பின்பற்றுபவர்கள்

25 மே, 2006

வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு...

இட ஒதுக்கீடு பற்றி பல்வேறு கட்டுரைகளை ஆதரித்தும், எதிர்த்தும் எழுதும் நண்பர்கள் இந்த கவிதைக்கு என்ன பதில் சொல்வார்கள் என்பதைப் பார்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.

வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு !

மயானத்தில் பிணம் சுடவும்,
மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கும்,
பினவறையில் சவம் அறுக்கவும்,
தினை அறுத்து தூற்றுவதற்கும்,
ஊசி பாசி விற்பதற்கும்,
ஊரார் ஆடைகள் வெளுப்பதற்கும்,
ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கும்,
ஆடு மாடு மேய்த்திடவும்,
சேற்றிலிறங்கி நாற்று நடவும்,
மாற்றான் தோட்டம் காத்திடவும்,
நைந்த செருப்பை தைத்திடவும்,
நாவிதம் நயமுடன் செய்திடவும்,

நாமும் கேட்போமே இடஒதுக்கீடு !

அப்பாவும் மகனும் !

மூன்று வயதுவரை தாய்ப்பால் எனக்கு,
மூன்றே மாதத்தில் புட்டிப்பால் உனக்கு !

பாசத்தின் தாலாட்டில் தூங்கினேன் நான்,
பணிப் பெண்ணுக்கு பயந்தே தூங்கினாய் நீ !

ஐந்து வயதில் ஆரம்ப பள்ளி எனக்கு,
தவழ்ந்த வயதில் பாலர்பள்ளி உனக்கு !

கரும்பலகையில் கைவலிக்க எழுதிபடித்தேன் நான்,
கணனியில் விரல் வைத்து வியக்க வைத்தாய் நீ !

கோலி, கில்லி, பரமபதம் விளையாடினேன் நான்,
கேம்பாயும், வார்கிராப்ட் புகுந்து விளையாடுகிறாய் நீ !

நண்பர்களுடன் கூடி விளையான்டேன் நான்,
கேர்ள் பிரண்டுடன் பாடி மகிழ்கிறாய் நீ !

அன்று தீப்பெட்டி தொலைபேசி எனது,
இன்று வீடியோ சொல்போன் உனது !

தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !

24 மே, 2006

பின்னூட்ட (அ)நாகரிகம்

ஒரு நாளைக்கு சராசரியாக 120 பதிவுகள் (இடுகைகள்), சராசரியாக 600 பின்னூட்டங்கள் என்ற எண்ணைக்கையாக தமிழ் மணம் தொகுப்பில் தகவல் இருக்கிறது. படிப்பதற்காக எழுதப்படும் பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டத்திற்கு முன்னோட்டமாக எழுத்தப்படும் பதிவுகள் அதிகம்.
இந்த 600 பின்னூட்டங்களில், பின்னூட்டம் அளித்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக வைத்துக் கொள்ளலாம், மீதம் 300 பதிவாளர் பின்னூட்ட மிட்டவருக்கு எழுதிய பதில் பின்னூட்டம் அல்லது நன்றி என்று வைத்துக் கொள்ளலாம்.

இங்கு போலியாக சென்று பின்னூட்டமிடும் பதிவாளர்களைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் பொதுவாக எழுதப்படும் விவாதப்பதிவுகளில் பின்னூட்டங்கள் நாகரீகமாக வருகிறாதா ?. எதிர்வினைப் பதிவுகளில் அநாகரிக பின்னூட்டங்களே அதிகம் வருகின்றன. ஒருமையில் எழுதுதல், குடும்பத்தினரை இழுத்து, இழித்து கூறுதல் இன்னும் எத்தனையோ.
முகமும், வயதும் ஏன் இடமும் கூட தெரிவிக்காமல் பதிவாளர்கள் எழுதுகிறார்கள். அதில் நன்மையும் கூட. எல்லோரும் செய்வதுதான் அது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதே போல் பின்னூட்டம் இடுபவர்களின் பின்புலமும் இருக்கிறது.

20 வயது முதல் 70 வயதுவரை உள்ள பதிவாளர்கள் இருக்கிறார்கள். மூத்த வயதுள்ள ஒரு பதிவாளர் எழுதுகிறார் என்று தெரியாமல் எத்தனையோ இளசுகள் மரியாதை குறைவான ஒருமை சொற்களை பின்னூட்டத்தில் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் பதிவு எழுதுபவர் இவருக்கு அப்பா வயது உடையவராக கூட இருக்கலாம்.

முன்பு ஒருமுறை நான் ஒரு பதிவாளருக்கு பின்னூட்டமிட்ட போது, அந்த பதிவாளர் 'ஏன் அந்த கட்சியை உயர்வாக சொல்கிறீர்கள், அவருக்கு உங்கள் தங்கையை திருமணம் செய்து கொடுப்பீர்களா ?' என்று கேள்வி எழுப்பினார்.

நான் அவர் பதிவை ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவு செய்து பின்பு மறுமொழியாக பின்னூட்டம் இட்டதற்காக, இவர் வந்து என் தங்கைக்கு வரன் பார்ப்பாராம். இப்படித்தான் இருக்கிறது பின்னூட்ட நாகரீகம்.

இன்னும் சில ஏனய்யா இப்படி சொல்கிறீர் என்று கேட்பார்கள், ஏன் ஐயா என்பதற்கும் ஏனய்யா என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளனவே.ஏனய்யாவோ, ஏன் ஐயாவோ போட தேவையில்லை, வெறும் பெயரை குறிப்பிட்டாலே போது.

ஆகவே பதிவாளர் ஆணா, பெண்ணா, வயது தெரியாதவரையோ, அவர் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் மரியாதைக் குறைவாக விளித்து பின்னூட்டம் இடுவது பண்பாடல்ல. வயது குறைந்த பதிவாளர்களாக இருந்தாலும் மூத்தப் பதிவாளர்கள், அவர்களையும் மரியாதைக் குறிய செற்களைப் பயன்படுத்தி விளித்து எழுதினால் ஒன்றும் பெரிய குறையாகாது.

பின்னூட்டத்திற்கு மறுமொழியிடும் போது, பதிவாளர்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், உங்களை இழித்துக் கூறினாலும் உங்கள் பதிவை நேரம் செலவழித்துப் படித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், அதற்கு தக்கவாறு மறுமொழியோ, மட்டுறுத்தலோ செய்தால் நலம்

சோனியா செய்தது சரியா ?

லாபம் தரும் பதவிகளை வைத்திருபோர், பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்ற ஒரு சட்டம் மத்திய அரசால் ஏற்றப்பட்டு, அதன்படி, சோனியா, ஜெயாபச்சன் மற்றும் ஏனையோரின் எம்.பி.பதவி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இத்தகைய அறிவிப்பில் தன் பெயர் வரும் முன்னே சோனியா தடாலடியாக தனது எம்.பி பதவியை விட்டுவிட்டு தேர்தலை சந்திப்பதாக அறிவித்து வெற்றியும் பெற்றார். ஜெயாபச்சனின் பதவியை மத்திய அரசே பறித்தது.

சோனியா நடந்து கொண்டது நேர்மையானது என்று பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். 4 லட்சம் வாக்கு வித்யாசத்தில் ரேபரோலியில் மீண்டும் வெற்றிப்பெற்றதாக செய்திதாள்களும் சோனியாவிற்கு புகழ்மாலை சூட்டினர்.

இவர் உள்ளே வெளியே ஆடியதால் யாருக்கு நஷ்டம். பொதுமக்களின் வரிப்பணம். தேவையில்லாமல் ஒரு தேர்தலுக்கு செலவானது மக்களின் வரிப்பணமே. இந்திய அரசாங்கம் மூலம் செலவளிக்கப்பட்ட இந்த பணத்தை வெற்றிபெற்றதால் திரும்ப கொடுக்க காங்கிரஸ் முன்வந்ததா ?

இந்த தேவையற்ற ஒரு தேர்தலை நடத்துவதற்கு பாஜகாவும், அந்த மானில கட்சிகளும் கூட காரணம். பலத்த செல்வாக்குடன் சோனியா வெற்றி பெறுவது உறுதி என்று இந்த கட்சிகளுக்கு தெரியாதா ? இவர்கள் போட்டியிடவில்லை யென்றால் சோனியா போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டிருப்பார். மிகப் பெரிய தேர்தல் செலவான பொதுமக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டிருக்காது.

இவர்கள் வீன், வரட்டு பிடிவாதங்கள் தான் தேவையற்ற தேர்தலும், தேர்தல் செலவும்
பாஜக போன்ற கட்சிகள் தாங்கள் சோனியாவிற்கு எதிராக போட்டியிடாமல் ஒதுங்கி இருப்பதற்கு சரியான காரணம் மக்கள் வரிப்பணம் வீன் விரயம் ஆக விரும்பவில்லை என்று சொல்லியிருந்தால் அந்த கட்சிகளின் மேல் பொதுமக்களுக்கு மதிப்பு கூடும்.
சோனியா நேர்மையானவராக இருந்திருந்தால் பதவியை துறந்தவுடன் மறுபடி போட்டியிட்டிருக்க கூடாது. வேறு ஒருவரை போட்டியிடச் செய்திருக்கலாம், அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருந்து பிறகு போட்டியிடலாம்.

காங்கிரஸ் கட்சி மக்கள் நலனில் அக்கரை கொண்டிருந்தால், இந்த தேவையற்ற தேர்தலுக்கான செலவு அவர்களுடைய கட்சி வேட்பளாரால் ஏற்பட்டது என்பதால் அந்த செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

பாஜக கட்சி நேர்மையானதாக இருந்திருந்தால் இப்படி ஒரு தேவையற்ற தேர்தலே நடந்திருக்காது.

இவர்கள் போடும் ஆட்டத்துக்கு இறைப்பது ஊரார் பணம்

22 மே, 2006

தமிழக மாணவர்கள் முதலிடத்தில்

அகில இந்திய அளவிலும் தமிழ்னாட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர், இதைப்பற்றிய இந்திய டுடே வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலுடன் இணைத்து, அந்த மான்புமிகு மாணவர்களின் புகைப்படங்களை வெளியியிட்டுள்ளது தமிழ்முரசு. பீகார் மணவருக்கும் தமிழக மாணவர்களுக்கும் கடும் போட்டி நிலவியதாக மேலும் அது தெரிவித்தது.

வெற்றி பெற்ற மாணவர்களை நாமும் வாழ்துவோம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்