ஆஙகிலததில எழுததுகள இடம மாறி இருநதாலும பழககப படட சொறகள எனபதால எளிதில படிதது விடலாம. தமிழிலும அதுபோனறு படிகக முடியும, காரணம ரொமப எளிமையானது, பொதுவாக எழுததுக கூடடி படிககும வழககம பளளி பருவததுடன முடிநதுவிடும, பிறகு பததிகளை சொறகளாகததான படிககிறோம மூளையில புழஙகிய சொறகளின பதிவு இருபபதால சொறகளில எழுததுகள இடம மாறி இருநதாலும படிபபது எளிது தான. தமிழில மறறொரு சிறபபு மெயயெழுததுகள அதாவது தலையில புளளி வைதத எழுததுகளே இலலை எனறாலும சொறறொடரை விரைவாகப படிகக முடியும.
எனககு வழககமாக வரும ஒரு தமிழ பிடிஎஃப கோபபை திறநத போது பிடிஎஃப ரீடர குறைபாடடினால அதில இருநத மெயயெழுததுகள அனைததிலும புளளியைக காணவிலலை. இருநதாலும எனனால எளிதாக படிகக முடிநதது, இததனைககும அநத கோபபில நானகு பககஙகளுககு மேல இருநத அனைததையும பொதுவாகப படிககும அதே நேரததில படிதது முடிததேன. இநதியாவின எநத மொழிகளிலும இவை சாததியம அறறது. ஏனெனில வடடெழுததில இருககும, கனனடம, தெலுஙகு, மலையாளம உடபட மறறும தேவநகரி வடிவில எழுதபபடும இநதி உடபடட வடமொழிகள மெயயெழுததுககு அடுதத உயிரமெயயெழுததைச சேரதது ஒரே எழுததாக எழுதும வழககம அவரகளுடையது, பழநதமிழில கையெழுததும, ஓலைசுவடிகளும அவவாறு எழுதும வழககம தமிழிலும இருநதது. பிறகு தமிழ அசசெழுததுககு மாறிய போது, மெய மறறும உயிரமெயயை தனித தனியாகவே எழுதிவநதுளளனர நமமவரகள.
சொறகள அனைததும தமிழாக இருநதால மெயயெழுதது இலலாமல படிககலாம. ஆஙகிலச சொறகளை அபபடியே தமிழில இவவாறு எழுதினால படிகக முடிவது கடினம. மேலே பிடிஎப (PDF) - இதைப பலர பி...டி ...எஃப.....ரீ...ட...ர எனறே படிததிருபபாரகள, ஏனெனில அநத சொல தமிழ இலலை
மெயயெழதது இலலாமல வாசிகக முடிவது தமிழ எழுததுகளின மறறொரு சிறபபு.
பின்பற்றுபவர்கள்
17 டிசம்பர், 2010
16 டிசம்பர், 2010
திமுகவை காவு கொடுக்கும் காங்கிரஸ் !
கொள்கை முரண் உள்ள கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே சேரும், அதில் லாப நட்ட வேறுபாடுகள் இருந்தால் அடித்துக் கொண்டு தெருவில் நிற்பார்கள் என்பதற்கு கூட்டணி ஆட்சிகள் சாட்சியாக இருகின்றன, இந்தியாவில் மாநிலங்களில் ஏற்படும் கூட்டணிகள் என்றாலும் சரி, நடுவண் அரசு கூட்டணியாக இருந்தாலும் சரி, பழைய பாஜக கூட்டணி மற்றும் அண்டை மாநில குமாரசாமி கூட்டணி தற்போதைக்கு காங்கிரசு கூட்டணி இவைகளிடையேயான விரிசல்கள் இப்படித்தான். அரசியல்களம் என்பது சேவை மையம் என்பதை மறந்து அதிகாரத்தைக் / பதவி வசதிகளைக் கைப்பற்றும் போட்டித்தளம் என்பதாக மாறிப் போனது மக்களாட்சியின் கேலிக் கூத்துகளாக மாறிப் போய் உள்ளன.
*****
இந்தியாவில் செல்வாக்கு இழந்த காங்கிரஸ் கூட்டணி உத்திக்குள் நுழைந்தற்குக்காரணமும் நேரு குடும்பத்தின் அதிகாரம் தொடரவேண்டும் என்பதற்குத்தான். இதனால் இராஜிவ் கொலைக்குப் பழிக்கு பழிவாங்க முடியும் மற்றும் போஃபர்ஸ் உள்ளிட்ட ஊழல்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்பதுடன் மாநில அளவில் செயல்படும் பண்ணையார்களின் செல்வாக்குகளை பழையபடி உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனால் தான். மாநில அளவிலான கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி ஆசைகாட்டுவதன் மூலம் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று காங்கிரஸ் சாதித்துக் கொண்டுள்ளது.
மாநிலங்களில் கொள்ளையடிப்பது போதாது கொள்ளைத் திட்டம் இந்தியா அளவுக்கு விரிவு படுத்துவதன் மூலம் தாம் தொடர்புடைய / தொடங்கியுள்ள இந்தியா தழுவிய நிறுவனங்களைக் காப்பாற்றி வளர்க்க முடியும் என்கிற பேராசையும் மாநில கட்சிகள் பலியாகிவிடுகின்றன, என்பதற்கு தற்போது திமுக சந்திக்கும் சிக்கல் கண்கூடு. திமுகவுடன் ஆதரவுடன் ஈழப் போராட்டதை நசக்க இலங்கைக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ், துவக்கத்தில் திமுவின் ஸ்பெக்டரம் தொடர்பில் நடைபெற்றவற்றைக் கண்டு கொள்ளாமல் தான் இருந்துவந்திருக்கிறது. பேசிய பேரம் படியவில்லை என்பதால் இன்றைக்கு 1.75 லட்சம் கோடிக்கான ஊழல் வெளியே வந்திருக்கிறது என்று கருதவேண்டியுள்ளது. தனக்கும் கீழ் பணிபுரியும் அமைச்சரின் செயல்பாடுகள் தனக்குத் தெரியவில்லை என்றும், தன் சொல்வதை தன்னுடைய அமைச்சர் கேட்கவில்லை என்பதையும் ஒரு பிரதமரால் கூசாமல் சொல்லமுடிகிறது. பிரதமர் என்பவர் அமைச்சரின் செயல்பாடுகளை அனுமதிப்பவர், சரி இல்லை என்றால் அமைச்சரையே மாற்றிவிடுபவர் என்பது தானே நடைமுறை. திமுக - காங்கிரசு கூட்டணி ஆட்சியில் அமைச்சகங்கள் என்பவை ஒற்றைத் தலைமையில் கட்டுப்படுத்த முடியாதவை அல்லது அவ்வாறு செய்து கொண்ட ஒப்பந்தம் அதாவது என் எல்லைக் கோட்டிக்குள் நீ வராதே என்று சொல்வதைப் போன்ற ஒப்பந்தம் என்பதாக இருந்தால் மட்டுமே ராசா தன்னிச்சையாகச் செயல்பட்டார் என்றே சொல்லமுடியும்.
ராசாவை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பிரதமர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார். அந்த ஒரு சூழலில் ராசாவின் நடவடிக்கைகள் திட்டமிட்டே பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளிதழ் தகவல்களாக வந்தவற்றில் நீரா ராடியா ராசா, கனிமொழி மற்றும் இராசாத்தி அம்மாளுடன் பேசியவை என்கிற உரையாடல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் நீரா ராடியா இவர்களுக்காக காங்கிரசின் எந்த தலைவர்களுடன் என்னப் பேசினார் என்பதை இதுவரை அமலாக்கப் பிரிவினரோ, சிபிஐயோ வெளி இடவில்லை, இவர்கள் அல்லாது டாடாவுடன் பேசியவை வெளியாகி உள்ளன. அவையும் டாடாவுக்கும் மாறன் சகோதர்களுக்கும் இடையேயான கசப்புகளைச் சொல்வதை அன்றி டாவின் காங்கிரசு தொடர்புகள் எதையும் வெளி இடவில்லை. டாடாவின் இந்த பேச்சுகளை வெளி இடுவதால் டாடாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை, டாடா - மாறன் நேரடிப் (தொழில்) போட்டி என்பதாக மட்டுமே அந்தப் பேச்சுகள் சொல்லுகின்றன. இதுவும் திமுவிற்குள் இருக்கும் உள்கட்சிப் பூசல்களை எடுத்துச் சொல்லும் ஒரு பேச்சு அதில் பண பேரம் இவை திமுகவிற்கு மேலும் தலைகுணிவு ஏற்படுத்தும் என்கிற நோக்கத்தில் வெளி இடப்பட்டிருக்கின்றன.
நோக்கம் தான் என்ன ? ஸ்பெக்டரம் விவாகரத்தை எதிர்கட்சிகள் கண்டுபிடித்ததா ? எதிர்கட்சிகள் தன்னிச்சையாக கண்டு பிடித்திருந்தால் அதற்கு முன்கூட்டியே நீரா ராடியாவின் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டிருக்காது. ஸ்பெக்டரம் விவகாரத்தில் புழங்கிய கோடிகளுக்கு குறிப்பிட்ட அளவு பங்கு போய் சேர்ந்திருக்காது, வெளியான பேச்சுகள் எதிலும் ஸ்பெக்டரம் தொடர்பான உரையாடல்கள் எதுவும் இல்லை, அவை எல்லாம் அமைச்சர் பதவியின் பேரங்கள் மட்டுமே. நடந்த அமலாக்கப்பிரிவு மற்றும் வருமானவரி சோதனைகள் முதலில் இராசாவின் உறவினர்கள், அலுவலகங்கள் என்பதாகவும், தற்போது நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்ட திமுகவிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே (இதுபற்றி நக்கீரன் பெட்டிச் செய்தி கூட வெளி இடவில்லை, ரொம்ப நடுநிலை, இன்னொரு முரசொலி). இவ்வளவு தொடர்புடைய இராசாவிற்கு நெருக்கமான காங்கிரசார் யாருமே இல்லையா ? ஏன் அவர்களிடம் சோதனைகள் எதுவும் நடைபெறவில்லை, ஏன் இராசவின் ஸ்பெக்டரம் தொடர்பான உரையாடல்கள் வெளியிடப்படவில்லை ? என்று நினைக்கும் போது, காங்கிரஸ் திமுகவை பலமிழக்கச் செய்ய அனைத்து வல்லமைகளையும் உத்திகளையும் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. நமக்குத் தெரிந்த ஊகங்கள் திமுக தலைவர் கருணாநிதிக்குத் தெரியாதா ? இருந்தும் கூட்டணியை உதராமல் இருப்பது ஏன் ? ராசாவின் ஊழல்கள் ஏறக்குறைய நிருபணம் செய்யக் கூடியச் சூழலில் இருப்பதாலும், காங்கிரசிடம் பேசிய பேரங்களை செயல்படுத்ததாலும் ஊமைக்கண்ட கனவாக சிக்கித் தவிக்கிறார். காங்கிரசிற்கும் மடியில் கனமில்லை என்றால் கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக் கொண்டு பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்தி இருக்கலாமே. எனவே ஸ்பெக்டரம் விவகாரத்தில் திமுகமீதான காங்கிரசின் நெருக்குதல் பங்குகளின் விழுக்காட்டில் ஏற்பட்ட எரிச்சலே ஆகும்.
காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து வாரிசுகளின் பேராசைக்கும், பதவி சுகத்திற்கும் அடிமையாகி அதே காங்கிரசின் 'கை'களினால் அழிகிறது. குட்டியை விட்டு ஆழம்பார்பதாக இளங்கோவனின் திமுக சாடல்கள் அதை நிருபணம் செய்வதாக இருக்கின்றன. தமிழ் மண்ணில் திமுக இருக்குமா இருக்காதா என்பதைவிட காங்கிரஸ் வளர்வதைத் தடுப்பது மட்டுமே தமிழக மீனவர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழர்களின் நலனாக அமையும்.
*****
இந்தியாவில் செல்வாக்கு இழந்த காங்கிரஸ் கூட்டணி உத்திக்குள் நுழைந்தற்குக்காரணமும் நேரு குடும்பத்தின் அதிகாரம் தொடரவேண்டும் என்பதற்குத்தான். இதனால் இராஜிவ் கொலைக்குப் பழிக்கு பழிவாங்க முடியும் மற்றும் போஃபர்ஸ் உள்ளிட்ட ஊழல்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்பதுடன் மாநில அளவில் செயல்படும் பண்ணையார்களின் செல்வாக்குகளை பழையபடி உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனால் தான். மாநில அளவிலான கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி ஆசைகாட்டுவதன் மூலம் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று காங்கிரஸ் சாதித்துக் கொண்டுள்ளது.
மாநிலங்களில் கொள்ளையடிப்பது போதாது கொள்ளைத் திட்டம் இந்தியா அளவுக்கு விரிவு படுத்துவதன் மூலம் தாம் தொடர்புடைய / தொடங்கியுள்ள இந்தியா தழுவிய நிறுவனங்களைக் காப்பாற்றி வளர்க்க முடியும் என்கிற பேராசையும் மாநில கட்சிகள் பலியாகிவிடுகின்றன, என்பதற்கு தற்போது திமுக சந்திக்கும் சிக்கல் கண்கூடு. திமுகவுடன் ஆதரவுடன் ஈழப் போராட்டதை நசக்க இலங்கைக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ், துவக்கத்தில் திமுவின் ஸ்பெக்டரம் தொடர்பில் நடைபெற்றவற்றைக் கண்டு கொள்ளாமல் தான் இருந்துவந்திருக்கிறது. பேசிய பேரம் படியவில்லை என்பதால் இன்றைக்கு 1.75 லட்சம் கோடிக்கான ஊழல் வெளியே வந்திருக்கிறது என்று கருதவேண்டியுள்ளது. தனக்கும் கீழ் பணிபுரியும் அமைச்சரின் செயல்பாடுகள் தனக்குத் தெரியவில்லை என்றும், தன் சொல்வதை தன்னுடைய அமைச்சர் கேட்கவில்லை என்பதையும் ஒரு பிரதமரால் கூசாமல் சொல்லமுடிகிறது. பிரதமர் என்பவர் அமைச்சரின் செயல்பாடுகளை அனுமதிப்பவர், சரி இல்லை என்றால் அமைச்சரையே மாற்றிவிடுபவர் என்பது தானே நடைமுறை. திமுக - காங்கிரசு கூட்டணி ஆட்சியில் அமைச்சகங்கள் என்பவை ஒற்றைத் தலைமையில் கட்டுப்படுத்த முடியாதவை அல்லது அவ்வாறு செய்து கொண்ட ஒப்பந்தம் அதாவது என் எல்லைக் கோட்டிக்குள் நீ வராதே என்று சொல்வதைப் போன்ற ஒப்பந்தம் என்பதாக இருந்தால் மட்டுமே ராசா தன்னிச்சையாகச் செயல்பட்டார் என்றே சொல்லமுடியும்.
ராசாவை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பிரதமர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார். அந்த ஒரு சூழலில் ராசாவின் நடவடிக்கைகள் திட்டமிட்டே பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளிதழ் தகவல்களாக வந்தவற்றில் நீரா ராடியா ராசா, கனிமொழி மற்றும் இராசாத்தி அம்மாளுடன் பேசியவை என்கிற உரையாடல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் நீரா ராடியா இவர்களுக்காக காங்கிரசின் எந்த தலைவர்களுடன் என்னப் பேசினார் என்பதை இதுவரை அமலாக்கப் பிரிவினரோ, சிபிஐயோ வெளி இடவில்லை, இவர்கள் அல்லாது டாடாவுடன் பேசியவை வெளியாகி உள்ளன. அவையும் டாடாவுக்கும் மாறன் சகோதர்களுக்கும் இடையேயான கசப்புகளைச் சொல்வதை அன்றி டாவின் காங்கிரசு தொடர்புகள் எதையும் வெளி இடவில்லை. டாடாவின் இந்த பேச்சுகளை வெளி இடுவதால் டாடாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை, டாடா - மாறன் நேரடிப் (தொழில்) போட்டி என்பதாக மட்டுமே அந்தப் பேச்சுகள் சொல்லுகின்றன. இதுவும் திமுவிற்குள் இருக்கும் உள்கட்சிப் பூசல்களை எடுத்துச் சொல்லும் ஒரு பேச்சு அதில் பண பேரம் இவை திமுகவிற்கு மேலும் தலைகுணிவு ஏற்படுத்தும் என்கிற நோக்கத்தில் வெளி இடப்பட்டிருக்கின்றன.
நோக்கம் தான் என்ன ? ஸ்பெக்டரம் விவாகரத்தை எதிர்கட்சிகள் கண்டுபிடித்ததா ? எதிர்கட்சிகள் தன்னிச்சையாக கண்டு பிடித்திருந்தால் அதற்கு முன்கூட்டியே நீரா ராடியாவின் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டிருக்காது. ஸ்பெக்டரம் விவகாரத்தில் புழங்கிய கோடிகளுக்கு குறிப்பிட்ட அளவு பங்கு போய் சேர்ந்திருக்காது, வெளியான பேச்சுகள் எதிலும் ஸ்பெக்டரம் தொடர்பான உரையாடல்கள் எதுவும் இல்லை, அவை எல்லாம் அமைச்சர் பதவியின் பேரங்கள் மட்டுமே. நடந்த அமலாக்கப்பிரிவு மற்றும் வருமானவரி சோதனைகள் முதலில் இராசாவின் உறவினர்கள், அலுவலகங்கள் என்பதாகவும், தற்போது நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்ட திமுகவிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே (இதுபற்றி நக்கீரன் பெட்டிச் செய்தி கூட வெளி இடவில்லை, ரொம்ப நடுநிலை, இன்னொரு முரசொலி). இவ்வளவு தொடர்புடைய இராசாவிற்கு நெருக்கமான காங்கிரசார் யாருமே இல்லையா ? ஏன் அவர்களிடம் சோதனைகள் எதுவும் நடைபெறவில்லை, ஏன் இராசவின் ஸ்பெக்டரம் தொடர்பான உரையாடல்கள் வெளியிடப்படவில்லை ? என்று நினைக்கும் போது, காங்கிரஸ் திமுகவை பலமிழக்கச் செய்ய அனைத்து வல்லமைகளையும் உத்திகளையும் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. நமக்குத் தெரிந்த ஊகங்கள் திமுக தலைவர் கருணாநிதிக்குத் தெரியாதா ? இருந்தும் கூட்டணியை உதராமல் இருப்பது ஏன் ? ராசாவின் ஊழல்கள் ஏறக்குறைய நிருபணம் செய்யக் கூடியச் சூழலில் இருப்பதாலும், காங்கிரசிடம் பேசிய பேரங்களை செயல்படுத்ததாலும் ஊமைக்கண்ட கனவாக சிக்கித் தவிக்கிறார். காங்கிரசிற்கும் மடியில் கனமில்லை என்றால் கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக் கொண்டு பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்தி இருக்கலாமே. எனவே ஸ்பெக்டரம் விவகாரத்தில் திமுகமீதான காங்கிரசின் நெருக்குதல் பங்குகளின் விழுக்காட்டில் ஏற்பட்ட எரிச்சலே ஆகும்.
காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து வாரிசுகளின் பேராசைக்கும், பதவி சுகத்திற்கும் அடிமையாகி அதே காங்கிரசின் 'கை'களினால் அழிகிறது. குட்டியை விட்டு ஆழம்பார்பதாக இளங்கோவனின் திமுக சாடல்கள் அதை நிருபணம் செய்வதாக இருக்கின்றன. தமிழ் மண்ணில் திமுக இருக்குமா இருக்காதா என்பதைவிட காங்கிரஸ் வளர்வதைத் தடுப்பது மட்டுமே தமிழக மீனவர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழர்களின் நலனாக அமையும்.
13 டிசம்பர், 2010
திருமணம் இன்றி ஒன்றி வாழுதல் !
ஒன்றி வாழுதல் லிவிங்க் டு கெதருக்கு சரியான மொழிப் பெயர்ப்பு என்று நினைக்கிறேன். திருமணம் என்பது வெறும் சடங்கு என்பதைத் தாண்டி சட்டப் பாதுகாப்பு என்று சொல்வதே சரியானது. சடங்கில்லாத, சட்டப் பாதுகாப்பு இல்லாத திருமண வாழ்க்கை, இதை ஏற்கனவே விலங்குகளும் பறவை இனங்களும் ஏனைய உயிரினங்களும் செய்துவருகின்றன. நாம இது ஏதோ புதுசு, சமூக சீரழிவின் முன்னறிவிப்பு என்றெல்லாம் கூப்பாடு போடுகிறோம். மனம் ஒத்த இருவர் சேர்ந்துவாழ சமூகத்தின் முன்பு அறிவிப்பது என்பது தவிர்த்து திருமணம் என்பதன் வேறு பொருள் என்ன ? தனிமனித பாலியல் தேவைக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு அமைப்பு என்பது தானே திருமணம். அதன் பக்கவிளைவாக மக்கட்பேறு, அதுவும் இருவரின் ஒப்புதலும் உடல் நலமும் ஒத்துழைத்தால் மட்டுமே. மற்றபடி திருமணம் ஆனவர்கள் குழந்தைப் பெறுவது அவர்களின் தனிமனித உரிமை. சந்ததிகளைப் பெறுவது இல்லவாழ்க்கையின் நீட்சி என்பதாகத்தான் வெளிநாட்டுத் திருமணங்களின் புரிதல். நான் சிங்கை வந்த புதிதில் தங்கி இருந்த வீட்டின் (தமிழ்)தம்பதிகள் திருமணம் ஆகதவர்கள் என்பது ஆறுமாதம் கழித்து அவர்கள் தங்களுடைய திருமண அழைப்பிதழை நீட்டிய போது தான் தெரிந்தது வியப்பாக இருந்தது. அவர்களைப் பொருத்த அளவில் சொத்துரிமை மற்றும் வாரிசுகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்னும் போது சடங்கும் சட்ட ஒப்புதலும் தேவைப்படுகிறது என்னும் போது திருமணம் என்கிற சடங்கில் இணைந்து கொள்கிறார்கள். மற்றபடி மனம் ஒத்த பருவ வயதினருக்கிடையேயான ஈர்ப்பு என்பதில் அவர்களுடைய தேவைகளை அதுவரையில் பகிர்ந்தே வந்திருக்கிறார்கள் எனப் புரிந்தது. இருவருக்கிடையே பெற்றோர்கள் எதிர்ப்பு, எதிர்ப்பார்ப்பு என்கிற தலையீடுகள் எதுவும் இல்லை. அவர்களின் திருமணத்திற்கு முன்பு அவர்களுடைய பெற்றோர்களும் அந்த வீட்டுக்கு வந்து சென்று கொண்டு தான் இருந்தார்கள். இருவரின் திருமணச் சடங்கின் தேவை என்பது வெளி உலகினருக்கும் சமூகத்திற்குமேயன்றி ஒருவருக்கொருவர் புரிதல் தொடர்பானது அல்ல என்பதைப் புரிந்தது. இடையே ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு என்றாலும் அந்த திருமணமற்ற வாழ்க்கையை சகித்துக் கொண்டிருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்த சூழலில் அவர்கள் பிரிவதற்கும் சமூகத்தின் ஒப்புதல் எதுவும் தேவைப்பட்டிருக்காது என்ற வகையில் அவர்கள் சேர்ந்து வாழுதல் என்பதில் மூன்றாம் நபர் அல்லது சமூக ஒப்புதல் தேவை அற்ற ஒன்று என்பதாகத் தெரிந்தது.
இந்தியாவில் இது போன்று நடந்தால் கலாச்சாரம் பண்பாடு என்கிற பெயரில் கூச்சல் போடுகிறார்கள். இன்றைய சமூக அமைப்பு மற்றும் பொருளியல் வாழ்க்கையில் 30 வயதுவரையில் கூட திருமண பேச்சுகளே நடப்பதில்லை. 30 வயதுவரை தனி ஒருவரின் பாலியல் தேவைக்கு சமூகம் சொல்லும் தீர்வும் ஒன்றுமே இல்லை. எந்த ஒரு கெடுதலும் இல்லாத தன்னின்ப (சுய இன்ப) நுகர்சியைக் கூட சமூகம் ஏற்பது கிடையாது என்பது வெளிப்படை. முற்றும் துறந்தோம் என்று சொல்லிக் கொள்ளும் சாமியார்களும் எதையும் அடக்கமுடியாமல் சிக்கிக் கொள்வதை கண்ணுறும் நாம், 30 வயது வரையான இளைஞர்களின் பாலியல் தேவைக்கான தீர்வு என்பதை 'அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு சுப்ரபாதம் ஸ்லோகம் சொல்லு' என்கிற எளிய வழியைச் சொல்லிக் கொடுப்பதைத் தவிர்த்து வேறெதும் உண்டா ? இந்துமதத்திலாவது மறைமுகமாக சுய இன்பத்தை அனுமதிக்கிறார்கள், வெளிப்படையாக வேதத்தைக் காட்டி எதிர்ப்பது இல்லை. ஆனால் 30 வயதுவரை திருமணம் ஆகாத பிற மதங்களின் இளைஞர்களுக்கு சொர்கம் / நகரம் பயம் காட்டி அந்த உரிமையும் தடுக்கப்படுகிறது. ஆனாலும் அதை இளைஞர்கள் மீறியே வருகிறார்கள் என்பதை எவரும் ஒப்புக் கொள்வதில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் திருமணம் ஆகாத பருவ வயதினரின் பாலியல் தேவைக்கு எந்த மதவாதிகளும், மதமும் எந்த ஒரு தீர்வையும் சொல்லவே இல்லை. காரணம் மதங்கள் எதுவும் காலம் தாண்டி சிந்திக்கவில்லை. மதங்களின் வாழ்வியல் முறையில் பருவ வயதில் திருமணம் என்பதைத்தான் அவை தோன்றிய காலத்தில் பார்த்து வந்திருக்கின்றன. இன்றைய தேதியில் 13 / 14 பருவ வயதில் அரசியல் சட்டங்களும் திருமணங்களை ஏற்பது இல்லை என்னும் போது மதங்களின் பாலியல் சார்ந்த கொள்கைகள் காலம் தாண்டியவை என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. பருவ வயதின் விதவைகள் - இன்றைய தேதிக்கு மதங்கள் மறுமணத்திற்கு எதிர்ப்புக்காட்டாத நிலையில் அதுபற்றி சொல்ல இங்குத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரையில் கூட ஒருவர் எத்தனை மனைவிகளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கலாம் மற்றும் சின்ன வீட்டுக் கணக்குகள் இவை ஆண்களின் பொருளாதாரம் சார்ந்த ஒன்றாக இருந்ததேத் தவிர்த்து சட்டம் அதனை தடை செய்யவில்லை. மேலும் பல மனைவிகளை, சின்ன வீடுகளை உடையவர் என்றால் ஒரு கவுரவத்தையே வழங்கி வந்திருக்கிறார்கள். பழந்தமிழகத்தின் / இந்தியாவின் திருமண வாழ்க்கையின் சாட்சியாக இந்துமத தெய்வங்கள் பல மனைவிகளை உடையவர்களாக காட்டப்பட்டுவருகிறார்கள். கம்ப இராமயணம் தவிர்த்து இராமன் பிறமொழி இராமயணங்களில் வீரத்திற்காகப் போற்றப்பட்டானே யன்றி சீதையை மட்டும் மணந்தவன் என்பதற்கு அல்ல. பின்னர் சமூக மாற்றத்தின் விளைவாக இராமனின் அந்த பண்பு உயர்வாகக் காட்டப்படுகிறது.
திருமணம் செய்யாமல் இருவர் சேர்ந்துவாழலாம் என்பது தனிமனித விருப்பு சார்ந்த ஒன்று அதை சமூகம் தடை போட ஒன்றும் இல்லை. பாலியல் தொழிலாளியிடம் செல்வது, பாதுகாப்பற்ற உடலுறவு, எய்ட்ஸ் பயம் இவை எதுவுமே இல்லாமல் மன ஒப்புதலுடன் கூடிய வாழ்க்கை உடல் நலம் சார்ந்தது ஆகும். பாலியல் தொழிலாளியிடம் செல்வோரை சமூகம் ஒதுக்கி வைக்காத போது சேர்ந்து வாழும் இருவரை சமூகம் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று. லிவிங் டுகெதர் வாழ்கை முறையை சந்ததிகள் தொடர்ச்சி, மனித இனத் தொடர்ச்சியின் முடிச்சுகளாக நினைப்பதால் நான் ஆதரிக்கவில்லை என்றாலும் அவர்களின் தேவையை புரிந்து கொள்கிறேன், காரணம் தனிமனித பாலியல் தேவைக்கு பாதுக்காப்பான வழி மற்றும் இருவருக்கிடையேயான பிற பகிர்வுகள் என்பதால், அதாவது லிவ்ங்க் டுகெதர் என்னைப் பொருத்த அளவில் தனிமனித ஆண் பெண் இருவருக்கிடையேயான காமம் கலந்த நட்பு. கோகுலத்தில் கண்ணன் கூட கோபியர்களுடன் திருமணம் ஆகாமல் லிவிங்டுகெதர் தானாம் :)
இந்தியாவில் இது போன்று நடந்தால் கலாச்சாரம் பண்பாடு என்கிற பெயரில் கூச்சல் போடுகிறார்கள். இன்றைய சமூக அமைப்பு மற்றும் பொருளியல் வாழ்க்கையில் 30 வயதுவரையில் கூட திருமண பேச்சுகளே நடப்பதில்லை. 30 வயதுவரை தனி ஒருவரின் பாலியல் தேவைக்கு சமூகம் சொல்லும் தீர்வும் ஒன்றுமே இல்லை. எந்த ஒரு கெடுதலும் இல்லாத தன்னின்ப (சுய இன்ப) நுகர்சியைக் கூட சமூகம் ஏற்பது கிடையாது என்பது வெளிப்படை. முற்றும் துறந்தோம் என்று சொல்லிக் கொள்ளும் சாமியார்களும் எதையும் அடக்கமுடியாமல் சிக்கிக் கொள்வதை கண்ணுறும் நாம், 30 வயது வரையான இளைஞர்களின் பாலியல் தேவைக்கான தீர்வு என்பதை 'அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு சுப்ரபாதம் ஸ்லோகம் சொல்லு' என்கிற எளிய வழியைச் சொல்லிக் கொடுப்பதைத் தவிர்த்து வேறெதும் உண்டா ? இந்துமதத்திலாவது மறைமுகமாக சுய இன்பத்தை அனுமதிக்கிறார்கள், வெளிப்படையாக வேதத்தைக் காட்டி எதிர்ப்பது இல்லை. ஆனால் 30 வயதுவரை திருமணம் ஆகாத பிற மதங்களின் இளைஞர்களுக்கு சொர்கம் / நகரம் பயம் காட்டி அந்த உரிமையும் தடுக்கப்படுகிறது. ஆனாலும் அதை இளைஞர்கள் மீறியே வருகிறார்கள் என்பதை எவரும் ஒப்புக் கொள்வதில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் திருமணம் ஆகாத பருவ வயதினரின் பாலியல் தேவைக்கு எந்த மதவாதிகளும், மதமும் எந்த ஒரு தீர்வையும் சொல்லவே இல்லை. காரணம் மதங்கள் எதுவும் காலம் தாண்டி சிந்திக்கவில்லை. மதங்களின் வாழ்வியல் முறையில் பருவ வயதில் திருமணம் என்பதைத்தான் அவை தோன்றிய காலத்தில் பார்த்து வந்திருக்கின்றன. இன்றைய தேதியில் 13 / 14 பருவ வயதில் அரசியல் சட்டங்களும் திருமணங்களை ஏற்பது இல்லை என்னும் போது மதங்களின் பாலியல் சார்ந்த கொள்கைகள் காலம் தாண்டியவை என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. பருவ வயதின் விதவைகள் - இன்றைய தேதிக்கு மதங்கள் மறுமணத்திற்கு எதிர்ப்புக்காட்டாத நிலையில் அதுபற்றி சொல்ல இங்குத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரையில் கூட ஒருவர் எத்தனை மனைவிகளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கலாம் மற்றும் சின்ன வீட்டுக் கணக்குகள் இவை ஆண்களின் பொருளாதாரம் சார்ந்த ஒன்றாக இருந்ததேத் தவிர்த்து சட்டம் அதனை தடை செய்யவில்லை. மேலும் பல மனைவிகளை, சின்ன வீடுகளை உடையவர் என்றால் ஒரு கவுரவத்தையே வழங்கி வந்திருக்கிறார்கள். பழந்தமிழகத்தின் / இந்தியாவின் திருமண வாழ்க்கையின் சாட்சியாக இந்துமத தெய்வங்கள் பல மனைவிகளை உடையவர்களாக காட்டப்பட்டுவருகிறார்கள். கம்ப இராமயணம் தவிர்த்து இராமன் பிறமொழி இராமயணங்களில் வீரத்திற்காகப் போற்றப்பட்டானே யன்றி சீதையை மட்டும் மணந்தவன் என்பதற்கு அல்ல. பின்னர் சமூக மாற்றத்தின் விளைவாக இராமனின் அந்த பண்பு உயர்வாகக் காட்டப்படுகிறது.
திருமணம் செய்யாமல் இருவர் சேர்ந்துவாழலாம் என்பது தனிமனித விருப்பு சார்ந்த ஒன்று அதை சமூகம் தடை போட ஒன்றும் இல்லை. பாலியல் தொழிலாளியிடம் செல்வது, பாதுகாப்பற்ற உடலுறவு, எய்ட்ஸ் பயம் இவை எதுவுமே இல்லாமல் மன ஒப்புதலுடன் கூடிய வாழ்க்கை உடல் நலம் சார்ந்தது ஆகும். பாலியல் தொழிலாளியிடம் செல்வோரை சமூகம் ஒதுக்கி வைக்காத போது சேர்ந்து வாழும் இருவரை சமூகம் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று. லிவிங் டுகெதர் வாழ்கை முறையை சந்ததிகள் தொடர்ச்சி, மனித இனத் தொடர்ச்சியின் முடிச்சுகளாக நினைப்பதால் நான் ஆதரிக்கவில்லை என்றாலும் அவர்களின் தேவையை புரிந்து கொள்கிறேன், காரணம் தனிமனித பாலியல் தேவைக்கு பாதுக்காப்பான வழி மற்றும் இருவருக்கிடையேயான பிற பகிர்வுகள் என்பதால், அதாவது லிவ்ங்க் டுகெதர் என்னைப் பொருத்த அளவில் தனிமனித ஆண் பெண் இருவருக்கிடையேயான காமம் கலந்த நட்பு. கோகுலத்தில் கண்ணன் கூட கோபியர்களுடன் திருமணம் ஆகாமல் லிவிங்டுகெதர் தானாம் :)
9 டிசம்பர், 2010
கொஞ்சம் தமிழக அரசியல் !
நாளிதழலைத் திறந்தாலே நாறிப் போன ஸ்பெக்ட்ரம் விவகார செய்திகள் தான். இதில் சம்பந்தப்பட்ட தரப்பு அரசின் வருமான இழப்பு ஊழல் ஆகாது என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அரசுக்கு பல்வேறு வகைகளில், வரிகளில் கிடைக்கும் பணம் தான் நலத்திட்டங்களுக்கும், அரசு செலவீனங்களுக்கும் பயன்படுகிறது, அதைச் சரியாகச் செய்யாமல் அரசுக்கு வருமான இழப்பை அதையும் லட்சம் கோடிக் கணக்கில் செய்துவிட்டு தொடர்வதற்கு எந்த ஒரு அரசும் சர்வாதிகார அரசாக இருந்தால் மட்டுமே முடியும், ஆனால் அதை மக்கள் ஆட்சி என்றே சொல்லிக் கொண்டு தொடர்கிறார்கள். இன்றைய செய்தி அதிர்ச்சியை அளித்தது, நீதிபதிகள் திகைத்தார்களாம். அதாவது ஸ்பெக்டரம் ஏலம் பெற அரசுடமை வங்கிகளிடம் தனியார் பெற்ற கடன் இருபதாயிரம் கோடி. இவ்வாறு கடன் பெற்றே அந்த ஏலத்தை எடுத்து 10 மடங்கு இலாபத்திற்கு விற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு ஏழைமாணவன் கல்விக்கடனுக்குச் சென்றால் அப்பன்காரன் வங்கிக்கடன் வைத்திருந்தால் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புகின்றன வங்கிகள், அவர்கள் கடன் கேட்கும் தொகையோ இன்றைய நாணய மதிப்புகளில் சொற்பமே. ஆனால் அரசியல்வாதிகள் கண் அசைத்தால் ஆயிரம் கோடிகளில் கடன் வழங்குகிறது இந்திய அரசுடமை வங்கிகள். தனது நிர்வாகத்தின் கீழ் பணி புரிந்த அமைச்சர் ராசா ஊழல் செய்ததில் தனக்கு தொடர்பில்லை என்பது போலவும், தனது பரிந்துரைகளை அவர் கேட்கவில்லை என்றும் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டேன், நாடாளுமன்றத்தை நடத்தவிடுங்கள் என்று இயலாமையாக கூறுகிறது மன்மோகன் அரசு. நிர்வாகம் சரியாக செயல்படாமல் போனதற்கு, ஊழல் மலிந்ததற்கும் நிர்வாகி பொறுப்பு ஏற்கமாட்டார் என்றால் நிர்வாகி என்கிற பதவியின் பொருள் என்ன ? இவர்களெல்லாம் ஏன் தொடரவேண்டும் ?
ஊழல் நடைபெற்றதை கண்டுபிடித்தால் ராசாவை கட்சியை விட்டே நீக்கி சமூக நீதி காட்கிறோம் என்கிறார் கருணாநிதி, ஊழல் நடைபெற்றது நிருபனம் செய்யப்பட்டால் ராசாவுக்கு கிடைப்பது சிறை தண்டனை, இவர் கட்சியை விட்டு நீக்கினால் என்ன நீக்காவிட்டால் என்ன, ஒரு குற்றவாளிக்கு உறுப்பினர் அட்டை கொடுப்பது / கொடுக்காதது பற்றி யாரும் கேட்கப்போவதில்லையே. அப்படியே என்றாலும் கூட கட்சியை விட்டு நீக்குவதெல்லாம் ஒரு தண்டனையா ? அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து தண்டனை அடைந்தவர்கள் இவருடைய கட்சியில் இன்றைக்கு உறுப்பினர்களாக இருக்கிறார்களா ? இல்லையா ? கட்சியை விட்டு நீக்குவது, நீக்காதது தனிப்பட்ட ஊழல் உறுப்பினருக்கு (ஊழலை செய்தபின்பு) என்ன நட்டம் ஏற்பட்டுவிடப் போகிறது ?
தமிழகத்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் இளங்கோவன் உட்பட ஸ்பெக்டரம் பற்றி கிழித்துவரும் வேளையில் பாமக மட்டும் அதுபற்றி இம்மி அளவும் மூச்சுவிடவில்லை என்பது புதிராகவே இருக்கிறது. கருணாநிதி மீது திராவிட சிந்தனையாளர், தமிழ்பற்றாளர், ஈழ ஆதரவாளர் என்கிற எண்ணமெல்லாம் இருந்ததாலேயே அவர் மீது நான் உட்பட பல்வேறு கட்சிசாராதவர்கள் அன்பு கொண்டிருந்தனர். இன்றைய தேதிக்கு திராவிடம் என்பது கட்சிப் பெயரில் இருக்கிறது என்பது தவிர்த்து அது ஒரு தனியார் உடமை வாரிசு உரிமை கட்சியாகிவிட்டது, வராலாறு பழிக்கும் என்பதற்காக அவசர கெதியில் இதுவரை ஐந்து முறை முதல்வராக இருந்தும் செய்திடாத உலக தமிழ்மாநாட்டை பெயரை மாற்றி முதல் செம்மொழி மாநாடு என்று அறிவித்து குடும்பவிழாவாக மாற்றினார். ஈழ நலம் முழுவதுமாக கைகழுவப் பெற்றது, எந்த ஒரு காரணத்தினால் கருணாநிதி ஆதரவாளர் என்கிற எண்ணம் இருந்ததோ, அந்த காரணங்கள் எதுவுமே கருணாநிதியிடம் இல்லை. இவர் குடும்பத்து பங்காளிச் சண்டைகளில் மதுரையில் தினகரனின் வேலைப்பார்த்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை அது தொடர்புடையவர்கள் எவருக்குமே தண்டனைகள் வழங்கப்படவில்லை, பங்காளிகள் ஒன்று சேர்ந்த போது இதயம் இனித்து, கண்கள் பனித்தன என்றால்...... அவ்வளவு சுயநலவாதியா நீய்யீ........... என்று நினைக்க கருணாநிதிக்கு ஆதரவான நெஞ்சம் கசந்து நஞ்சை இறக்கி வைத்தது.
ஈழம் தவிர்த்து கூட கருணாநிதி ஆட்சித் தொடரவே வேண்டும் என்பதற்கு எந்த ஒரு சிறப்புக் காரணமும் தென்படவே இல்லை. சந்தர்பம் அமைந்தால் சிறுபான்மை காவலர் கருணாநிதி மதவாதக்கட்சியுடன் கூட கூட்டணி அமைப்பார் என்பது ஏற்கனவே உறுதியான ஒன்று தான். திராவிட இயக்கம் அதன் இலக்கை கருணாநிதியை வைத்து எட்டிவிட்டதால் கருணாநிதிக்கு திராவிடச் சிந்தனைகள் இனி தேவை அற்றதாகவே நினைத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் நிலைக்கு மக்கள் வாழ்க்கைத்தரத்தை சிறப்பாக ஆக்கி இருந்தால் கருணாநிதியின் திராவிட ஆட்சி தொடரலாம் என்றே சொல்லமுடியும், நிலைமை அவ்வாறு இல்லை. ஏழைகள் ஒரு ரூபாய் அரிசிக்கு கிடைத்தால் பிழைப்பையே ஓட்டமுடியும் என்கிற நிலையில் தான் கருணாநிதி ஆட்சி வைத்திருக்கிறது, ஆனால் கருணாநிதியின் வாரிசுகளோ டாட்டா அம்பானி ரேஞ்சுக்கு வளர்ந்துவருகிறார்கள். ஒரு தமிழனின் வாரிசுகள் அம்பானிக்கு ஈடுகொடுக்கிறார்கள் அல்லது பின்னுக்கு தள்ளுகிறார்கள் என்பது தமிழனுக்கு பெருமையா ? சத்தியமாக எனக்கு பெருமையாகத் தெரியவில்லை. குடும்பத்தை அம்பானிகள் ஆக்கியது தவிர்த்து ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைத்தால் தான் வாழமுடியும் என்கிற நிலையை ஏற்படுத்தி இருப்பதைத் தவிர்த்து கருணாநிதியின் எந்த ஒரு சாதனை கருணாநிதி ஆட்சி தொடரவேண்டும் என்கிறதோ அதை குப்பன் சுப்பன் கூட பதவியில் இருந்தால் செய்துவிட்டு போய்விடுவான்.
ஊழல் நடைபெற்றதை கண்டுபிடித்தால் ராசாவை கட்சியை விட்டே நீக்கி சமூக நீதி காட்கிறோம் என்கிறார் கருணாநிதி, ஊழல் நடைபெற்றது நிருபனம் செய்யப்பட்டால் ராசாவுக்கு கிடைப்பது சிறை தண்டனை, இவர் கட்சியை விட்டு நீக்கினால் என்ன நீக்காவிட்டால் என்ன, ஒரு குற்றவாளிக்கு உறுப்பினர் அட்டை கொடுப்பது / கொடுக்காதது பற்றி யாரும் கேட்கப்போவதில்லையே. அப்படியே என்றாலும் கூட கட்சியை விட்டு நீக்குவதெல்லாம் ஒரு தண்டனையா ? அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து தண்டனை அடைந்தவர்கள் இவருடைய கட்சியில் இன்றைக்கு உறுப்பினர்களாக இருக்கிறார்களா ? இல்லையா ? கட்சியை விட்டு நீக்குவது, நீக்காதது தனிப்பட்ட ஊழல் உறுப்பினருக்கு (ஊழலை செய்தபின்பு) என்ன நட்டம் ஏற்பட்டுவிடப் போகிறது ?
தமிழகத்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் இளங்கோவன் உட்பட ஸ்பெக்டரம் பற்றி கிழித்துவரும் வேளையில் பாமக மட்டும் அதுபற்றி இம்மி அளவும் மூச்சுவிடவில்லை என்பது புதிராகவே இருக்கிறது. கருணாநிதி மீது திராவிட சிந்தனையாளர், தமிழ்பற்றாளர், ஈழ ஆதரவாளர் என்கிற எண்ணமெல்லாம் இருந்ததாலேயே அவர் மீது நான் உட்பட பல்வேறு கட்சிசாராதவர்கள் அன்பு கொண்டிருந்தனர். இன்றைய தேதிக்கு திராவிடம் என்பது கட்சிப் பெயரில் இருக்கிறது என்பது தவிர்த்து அது ஒரு தனியார் உடமை வாரிசு உரிமை கட்சியாகிவிட்டது, வராலாறு பழிக்கும் என்பதற்காக அவசர கெதியில் இதுவரை ஐந்து முறை முதல்வராக இருந்தும் செய்திடாத உலக தமிழ்மாநாட்டை பெயரை மாற்றி முதல் செம்மொழி மாநாடு என்று அறிவித்து குடும்பவிழாவாக மாற்றினார். ஈழ நலம் முழுவதுமாக கைகழுவப் பெற்றது, எந்த ஒரு காரணத்தினால் கருணாநிதி ஆதரவாளர் என்கிற எண்ணம் இருந்ததோ, அந்த காரணங்கள் எதுவுமே கருணாநிதியிடம் இல்லை. இவர் குடும்பத்து பங்காளிச் சண்டைகளில் மதுரையில் தினகரனின் வேலைப்பார்த்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை அது தொடர்புடையவர்கள் எவருக்குமே தண்டனைகள் வழங்கப்படவில்லை, பங்காளிகள் ஒன்று சேர்ந்த போது இதயம் இனித்து, கண்கள் பனித்தன என்றால்...... அவ்வளவு சுயநலவாதியா நீய்யீ........... என்று நினைக்க கருணாநிதிக்கு ஆதரவான நெஞ்சம் கசந்து நஞ்சை இறக்கி வைத்தது.
ஈழம் தவிர்த்து கூட கருணாநிதி ஆட்சித் தொடரவே வேண்டும் என்பதற்கு எந்த ஒரு சிறப்புக் காரணமும் தென்படவே இல்லை. சந்தர்பம் அமைந்தால் சிறுபான்மை காவலர் கருணாநிதி மதவாதக்கட்சியுடன் கூட கூட்டணி அமைப்பார் என்பது ஏற்கனவே உறுதியான ஒன்று தான். திராவிட இயக்கம் அதன் இலக்கை கருணாநிதியை வைத்து எட்டிவிட்டதால் கருணாநிதிக்கு திராவிடச் சிந்தனைகள் இனி தேவை அற்றதாகவே நினைத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் நிலைக்கு மக்கள் வாழ்க்கைத்தரத்தை சிறப்பாக ஆக்கி இருந்தால் கருணாநிதியின் திராவிட ஆட்சி தொடரலாம் என்றே சொல்லமுடியும், நிலைமை அவ்வாறு இல்லை. ஏழைகள் ஒரு ரூபாய் அரிசிக்கு கிடைத்தால் பிழைப்பையே ஓட்டமுடியும் என்கிற நிலையில் தான் கருணாநிதி ஆட்சி வைத்திருக்கிறது, ஆனால் கருணாநிதியின் வாரிசுகளோ டாட்டா அம்பானி ரேஞ்சுக்கு வளர்ந்துவருகிறார்கள். ஒரு தமிழனின் வாரிசுகள் அம்பானிக்கு ஈடுகொடுக்கிறார்கள் அல்லது பின்னுக்கு தள்ளுகிறார்கள் என்பது தமிழனுக்கு பெருமையா ? சத்தியமாக எனக்கு பெருமையாகத் தெரியவில்லை. குடும்பத்தை அம்பானிகள் ஆக்கியது தவிர்த்து ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைத்தால் தான் வாழமுடியும் என்கிற நிலையை ஏற்படுத்தி இருப்பதைத் தவிர்த்து கருணாநிதியின் எந்த ஒரு சாதனை கருணாநிதி ஆட்சி தொடரவேண்டும் என்கிறதோ அதை குப்பன் சுப்பன் கூட பதவியில் இருந்தால் செய்துவிட்டு போய்விடுவான்.
7 டிசம்பர், 2010
கமல் கவிதைக்கு வெளம்பரம் கொடுக்கும் இந்துத்துவாக்கள் !
கமலஹாசன் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவர் அதையும் தாண்டி பல்கலை அறிஞனாகக் காட்டிக் கொள்ள கவிதை எழுதுவார், பாடுவார். எகிரும் குரலில் (ஹைப் பிச்) பாடவல்லவர், அவ்வாறு நிறைய பாடல் பாடி இருக்கிறார். மாடர்ன் ஆர்ட் எனப்படும் வரைகலையைப் பற்றி (காதலா காதலா) கேலி செய்பவர், அன்பே சிவம் படத்தில் மாடர்ன் ஆர்டை முதன்மைபடுத்தி இருப்பார். புரியாத ஒன்றை கிறுக்கி கவிதை என்று சொல்லி பேசுவார். அவருக்கு ஏன் வேண்டாத வேலை... இருக்கிற திறமைக்கு வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதுல யாருக்கும் புரியாத கவிதை வேறையா ? கலைத்தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு எப்போதும் கலைதாகம் எடுத்து பால், வெண்ணை, தயிரோடு ஆட்டுக்கால் பாயாவும் கேட்கிறது என்பதாக வைத்துக் கொள்வோம், ஆனால் அவை செறிக்க வேண்டாமா ? :)
*****
மன்மதன் அம்பு கலைப்படையலில் தொட்டுக்கைக்காக கமலே ஒரு பாடலை இயற்றிப் பாடி இருக்கிறாராம். படிச்சுப் பார்த்தேன், எழுத்துகளும் சொற்களும் தமிழ் என்பது தவிர்த்து எனக்கு எதுவும் புரியவில்லை. அதைப் புரிந்து கொண்டதாகச் சொல்லும் இந்துத்துவா(லா)க்கள், இந்து மதத்தை கமல் கொச்சைப்படுத்துவிட்டார் (மீண்டும் சீண்டும் கமல்) என்று குதிக்கிறார்கள். படுக்கை அறையில் நிகழ்வான பாடலில் அரங்கநாதனையும் வரலட்சுமியையும் இழுத்து அசிங்கப்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான இந்துக்களை புண்படுத்திவிட்டதாகக் கூறி கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களாம்.
இந்து மதம் எங்கே புண்படுகிறது ? கோவிலுக்குள் நுழைந்தால் கோபுரத்தில் இருக்கும், சுற்றில் இருக்கும், தூண்களில் இருக்கும் சிலைகளில் வடிக்கப்பட்டு இருக்கும் எந்த ஒன்றையும் விட பாடல்வரிகளில் என்ன ஆபசம் இருக்கிறது என்றே தேடிப்பார்த்தாலும் புலப்படவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ஆண்டாள் பாடிய பாடல், இதில் இருக்கும் விரசம், ஆபாசம் அளவுக்கு கமல் எழுதிய பாடலில் இருகிறதா தெரியவில்லை.
''குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல
மெத்தென்ற சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பை வாய்திறவாய்
மைத்தடங் கண்ணீனாய் நீயுள் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்..."38
(மேற்கண்ட ஆண்டாள் பாடலின் பொருளுக்கு இங்கே செல்லுங்கள்)
ஆண்டாள் பாடியவற்றை திருப்பவை, திருவெம்பாவை என்றெல்லாம் பக்தி இலக்கியதில் வைத்து கோவிலிலும் பாடுகிறார்கள். திரையில் நாயகன் நாயகியைப் பாடுவதில் விரசமாம். அதில் ரங்கநாதன் வரலட்சுமி என்ற வரிகள் இல்லாவிட்டால் விரசமாக தோன்றாது போலும்.
கமல் என்ற மன்மதக் கலைஞன் மீது அம்பு வீசுகிறார்கள் என்றும், அந்தப் பாடலில் ஆபாசம் இல்லை என்றோ நான் எழுதவில்லை, ஆபாசம், காமம் என்று வரையறுக்கப்பட்டவை அனைத்துமே (இன்றைய) இந்து மதத்தின் பகுதியாவும் இருக்கிறது, இதில் குறிப்பிட்டு சிலரை எதிர்த்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று கிளம்பும் பேர்வழிகள் நாயகி / நாயகன் பாவங்களில் பாடிய வழிபாட்டுப் பாடல்களை தீயிட்டுக் கொளுத்துவார்களா ? இரண்டாவது பொண்டாட்டியை ஏன் இந்த சாமி வச்சிருக்கிறது என்று கேட்கும் இன்றைய சிறுகுழந்தைகளுக்கு பதில் சொல்ல நம்மிடம் பக்தி, சாமி, கதை, கண்ணைக் குத்திடும் என்று சொல்லும் இன்றைய சமய நம்பிக்கையின் மழுப்பல்களைத் தவிர்த்து என்ன இருக்கிறது ?
தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா ?
*****
மன்மதன் அம்பு கலைப்படையலில் தொட்டுக்கைக்காக கமலே ஒரு பாடலை இயற்றிப் பாடி இருக்கிறாராம். படிச்சுப் பார்த்தேன், எழுத்துகளும் சொற்களும் தமிழ் என்பது தவிர்த்து எனக்கு எதுவும் புரியவில்லை. அதைப் புரிந்து கொண்டதாகச் சொல்லும் இந்துத்துவா(லா)க்கள், இந்து மதத்தை கமல் கொச்சைப்படுத்துவிட்டார் (மீண்டும் சீண்டும் கமல்) என்று குதிக்கிறார்கள். படுக்கை அறையில் நிகழ்வான பாடலில் அரங்கநாதனையும் வரலட்சுமியையும் இழுத்து அசிங்கப்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான இந்துக்களை புண்படுத்திவிட்டதாகக் கூறி கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களாம்.
இந்து மதம் எங்கே புண்படுகிறது ? கோவிலுக்குள் நுழைந்தால் கோபுரத்தில் இருக்கும், சுற்றில் இருக்கும், தூண்களில் இருக்கும் சிலைகளில் வடிக்கப்பட்டு இருக்கும் எந்த ஒன்றையும் விட பாடல்வரிகளில் என்ன ஆபசம் இருக்கிறது என்றே தேடிப்பார்த்தாலும் புலப்படவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ஆண்டாள் பாடிய பாடல், இதில் இருக்கும் விரசம், ஆபாசம் அளவுக்கு கமல் எழுதிய பாடலில் இருகிறதா தெரியவில்லை.
''குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல
மெத்தென்ற சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பை வாய்திறவாய்
மைத்தடங் கண்ணீனாய் நீயுள் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்..."38
(மேற்கண்ட ஆண்டாள் பாடலின் பொருளுக்கு இங்கே செல்லுங்கள்)
ஆண்டாள் பாடியவற்றை திருப்பவை, திருவெம்பாவை என்றெல்லாம் பக்தி இலக்கியதில் வைத்து கோவிலிலும் பாடுகிறார்கள். திரையில் நாயகன் நாயகியைப் பாடுவதில் விரசமாம். அதில் ரங்கநாதன் வரலட்சுமி என்ற வரிகள் இல்லாவிட்டால் விரசமாக தோன்றாது போலும்.
கமல் என்ற மன்மதக் கலைஞன் மீது அம்பு வீசுகிறார்கள் என்றும், அந்தப் பாடலில் ஆபாசம் இல்லை என்றோ நான் எழுதவில்லை, ஆபாசம், காமம் என்று வரையறுக்கப்பட்டவை அனைத்துமே (இன்றைய) இந்து மதத்தின் பகுதியாவும் இருக்கிறது, இதில் குறிப்பிட்டு சிலரை எதிர்த்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று கிளம்பும் பேர்வழிகள் நாயகி / நாயகன் பாவங்களில் பாடிய வழிபாட்டுப் பாடல்களை தீயிட்டுக் கொளுத்துவார்களா ? இரண்டாவது பொண்டாட்டியை ஏன் இந்த சாமி வச்சிருக்கிறது என்று கேட்கும் இன்றைய சிறுகுழந்தைகளுக்கு பதில் சொல்ல நம்மிடம் பக்தி, சாமி, கதை, கண்ணைக் குத்திடும் என்று சொல்லும் இன்றைய சமய நம்பிக்கையின் மழுப்பல்களைத் தவிர்த்து என்ன இருக்கிறது ?
தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா ?
பதிவர்:
கோவி.கண்ணன்
at
12/07/2010 10:50:00 AM
தொகுப்பு :
இந்து,
சமூகம்,
செய்திக் கருத்துரை
24
கருத்துக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்