பின்பற்றுபவர்கள்

தமிழின விரோதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழின விரோதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஆகஸ்ட், 2009

வலையில் எழுதி ஒரு மசுரும் ஆகப் போவதில்லை.

கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாக தமிழர்கள் மடிகிறார்கள், ஓட்டுப் போடாதிங்கன்னு பலரும் பளாக்கில் பினாத்தினார்கள், தடுக்க முடிந்ததா ?

வென்றதும் கொக்கறித்தக் கூட்டம் தமிழனுக்கு சூடு சொறனையே இல்லை என்று தமிழனிடமே தமிழனை வைத்தே நிரூபனம் செய்தது. வெட்கித் தலை குனிந்தது விட்டு அடுத்த வேலையைப் பார்த்தோம்.

கடற்கரையில் அம்மணமாக கண்களைக் கட்டிவிட்டி ஒவ்வொருவராக அழைத்துச் சென்று சொரி நாயைச் சுடுவது போல் சுட்டுப் போட்டார்களாம், வீடியோ காட்சிகளைப் பார்த்து மீண்டும் துடிக்கிறார்கள்,

அந்தப் கொடும் செயல் வெளியே தெரிந்தும், 'அடப் பாவிகளா நீங்களெல்லாம் இவ்வளவு கேவலமான பிறவிகளா என்று உலகத்தார் காரி உமிழ்வார்களே என்று அச்சப்பட்டு, முதுகெலும்பற்ற கோழைகளாக அப்படியெலாம் நடக்கவில்லை அது களங்கம் கற்பிக்கும் வீடியோ என்று பதறுகிறான், செய்தவனுக்கே அதை ஒப்புக் கொள்ள மனம் கூசிப் போய் பச்சைப் பொய் சொல்லும் போது, அதைப் பார்த்துவிட்டு உணர்ச்சி வசப்படுவர்களால், மேடையில் பேசுபவர்களால், எழுதுபவர்களால் என்ன செய்துவிட முடியும் ?

எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்கும் குறைவில்லை என்று கொக்கறிக்கும் அரசியல் வியாதி கூட்டங்களை வைத்துக் கொண்டு நாம் உணர்ச்சி வசப்படுவது நம் உடல் நலத்துக்குக் கேடு.

இதோ இன்னொரு நடிகன் கூட தமிழர் எதிர்களுக்கு மாலை போட்டு வலம் வர ஆயத்தமாகிவிட்டான்.

டமிழன்.....டமிழன் நாமலும் அவனுக்கு வாழ்த்து சொல்லிக் கூவுவோம்.

ப்ளாக்குங்கிறது மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இடம் அதில் நம்மை போன்ற ஆசாமிகள், சிறுகதை, கவிதை, விவாதம் ஆகியவற்றை எழுதுவதுடன் நில்லாமல், தமிழன், தமிழ் என்று உணர்ச்சி வசப்படுவதால் ஒரு மசுரும் அறுவடையாகப் போவதில்லை. போயி புள்ளக் குட்டிங்களை படிக்க வையுங்க.

:(

24 பிப்ரவரி, 2009

அப்பாவி சிங்களர்களை(யும்) காங்கிரஸ் காக்க வேண்டும் !

வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வன்னியிலும், முல்லைத்தீவிலும் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்கள் குறித்து அச்சம் அடைவாதாகவும், இலங்கை அரசு கேட்டுக் கொண்டால் அப்பாவி தமிழர்களை வெளியேற்ற உதவுவதாகவும் இந்திய அரசின் சார்பில் கூறியுள்ளார். இது நல்ல நோக்கமாக தெரிந்தாலும், அப்பாவி தமிழர்களை அவர்கள் வாழும் இடத்தில் இருந்து வெளியேற்றிவிட்டடல் அதன் பிறகு அங்கிருக்கும் விடுதலைப் புலிகளை ஏவுகனை வீசி முற்றிலும் அழித்துவிட முடியும் என்ற மறைமுக யோசனையை காங்கிரஸ் முன்வைப்பதாகவும், உதவ ஆயத்தமாக இருப்பதாக தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

மேலும் இதன் மூலம் போரில் இலங்கை அரசு வெற்றி பெற காங்கிரஸ் அரசு ஆதரவு அளிப்பதையும், தமிழ் ஈழம் அமைவதை தடுத்துவிட முயற்சிக்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு ஊதுகுழலாக காங்கிரஸ் பின் நிற்பதைத் தான் பிரணாப் முகர்ஜியின் அந்த போர்கள பூமியில் ஒடுங்கி இருக்கும் அப்பாவிகள் குறித்த 'அக்கரை' தெரிவிக்கிறது.

இலங்கைக்கு அரசுக்கு உதவும் காங்கிரஸ், அப்பாவி சிங்களர்கள் குறித்து அக்கரை படாதது வியப்பையே அளிக்கிறது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் எப்பொழுது மனித வெடிகுண்டுகளாக கொழும்பில் ஊடுறுவி வெடிப்பார்கள், எப்போது விமானம் மூலம் குண்டு போட்டு தாக்குவார்கள் என்ற நிலையில் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்களை அப்புறப் படுத்த உதவுகிறோம் என்று காங்கிரஸ் அரசு தெரிவித்து, சிங்கள அப்பாவிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு பெயரவைத்தால் எதிரிக்கு எதிரிகளான சிங்கள இராணுவமும், ஈழ விடுதலை போராளிகளும் நேரடியாக மோதிக் கொள்வார்கள்.


அப்பாவி தமிழர்கள் குறித்து அச்சப்படும் காங்கிரஸ் அரசு, எப்போது வெடிகுண்டு தாக்குமோ என்று நடுங்கும் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர் பற்றி அக்கரைபடுமா ?

- தினமலர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த கேள்வியை அப்பாவிகளும், பாமரர்களும் கேட்கிறார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்