பின்பற்றுபவர்கள்

திரு சுப்பையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரு சுப்பையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஜூலை, 2009

வாத்தியார் வகுப்பறையில் 500 மாணவர்கள் !

வலையுலக இளைஞர்களை மிஞ்சும் வகையில் சுப்பையா வாத்தியார் 500 பின்தொடர்பவர்களைப் (Followers) பெற்ற முதல் தமிழ் பதிவர் ஆகிறார். இன்னும் சில தளங்கள் 500+ ல் இருந்தாலும் அவை குழுப்பதிவுகளா தனிப் பதிவுகளா என்பது எவருக்கும் தெரியாது.

பின் தொடரும் பதிவர்கள் எண்ணிக்கைப் பட்டியலில் முன்னனியில் இருக்கும் சுப்பையா வாத்தியாருக்கு வாழ்த்துகள்.


வாத்தியாரின் ஜோதிடப் பதிவுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை ஆனாலும் அந்தப் பதிவுகளில் அவர் தரும் மற்ற தகவல்களை விரும்பிப் படிப்பேன். இந்த வயதிலும் உற்சாகமாக என்று எழுதினால் 'வயசை ஞாபகப் படுத்தாமல் இருக்க முடியாதான்னு' கேட்பார். அதனால் வயது வேண்டாம். 65 வயதுக் காரர்களே இளைஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் போது (யூ மீன் தருமி ?) வாத்தியாருக்கு அவ்வளவெல்லாம் ஆகவில்லை. உடம்பைக் கொஞ்சம் குறைச்சிட்டு (யாருப்பா அது... அவர் பேசுவதையும் கொஞ்சம் குறைச்சிட்டுன்னு சொல்வது ?) இன்சர்ட் பண்ணிட்டு டி சர்டோடு வந்தார் என்றால் நாடோடிகள் பட நாயகன் சசிகுமார் போல இருப்பார்.

****

பின்னோக்கிய நினைவுகள் சில...

SPVR சுப்பையா ஐயா அவர்களின் 'பல்சுவை' வலைத்தளம் ஒன்று ஆகஸ்ட் 2006 வாக்கில் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. அப்போதெல்லாம் பெ.மகேந்திரன், உங்கள் நண்பன் சரவணன், நாமக்கல் இன்னும் சில வ.வா. சங்கப் பதிவர்களும் நானும் சேர்ந்து அனானி / அதர் ஆப்சன் திறந்து வைத்திருப்பவர்கள் பதிவில் இப்போது பலர் அடிப்பது போல் நகைச்சுவை கும்மி அடிப்பது வழக்கம். சுப்பையா அவர்களின் பதிவு இணைந்த போது.... அவரது புகைப்படத்தைப் பார்த்து ஆகா நம்ம வகுப்பு வாத்தியார் போல இருக்கிறார்... வாங்க அவரைக் கலாய்போம் என்று வலை நண்பர்களுடன் சாட்டிவிட்டு... அவரது பதிவுக்குச் சென்று வாத்தியார் பட்டம் கொடுத்து கும்மி அடித்தோம். மட்டுறுத்தல் வைத்திருந்தார். அவர் பின்னூட்டம் வெளி இடும் முன்பே அதே பின்னூட்டத்தை மற்றவர்களிடம் கொடுத்து..... அதை பேஸ்ட் செய்து ..... வழிமொழிகிறோம்..... முன்மொழிகிறோம் அல்லது அதற்கு பதில் சொல்லி பின்னூட்டம் போடுவது என்று ஒரே பின்னூட்ட நகைச்சுவை. 'நாம வெளி இடும் முன் அந்தப் பின்னூட்டத்தை வேறொருவர் எப்படி அறிந்து கொண்டு அதை ஒட்டி எழுதுகிறார் ?' என்று அவரை குழப்புவது தான் திட்டம். திரு சுப்பையா ஐயா அசராமல் ஆடினார்.

டெக்னாலஜி படுத்தும் பாடு - பேசும் கம்ப்யூட்டர் - என்ற அவரது பதிவில் அவருக்கு கொடுத்த வாத்தியார் பட்டம் அவரை ஊக்கப்படுத்தியது முதல், நாங்களும் மாணாக்கராக பின்னூட்டம் போட்டோம், அதன் பிறகு வகுப்பறை என்னும் தனிப் பதிவைத் திறந்து வலைப்பதிவு ஆசிரியாராக வெற்றிகரமாக தொடர்கிறார்.

*****

பல சிறுகதைகள் எழுதி இருக்கிறார், அதை நூலாகவும் வெளி இட்டிருக்கிறார். பதிவர்களுக்கு அடிக்கடி பொன்னாடை போர்த்தி கவுரவிப்பது அவரது வழக்கம். (கைப் பையில் எப்போதுமே ஒரு பொன்னாடை இருக்கும்). அவருக்கு பிடித்தது பில்டர் காபி. அதை அவரே பல பதிவுகளில் சொல்லி இருக்கிறார். சிறுவயது முதலே இலக்கிய ஆர்வமிக்கவராக இருந்தவருக்கு வலைப்பதிவு சரியான ஊடகமாக அமைந்திருக்கிறது. அவரை சந்திக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக 2007ல் கோவை சென்று அவரை சந்தித்திருக்கிறேன். கோவை செல்வதற்கு இரவு 11 மணி ஆகியது, அதுவரை காத்திருந்து பேசிவிட்டு, உணவு அளித்துவிட்டு 12 மணிக்கு மேல் விடைபெற்றார். ஜோதிடம் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறார். அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவரது ஜோதிடப் பாடங்கள் பயனளிக்கிறது என்பதைத் தான் அவரது பின் தொடர்பவர் பட்டியலின் எண்ணிக்கைக் காட்டுகிறது. வாத்தியார் ஜோதிடம் மட்டுமல்ல நகைச்சுவையிலும் கலக்குபவர் என்றால் அது மிகை அல்ல,

பிறரைப் பழித்து அதன் மூலம் புகழ்தேடதவர் என்னும் பக்குவம் அவர் எழுத்திலும் பழக்கத்தில் தெரிகிறது. வாத்தியார் பிரபல பதிவர் மட்டுமல்ல மூத்தப் பதிவரும் கூட. பதிவர் வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்