பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2012

நித்தியானந்தன் இந்திய சமய அடையளமா ?


நித்தி - ரஞ்சிதா கசமுசா இந்தியர்கள் அறிந்த ஒரு கன்றாவி தகவல், வெ.ஆ மூர்த்தி பாணியில் சொல்லப் போனால் துவண்டு போன செல்வாக்கை தூக்கி நிறுத்த நித்தி எவ்வளவோ முயற்சிக்கிறார், பார்த்து சிரித்து / துப்புவதைத் தவிர நமக்கு அதில் ஒன்றும் இல்லை, தானே புயலுக்கு வாரி வழங்குவதன் மூலம் ஆசிரமத்திற்கு கூட்டம் சேர்க்க முயன்றார் ஒண்ணியும் வேலைக்கு ஆகவில்லை, பின்னர் எதோ ஒரு வெளிநாட்டு அமைப்பு 100 சிறந்த ஆன்மிக திலகங்களில் ஒருவராக தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாக வெளம்பரம் செய்தார், அதுவும் வேலைக்கு ஆகவில்லை, இறுதி முயற்சியாக மதுரை ஆதினத்திடம் காலில் விழுந்து தன்னை வாரிசாக அறிவிக்கச் சொல்லி மன்றாடி அதன்படி முடிசூட்டிக் கொண்டுள்ளார், இதன் பக்க(வாத) விளைவுகள் இனிமேல் தான் தெரியும். நித்தி மட்டுமல்ல காஞ்சிபுரம் சுப்புணி சாமி உள்ளிட்ட எந்த ஒரு இந்திய சமய புருடாக்களையும் ஒட்டு மொத்த இந்திய சமய வழிகாட்டியாக யாரும் கருதாத நிலையில் எந்த மடத்துக்கு ஆண்டி எவனாக இருந்தால் என்ன என்பது தான் இந்திய சமயங்களைப் பின்பற்றுபவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது, நன்றாக வாசிக்கவும், நான் இந்து மதம் என்று குறிப்பிடவில்லை, எனக்கு அந்தச் சொல்லில் உடன்பாடும் கிடையாது, இந்திய சமயங்கள் பன்முகத் தன்மை கொண்டது அதில் சுடலை மாடனுக்கும், ஜெக்காம்மாவிற்கும் கூட இடம் உண்டு. எனவே நித்தி இந்திய சமயங்களின் ஒரே அடையாளம் போன்று நினைப்பதும், பரப்புவதும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியது.

தமிழ் நாட்டில் ஆதினங்கள் சில உண்டு, திருவாடுதுறை ஆதினம், மதுரை ஆதினம் இன்னும் வேற என்ன என்ன இருக்கிறதோ தெரியவில்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாடுதுறை ஆதின வாரிசுப் பிரச்சனையில் வெட்டு குத்து கூட நடந்தாகத் தகவல் வந்தது. குன்றக்குடி அடிகளாருக்குப் பிறகு எந்த ஒரு ஆதினத்திற்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குக் கிடையாது, பெரியார் போற்றிய ஆன்மிக வாதிகளில் வள்ளலார், குன்றக்குடி அடிகளார் போன்றோர் உண்டு என்பதால் அவர்கள் சமயங்களைக் கடந்த ஆன்மிகத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். நித்திக்கோ, தற்போதைய மதுரை ஆதினத்திற்கோ அப்படியான தகுதி எதுவும் கிடையாது, கோல்கேட் வெளம்பரம் போல் விளம்பரத்தில் பல்லைக் காட்டி, கூட்டம் காட்டி, பெரிய தங்க ஆசனம் போட்டு எங்கள் பராக்கிரமத்தைப் பாரீர் என்று பறைசாற்றுகிறார்கள், பொம்பளப் புள்ளைங்களை பெத்தவன் யாரும் இவர்கள் பக்கம் இனி திரும்புவார்கள் என்பதே ஐயம் தான்.

******

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் இந்து மதத்தின் (அவர்கள் இந்து மதம் என்றே சொல்கிறார்கள்) இழுக்கு பாரீர் என்று நித்தி மதுரை ஆதினமானது இந்து மதத்தின் அவமானம் போன்று எழுத அதற்கு அவருடைய பங்காளிகள் ஆகா இவர்கள் (இந்திய சமயங்களைப் பின்பற்றுவர்கள்) ஏதோ தலை குனிந்து நிற்பது போல் 'இஸ்லாமியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்றெல்லாம் கும்மியடித்துள்ளனர், இஸ்லாமியர் என்ற பெயரில் சாருக்கானும், கமலஹாசனும் கனடா, அமெரிக்காவில் படும் அவமானங்களை அவர்களிடம் கேட்டாதால் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் மீதான கடுமையான குடிநுழைவு சோதனைகளுக்கு இந்திய அரசு சார்பில் கூட கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான தலைகுனிவு அவர்களாகத் தேடிப் பெற்றது இல்லை, அவர்களின் பெயர் இஸ்லாமிய மதம் சார்ந்தவையாக இருப்பதால் அவர்களுக்கு கிடைத்த வெகுமதி. அப்துல்கலாமையே அவிழ்த்துப் பார்த்தது தான் அமெரிக்கா, அதற்கு அவர் ஒரு அறிவியலாளர் என்பது போல் அவர் ஒரு முஸ்லிம் என்பதும் காரணம். அவ்வாறு நடந்த விரும்பத்தகாதவைகளுக்கு சுவனப்பிரியன் மற்றும் அவரது நண்பர்கள் பெருமை பட்டிருந்தால், நித்தியின் செயலை இந்து மதத்துடன் முடிச்சுப் போட்டு நாம் சிறுமை அடையளாம், அதற்கும் வாய்ப்பில்லை காரணம் நித்தி இங்கு இந்திய சமயங்களின் முன்னோடியோ, வழிகாட்டியோ இல்லை.

இதெல்லாம் விட நித்தி மீது வைக்கப்படும் 'செக்ஸ்' குற்றச் சாட்டை சுட்டிக் காட்டுகிறார்கள், நித்தி பாலியல் வண்புணர்வில் ஈடுபட்டதாக வழக்குகள் இல்லாத போது அவர் மீதான பாலியல் குற்றச் சாட்டு என்பது புறந்தள்ளக் கூடியதே, வயதுவந்தவர்களின் விரும்பிய பாலியல் ஈடுபாட்டில் மூன்றாம் நபர் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும் கூட நித்தி பிரம்மச்சாரியம் என்ற பெயரில் 1000க் கணக்கான இளைஞர்கள் / இளைஞிகளை வீட்டைவிட்டு ஓடிவரச் செய்து ஆசிரமத்தில் கூட்டம் சேர்ந்தவர் என்பதால், அவர் விளம்பரம் செய்த பிரம்மசாரியத்தை அவர் மீறிவிட்டார், அவருக்கு அது பற்றிப் பேச தகுதி இல்லை, தவிர பாலியல் ஒழுக்கம் என்பதில் அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே அவர் மீதான குற்றச் சாட்டு, காரணம் அதுவும் அவர் தன்னை அவ்வாறு விளம்பரப் படுத்திக் கொண்டதால் மட்டுமே. அதையும் சுட்டிக் காட்டிக் கேள்வி கேட்கவேண்டியவர்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரை நம்பியவர்கள் மட்டுமே, மூன்றாம் நபராக அவனைப் போன்றோர்களை நம்பாதீர்கள் என்று மட்டுமே நம்மால் நித்தி பற்றிய கருத்தை முன்வைக்க முடியும்.

இஸ்லாமும் பாலியலும் நமக்கு தெரிந்த ஒன்று தான், போதிய அளவு செல்வம் உள்ள ஒருவர் தன்னுடைய கட்டுபாடற்ற இச்சைக்காக தொடர்ந்து திருமணங்கள் செய்து மனவிலக்குக்கிற்கு நஷ்ட ஈடு கொடுக்க முடிந்தால் அவர் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே இஸ்லாமிய சட்டங்கள் என்பது நமக்குத் தெரியும், ஒருவர் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் நான்கு திருமணங்கள் வரை செய்யலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கிறது, நன்றாக கவனியுங்கள் நான்கு என்பது எண்ணிக்கைத் தடை இல்லை, ஒரே நேரத்தில் நான்கு என்பது தான் இதன் பொருள், ஏற்கனவே 4 மனைவிகள் இருந்து ஐந்தாவது ஒன்றை மணக்க நான்கில் ஒன்றை மனவிலக்கு செய்து நஷ்ட ஈடு கொடுத்துவிட்டால் ஐந்தாம் திருமணத்திற்கு தடை என்பதே கிடையாது. இஸ்லாமைப் பொருத்த அளவில் ஒருவரின் பாலியல் வேட்கை என்பது திருமணம் மூலமாக் தொடரவேண்டும் என்பது தான், ஆனால் நடைமுறையில் பணம் உள்ளவர்கள் யாரும் தற்காலிகமாக ஒரு திருமண பந்ததைத் ஏற்படுத்திவிட்டு நன்றாக அனுபவத்துவிட்டு நஷ்ட ஈடு கொடுத்துவிடலாம். கிட்டதட்ட குறிப்பிட்ட காலத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தம் போன்றவை தான், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் என்பதில் பெண்ணை போதைப் பொருளாக அல்லது போகப் பொருளாகவே நினைக்கும் ஒரு ஆணின் பாலியல் விருப்பம் என்பதைத் தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும் ? இதையும் ஏன் திருமணம் என்ற சொல்லால் அலங்கரிக்க வேண்டும் என்கிற ஞாயமான என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா ? பணக்கார இஸ்லாமியர்களின் விருப்பம் போல் திருமணமும் மணவிலக்கும் பாதிக்கப்படும் பெண்களும் அவர்கள் வாரிசுகளும் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியாவது தெரியுமா ? Single Mother என்றால் என்ன ?

ஒரு பெண்ணை திருமணம் செய்து பாலியல் மோசடி செய்வதற்கும், திருமணமே செய்யாமல் பாலியல் மோசடி செய்வதற்கும் வேறுபாட்டில் பணவிரயம் மற்றும் ஊர அறிய செய்த மோசடி / மறைவாக செய்த மோசடி என்பது தவிர்த்து வேறு என்ன வேறுபாடு உள்ளது ? இரண்டிலுமே குழந்தை பிறந்து இருந்தால் இவன் தான் அப்பன் என்று தற்காலிக டி என் ஏ சோதனைகள் நிறுபனம் செய்யும், உரிய இழப்பீட்டிற்கு வழக்கு தொடுக்க முடியும்.

முகமது நபியின் திருமணங்கள் குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் அது அந்த காலம் அப்போது குறிப்பிட்ட சமூகத்துடன் இணைத்துக் கொள்ள அவ்வாறான திருமணங்கள் நடைபெற்றன என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம், ஆனால் ஜைனப் திருமணம் ஒழுக்கமான நிகழ்வா ? வளர்ப்பு மகனுடைய மனைவியின் அழகில் மயங்கி, அவரை வளர்ப்பு மகனிடமிருந்து மணவிலக்கு செய்யச் சொல்லி, பின்னர் மண முடித்துக் கொண்டது உலகினர் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வா ? இறைத்தூதருக்கு உறவுகள் பொருளல்ல என்று கூறுவீர்களே என்றால், உடல் இச்சையும், திருமணங்களும் அழகிய முன்மாதிரி இறைத்தூதருக்கான அழகா ? பொருள் பொதிந்ததா என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் வைத்துள்ளீர் ? பின்லேடன் எந்த காலத்தில் இருந்தான் அவன் செய்து கொண்ட திருமணங்கள் எத்தனை ? அவனை இஸ்லாமிய அடையாளமாக ஏற்காவிட்டால் அவனுக்காக சிறப்புத் தொழுகை சென்னை பள்ளிவாசலில் இடம் பெற்றது ஏன் ? முகமது காலத்தில் 6 வயது சிறுமியாக ஆயிஷா அன்னையை முகமது திருமணம் செய்து கொண்டது போன்று இன்று அவ்வளவு சிறுவயது திருமணங்கள் நடக்காவிடினும் இன்றும் கூட 14 - 18 இளம் வயது திருமணங்கள் இஸ்லாமியருக்குள் நடக்கிறது, இதை நினைத்துக் கொண்டு தான், அண்மையில் அறிவிக்கப்பட்ட கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தை இஸ்லாமியர்களின் ஒரு பிரிவு கடுமையாக எதிர்த்தது.

இன்றைய தேதிக்கு,

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கும் 'வைத்திருப்பதற்கும்' பெரிய வேறுபாடு இல்லை, ஏனெனில் இரண்டிலுமே பாதிக்கப்படும் பெண்களின் தொடர்ச்சியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் என்பதே கிடையாது. தங்கள் மதத்தில் சீர்த்திருத்த மாற்றம் கொண்டுவர எவ்வளவோ இருந்தும் பிற மதத்தினரை எள்ளி நகையாடுவதைப் பார்க்க நமக்கும் நகைப்புத்தான் வருகிறது.

இந்திய சமயத்தினரின் ஒட்டு மொத்த அடையாளம் என்று ஒரு சாமியார் பயலும் கிடையாது என்பதை இந்திய சமயத்தினர் நன்கு புரிந்துள்ளனர் என்பதை இஸ்லாமிய சமயவாதிகளுக்கு நான் கூறிக் கொள்கிறேன். உங்களில் பின்லேடனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பெரும் விழுக்காட்டினர் என்பது போல் நித்தியை புறம் தள்ளுபவர்கள் ஏராளம். நித்தியால் யாரும் தலை குனியவில்லை, அதற்கு தேவையும் இல்லை, உங்களுக்கு பலதார திருமணங்களில். இளம் வயது திருமணங்களில் உவர்ப்பு இல்லாத போது வன்புணர்ச்சி என்ற அளவுக்கு செல்லாத சாமியார்களின் பாலியல் இச்சைகளை இந்திய சமயவாதிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது.

மற்ற மதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கவில்லையா ? இளம் வயது திருமணங்கள் நடக்கவில்லையா ? நடக்கிறது, அவை திருட்டுத் தனமாக நடக்கிறது, ஆனால் பிற மதங்களில் பலதார திருமணத்தை உலகின் தலைச்சிறந்த கொள்கை 1400 ஆண்டுகளுக்கு முன்பாக காட்டப்பட்ட அற்புத வழிகாட்டல் என்று யாரும் தூக்கிப் பிடிக்கவில்லை. ஏழ்மை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் எந்த ஒரு அப்பனும் தன் மகளை ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பணக்காரனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்யலாம் என்பதை நினைத்துப் பார்க்கவே நாணுவான்.

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். உங்களுக்கு மட்டும் தான் அவை தேவை.

55 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

+1

துளசி கோபால் சொன்னது…

நித்தியில் ஆரம்பிச்சு லாடன்லே முடிச்சுட்டீங்க போல!

மதுரை, கோபாலுக்கு 200 பவுன் செலவு வைக்கப்பார்த்தார்:(

http://thulasidhalam.blogspot.com/2005/09/blog-post_12.html

நித்தியால் என்ன வருமோன்னு கலங்கும் நெஞ்சுக்கு நீதி என்ன?

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

அருமை சகோ,

நித்தி எதன் அடையாளமும் இல்லை.இது போன்ற நிகழ்வுகளை பயன்படுத்தி இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்ய முயற்சித்தது ஆப்பசைத்த குரங்கின் கதையாக முடிந்தது.

நன்றி

Unknown சொன்னது…

police constable-ill irunthu vakkeel neethipathi,teachers,arasu paniyaalar,vyabaari pothu thuraiyil pani puriyum ellorum mikavum kanniyamaaka nadakkum intha samuthaayaththil NITHY ponravarkalin seythi pozhuthu pokke!!!ottu moththa samuthaayame seerazhindu kidakkirathu.ithil nee naan enra pottiyum needhi bothanaiyum yaarai emaarra!!

dondu(#11168674346665545885) சொன்னது…

நான் சுவனப்பிரியனிடம் அவரது இன்னொரு இன்னொரு பதிவில் சொன்னதத்தான் இங்கேயும் சொல்கிறேன்.

முதலில் முசல்மான்கள் மாரடி அடிக்கும் சடங்கை தடுத்து நிறுத்தவோ அல்லது ஜஸ்டிஃபை செய்யவோ முயலுங்கள். (அதுவும் கத்தியை எல்லாம் வைத்து குத்திக் கொள்கிறார்கள் நடு ரோட்டில். பார்ப்பவர்கள் பொறி கலங்குகிறது)

இந்து மதத்தின் மேல் உங்களுக்கென்ன அக்கறை இருக்க முடியும்?

அவரவர் மதங்களை அவர்களே பார்த்து கொள்வார்கள்.

வேண்டாத வேலைதானே இது!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown சொன்னது…

சிந்திக்க வைக்கும் பதிவு தான் ஆனால் என்ன பயன்? சிந்திக்க வேண்டும் என்று நினைத்தால் தானே. :(
அவர்கள் எந்த கேப்பில், யாரிடம் தாவா பணியை ஆரம்பிக்கலாம் என்று மட்டும் தானே சிந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

//உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். உங்களுக்கு மட்டும் தான் அவை தேவை.//

நச்!

நம்பள்கி சொன்னது…

நித்யானந்தா இந்து மதத்தின் அடையாளமல்ல; அதேமாதிரி, இப்ப இருக்கும் ஆதீனமும் இந்து மதத்தின் அடையாளமல்ல! இவர்கள் எல்லோரும் சைவ மதத்தின் அடையாளமே! வெள்ளைக்காரனுக்கு அப்புறம் வந்து தான் இந்து மதமே!!!

நிற்க, இந்த ஆதீனத்திறக்கும் சம்பந்தருக்கும் யாதோறு சம்பந்தம் இல்லை. சம்பந்தர் பிராமனர் என்பதால், அவர் ஆரம்பித்து இருந்தால், சூத்திர சைவர்கள் எக்காலத்திலேயும் ஆதீனம் ஆக முடியாது!

சூத்திர சைவர்கள் ஆதீனமாக இருப்பதால், இதை சம்பந்தர் என்ற பிராமனர் ஆரம்பத்து இருக்க முடியவே முடியாது--இது நமது பிராமண பத்திரிக்கைகளின் இடைச்செருகல.

மேலும், இந்த ஆதீனம் ஆரம்பிக்கப்பட்டது சம்பந்தர் காலதிற்கு முன்பு. இப்ப இருக்கும் ஆதீனம் 1975-ல் வந்தார். தோராயமாக, மூன்று ஆதீனங்களின் ஆயுள 100 வருடங்கள் என்றால், இந்த சைவ ஆதீனம் ஆரம்பித்து 10,000 வருடங்கள் ஆகிறது! அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு 8000 வருடங்களுக்கு முன்பு. நித்யானந்தா 293-ஆவது ஆதீனம் என்பதால் இந்தக் கணக்கு. ஆகவே சம்பந்தருக்கும் இந்த ஆதீனத்திறக்கும் எந்த சம்பந்தம் இல்லை.

இந்த 10000 வருடம் பொய் என்று சொல்பவர்கள், இதையும் பார்க்க வேண்டும்! சங்கர மடத்தில் இப்ப இருக்கும் ஆச்சாரியார் 68-வது சங்கரரசாரி. அப்படி இருந்தாலும், சங்கரமடம் 2500 வருடம் பழமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். என்ன கணக்குபா அது? அதை நீங்கள் நம்புகிறீர்கள்.

இதுலே அர்ஜுன் சம்பத் என்று ஒருத்தர். அவரைப் பார்க்கும் போது, மூத்திர சந்தில் பொறுக்கின துண்டு பீடியையே(!) கிள்ளிக் குடிக்கிற ஆள் மாதிரி தெரிகிறது.

இவர் அம்பு. ஏவி விட்டது தலையில் பூசணிக்காயையை சுமக்கும் கோமாளி கோபாலன் மாதிரி தெரிகிறது! இந்து மதம் கெட்டுப் போகும் என்றால், காஞ்சிக்கு செல்லுங்கள். சைவ மதம் 10000 வருடம் பழமை வாய்ந்தது.

முடிவாக, நித்யானந்தாவால் நல்லதோ கெடுதலோ, அது சைவ மதத் தான் பாதிக்கும். இந்து மதத்தை பாதிக்காது. இந்து மதத்திற்கும் நித்யானந்திற்கும் ஒரு சம்பந்தம் கிடையாது...

ஆகவே, இந்து மத காவலர்களே, இங்க சைவ ஆதீனம் கிட்ட வராததீங்க....இந்துமதத்தை காப்பாற்ற வேண்டுமானால் காஞ்சிக்கு செல்லுங்கள்...

kannan சொன்னது…

அருமையான பதிவு திரு.கண்ணன்.
i think that we are in same frequency as our name.

regards from
kannan, abu dhabi.
http://samykannan.blogspot.com/

கோவி.கண்ணன் சொன்னது…

//நித்தியில் ஆரம்பிச்சு லாடன்லே முடிச்சுட்டீங்க போல!

மதுரை, கோபாலுக்கு 200 பவுன் செலவு வைக்கப்பார்த்தார்:(

http://thulasidhalam.blogspot.com/2005/09/blog-post_12.html//

படிச்சேன் னு நினைக்கிறேன்.

//நித்தியால் என்ன வருமோன்னு கலங்கும் நெஞ்சுக்கு நீதி என்ன?//

நித்தியால் ஒண்ணும் வராது, பிடறி தெறிக்க பிடதிக்கு ஓட்டம் எடுக்க வேண்டு அவருக்குத்தான் வரும்

கோவி.கண்ணன் சொன்னது…

//சார்வாகன் கூறியது...
வணக்கம் சகோ,

அருமை சகோ,

நித்தி எதன் அடையாளமும் இல்லை.இது போன்ற நிகழ்வுகளை பயன்படுத்தி இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்ய முயற்சித்தது ஆப்பசைத்த குரங்கின் கதையாக முடிந்தது.

நன்றி//

நாம பேச வேண்டாம்னு நினைகிறதை அவங்க தான் பேச வைக்கிறாங்க. :(

கோவி.கண்ணன் சொன்னது…

// ssr sukumar கூறியது...
police constable-ill irunthu vakkeel neethipathi,teachers,arasu paniyaalar,vyabaari pothu thuraiyil pani puriyum ellorum mikavum kanniyamaaka nadakkum intha samuthaayaththil NITHY ponravarkalin seythi pozhuthu pokke!!!ottu moththa samuthaayame seerazhindu kidakkirathu.ithil nee naan enra pottiyum needhi bothanaiyum yaarai emaarra!!//

ஆமாம் சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) கூறியது...
நான் சுவனப்பிரியனிடம் அவரது இன்னொரு இன்னொரு பதிவில் சொன்னதத்தான் இங்கேயும் சொல்கிறேன்.

முதலில் முசல்மான்கள் மாரடி அடிக்கும் சடங்கை தடுத்து நிறுத்தவோ அல்லது ஜஸ்டிஃபை செய்யவோ முயலுங்கள். (அதுவும் கத்தியை எல்லாம் வைத்து குத்திக் கொள்கிறார்கள் நடு ரோட்டில். பார்ப்பவர்கள் பொறி கலங்குகிறது)
//

இஸ்லாமியர் தவறுகள் இஸ்லாமின் தவறுகள் இல்லைம்பாங்க, வேற யார் பின்பற்றுகிறார்கள் என்று கேட்டால் பதில் வராது.

கோவி.கண்ணன் சொன்னது…

// kari kalan கூறியது...
சிந்திக்க வைக்கும் பதிவு தான் ஆனால் என்ன பயன்? சிந்திக்க வேண்டும் என்று நினைத்தால் தானே. :(//

சிந்திப்பவர்களுக்கு இங்கு ஏராளமான அத்தாட்சிகள் உண்டு.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆகவே, இந்து மத காவலர்களே, இங்க சைவ ஆதீனம் கிட்ட வராததீங்க....இந்துமதத்தை காப்பாற்ற வேண்டுமானால் காஞ்சிக்கு செல்லுங்கள்...//

காஞ்சிக்குச் சென்றால் வாலாட்டிப் பிழைக்கலாம், எப்படி என்று சோ இராமசாமி மற்றும் எஸ்வீ சேகரிடம் தான் கேட்கனும்

கோவி.கண்ணன் சொன்னது…

//Samy Kannan கூறியது...
அருமையான பதிவு திரு.கண்ணன்.
i think that we are in same frequency as our name.//

மிக்க நன்றி சார்

'பசி'பரமசிவம் சொன்னது…

வழக்கம் போல, ஆற்றொழுக்கான நடை; தெளிந்த சிந்தனையின் வெளிப்பாடு.நடு நிலை பிறழாமல், கருத்துகளை உறுதிபடச் சொல்லும் துணிவு.

இது வழக்கமான பாராட்டு அல்ல; அதனினும் மேலானது.
இன்னும் எழுதி, ’எழுத்தில்’ சாதனை புரிய என் மனப்பூர்வ வாழ்த்துகள்.’

கோவி.கண்ணன் சொன்னது…

பாராட்டுக்கு மிக்க நன்றி பரமசிவம் ஐயா

suvanappiriyan சொன்னது…

ஐகோர்ட் போனாலும் செல்லாது:""ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?'' என நிருபர்கள் கேட்டதற்கு, ""ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,'' என்றார் ஆதீனம்.

மதுரை ஆதீன மடத்துக்குள் இந்து அமைப்புகள் போராட்டம் :பெங்களூரில் இருந்து நேற்று மதுரை வந்த ஆதீனம், நித்யானந்தாவுக்கு தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், பக்தர்கள் நடுரோட்டில் குத்தாட்டம் ஆட, இருவரும் ஊர்வலமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். இதற்கு போலீஸ் அனுமதிக்காததால், சீடர்களுடன் கோவிலுக்கு சென்றனர்.

சந்திக்க மறுப்பு:இதற்கிடையே, "நித்யானந்தாவை தேர்ந்தெடுத்தது ஏன்?' என ஆதீனத்திடம் கேட்க, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், உட்பட பலர், மடத்துக்கு வந்தனர்.அவர்களை சந்திக்க ஆதீனம் மறுத்ததால், மடத்தினுள் திருஞான சம்பந்தர் சன்னிதி முன், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "திருஞான சம்பந்தர் வாழ்க' என, அவர்கள் கோஷமிட, பதிலுக்கு நித்யானந்தா பக்தர்கள், "நித்யானந்தாவிற்கு ஜே' என கோஷமிட, பதட்டம் உருவானது. இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.போரூர் திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி, சுரேஷ்பாபு மட்டும் மதுரை ஆதீனத்தை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

-Dinamalar

கோவி.கண்ணன் சொன்னது…

சுவனப் பிரியன்,

பதிவில் கேட்டக் கேள்விக்கு பதிலைக் காணும், 'இங்கே பாருங்கள் ஆடு நனைகிறது...' என்று போட்டு இருக்கிறார்கள் என்று தினமல(ர்) தகவலை அள்ளித்தருகிறீர்கள்.

ஒருவேளை பதிவைப் படிக்காமலேயே போட்ட பின்னூட்டமோ.

சீனு சொன்னது…

நித்தி செஞ்சது சட்டப்படி தப்பில்லைன்னாலும் அவர் பொய் சொன்னதால் இப்போ விலக்கி வைக்கப்படுகிறார்.

Atleast, இப்படிப்பட்ட நித்தியை விலக்கிவைக்க/எதிர்க்கவாவது இந்து மதத்தில் முடிகிறது. தவறு செய்கிறவனை மதம் என்ற காரணத்துக்காக காப்பாத்த முயற்சிக்காமல் எதிர்க்க முடிகிறது என்று சுவனப்பிரியனிடம் சொல்லுங்கள்.

suvanappiriyan சொன்னது…

கோவிக் கண்ணன்!

//சுவனப் பிரியன்,

பதிவில் கேட்டக் கேள்விக்கு பதிலைக் காணும், 'இங்கே பாருங்கள் ஆடு நனைகிறது...' என்று போட்டு இருக்கிறார்கள் என்று தினமல(ர்) தகவலை அள்ளித்தருகிறீர்கள்.

ஒருவேளை பதிவைப் படிக்காமலேயே போட்ட பின்னூட்டமோ.//

முகமது நபி பல திருமணங்கள் செய்தது ஏன்? என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் பல முறை விளக்கியாகி விட்டது. எனவே தான் அந்த மேட்டரை தொடவில்லை.

நித்தியானந்தா என்பவர் இந்து மதத்தில் ஒரு பிரிவினரால் சாமியாராக மத குருவாக பார்க்கப்படுபவர். தான் சந்நியாகம் வாங்கி முற்றும் துறந்த முனிவன் என்று கூறிக் கொண்டு ரஞ்சிதாவோடு சள்ளாபத்தில் ஈடுபட்டதில் கையும் களவுமாக பிடி பட்டவர். 'பெண் வாசனையே இல்லாதவன்' என்று பொய் கூறியுள்ளார். ரஞ்சிதாவுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு விபசாரத்துக்கும் துணை போயுள்ளார். இந்த செய்திகளை மறைக்க பண பேரமும் பேசப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒருவர் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டது நியாயமா என்பதுதான் எனது கேள்வி
இன்றுவரை தனது கூடவே வைத்திருக்கும் ரஞ்சிதாவின் எதிர்காலத்துக்கு உங்களின் பதில் என்ன? காலம் பூராவும் ஆசை நாயகியாக இருந்து விட்டு போக வேண்டியதுதான். இவருக்கு வாரிசுகள் உண்டானாலும் உலக நியதிப்படி நித்தியானந்தனின் வாரிசுகளாக கருதப்பட மாட்டார்கள். இவ்வளவு பிரச்னை உடைய ஒருவரை ஆன்மீக தலைவராக ஏற்கத்தான் வேண்டுமா என்பதே எனது கேள்வி.
.
உடனே இதற்கு முகமது நபியின் வரலாறை கொண்டு வருகிறீர்கள். முகமது நபி செய்து கொண்ட அனைத்தும் திருமண ஒப்பந்தங்கள். இதனால் திருமணம் முடிக்கப்பட்ட பெண்களுக்கோ அவர்களின் வாரிசுகளுக்கோ எந்த இழுக்கும் ஏற்படாது. முகமது நபியின் மனைவியர் அனைவருமே திருமணத்துக்கு பிறகு தங்களின் தகுதியை சமூகத்தில் உயர்த்திக் கொண்டதாகத்தான் வரலாறு. மேலும் சில பெண்கள் முகமது நபியை திருமணம் செய்ய விரும்பியும் அதற்கு உடன்படாமல் தனது தோழர்களுக்கு மணமுடித்து கொடுத்த வரலாறையும் பார்க்கிறோம்.

முகமது நபியை திருமணம் செய்ததால் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் உலக முடிவுநாள் வரை அன்னையாராக பார்க்கப்படுவர். இந்த பாக்கியம் உலகில் வேறு எந்த பெண்களுக்கும் கிடைக்காது.

ஒன்பது வயதில் திருமணம் முடித்த அன்னை ஆயிஷா பூப்பெய்தியவுடன்தான் நபியவர்களின் வீட்டுக்கு குடும்பம் நடத்த அனுப்பப்படுகிறார். தனது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர்களே அறிவிக்கும் ஹதீதுகள் காணக் கிடைக்கின்றது. இல்லறம் சம்பந்தமான பல அறிவிப்புகள் அன்னை ஆயிஷா மூலமாகவே எங்களுக்கு கிடைக்கிறது. இந்த திருமணத்தால் மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பயன் என்று இதனை கூறலாம்..

எனவே இந்த திருமணங்களை காட்டி நித்தியானந்தாவின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாகும்..

dondu(#11168674346665545885) சொன்னது…

நித்தியானந்தாவை எந்த புத்தியுள்ள இந்துவும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் பலதிருமணங்கள், குழந்தைத் திருமண புகழ் முகம்மதுவோ உலகிலுள்ள சகல முசல்மான்களுக்கும் ஆதர்சமாக காட்டப்படுகிறார்.

முசல்மான்கள்தான் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். அது உங்கள் விதி. எங்கள் மதவிஷயங்களுக்கு வந்தால் இவ்வாறுதான் வாங்கிக் கட்டிக் கொண்டு போக நேரிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நம்பள்கி சொன்னது…

ஒரு கேள்வி? இந்த இரு சங்கராச்சாரிகளை புத்தியுள்ள இந்து ஏற்றுக் கொள்வானா?

suvanappiriyan சொன்னது…

டோண்டு சார்!

//முசல்மான்கள்தான் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். அது உங்கள் விதி. எங்கள் மதவிஷயங்களுக்கு வந்தால் இவ்வாறுதான் வாங்கிக் கட்டிக் கொண்டு போக நேரிடும்.//

உங்கள் மதமா! சொல்லவே இல்லே! இன்று வரை சாதி இருந்தே தீர வேண்டும் அதில் உயர்ந்தோர் தாழ்ந்தோரும் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நீங்கள் நித்தியானந்தாவுக்கு கொடி பிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

'பிரமணர்கள் மதம்' என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் சொல்லும் ஹிந்து மதத்தில் வேறு சாதிகள் என்று எண்ணிக்கையை கூட்டிக் காட்ட மட்டுமே பயன்படுத்திக் கொள்வீர்கள். கறிவேப்பிலையைப் போல. :-)

renga சொன்னது…

மதவெறியன் (எ) சுவனப்பிரியன்,

5133. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன்.

5134. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்கள்:

அல்லா கைகுழந்தையான ஆயிஷாவை முகமதுவின் கனவில் காட்டியதால் தான் , 53 வயது முகமது 6 வது ஆயிஷாவை மணத்து, அவரின் 56வது வயதில் 9 வயது ஆயிஷாவுடன் உடலுறவு கொண்டாரா????
சில தற்கால முஸ்லீம்கள் சொல்வது போல் அவருக்கு சிறிது வயது கூட என்றாலும். 54+ வயதுடைய முகமது அவருடன் உடலுறவு கொண்டது தவறு தான்.
இந்த காலத்தில் யாராவது இந்த மாதிரி செய்கிறார்களா???
நீங்கள் சொல்லலாம் - அந்த காலத்தில் இது பரவலாக நடந்தது என்று? .. என்னுடைய கேள்வி ? அறியாமை காலத்தில் நடந்த தவறுகளை மாற்ற வந்தது இஸ்லாம் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் அல்லா எங்கே போயிருந்தான். முகமது இந்த தவறை செய்யும் போது.

பிரச்சனையே இது தான். நீங்கள் எது தவறு என்று தெரியாமல் இருப்பது தான். இப்பொழுது அனேக நாட்டில் 9 வயது சிறுமியுடன் உடலுற்வு கொண்டால் தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள். முகமதுவை அப்படியே பின்பற்றி அவர் மாதிரியே செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறுமிகளை திருமணம் செய்வது தவறு என்று என்னுவது இல்லை. இதில் சட்டத்தை பார்க்காதீர்கள்,நீதி/நியாயத்தை பாருங்கள்- ஏன் உங்களின் மனோபாவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்.. முகமது செய்தது சரியே என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்களின் 9 வயது மகளை 50+ வயதுடைய முதியவருக்கு திருமண‌ம் செய்து கொடுப்பீர்களா அல்லது உடலுறவுக்கு அனுமதிப்பீர்களா?

இந்த கால மனிதர்களுக்கு தெரிந்த தரும நீதி, நியாயம் கூட கடவுளான அல்லாவுக்கு தெரியவில்லையே!!! , சிறுவர்/சிறுமி என்பது எல்லா காலத்திலும் ஒன்றுதான். முகமது . ஆயிஷாவை அவரின் வீட்டில் பொம்மையை வைத்து விளையாட அனுமதித்திருந்தார் தெரியுமா? இந்த மாதிரி பொம்மையுடன் விளையாடும் சிறுமியுடன் படுக்கையில் விளையாடுவதா?

6130. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

இங்கே உள்ள விவாதமே, ”அல்லா”வின் தூதன் முகமது என்று உங்களால் நம்பப்படுபவர் இதை செய்தது தான். அவர் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.
குரானும் அல்லாவும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்றால் , இப்பொழுது எதுக்கு ஒருசில முஸ்லிம் நாடுகளில் சிறுமிகளை ம்ணமுடிப்பது தவறு என்று சட்டம் போட்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு தெரியும் முகமது செய்தது தவறு என்று அதனால் தான் இந்த சட்டம்..
கேள்வி . அல்லா எப்படி இதை அனுமதித்தார்?.
அல்லாவுக்கு தெரியாதா இது தவறு என்று.... இதற்கு காரணம் . பெண்கள் பிள்ளை பெறுவதற்க்கு மட்டும் தான் என்று முகமது(அல்லா) நினைத்தது தான். பெண்களுக்கும் மனது உண்டு, அவர்களும் மனிதர்களே என்ற எண்ணம் முகம்துக்கு (அல்லாவுக்கு)
இல்லை. மனைவியானாலும் அவளின் அனுமதி இல்லாமல் - அவளுக்கு விருப்பம் இல்லாமல் படுப்பற்கு கூப்பிடக்கூடாது . அது தான் மனிதம் , பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை.

குரான் “2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!”

5193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129

நன்றி: tamil blogggers...

renga சொன்னது…

மதவெறியன் (எ) சுவனப்பிரியன்,

5133. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன்.

5134. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்கள்:

அல்லா கைகுழந்தையான ஆயிஷாவை முகமதுவின் கனவில் காட்டியதால் தான் , 53 வயது முகமது 6 வது ஆயிஷாவை மணத்து, அவரின் 56வது வயதில் 9 வயது ஆயிஷாவுடன் உடலுறவு கொண்டாரா????
சில தற்கால முஸ்லீம்கள் சொல்வது போல் அவருக்கு சிறிது வயது கூட என்றாலும். 54+ வயதுடைய முகமது அவருடன் உடலுறவு கொண்டது தவறு தான்.
இந்த காலத்தில் யாராவது இந்த மாதிரி செய்கிறார்களா???
நீங்கள் சொல்லலாம் - அந்த காலத்தில் இது பரவலாக நடந்தது என்று? .. என்னுடைய கேள்வி ? அறியாமை காலத்தில் நடந்த தவறுகளை மாற்ற வந்தது இஸ்லாம் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் அல்லா எங்கே போயிருந்தான். முகமது இந்த தவறை செய்யும் போது.

பிரச்சனையே இது தான். நீங்கள் எது தவறு என்று தெரியாமல் இருப்பது தான். இப்பொழுது அனேக நாட்டில் 9 வயது சிறுமியுடன் உடலுற்வு கொண்டால் தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள். முகமதுவை அப்படியே பின்பற்றி அவர் மாதிரியே செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறுமிகளை திருமணம் செய்வது தவறு என்று என்னுவது இல்லை. இதில் சட்டத்தை பார்க்காதீர்கள்,நீதி/நியாயத்தை பாருங்கள்- ஏன் உங்களின் மனோபாவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்.. முகமது செய்தது சரியே என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்களின் 9 வயது மகளை 50+ வயதுடைய முதியவருக்கு திருமண‌ம் செய்து கொடுப்பீர்களா அல்லது உடலுறவுக்கு அனுமதிப்பீர்களா?

இந்த கால மனிதர்களுக்கு தெரிந்த தரும நீதி, நியாயம் கூட கடவுளான அல்லாவுக்கு தெரியவில்லையே!!! , சிறுவர்/சிறுமி என்பது எல்லா காலத்திலும் ஒன்றுதான். முகமது . ஆயிஷாவை அவரின் வீட்டில் பொம்மையை வைத்து விளையாட அனுமதித்திருந்தார் தெரியுமா? இந்த மாதிரி பொம்மையுடன் விளையாடும் சிறுமியுடன் படுக்கையில் விளையாடுவதா?

6130. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

இங்கே உள்ள விவாதமே, ”அல்லா”வின் தூதன் முகமது என்று உங்களால் நம்பப்படுபவர் இதை செய்தது தான். அவர் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.
குரானும் அல்லாவும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்றால் , இப்பொழுது எதுக்கு ஒருசில முஸ்லிம் நாடுகளில் சிறுமிகளை ம்ணமுடிப்பது தவறு என்று சட்டம் போட்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு தெரியும் முகமது செய்தது தவறு என்று அதனால் தான் இந்த சட்டம்..
கேள்வி . அல்லா எப்படி இதை அனுமதித்தார்?.
அல்லாவுக்கு தெரியாதா இது தவறு என்று.... இதற்கு காரணம் . பெண்கள் பிள்ளை பெறுவதற்க்கு மட்டும் தான் என்று முகமது(அல்லா) நினைத்தது தான். பெண்களுக்கும் மனது உண்டு, அவர்களும் மனிதர்களே என்ற எண்ணம் முகம்துக்கு (அல்லாவுக்கு)
இல்லை. மனைவியானாலும் அவளின் அனுமதி இல்லாமல் - அவளுக்கு விருப்பம் இல்லாமல் படுப்பற்கு கூப்பிடக்கூடாது . அது தான் மனிதம் , பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை.

குரான் “2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!”

5193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129

நன்றி: tamil blogggers...

வேகநரி சொன்னது…

முகமது நபியின் பாலியல் மோசடிகளை தோலுரித்து காட்டிய உங்கள் நேர்மையை எவ்வளவும் பாராட்டலாம்.
//முகமது காலத்தில் 6 வயது சிறுமியாக ஆயிஷா அன்னையை முகமது திருமணம் செய்து கொண்டது போன்று இன்று அவ்வளவு சிறுவயது திருமணங்கள் நடக்காவிடினும் இன்றும் கூட//
எல்லாமே Kafir கள் பெரும்பான்மையாக இருந்து இயற்றிய சட்டங்கள் பாதுகாப்பினால் தான் சிறுமிகள் முகமது காலம் மாதிரியில்லாமல் பாதுகாப்பா வாழ முடியுது.சிறுமிகளை திருமணம் செய்ய தான் முடியல 1400 வருடங்களுக்கு முன் முகமது செய்த மாதிரி பர்தாவாலாவது பெண்களை மூடியாவது வைப்போமேயென்று கடுமையக தான் முயற்ச்சிக்கிறார்கள்

dondu(#11168674346665545885) சொன்னது…

சுவனப்பிரியன்,

மீண்டும் கூறுகிறேன். நித்யானந்தாவுக்கு இங்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் பெண்கள் வீக்னஸ் உள்ள முகம்மது உங்களுக்கு இறைதூத்ர். அப்படியே ஆகட்டும்.

எங்கள் மதம் வேண்டாம் என விட்டுப் போன உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு வெளியாட்களே. அடக்கி வாசியுங்கள் என்றுதான் கூறுகிறேன்.

உங்கள் மத அழுக்குகளைப் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

தன் முகத்தில் நாறும் கசடைப் பற்றி கவலையன்றி எதிரிலிருப்பவர் முகத்தை விமர்சனம் செய்யும் நோய் மனநிலைக்கு சரியான பதிலாக அமைகிறது இந்தப் பதிவு..

நன்றி.

suvanappiriyan சொன்னது…

உங்கள் புரிதல் எந்த அளவு தவறானது என்பதை அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஆதாரபூர்வமான ஹதீதைப் பார்த்து தெளிவு பெறுங்கள்:

இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:


“அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.


முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.


இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.


மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.


நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.


இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.


சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

? சொன்னது…

சு. பிரியர் ஒருவாறு மனைவி விசயத்தை சமாளித்துவிட்டார். ஆனால் முகம்மது திருமணம் செய்யாமல் பெண்ணை தொடாத உத்தமர் போல முன்னிறுத்துகின்றாரே. அவர் திருமணம் செய்யாமல் அடிமை பெண்களுடன் சல்லாபிக்கவில்லையா? அது விபச்சாரம் மட்டுமல்ல கற்பழிப்பும் அல்லவா? கமலஹாசன் மாதிரி மரியம் என்ற கிறுத்துவ அடிமைப்பெண்ணை கற்பமாக்கிவிட்டு பின் திருமணம் புரிந்தவர்தானே நபிகள் நாயகம். மரியம் அவரது பிராபர்டி என கருதி சல்லாபித்தார் நபிகள் நாயகம் என தபாரியின் வரலாறு எனும் புத்தகம் கூறுகிறதாம். இதுதவிர ரஹானா எனும் யூத பெண்ணையும் "வைத்திருந்தவர்"தான் நபிகள் நாயகம். இன்னமும் கணக்கில் வராத ஒன் நைட் ஸ்டேண்டுகள் எத்தனையோ தெரியவில்லை.

மேலும் தனது அடிப்பொடிகளுக்கு அடிமையாக சிறைபட்ட பெண்களுடன் உறவு கொள்ள (கற்பழிக்க) அனுமதித்தவர்தானே நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்லமவர்கள். இந்த திருமணமல்லாத சல்லாங்களுக்கு என்ன பெயர் விபசாரமா அல்லது கற்பழிப்பா?


இன்னொரு கேள்வி: அறியாமைக் காலத் திருமணங்கள் பலவற்றை தடுத்த முகம்மதுவுக்கும் அல்லாஹ்வுக்கும் வயதுக்குகூட வராத பெண் குழந்தை திருமணத்தை தடுக்க ஏன் தோன்றவில்லை. தடுத்தால் முகம்மது ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து வயது பெண்களையும் அனுபவித்தவர் என்ற சாதனை செய்யமுடியாது என்பதினாலா?

suvanappiriyan சொன்னது…

நித்தியானந்தா சம்பந்தமாக தினமலரில் வந்த சில பின்னூட்டங்கள்.

RAJESHKANNA - riyadh,சவுதி அரேபியா
2012-04-30 11:46:05 IST Report Abuse
மதம் மதம்னு ஏன்யா குதிக்றீங்க. முடி இருக்குறவன் அள்ளி முடியுறான். நித்திய பாருங்க, எவ்ளோ முடி. நீளமா இருக்கு. ஆனால் ஒன்னு மட்டும்யா எப்படி இருந்த இந்து மதம் இவங்கள்ட படுற பாடு இருக்கே ம்ம் முடியல அழுதுடுவேன். வேணாம் அழுதுடுவேன் ... விட்ருங்கப்பா

Mahesh Gm - Mumbai (Bombay),இந்தியா
2012-04-30 11:54:33 IST Report Abuse
ஒரு இந்து என்று சொல்ல எனக்கு வேதனையாக உள்ளது ............

Common Man - Madurai,இந்தியா
2012-04-30 15:18:49 IST Report Abuse
இது போன்ற சம்பவங்களை, மனிதர்களை காணும்போது நான் மேலும் மேலும் திடமாக எனக்குள் சொல்லிகொள்வது, "வணக்கத்திற்குரியவன் ஏக இறைவன் மட்டுமே அவன் மாபெரும் கருணையாளன், தனிப்பெரும் கிருபையாளன்." மேலும் "அவன் எல்லா தவறுகளையும் மன்னிக்க கூடியவன் ஒன்றை தவிர - அந்த ஏக இறைவனுக்கு இணை வைப்பது, அதாவது தகுதி இல்லாததையும், இல்லாதவனையும் கடவுளாக நம்புவது, வணங்குவது..." "இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே உதவி கேட்கிறோம், எங்களுக்கு நீ நேரான வழியை காண்பித்து அருள்வாயாக, அவ்வழி நெறிதவறி போகதவர்களின் வழி, உன் கோபத்திற்கு உட்படாதவர்களின் வழி ...." இந்த கருத்தை நிராகரிபவர்களால் தான், சமூகத்தில் நித்தியானந்த போன்ற போலி சாமியார்கள் உருவாகிறார்கள்...........

jeyam - Srivilliputtur,இந்தியா
2012-04-30 15:36:48 IST Report Abuse
மனசாட்சி இல்லாமல் யாரும் பேசக்கூடாது. நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நாம் அனுபவிக்காமல் விடுவோமா? என்பதை யோசித்துவிட்டு பிறகு கமெண்ட் அடிக்க வேண்டும். பக்கத்து வீட்டில் விழுந்த புதையல் ஒருநாள் நம்ம வீட்டிலும் விழும் என்று காத்திருப்போம்.

இமயவரம்பன் - delhi,இந்தியா
2012-04-30 14:44:50 IST Report Abuse
யோவ் நித்தி காசு இருந்தா காக்கா கூட கலர் ஆயிடும்னு நிரூபிச்சுடியேயா ?? பாத்து சூதானமா நடந்துக்கோ . மதுரை காரைங்க கொண்டே புடுவாய்ங்க

siva - chennai,இந்தியா
2012-04-30 12:37:16 IST Report Abuse
உண்மையில் தமிழன் மடையன் என்பது மீண்டும் மீண்டும் அரசியல் மற்றும் ஆன்மீகவாதிகளால் நிரூபிக்க படுகிறது.. எதாவது ஒரு கட்சி கூட தொடர்பு இல்லாமல் ஒரு ஆன்மீகவாதியும் இல்லை .. ஆன்மீகவாதிகள் உண்மையில் நேர்மையாக இருந்தால் கட்சி தொடர்பில்லாமல் இருப்பார்கள்..அதே போல் பணம் இல்லாத சாமியார்களை பரதேசி என்று மக்களும் சீண்டுவதில்லை.. எல்லாம் கால கொடுமை..நடப்பது தமிழ் சங்கம் இருந்த மதுரை என்று என்னும்போது கொஞ்சம் அதிகம் வேதனை வருத்தம் கோபம்.. மக்கள் வழக்கம் போல் சினிமா சீரியல் இன்டர்நெட் அன்று தங்கள் பொழுதுபோக்குகளில் களம் களிக்கலாம்..

Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா
2012-04-30 12:06:53 IST Report Abuse
நீ எப்படி இருந்தாலும் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இருக்கிற ஒரே சந்தேகம் இதுதான். உன்னோட ஆன்மீக ஆராய்ச்சி முடிந்து விட்டதா? அல்லது எத்தனை காலம் இன்னும் தொடரும், அப்படி தொடர்ந்தால் புது அன்பர்களுக்கு அனுமதி உண்டா என்பதுதான்? வேறு எதை கேட்டாலும் பிரயோஜனமில்லை. அதனால் தயவு செய்து பதிலளிக்கவும். மேலும் ஒரு சிறு சந்தேகம், உங்கள் மேல் எப்பொழுதும் பெண் பக்தர்கள் மட்டுமே விழுந்து கட்டி தழுவி ஆன்மீக ஆராய்ச்சி செய்கிறார்கள், ஏன் ஒரு ஆண் மகனும் உங்களின் மேல் விழுந்து ஆராய்ச்சி செய்வதில்லை. தயவு செய்து விளக்கவும்.

சார்வாகன் சொன்னது…

ந‌ண்பர் கோவி,
நித்தி போன்றவர்கள் சமுதாயத்தின் நோய்.அவனை இந்திய சமயத்தின் அடையாளமாக காட்ட முயல்வது விஷமத்தனம்.
நம் சகோக்கள் வரம்பு மீறுவதால் நாமும் வரம்பு மீறுவோம்!
வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட[அடிமைப்பெண் அல்லது பணிப்பெண்] பெண்களிடம் அவர்கள் திருமண்ம் ஆனவர்களாக இருந்தல் கூட ----------ம் என அல்லாஹ் அல்குரானில் வழங்கிய அமுத மொழி பாரீர்.இதனை கடைபிடித்தே இன்றும் அரபியர்கள் பணிப்பெண்களை பாலியல் தொல்லைகள் கொடுப்பது அனைவரும் அறிந்த விடயமே!
4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
&&&&&&&&&&
*நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம். * (அல் குர்ஆன் 33:50)
&&&&&&&&&
*இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர
பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள். இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு
மனைவியரை மாற்றிக் கொள்வதும். அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.* (அல் குர்ஆன் 33:52)
&&&&&&&&&
*ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.* (அல் குர்ஆன் 23:6)
&&&&&&&&&&&
*தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்
கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.* (அல் குர்ஆன் 70:30)

Darren சொன்னது…

//பலதார திருமணத்தை உலகின் தலைச்சிறந்த கொள்கை 1400 ஆண்டுகளுக்கு முன்பாக காட்டப்பட்ட அற்புத வழிகாட்டல் என்று யாரும் தூக்கிப் பிடிக்கவில்லை. //

well said

bluemoon சொன்னது…

enna solla varukinreer? ethaiyume yosikkaamale pesuvingalo???

கோவி.கண்ணன் சொன்னது…

// முகமது நபி பல திருமணங்கள் செய்தது ஏன்? என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் பல முறை விளக்கியாகி விட்டது. எனவே தான் அந்த மேட்டரை தொடவில்லை.
//

நண்பர் சுவனப்பிரியன், என்ன விளக்கினீர்கள் ? உப்புப் புளி போட்டா ? நான் இங்கே கேட்டு இருப்பது உங்கள் அன்னை ஆயிசா பற்றியது அல்ல, அதை நான் இங்கு கொடுத்து இருப்பது உங்கள் மதத்தில் இன்றும் தொடரும் இளம் வயது திருமணத்தைச் சுட்டிக்காட்டவே. நான் கேட்டிருப்பது ஜைனப் திருமணம் பற்றி தான், முகமது தாம் வளர்ப்பு மகனின் மனைவி என்றே தெரிந்தும், குறைவான ஆடையில் ஜைனப்பைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு திருமணம் செய்து தவறிழைத்த தாழ்வு மனப்பாண்மையால் உணர்ந்தே பிற (திருமணம் ஆனா / ஆகாத) பெண்களுக்கு பர்தாவை வழியுறுத்தினார் என்றும் சொல்லுகிறார்கள். ஒரு இறைத்தூதரின் தவறு ஒட்டு மொத்தப் பெண்களின் ஆடையை தீர்மானிக்கிறது. ஜைனைப்பை முகமது மணந்தது எந்த வகையான விளக்கம் என்று நீங்கள் விளக்கியுள்ளீர்கள் என்பதை விளக்கவும். இங்கே இந்தியாவில் மாற்றான் மனைவியை கவர்ந்ததே மிகப் பெரிய தவறு என்பதால் இராமயணம் என்கிற காவியமே படைக்கப்பட்டுள்ளது, உங்கள் முகமது நபியின் ஒழுக்கம் உங்களுக்கு ஏற்புடையது போலவே நித்தியின் ஒழுக்கத்தை நித்தியைப் பின்பற்றுபவர்கள் ஏற்றுக் கொள்வார்கள், அதில் உங்களுக்கு என்ன சலிப்பு ? தவிர நீங்கள் என்னவோ நித்தி - ரஞ்சிதா மேட்டர் நடக்காவிட்டால் தாய் மதம் திரும்ப நினைத்திருந்தது போல் ஆதங்கப்படுகிறீர்களே அது ஏன் ?

//நித்தியானந்தா என்பவர் இந்து மதத்தில் ஒரு பிரிவினரால் சாமியாராக மத குருவாக பார்க்கப்படுபவர். தான் சந்நியாகம் வாங்கி முற்றும் துறந்த முனிவன் என்று கூறிக் கொண்டு ரஞ்சிதாவோடு சள்ளாபத்தில் ஈடுபட்டதில் கையும் களவுமாக பிடி பட்டவர். 'பெண் வாசனையே இல்லாதவன்' என்று பொய் கூறியுள்ளார். ரஞ்சிதாவுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு விபசாரத்துக்கும் துணை போயுள்ளார். இந்த செய்திகளை மறைக்க பண பேரமும் பேசப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒருவர் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டது நியாயமா என்பதுதான் எனது கேள்வி//

இருந்துவிட்டுப் போகட்டுமே, அதில் என்ன முஸ்லிம்களின் பணம் விரயம் ஆகிறதா ? நீங்கள் அதில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா ? அதைத் சுட்டிகாட்டி தூற்றி உங்கள் மதத்திற்கு ஆள் பிடிக்க முடியுமா என்று தானே பார்கிறீர்கள், இதில் நீங்கள் ஆதங்கப்பட என்ன இருக்கிறது ? மலேசியாவில் ஒரு சீன அமைச்சர் தன் செயலாளருடன் அந்தரங்க உறவில் இருந்ததைப் படம் எடுத்து அவரை அசிங்கப்படுத்த முயன்றார்கள், அவர் மிக அழகாகச் சொன்னார், இதுவே நான் ஒரு இஸ்லாமிய அமைச்சராக இருந்தால் செயலாளரை இரண்டாம் மனைவி ஆக்கி இருப்பேன் ஒருவர் கூட அதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் என்று, உங்கள் மத திருமண ஒழுக்கம் என்று சுட்டிக் காட்டப்படுவது அவ்வளவு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்றுவரை தனது கூடவே வைத்திருக்கும் ரஞ்சிதாவின் எதிர்காலத்துக்கு உங்களின் பதில் என்ன? //

ரஞ்சி மேடம் உங்களிடம் வந்து அழுதாரா ? சுவனப்பிரியன் சார் காப்பாத்துங்க, உங்க மதத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினாரா ? அவர் நித்தியோடு 'சந்தோசமாகத்தானே' இருக்கார், அதில் உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் ? தவிர நான் என்ன ரஞ்சிதாவின் பாதுகாவலனா நான் பொறுப்பேற்று பதில் சொல்ல ? ஒருவேளை ரஞ்சி மேடல் என்னிடம் அழுது முறையிட்டால் உங்களிடம் அனுப்புகிறேன், நீங்க ரஞ்சி ரஜினா ஆக்கி உங்க சொர்க்கத்து பதவியை வாங்கிக் கொடுங்க.

//காலம் பூராவும் ஆசை நாயகியாக இருந்து விட்டு போக வேண்டியதுதான். இவருக்கு வாரிசுகள் உண்டானாலும் உலக நியதிப்படி நித்தியானந்தனின் வாரிசுகளாக கருதப்பட மாட்டார்கள். இவ்வளவு பிரச்னை உடைய ஒருவரை ஆன்மீக தலைவராக ஏற்கத்தான் வேண்டுமா என்பதே எனது கேள்வி.//

உங்களிடம் நித்தியை நாங்கள் ஆன்மிகத்தலைவராக ஏற்றுக் கொண்டோம் என்று யார் சொன்னார்கள் ? 1008 மடங்கள் இருக்கு அதுல அவன் போனது ஒரு மடம்.
ஆசை நாயகிக்கும் ஆசை மனைவிகளுக்கு என்ன சார் வேறுபாடு ? வாரிசு உரிமையை ? அதெல்லாம் டி என் ஏ சோதனைகள் பார்த்துக் கொள்ளும் நீங்க கவலைப்படாதீர்கள்
.
//உடனே இதற்கு முகமது நபியின் வரலாறை கொண்டு வருகிறீர்கள். முகமது நபி செய்து கொண்ட அனைத்தும் திருமண ஒப்பந்தங்கள். இதனால் திருமணம் முடிக்கப்பட்ட பெண்களுக்கோ அவர்களின் வாரிசுகளுக்கோ எந்த இழுக்கும் ஏற்படாது. முகமது நபியின் மனைவியர் அனைவருமே திருமணத்துக்கு பிறகு தங்களின் தகுதியை சமூகத்தில் உயர்த்திக் கொண்டதாகத்தான் வரலாறு. மேலும் சில பெண்கள் முகமது நபியை திருமணம் செய்ய விரும்பியும் அதற்கு உடன்படாமல் தனது தோழர்களுக்கு மணமுடித்து கொடுத்த வரலாறையும் பார்க்கிறோம்.//

அடேங்கப்பா முகமது இன்னும் 80 வயது வரை வாழ்ந்திருந்தார் என்றால் உங்களுக்கு 100க் கணக்கான அன்னைகள் கூடக் கிடைத்திருப்பார்கள், எத்தனையோ பெண்கள் இருக்கும் போது வளர்ப்பு மகனின் மனைவியை உங்களுக்கு அன்னையாக்கி வைத்திருந்ததை நினைத்து அவர்காலத்து மற்றப் பெண்கள் ஏங்கி இருக்கமாட்டார்களா ? பெண்களுக்கு மறுமண உரிமை தந்த உங்கள் முகமது நபி தனக்குப் பின்னால் தம்முடைய இளம் விதவைகளுக்கு ஏன் அந்த உரிமையைக் கொடுக்கவில்லை ? முகமது உறவுகளுக்குள் கட்டுப்பட்டவர் அல்ல என்று அல்லா அவருடைய மனைவியருக்கும் பொருந்தும் என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறாரா ?

//முகமது நபியை திருமணம் செய்ததால் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் உலக முடிவுநாள் வரை அன்னையாராக பார்க்கப்படுவர். இந்த பாக்கியம் உலகில் வேறு எந்த பெண்களுக்கும் கிடைக்காது. // இன்னும் ஒரு 100 பேருக்காவது அந்த பாக்கியத்தை அவர் ஏற்படுத்தி இருக்கலாம், அவர் காலத்தில் அதற்கு வாய்புகள் இருந்தும் குறைந்த அளவே பெண்களை அவ்வாறு தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதில் என்ன பெருந்தன்மை உண்டு ?

//ஒன்பது வயதில் திருமணம் முடித்த அன்னை ஆயிஷா பூப்பெய்தியவுடன்தான் நபியவர்களின் வீட்டுக்கு குடும்பம் நடத்த அனுப்பப்படுகிறார். தனது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர்களே அறிவிக்கும் ஹதீதுகள் காணக் கிடைக்கின்றது. இல்லறம் சம்பந்தமான பல அறிவிப்புகள் அன்னை ஆயிஷா மூலமாகவே எங்களுக்கு கிடைக்கிறது. இந்த திருமணத்தால் மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பயன் என்று இதனை கூறலாம்.. //

மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் சாபம் என்று வேண்டுமானால் சொல்லலாம், முகமது 9 வயது சிறுமியை மணம் முடித்துக் கொண்டது போல் நானும் செய்கிறேன் என்று எவரேனும் கிளம்பினால் அதை எவ்வாறு தடுக்க முடியும் ? அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா ?

//எனவே இந்த திருமணங்களை காட்டி நித்தியானந்தாவின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாகும்.. //

நித்தி செயலை யாரும் நியாப்படுத்தவில்லை, நீங்கள் அதைப் பற்றி எழுதி உங்கள் மத அழுக்குகளை எல்லோரும் பேசும் படி செய்து உங்கள் மதத்திற்கு நீங்களே இழுக்கு தேடித்தந்துள்ளீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் சொன்னது…
நித்தியானந்தா சம்பந்தமாக தினமலரில் வந்த சில பின்னூட்டங்கள்.
//

தினமலத்தை நான் நுகர்வது இல்லை, தினமலத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூவும் உங்களவர் அதை நுகர்வது முரண்பாடாக இருக்கிறது, உங்கள் தினமலம் தொடர்பான பின்னூட்டங்கள் நான் வாசிக்கப் போவதும் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

// renga கூறியது...
மதவெறியன் (எ) சுவனப்பிரியன்,//

தனி மனித தாக்குதல் வேண்டாம்., என் பதிவில் அவ்வாறு இடம் பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை, நான் சுவனப் பிரியரை மதவாதி அல்லது மதப்பற்றாளர் என்று மட்டுமே சொல்லியுள்ளேன், மதவெறியன் என்று சொல்லும் அளவுக்கு மதவெறியோடு அவர் இன்னும் நடந்து கொள்ளவில்லை. தவிர அவருடைய நம்பிக்கைக் குறிய நபிகள் நாயகத்தை அவன் இவன் என்று விளிப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள், இங்கு நான் இஸ்லாம் குறித்து செய்துள்ள விமர்சனங்களில் என் கற்பனை எதுவும் கிடையாது, அவர்களின் வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் சுட்டியுள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யலாம்

suvanappiriyan சொன்னது…

கோவி கண்ணன்!
//நான் கேட்டிருப்பது ஜைனப் திருமணம் பற்றி தான், முகமது தாம் வளர்ப்பு மகனின் மனைவி என்றே தெரிந்தும், குறைவான ஆடையில் ஜைனப்பைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு திருமணம் செய்து தவறிழைத்த தாழ்வு மனப்பாண்மையால் உணர்ந்தே பிற (திருமணம் ஆனா / ஆகாத) பெண்களுக்கு பர்தாவை வழியுறுத்தினார் என்றும் சொல்லுகிறார்கள்.//

குறைவான ஆடையில் ஜைனபை பார்த்ததாக எந்த ஹதீதுகளும் இல்லை. இஸ்லாமிய எதிரிகளால் களங்கம் சுமத்த வேண்டும் என்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட ஒன்று. ஆதாரமில்லாத செய்தி அது. இனி அந்த திருமணத்தைப் பற்றி பார்ப்போம்.

அத்தை மகளான ஜைனப் அவர்கள் சிறு வயது முதலே முகமது நபி அவர்களின் வீட்டில் வளர்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள்.
.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது.
.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.....
.

suvanappiriyan சொன்னது…

....'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
.
இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.

ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)

இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
.
ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள்.

இதுதான் அங்கு நடந்த உண்மை நிகழ்வே ஒழிய நீங்கள் குறிப்பிடும்படி அரைகுறை ஆடையில் அவரை பார்த்து விட்டு திருமணம் முடிக்கவில்லை.

suvanappiriyan சொன்னது…

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் உள்ளது தொடூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் - இளைஞர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டா டினர் (14.4.2012).
அண்ணலின் உருவம் பொறித்த கல்வெட்டு ஒன் றினையும் வைத்துள்ளனர்.
இதனைப் பொறுக்க முடியாத உயர்ஜாதி ஆண வக் கூட்டம் இரவோடு இரவாக அம்பேத்கருக்கு விழா நடத்திய இளை ஞர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி எனும் தோழர் (வயது 38) மருத்துவ உதவி பலனின்றி மரணம் அடைந்துள்ளார் என்பது என்னே கொடுமை!
அடித்தவர்கள் சூத் திரர்கள் அடிபட்டவர்கள் பஞ்சமர்கள் என்பதுதானே சமூக நிலை? இந்த இரு வரும் இந்து மதம் என்ற சூளையில் விறகாகப் பயன் படுத்தப்படுபவர்கள்தானே.
பார்ப்பனீயம் திணித் துள்ள ஜாதி அடுக்குமுறை (Graded in Equality) பற்றி அண்ணல் எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறி யுள்ளார்!
பறையன் பட்டம் ஒழியாமல் உன் சூத்திரப் பட்டம் ஒழியவே ஒழியாது என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எடுத்துக் கூறவில்லையா?
இந்தத் தலைவர்கள் எதற்காகப் பாடுபட்டார்கள் என்பதை அறிய வேண் டாமா? இவர்களின் அய ராத தொண்டின் காரண மாக ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றவர்கள் அந்தத் தலைவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கை களைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
இன்னும் சொல்லப் போனால் இந்து மத சாத்திரப்படி பஞ்சமர்கள் நான்கு வருணத்துக்குள் (டீரவ ஊயளவந) கொண்டு வரப்படாததால் அசிங்கத் திலிருந்து தப்பித்து விட் டனர். நான்கு வருணத் துக்குள் சிக்கிய சூத் திரனோ, பிர்மாவின் காலில் பிறந்த ஜாதி ஆக்கப் பட்டான்! சூத்திரன் என் றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்றுதானே பொருள்?
இந்த யோக்கியதையில் உள்ளவர்கள், தமக்கு மேல் உயர் ஜாதிக்காரன் எனும் தன்மையில் சூத்திரர்களின் தலையில் காலை வைத்து அழுத்திக் கொண்டிருப் பவன் பக்கம் தன்மான உணர்வின் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் முகத்தை வெளிப்படுத் தாமல், தமக்கும் கீழே பஞ்சமர் இருக்கிறார் என்ற போலி பெருமையுடன், அவர்களைத் தாக்குவது அறிவுடையோர் செயலும் அல்ல - மனித உரிமைத் தன்மையும் அல்ல!
- மயிலாடன்
ViDuthalai

இந்த நிகழ்வு என்றோ நடந்ததல்ல...சில நாட்களுக்கு முன்பு நமது தங்கத் தமிழகத்தில்தான்.

குடுகுடுப்பை சொன்னது…

:)))))))

suvathula mothuna mandaithan udaiyum.

சிரிப்புசிங்காரம் சொன்னது…

அவனவன் அவனவன் வேலையைப் போய் பாருங்கடா...வந்துட்டானுங்க வியாக்யானம் பேசருத்துக்கு..... அவனவன் கிட்ட ஆயிரத்துக்கு மேல நாத்தமடிக்கிற விஷ்யமிருக்கு..போங்கடா போயி வேலைய பாருங்க......

சுதா SJ சொன்னது…

உலகத்தில் உண்மையிலேயே சாந்தியும் சமாதானமும் வர வேண்டும் என்றால் முஸ்லிம் மதம் உலகம் முழுதும் தடை செய்ய வேண்டும் .....

அவர்கள் அடிக்கடி சொல்லும் (பேச்சில் மட்டும்) சாந்தியையும் (இது வேற சாந்தி... அவ்வ்) சமாதானத்தையும் இல்லாமல் செய்வது இந்த முஸ்லிம் மத மார்க்கம் கொண்டவங்களே :(

சார்வாகன் சொன்னது…

நண்பர் சுவனப்பிரியன்

1.//அத்தை மகளான ஜைனப் அவர்கள் சிறு வயது முதலே முகமது நபி அவர்களின் வீட்டில் வளர்கிறார்கள். //
நீங்கள் கூறிய விடயங்களுக்கு மட்டும் ஆதாரம் தேவை இல்லையா?
40 வயது கதிஜா மூன்றாவது கணவராக 25 வயது முகமதுவை வை மண்முடிக்கும்[பொ ஆ 595] போது அவரே பெரிய தந்தை அபு தாலிப்பின் த‌ய்வில் வாழ்ந்தவர் என்பதை அறியவில்லையா?. http://wikiislam.net/wiki/The_Timeline_of_Muhammad

பிறகு எப்படி அவர் தய்வில் இன்னொருவர் வாழ முடியும்?.வசதியான மனைவி இருக்கும் வரை முகமது வேறு திருமணம் பற்றி நினைத்து பார்க்க வில்லை என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். ஜைனப் பிறந்த வருடம் பொ.ஆ 593.முகமது கதீஜா திருமணத்தின் போது அவருக்கு 2 வயது.

http://www.abovethethrone.com/arsh/articles/exnxg-the-hadeeth-of-anas-zaynab-used-to-boast-that-allaah-gave-her-in-marriage-from-above-the-seven-heavens.cfm

2.. ஜைனப் திருமணம் பற்றிய வசனத்தை ஏன் மறைக்கிறீர்.சரியான வசனத்தை படியுங்கள்!!!!!.அல்குரான் 33.37 மனதில் மற்றவர்களுக்கு பயந்து முகமது என்ன மறைத்து வைத்தார்?

//33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.//

3 குரானின் படி அடைக்கலம் புகுந்த பெண்களிடன் உறவு கொள்வது தவறு இல்லை.ஆகவே இந்த இலக்கணத்தின் படி நித்தி இரஞ்சிதா விடயம் தவறு இல்லை.அவர் பிரம்மச்சாரி என்று வேடம் போட்டதால் மட்டுமே இந்து மதத்தினர். அவனை ஒதுக்கினர்.

நித்தி மட்டும் இஸ்லாமுக்கு மாறினால் தவறு சரியாகிவிடும்.

நன்றி

வேகநரி சொன்னது…

ஒரு இஸ்லாமியருக்கு நீங்கள் கொடுத்த விளக்கங்கள்(செவ்வாய்1 மே2012 12:31) அருமை.
ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை முகமது திருமணம் செய்தது எவ்வளவு மோசமான பாலியற் குற்றம்! அதை செய்தவரை புனிதமானவர் என்பது தான் தலையை சுற்ற வைக்கிறது.
//dondu(#11168674346665545885) கூறியது...பெண்கள் வீக்னஸ் உள்ள முகம்மது உங்களுக்கு இறைதூத்ர்.//
டோண்டு சார் முகமது செய்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு soft ஆக்கியுள்ளார்.கிளிண்டன் பெண்கள் வீக்னஸ் உள்ளவர். அதனால் தனது மனைவிக்கு மட்டும் துரோகம் செய்து இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார். கவனிக்கவும் அவர் அந்த பெண்ணை பலவந்தமாக அடையவில்லை. பின்பு எல்லேரிடம் மன்னிப்பும் கேட்டு கொண்டார்.ஆனால் முகமது பெண்களை பலாத்காரமாக அடைந்தவர்.இவர் தான் இவர்களின் புனித தூதர்.
ஸாபியாவின் தந்தையையும் கணவரை கொன்றுவிட்டு ஸாபியா தனதாக்கி கொண்டவர்.எந்த ஒரு பெண்ணாவது தனது கணவரையும் தந்தையையும் கொன்றவரை விரும்பி திருமணம் செய்வார்களா?

suvanappiriyan சொன்னது…

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.
- இரவீந்திரநாத் தாகூர்

-Viduthalai
27-04-2012

வேகநரி சொன்னது…

//சார்வாகன் கூறியது... குரானின் படி அடைக்கலம் புகுந்த பெண்களிடன் உறவு கொள்வது தவறு இல்லை.ஆகவே இந்த இலக்கணத்தின் படி நித்தி இரஞ்சிதா விடயம் தவறு இல்லை.அவர் பிரம்மச்சாரி என்று வேடம் போட்டதால் மட்டுமே இந்து மதத்தினர் அவனை ஒதுக்கினர்.நித்தி மட்டும் இஸ்லாமுக்கு மாறினால் தவறு சரியாகிவிடும்.//
நித்தியோடு நாங்களும் இஸ்லாமுக்கு மாறினால் புனித இரஞ்சிதா எங்களுக்கெல்லாம் புனித அன்னையார் ஆகிவிடுவார்கள்.

வவ்வால் சொன்னது…

கோவி,

நீங்கள் சொன்னது போல நித்தி இந்து மதத்தின் ஏகப்போக பிரதிநிதியல்ல ஏன் மதுரை ஆதினமும் அல்ல, ஒரு சிறு பின் தொடர்பாளர்களின் மையம் மட்டுமே.

இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் பெருவாரியான பொது மக்கள் ,அதுவும் இந்துக்களே இவர்களை தூற்றவே செய்கிறார்கள் , ஆனால் இஸ்லாத்தில் எல்லாரும் முகமதின் பாலியல் வேட்கைகளை புனிதப்படுத்தி மகிழ்கிறார்கள் ,ஏன் ஒருவரும் குற்றம் சொல்லவில்லை என்ற கேள்விக்கு சு.பிரியனிடம் பதில் உண்டா?

ஹதீஸ் எல்லாம் காட்ட இப்போது முடியாது , முகமது மரணப்படுக்கையில் இருக்கும் போதும் ஆயீஷாவை பிரஞ்ச் கிஸ் செய்துக்கொண்டே உயிர் விட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது அதாவது ஆயிஷா இப்படி சொல்கிறார் எனது உமிழ் நீரும் முகமது அவர்களின் உமிழ் நீரும் ஒன்றாக கலந்தது அவர் உயிர் விடும் போது என. எப்படி உமிழ் நீர் ஒன்றாக கலக்கும் :-))

நித்தி , மதுரை ஆதினத்தினை பின் தொடர்பவர்கள் கல்ட் குருப் வகை அவர்கள் எல்லாம் இந்து மத பற்றாளர்களோ அல்லது நித்தி இந்து மதத்தின் ஒரே ஆளுமையோ அல்ல. என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்.

navidmum சொன்னது…

//சுவனப்பிரியன் கூறியது...// அதாவது உளறியது அல்லது சொதப்பியது

முழுசா படிக்கவே முடியலே. என்ன என்ன மோ உலரியிருகார்


இந்த ஆளுக்கு ஏதாவது அறிவுன்னு இருக்காங்க ? இஷ்டத்துக்கு உலரார் ? என்னங்க பேசறார் இவர் ? இணையதால வந்த சில கேடுகள்ள இவரோட தளமும் ஒன்னு.

எதுக்கு மத்த மதத்தை கிண்டல் அடிக்கணும். இந்த மாதிரி பதில் பேச முடியாம வாங்கி கட்டிக்கணும்? ஹிந்து மததில அவன் என்னமோ பண்ணிட்டு போறான். அதை strong aa அங்கைய நாக்க புடிங்கற மாதிரி கேக்க ஆள் இருக்கு. இந்தாளுக்கு என்ன?



அடிமை மாதிரி 18 வருஷம் வசிருந்தானே சவுதியில ஒரு மனுஷனை. அந்த ராட்ஷச நாய்க்கு என்ன தண்டனை ஷரியத் சட்டம் படி குடுதாங்குனு கேட்டா 'அது' 'இது' ன்னு என்ன என்ன மோ உளறி எஸ்கேப் ஆயிட்டார். கடைசி வரைக்கும் ஷரியத் படி தண்டனை கிடைசுதானே தெரியல. என் எண்ணம் படி கண்டிப்பா கிடைச்சு இருக்காது. இங்க வந்து உளற வந்துட்டார்.

kumar சொன்னது…

என்னதான் நாத்திகர் என்று சொல்லிகொண்டாலும் தாய் மத
பாசம் விடுவதாயில்லை.சும்மாவா சொன்னார்கள்
நீர் அடித்து நீர் விலகுவதில்லை என்று.
அது சரி புத்தியுள்ள தீவிர ஹிந்து டோண்டு அய்யா
ஏன் கடைசிவரை சொல்லவேயில்லை? காஞ்சி சுப்புணியை
ஏற்கிறாரா இல்லையா என்று?

Gujaal சொன்னது…

என்னுடைய ஊகம்: சமீபத்தில் மதுரை ஆதீனம் பிடதிக்கு சென்ற போது அவர் நித்தியாகி, நித்தி லெனின் கருப்பன் ஆகி, அதனால் நித்தி இளைய ஆதீனம் ஆகியுள்ளார் என்பதே.

thiyagarajan.s சொன்னது…

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். உங்களுக்கு மட்டும் தான் அவை தேவை.மிகவும் உண்மை..அவர்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். அவர்களுக்கு மட்டும் தான் எபோதும் அவை தேவை.

thiyagarajan.s சொன்னது…

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். உங்களுக்கு மட்டும் தான் அவை தேவை.மிகவும் உண்மை..அவர்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். அவர்களுக்கு மட்டும் தான் எபோதும் அவை தேவை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்