"எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.
நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!'" - Director Shakar

குறிப்பாக தர்கா திருவிழா, சந்தனக் கூடு உற்சவம் இந்துக்கள் - இஸ்லாமியர் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது, விழாக்களின் உற்சாகம் குறைய, இந்துத்துவாக்களின் இஸ்லாமிய எதிர்ப்பு பரப்புரை, வஹாபிகளின் மிரட்டல் மற்றும் ஏக இறைவன் பிரச்சாரம் என்பதாக கடந்த 20 ஆண்டுகளில் சந்தனக் கூடு உற்சவங்கள் பெயரளவுக்கே நடக்கிறது. நாகூர் - நாகப்பட்டினம் சாலைகள் முன்பெல்லாம் 10 நாட்கள் களைகட்டி இருக்கும், பெரிய கப்பல் சாலையில் ஓடுவது போல் கப்பல்களை சர்கரங்களில் இழுத்துச் செல்வர், சிறுவர்களும் அவர்கள் பங்கிற்கு சிறிய வடிவ கப்பல்களை இழுத்துச் செல்வர், சந்தனக் கூட்டிற்கு இந்து - இஸ்லாமியர் பேதமின்றி மாலைகளை வாங்கி அதன் மீது வீசுவர், சந்தனக் கூட்டில் அமர்ந்திருப்பவர்கள் இருபக்கத்திலும் கூடி இருக்கும் மக்களுக்கு நல்லாசிகள் செய்து கொண்டே செல்வர். பின்னால் வரும் சாம்ப்ராணி வாகனம் நகரெங்கிலும் நறுமனம் பரப்பிச் செல்லும்.
ஆண்டு தோறும் 20 ஆண்டுகளுக்கு முன்பான காட்சிகள் இவை தான், நாகை - நாகூர் இஸ்லாமிய இளைஞர்கள் வளைகுடாவிற்கு வேலைக்குச் சென்று வரத் துவங்கிய பொழுது தான் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, இஸ்லாமிய இளைஞர்களிடையே வழக்கத்திற்கு மாறான அடர்த்தியான தாடி, நெற்றியில் தெரியும் தொழுகை தடம் என மாறிப் போய் இருக்க சிறுவயதில் என்னுடன் பம்பரம் விளையாடிவர்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை. நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட எதிரே பார்க்கும் போது வெறும் புன்னகையுடன் கடந்து சென்றனர். அவர்களும் அவர்களைப் போன்றவர்களும் வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே, தர்ஹாவை புறக்கணிக்க வேண்டும் என்று கூறித் தொடங்கினர், ஜமாத்துகளிலும் பிளவுகள் தர்ஹா கொண்டாட்டங்கள் முற்றிலுமாக களை இழந்துவிட்டது.
இந்த நிலை தொடர்ந்தால் தர்ஹா எனப்படும் அடக்கத் தளங்கள் நாளடைவில் பராமரிப்பின்று அழியும், அப்படியும் மீறி தர்காவிற்குச் செல்பவர்கள் மிரட்டப்படுவார்கள், தர்ஹாக்களை அகற்ற இந்துத்துவாக்கள் தனியாக சதி செய்யத் தேவை இன்றி அனைத்து 100 ஆண்டுகள் புகழ்வாய்ந்த தர்ஹாக்களும் அழிக்கப்பட்டுவிடும்.
******
மேற்சொன்னது போல் இந்தியாவில் இஸ்லாம் காலூன்ற சூஃபி இசமே அடிப்படை, இந்திய சமயங்களின் வழிபாட்டு முறைகளுடன் இஸ்லாமிய ஞானிகள் சூஃபி இசத்தை தாழ்தப்பட்டவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தெடுத்தனர், இன்றைய வஹாபி இச வழிமுறைகளுடன்(தென்) இந்தியாவில் இஸ்லாம் பரப்ப முயற்சி செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு பேர் மதம் மாறி இருப்பார்கள் ? குப்பனும் சுப்பனும் ஒரே நாளில் தங்களது அனைத்து பழக்கவழங்கங்களையும் விட்டுவிட்டு ஓரிறைவனை நினையுங்கள் இது தான் இஸ்லாமிய மார்க்கம் என்று கூறி இருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களா ?
தீண்டாமைக்கு எதிராக மதம் மாறியது என்பதை தவிர்த்துப் பார்த்தாலும் ஏழை எளியவர்களின் கடவுள் நம்பிக்கை என்பது நோய் தீர்க்கும் மருந்து அளவுக்குத்தான், காய்சல், பூச்சிக்கடி, வயிற்றுவலி அனைத்திற்கும் பச்சிலை வைத்தியம் பார்ப்பார்கள், சூஃபிகள் இறை நம்பிக்கையோடு அதனை ஓதி அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் பெயரில் இறைவனிடம் கேட்டுக் கொள்ளும்படி இறையடியார்களாக அடக்கமானவர்களிடம் தெரிவிப்பார்கள் இது தான் பாத்தியா ஓதுதல் என்பது. நம்பிக்கை உடையவர்களுக்கு எதுவும் விரைவில் சரியாகும் என்பது போல் தான் நோய்களும், கடவுளிடம் வேண்டியாகிவிட்டது இனி சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் மன பலம் உடல் பலம் சேர நோய்கள் குணமாகும். சூஃபிகள் தன்னை நாடிவருபவர்களுக்கு மருத்துவம் பார்த்து மன நிலையை சரி செய்ய வழிபாடு செய்வார்கள், இந்த முறையில் தான் 'திலிப்' பாக இருந்த ஏ ஆர் ரஹ்மான் சூஃபி இசத்தில் உள்ளவர் உதவியுடன் தன் குடும்பத்தில் யாரோ செய்த 'ப்ளாக் மேஜிக்' எனப்படும் சூனியம் வேலை செய்து (எனக்கு இதில் நம்பிக்கை இல்லை) குடும்பத்தைப் பாடாய் படுத்த அதிலிருந்து மீண்டதால், பிறகு தன்னை இஸ்லாமிய மார்க்கத்தவராக மாற்றிக் கொண்டார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மானே ஆனந்தவிகடனிலோ, குமுதத்திலோ தெரிவித்தது தான்.

'சே.திலிப்' என்பவர் 'அல்லா ராக்கா ரஹ்மான்' என்று பெயர் மாற்றம் மதம் மாற்றம் செய்து கொள்ள காரணமாக அமைந்தது சூஃபி வழியினரும், அவர் சென்று வந்த தர்ஹாவும் தான், வாஹாபிய நம்பிக்கை அவரை இஸ்லாமிற்குள் இழுத்துவரவில்லை, தர்ஹாக்கள் இல்லை என்றால் ஏ ஆர் ரஹ்மான் திலிப்பாகவே இருந்திருப்பார்.
"குணப்படுத்த முடியாத உனது கடுமையான நோயை மருத்துவர் குணப்படுத்தினார் என்பது உண்மையில்லை அவர் கொடுத்த மருந்தே நோய் குணமானதற்கு காரணம், எனவே மருத்துவரை மற மருந்தை மட்டுமே நினை"
என்பது போன்ற வாதம் தான் வஹாபிகளுடையது, நன்றிப் பெருக்கு உடையவர்கள் இவ்வாறு செய்வார்களா ? என்றெல்லாம் யோசிப்பது இல்லை.
ஏ ஆர் ரஹ்மான் மனமாற்றத்திற்கு ஆதாரனமானது சூஃபி இசம், அதை மறந்துவிட்டு தர்ஹா வணக்கம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறினால் அதன் பிறகு ரஹ்மானின் நம்பிக்கையில் என்ன இருக்கிறது ? அதை அவரும் அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்புவாரா ?
******
வட இந்தியாவில் எப்படி என்று தெரியாது வாளால் பரவியது என்ற பேச்சும் உண்டு, ஆனால் தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவ சூஃபி இசமே முக்கிய காரணம், அதனை முற்றிலும் அழித்துவிடும் போது இந்து - இஸ்லாமிய மக்கள் ஒற்றுமை முற்றிலும் சிதையும், மக்கள் மத அடிப்படையில் தனித் தனி தீவுகளாகவிடுவர். பதிவுலகில் கூட சூஃபி இசத்தை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் நெருக்கமானவர்களாக உள்ளனர், வஹாபிகளில் ஒரு சிலரே அப்படி இருக்கின்றனர், ஏனெனில் அடிப்படையில் வஹாபிகளுக்கு போதிக்கப்படுவது
இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144)
உற்ற தோழர்கள் என்றால் உங்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தான். (அல்- குர்ஆன் 5:2)
இங்கே இறை நிராகரிப்பவர்கள் எனப்படுவர்கள் வஹாபிகளைப் பொறுத்த அளவில் பிறமதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் முற்றிலுமாக இறை நம்பிக்கையே இல்லாவதர்களும் தான். அனைவரையும் காஃபிர் என்று நிராகரிப்பது உண்மையெனில் இஸ்லாம் மதத்தை யாரிடம் எடுத்துச் சொல்லுவது மதத்தை எப்படிப் பரப்புவது ? இங்கு தான் வஹாபி இசமும் சூஃபி இசமும் மாறுபட்டு பொருள் கொள்கிறது. பிரமதத்தைச் சார்ந்தவர்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் அல்ல அவர்களது வழிபாட்டு முறையும் கடவுளின் பெயரும் வேறு என்றாலும் இறையடியார்கள் பிறமதத்தினர் அனைவரும் ஒரே இறைவனைத்தான் வழிபடுகின்றனர் என்ற புரிந்துணர்வை கொண்டுள்ளனர் சூஃபிகள்.
இந்திய பண்பாடு, பழக்கவழக்கம், சமய நம்பிக்கைகள் மத நல்லிணக்கம் என சமூகம் சார்ந்த அனைத்திலும் புரிந்துணர்வை கொண்டு இருப்பவர்கள் சூஃபிகளே. சூஃபிகளால் இந்தியாவில் வளர்ச்சி கண்டு வந்த இஸ்லாம் வஹாபிகனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன் ஏ ஆர் ரஹ்மான் இஸ்லாமியராக மாறினார் என்றால் அது சூஃபிகளினால் அவர்களது தர்ஹாக்களாலும் தான். ஏ ஆர் ரஹ்மான் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் நேசிக்கப்படுபவராக உணரப்படுவதும் அவரது செயல்முறைகளினாலும் அவரது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடிச் சொல்லுவதாலும் தான் அன்றி அவர் ஒரு அடிப்படை வாத வஹாபிய இஸ்லாமியராக இருந்திருந்தால் அவர் ஒரு இஸ்லாமிய இசையமைப்பாளர் என்ற அளவில் தான் அதுவும் இசைக்காக பேசப்படுவார்.
வஹாபிகள் இன்னும் கூடுதலான வன்மத்துடன் சூஃபிகள் இஸ்லாமியர்கள் இல்லை உம்ரா (காஃபாவுக்கு புனித பயணம்) செய்யத் தகுதியற்றவர்கள் என்று சொல்லி தடுத்துவிட்டால் இஸ்லாம் மதத்திலிருந்து சூஃபிகள் தனி மதம் கண்டுவிடுவார்கள் பிறகு அஹமதியா மார்கம் போல் சூஃபி மார்க்கம் என்று வெளிப்படையாகவே பிளவு ஏற்பட்டுவிடும், ஒட்டு மொத்த இஸ்லாமியர் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவிடும் என்று கொஞ்சம் அடக்கிவாசிக்கிறார்கள்

'சே.திலிப்' என்பவர் 'அல்லா ராக்கா ரஹ்மான்' என்று பெயர் மாற்றம் மதம் மாற்றம் செய்து கொள்ள காரணமாக அமைந்தது சூஃபி வழியினரும், அவர் சென்று வந்த தர்ஹாவும் தான், வாஹாபிய நம்பிக்கை அவரை இஸ்லாமிற்குள் இழுத்துவரவில்லை, தர்ஹாக்கள் இல்லை என்றால் ஏ ஆர் ரஹ்மான் திலிப்பாகவே இருந்திருப்பார்.
"குணப்படுத்த முடியாத உனது கடுமையான நோயை மருத்துவர் குணப்படுத்தினார் என்பது உண்மையில்லை அவர் கொடுத்த மருந்தே நோய் குணமானதற்கு காரணம், எனவே மருத்துவரை மற மருந்தை மட்டுமே நினை"
என்பது போன்ற வாதம் தான் வஹாபிகளுடையது, நன்றிப் பெருக்கு உடையவர்கள் இவ்வாறு செய்வார்களா ? என்றெல்லாம் யோசிப்பது இல்லை.
ஏ ஆர் ரஹ்மான் மனமாற்றத்திற்கு ஆதாரனமானது சூஃபி இசம், அதை மறந்துவிட்டு தர்ஹா வணக்கம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறினால் அதன் பிறகு ரஹ்மானின் நம்பிக்கையில் என்ன இருக்கிறது ? அதை அவரும் அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்புவாரா ?
******
வட இந்தியாவில் எப்படி என்று தெரியாது வாளால் பரவியது என்ற பேச்சும் உண்டு, ஆனால் தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவ சூஃபி இசமே முக்கிய காரணம், அதனை முற்றிலும் அழித்துவிடும் போது இந்து - இஸ்லாமிய மக்கள் ஒற்றுமை முற்றிலும் சிதையும், மக்கள் மத அடிப்படையில் தனித் தனி தீவுகளாகவிடுவர். பதிவுலகில் கூட சூஃபி இசத்தை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் நெருக்கமானவர்களாக உள்ளனர், வஹாபிகளில் ஒரு சிலரே அப்படி இருக்கின்றனர், ஏனெனில் அடிப்படையில் வஹாபிகளுக்கு போதிக்கப்படுவது
இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144)
உற்ற தோழர்கள் என்றால் உங்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தான். (அல்- குர்ஆன் 5:2)
இங்கே இறை நிராகரிப்பவர்கள் எனப்படுவர்கள் வஹாபிகளைப் பொறுத்த அளவில் பிறமதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் முற்றிலுமாக இறை நம்பிக்கையே இல்லாவதர்களும் தான். அனைவரையும் காஃபிர் என்று நிராகரிப்பது உண்மையெனில் இஸ்லாம் மதத்தை யாரிடம் எடுத்துச் சொல்லுவது மதத்தை எப்படிப் பரப்புவது ? இங்கு தான் வஹாபி இசமும் சூஃபி இசமும் மாறுபட்டு பொருள் கொள்கிறது. பிரமதத்தைச் சார்ந்தவர்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் அல்ல அவர்களது வழிபாட்டு முறையும் கடவுளின் பெயரும் வேறு என்றாலும் இறையடியார்கள் பிறமதத்தினர் அனைவரும் ஒரே இறைவனைத்தான் வழிபடுகின்றனர் என்ற புரிந்துணர்வை கொண்டுள்ளனர் சூஃபிகள்.
இந்திய பண்பாடு, பழக்கவழக்கம், சமய நம்பிக்கைகள் மத நல்லிணக்கம் என சமூகம் சார்ந்த அனைத்திலும் புரிந்துணர்வை கொண்டு இருப்பவர்கள் சூஃபிகளே. சூஃபிகளால் இந்தியாவில் வளர்ச்சி கண்டு வந்த இஸ்லாம் வஹாபிகனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன் ஏ ஆர் ரஹ்மான் இஸ்லாமியராக மாறினார் என்றால் அது சூஃபிகளினால் அவர்களது தர்ஹாக்களாலும் தான். ஏ ஆர் ரஹ்மான் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் நேசிக்கப்படுபவராக உணரப்படுவதும் அவரது செயல்முறைகளினாலும் அவரது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடிச் சொல்லுவதாலும் தான் அன்றி அவர் ஒரு அடிப்படை வாத வஹாபிய இஸ்லாமியராக இருந்திருந்தால் அவர் ஒரு இஸ்லாமிய இசையமைப்பாளர் என்ற அளவில் தான் அதுவும் இசைக்காக பேசப்படுவார்.
வஹாபிகள் இன்னும் கூடுதலான வன்மத்துடன் சூஃபிகள் இஸ்லாமியர்கள் இல்லை உம்ரா (காஃபாவுக்கு புனித பயணம்) செய்யத் தகுதியற்றவர்கள் என்று சொல்லி தடுத்துவிட்டால் இஸ்லாம் மதத்திலிருந்து சூஃபிகள் தனி மதம் கண்டுவிடுவார்கள் பிறகு அஹமதியா மார்கம் போல் சூஃபி மார்க்கம் என்று வெளிப்படையாகவே பிளவு ஏற்பட்டுவிடும், ஒட்டு மொத்த இஸ்லாமியர் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவிடும் என்று கொஞ்சம் அடக்கிவாசிக்கிறார்கள்
எனக்கு தெரிந்து எந்த சூஃபியும் இறைவனுக்கு இணைவைப்பவர்கள் இல்லை, இறையடியார்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்கள் மட்டுமே. மனைவியையும் நேசிப்பது என்பது பெற்றோர்களை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று விளக்கம் சொல்லுகிறார்கள்
எதிர்படும் தெரிந்தவருக்கு வணக்கம் சொல்லுவதைக் கூட இறை 'வணக்கத்துடன்' ஒப்பிட்டுப் பார்த்து இறைவனைத்தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்லக் கூடாது சொல்லும் வஹாபிகளிடம் சூஃபிகளின் விளக்கம் எடுபடுமா ? விளங்கிக் கொள்ளத் தேவை இல்லை என்கிறார்கள் சூஃபிகள்.
எதிர்படும் தெரிந்தவருக்கு வணக்கம் சொல்லுவதைக் கூட இறை 'வணக்கத்துடன்' ஒப்பிட்டுப் பார்த்து இறைவனைத்தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்லக் கூடாது சொல்லும் வஹாபிகளிடம் சூஃபிகளின் விளக்கம் எடுபடுமா ? விளங்கிக் கொள்ளத் தேவை இல்லை என்கிறார்கள் சூஃபிகள்.
"அல்லா......! வஹாபிகளிடம் இருந்து இஸ்லாமியர்களை காப்பாற்று
குரானை அவர்களே ஓதிக் கொள்வார்கள்" என்று சொல்லத் தோன்றுகிறது
இன்ஷா அல்லா !