தமிழுக்கான ஒருங்குறி புதிய பட்டியலில் புதீ'ய வடமொழி எழுத்துகளை நுழைத்து சர்மா என்பவர் பரிந்துரை செய்ததும் அதை தடுக்க கருணாநிதி முயன்றுவருவதும் பலரும் அறிந்ததே. இதற்கு இடையே தினமணி தலையங்கத்தில் இதனை வேறு மாதிரியாக திரித்து ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ எழுத்துகளை ஒருகுறியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக ஆர்வலர்களும் முயற்சிப்பதாக எழுதியுள்ளது. இது ஒருங்குறி பற்றி முற்றிலும் அறியாதவர்களை குழப்பும் முயற்சியாகும், தமிழில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ (தமிழுக்காக உருவாக்கப்பட்ட வட அல்லது பிற மொழியில் அமைந்த தமிழில் இல்லாத ஒலி அமைந்த சொற்களை ஒலிக்கும் வட்டெழுத்துகள், இவை தமிழ் வடிவம் பெற்றவை, இந்த எழுத்துகளின் ஒலிப்பு எழுத்துகள் இந்திய மொழிகளில் கிரந்த மற்றும் வட்டார மொழி எழுத்துவடிவங்களில் இருக்கிறது என்றாலும் இந்த எழுத்தை தமிழர்கள் தவிர்த்து வேறு எவரும் படிக்க முடியாது, இவை வட எழுத்துகள் என்பது தவறான பொருள், இவை தமிழில் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட எழுத்துக்கள், இவற்றை முற்றிலும் எடுக்க வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை, ஆனால் இவற்றின் புழக்கத்தை குறிக்கும் வண்ணம் சொற்களை தமிழ் படுத்தி பயன்படுத்துங்கள் என்றே சொல்கிறார்கள்), தினமணிக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஒன்றை அரைகுறையாகப் புரிந்து கொண்டதமின்றி அந்த அரைகுறைப் புரிதலை வைத்து தலையங்கம் தீட்டி தவறான கருத்தை பரப்பி வருகிறது தினமணி
தினமணி தலையங்கத்தின் பகுதி இது கீழே,
"சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?"
(தமிழக அரசு வேட்டியை வரிந்து கட்டாமல் பஞ்சகச்சத்தை வரிந்து கட்டினால் மகிழ்வார்களோ ?, இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன்னிடம் அனுமதிவாங்கமலேயே தான் அணிந்திருக்கும் பூணூல் ஆடும் என்பார்களோ !)
தினமணி கூறியிருப்பது யாவும் கற்பனையே. ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ எழுத்துகளை யாரும் நீக்க வேண்டும் என்று குறிப்பிடாத போது தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் தினமணி ஏற்படுத்துவது எதற்காக யாரை மனநிறைவு செய்ய ? தமிழ் ஒருங்குறியில் சர்மா புகுத்தி முயன்ற புதிய 26 எழுத்துகளைத் தான் கூடாது என்கின்றனர் தமிழறிஞர்கள்.
தினமணியை கண்டனம் செய்து சங்கமித்ரன் என்பவர் எழுதிய இடுகையின் சுட்டி
பின்பற்றுபவர்கள்
11 நவம்பர், 2010
9 நவம்பர், 2010
கமலஹாசனின் பகுத்தறிவு பேச்சு அலறும் இந்துத்துவாக்கள் !
விஜய் டிவி தீபாவளி நிகழ்ச்சியாக காபி வித் அனுவில் கமல் நிகழ்ச்சியில் கமல் பேசிய பகுத்தறிவு கருத்துகளை தினமலர் யாரோ ஒரு பாண்டே என்பவர் மூலம் சர்சை ஆக்க முயன்றுள்ளது. கமல் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் ?
1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.
இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்
1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.
கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.
2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!
எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்
3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?
இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.
4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?
ஆகமவிதி கோயி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கரையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.
இணைப்பு : இரண்டாவது பெரியாராக முழங்கிய கமல் (தினமலர்)
விஜய் தொலைகாட்சியின் காணொளி:
1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.
இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்
1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.
கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.
2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!
எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்
3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?
இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.
4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?
ஆகமவிதி கோயி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கரையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.
இணைப்பு : இரண்டாவது பெரியாராக முழங்கிய கமல் (தினமலர்)
விஜய் தொலைகாட்சியின் காணொளி:
பதிவர்:
கோவி.கண்ணன்
at
11/09/2010 10:58:00 AM
தொகுப்பு :
இந்து,
எதிர்வினை,
சமூகம்,
போலி ஆன்மிகம்
24
கருத்துக்கள்
5 நவம்பர், 2010
குட்டிப் பையனின் முதல் தீபாவளி !
எங்க வீட்டு தீபாவளியின் கொண்டாட்டமே எங்க குட்டிப் பையன் சிவசெங்கதிர் தான், இன்னிக்கு காலையில் அடம் பிடிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தான். குளிச்சிட்டு, புத்தாடை அணிந்து, மத்தாப்பும் கொளுத்தியாச்சு. அனைவருக்கும், இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
(மகள் போட்ட மாக்கோலம்)
4 நவம்பர், 2010
கலவை 04/நவ/2010 !
பதிவு எழுத மேட்டர் தேத்துவதைவிட இப்போதெல்லாம் பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை எனக்கு. வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுடன் இருப்பதற்கே நேரம் சரியாக இருக்கும், கையில் ஐபோன் இருப்பதால் கணிணியை திறக்காமலேயே இணையத்தை மேய்ந்துவிட முடிகிறது, அரசியல் விமர்சனம் எழுதி அலுத்துப் போச்சு. நாம எழுதுவதால் எதுவும் மாறப் போவதில்லை என்றாலும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளில் கட்சிக்காரர்கள் அனைவருமே மனசாட்சி அற்றவராக இருக்கும் பொழுது (இவங்களெல்லாம் மனுசப் பிறப்பான்னு கூட நினைச்சுப் பார்ப்பேன்) நம்மைப் போன்ற மனநிலை உள்ளவர்களுக்காக பகிர்தல் என்ற அளவில் தான் எனது அரசியல் விமர்சனங்கள், பொதுமக்களின் வெறுப்பு ஆளாகுபவர்கள் எவராக இருந்தாலும் ஆட்சி அமைக்கவே முடியாது என்பது கடந்தகாலப் பாடம், அதையும் ஊடக தந்திரங்கள் இலவசங்கள் என்பதாக (ஆளும்)அரசியல்வாதிகள் வென்றுவரும் வேலையில் எவன் இருந்தால் என்ன செத்தால் என்ன நமக்கு பிரச்சனை இல்லாதவரை சரிதான். மக்கள் உணர்வற்று அல்லது உணர்வுகள் மழுங்கடிக்கப் படுவது தொடர்ந்து என்றுமே நடைபெறாது, மக்கள் சோம்பிக் கிடந்த நாடுகளில் தான் புரட்சிகள் வெடித்துள்ளன, அந்த புரட்சி சிங்களர்களால் அன்றாடம் துன்புறுத்தபடும் மீனவ சமுதாயத்திடமிருந்தோ, இலவசம் என்று எதுவும் கிடைக்கப் பெறாமல் பரபரப்பாக அன்றாடம் வேலைக்குச் சென்றுவரும் பொதுச் சமூகத்திடமிருந்தோ கூடத் ஏற்படலாம். ஒருவிதத்தில் அரசியல்வாதிகள் ரிஸ்க் எடுக்கிறவர்கள் தான் அவர்களால் தானே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிவது போல் சிறைச்சாலைக்குள் அலுமினிய தட்டில் சாப்பிடவதற்கான வாய்ப்புகளும் அடுத்து அடுத்து நடக்கிறது :) அரசியல்வாதிகளால் சூழப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தீபாவளி வெள்ளைக்காரன் போனவுடனே போச்சு :)
பணக்காரர்களின் குழந்தைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகத் தொடர்கிறது, இதில் இரு குழந்தைகள் மிகவும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பணக்காரன் வீட்டில் குழந்தையாகப் பிறப்பதும் கூட பாவம் என்ற நிலைக்குச் சென்றிருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு சமச்சீரின்மையின் வேறு கோணம் தான். குற்றவாளிகள் பிடிப்பட்டது ஆறுதல் அளிக்கிறது, இருந்தாலும் இவை தொடராது என்பதற்கு எந்த பற்றுறுதியும் கிடையாது. ஏழைக் குழந்தைகள் போலி சாமியார்களின் நரபலிக்கோ, சமூக விரோதிகளானால் பிச்சை எடுக்கவோ கடத்தப்படுகிறார்கள், பணக்காரக் குழந்தைகள் பணத்துக்காகக் கடத்தப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என்பதில் இவை அனைத்தும் ஒன்றே. குழந்தைகளை குறித்தக் குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
தீபாவளி சந்தைகள் சிங்கையில் மலேசியாவிலும் களைகட்டியுள்ளது, குட்டி இந்தியா செரங்கூன் சாலை வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது, விறுவிறுப்பான தீபாவளி சந்தை விற்பனை நடைபெறுகிறது, நான் சென்று வந்த மலேசியா ஜோகூர் பகுதியிலும் அதே நிலைதான், வண்ண விளக்குகள் இல்லை, ஆனால் நிறைய தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எங்க வீட்டுக் குட்டிப்பையனு இது முதல் தீபாவளி, அதைவிட வேறு ஒண்ணும் எங்களுக்கு இந்த தீபாவளியில் தனிச் சிறப்பு கிடையாது.
(JB- Malaysia)

(Near Perumal Temple, Serangoon Road, Singapore)

(Near Teka Market, Serangoon Road, Singapore)
பலரையும் உடனேயே ஈர்க்க் கூடிய திரைப்படம், பாலியல் ஜோக்குகள் போன்ற மார்கெட்டிங்க் யுத்திகள் எதுவும் இல்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் கணிணி தொடர்பான வெறும் தொழில் நுட்பப் பதிவுகளை மட்டுமே எழுதி ஏராளமான பின் தொடர்பவர்களைப் பெற்று அலெக்சா பட்டியலில் முதல் ஒரு லட்சம் இணையத்தளங்களுக்கான தர வரிசையில் ஒருவராக பதிவர் வேலன் இடம் பிடித்திருக்கிறார். இதன் மூலம் திரைப்படம், பாலியல் சாராத தகவல்கள் கூட பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன, எழுத்து முயற்சியும் பயனுள்ள தகவல்களும் கூட சிறந்த வரவேற்பை பெற முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கும் பெற்று தந்திருக்கிறார். வாழ்த்துகள் வேலன் சார்.
*****
பதிவர் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்
பணக்காரர்களின் குழந்தைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகத் தொடர்கிறது, இதில் இரு குழந்தைகள் மிகவும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பணக்காரன் வீட்டில் குழந்தையாகப் பிறப்பதும் கூட பாவம் என்ற நிலைக்குச் சென்றிருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு சமச்சீரின்மையின் வேறு கோணம் தான். குற்றவாளிகள் பிடிப்பட்டது ஆறுதல் அளிக்கிறது, இருந்தாலும் இவை தொடராது என்பதற்கு எந்த பற்றுறுதியும் கிடையாது. ஏழைக் குழந்தைகள் போலி சாமியார்களின் நரபலிக்கோ, சமூக விரோதிகளானால் பிச்சை எடுக்கவோ கடத்தப்படுகிறார்கள், பணக்காரக் குழந்தைகள் பணத்துக்காகக் கடத்தப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என்பதில் இவை அனைத்தும் ஒன்றே. குழந்தைகளை குறித்தக் குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
தீபாவளி சந்தைகள் சிங்கையில் மலேசியாவிலும் களைகட்டியுள்ளது, குட்டி இந்தியா செரங்கூன் சாலை வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது, விறுவிறுப்பான தீபாவளி சந்தை விற்பனை நடைபெறுகிறது, நான் சென்று வந்த மலேசியா ஜோகூர் பகுதியிலும் அதே நிலைதான், வண்ண விளக்குகள் இல்லை, ஆனால் நிறைய தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எங்க வீட்டுக் குட்டிப்பையனு இது முதல் தீபாவளி, அதைவிட வேறு ஒண்ணும் எங்களுக்கு இந்த தீபாவளியில் தனிச் சிறப்பு கிடையாது.
(Near Perumal Temple, Serangoon Road, Singapore)
(Near Teka Market, Serangoon Road, Singapore)
பலரையும் உடனேயே ஈர்க்க் கூடிய திரைப்படம், பாலியல் ஜோக்குகள் போன்ற மார்கெட்டிங்க் யுத்திகள் எதுவும் இல்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் கணிணி தொடர்பான வெறும் தொழில் நுட்பப் பதிவுகளை மட்டுமே எழுதி ஏராளமான பின் தொடர்பவர்களைப் பெற்று அலெக்சா பட்டியலில் முதல் ஒரு லட்சம் இணையத்தளங்களுக்கான தர வரிசையில் ஒருவராக பதிவர் வேலன் இடம் பிடித்திருக்கிறார். இதன் மூலம் திரைப்படம், பாலியல் சாராத தகவல்கள் கூட பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன, எழுத்து முயற்சியும் பயனுள்ள தகவல்களும் கூட சிறந்த வரவேற்பை பெற முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கும் பெற்று தந்திருக்கிறார். வாழ்த்துகள் வேலன் சார்.
*****
பதிவர் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்
1 நவம்பர், 2010
தங்கமீனிற்கு தூவிய பொரி !
தங்கமீனில் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்தளிக்கிறேன். கிளிக் செய்து படிக்கவும். தங்கமீன் திங்கள் (மாத) இணைய இதழாக சிங்கையில் இருந்து நண்பர் பாலு மணிமாறன் அவர்களின் முயற்சியினால்
வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நவம்பர் திங்கள் இதழில் எழுத்தாளர் சாரு வின் கட்டுரையும் உள்ளன.
"உண்மையில் தமிழ்நாட்டில் வாழ்வதென்பது மரணக் கிணற்றில் வாழ்வதற்குச் சமமாகும். இந்திய நிலைமையே அதுதான் என்றாலும் அங்கே கொஞ்சம் கலாச்சார உணர்வாவது இருக்கிறது. பா. விஜய் போன்ற ஒரு ஆளை அங்கே இலக்கியவாதி என்று சொல்லமாட்டார்கள்; இங்கே மரணக் கிணறு வாழ்க்கையோடு சேர்த்து கலாச்சார சீரழிவு வேறு விசேஷ போனஸ். அந்தக் காலத்தில் அமெரிக்காவில் ஆஃப்ரிக்க அடிமைகள் ஒரு பகல் பூராவும் விலங்குகளைப் போல் வேலை செய்ய வேண்டும். ஆனால் இரவில் அவர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் கதை சொல்லிக் கொண்டும் இருப்பார்கள். அத்தனை நூற்றாண்டுகளாக அவர்களை உயிர்வாழ வைத்தது அவர்களுடைய இரவு வாழ்க்கைதான்; அவர்களுடைய கலாச்சாரம்தான். ஆனால், கச்சி ஏகாம்பர நாதா, அந்தக் கலாச்சாரத்தையும் இங்கே தமிழ்நாட்டில் எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு பதிலுக்கு ரஜினிகாந்தையும் பா. விஜய்யையும் கொடுத்து எஞ்ஜாய் எஞ்ஜாய் என்கிறார்களே, இந்தக் கொடுமையை எங்கே கொண்டு போய் முறையிட?" - சாரு
வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நவம்பர் திங்கள் இதழில் எழுத்தாளர் சாரு வின் கட்டுரையும் உள்ளன.
"உண்மையில் தமிழ்நாட்டில் வாழ்வதென்பது மரணக் கிணற்றில் வாழ்வதற்குச் சமமாகும். இந்திய நிலைமையே அதுதான் என்றாலும் அங்கே கொஞ்சம் கலாச்சார உணர்வாவது இருக்கிறது. பா. விஜய் போன்ற ஒரு ஆளை அங்கே இலக்கியவாதி என்று சொல்லமாட்டார்கள்; இங்கே மரணக் கிணறு வாழ்க்கையோடு சேர்த்து கலாச்சார சீரழிவு வேறு விசேஷ போனஸ். அந்தக் காலத்தில் அமெரிக்காவில் ஆஃப்ரிக்க அடிமைகள் ஒரு பகல் பூராவும் விலங்குகளைப் போல் வேலை செய்ய வேண்டும். ஆனால் இரவில் அவர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் கதை சொல்லிக் கொண்டும் இருப்பார்கள். அத்தனை நூற்றாண்டுகளாக அவர்களை உயிர்வாழ வைத்தது அவர்களுடைய இரவு வாழ்க்கைதான்; அவர்களுடைய கலாச்சாரம்தான். ஆனால், கச்சி ஏகாம்பர நாதா, அந்தக் கலாச்சாரத்தையும் இங்கே தமிழ்நாட்டில் எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு பதிலுக்கு ரஜினிகாந்தையும் பா. விஜய்யையும் கொடுத்து எஞ்ஜாய் எஞ்ஜாய் என்கிறார்களே, இந்தக் கொடுமையை எங்கே கொண்டு போய் முறையிட?" - சாரு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்