார்கள், சொந்த வீட்டில் வசிப்பவர்களை மட்டுமே தேடிப்பிடிக்க முடிந்தது.

முகநூலில் பதிவு செய்த பிறகு எனக்கு நினைவு தெரிந்த நண்பர்களை தொடர்ந்து அதில் தேடிவருகிறேன், அப்படியாக தேடிய போது என்னுடன் 90 களில் பணி புரிந்து பின் காணாமல் போனவர் சிக்கினார், இருந்தும் அவரது படிப்பு குறித்த விவரங்கள் என்னைக் குழப்பியது, எனவே நான் பணிபுரிந்த ஆண்டு விவரம், நிறுவனப் பெயர் ஆகியவற்றையும், அவர் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டு சென்ற மார்ச் மாதம் குறிப்பு அனுப்பினேன். சரியாக நட்பு நாளில் நேற்று குறிப்பு அனுப்பி அவர் தான் அது என்று தெரிவித்திருந்தார், பின்னர் அலைபேசி எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்லி இருந்தேன், அவரும் சிங்கப்பூரிலேயே பணி புரிவதால் உடனடியாக அழைத்துப் பேசினார், தொடர்ச்சியாக 25 நிமிடங்கள், பழைய கதை, தற்போதைய இல்ல நிலவரம் குறித்தெல்லாம் பேசினோம், நேரில் சந்திக்க இந்த வாரம் வாய்ப்பிருக்கிறது. அவர் மூலமாக இணைப்பு துண்டிக்கப்பெற்ற பிற நண்பர்களின் விவரங்களும் என் மூலமாக அவருக்கும் சில நண்பர்கள் பற்றிய விவரங்களும் தெரிய வந்தது.

பழைய நண்பர்களை முகநூலில் தேடும் போது சிக்கல் என்னவென்றால் அவர்கள் முகங்கள் மாறி இருக்கும், அதைக் கூட கண்டுபிடித்துவிடலாம், ஆனால் அவர்களது முகப்(பு) படத்தில் (ப்ரொபைல்) வேறு ஏதாவது படம் போட்டிருந்தால் கண்டுபிடிக்க இயலாது. எனவே உங்கள் முகப்பு படங்களை அமைக்கும் போது அதில் உங்களது முகப்பு படங்களையே போடுங்கள், குழந்தைகள் அல்லது வேறு ஏதாவது படம் போட்டிருந்தால் தேடிவருபவர்கள் கண்டுகொள்வது கடினம் தான்.

உங்களுக்கு பழைய நண்பர்கள் தொடர்பு குறித்த ஆர்வம் இருந்தால்,

* உங்கள் புரொபைல் படம் உங்களுடையதாக இருக்கட்டும், அதில் 20 வயதிற்குப் பிறகான பல்வேறு புரொபைல் படங்கள் இருந்தால் இணைத்து வையுங்கள், நண்பருக்கு ஒரு வேளை உங்கள் பழைய முகமே நினைவு இருக்கக் கூடும்.
* பிறந்த ஊர் பற்றிய விவரங்கள்

* படித்த பள்ளிகள், கல்லூரிகள் பற்றிய விவரங்கள் ஆண்டுகள் உள்பட தெரிவியுங்கள்

* வேலை பார்த்த நிறுவனங்களின் பெயர் மற்றும் வேலை பார்த்த ஆண்டுகளை குறிப்பிடுங்கள்
இவையெல்லாம் இருந்தால் உங்கள் நண்பர் முகநூல் வைத்திருந்தால் உங்களை தேடி அடைவது எளிது. ஒரு சில குறிப்புகளை வைத்து அவர்கள் முகநூலில் உங்களைப் பற்றிய குறிப்பு அனுப்பி விவரம் கேட்டால், அவர் ஒருவேளை உங்களை அறிந்து கொள்ளும் தெரிந்தவராக இருந்தால் கண்டிப்பாக தொடர்பு கொள்வார்.

என்னுடைய நண்பர் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடை பணிபுரிந்தவர், அதன் பிறகு நானும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, சிங்கப்பூர் என மாறி மாறி வேலையை மாற்றிக் கொள்ள முற்றிலும் தொடர்பு அறுந்து போனது.

பழைய நண்பர் ஒருவரைத் தேடித் தந்த முக நூலுக்கு நன்றி.

3 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

பழைய நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியே.,

பகிர்வுக்கு நன்றி கோவியாரே....

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே... பழைய நட்பூக்கள் என்றுமே மனதிற்கு இனியவை

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
முக நூலினால் நிறைய நட்புக்கள் கிடைத்திருக்கின்றன.
வாழ்த்துக்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்