பின்பற்றுபவர்கள்

1 நவம்பர், 2010

தங்கமீனிற்கு தூவிய பொரி !

தங்கமீனில் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்தளிக்கிறேன். கிளிக் செய்து படிக்கவும். தங்கமீன் திங்கள் (மாத) இணைய இதழாக சிங்கையில் இருந்து நண்பர் பாலு மணிமாறன் அவர்களின் முயற்சியினால்
வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நவம்பர் திங்கள் இதழில் எழுத்தாளர் சாரு வின் கட்டுரையும் உள்ளன.

"உண்மையில் தமிழ்நாட்டில் வாழ்வதென்பது மரணக் கிணற்றில் வாழ்வதற்குச் சமமாகும். இந்திய நிலைமையே அதுதான் என்றாலும் அங்கே கொஞ்சம் கலாச்சார உணர்வாவது இருக்கிறது. பா. விஜய் போன்ற ஒரு ஆளை அங்கே இலக்கியவாதி என்று சொல்லமாட்டார்கள்; இங்கே மரணக் கிணறு வாழ்க்கையோடு சேர்த்து கலாச்சார சீரழிவு வேறு விசேஷ போனஸ். அந்தக் காலத்தில் அமெரிக்காவில் ஆஃப்ரிக்க அடிமைகள் ஒரு பகல் பூராவும் விலங்குகளைப் போல் வேலை செய்ய வேண்டும். ஆனால் இரவில் அவர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் கதை சொல்லிக் கொண்டும் இருப்பார்கள். அத்தனை நூற்றாண்டுகளாக அவர்களை உயிர்வாழ வைத்தது அவர்களுடைய இரவு வாழ்க்கைதான்; அவர்களுடைய கலாச்சாரம்தான். ஆனால், கச்சி ஏகாம்பர நாதா, அந்தக் கலாச்சாரத்தையும் இங்கே தமிழ்நாட்டில் எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு பதிலுக்கு ரஜினிகாந்தையும் பா. விஜய்யையும் கொடுத்து எஞ்ஜாய் எஞ்ஜாய் என்கிறார்களே, இந்தக் கொடுமையை எங்கே கொண்டு போய் முறையிட?" - சாரு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்