பின்பற்றுபவர்கள்

13 ஜூன், 2011

படைப்புக் கொள்கை - 4

மதவாதிகளின் படைப்புக் கொள்கை பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆளுக்கு ஒரு நாள் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார்கள், அவர்கள் கூறுவதிலிருந்து உச்ச அளவாக ஒரு பத்து நாளில் படைப்பு நடந்ததாகக் ஏற்றுக் கொண்டாலும் 'எல்லாம் வல்லக் கடவுள்' நினைத்த மாத்திரத்தில் ஏதும் நிகழாதா ? அதுக்கு ஏன் இத்தனை நாள் ? என்கிற என்போன்றோரின் கேள்விகளுக்கு பதில் எதுவும் வருவதில்லை. கடவுள் கற்பனைக்கெட்டாதவர் என்று கற்பனை செய்து கொள் உனக்குள் சந்தேகங்களே வராது என்பது போல் பதிலளிக்க முனைகிறார்கள், அதாவது கடவுள் அல்லது கடவுளின் ஆற்றல் என்பது நாம் நினைப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டதாம். உலகம் இருட்டு என்பதை உணர நீ கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டாகிவிடும் என்பது போன்ற பாடங்களைத்தான் கடவுளின் ஆற்றல் பற்றி கேட்போர்களுக்கு பதிலாக வருகிறது. ஆனால் இவ்வாறு கடவுள் பற்றி நினைத்த மாதிரி கேள்வி எழுப்புவது எவ்வளவு தவறோ அது போலவே கடவுள் பற்றி அளவுக்கு மிகுதியாக அளந்துவிடுவதும் பலமடங்கு தவறு என்பதை இவர்கள் உணரமாட்டார்கள், ஏனெனில் கடவுள் பற்றிய மிகுதியான புகழ்ச்சியின் வழியாக கடவுளின் கருணை இவர்களுக்கு கிட்டும் என்றெல்லாம் நம்புகிறாகள்.

தீவிர இறை நம்பிக்கையாளர்களிடம் 'கடவுளை நிருப்பிக்க முடியாமா ?' என்றால் யாதொரு பதிலும் இல்லாதது போலவே, எந்த ஒரு உயிர் அல்லது பொருளின் மூலம் அல்லது தோற்றம் குறித்து கடவுளை நம்பாதவர்களிடம் கேள்வி எழுப்பும் போது அவர்கள் பரிணாமத்தை விடையாகச் சொல்வார்கள். இந்திய சமயங்களிலும் பரிணாம வளர்ச்சி பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, ஆனால் அறிவியலை புறக்கணிப்பது மதவளர்ச்சிக்கு பேராபத்து என்றே உணர்ந்து 'பரிணாமம்' இந்து மதம் ஏற்கிறது என்று இந்துமதவாதிகள் கூறுவது மட்டுமின்றி 'புல்லாகி பூண்டாகி' பாடல்களெல்லாம் பரிணாமம் பேசுவதாகவும். கிருஷ்ணனின் 10 அவதாரமும் கூட பரிணாமத்தை மெய்பிக்கும் கூறுகளாகும் என்பர். புல்லாகி பூண்டாகிப் பாடல்களும், தசவதாரம் இவையெல்லாம் மறுபிறவி நம்பிக்கைகளின் கூறுகளேயன்றி அவற்றிற்கும் அறிவியல் பரிணாமக் கொள்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதற்கு முற்றிலும் மாறாக ஆபிரகாமிய மதவாதிகள் பரிணாமம் என்பதே அறிவியலாளர்களின் அறிவீனக் கூற்று என்றும் இறைவன் படைக்காது 'எயிட்ஸ் கிரிமிகள்' கூட தோன்றி இருக்காது என்பர் :)

அடக்கொடுமையே அதுவும் உண்மை என்றால் இந்தந்த விலங்குளை படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும், இன்னின்ன விலங்குகளெல்லாம் உண்ணத்தக்கவை அல்ல என்று கட்டுப்பாடு விதித்திருப்பது ஏன் ? அவ்வாறு கட்டுப்பாடுவிதித்து மீறுகிறார்களா இல்லையா என்று கண்காணிப்பதற்கு பதிலாக அவற்றை படைத்திருக்காமலேயே விட்டிருக்கலாமே ? பதில் வராது ஏனெனில் இவற்றை படைத்தாக நம்பப்படும் கடவுள் இவர்களிடம் இது பற்றி (அதாவது பயனற்ற படைப்புகள்) குறித்து குறிப்பு எதையும் வைக்கவில்லை.

மதவாதிகளிடம் தொடர்ந்து கேட்கும் கேள்வியே இது தான். 'கடவுள் தான் அனைத்தையும் படைத்தான் என்றால் படைப்பிற்கான நோக்கம் என்ன ? இதற்கான விடைகளை எவரும் இதுவரை கூறியதே இல்லை. இப்போது நான் ஒரு கடவுள் ஆக இருக்கிறேன் அல்லது ஷங்கர் படம் போல் ஒரு நாள் கடவுளாகிறேன், உலகம், பிரபஞ்சம் எதுவுமே இல்லை, எனக்கு போர் அடிக்கிறது, எதையாவது செய்து என்னை ஊக்கப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன், 'எறும்புகள் உண்டாகட்டம்' என்கிறேன் எறும்புகள் உருவாகிறது, பிறகு அவற்றிற்கு கட்டுபாடு விதிக்கிறேன், அவை சொன்னபடி கேட்கவில்லை, அவற்றை மூட்டிய நெருப்பினுள் போட்டு பொசுக்குகிறேன், சில எறும்புகள் அழுகையிலும் ஆற்றமையிலும், கோபத்துடனும் 'உனக்கு வேலை இல்லை என்று எங்களை உருவாக்கி சீண்டிப்பார்க்கிறாய், நீ கொடியவன் தானே ?' இல்லை இல்லை என் பேச்சை கேட்ட எறும்புளுக்காக அரிசி மலை கட்டி வைத்திருக்கிறேன், அவை ஆனந்தமாக உண்டு வருகின்றன நான் ரொம்ப........ப நல்லவன் என்று நான் பதிலுரைத்தால் கொல்லப்படும் எறும்புகள் கொல்லப்படும் முன் இந்த தீர்ப்பை ஏற்குமா ? பொழுது போகாத பொம்முவாக பொம்மைகளை படைத்து அதை தீயில் போடுவதும்,அதில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மைகளை ஊஞ்சல் ஆட்டுவதுமாக இருந்தால் அதை ஒரு இறைச்செயலாக ஏற்றுக் கொள்ள முடியுமா ? கடவுள் குறித்தான படைப்புவாதக் கொள்ளைகள் அனைத்தும் படைப்பு கடவுளால் தோன்றியது என்கிறன ஒழிய அவற்றிற்கான காரணம் இன்னது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்த ஒரு மதப்புத்தகமும் எடுத்து இயம்பவில்லை.

சமணம் தழைத்தோங்கிய காலத்தில் நீலி எனப்படும் சமணத் துறவிக்கும், வைதிக மதவாதிக்கும் இடையில் நடந்த வாக்குவாத உரையாடலின் முடிவில்

'நட்ட நடுத்தெருவில் எவருக்கும் தெரியாமல் கிடைக்கும் மலம் தானாக தோன்றியது என்று கூறிவிடமுடியாது' என்றே முடியும்.

எக்ஸிடன்ஸ் அல்லது பொருளின் இருப்பு குறித்து அறிவியலின் கருத்து எந்த ஒரு பொருளும் தானாக உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்பதே, அவை பிரிதொரு பொருளின் மறுவடிவம் அல்லது தொடர்ச்சி என்பதே. அதாவது எந்த ஒரு பொருளையும் யாராலும் உருவாக்கிவிட முடியாது, மலைகள் சிதையும் போது மண், அவை வேறுறொரு வெப்பநிலையில் இறுகும் போது மலை.

*********

மொத்த பிரபஞ்சங்களின் தூசியும் கோள்களும், அவற்றின் ஒலி ஒளி மின் காந்த ஆற்றல்கள், சுற்றுவிசை ஆகியவை கோள்களை, பூமிகளை, நட்சத்திரங்களை, சூரியன்களை உறுவாக்கிக் கொண்டு உயிரினங்களை தோன்றவைத்து அழித்துக் கொண்டு இருக்கும், அறிவியல் கோட்பாட்டின் படி ஆற்றல்கள் அழிக்கப்படும் போது அது வேறொரு ஆற்றலாக மாறுகிறது. அவை முற்றிலும் சிதைவதோ மறைவதோ இல்லை. மனிதனின் ஒட்டுமொத்த நாகரீக வளர்ச்சி மற்றும் அறிவியல் புலன் எல்லைகள் அவற்றின் கால எல்லையை அல்லது முழுப்பிரபஞ்சம் பற்றிய அறிவை வரையறுத்துவிட முடியாது, அந்த ஆற்றாமையால் தான் இவையெல்லாம் கடவுளின் படைப்பு என்று சொல்லி திருப்தி அடைந்துவிடுகிறார்கள். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் படைப்பு என்பது எப்போதும் இல்லை ஆனால் பிரபஞ்ச பெளதீகப் பொருள்கள் அனைத்தும் என்றுமே இருப்பவையே அவற்றின் மாறுபட்ட தோற்றங்களும், அவற்றின் சிலவற்றின் உயிர்த்தன்மையும், சிந்திக்கும் ஆற்றலும், தன்னை காப்பாற்றிக் கொள்ள முனைவதும், இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலும் அவற்றின் கூறுகளே ஆகும். ஆங்கிலத்தில் எளிமையாகச் சொல்லப்போனால் Everything is exists.

நிருபனம் இல்லாத கொலைகள் கண்டிப்பாக தற்கொலை தான் என்பது போன்றே எதையும் நிருபனம் செய்யமுடியாத மதவாதிகள் பார்த்து வியப்பது மட்டுமின்றி தாம் வெறுப்பது என அனைத்தும் கடவுளின் படைப்பு என்கிறார்கள்.

பிரிதொரு பதிவில் தொடருவோம்....

முந்தைய பாகங்கள்..

முந்தைய பகுதிகள் 1, 2 மற்றும் இறைவன் படைக்கிறானா ?

எப்போதும் இடும் பின்குறிப்பு : நான் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று எங்கும் விவாதிப்பது இல்லை, ஆனால் இறைவனின் செயல்கள் இவை இவை என்று சொல்லப்படுவற்றை என்னால் கேள்வி எழுப்பாமல் இருக்கவே முடியாது, அந்த வகையில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் நான் நிராகரித்தே வருகிறேன்.

4 கருத்துகள்:

ADMIN சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

பெயரில்லா சொன்னது…

தொடருங்கள் சகோ. :)

பெயரில்லா சொன்னது…

அண்ணா நல்ல பதிவு ! பரிணாமம் குறித்து எழுத எனக்கும் ஆசை உண்டு ... ஆனால் டைம் தான் இல்லை . அதுவரைக்கும் உங்கப் பதிவைப் படிக்கின்றேன் :)

பெயரில்லா சொன்னது…

சமண மதத்தின் பிரபங்க கொள்கையைக் கொஞ்சம் படிச்சிப் பாருங்க.. எல்லா மதங்களை விடவும், அவர்கள் அந்தக் காலத்தில் அவர்கள் அறிவுக்கு எட்டியப் படி - மிக அற்புதமாக விளக்கி இருப்பார்கள். சமணம் ஒன்றே பகுத்தறிவுக்கு சற்றேக் குறையப் பொருந்திப் போகும் ஒரே மதமாகும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்