பின்பற்றுபவர்கள்

15 ஜனவரி, 2007

காளையை அடக்குகிறார் கைப்பு !

கைப்பு : எலே அம்புட்டு பேரும் இங்க வாங்கடா
அல்லக்கைகள் : என்னாணே ?
கைப்பு : பேசுறப்ப இப்படி குறுக்கப்பேசப்படாது
அல்லக்கைகள் : ???
கைப்பு : அது ! என்ன அம்புட்டுப் பயலும் ஆப்புவச்ச மாதிரி அடங்கிட்டானுங்க
அல்லக்கைகள் : அண்ணே நீங்க தானே அம்புட்டு பேரும் குறுக்கப் பேசப்படாதுன்னிங்க !
கைப்பு :அடேய் ... ! இன்னிக்கு அண்ணன் என்ன செய்யப் போறார் தெரியுமா ?
அல்லக்கைகள் : அண்ணே சொல்லுங்கண்ணே !
கைப்பு : ஜல்லிக் கட்டு காள மாட்ட அடக்கப் போறேன்டா ..... அடக்கப் போறேன் !
அல்லக்கை : அண்ணே வேணாம்னே குத்தி போட்டுறும்...!
கைப்பு : டேய் சிங்கம் சீறி பார்ததில்லேன்னு சொன்னீல்ல நீய்யீ ...!
அல்லக்கை : ஆமாம் ணே
கைப்பு : இன்னிக்கு பாரு
எல்லோரும் மாடுபிடிக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்
கைப்பு மனசுக்குள் 'அடி ஆத்தி, மாடுகளுக்கு மூக்கணை போட்டு இருப்பாங்கன்னு நெனச்சி வாய வுட்டுடேனே. ஈட்டி மாதிரி கொம்பை சீவி வச்சிருக்கானுங்களே ம் விதியாரை வுட்டுச்சி'
அல்லக்கை : அண்ணே அதோ வருதுபாருங்கண்ணே அந்த மாட்டை பிடிங்கண்ணே
என்று தள்ளி விட்டுவிடுகிறார்கள்
கைப்பு : அடேய் ... டேய்...
சரி சமாளிப்போம் என்று நினைத்து
கைப்பு : பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி..
என்று பாடிக் கொண்டே வேகமாக திரும்பி ஓடுகிறார்... சீறிப் பாய்ந்த காளை பின்னால் குத்தி தூக்கி எறிகிறது
கைப்பு : அய்...
அல்லக்கைகள் : வலிக்கிதாண்ணே ?
கைப்பு : டேய் வா இங்கே ... வலிக்குதுண்ணு நான் உன்கிட்ட சொன்னேனா ?
அல்லக்கை : அண்ணே அண்ணே திரும்பவும் காளை உங்களைப் பார்த்து ஓடிவருது
கைப்பு மனசுக்குள் 'அடி ஆத்தி அம்புட்டு பயலுகளும் பாத்துக்கிட்டே நிக்கிறானுங்களே... அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு' என்று நினைத்துக் கொண்டு
கைப்பு : டேய் டேய் இப்ப பாரு அண்ணனை ...
என்று காளையை முறைத்தபடி நிற்கிறார். திரும்பவும் முட்டி தூர எறிகிறது
மனதுக்குள் முனுகினாலும்
கைப்பு : பார்த்தியாடா... அண்ணன் எப்பிடி அசராமல் நிக்கிறேன்னு ...
சொல்லி முடிப்பதற்குள் பின்னால் மறுமடியும் முட்டி கொம்பால் தூக்குகிறது
கைப்பு : வேணாம் உட்டுடு ... அடங்கனும்
ஹூம் ஹூம் ...மாடு தலையாட்டுது
கைப்பு : வேணாம் அப்பறம் ... செல்லிட்டேன் வேணாம் ...இந்த பக்கமே வரமாட்டேன் உட்டுடு...

மாடு தூக்கி எறிந்துவிட்டு காலால் மண்னைத் தள்ளி கைப்புவின் முகத்தில் அடித்துவிட்டு செல்கிறது.
கைப்பு : அது ... அந்த பயம் இருக்கனும் ...அடங்கனும்...!
காளை திரும்பிப் பார்த்து முறைக்க..
கைப்பு : தம்பி பேச்சி முத்து அண்ணன் ஒன்னிய சொல்லலப்பா... என்னிய சொல்லிக்கிட்டேன்
என்று மண்ணைத் தட்டிவிட்டு விட்டு தடுமாறி எழ முயற்சிக்கிறார்

9 கருத்துகள்:

Dr.Srishiv சொன்னது…

ஹா ஹா
கைப்பு இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் எடுப்பா இருப்பாருங்கோ? ;)
ஸ்ரீஷிவ்...பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சிவபாலன் சொன்னது…

GK,

மிகவும் இரசித்தேன்.. நன்றி

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

G.Ragavan சொன்னது…

ஹா ஹா ஹா கைப்பு...கைப்பு...ஐயோ கைப்பு...நெலமை இப்பிடியா ஆகனும்.

வாசகன் சொன்னது…

ஆகா...!
அவிங்க தானா நீங்க!

ரசித்தேன் ஐயா!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

ஷிவதேவ், சிவபாலன் மற்றும் ஜிரா நன்றி !

VSK சொன்னது…

தலைவர் கைப்புள்ள மேல உங்களுக்கு என்ன கோவம்?

எதுக்கு இந்த உள்குத்து பதிவு?
:))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

படித்தேன் சிரித்தேன்

கோவி.கண்ணன் சொன்னது…

எஸ்கே ஐயா மற்றும் செந்தில் குமரன்
வருகைக்கு நன்றி !

நாமக்கல் சிபி சொன்னது…

:))

இதுக்கெல்லாம் அசருகிற ஆளா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்