பின்பற்றுபவர்கள்

பதிவர் முக்கோணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் முக்கோணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஜூலை, 2009

நீங்க பிரபல பதிவர்..இவிங்களுக்கு என்ன தெரியும் ?

"டேய் மச்சான் ப்ளாக் எழுதுறண்டா...."

"என்னது ?"

அவனுக்கு விளக்கி.....ப்ளாக் முகவரியெல்லாம் கொடுத்துட்டு,

"என்ன படிக்கிறியா ?"

"உனக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதா ? எனக்கு நேரம் கிடைச்சா படிக்கிறேன்"

அடுத்த முறை பார்க்கும் போது "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"

"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"

- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க.

இது தெரிந்தும் மக்கள்ஸ் அவர்களிடம் சென்று 'நான் பிரபல பதிவராக்கும்' னு காலரை தூக்குவதை என்னச் சொல்வது :)

நாம வலையில மொக்கைப் போடுவது பற்றி நம்ம நண்பர்களிடம் சொன்னால்....'ஆகா இம்புட்டு பெரிய எழுத்தாளன் ஆகிட்டியான்னு மகிழுவாங்க' ன்னு நினைக்கிறோம், ஆனா ஒரு பய மதிப்பது இல்லை. எழுத்து அது எழுத்தாளர்கள் தான் எழுதுவாங்ககிறது போல் பலர் நினைக்கிறாங்க.

***

"நீ தான் எனக்கு அறிவு இல்லேம்ப......என் எழுத்தையும் நாலு பேர் படிச்சுட்டு பாராட்டுறாங்க.....ஒரு நாள் படிச்சு பாரு நான் எப்படி எழுதுறேன்னு"

மனைவியிடம் திருமணம் ஆனவங்க புலம்பி இருப்பிங்க(போம்)

"பொழுதன்னிக்கும் லொட்டு லொட்டுன்னு தட்டிக் கிட்டு இருக்கிறதுக்கு பர்மிசன் கொடுப்பதே பெருசு.....இதுல அவங்க வேற படிச்சுப் பாராட்டுனுமாக்கும்" என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

***

இப்பெல்லாம் மாப்பிள்ள வீட்டுக்கு வந்தாலும் லேப்டாப்போடு வர்றார்......அடிக்கடி நெட் செண்டருக்கு போய்டுறார்..... என்னம்மா நடக்குது ? ஆபிசில் வேலை மிக அதிகமோ !

நாம பிரபல, பிராபல பதிவர்னும், நமக்கு வலையைப் பக்கம் வரலைன்னா தூக்கம் வராதுன்னும் அவிங்களுக்கு என்ன தெரியும் ?

***

மொக்கை அல்லது மொக்கையற்ற கவிதை, ஜோக் சொன்ன நண்பரிடம்

'இவ்வளவு அருமையாக யோசிக்கிறிங்க...நீங்க ஏன் ப்ளாக் ஆரம்பிக்க கூடாது ?'

'அப்படிங்கிறிங்க......'

உண்மையிலேயே நாம ப்ளாக் எழுதுங்க படிங்கன்னு சொன்னதைக் கேட்டவங்க அவரு மட்டும்தான்

***

கடைசியாக உள்ளது நான் ப்ளாக் தொடங்கும் முன்பு எனக்கு ஒரு ப்ளாக்கர் சொல்லி இருந்திருப்பார். இப்படி நானாத்தான் சிக்கினேனா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்