பின்பற்றுபவர்கள்

7 டிசம்பர், 2012

தம்பியின் கைபேசி எண் !

சிங்கையில் 1998 ஆம் ஆண்டு கைப்பேசிகள் புழக்கத்தில் வந்த பிறகும் நான் அவை தேவையற்ற ஆடம்பரம் என்றே வாங்காமல் இருந்தேன், 'அட வாங்கி வைத்துக் கொள், எப்போ வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பேசலாமே என்று எனக்கு ஒன்றை அவனது கணக்கிலேயே வாங்கிக் கொடுத்தான் என் தம்பி. தம்பிக்கு எனக்கும் வயது வேறுபாடு 2.5 ஆண்டுகள் தான், அவன் எனக்கு முன்பாக சிங்கை வந்திருக்காவிட்டால், எனக்கு சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லலாம் என்ற எண்ணமே வந்திருக்காது, அவன் சிங்கைக்கு வந்து ஒரு ஆண்டுகள் முடிய எனக்கும் பகுதி நேர பிஇ படிப்பு முடிய நாமும் சிங்கப்பூர் செல்லலாம் என்று முடிவெடுத்தேன், செல்லும் செலவு, முகவருக்கு பணம் எல்லாம் தம்பி தான் கட்டினான், திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்றாலும் அந்த நேரத்தில் எனக்காக செலவழிக்கப்பட்டது பெரிய தொகை, சிங்கைக்கு  வேலைக்கு வந்த புதிதில் நண்பர்கள் யாரும் இல்லாத நிலையில் தம்பியும், தம்பி அறையில் தங்கி இருந்தவர்களும் தான் நண்பர்கள், சனி ஞாயிறுகளில் அவர்களது அறைக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டு திங்கள் காலையில் வேலைக்குச் செல்லுவதற்காக ஞாயிறு இரவு கிளம்புவது வழக்கமாகவும் இருந்தது, வந்த ஒரு மாதத்திற்குள் சிங்கப்பூரில் இருந்த அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றுவிட்டான். 

ஏற்கனவே சென்னையில் ஒன்றாக ஒரே வீட்டிலும் வசித்தோம், பிறகு பணி இடம் தொடர்பில் வேறு வேறு இடத்திலும் வசித்தோம், சிங்கையிலும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது, வேலைக்காக வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, திருமணத்திற்கு முன்பு வரை அதிக நாட்கள் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறொம் என்ற வகையில் என்னுடன் பிறந்தவர்கள் இன்னும் ஐந்து பேர் என்றாலும் எனக்கு அடுத்து பிறந்தவனான இவனுடன் மட்டும் தான் நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கும் வாய்ப்பும் கிட்டி இருந்தது. கிட்ட் தட்ட 20 ஆண்டுகள் ஒன்றாக வசிக்காவிட்டாலும் அருகருகே மாதம் ஒருமுறையேனும் பார்க்கக் கூடிய அளவில் வசித்து வந்தோம்,. சிங்கையில் சில ஆண்டுகள் அவனும் தனது குடும்பத்துடன் வசித்தான், பிறகு தனியாகவும் வசித்து வந்தான், கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு குறைபாட்டுடன் வாழ்ந்து வந்தவனுக்கு 2009 ஆம் ஆண்டு உடலுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அடைய, இனி இங்கே இருப்பது சரிபட்டு வராது என்று கூறி தமிழகத்திற்கே அனுப்பி வைத்தேன்,  தமிழகத்திற்கு புறப்படும் முன்பு வரை தம்பியின் பெயரில் பதிந்திருந்த அலைபேசி எண்ணைத்தான் வைத்திருந்தேன், போகும் முன்பு என் பெயரில் மாற்றிக் கொடுத்துச் சென்றான், அதே தொலைபேசி எண்ணை 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன்.

சிங்கையில் இருந்து சென்று ஒரு ஆறுமாதத்தில் நீரிழிவு மோசமடைய, இரு சிறுநீரகங்களும் பழுதடைய டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சென்று கிட்டதட்ட ஓராண்டுகள் டயாலிசிஸ் என்னும் இரத்த சுத்திகரிப்பு செய்து வந்தான், பிறகு அவனது மாமியாரின் (தாய் மாமனின் மனைவி) சிறுநீரகம் பொருத்தமாக அமைய 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதனை மாற்று சிறுநீரகமாக வைத்தோம், நன்கு பொருந்தினாலும் கணையம் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் வைத்த சிறுநீரகமும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் துவங்கி இருந்தது, இந்த கணையப் பிரச்சனையை முன்பே கண்டிருந்தால் நீரிழிவு ஏற்பட்டிருந்திருக்காது, மருத்துவர்கள் நீரிழிவிற்கான சிகிச்சை மட்டுமே அளித்து வந்திருந்தனர், பிரச்சனை கணையத்தில் தான் என்பதை நீரிழிவு முற்றும் வரை யாரும் அறிந்திருக்கவில்லை,

மூன்றுவாரம் முன்பு 10 நாள் விடுமுறையில் ஊருக்குச் சென்ற பொழுது தம்பியின் உடல் நிலை சற்று கவலைக்கிடமாகவே இருந்தது, விசாரித்ததில் இவரு இப்படிதான் படுத்திருப்பார் பிறகு எழுந்துவிடுவார் என்றார்கள், என்னிடம் நன்றாகத் தான் பேசினான், எழுந்து உட்கார கொஞ்ச முயற்சி எடுத்தான், கூடவே கொஞ்சம் காய்ச்சல், இரண்டு நாளாக காய்ச்சல் டாக்டரிடம் கூப்பிட்டால் சரியாகிவிடும் தேவை இல்லை என்கிறார் என்று தம்பியின் மனைவியும், என்னுடைய இன்னொரு தம்பியும் கூறினர், இதற்கிடையே நான் வேறு ஊர்களுக்கு சென்று திரும்பும் பொழுது மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாக எனக்கு அழைத்துச் சென்னார்கள், மருத்துவ மனைக்குச் சென்று பார்த்த பொழுது உடல் மிகவும் நலிவுற்று கைகால்கள் சோர்ந்தே இருந்தது, ரொம்பவும் அளவாகப் பேசினான், இவ்வளவு உடல் வலிகளை எப்படித்தான் தாங்கிக் கொள்கிறானோ என்று கவலையாக இருந்தது, நல்லாப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பக்கத்தில் பார்த்துக் கொண்டு இருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு எனக்கும் சிங்கைத் திரும்ப வேண்டி சில வேலைகள் இருந்ததால் திரும்பிவிட்டேன், 

சிங்கைத் திரும்பிய மூன்றே நாட்களில் (புதன், 28 நவம்பர் 2012) 'கிட்னி மாற்றிய பிறகு ரெகுலர் செக்கப் செல்லும் சென்னை மருத்துவ மனைக்குக் வழக்கமான செக்கப்புக்கு அழைத்துச் சென்றோம், இங்கே சோதித்துப் பார்த்து டெங்கி காய்சல், இரண்டு நாள் முன்பே அழைத்து வந்திருக்கலாம் என்கிறார்கள், ரொம்ப சீரியஸ் கண்டிசன்' என்று எனக்கு இன்னொரு தம்பியும், தங்கையும் அழைத்துச் சொன்னார்கள், வீட்டில் உள்ள அனைவருக்கும் பயண ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கும் பொழுதே, மருத்துவர் இன்னும் இரண்டு மணி நேரம் மட்டும் டைம் கொடுத்திருக்கிறார், நுரையீரலில் இரத்தக் கசிவு இனிமே எதுவும் செய்ய முடியாதாம், செயற்கை சுவாசம் கொடுக்கிறார்கள், நாம சொன்னா எடுத்துவிடுவாங்க, (இன்னொரு) அண்ணன் வரட்டம் என்று காத்திருக்கிறேன் என்று திரும்ப அழைத்துச் சொன்னார்கள். அப்போது என் (அடுத்த) தம்பியிடம், உடல் உறுப்பு தானம் செய்ய ஏதேனும் வாய்பிருக்கிறதா என்று கேளேன், என்றேன், 'இதுக்கு தான் ஏற்கனவே கிட்னி பிரச்சனை, கண்ணும் பார்வை குறைவாகத்தானே இருந்தது, இப்ப நுரையீரலும் போய்விட்டது தானம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லையே' என்றான், தம்பியின் உடலுறுப்புகளில் ஏதேனும் ஒன்றையாவது வாழ வைக்க முடியும், அவனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் பொய்ததது, ,    மரண செய்திகளைவிட இன்னும் கொஞ்ச நேரத்தில் மரண செய்தி வரப்போகிறது என்று உறுதியாக தெரியும் பொழுது ஏற்படும் கையறு நிலையையும் வேதனையும் விவரிக்க முடியாது,

சரியாக விமானநிலையத்திற்கு புறப்படும் முன் 'நம்முடைய சகோதரன் நம்மைவிட்டு போய்விட்டான்' என்று உறுதியான தகவலாக குறுந்தகவலை அனுப்பி இருந்தான் இன்னொரு தம்பி. சென்னை மருத்துவ மனையில் எல்லா வழக்ககங்களையும் முடித்து உடல் நாகை வரும் முன்பே, நான் திருச்சியில் இறங்கி தஞ்சைக்கே வந்துவிட்டேன்,  அங்கிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் அதிகாலை 4 மணிக்கு நகைச் சென்று தம்பி வீட்டிற்குச் செல்ல, வாசலில் பந்தல், ஜெனரேட்டர் வைத்து மின் விளக்குகள், உறவினர் பெண்கள், தம்பி மனைவி, எங்கள் அக்கா, தங்கை, அம்மா என பெண்கள் குழுமி இருக்க, நடுக்கூடத்தில் ஐஸ் பெட்டியினுள் தூங்குவது போல் படுக்க வைத்திருந்தனர், பார்த்து நான்கு நாள் தானே ஆகிறது, அதற்குள் இப்படியா ? என்னைப்பார்த்ததும் அம்மா, அக்கா, தங்கை எல்லோரும் கதறினார்கள், அவனது மனைவி பிரமைப்பிடித்தது போல் இருந்தார், அவனது 10 வயது மகனுக்கு இப்படி ஒரு நிகழ்வு வீட்டில் நடந்தது தெரியாதது போல் தூங்கிக் கொண்டு இருந்தான்,

ஊரில் அப்பா காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் ஓரளவு அறிமுகமானது தான், அண்ணன் சிவில் எஞ்சினியர், தம்பி சிங்கையில் இருந்து திரும்பிய பிறகு எலக்டிகரிகல் ஸ்டோர் நடத்தி வந்தான் என்ற வகையில் அஞ்சலிக்காக பெரிய கூட்டமே கூடி இருந்தது, ரொம்ப நேரம் வளர்த்தாமல் முதல் நாள் மூன்று மணிக்கு இறந்தவனை மதியம் 12 மணிக்கு இறுதிப் பயண ஏற்பாடு செய்துவிட்டோம், தனது அப்பா இனி வரமாட்டார் என்று தெரியாமல் தம்பியின் மகன் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்தான், பிறகு அவனுக்கு மொட்டை அடித்து, தண்ணீர் தூக்க வைத்து, எனது மகளும், மகனும் கூட சித்தப்பாவிற்காக தண்ணீர் குடம் சுமந்து வந்தனர்.

இறுதிப்பயணம் புறப்பட 

ஆறில் ஒண்ணு போகுதே,,,,,,,,,,,,என்ற என் தங்கையின் கதறலும்

'ஒண்ணும் தெரியாத புள்ளையை கொள்ளிப் போட கூப்பிட்டுப் போறியே' இறந்த தம்பியின் மனைவியின் கதறல், தம்பியின் சேர்ந்து எரியச் சென்ற உயிருடன் இருக்கும் அவனது மாமியார் தானமாக கொடுத்த கிட்னி ஆகியவற்றை நினைக்க மிகுந்த சோகமாக இருந்தது

*****

யாருக்கு ஒருவருடைய அருகாமையும் ஆதரவும் தொடர்ந்து தேவைப்படுதோ அவர்களை அவருடைய மரணம் பாதிக்கும், மற்றவர்களுக்கு எங்கும் நடைபெறும் சாதரண நிகழ்வு, தம்பியின் குடும்பதிற்கும், பெற்றவள் என்ற முறையில் அம்மாவிற்கு மகனின் இழப்பு, காலம் மருந்திடும், தம்பிக்கு பால் ஊற்றிய அன்றே, 'அவளுக்கு (மருமகளுக்கு) சின்ன வயசு, மறுமணம் செய்து கொடுத்துவிடலாம்; என்று என் அம்மாவே முன்மொழிந்துள்ளார்,  விதவை வாழ்வு பற்றி அம்மாவுக்கும் தெரியும், தம்பி மனைவிக்கு மறுமணம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரது விருப்பமும் என்று சொல்லி வந்தோம்.

தனிக் குடும்பம் என்று ஆகிவிட்டதால் தம்பியின் இறப்பு ஒரு இரு நாள் கடைமை என்று ஆகிவிட்டது, இறுதிப் பயண ஏற்பாடு, அதற்கு முன் தம்பிக்கான சிகிச்சைகள் எல்லாவற்றிலும் ஊரில் இருந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை செய்துவந்தனர், என் பங்குக்கு நான் குடும்பத்துடன் சென்று வந்தேன் என்பது தவிர்த்து எதையும் செய்யவில்லை,  விமான டிக்கெட் வாங்கி விமானத்தில் வந்தவர் என்ற முறையில் மரண வீட்டிலும் நமக்கு விஐபி அந்தஸ்து கொடுத்து நம்மை கவனிக்கின்றனர், வெளிநாட்டில் வசித்தால் நெருங்கிய சொந்தத்தின் சாவில் கூட நமக்கு என்று எந்த பொறுப்பும் கிடையாது, எல்லாவற்றிலும் இறங்கி, எடுத்து செய்ய வேண்டிய நாம் எல்லாவற்றிலும் ஒதுங்கி இருக்கும் படி ஆகிவிட்டதே என்று வெட்கமாகவும், வருத்தமாகத்தான் இருந்தது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக எதைத் தின்றாலும் வாந்தி, கடுமையான வயிற்றுவலி உடல் உபாதைகளில் இருந்து தம்பி நிரந்தர விடுதலை அடைந்துவிட்டான் என்று நாங்கள் அனைவருமே தேற்றிக் கொண்டோம், இறக்கும் முன்று நாட்களுக்கு முன்பு பார்த்து வந்தது எனக்கு கூடுதலான ஆறுதல்

தேவையற்ற அலைப்புகளை தடுக்க, ரொம்ப நாளாக அலைபேசி எண்ணை மாற்ற நினைத்திருந்தேன், இனிமேல் மாற்றும் எண்ணம் வராது

59 கருத்துகள்:

பொன். வாசுதேவன் சொன்னது…

ஆழ்ந்த வருத்தங்கள்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
நமது ஆழ்ந்த வருத்தங்கள்.மரணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் தவிர்க்க இயலா நிகழ்வு என்றாலும், அதனை சார்ந்தவர்கள் எதிர்கொள்வது கடினமே. எனினும் காலம் காயங்களை ஆற்றும்.

நல்லது நடக்கட்டும்.

நன்றி

மதுரை சரவணன் சொன்னது…

ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.. இறப்பு தவிர்க்க முடியாதது … ஏற்கொள்ள வேண்டும். மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.

வருண் சொன்னது…

Sorry to know about your brother, kovi! :-(

அவருக்கு வந்திருந்தது "டைப் 1 டயபெட்டிஸ்" போல தோணுது. இந்தளவுக்கு இளம் வயதில் "காம்ப்ளிகேட்" (பல உறுப்புகள் பாதிக்கப்படும்னு) ஆகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!!

நீங்க, வைத்தியம்னு என்னவெல்லாம் செய்யமுடியுமோ, எல்லாமே செய்து அவரைக் காப்பாத்த, உடல்நலனுடன் வைத்துக்கொள்ள முயன்று இருக்கீங்க.
இதுக்குமேலே வேறென்ன நம்மளால செய்ய முடியும்? :(

CS. Mohan Kumar சொன்னது…

மிக வருந்துகிறேன் ; உங்கள் குடும்பத்துக்கு இந்த துயரிலிருந்து மீண்டு வரும் தைரியம் கிடைக்கட்டும்

Cable சங்கர் சொன்னது…

ஆழ்ந்த வருத்தங்கள் தலைவரே.. இன்னைக்கு தான் சிங்கை ராம் என்னை சந்தித்த போது சொன்னார்..

இனியா சொன்னது…

Sorry and heartfelt condolences.

அமர பாரதி சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள் கோவி. தம்பியின் ஆன்மா சாந்தியடையவும் நீங்கள் சோகத்தில் இருந்து மீளவும் ஆணடவனைப் பிரார்த்திக்கிறேன். நானும் டைப் - 1 நீரிழிவு பேஷன்ட், கடந்த 26 வருடங்களாக. கணையம் பாதித்தால் வருவது தான் நீரிழிவு.

அமர பாரதி சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள் கோவி. தம்பியின் ஆன்மா சாந்தியடையவும் நீங்கள் சோகத்தில் இருந்து மீளவும் ஆணடவனைப் பிரார்த்திக்கிறேன். நானும் டைப் - 1 நீரிழிவு பேஷன்ட், கடந்த 26 வருடங்களாக. கணையம் பாதித்தால் வருவது தான் நீரிழிவு.

suvanappiriyan சொன்னது…

இள வயது மரணம் சம்பந்தப்பட்டவர்களை ரொம்பவுமே பாதிக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்!

நாமக்கல் சிபி சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்!

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்!

பனிமலர் சொன்னது…

ஆழ்ந்த வருத்தங்கள், ஈடு செய்யமுடியா இழப்பு, வருந்துகிறோம். இந்த இழப்பை தாங்க்கிக்கொள்ளும் திறனை இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு அருளுவாராக.

kamalakkannan சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்!

ஜோதிஜி சொன்னது…

என்ன எழுதுவது என்றே தெரியலை. எழுத்தில் உள்ள சோகத்தினை மீறி குடும்பத்தில் நடந்த இழப்புகளை கடந்து ............

இதுவும் கடந்து போகும்

எழுதப்பட்ட விதம் முகத்தில் அறைவதாக உள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அவர் ஆத்மா அமைதியுறட்டும்.
காலமே உங்கள் கவலையைப் போக்க வேண்டும்.
மனதைத் தேற்றுங்கள்.

பழமைபேசி சொன்னது…

RIp!!

Narmi சொன்னது…

My condolence to you and your brother's family

விழித்துக்கொள் சொன்னது…

மிக வருந்துகிறேன் ; உங்கள் குடும்பத்துக்கு இந்த துயரிலிருந்து மீண்டு வரும் தைரியம் கிடைக்கட்டும்
surendran

நம்பள்கி சொன்னது…

காலம் மட்டுமே இதற்க்கு தீர்வு; ஆம் காலம் செல்ல செல்ல மனது நிலையடையும்!

எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற மணநிலை இப்ப உங்களுக்கு இருக்கும். அதானால், நீங்கள் "எதை செய்தாலும்" அது சரியே. அது வள்ளாளார் பாதமாக இருந்தாலும் சரி!

நீங்கள் கீழே எழுதி உள்ளதை, நான் படித்து நினைத்து (put yourself in client shoes, yes I put myself...] பார்த்தபோது...

[[இறுதிப்பயணம் புறப்பட ஆறில் ஒண்ணு போகுதே,,,,,,,,,,,,என்ற என் தங்கையின் கதறலும்]]


'ஒண்ணும் தெரியாத புள்ளையை கொள்ளிப் போட கூப்பிட்டுப் போறியே' இறந்த தம்பியின் மனைவியின் கதறல், தம்பியின் சேர்ந்து எரியச் சென்ற உயிருடன் இருக்கும் அவனது மாமியார் தானமாக கொடுத்த கிட்னி ஆகியவற்றை நினைக்க மிகுந்த சோகமாக இருந்தது

இராகவன் நைஜிரியா சொன்னது…

ஆழ்ந்த வருத்தங்கள் அண்ணே. :-(

Yaathoramani.blogspot.com சொன்னது…

படித்துக் கொண்டு வரும்போதே
மனதில் தானாகத் தோன்றிய ஈரக் கசிவை
தடுக்க இயலவில்லை
ஆறில் ஒன்று போச்சே என்கிற அடிவயிற்றுக் கதறல்
என் வீட்டுக் கூடத்தில் கேட்பது போன்ற பிரமை
நான் இழந்த இழக்கக் கூடாத இழப்புகளும்
முன்னால் காட்சியாய் விரைய
மனம் கனத்துப் போனது
ஆறுதல் மொழி கூட வெறும்
சடங்காகத் தானிருக்குமெனத் தோன்றுகிறது
கால மருந்து தவிர எதுவும்
இந்தப் பெரும்காயத்தை ஆற்றுவது கடினமே



Thomas Ruban சொன்னது…

ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.அவருடைய ஆன்மா சாந்தியடையவும் உங்கள் குடும்பம் சோகத்தில் இருந்து மீளவும் ஆணடவனைப் பிரார்த்திக்கிறேன்.

VANJOOR சொன்னது…

பதிவை படித்து கொண்டு வரும்பொழுதே விவரிக்க முடியாத சோக உணர்வின் ஆழத்துக்கு சென்றுவிட்டேன்.

என்ன வார்த்தைகளால் ஆறுதல் கூறமுடியும்?

அறியாது திகைக்கிறேன்.


வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

துபாய் ராஜா சொன்னது…

அன்பு தம்பிக்கு அஞ்சலிகளும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Unknown சொன்னது…


கோவி! கண்களில் நீர் ததும்ப இம் மறுமொழியை எழுதுகிறேன் . ஆறுதல் கொள்ளுங்கள்!காலம் உங்கள் மனத்துயரத்தை மாற்றும்!

Robin சொன்னது…

May his soul rest in peace.

ராசின் சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Unknown சொன்னது…

:( என்னத்த சொல்ல ...

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கூகிள் ப்ளஸ்ஸில் செய்தியை அறிந்திருந்தாலும், உடன்பிறப்பை இழந்த வலியை மறக்க வைக்கும் அளவுக்கு ஆறுதல் வார்த்தைகள் இல்லை கண்ணன். நினைவுகளில் வாழ்ந்தபோது கூட இருந்த சந்தோஷத்தையும், இப்போது நிஜத்தில் இல்லையே என்ற ஏக்கம், வலியையும் அனுபவித்துத்தான் கடந்தாக வேண்டும்.

என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கூகிள் ப்ளஸ்ஸில் செய்தியை அறிந்திருந்தாலும், உடன்பிறப்பை இழந்த வலியை மறக்க வைக்கும் அளவுக்கு ஆறுதல் வார்த்தைகள் இல்லை கண்ணன். நினைவுகளில் வாழ்ந்தபோது கூட இருந்த சந்தோஷத்தையும், இப்போது நிஜத்தில் இல்லையே என்ற ஏக்கம், வலியையும் அனுபவித்துத்தான் கடந்தாக வேண்டும்.

என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்

பெயரில்லா சொன்னது…

மரணம் என்பது தவிர்க்க முடியாத் ஒன்று என்ற் போதும், இளமையில் மரிப்பதும், குடும்பங்களை கரை சேர்க்காத பிரிவும் கடும் துயரானவை. அதுவும் உடன் பிறந்த தம்பியை பிரிவது ஆழ்ந்த துயர் தருபவை. உங்களுக்கும் உங்களது தம்பி குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்கள். :(

யுவகிருஷ்ணா சொன்னது…

:-(

கிரி சொன்னது…

நீங்கள், டெங்கு காய்ச்சலில் இறந்தார் என்று கூறி இருந்ததால் எனக்கு இதன் முன்பு இருந்த பிரச்சனைகள் பற்றி தெரியவில்லை.வருத்தமாகத் தான் உள்ளது.. வாழ்க்கை போகிற போக்கில் போய்க்கொண்டு இருக்க வேண்டியது தான். நீங்கள் இதில் கூறி இருந்த சில விஷயங்கள் (கிட்னி etc ) படித்த பொழுது ரொம்ப கஷ்டமாக இருந்தது. கடவுள் அவர்களின் குடும்பத்தினருக்கு மன அமைதியை கொடுக்க வேண்டுகிறேன்.

சிவானந்தம் சொன்னது…

என்ன சொல்வதென்று தெரியவில்லை. உறவுகள் பல இருந்தாலும், சிலர் ரொம்பவே நெருங்கி இருப்பார்கள். அப்படிப்பட்ட உறவின் மறைவு பெரும் இழப்புதான்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

வரதராஜலு .பூ சொன்னது…

ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உங்கள் தம்பி மகனை நினைக்கும்போது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

விரைவில் இத்துயரிலிந்து மீளும் தைரியம் உங்களுக்கு கிடைக்கட்டும்.

வடுவூர் குமார் சொன்னது…

Heart felt condolences Govi.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி - சென்ற முறை 20ம் நாள் அலை பேசியில் பேசியபோதே - ஏதோ என்னவென்றோ எனப் பயந்தேன் - பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை- பல்வேறு காரணங்கள்.

எதற்கும் கலங்காத கோவியே கலங்குகிறார் எனில் - உடன் பிறந்த தம்பியின் அகால மரணம் எவ்வாறெல்லாம் இவரைப் பாதித்திருக்கும்.

பிரிந்த ஆன்மா அமைதி அடைய பிரார்த்தனைகள் - துயரப்படும் அனைத்து குடும்ப உறுப்பினர்களூக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அனுதாபங்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

வருத்தமான செய்தி....

வாரிசின் நிலையை நினைத்தால் மனம் கனமாகிறது :(

இதே போல் பத்துநாளைக்கு முன்னர் என் மாப்பிள்ளை ஒருவர் தீடிர் ஹார்ட் அட்டாக். போய்ட்டார். வாரிசு நிலையை பார்த்தால் ..:(

அன்புடன் நான் சொன்னது…

நெஞ்சை பிசைகின்ற நிகழ்வு.

snkm சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்

iTTiAM சொன்னது…

திரு. கோவி. கண்ணன்,

தேறுதல் சொல்ல தெரியவில்லை எனக்கு.

குழந்தைகளை, இழப்பின் நிழல் படாமல் நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கி தங்களின் இந்த சோகத்தினை கடக்க முயலுங்கள்.

priyamudanprabu சொன்னது…

ஆழ்ந்த வருத்தங்கள் அண்ணே. :-(

Prasad Raj சொன்னது…

கண்ணா - வருந்துகிறேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

sultangulam@blogspot.com சொன்னது…

எம் ஆழ்ந்த அனுதாபங்கள் ஜிகே.

சத்ரியன் சொன்னது…

ஆழ்ந்த அநுதாபங்கள்.
காலம் அனைத்திற்கும் மருந்திடும், கோவி.

Jack சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்.... பிரிந்து வாடும் குடும்பத்தாரை காலம் ஆறுதல் அளித்து மீட்கட்டும். :-(

Unknown சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்.வருந்துகிறேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

படிக்கும் போது மனம் நடுங்கி கண் கலங்கிவிட்டது. ஆழ்ந்த வருத்தங்கள் கண்ணன்.

Unknown சொன்னது…

என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறப்பினால் ஏற்படும் துன்பம் அவ்வளவு எளிதில் மறப்பதற்கில்லை,இதை என் அனுபவத்திலும் உணர்ந்து கொண்டேன்.

அப்பாதுரை சொன்னது…

வருந்துகிறேன் நண்பரே.

அன்பை ஒரு எண்ணுக்குள் கட்ட முடியும்..

பிரிவுகள் இயல்பானவை - சொல்வது எளிது என்று தெரிந்தாலும் சொல்கிறேன்.

உங்கள் குடும்பத்துக்கு அனுதாபங்கள். அமைதி கிடைக்கட்டும்.

அஜீம்பாஷா சொன்னது…

ஆழ்ந்த வருத்தங்கள்

Mohan சொன்னது…

ஆழ்ந்த வருத்தங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

ஆறுதல் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, உங்களைப் போன்றோரை நண்பராகப் பெற்றிருப்பது நான் வலைப்பதிவின் வழி அடைந்த மிகப் பெரிய பேறு.

எனது தம்பியின் உடல் உறுப்பு தானத்திற்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று கடைசி நேரத்தில் முயற்சி செய்தேன், ஏற்கனவே அனைத்து உறுப்புகளும் மோசமடைந்த நிலையில் அதுவும் ஏமாற்றமாகவே அமைந்தது.

ஒருவாரம், ஒருமாதம், ஒரு ஆண்டு என்று பார்க்க முடியாத நிலைகளை இனி ஆண்டுகணக்கில் நீட்டிக் கொள்ள வேண்டும், மற்றபடி தம்பி எங்களை விட்டு பிரிந்ததாக என்னால் நினைக்க முடியவில்லை.

Avargal Unmaigal சொன்னது…

இன்றுதான் இந்த செய்தியை அறிந்தேன் எனது ஆழ்ந்த வருத்தங்கள். உங்கள் குடும்பம் இந்த துயரிலிருந்து மீண்டு வர இறைவனிடம் வேண்டுகிறேன்.... வரும் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும்,,,,

Ragavachari B சொன்னது…

ரொம்ப வருத்தமான செய்தி...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

k.rahman சொன்னது…

my sincere condolences

Unknown சொன்னது…

இன்று தான் படித்தேன் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். உங்களின் குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்களை சொல்லுங்கள்

VSK சொன்னது…

எத்த‌னை வேதனைகளைத் தாங்கிக்கொண்டுநீங்கள் இந்தப் பதிவினை எழுதியிருப்பீர்கள் என நினைக்கையில் ஒரு பக்கம் மிக வேதனையாகவும், மற்றொரு பக்கம், இனம் தெரியாத ஒரு மகிழ்ச்சியும் பிறக்கிறது. நட்பை மறக்காமல் அவர்களுக்கும் தெரியப்படுத்தணுமே என்னும் ஆதங்கம் மிக நன்கே தெரிகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் என் தம்பி இறந்தபோது ஏற்பட்ட சோகத்தை அனுபவித்திருப்பதால், உங்கள் வேதனை வலியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள், கோவி. வீட்டில் அனைவரிடமும் சொல்லவும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்