பின்பற்றுபவர்கள்

19 ஜூலை, 2009

சுவையார்வ பதிவு/பதிவர் !

எனக்கு விருது கொடுத்தவர் பதிவர் திரு இளைய பல்லவன், இலக்கிய ஆர்வமிக்கவர், வரலாறுகளை மிகுதியாகப் படிப்பவரென்பதால் தான் வரலாற்றுக் குறுநாவல்களை (சக்கர வியூகம் பாகம் 1 & 2 ) வலைப்பதிவில் எழுதி வருகின்றார். அவரது வரலாற்றுத் தொடர் பாகம் ஒன்றை விமர்சனம் செய்திருக்கிறேன். அவர் எனக்கு விருது கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது. விருது கொடுப்பதற்கான காரணங்களாக எனது எழுத்துத்தன்மை குறித்து குறிப்பிட்டு சொல்லி இருந்தார். நடுநிலையாக எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். பொதுவாக 'நடுநிலை' என்ற சொல்லில் ஒப்புதல் இல்லை, நடுநிலையாக எழுதுபவர்கள் யாருமே கிடையாது. நாம் எழுதுவது அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள சமூகம், அரசியல் சார்ந்தவையே, அரசியலில் நடுநிலையாக இருப்பதாகச் சொல்ல முடியும், அதுவும் கூட எது சிறந்தது என்கிற நோக்கில் தான், எதிர்ப்பு அல்லது ஆதரவு என்கிற நிலை ஒன்று இருந்தே தீரும் என்றே நினைக்கிறேன், அதில் இருக்கும் தீவிரத் தன்மையின் ஏற்ற இரக்கம் தான் ஒரு வேளை நடுநிலையோ தெரியவில்லை. எனக்கு திமுக / அதிமுக இரண்டையும் பிடிக்கவில்லை என்று மாற்று அரசியல் வாதிக்கு வாக்களிப்பது நடுநிலையா ? அதுவும் ஒரு எதிர்நிலை தானே. சமூகம் சார்ந்த பார்வைகள் எழுத்துகள் இவற்றில் கூட ஒருவர் நடுநிலையாக எழுதிவிட முடியாது. சமூகம், அரசியல் இவற்றில் நடுநிலை என்றால் அந்த சமூகம் சேர்தவர் அல்லாதோர் (ஆப்ரிக்கர் தமிழர்களைப் பற்றி எழுதுவது போன்று), வெளியே இருந்து கவனித்து எழுதுபவர்கள் தான் நடுநிலையாக எழுதுவார்கள். மொழிக் கொள்கைகள், தமிழ் சமூகம், திராவிடம் இவற்றைப் பற்றிய கருத்துகள் எதிராக வரும் போது இவற்றிற்கு ஆதரவாக எழுதும் போக்கு என்னிடம் உண்டு. ஒரு பார்பனர் பார்பனராக நடந்து கொள்ளாமல் பிறரைப் போல் நடந்து கொண்டு, பார்பனர்களைக் குறைத்து எவராவது சொல்லும் போது 'எல்லா பார்பனரும் அப்படி இல்லை என்பதை என்னைப் பார்த்துமா நீங்கள் உணரவில்லை ?' என்று அவர் கேட்டால் அவர் பார்பனர்களுக்கு எதிரான சிந்தனை உடையவர் என்று சொல்ல முடியுமா ? அல்லது வக்காலத்து வாங்க காதிருந்தார் என்று சொல்ல முடியுமா ? அவர் அப்படி சொல்லுவது நடுநிலையா ? தாம் நடுநிலை என்று எவரும் தனக்குத்தானே சொன்னால் அது கேள்விக் குறியானது. எனது எழுத்துகள் நண்பர் இளைய பல்லவனுக்கு நடுநிலையாக தெரிந்ததற்கு நான் பொறுப்பு அல்ல. :)

நடுநிலை என்பது ஒரு மாயச் சொல், 'பிரபலம்' பற்றிய சொல்லின் தன்மையை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள். :)


*****

நான் இந்த விருதை பலருக்கும் கொடுக்க வேண்டும். நடு இரவு 2 மணிக்கு மேல் யோசித்தால் ஒருவரைத் தவிர சட்டென்று யாருமே நினைவுக்கு வரலை. நேற்று படித்த ஒரு பதிவு மிகவும் மனம் கவர்ந்தது, தமிழ் சமூகத்தில் இருக்கும் போலித் தன்மையை அதாவது, பெண்களின் புடவையில் காக்கப்படும் தமிழ் பண்பாடு குறித்து, கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.


போன நூற்றாண்டில் செத்த மூளை கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்


"அதிலும் ஒழுக்கம் என்கிற விடயம் பெரும்பாலும் கற்பு நோக்கியும் பெண்கள் நோக்கியும் தான் அதிகம் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இங்கு நடைபெறூம் திருமண விழாக்கள். ஆண்கள் கோட்டும் சூட்டும் போட்டு களைகட்ட பெண்கள் எங்காவது சேலை கட்ட தெரிந்த ஒருவரை தேடிப் பிடித்து சேலை அணிந்து தலையில் பிளாஸ்டி பூ அணிந்து ஒரு நாற்பது பவுண் நகையை காவிக்கொண்டு வந்தால் அது தமிழ் கலாசார காப்பு. சில சமயம் இன்னும் கொஞ்சம் கூடிய தமிழ்ப் பற்றான ஆண்கள் குர்தா அணிந்து தம்மை நிரூபிப்பதும் உண்டு. தப்பி தவறி யாராவது ஒரு பெண் சேலை தவிர்த்து வேறு உடை அணிந்து வந்தால் அந்த பெண்ணின் கற்பு அன்றைய தினம் பூரணமாக விவாதிகப்படும். ஏன் பொதுவாக மாப்பிள்ளைகள் கூட மாப்பிள்ளை சூட் என்றொன்று அணிந்து பாப்பிள்ளைகளாகத்தான் (எமது ஊரில் பொம்மைகளை பாப்பிள்ளைகள் என்றும் சொல்வார்கள், சில சமயங்களில் ஆண்களின் இந்த மணக்கோலம் கம்பீரம் தொலைந்த பொம்மைகள் போன்றும் எனக்குத் தோன்றுவது உண்டு) காட்சி தருகின்றனர். முதலில் யோசித்துப் பாருங்கள். பெண்கள் சேலை அணிந்து தான் கலாசாரத்தை காக்க வேண்டும் என்றால் ஆண்களும் வேட்டிதானே அணியவேண்டும். பிறகெப்படி கோட்டும் சூட்டும் குர்தாவும் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின."

*****

மீதியை அவர் பதிவிலேயே படியுங்கள்,



அவர் நகைச்சுவையாக அந்த இடுகையை எழுதவில்லை, அவரது பதிவுகள் பலவற்றில், அவர் பயன்படுத்தும் எழுதுக்களின் சொற்கள் பயனற்ற சிந்தனைகள் எதையும் உருவாக்கவில்லை என்கிற உறுதி தருவதால், சுவையும், ஆர்வமும் ஏற்படுத்தும் இடுகைகளைப் படைப்பவர் என்று நான் கருதி, நான் வழங்கும் சுவையார்வ பதிவு/பதிவர் விருது, "சொல்வதெல்லாம் உண்மை" என்கிற பதிவில் எழுதும் பதிவர் திரு.அருண்மொழிவர்மன் அவர்களுக்கே.

சுவையார்வ பதிவு/பதிவர் விருது பெரும் திரு.அருண்மொழிவர்மன் அவர் சுவையார்வ பதிவர்களாக கண்டு கொள்ளும் பிறருக்கும் அதைக் கொடுக்க வேண்டும்.

14 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

அருண்மொழிவர்மன் ஒரு பிரபலமான, நடுநிலையான பதிவாளர் அவருக்கு விருது கொடுத்ததில் மகிழ்ச்சி கொள்வார். வாழ்த்துக்கள் கோவி.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\அதில் இருக்கும் தீவிரத் தன்மையின் ஏற்ற இரக்கம் தான் ஒரு வேளை நடுநிலையோ தெரியவில்லை. எனக்கு திமுக / அதிமுக இரண்டையும் பிடிக்கவில்லை என்று மாற்று அரசியல் வாதிக்கு வாக்களிப்பது நடுநிலையா ? அதுவும் ஒரு எதிர்நிலை தானே.\\



அய்யா சாமி, படித்தவுடனே எனக்கும் நடுநிலை பற்றி குழப்பமே வந்துவிட்டது.

ஒரு அரசியல் கட்சி என்ன செய்தாலும் தவறு செய்தால் விமர்சனமும், நல்லது செய்தால் பாராட்டவும் செய்தால் அது நடுநிலை

என்ன செய்தாலும் பாராட்டுவேன், தவறாக நடந்தாலும் சப்பை கட்டு கட்டுதல் ஆதரவு நிலை

என்ன செய்தாலும் எதிர்ப்பது எதிர்நிலை.

அதற்காக எதிர்கட்சியை பாராட்டினால் மாற்றுக்கட்சியை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தமல்ல.

-2,-1, zero +1, +2

நடுவில் பூஜ்யம் இருப்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.

உங்கள் பதிவுகளை நடுநிலையோடு விமர்சிப்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்:)))

அருண்மொழிவர்மன் சொன்னது…

கோவி. கண்ணன்.

//அவர் பயன்படுத்தும் எழுதுக்களின் சொற்கள் பயனற்ற சிந்தனைகள் எதையும் உருவாக்கவில்லை என்கிற உறுதி தருவதால், சுவையும், ஆர்வமும் ஏற்படுத்தும் இடுகைகளைப் படைப்பவர் என்று நான் கருதி,//

என்னைப் போன்ற ஒரு வளரும் பதிவருக்கு இது போன்ற ஊக்கங்கள் மிகப்பெரும் உந்துதலாக அமையும். நன்றிகள்...

கிடுகுவேலி சொன்னது…

முதலில் அருண்மொழிவர்மனுக்கு வாழ்த்துக்கள்....!வீரியம் மிக்க எழுத்துக்கு அவர் சொந்தம். அதை நக்கலாக நையாண்டியாக தரும் பாங்கு அருமை. சமூகம் மீதான அவரின் பார்வை....! சமூகம் மீதான அக்கறை..! சமூகம் மீதான அவரின் ஆத்திரம்...! எல்லாம் எல்லா எழுத்துக்களிலும் பிரதிபலிக்கிறது...! தொடரட்டும் அருண்மொழிவர்மனாகிய சிறினிவாசன் சுதர்சன்...!

ஐயா கோவி.கண்ணன் நடு நிலை என்ற உங்கள் நிலைப்பாட்டில் நான் ஒத்துப்போகிறேன்.....! எனது சிந்தனையும் அதே...!

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
நடுநிலை என்பது ஒரு மாயச் சொல், 'பிரபலம்' பற்றிய சொல்லின் தன்மையை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள். :)
//

நடுநிலை என்பது ஒரு கணிதத்தில் வரும் புள்ளி போல ஒரு கற்பனையான விஷயம்... கருத்து என்று வந்தாலே அதில் நடுநிலை போய்விடுகிறது...அணி சேரா நாடுகள் என்று ஒரு அணி அமைந்தது போல, இரண்டு கூட்டணியும் வேண்டாம், மூன்றாவது கூட்டணி என்பது போல!
ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி ஒரு ஆஃப்ரிக்கர் எழுதினாலும், அவரது அரசியல் நிலையை ஒட்டியே கருத்து அமையும்..

பிரபலம்?? இது ரிலேட்டிவிட்டி தியரி போல...ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், பழையாறையில் பிரபல‌மான நாட்டிய பாடலாசிரியர் கூத்துக் கலைஞர் யார்??? கண்டிப்பாக யாரேனும் இருந்திருப்பார்கள்...ஆனால் இன்று இவர்களை யாருக்கு தெரியும்???

ஆனால், ராஜராஜன்? இவர் இன்றும் பிரபலம்...ஆனால், இவரை ஹங்கரியிலோ, ரஷ்யாவிலோ தெரியுமா??

ஆக, பிரபலம் என்பதும் ஒரு விதமான மாய வார்த்தையே...வேண்டுமானால், அந்த பகுதி பிரபலம், அந்த விஷயத்தில் பிரபலம் ("அந்த" விஷயத்தில் அல்ல) என்று சொல்லலாம்...சமமான இன்னொரு வார்த்தை பேட்டை தாதா!

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
அருண்மொழிவர்மன் ஒரு பிரபலமான, நடுநிலையான பதிவாளர் அவருக்கு விருது கொடுத்ததில் மகிழ்ச்சி கொள்வார். வாழ்த்துக்கள் கோவி.
//

மணி வழி மொழிந்ததற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அய்யா சாமி, படித்தவுடனே எனக்கும் நடுநிலை பற்றி குழப்பமே வந்துவிட்டது.

ஒரு அரசியல் கட்சி என்ன செய்தாலும் தவறு செய்தால் விமர்சனமும், நல்லது செய்தால் பாராட்டவும் செய்தால் அது நடுநிலை

என்ன செய்தாலும் பாராட்டுவேன், தவறாக நடந்தாலும் சப்பை கட்டு கட்டுதல் ஆதரவு நிலை

என்ன செய்தாலும் எதிர்ப்பது எதிர்நிலை.

அதற்காக எதிர்கட்சியை பாராட்டினால் மாற்றுக்கட்சியை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தமல்ல.

//

சிவா, நீங்கள் சொல்வது சரிதான் !
எதிர்கட்சியை பாராட்டுபவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்களா ?

//உங்கள் பதிவுகளை நடுநிலையோடு விமர்சிப்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்:)))//

ஐயோ, அதுக்கு நான் பொறுப்பு இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழிவர்மன் said...
கோவி. கண்ணன்.

//அவர் பயன்படுத்தும் எழுதுக்களின் சொற்கள் பயனற்ற சிந்தனைகள் எதையும் உருவாக்கவில்லை என்கிற உறுதி தருவதால், சுவையும், ஆர்வமும் ஏற்படுத்தும் இடுகைகளைப் படைப்பவர் என்று நான் கருதி,//

என்னைப் போன்ற ஒரு வளரும் பதிவருக்கு இது போன்ற ஊக்கங்கள் மிகப்பெரும் உந்துதலாக அமையும். நன்றிகள்...

3:31 AM, July 19, 2009
//

அருண்மொழிவர்மன், போலி சட்டை அணிந்து தற்பெருமை கொள்ளும் சமூகத்தின் மீது செருப்பு வீசும் தகுதி உங்கள் எழுத்துக்கு இருக்கு. உங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

முதலில் வாழ்த்துகள்..
நடுநிலைக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் ஒத்துகொள்ளகூடியதே...

priyamudanprabu சொன்னது…

வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி

உங்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு

நல்ல பதிவர் எழுதிய நல்ல பதிவுக்கு நல்ல தேர்வு


சூப்பர் suppper .

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி

உங்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு

நல்ல பதிவர் எழுதிய நல்ல பதிவுக்கு தேர்வான நல்ல விருது


சூப்பர் suppper

CA Venkatesh Krishnan சொன்னது…

நடுநிலை குறித்த உங்கள் கருத்தும் ஏற்கத்தக்கதே! நடு நிலை என்பது 'ரிலேடிவ்' சொல். நான் அதை உங்கள் பதிவில் ரிலேட் செய்து பார்க்கிறேன்!.

பதிவர் அருண்மொழி வர்மனுக்கு வாழ்த்துக்கள் பல.

நீங்கள் ஆறு பேருக்கு விருதுகள் வழங்க வேண்டும் !. அப்போது இவரைப் போன்று பலரும் வெளிச்சத்திற்கு வரக்கூடும்!.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வாழ்த்துக்கள்,

பதிவர் சந்திப்பு படங்கள் பார்த்தேன் கலக்கலா இருக்கீங்க.

பார்க் மிகவும் அருமை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்