பின்பற்றுபவர்கள்

தேசிய மொழி பம்மாத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசிய மொழி பம்மாத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஜூன், 2010

மாநில மொழிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மைய அரசு !

"இந்தி' தெரியாமல் பறிபோகும் பதவிகள் : கர்னல் தாமஸ் ஆபிரகாம் கவலை - என்ற தலைப்பில் தினமலர் வழக்கம் போல் தேசிய மற்றும் இந்தி ஆதரவு வாந்தியை எடுத்து இருக்கிறது. இந்த செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால், இந்தியை புறக்கணித்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தவறு செய்துவிட்டார்களோ என்று பொது புத்திவாசகர்களால் நினைக்கக் கூடும். மேற்கண்ட கட்டுரைக்கு வந்துள்ள 90 விழுக்காடு கருத்துகளும் அப்படித்தான் இருக்கிறது.

ஆனால் இதை நாம் வேறு கோணத்தில் பார்த்தால் அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவோம் என்று உறுதி கொடுத்து மொழிவாரி மாநிலங்களை இந்தியா என்ற பெயரில் இணைத்துக் கொண்ட மத்திய அரசில் அமர்ந்திருக்கும் இந்தி அபிமானிகளின் மோசடி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

பல்வேறும் மொழி பேசும் மாநிலங்களில் இருந்து சென்று இராணுவத்தில் பணியாற்ற உடல் தகுதியும் கல்வித் தகுதியும் உள்ள ஒருவருக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக பதவிகள் மறுக்கப்படுகிறதாம். பெரும்பான்மையினர் மொழிகளே ஆளவேண்டும் என்கிற பாசிச எண்ணத்தின் வெளிப்படையாக இவ்வாற கருத்துகள் தேசப்பற்று என்ற பெயரில் பரப்பப்படுகின்றன.

உலகில் பெரும்பான்மையினர் பேசும் மொழிகளை அனைவரும் படிப்பது நல்லது என்ற கருத்து நிலவினால் அனைவரும் சீன மொழியான மாண்டரின் மொழியைத்தான் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சீன மொழியைப் பேசுபவர் உலக மக்கள் தொகையில் 5 ல் ஒருவராக உள்ளனர்.

சீனப் பெரும்பான்மை உள்ள சிங்கப்பூரில் அனைவரும் சீனம் படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எதுவும் கிடையாது. குறிப்பிட்ட சில்லரை விற்பனை கடைகள் மற்றும் சீனர்களுடன் தொடர்புடைய விற்பனைகள் தவிர்த்து சீன மொழித் தகுதி ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பதை எந்த ஒரு நிருவனமும் இங்கு வழியுறுத்துவது இல்லை.

எத்தனையோ பழங்குடிகளும் அவர் தம் மொழியும் இருக்கும் நாட்டில் அவர்களுக்கெல்லாம் நாங்கள் சேவை ஆற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது இன்றியமையாதது என்று ஒரு மைய அரசு அலுவலர் சொன்னால் அதில் இருப்பது நாட்டுப்பற்றா மொழிப்பற்றா ?

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று மும்பை வரை குரல்கள் ஒலித்தாலும் கேட்காத காதுகள் அவற்றை கண்டு கொள்ளாது என்பது அவ்வப்போது நிருபனம் செய்யப்படுகிறது.

இந்தி ஆட்சி மொழியில் இருக்கும் மாநிலங்களை விட பிற மாநிலங்களின் பொருளியலும் வாழ்க்கைத் தரமும் சிறப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்தும் தொடர்ந்து இந்திப் பெருமை பேசி பரப்பும் மந்திகளுக்கு யாராலும் விளங்க வைக்க முடியாது. முடிந்த வரையில் அவ்வாறான பரப்புரையின் போது ஒரு சிலருக்காவது விழிப்புணர்வு ஊட்டலாம்.

இந்தி தெரிந்தால் தான் வேலை என்பதை ஒரு அரசு அலுவலரே, உயர் அலுவலரே தரவு அடிப்படையில் தெரிவிக்கும் போது அதனைக் கொண்டு பார்த்தால், மைய அரசின் இந்தி சார்புகள் பிற மாநில மொழிகளை (பிற மொழி பேசும் மக்களை புறக்கணிக்கும் சப்பைக் காரணம் !!!) புறக்கணிக்கும் இந்திய இறையாண்மைக்குக்கு எதிரான கயமைத் தனமாகும், இவைபற்றி மத்திய அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் அல்லது வேலை புறக்கணிக்கப்படும் தனி நபர்கள் ஏன் பொது நல வழக்கு தொடுக்கக் கூடாது ?

தொடர்புடைய பிற சுட்டிகள் :

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் !

மஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)

3 பிப்ரவரி, 2010

இந்தி திணிப்பின் பக்க விளைவுகள் - மும்பாய் !

ஒருங்கிணைந்த இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் நாடுகளின் தொகுப்பு, நிறம், உடல் அமைப்பு ஒற்றுமை என்னும் இன அடையாளத்தால் அங்கு வாழும் மக்களை இந்தியர், நிலத்தை இந்தியா என்கிறோம், அதிலும் சில சிக்கல்களாக வட எல்லையை ஒட்டிய நிலப்பரப்பு மக்கள் சீனர்களின் முக அமைப்பை ஒத்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகையான மொழி பேசுபவர்களும் இணைந்து ஒரு நாடாக இருக்கலாம் என்று முடிவு செய்ததது ஒரு பெரும் நிலப்பரப்பின் கீழ் பிற இன ஆளுமை இல்லாமல் இணைந்திருப்பது தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை.

இந்தியா என்பது ஒரே நாடு என்றாலும் அதன் மானில மொழி பேசுபவர்களுக்கும் சம உரிமை, அவர்களின் அடையாளங்களும் பேணப்படும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை பாதிப்பு ஏற்படும் போது நான் இந்தியன் இல்லை, 'இந்த' மொழி பேசுவன் என்கிற நிலை எடுக்க தூண்டுவதாக, அவர்களின் மொழி மற்றும் நிலத்தை அழித்தல் மற்றும் கையகப்படுத்துதல் என்னும் தேசியம் சார்ந்த நடவடிக்கையால் இயல்பாகவே, எதிர்வினையாகவும் ஏற்பட்டுவிடுகிறது, இன்றைக்கு மகாராஷ்ட்ராவில் நடப்பதும் இது தான். மண்ணின் மைந்தர்களுக்கான வாய்ப்புகளை பல்வேறு மாநிலத்தினர் எடுத்துக் கொள்ளுதல் அல்லது பங்கிட்டுக் கொள்ளுதல் என்னும் நிலையில் அவர்களது வேலை வாய்ப்புகள், சமூக உயர்வு என்பது கேள்வி குறியாகவே ஆகிறது. மகாராஷ்ட்ரத்தின் தனி அடையாளம் என்பது அம்மாநில மொழிதான், அது பேசப்படுவது குறையும் போது அங்கு வசிக்கும் மண்ணின் மைந்தர்கள் கிளர்ந்தெழுவது இயல்பே.

ஒரே மொழிப் பேசுபவரிடையே கூட குறிப்பிட்ட நிலப்பகுதியில் இருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படும் போது அதன் விளைவுகளாக தனித் தெலுங்கான கோரிக்கைகள் நடந்து வருவதை கண்ணுறுகிறோம். அதிகாரம் பகிர்தல் என்கிற புரிதல் இல்லாமல் அதிகாரம் கைப்பற்றுதல் என்ற நிலைக்கு ஒரு தரப்பு முயலும் போது மற்ற தரப்பு அதிகார இழப்புக்கு ஆளாகிறது. இதுவே பூசல்கள் பலவற்றிற்கும் காரணம்.

தமிழன் மட்டுமல்ல தனது மொழி பாதிக்கப்படும் போது அனைத்து மொழிக்காரனும் கிளர்ந்தெழுவான், ஏனெனில் அவன் மொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தானே இருக்கிறது. வல்லரசு கனவில் இந்தியாவை மேலும் ஒருங்கிணைப்போம் என்று முயற்சிக்கும் அரசியல்வாதிகள் அதை மொழியால் செய்துவிட முடியும் என்று நினைத்து இந்தியை பல்வேறு மாநிலங்களில் திணிக்கிறார்கள். ஏற்கனவே நன்கு பொருளியல் ரீதியில் வளர்ந்திருக்கும் மாநிலங்களில் இந்த திணிப்பு நடைபெறும் போது இந்தி தெரிந்த பிற மாநில மக்கள் அந்த மாநிலத்திற்கு வேலை வாய்ப்புக்கு சென்று அந்த மாநிலங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். மொழிக்கலப்பு மற்றும் பண்பாட்டுக் கலப்பு என அந்த மாநில தனி அடையாளமே இவ்வாறு தான் சிதைக்கப்படுகிறது. ஒரு இந்தியன் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வசிக்க முடியும் என்பது அவனது உரிமை, ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே மாநிலத்தில் அனைவரும் குவியும் போது அங்கு பிறந்தவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும்.

தாக்ரேக்கள் செய்வது அரசியலே என்றாலும் கூட அந்த அரசியலைக் கையில் எடுத்தால் அவர்களால் வெற்றிகரமகா அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது. மொழிக்குறித்தான அரசியல் முன்னெடுப்பும், தற்காப்பும் அங்கு தேவையாக இருக்கிறது என்பதால் அவர்கள் அதைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் செயல் குற்றமாக தெரிந்தாலும் மொழி, நிலம் பாதுக்காப்பு தேவை என்னும் சூழல் இருப்பது உண்மை தானே.

ஜெமோ எழுதுகிறார், 'திராவிட இயக்கம் என்பது பிற்பட்ட மக்களுக்காக பிற்பட்டவர்களே உருவாக்கிய இயக்கம் இதே பெயரில் இல்லாவிடினும் இதே போன்ற தேவையில் பிற மாநிலங்களிலும் பிற்பட்ட மக்களின் இயங்கங்கள் தோன்றி அதிகாரத்தைக் கைப்பற்றின' உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், அதிகாரம் அப்போது வேறொருவர் அல்லது பெரும்பான்மை பிற்பட்டவர்களுக்கு எதிராக இருந்தது என்பதும் தானே உண்மை. ஒரு இயக்கம் வெற்றிகரமாக வளர்ந்திருந்தால் அதற்கான ஏக்கம், அந்த இயக்கத்திற்கான தேவை அதைச் சார்ந்தவர்களுக்கு இருந்திருக்கிறது அதனால் அவர்கள் அதை வளர்த்தெடுத்தார்கள் என்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். திராவிட இயக்கங்கள் பல்வேறாக பிரிந்தன் காரணம் பிற்பட்டவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட அதிகார கைப்பற்றுதலுக்கான, பங்கிட்டுக் கொள்வதற்கான தேவை அல்லது வேட்கை ஏற்பட்டது என்று வைத்துக் கொள்ளலாம். திராவிட இயக்கம் என்பது சாதி சார்பு இயக்கம் இல்லை என்பதால் கவனத்துடன் 'பிற்பட்டவர் இயக்கம்' என்ற சொல்லாடலை ஜெமோ பயன்படுத்தி இருக்கிறார். திராவிட இயக்கத்தின் தேவை மற்றும் அதன் வளர்ச்சி நாம் பார்த்தவை இதில் இயல்புக்கு மாறாக என்று எதுவுமே இல்லை. ஒரு இயக்கம் அதன் நோக்கத்தில், கொள்கையில் இப்போதும் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அது அதிகாரத்தைக் கைப்பற்றியதா என்பது தான் முக்கியம்.

ஒரு இயக்கத்தின் கொள்கை என்பது அந்த இயக்கத்தின் தோற்றம் மற்றும் பெயருக்கான குறைந்த அளவு திட்டம் மட்டுமே, நாளடைவில் அது நிறைவேறி இருக்கும், அல்லது அந்த நேரத்தில் அந்த கொள்கையி்ன் தேவையோ, தீவிரமோ தேவையற்றதாக இருக்கும். இன்று வரை திராவிட இயக்கங்கள் வெற்றிகரமாகவே இயங்குகின்றன, திராவிட இயக்கங்கள் இன்று வரை தேசிய கட்சிகளை தமிழகத்தில் மறு தலை எடுக்காமல் செய்துவிட்டன, இன்னும் கூட செய்து வருகின்றன. காரணம் தேசியம் சார்ந்த வேட்கைக்கு வழிவகை செய்யும் வழியாக, தேசியம் நல்ல நம்பிக்கையை தமிழர்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. தேசியத்தில் சிதையுண்டு அல்லது புதையுண்டு போன மாநிலங்களாக வடமாநிலங்கள் தெரிகின்றன. அவர்களின் ஒரே நம்பிக்கை மும்பாய் மகாராஷ்ட்ரா, புனே அங்கு தான் இந்தியுடன் போதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும் வகையில் முன்னேறி இருக்கிறது.

மகாராஷ்ட்ராவுக்கு பதிலாக குஜராத்துக்கு நலிந்தவர்கள் படையெடுக்கும் நிலை வந்தால் மோடி தாக்ரேவாக மாறுவார், தாக்ரேக்களைவிட மூர்க்கமாகவே செயல்படுவார். மாநிலங்களுக்கு சம உரிமையும், மாநில மொழிகளை மதிப்பதும், இந்தியைத் திணிக்காமல் இருப்பதாலும் தான் இந்தியா தேசிய ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முடியும். மற்றபடி அனைத்தும் இந்தியா நாம் அனைவரும் இந்தியர் என்பதெல்லாம் பள்ளி நேரத்தில் உறுதி மொழி எடுக்க மட்டுமே பயன்படும் வெற்று வாய்பாடுகள். தாக்ரேக்கள் சொல்லிக் கொடுக்கும் பாடம் ஏறுமா ? இல்லை பிற மாநிலங்களும் அதே போல் நடந்து கொண்டால் தான் இந்திய தேசியவாதிகளுக்கு புரியுமா ? என்று தெரியவில்லை. மும்பைக்கு அடுத்து பெங்களூரிலும் மொழித்திணிப்பிற்கும், மண்ணின் மைந்தர்கள் குறித்தும் போராட்டங்கள் தொடர வாய்ப்புண்டு. அவர்களும் ஒட்டுமொத்த பெங்களூரும் இந்தி பேசுவதில் நொந்து போய் இருக்கிறார்கள்

10 நவம்பர், 2009

மஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)

இருமொழி திட்டம் என்ற பெயரில் தேசிய ஒருமைப் பாட்டுக்கு ஏற்ற ஹிந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் செய்துவிட்டனர் திராவிட இன வெறியர்கள். தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் இராமசாமி இதற்கு தலைமை ஏற்று தேசிய மொழி ஹிந்தியை புறக்கணிக்கச் செய்தார்

ஹிந்தியை பேசவும் எழுதவும் கேட்கவும் முடியாததால் தமிழ்மக்கள் பட்ட துன்பங்களாக சான்றோர்கள் ஆவணப்படுத்துவது,

1. அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்களை தமிழக மக்கள் பார்க்க முடியாமல் அவதி உறுகின்றனர்
2. தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் தமிழக மக்கள் அங்கு எல்லா மாநிலங்களிலும் இருக்கும் ஹிந்தி அறிவிப்புகளை படிக்க முடியாமல் திணறுகின்றனர்
3. தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கும் வரும் தேசியத் தலைவர்களால் இந்திய தாய் மொழியான ஹிந்தியால் உரையாற்ற முடியாமல் போவதால் அவர்களால் தமிழக மக்களோடு மக்களாக பழகவோ, அவர்களை உள்ளப்பூர்வமாக அறிந்து கொள்ளவோ முடியவில்லை
4. பாம்பே மிட்டாய் விற்பவரும், சேட்டுகளும் தமிழ் கற்றுக் கொண்டால் தான் தமிழகத்தில் பிழைக்க முடியும் என்கிற துர்பாக்கிய நிலைக்கு இந்தியாவின் பிற பகுதி மக்கள் தமிழகத்திற்கு பிழைக்க வரும் போது அடைய நேரிடுகிறது
5. ஹிந்தியும், இந்துஸ்தானி இசையும் தமிழக மக்களிடம் அன்னியப்பட்டு நிற்பதால் இந்திய தேசியத்தின் பொது அடையாளமான தேசிய உணர்வுகள் அவமானப்பட்டுக் கிடக்கிறது

ஹிந்தியும் ஹிந்தி பேசுவதன் மகத்துவத்தையும் நாம் உணராததால் வட இந்திய மக்களுடன் நம்மால் ஒற்றுமையுடன் இந்தியாவை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ் இனவாத திராவிட சித்தாந்த திராவிட கட்சித் தலைவர்களே.

திராவிட தலைவர்களின் ஹிந்தி எதிர்ப்பு காற்று மகாராஷ்டிரா பக்கமும் வீசிவிட்டதோ என்னவோ, இப்போதெல்லாம் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கும், ஹிந்தி பேசுபவர்களுக்கும் எதிராக வன்முறைகள் நடக்கின்றன. தேசிய மொழி ஹிந்தியில் பதவி பிராமணம் செய்து கொண்டது தவறாம், மஹாராஷ்டிராவில் நடந்த வன்முறைகளைப் இங்கே பாருங்கள், குறிப்பாக அதற்கு வாசகர்களிடம் இருந்து வந்த எதிர்வினையைப் பாருங்கள். திராவிடக் கலாச்சாரம் இந்தியாவையே கெடுத்துக் கொண்டிருக்கிறது. தேசிய உணர்வாளர்களே விழுமின் எழுமின் :)

டிஸ்கி : இந்தப் பதிவு தற்சிந்தனையில், நல்ல மனநிலையில் எழுதியது. சொல்வதெல்லாம் உண்மை :)

எதற்கும் இதையும் படித்துவிடுங்கள் : (வட) இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன் - எழுத்தாளர் ஜயமோகன்

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:


அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் !

28 ஆகஸ்ட், 2009

ஜெய்'ஹிந்தி'புரம் !

நண்பர் பீர்/Peer, இந்தி கற்பது பாவச் செயலா ? என்று கேட்டு இருக்கிறார். இந்தி மட்டுமல்ல எந்த ஒரு மொழியையும் கற்பது பாவச் செயலே அல்ல.

//பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது மலையாளமும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது தெலுகும், கனடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது. ஹிந்தி என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.//

இவர் குறிப்பிடும் பணி நிமித்தமாக அண்டை நாடுகளுக்கு செல்பவர்கள் 5 விழுக்காடு இருக்கலாம், இதில் படித்தவன் முதல் பாமரன் அனைவரும் அடங்கும். பாமரன் எவனும் நான் இந்திப் படிக்காததால் பிற மாநிலங்களில் கூலி வேலை செய்யமுடிவதில்லை என்று புலம்புவது கிடையாது, தட்டு தடுமாறி மூன்றே மாதங்களில் எந்த மாநிலத்திற்கு செல்கிறார்களோ அந்த மாநில மொழியைக் கற்றுக் கொண்டு சரளமாக பேசுகிறார்கள். படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிவதால் யாரும் இடற்படுவது போல் தெரியவில்லை. இந்திப்படங்கள் புரியவில்லை, இந்தி பெண்களுடன் பேச முடியவில்லை, போன்ற அற்ப காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் 5 விழுக்காட்டினரிலும் ஒரு சிலருக்காக ஏற்கனவே இருக்கும் கல்வி பாடச் சுமையில் மேலும் ஒன்றாக இந்தியையும் 95 விழுக்காட்டினர் படிக்கலாம், படிக்க வேண்டும் என்று சொல்வதில் ஏதேனும் ஞாயம் உண்டா ? அப்படியும் விரும்பிப் படிபவர்களை யாரேனும் கையை பிடித்து தடுக்கிறார்களா ?

இந்தி பிராச்சார சபாவில் 3 வயது முதல் 100 வயது வரை உடையவர்களுக்கு மாதம் 50 ரூபாயில் இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள், நான் கூட ஒரு 3 மாதம் சென்று இருக்கிறேன். அதைப் படிக்கலாமே. அதைத் தடுப்பவர்கள் ஏவரேனும் இருக்கிறார்களா ? பெருவாரியான மக்கள் பேசும் மொழியை ஒருவர் தெரிந்து கொண்டால் அம்மக்களோடு கலந்து உறவாட, உரையாட ஏதுவாக இருக்குமாம். இலங்கையில் சிங்களம் தெரியாத தமிழர்கள், தெரிந்த தமிழர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியில் சிறப்பாக பாடிய வாணி ஜெயராமுக்கு வாய்ப்புக் கொடுத்தால் நான் பாடமாட்டேன் என்று மிரட்டி வாணி ஜெயராமை சென்னைக்கே திருப்பிய அனுப்ப செய்தவர்தான் இந்தி குயில் (பேரை வேறு சொல்லனுமா ?) இந்தியில் நன்றாக பேசி நடிக்க முடியும் என்று நிரூபணம் செய்த கமலஹாசன் முதல் அனைத்து தென்மாநில நடிகர் அனைவ்ருமே பிடறி தெறிக்க ஓடும்படி துறத்தப்பட்டனர். சாருக்கான் முதல் இந்தி வாலாக்களின் படங்கள் அனைத்து மாநிலங்களிலும் நன்றாக ஒடும் என்பதைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் ஏதேனும் பொதுப் பயன் இருக்கிறதா ?

கேரளாவில் 50 விழுக்காட்டினர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள், அப்படிச் செல்லும் போது அவர்கள் இடற்படக் கூடாது எனவே கேரள மாநிலத்தினர் அனைவருக்கும் அரபி கட்டாயப் பாடம் ஆக்கவேண்டும் என்று கேரளா முடிவு செய்தால் அதற்கு இந்தி இடிதாங்கி மைய அரசு அதனை போற்றி பாராட்டி, உதவியும் செய்யுமா ? மொழி அரசியல் தெரியாதவர்கள் தாம் ஒரு சூழலில் இடற்பட்டோம் என்பதை பொதுப் பிரச்சனையாக்குவதில் ஏதேனும் பொது நலம் இருக்கிறதா ? மொழி வலியுறுத்தல் என்பது ஆளுமையின் அடையாளம். மொழியை வைத்து பெரும்பாண்மை சிறுபாண்மை அரசியல் மிகக் கேவலமான பிற்போக்குத் தனம். பெரும்பாண்மையினர் பேசும் மொழி என்று ஒரு மொழியை பொதுப்படுத்தி பிறமொழிகள் பயனற்றவையாக ஒதுக்கும் நிலையும், அழிக்கும் நிலையும் வந்தால் மொழிப் பெரும்பாண்மை ஞாயம் என்றும் அதைப் பொதுப்படுத்த வேண்டும் என்போர் பெரும்பாண்மை புயலால் அழியும் மொழிகளை சீர்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பார்கள் ? ஒதுங்கிக் கொண்டு... அது சிறுபான்மை மொழிப் பேசுபவர்களின் தலையெழுத்து, அவர்கள் மொழியை பாதுகாப்பது அவர்களின் செயல், அதை செய்யத் தவறிவிட்டார்கள் என்று சொல்லுவார்கள் தானே!

அண்டை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாகச் சொல்கிறார். மும்பையில் மஹாராஷ்டிர மொழியை இந்தி அழித்துவிட்டது என்று அண்மையில் கலவரங்கள் வெடித்தது நண்பருக்கு தெரியாதா ? அல்லது பிற மாநிலக்காரர்கள் சுரணை குறைவாக இருந்து விழித்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படி குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இந்திக்கு எதிராக கலகக் குரல்கள் எப்போது தொடங்கிவிட்டன.

//தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் தமிழ் பேசுவது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.//

இது இவருடைய கற்பனை மட்டுமே, ஆனால் இப்படி பிற மாநிலத்தினர் தமிழை பேச முற்பட முயற்சிப்பது ஒரு சிலர் மட்டுமே. அண்மையில் வட இந்தியர் ஒருவருக்கு செல்பேசியில் தமிழ் ரிங்க் டோனை செல்பேசி நிறுவனம் இணைத்ததற்காக அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்ததை ஜெய் ஹிந்திபுரம் தம்பி அறிந்ததில்லை என்று நினைக்கிறேன். அதன் சுட்டி இங்கே இருக்கிறது, அதில் இருக்கும் பின்னூட்டங்களை கவனமாகப் படிக்கவும்.

பிறமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் 5 விழுக்காட்டினர் நன்மை பெருபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மீதம் 95 விழுக்காட்டினருக்கு அது கட்டாயப்பாடமாக்குவதால் 95 விழுக்காட்டினர் பெரும் நன்மைகள் என்ன என்பதை ஜெய்ஹிந்திபுரம் தம்பி பட்டியல் இட்டால் எனது விவாதங்களை தொடருவேன். ஏற்கனவே பொது மொழி தகுதி, இந்தி கட்டாயம் என்று அறியாமையால் பிதற்றுபவர்களுக்காக நான் பல்வேறு பதிவுகளை எழுதி இருக்கிறேன்.

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்