பின்பற்றுபவர்கள்

8 மே, 2012

சிந்திக்க சில உண்மைகள் !


மதம் தொடர்பான சர்சைகளுக்கு இடமளிக்காத வண்ணம் சில பதிவர்களின் சில இடுகைகளை அண்மையில் நீக்கியது தமிழ் மணம், அதன் தொடர்பில் எனது மூன்று பதிவுகள் நீக்கப்பட்டன. மதவாதச் செயலை தடுப்பதற்காக எனது மூன்று இடுகைகள் நீக்கியதில் எனக்கு மகிழ்ச்சியே. இது பற்றி நான் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

சிந்திக்க சில உண்மைகள் என்கிற பெயரில் ஒரு பதிவு நீண்ட நாள்களுக்கு முன்பிலிருந்தே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது, இதில் தி.க தலைவர் கி,வீரமணி அவர்களின் படமும், தந்தைப் பெரியாரின் படமும்  போட்டு இருப்பது அன்றி அதில் வரும் தகவல்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை நான் அந்தப் பதிவினை தகவல்களை தொடர்ந்து பார்த்துவருவதன் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்.

பெரியாருக்குப் பிறகான தி.க வின் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட பற்றும் இல்லாவிட்டாலும் ஒரு இயக்கத்தின் பெயரில் மதவெறியைப் பரப்ப அதனை வாய்ப்பாகக் கருதும் கூட்டம் தொடர்ந்து இந்திய சமய நம்பிக்கைகளையும், கிறித்துவ சமயத்தையும் மிகவும் கேவலமாக தாக்கிவருகிறது, அதில் மறந்தும் கூட இஸ்லாமின் பிற்போக்குத் தனங்கள் (குறிப்பாக இளம் வயது திருமணம் மற்றும் பலதார மணம்) ஆகியவை கண்டிக்கபடவில்லை என்பதால் இந்த தளம் இஸ்லாமியப் பதிவரால் தான் நடத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன். அது எனது ஐயமாகவோ, சந்தேகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்தப் பதிவின் சுட்டிகள் பல்வேறு இஸ்லாமியத் தளங்களில் பின்னூட்டத்தில் சுட்டியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது போன்று தொடர்ச்சியாக குறிப்பிட்ட மதத்தின் மீது அவதூறுகளை எழுதி மத ஒற்றுமை சிதைக்கிறது என்கிற அடிப்படையில் தமிழ் மணம் அந்தப் பதிவை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த பதிவை எழுதுபவர் யார் என்றே தெரியாத நிலையில் எனக்கு அந்தப் பதிவர் மீது எந்த காழ்புணர்வும் இல்லை.

பெரியாரின் கடவுள் குறித்த பொதுவான சிந்தனைகள் / முழக்கம் 'கடவுளை நம்புவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் காட்டுமிராண்டி, கடவுளை மற, மனிதனை நினை' என்பதெல்லாம் அந்தத் தளத்தில் இல்லை என்பதால் அந்தத் தளம் கடவுள் மறுப்புத் தளம் அல்ல, மாறாக அந்தத் தளத்தில் இந்து மதமும், கிறிஸ்துவ மதமும் கடுமையாக தாக்க எழுதப்படுகிறது.

சிந்திக்க சில உண்மைகள் என்கிற பதிவை படிக்கும் கிறிஸ்துவர்களுக்கு பெரியார் மற்றும் கி.வீரமணி மீது வெறுப்பு வருவதற்கு இந்தத் தளம் காரணமாக அமைகிறது என்பதால் இதன் மீதான தமிழ் மணத்தின் தடை தேவையாகப் படுகிறது.



"இந்தப் பொழப்புக்கு...என்று யாரும் காரி உமிழ்ந்தாலும் வெட்கமற்றவர்கள் திருத்திக் கொள்ளவே மாட்டார்கள்" -  இது எந்த மதத்தின் வசனம் ?

- இதையெல்லாம் எந்த இறை வேதத்திலும் தேடாதீர்கள். இறைவேதமெல்லாம் உண்மையில் நல்லது சொல்லி இருந்தால் நம்மிடையே மதவெறியர்கள் இருக்க மாட்டார்கள்.

6 மே, 2012

மனதின் முகங்கள் !

இரவு 8 மணி நல்லப் பசி லிட்டில் இந்தியா பக்கம் கோமல விலாஸ் உணவுகத்திற்குச் சென்றேன், என்ன சாப்பிடுறிங்க ? உணவகப் பணியாளர் கேட்க 'நாள் தோறும் தான் இரவு சாப்பாட்டுன்னு ஆகிப் போச்சு' இன்னிக்காவது வேற வித்யாசமாக... இந்திய உணவகத்தில் என்னத்த வித்யாசமாக, வழக்கம் போல் முதலில் இரண்டு இட்லியைச் சொல்லுவோம்' னு நினைத்து 'இரண்டு இட்லி' சொல்லிவிட்டு அமர்ந்தேன், எதிரே உள்ளவர் 'புல் மீல்ஸ்' கட்டிக் கொண்டு இருந்தார், எதிரே உட்கார்ந்து சாப்பிட்டாலும், தமிழ் தெரிந்தவர் என்றாலும் தண்ணி இல்லாத காட்டில் இருந்தால் தான் நமக்கு 'நீங்களும் தமிழா ?' ன்னு கேட்கவரும், இங்கே சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் தமிழாட்களைப் பார்க்க, பேச ஆவலாக இருப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது, எனக்கு அது போல் முன் பின் தெரியாதவர்களை விசாரிக்கும் மன நிலை வாய்ததது இல்லை. எதிரே இருப்பவர் என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்பதைப் பார்பது நாகரீகமின்மை இல்லை என்றாலும் நம் கண்ணுக்கு தொலைவில்லாத இடம் என்பதால் பார்வைகள் படுவதை நம்மால் தடுக்க முடியவில்லை, இலையில் உள்ளவற்றில் பெரும்பாலானவற்றை காலி செய்து கொண்டு இருந்தார், சாம்பார் ரவுண்ட் முடிந்து புளிக் கொழம்பை ஊற்றிப் பிசைந்து கொண்டு இருந்தார்.

எனக்கு இட்லி வந்தது, தேங்காய் சட்னி, காரச் சட்னி மற்றும் சாம்பார் உடன் 12 செமி விட்டத்தில் கொஞ்சம் சப்பையாக ஆனால் காய்ந்து போகாத சூடான இட்லி, மொளகாப்பொடி இருந்தால் நல்லா இருக்கும், எதிரே சிறிய பாட்டிலில் மேசை மீது இருந்தது, ஏற்கனவே தின்று பார்த்த அனுபவத்தில் அங்கே அதன் சுவை தெரியும் என்பதால் சட்னி, சாம்பாரிலேயே இட்லியை உருத்தெரியாமால் பிசைந்து தின்று விட்டடேன், இரண்டு இட்லியில் பசி போய்விடுமா என்ன ? அடுத்து என்ன சொல்லலாம் ? உணகப் பணியாளர் அந்தப் பக்கம் கடந்து போக, அழைத்து ஒரு 'ரவா' தோசை' என்று சொல்லிவிட்டு (படத்தில் சாதா தோசை இருக்கேன்னு கேட்காதிங்க) எதிரே கவனித்தேன், புல் மீல்ஸ் பார்டி கிட்டதட்ட இலையில் தயிர் பச்சடி தவிர்த்து எல்லாவற்றையும் முடித்துவிட்டு அடுத்து ரசத்தை குடித்துக் கொண்டு இருந்தார், எனக்கு வேறு தட்டில் வைக்கப்பட்ட தோசை சாம்பரை முற்றிலுமாக உறிஞ்சு வைக்க, உணவகப் பணியாளரை அழைத்து 'கொஞ்சம் சாம்பார்' என்று கூறி அது வரும் தற்காலிக இடைவெளியில் தோசையை சட்னியில் துவைத்துக் கொண்டு இருந்தேன், எதிரே அமர்ந்திருந்தவர், பாயாசத்தைக் காலி செய்து எழுந்து சென்றார், சாம்பார் வந்ததும் நானும் மீண்டும் எஞ்சிய தோசைக்கு சாம்பார் ஊட்டிக் கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் சற்று தொலைவில் பார்க்க, எதிரே அமர்ந்து சாப்பிட்டவர் அதே உணவகப் பணியாளரிடம் எதோ கேட்டுக் கொன்டு இருந்தார், உணவகப் பணியாளர் நான் சாப்பிடும் மேசைக்கு அருகே அவரை அழைத்து வந்து

'நீங்க கேட்டு இருக்கலாமே சார், இங்கே இவருக்கு தோசைக் கொடுக்கக் கூட டேபிளுக்கு அருகே வந்தேன், அப்பக் கூட நீங்க எதுவும் கேட்கவில்லையே' கொஞ்சம் பணிவானக் குரலில் உணவகப் பணியாளர் விளக்கிக் கொண்டு இருந்தார். அதற்கு புல் மீல்ஸ் பார்டி

'நீங்க தான் வேற எதுவும் வேண்டுமா ? என்று கேட்டு இருக்கனும், எல்லாருமே கேட்கமாட்டாங்க, எதிரே அமர்ந்து சாப்பிடுபவர்கள், இவன் சோத்தை இந்த கட்டுக் கட்டுறானேன்ன்னு நினைப்பாங்கன்னு நினைத்து கூச்சத்தால் கேட்காமலே இருந்துடுவாங்க'

என்னது பேச்சுவாக்குல நம்ம மேல பழியைப் போடுறானே இவன், என்று நினைத்தேன், 'என்ன சார் எதுக்கு என்னை இதில இழுக்கிறிங்க' ன்னு கேட்கலாம் என்று நினைத்தேன்.

அதற்குள் பணியாளர் 'நீங்க சொல்றது புரிகிறது சார், நான் இனிமே மற்றவர்களிடம் அப்படிக் கேட்கிறேன்' என்று சொல்ல புல் மீல்ஸ் பார்டி 'ஓகே ஒகே' என்று சென்றுவிட்டார்.

ஹோட்டலில் காசு கொடுத்து தானே சாப்பிடுகிறோம், ஓசியில் சாப்பிடுவது போல் ஏன் கூச்சப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், பின்னர் அதை ஏன் பெரிது படுத்த வேண்டும் ? புல் மீல்ஸ் பார்டி கூடுதல் சோறு கேட்க நினைத்தாரா ? மேலும் காய்கறி அப்பளம், சாம்பார் கேட்க நினைத்தாரா ? தெரியவில்லை, எதோ கேட்க நினைத்து தயக்கத்தினால் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் பணியாளரிடம் புலம்பிவிட்டுச் சென்றார்.

********

இரவு 8 மணி நல்லப் பசி லிட்டில் இந்தியா பக்கம் கோமல விலாஸ் உணவுகத்திற்குச் சென்றேன், காலியாக இருக்கும் டேபிளைத் தேடி அமர, என்ன சாப்பிடுறிங்க ? உணவகப் பணியாளர் கேட்க 'வீட்டுல தான் காலை இட்லி, இரவு அதே மாவில் தோசை இல்லாட்டி சப்பாத்தி, இன்னிக்கு ஒரு நாளாவது ராத்திரியில் நல்லா சாப்பிடனும், அதுவும் உணவகத்தில் நாலஞ்சு காய்கறி மற்றும் சாம்பார், காரக் குழம்பு ரசம் எல்லாம் கொடுபபங்க, பேசாமல் சாப்பாடே சொல்லிடுவோம் என்று முடிவு செய்து 'சாப்பாடு' என்று கூறினேன். வரும் இடைவெளியில் கூகுள் +, தமிழ் வெப்தளங்களில் ஓட்டிவிட ஐந்து நிமிடத்திற்குள் சாப்பாடு வாழையில்ஆவிபறக்க, இதர பரிவாரங்களுடன் வந்தது, சோறு  அளவு சாப்பாடு இல்லை, ஆனால் அளவாக எடுத்துவருவார்கள், நமக்கு போதவில்லை என்றால் கேட்கலாம், சாம்பார், ரசம், காரக் குழம்பு (சில நாட்களில் அது மோர் குழம்பு) தவிர்த்து கூட்டுப் பொறியல் மீது தான் என் நாட்டம் இருக்கும், இன்று வந்தது கத்திரிக்காய் பிரட்டல், பொதுவாகவே நான் கத்திரிக்காயை எப்படிச் செய்தாலும் வேறு வழி இல்லை என்பதைத் தவிர்த்து சாப்பிட விரும்புவதில்லை, கத்த்ரிக்காய் பிரட்டல் தவிர்த்து, புடலங்காய் கூட்டு மற்றும் சவ்சவ் கூட்டும் இருந்தது, கூடவே அப்பளம், கொஞ்சம் காரத் துவையல். நான் வாழைக்காய் பொறியல், காராக் கருணை அல்லது உருளை கிழங்கு மசாலக் கறிகளை எதிர்பார்ப்பேன், சில நாள் கிடைக்கும், சில நாள் கிடைக்காது, அன்று வந்த தொட்டுக்கைகள் அன்று எனக்கு ஏமாற்றம் தான்.

என் எதிரே காலியான இருக்கையில் ஒருவர் அமர்ந்து 'இரண்டு இட்லி' என்று சொல்லிவிட்டு காத்திருந்தார்.

கொண்டு வைத்த கவளச் சோற்றில் கொஞ்சம் ஒதுக்கி வைத்து ஒருதடவை சாம்பார் ஊற்றிச் சாப்பிடலாம், மீதம் இருப்பதை காரக் குழம்பு போட்டுச் சாப்பிடலாம், சாம்பார் ஊற்றி நன்றாக பிசைந்தேன், பட்டும் படாமல் சாம்பார் ஊற்றிச் சாப்பிடப் பிடிக்காது, நிறைய ஊற்றிச் சாபிடுவேன், அவர்கள் சிறிய பிளாஸ்டிக் கப்பில் வைத்த சாம்பார் தீர்ந்தே விட்டது, இன்னும் ஒரு தடவை சாம்பார் ஊற்றிச் சாப்பிட ஆசை இருந்தாலும், அடுத்து காரக் குழம்பு, ரசம், தயிர் வரிசைக்கட்டி கப்புகள் காத்திருக்க, காரக் குழம்பு அடுத்த இலக்காக இருந்தது, எனக்கு பிடிகாதவற்றை முதலில் தீர்க்க வேண்டும் என்பதில் பாதி கத்திரிக்காய் காலியானது.

எதிரே இருந்தவர் இட்லியை முடித்து தோசையை மென்று கொண்டு இருந்தார், நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை அவர் பார்க்கிறாரோ என்று நினைத்துக் கொண்டே அவர் என்ன என்ன சாப்பிடுகிறார் என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன்.

மீதம் இருந்த வெள்ளைச் சோற்றில் காரக் குழம்பை ஊற்றி பிசைந்தேன், நல்ல காரம் காரக் குழம்புக்கு தோதான துவையல் ஏற்கனவே தின்று தீர்ந்து போய் இருந்தது, உணவகப் பணியாளர் அருகில் இருக்கிறாரா என்று பார்க்க சற்று தொலைவில் வேறொரு மேசைக்கு பறிமாறிக் கொண்டு இருந்தார், எனக்கு பிடிக்குதோ, இல்லையோ உணவுப் பொருள்களை வீணாக்கக் கூடாது என்ற கொள்கையில் மீதம் இருந்த கத்திரிக்காய் பொரியலும் தீர்ந்தது, சோறும் கிட்டதட்ட முடிய, ரசம் அல்லது தயிறுக்காக இன்னும் கொஞ்சம் சோறு இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்து கேட்க நினைத்தேன், 'சோத்தைக் கொண்டு வந்து வைத்தப் பிறகு சர்வர் எட்டிக் கூடப் பார்க்கலையே, எதுவும் வேண்டுமா ? என்று கூட கேட்கவில்லையே, இது தான் வாடிக்கையாளர் சேவையா ? இவர்களுக்கெல்லாம் பணம் வந்தால் போதும், மறுபடியும் கேட்டு சாப்பிடும் அளவுக்கு இந்த சாப்பாட்டில் பெரிய விசேசம் எதுவும் இல்லை என்றெல்லாம் நினைத்து பின்னர் ஒருவாறு திருப்தி பட்டுக் கொண்டு, காத்திருந்த ரசத்தை அப்படியே குடித்தேன், பின்னர் பாயாசம். ஒரளவு வயிறு நிறைந்திருந்தாலும் எதோ குறைவாதாக நினைத்து கை கழுவச் சென்றேன்.

கை கழுவிவிட்டு பணம் செலுத்துமிடம் அருகே வர எனக்கு உணவு கொண்டு வந்த பணியாளர் பில்லை நீட்டினார், அவரிடம்  'நீங்களெல்லாம் மீல்ஸ் சாப்பிடுகிறவர் பக்கம் கொண்டு வந்து வைத்த பிறகு வரவே மாட்டிங்களா ?, எதுவும் வேண்டுமா என்று கேட்கவே மாட்டிங்களா ?' என்றேன், அவர் கொஞ்சம் மிரட்சியுடன், அருகே அவரது உணவக மேனேஜர் நிற்பதால் சற்று பயந்து என்னை நான் சாப்பிட்ட மேசை அருகே அழைத்துச் சென்று.

'நீங்க கேட்டு இருக்கலாமே சார், இங்கே இவருக்கு தோசைக் கொடுக்கக் கூட டேபிளுக்கு அருகே வந்தேன், அப்பக் கூட நீங்க எதுவும் கேட்கவில்லையே' கொஞ்சம் பணிவானக் குரலில் உணவகப் பணியாளர் விளக்கிக் கொண்டு இருந்தார். அதற்கு நான்,

'நீங்க தான் வேற எதுவும் வேண்டுமா ? என்று கேட்டி இருக்கனும், எல்லாருமே கேட்கமாட்டாங்க, எதிரே அமர்ந்து சாப்பிடுபவர்கள், இவன் சோத்தை இந்த கட்டுக் கட்டுறானேன்ன்னு நினைப்பாங்கன்னு நினைத்து கூச்சத்தால் கேட்காமலே இருந்துடுவாங்க'

அதற்குள் பணியாளர் 'நீங்க சொல்றது புரிகிறது சார், நான் இனிமே மற்றவர்களிடம் அப்படிக் கேட்கிறேன்' என்று சொல்ல 'ஓகே ஒகே' என்று சொல்லி வந்துவிட்டேன்.

நான் எதிரே உள்ளவங்க தப்பா நினைப்பாங்க என்று சொன்னதை எனக்கு எதிரே இருந்தவர் தன்னைத் தான் சொல்லவதாக நினைத்திருப்பாரோ ? அவர் கேட்டு இருந்தால் நான் உங்களைச் சொல்லவில்லை சார் ஒரு உதாரணத்திற்கு பொதுவாகச் சொன்னேன் என்று சொல்லி இருப்பேன்.

இருந்தாலும் அடுத்து மூளை வேறு ஒன்றைப் பற்றி சிந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் வரை 'வாடிக்கையாளர் சேவை என்பதில் உணவகங்கள் பணியாளர்களுக்கு நிறைய பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கிறது, இப்படி நடந்து கொண்டு உணவுத் தொழிலாக இருப்பதை உணவுச் சேவை என்று அவர்களும் வெளியே பெருமையாகச் சொல்ல ஒன்றும் இல்லை, நாமும் அதை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்கிற சிந்தனை ஓட்டம் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது.

*******

ஒன்றைப் பற்றிய நம் எண்ணங்களில் ஒத்தக் கருத்தும் எதிர்கருத்தும் தோன்றுவது நாம் அதனை எதிர்நோக்கும் சூழல்களால் ஏற்படுகிறது,சூழலே அதை முடிவு செய்கிறது. நான் இட்லி / தோசை சாப்பிடேனா ? சாப்பாடு சாப்பிட்டேனா ? எது சரியான செயல் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டாம்,. விருமாண்டிப் படத்தில் இருவேறுபட்ட மனித எண்ணங்களில் படம் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும், அப்படி ஒருவகையான வாசிப்பு அனுபவமாக மட்டும் கொள்ளவும்.

4 மே, 2012

மதுரைக்கு நித்தி, காஞ்சிக்கு தேவ நாதன் ?

பாரம்பர்ய மிக்க சைவ மடத்தில் நித்தியானந்தன் ஆதீனமா ? ஐயோகோ என்று ஒப்பாறி வைக்கிறார்கள், இது வஹாபி மதவாத பதிவர்கள் இல்லை, தமிழ் இந்து தளத்தினர். இரண்டிற்கும் வேறுபாடு ஓநாய் ஆட்டின் மீது காட்டும் அக்கரை மற்றும் காலில் அப்பி இருக்கும் நரகலை கழுவாமல் அடுத்தவன் காலுறை (சாக்ஸ்) நாறுது என்று சொல்வதும் போன்றது தான்.

"ஒரு தனியார் அல்லது அரசாங்க அலுவலகம் இருக்கிறது. அதில் பணிபுரியும் அதிகாரி அல்லது ஊழியர் மீது குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது. அப்போது அந்த நிறுவனம் அல்லது அலுவலகம் என்ன செய்கிறது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறது. அந்த விசாரணை முடிந்து அவர் மீது குற்றம் இல்லை நிரபராதி என்று முடிவாகும் வரை அவரை இடைக்கால பணி நீக்கம் செய்து வைக்கின்றனர். குற்றம் சுமத்திய பிறகு தான் அந்த குற்றத்தைச் செய்யவில்லை என்று அசைக்கமுடியாத ஆதாரங்களைக் காட்டி அதிலிருந்து வெளிவருவதுதான் சரியான வழி. குற்றச்சாட்டுக்கு ஆளான எவரும் முதலில் சொல்வது நான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதுதான். ஆனால் குற்றம் சாட்டுபவர்கள் சான்றுகளைக் காட்டி குற்றத்தை நிரூபிப்பாரானால் குற்றம் உறுதியாகும். அப்படி அவர் குற்றம் செய்யாதவர் என்று விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது அந்த கறை படிந்துதான் இருக்கும். நீதிமன்றமும், பொதுமக்களும் அவர் குற்றம் செய்யவில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் தர்மம் என்றாலும், மக்கள் மனத்தில் ஒரு நெருடல் இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னார் இன்ன குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஆச்சே, இவர் இந்த பெரும் பதவியை வகிக்கலாமா என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும். இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் தோன்றுவது இது முதன்முறை இல்லை. இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது." - தமிழ் இந்து.

இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது - என்று இவர்கள் காஞ்சி மட கசமுசாக்களைச் சொல்கிறார்களா ? அல்லது நித்தியின் கசமுசாக்கள் இன்னும் நீர்த்துப் போகமல் அதாவது அவை வதந்தி என்ற நிலையை அடையாமல் இருக்கிறது என்று சொல்ல வருகிறார்களா ? ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை காஞ்சி மடம் பற்றிச் சொல்ல விரும்பினால் அதை நேரிடையாகச் சொல்லி இருக்க வேண்டியது தானே ? இல்லை நித்தியைத் தான் சொல்கிறார்கள் என்றால் காஞ்சி மடம் பற்றி பொத்திக் கொண்டு இருப்பது ஏன் ? நித்தியாவது காமம் கடந்த சாமியார் என்று பரப்பி திருமணம் ஆனப் பெண்ணுடன் காம லீலைகளில் ஈடுபட்டான் என்ற குற்றச் சாட்டு இருந்தாலும், நித்தியின் மீது கொலைக் குற்றச் சாட்டு எதுவும் பதியப்படாத நிலையில், கொலைக் குற்றச் சாட்டில் வாய்தா வாங்கி, நீதிபதியையே வளைக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டில் காஞ்சி சுப்புரமணி குப்புறக்கிடப்பதை இதே ரீதியில் கண்டிக்காமல் நித்தி தேர்வை குறைச் சொல்ல இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ? காஞ்சி மடத் தலைவர் விதவையைக் கூட விட்டுவைக்காதவர் என்கிற குற்றச் சாட்டு மக்கள் மனதில் பதிந்திருக்கும் போது அது குறித்து எதுவும் பேசாத இவர்கள் நித்தி பற்றி கட்டுரை எழுதுவதன் உள்நோக்கம் இந்து மத நன்மையா ?

தவிர சட்டமன்றத்தினுள் ஆபாசப் படம் பார்த்தார்கள் என்கிற சர்சைகளில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சிக்கி நாறிப் போய் இருக்கும் போது மதுரை ஆதினத்திற்கு யார் வந்தால் இவர்களுக்கு என்ன ? இந்திரன் ரிஷி பத்தினிகளை மாறுவேடம் கொண்டு புணர்ந்தான் என்பது போன்ற இந்து சமயங்களில் பல்வேறு பாலியல் குற்றச் சாட்டுகள் பண்பாட்டு தொன்மக் கதைகளாக காலம் காலமாக இருந்துவரும் போது நித்தி மட்டுமே முதன் முறை சிக்கி இருப்பது போன்றும் இதை கண்டிக்கும் தொணியில் எழுதுவதற்கு இவர்களுக்கு இருக்கும் அருகதை என்ன ? இந்திரனை இன்னும் தெய்வமாக வழிபடுபவர்களுக்கு நித்தியின் சரசம் தகாத செயலாக இருப்பதாக நினைப்பது முரண்பாடாக இருக்கிறது. இவர்கள் தெய்வ நிலையில் வைத்திருக்கும் இந்திரனே சபலக் கேசாகத்தான் காட்டப்படும் போது தான் சொக்கிப் போய் இருந்த ஒரு நடிகை தனக்கு சேவகம் செய்ய வந்த போது நித்தி உணர்ச்சிவசப்பட்டான்  என்பது என்ன நடக்கக் கூடாதா நிகழ்வா ? 

காரணம் ஒன்று தான், காஞ்சி மடம் பார்பனர் தலைமை எனவே அங்கு எது நடந்தாலும் தற்காக்க வேண்டும், பூசி மெழுக வேண்டும், முடியாவிட்டால் மவுனாமாக இருக்க வேண்டும், நித்தி ஒரு சூத்திர சாமியார், சூத்திரன் தப்பு செய்தால் அவனுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும், பதவி கொடுக்கக் கூடாது. இதைத் தவிர இவர்கள் வேறு என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படியும் இல்லை என்றால் பார்பன மேலான்மை ஓங்கும் மதுரை மீனாட்சிக் கோவிலை ஆதினம் வசம் கொண்டுவரும் பொறுப்பு நித்தியிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஏற்பட்ட பதை பதைப்பா ? அவன்கிட்ட இருக்கும் பணத்திற்கு செய்தாலும் செய்வான் என்று நினைத்து அஞ்சுகிறார்களோ.

இவர்களுக்கு அக்கரை இருந்தால் ஏற்கனவே வழக்குகளில் சிக்கி இருக்கும் காஞ்சி மடத்தலைவர்களை நித்திக்கு இவர்கள் சொல்லி இருக்கும் பரிந்துரைகளைப் போலவே சொல்லி ஓரம் கட்டிவிட்டு அதன் தலைமைக்கு தேவநாதனை கொண்டுவரலாம், தேவனாதனை இன்னும் குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டது போல் தெரியவில்லை, நித்தி தனக்கு சொன்னது போல் தேவநாதனின் விடியோக்கள் கிறிஸ்துவ மிசனறிகளில் கிராப்பிக்ஸ் வேலை என்று தேவநாதனனுக்கு ஆதரவாக இருக்கலாம், தேவநாதனும் புனிதம் அடைந்துவிடுவான், ஒன்று தான் இடிக்கிறது, காஞ்சி மடத்திற்கு பிரம்மச்சாரிகள் தான் வாரிசாக வரமுடியும். அப்பறம் அப்படி இல்ல்லாமல் இருப்பது வேற. தேவநாதன் தற்போது வாய்ப்புகளின்றி பிரம்மச்சாரியாகத்தான் இருப்பான் கூடவே பிறப்பால் அவர்கள் பாஷையில் பிராமணன், வேறென்ன தகுதி வேண்டும் ? ஒரே கல்லில் இரண்டு மாங்காய், காஞ்சி மடத்தலைவர்கள் மானமிக்கவர்கள் குற்றச் சாட்டுகள் நீர்த்துப் போகும் வரை பதவியில் நீடிக்க மாட்டார்கள் தவிர தேவனாதனின் தவறுகளையும் மறைத்துவிடலாம். செய்வார்களா ?

3 மே, 2012

இவர்களால் மட்டும் எப்படி ? எல்லாம் (ஏக) இறைவனின் ஆசி !

நான் கடந்த 4 - 5 மாதங்களாக வலைப்பதிவுகளை குறிப்பாக தமிழ்மணம் திரட்டியில் வரும் வலைப்பதிவுகளைப் பார்க்க ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது.

உலகத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல அமைதியான மார்க்கம் வாஹபிய மார்க்கம் தான். வஹாபியர்களின் சுறுசுறுப்பும், ஒற்றுமையும், இறை அச்சமும், இறைப் பற்றும், இறைப் பறைச்சாற்றலுக்கும் முன் ஒரு பய மார்த்தட்ட முடியாது. அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் என்ன என்ன நான் கேள்விபட்ட வரையில் அவர்களது செயல் திறன் சிலிர்க்க வைக்கிறது, ஒற்றுமையாக ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதுவதாகட்டும், அதில் கள்ள ஓட்டோ நல்ல ஓட்டோ ( மற்றவர்கள் ) போட்டு குத்தாது தற்காத்து தாமே ஓட்டுகளைப் போட்டு கண்ணும் கருத்துமாக குத்தி மகுடம் ஏற்றுவதாகட்டும் வியக்க வைக்கிறார்கள், சிலிர்க்க வைக்கிறார்கள். இதைப் படித்து வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரிந்தால் உங்களுக்கு வாசிப்பு அனுபவமே இல்லை என்றே சொல்வேன். இவர்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இன்றைய உலகத்தில்  இவர்களது வஹாபிய மார்க்கம் தான் வேகமாக வளர்க்கிறது, தொடர்ந்து இவர்கள் மகுடம் ஏற்றும் பதிவுகள் அதைத்தான் சொல்கின்றன. உங்களால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில் சிலை வணங்கி உங்களுக்கு ஏக இறைவனின் ஆதரவு இல்லை, நீங்கள் செய்வது இறைச் சேவையும் இல்லை. இவர்களால் மட்டும் இது எப்படி சாத்தியம்  ? ஆச்சர்யபட்டீர்களா ? நானும் வியப்படைந்தேன் ஏக இறைவனின் ஆசி இல்லாமல் இவர்களால் இவ்வளவு ஒற்றுமையாக செயல்படமுடியாது, இதை மறுப்பவர்கள் இந்தப் பதிவுக்கு நெகட்டிவ் வாக்குப் போடலாம். 






Add caption
Add caption

Add caption


Add caption



(யாராவது வஹாபி நண்பர்கள் பெயர் விட்டிருந்தால் மன்னிக்கவும், எனக்கு போதிய நேரமின்மையால் உங்கள் அத்தனை பேரின் மகுடங்களை ஸ்கீர்ன் ஷாட் எடுக்க முடியவில்லை, இருந்தாலும் 30 நாளைக்கு 25 பதிவுகளுக்கு மேல் உங்களது தான் மகுடம் சூட்டியது என்பதை நான் சாட்சியாகவும், வாழ்த்தாகவும் தெரிவித்துக் கொள்கிறேன், ஆமினா போல் 55 வாக்குகளை ஒருத்தனும் இதுவரை வாங்கவில்லை)

சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடுவதைத் தெரிந்ததால் தான் என்னவோ, இது போல் இந்தியாவில் ஓடினால் இந்தியா எப்படி இருக்கும், கூடவே அல்லாவின் ஆட்சி நடந்தால் எப்படி இருக்கும் ? நம் வாஞ்ஜையுடன் வாஞ்சூர் ஐயாவைக் கேளுங்கள், கேடுகெட்ட இந்தியா, அசிங்கப் பிடித்த இந்தியா, நாகரீகமற்ற இந்தியா எப்படி இருக்கும்? இது பற்றி இதுவரை ஒரு 10 பதிவாக எழுதி இருப்பார்,. இவருக்கு இருக்கும் தேசப்பற்று தான் என்னை சிந்திக்க வைக்கிறது, இறைவன் நாடி இந்தியாவில் இஸ்லாமிய வஹாபிய ஆட்சி ஏற்படும் போது நம் வாஞ்சூர் ஐயாவின் இந்தியாவின் மீதான வருத்தமெல்லாம் நீங்கி இருக்கும்.
(வாஞ்சூர் ஐயாவின் விடா முயற்சிக்கு என் வாழ்த்துகள், இந்த காஃபீரின் வாழ்த்து உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெரியும், இருந்தாலும் என் திருப்திக்காக வாழ்த்துகிறேன், எங்காளுங்க சாகுற வயதானால் (தான்) சங்கரா சங்கரான்னு சொல்லுவாங்க, ஆனா ஒருத்தரும் உங்களைப் போல் இறைச் சேவை செய்யமாட்டார்)

ஒருவனுக்கு முக்கியத் தேவை நாட்டுப் பற்றா ? இறைப் பற்றா ? இதில் என்ன சந்தேகம், இறைவனின் படைப்பாற்றலை ஒப்பிட நாடு என்பதே அற்பம், இதன் மீது பற்று வைப்பதைக் காட்டிலும் இறைப் பற்று எவ்வளவோ மேல், நாட்டு பற்று 'நாம் சிட்டிசன் ஆப் வேர்ல்ட்' ஆக இருக்கும் வரை தான், அதன் பிறகு மறுமை இந்த நாடு எப்படிப் போனால் என்ன ? இறைப் பற்றில் இளைப்பாருங்கள், அதைத் தான் நம் வாஞ்சூர் ஐயா 'இந்தியாவின் அவலங்கள் இவை' என்று தோல் உறித்துக் காட்டுகிறார். மார்க்கத் தடையில்லை என்றால் இந்தியாவில் பிறந்ததற்காக உயிரை விட்டு இருப்பார். சிந்திக்க வேண்டாமா மனிதர்களே, அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவலங்கள் நிறைந்த நாட்டில் ஒரு வஹாபியாக பிறந்தது மட்டுமே, அவருக்கு ஜென்மங்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் நீங்கள் அடுத்த பிறவியில் அரேபியாவில் பிறக்கவும் என்று என்னால் வாழ்த்தவும் முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு இந்தியா மீது இருக்கும் வெறுப்பான பற்றிற்கு என் வாழ்த்துகள், உங்களைப் போல் குடிமகனைப் பெற இந்தியா தான் தவம் செய்திருக்க வேண்டும். அரேபிய அவலங்கள் என்று எவரேனும் எதிர்பதிவு போட்டு படம் போட்டால் நம்பாதீர்கள், நாட்டில் கிராபிக்ஸ் தொழில் நுட்பம் தெரிந்த நயவஞ்சகர்கள் நிறைய உண்டு, அவர்கள் உங்களை காழ்புணர்வால் தூற்றுவதற்கும் இட்டுக் கட்டிய படங்களைக் காட்டக் கூடும்.

யா அல்லா, இந்தியாவில் உன் நல்ல ஆட்சியை நயவஞ்சக வெள்ளையர்கள் களைத்துவிட்டார்கள் மீண்டும் அது ஏற்படுமா ? ஏற்படும் என்கிறார் நண்பர் சுவனப்பிரியன் இந்தியாவில் அவருடைய மார்க்கம் வேகமாக வளர்ந்துவருகிறதாம். எல்லாம்..... எல்லாம் வல்ல அல்லாவின் ஆ(ட்)சி நாம என்ன செய்ய ? நானும் அவருடைய மார்க்கத்திற்கு திரும்ப வேண்டுமாம், மார்க்க சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டுமாம், தீர்ப்பு நாளில் நிற்க வைத்து அல்லா கேள்வி கேட்கும் பொழுது சுவனப் பிரியன் எனக்கு ஒழுங்காக புரியும் படிச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவருக்கு கிடைப்பதில் எண்ணிக்கை குறையுமாம். எல்லாம் சரி தான் ஆனால் எனக்கு குபீர்னு செண்ட் அடித்துக் கொள்பவர்களுடன், பலநாள் மழிக்காத தாடி உள்ளவர்களுடன் சொர்கம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லையே., மயக்கமாகி சொர்கத்தில் கிடப்பதைவிட அல்லாவின் தண்டனையை ஏற்று சுவனப் பிரியன் நல்லா தான் விளக்கினார் நான் தான் வெளங்கிக் கொள்ளவில்லை, நம்பவில்லை என்று இறைவனிடம் கூறி அவருக்கு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நகரம் செல்ல இருக்கிறேன்.

இதை யாரும் நக்கல் பதிவாகக் கொள்ளவேண்டாம்.

***********

தமிழ்மண மகுடத்தை கைப்பற்றுவதில் காஃபிர்கள் தோல்வி அடைந்துவிட்டனர், ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதற்கு தான் நான் இங்கே சாட்சிகளை வைத்துள்ளேன்.  பதிவை மகுடம் ஏற்றுவது எவ்வளவு கடினம் தெரியுமா ? கள்ள ஓட்டைப் போட்டு கீழே தள்ள காஃபிர் கும்பல் சதி தீட்டும், இதையும் மீறி இம்புட்டு பேர் நாளொரு மேனியும் பொழுதெருவண்ணமும் மகுடம் ஏற்றுவதைப் பார்க்க அவங்க ஒழைப்பு எனக்கு பிடிச்சிருக்கு.  இதை நான் மனதில் கொள்ளும் போது இதே வேலையாக இவர்கள் இருப்பதால் தொழுகையை தவறி இறைதண்டனைக்கு ஆளாகிவிடுவார்களோ, வேலையை இழந்துவிடுவார்களோ என்று நானும் அச்சப்படுகிறேன், ஆகவே நண்பர்களே நீங்கள் வேண்டுகோள் வைத்தால் தமிழ்மணம் மகுடம் பகுதியை வஹாபிய மகுடம் என்று மாற்றி அவர்களது பதிவு ஒவ்வொன்றாய் மணிக்கு ஒரு முறை மாற்றி மாற்றி காட்டும், அவர்களுக்கு தேடித் தேடி வாக்குப் போடும் நேரமும் மிச்சம், தொழுகையை ஒழுங்காக தொழுது இறைவனின் அன்பையும் மறுமை வாழ்வில் மேன்மையும் பெறுவார்கள். 

தமிழ் மணம் திரட்டிக்கு பணிவான வேண்டுகோள் 'தமிழ்மணம் மகுடம்' என்பதை 'வஹாபிய மகுடம்' என்று பெயர் மாற்றி எங்களது அன்பு வஹாபிய நண்பர்களுக்கு உதவுங்கள், சக பதிவர்கள் நீங்கள் எந்த ஒரு பிற பதிவுக்கும் வாக்கு செலுத்தி வஹாபியர்களின் இறைச் சேவையை நிந்தித்து இறை தண்டனை[ப் பெற வேண்டாம்.

இறைவன் மிகப் பெரியவன், மகுடம் ரொம்ப ரொம்ப சிறுசு. ஆகாவே வஹாப்பி அல்லாத பதிவர்கள் தமிழ்மண மகுடத்தை வஹாப்பிய பதிவர்களுக்கே விட்டுக் கொடுங்கள் / பெயர் மாற்ற பரிந்துரை செய்யுங்கள்.

இன்ஷா அல்லா, மாஷா அல்லா !

இந்தியாவில் நல்லாட்சி ஏற்படும் முன் இந்த தமிழ்மணத்தை வஹாபிய மணமாக்கிக் நல் அத்தாட்சி வைத்துவிட்டாய். நீயே மிகப் பெரியவன்.

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன் 3:54

ஏக இறைவனின் ஆசி பெற்றவர்களிடம், அவன் புகழ் பாடுபவர்களிடம் மோதினால் தோல்வி என்று நன்கு உணர்ந்து கொண்டேன், இனி அவர்கள் என்ன எழுதினாலும் (இறை நாடினால் அன்றி) இனி இது குறித்து எதுவுமே சொல்வதாக இல்லை.

2 மே, 2012

சுவனப்பிரியன் சுவனாநந்தாவாக மாற இருந்தாரா ?

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் நித்தியா நந்தாவால் இந்து மதம் பாழ்பட்டுவிட்டது இனி என்ன செய்யப் போகிறீர்கள் இந்து நண்பர்களே ? என்ற கேள்வி கேட்டு என்னையும் இன்னும் சிலரையும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதில் சென்றப் பதிவில் சொல்லியாகிவிட்டது, இந்தப் பதிவில் அதையே பேச ஒன்றும் இல்லை, இருந்தாலும் சுவனப்பிரியரின் அந்த ஆதங்கத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நித்தியாநந்தாவின் கடந்த கால ஆன்மிக வாழ்க்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரைத்தான் ஒரே இந்து நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக் கொண்டும் தன்னையும் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் பக்தராக இணைத்துக் கொண்டு தன் பெயரை சுவனாநந்தா என்று மாற்றிக் கொள்ள இருந்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது, இடையில் ரஞ்சிதா - நித்தியாநந்தா கசமுசா நடந்த பிறகு தனது ஒரே நம்பிக்கையும் வீழ்ந்துவிட தனது கவனத்தை வஹாபிய பிரச்சாரங்களில் சுவனப்பிரியன் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடும், பின்னர் நித்தி போனால் சுத்தி என்று மதுரை ஆதினத்தின் பக்கம் சுவனம் கவனம் திருப்பி இருந்த வேளையில் தான் நித்தி அங்கும் நுழைய இந்து மதம் முற்றிலும் சீரழிந்துவிட்டது இனி ஒருவராலும் அதனை சீர்படுத்த முடியாது என்றே வெகுண்டெழுந்திருக்கிறார், இவரே இந்து மதத்திற்கு இறுதி இறைத்தூதர் ஆகி இருக்கலாம். அதைவிடுத்து பின்ன என்ன சார் ? அவர் அன்றாடம் வஹாப்பிய மார்க்கத்தில் வடிவது தேன் என்றும் பிற மதங்களில் வடிவது வேப்பெண்ணை என்றே பிரச்சாரம் செய்த வேளையில் வேப்பெண்ணையில் எலிப்புளுக்கை இருந்தால், எருக்கம்பால் கலந்திருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று அவர் போய் இருக்க வேண்டியது தானே ? எதற்கு இவருக்கு அப்படி ஒரு அக்கரை இருந்திருக்க வேண்டும், ஒரு வேளை சுவனாநந்தா ஆக இருந்த முயற்சிச் தோற்றதால் எழுந்த ஆற்றாமை, கோபம், வெறுப்பு ஆகியவை தான் அவரை அவ்வாறு எழுது வைத்தது என்று கொள்ளலாமா ?

சென்ற பதிவில் நான் கேட்டிருந்த எந்த ஒரு கேள்விக்கும் அவரால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை, ஜைனைப் திருமணம் உலக நடைமுறைக்கு எதிராக இருந்ததால் தானே அல்லாவால் அந்தத் திருமணத்தை தற்காத்து குரான் வசனாமாகப் பேச முடிந்தது என்று கேட்டால் அவரிடம் பதிலே இல்லை, மாற்றான் மனைவியை பெண்டாள்வதே மாபெரும் குற்றம் என்பதை மையக் கருத்தாக வைத்து சம்பூர்ண இராமயணம் முதல் கம்பராமயணம் வரை இங்கே படைக்கப்பட்டு அவற்றை (மாற்றன் மனைவியை கவர்வது) குற்றமாக பார்க்கும் எங்கள் சமூகத்திற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று கேள்வியை முன் வைத்ததற்கும் பதில் சொல்லாமல் தசரதன் அறுபதாயிரம் மனைவியைக் கட்டவில்லையா ? அதை ஒப்பிட எங்கள் சமயத் தலைவர் செய்தது அற்பம் சொற்பம் என்று தொடர்பற்று பதில் சொல்லி இருக்கிறார். மாற்றான் அல்லது மகனுடைய மனைவியை தாரமாக்கிக் கொள்வதும் ? பல தார திருமணம் ஒன்றா ? தவிர தறுதலை அப்பன் தசரதனுக்கு மகன் அவ்வாறு இல்லை என்று முரண்பட்ட வேறுபட்ட வழியைக் காட்டுவது தானே இராமயணம், நான் இங்கே இராமனின் புகழ்பாடவோ இராமயணத்தை இந்திய நம்பிக்கைக் குரிய வேதம் என்று முன்னிலைப் படுத்தவோ நான் இதைக் கூறவில்லை, இராமயணத்தில் எனக்கும் பல விமர்சனங்கள் உள்ளன. தசரதன் 60 ஆயிரம் மனைவிகளை உடையவன் என்பதால் இங்கே யாரும் அவனைப் போற்றுவதும் இல்லை.

இளம் வயது திருமணங்கள் பிற சமூகங்களில் திருட்டுத்தனமாக நடக்கிறது என்று நாம் ஒப்புக் கொண்டாலும் உங்கள் மதத்தில் இன்றும் அவ்வாறு நடப்பதை தடுக்கும் சரியத் சட்டம் எதுவும் இல்லையே ? உங்கள் மத வழிகாட்டல் காலத்திற்கும் பொருத்தமானது என்று எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள், அவற்றை எதிர்க்கும் சட்டங்களையும் உங்களவர்கள் எதிர்க்கிறார்களே என்று கேட்டால் எந்த பதிலும் இல்லை. இவர் அபத்தமாக சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அவர்களுக்கு 6 வயதில் திருமணம் செய்து ஒருவருக்கு சொந்தமாக்குவது தான் நல்வழி என்று எங்கள் மதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்திருக்கிறது, அதைப் பின்பற்றினால் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் தொடராது என்று கூறாமல் விட்டது நமக்கு ஆறுதல்.

திரு சுவனப்பிரியன் தொடர்ந்து இஸ்லாத்தில் சாதி இல்லை என்று பிரச்சாரம் செய்யவும் இந்திய சமயங்களை தூற்றவும் பல்வேறு நாளிதழ்களில் இடம் பெறும் சாதி கலவரம் குறித்து எடுத்துப் போட்டு கருத்துரைக்கிறார், பகவத் கீதையைப் போலவே கோத்திரங்களையும் மனிதப் பிரிவுகளையும் படைத்ததாகப் குரானில் (அல்லா) பறைசாற்றுவது வேறு தகவல், தவிர இவர்களது சியா - சுன்னி வகுப்பு / இன வாதக் கலவரங்களும் அதன் பொருட்டு நடக்கும் அன்றாட மசூதி குண்டுவெடிப்புகளும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நாளிதழ்களில் செய்தி ஆகிறது, இது குறித்துக் கேட்டால் இஸ்லாமியத் தவறு இஸ்லாத்தின் தவறு இல்லை என்றே கூறுவார். பின்பு இஸ்லாமிய சட்டங்கள் எவருக்காக எழுதப்பட்டது ? யார் பின்பற்றுகிறார்கள் என்று கேட்டால் பதிலும் வராது, யாரும் பயன்படுத்தாத / நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று நல்லத் திட்டம் என்று கூறினால் அது திட்டம் என்ற அளவில் மட்டுமே, அதைப் பயன்படுத்தி யாரும் பயன்பெற்றிருந்தால் அவற்றைப் பற்றி எதேனும் புகழ்ச்சியாகக் கூற முடியும். தூரத்து பச்சை பார்க்க அழகாக இருக்கும், அழகு என்ற அளவில் அதை ரசிகலாம், ஆனால் நுகர முடியாது, அது போன்றதே இவர்கள் புகழ்ந்து பேசும் சட்டங்கள் யாவும், அவர்களே அதை மதித்து நடக்காத போது அது குறித்து இவர்கள் பிரச்சாரம் செய்வதால் ஏதேனும் பலன் உண்டா ?

  • 1) ஷேக்
  • 2) சையது
  • 3) தக்னி முஸ்லிம்
  • 4) அன்சார்
  • 5) தூதுகோலா
  • 6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
  • 7) மாப்பிள்ளா
என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(நன்றி அஸ்மா)

இந்திய சாதிகள் தலித்துகளை மிகவும் தாழ்வாக நடத்துகிறார்கள் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை தான். அவர்கள் இஸ்லாமுக்கு மாறி ஒன்றும் மேம்படவில்லை, என்பதை ரசூல் போன்றவர்கள் எழுதியுள்ளனர். ஏழைக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் எந்த மதமும் இறங்காது, மாறாக இந்திய சாதிகளில் பார்பனர்களை ஓரங்கட்டி பல சாதிகளும் வளர்ந்துள்ளன, ஒரு வன்னியனிடமோ, நாடாரிடமோ சென்று நீங்கள் பார்பனரைவிட தாழ்ந்தவரா ? என்று கேட்டால் செருப்பைக் காட்டி மறுப்பார்கள். ஒரு ஷியா முஸ்லும் சுன்னி முஸ்லாமாகவோ, சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிமாக மாற வழியே இல்லாத உங்கள் மார்க்கத்தில் நீங்கள் சாதியைக் கடந்தவராக பிரகனப்படுத்துவது எவ்வாறு ? உங்களது தலித் மதமாற்றம் பித்தலாட்டம் என்பதால் தான் அம்பேத்கார் பெளவுத்த மதத்திற்கே மாறினார். 

இஸ்லாம் மறுமண மற்றும் பெண்களுக்கான சொத்து உரிமையைத் தந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார், அந்த உரிமை அரேபிய பாலைவனங்களில் ஏற்கனவே இருந்தது முகமதுவிற்கு அல்லாவின் வஹி கிடைப்பதற்கு முன்பே அவர் விதவையாக இருந்த கதீஜாவை மணந்துள்ளார், கதீஜாவிற்கும் தந்தைவழி சொத்துகள் இருந்ததால் அவரால் ஒரு வியாபாரியாக இருந்திருக்க முடிந்திருந்தது, என்று நண்பர்கள் சிலர் பதிலும் சொல்லி இருக்கின்றனர், ஏற்கனவே இருந்த நடைமுறையை சட்டமாக்கி இருந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்,. அதுவும் நடைமுறையில் இருக்கிறதா ? என்று கேட்டால் பழையபடி இஸ்லாமியரின் தவறுகள் இஸ்லாமிய சட்டத்தவறுகள் இல்லை என்றே பதில் வரும். நாகூர் நிலவரம் நமக்கு ஓரளவு தெரியும் என்றாலும் கீழக்கரையில் கூலித் தொழிலாளிக்கும் 10 லட்சம் வரதட்சனைக் கொடுத்தால் தான் இஸ்லாமிய பெண்களுக்கு திருமணங்கள் நடக்கும் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது, இவர்களைக் கேட்டால் பெண்ணுக்கு மகர் கொடுப்பது தான் இஸ்லாத்தின் வழக்கம் என்பார்கள், இந்த வழக்கத்தைப் பின்பற்றுபவர் யார் ? இவர்களின் வரதட்சனை வழக்கத்தை மகருக்கு மாற்றும் முயற்சியில் தான் இருக்கிறோம் என்பார்கள், அதை முதலில் இஸ்லாமியர்களிடம் செய்யாமல் அதை பிரச்சாரம் ஆக்குவது ஏன் ? தவிர தந்தை வழிச் சொத்துரிமையும், வரதட்சனைக் கேட்பவர்களுக்கான தண்டனையும் இந்தியாவில் சட்டமாக்கப்பட்டச் சூழலில் அதில் இந்தியர்களுக்கு இஸ்லாத் புதிதாக பரிந்துரைக்க என்ன இருக்கிறது ? தவிர அதைப் பின்பற்ற வேண்டியவர்கள் இஸ்லாமிய ஆண்கள் அல்லவா ?

இவரின் நண்பர்கள் மிகவும் அபத்தவாத சிந்தனையாக

"ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..!நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?

போரில் அகதியான அடிமைப் பெண்ணை (வலக்கரம் சொந்தமாக்கிக் கொள்ள என்று அவர்களுக்குள்ளேயே புரியாதபடியெல்லாம் எழுதிவார்கள்) அடிமையை விருப்பம் போல் அனுபவிக்கலாம் என்பதே இவர்களுக்கு ஹதீதியா குரானிய வழிகாட்டால், இந்த சிந்தனையில் சற்று மாற்றி இவர்களுக்கு ஏற்பாக இருக்கும் பலதார மறுமணத்தை ஈழ விதவைகளுக்கு இவர்கள் பரிந்துரைக்கிறார்கள், விதவைகளுக்கான மறுவாழ்வு இளைஞர்கள் மனவுவந்து அவர்களை மணக்க வேண்டும் என்பது தான் பொதுவான பரிந்துரை அன்றி அவர்களில் பலரையும் மணந்து கொள்ளுங்கள் என்பது அபத்தவாத மூளையற்ற சிந்தனையின் பரிந்துரையாக இருக்க முடியும், தவிர ஒரு இளைஞனின் வருமானம் நிரந்தரமாக இருக்க முடியாத இன்றைய சூழலில் பல பெண்களை மணந்து எவ்வாறு காப்பற்ற முடியும் ?, இதற்கும் மாற்றாக அந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் தனியார் நிறுவனமும், அரசு நிறுவனங்களும் முன்னுரிமை தரவேண்டும் என்று பரிந்துரைப்பது தான் நல்வழி. அப்படியென்றால் அவளுக்கு ஆண் துணையோ ? ஆண் இன்பமோ தேவை இல்லையா ? என்று கேட்டால் சொல்ல அறுவெறுப்பாக இருந்தாலும் பல தாரம் மணம் செய்து கொண்ட பெண்களின் பாலியல் வேட்கை என்றோ ஒருநாள் வந்து போகும் கணவரால் தீர்ந்துவிட்டதா ? என்று கேட்டு அது குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவை குறித்த பரிந்துரைகள் கடுமையான கண்டனத்துகுரியது ஆகும், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உடல் சுகத்திற்காக ஈடுபடுகிறார்கள் என்கிற கருத்துகள் புறந்தள்ளக் கூடிய நிலையில், அவர்களை பல தார மணத்தில் ஈடுபடுத்தலாம் என்று சொல்வது குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவதே. அவர்களுக்கு மாற்று நல்ல வேலையும், விதவையை மணக்க வரும் இளைஞர்களும் அன்றி வேறெந்த தீர்வும் சிறப்பானதாக இருக்க முடியாது.

இதையெல்லாம் விட அரேபிய நாடுகளில் இன்றைய தேதிக்கு போரில் (ஈராக் தவிர்த்து) விதவையாக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் ? சவுதி உள்ளிட்ட மன்னர் பரம்பரைகள் விதவைகளைத்தான் மணந்து விதவை நல்வாழ்வு என்கிற ரீதியில் முழக்கப்படும் இஸ்லாமிய தீர்வைச் செயல்படுத்துகிறார்களா ? மன்னர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்கள் விதவையான பிறகு அவர்களுக்கு மறுமணம் நடப்பில் உள்ளதா ? மன்னர்களைவிடுத்துப் பார்த்தாலும் அரேபிய ஷேக்குகள் பண ஆசைக் காட்டி இந்திய ஹைத்ராபாத்தில் மணந்து கொண்டு பின்னர் மோகம் தீர்ந்ததும் கைவிட்டு செல்லும் பெண்களில் எத்தனை பேர் விதவைகள் ? அவர்கள் முறைப்படி முத்தலாக் செய்யப்பட்டே பின்னர் மறுமணம் செய்து கொடுக்கப்படுகிறார்களா ?  நீங்கள் பெருமையானதாகக் கூறும் முத்தலாக்கை குறிப்பிட்ட காலங்களில் முறையாக செய்து மணவிலக்கு பெற்றுக் கொண்டோர் எத்தனை பேர் ? யாருமே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைமுறைப்படுத்தாத மேலும் ஒரு இஸ்லாமிய சட்டமாகத்தான் அவை பெயரளவில் தான் இருக்கிறது. அதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தும் கண்காணிப்பை நீங்கள் செய்துவருகிறீர்களா ? உங்களையெல்லாம் ஈழ விதவைகளுக்கு பலதார மறுமணம் பரிந்துரைக் கேட்டு உங்களிடம் ஒப்பாறி வைத்தவர் யார் ? அவர்களுக்கு உங்கள் மதத்தினர் பல தாரமணத்தில் செய்யும் தில்லுமுல்லுகள் தெரியுமா ? இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத உங்களின் பரிந்துரைகளில் மதவெறியும், மதப்பிரச்சாரமும் அன்றி வேறெதுவும் தென்படவில்லை. பணம் படைத்தவனின் மேம்பட்ட காம இச்சைகான வடிகால் என்பதைத் தவிர்த்து பல தார மணத்தில் பெண்களுக்கான தீர்வு என்ன ? காசு இருக்கும் போது அவளை மணந்து அவளுக்கு ஒரு வயிற்றுப் பிள்ளையை / களைக் கொடுத்துவிட்டு, அவர்களை தெருவில் விட அவர்கள் சமூகக் குற்றவாளியாகும் நிலையைத் தான் ஏற்படுத்தும் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் ?  உங்கள் பலதார மண பரிந்துரையில் முதல் மனைவியின் விருப்பம் பற்றி ஏதேனும் வழிகாட்டல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா ? எந்த ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு எண்ணற்ற மனைவிகள் இருப்பதை பெருமையாகக் கருதுவாளா ? எந்த ஒரு இந்தியத் தகப்பனும் தன் மகள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படப்போவதை பெருமையாகக் கூறிக் கொள்வானா ? பணக்காரனுக்கு  சலுகைக் கொடுத்து வளைந்து கொடுக்கும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் பணக்காரன் பலமனைவிகளை மணந்து கொள்ளலாம் (பெண்களை பணயம் வைக்கலாம்) என்ற உங்கள் மதப்பரிந்துரைகளுக்கும் வேறுபாடுகள் என்ன ?

திருவாளர் சுவனப்பிரியன் அவர்களே, நீங்கள் அடிக்கடி அரைகுறையாக கூவும் குரானுக்கு மாற்றான மேம்பட்ட வசனம் இவ்வுலகில் எழுதப்படவில்லை என்கிற கூற்றை யாரும் மறுக்கவே இல்லை என்று மார்தட்டிவருகிறீர்கள்.  இவற்றை பலர் கேட்டு நகைத்துச் சென்றதால் உங்களுக்கு உரிய பதில் கிடைக்காமல் போய் இருக்கும்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று என்றோ ஐய்யன் திருவள்ளுவர் சொல்லிச் சென்றுள்ளார், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சமமாகவே கருதப்படவேண்டும் என்கிற வழிகாட்டல் தான் அது, பெண்களையே மனிதனாக மதிக்கத் தெரியாத உங்களுக்கு பிற உயிர்களும் சமமாக மதிக்கப் பரிந்துரைப்பதில் ஏற்புடையதாக இருக்காது. இருந்தாலும் உங்களுக்கு சுட்டிக் காட்டவே விரும்புகிறேன், எந்த ஒரு உயிரையும் கொன்று போடும் உரிமை உங்களுக்கு கிடையாது, உணவுக்காகக் கொல்லுவதையும் என்பெயரில் (அல்லாவின் பெயரில்)  செய்யுங்கள் என்கிற வழிகாட்டலும் பிற உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து மறைமுகமாக இருப்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கமாட்டீர்கள், அதை நேரிடையாக வெளிப்படையாகவே 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி எல்லா உயிர்களும் மதிப்பில் ஒன்றே என்றார் ஐய்யன் திருவள்ளுவர், இதற்கு நேரிடையான வசனத்தை உங்கள் மார்க்கத்தில் இருந்து எடுத்துக்காட்டி முடிந்தால் அதைப்பரப்ப முயற்சி செய்யுங்கள்.

நானும் இதுவரை யாரும் சொல்லாத வசனம் ஒன்றை உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன், இதைவிட சிறந்த வசனம் உங்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தால் கொண்டுவாருங்கள்.

நீங்கள் உங்கள் உடன்பிறந்தாளுக்கு , மகளுக்கு செய்ய விரும்பாததைப் பிற பெண்களுக்கு பரிந்துரைக்காதீர்கள்

உங்களுக்கு இதற்கான விளக்கம் ப்ராக்கெட் போட்டால் தான் புரியும் என்பதால்,

நீங்கள் உங்கள் உடன் பிறந்தாளுக்கு (அக்காள் மற்றும் தங்கைகளுக்கு) , மகளுக்கு செய்ய விரும்பாததை (பலதார அல்லது சிலதார மணத்தை) பிற பெண்களுக்கும் (பல தார அல்லது சில தார திருமணத்தை) பரிந்துரைக்காதீர்கள்

********

இதை எப்படி முடிக்கிறது ? தென்னை மரம் , பசுமாட்டுக் கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது.

இஸ்லாமின் கொள்கைகள் சிறப்பாக இருந்தும், நடைமுறையில் பயன்படுத்த முடியாது என்பதால் தான் சுவனப்பிரியன் சுவனநந்தாவாக மாற இருந்து நித்தி - ரஞ்சிதா கசமுசாவால் கெட்டுவிட்டதா ? என்றே நினைக்கத் தோன்றுகிறது. சுவனப்பிரியன் விரும்பினால் தாய் மதம் திரும்பலாம், அவருடைய நண்பர் திரு டோண்டு இராகவனிடம் சொன்னால் டோண்டு இராகவன் சாரே நவீன இராமனுஜராக ஆகி சுவனப்பிரியனுக்கு பூணூல் அணிவித்து தீட்சைக் கொடுத்து பார்பனராக பிராமணராக மாற்றிக் கொள்வார், அவரும் சாதிக் கொடுமையிலிருந்து மீண்டு உயர் வகுப்பை அடைந்து , வைகுண்டத்திற்குச் செல்வார்.

போங்க சார், ஐந்து வேளைத் தொழுகையை சிறப்பாக செய்யுங்கள், நீங்கள் விரும்பும் சுவனக் கன்னிகைகள் உங்களுக்கு காத்திருக்கிறார்கள், அதைவிடுத்து தேவையற்ற சர்சைகளாக கொள்ளர் தெருவில் துருப்பிடித்த ஊசியை விற்றுக் கொண்டு உங்கள் நேரங்களை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், 'தீர்ப்பு நாள் சமீபமாக, உள்ளது அதற்கான அத்தாட்சிகளை அல்லா தொடர்ந்து வெளிப்படுத்துக் கொண்டுள்ளான், இந்த இனிய பிறவியை, வீண் விவாதங்களில் வீனாக்கலாமா ?'

பிகு : நான் இஸ்லாமிய மதத்தை நான் இங்கு இழிவு படுத்தும்படி எதையும் எழுதவில்லை,  அவர்களின் நடைமுறைகளில் உள்ளவற்றைச் சுட்டியுள்ளேன், தவிர உலகில் 20 விழுக்காட்டினரின் நம்பிக்கை என்பதை உணர்ந்துள்ளதால், அவர்களது வழிகாட்டி முகமதுவையோ, குரானையோ நான் போற்றாவிட்டாலும் தூற்ற நினைத்தது இல்லை, உங்க பாணியில் சொல்ல வேண்டுமென்றால் நான் இஸ்லாத்தைக் குறை கூறவில்லை, இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.

உங்களில் (தமிழக / இந்திய இஸ்லாமியர்கள்) பெரும் விழுக்காட்டினர் ஒரே திருமணத்தில் நம்பிக்கைக் கொண்டு நிலைத்திருப்பதும் உங்கள் மதம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடு இல்லை, அது இங்கேயே வழிவழிவரும் பண்பாடு அல்லது தனிமனித ஒழுக்கம் சார்ந்தவையே, அரபு நாடுகளில் அவ்வாறு இல்லாது பெண்கள் போகப் பொருளாக்குவது கண்டு உங்கள் அறிவுரைகளை பண்பாடுகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

இன்ஷா அல்லா, 'இவர்களுக்கு சாந்தியும் சமாதனமும் என்னேரமும் கிட்டினால் இவர்கள் சிந்தனை இறை நாட்டம் தவிர்த்து தேவையானவற்றதில் மூக்கு நுழைக்காது. 

நாடூவீர் ஏக இறைவன் !

உங்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டுவதும், பாறைமுன் திருக்குறள் அறத்துப் பால் விளக்கவுரை பேசுவதும் ஒன்றே என்பது தெரியும், இருந்தாலும் உங்கள் நச்சுப் பிரச்சாரங்களில் என்னையும் இழுத்தால் இதனை பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதினேன், உங்கள் மீது எங்கேயாவது தனிப் பட்ட தாக்குதல் இருந்தால் குறிப்பிடவும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்