
வென்றதும் கொக்கறித்தக் கூட்டம் தமிழனுக்கு சூடு சொறனையே இல்லை என்று தமிழனிடமே தமிழனை வைத்தே நிரூபனம் செய்தது. வெட்கித் தலை குனிந்தது விட்டு அடுத்த வேலையைப் பார்த்தோம்.
கடற்கரையில் அம்மணமாக கண்களைக் கட்டிவிட்டி ஒவ்வொருவராக அழைத்துச் சென்று சொரி நாயைச் சுடுவது போல் சுட்டுப் போட்டார்களாம், வீடியோ காட்சிகளைப் பார்த்து மீண்டும் துடிக்கிறார்கள்,
அந்தப் கொடும் செயல் வெளியே தெரிந்தும், 'அடப் பாவிகளா நீங்களெல்லாம் இவ்வளவு கேவலமான பிறவிகளா என்று உலகத்தார் காரி உமிழ்வார்களே என்று அச்சப்பட்டு, முதுகெலும்பற்ற கோழைகளாக அப்படியெலாம் நடக்கவில்லை அது களங்கம் கற்பிக்கும் வீடியோ என்று பதறுகிறான், செய்தவனுக்கே அதை ஒப்புக் கொள்ள மனம் கூசிப் போய் பச்சைப் பொய் சொல்லும் போது, அதைப் பார்த்துவிட்டு உணர்ச்சி வசப்படுவர்களால், மேடையில் பேசுபவர்களால், எழுதுபவர்களால் என்ன செய்துவிட முடியும் ?
எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்கும் குறைவில்லை என்று கொக்கறிக்கும் அரசியல் வியாதி கூட்டங்களை வைத்துக் கொண்டு நாம் உணர்ச்சி வசப்படுவது நம் உடல் நலத்துக்குக் கேடு.
இதோ இன்னொரு நடிகன் கூட தமிழர் எதிர்களுக்கு மாலை போட்டு வலம் வர ஆயத்தமாகிவிட்டான்.
டமிழன்.....டமிழன் நாமலும் அவனுக்கு வாழ்த்து சொல்லிக் கூவுவோம்.
ப்ளாக்குங்கிறது மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இடம் அதில் நம்மை போன்ற ஆசாமிகள், சிறுகதை, கவிதை, விவாதம் ஆகியவற்றை எழுதுவதுடன் நில்லாமல், தமிழன், தமிழ் என்று உணர்ச்சி வசப்படுவதால் ஒரு மசுரும் அறுவடையாகப் போவதில்லை. போயி புள்ளக் குட்டிங்களை படிக்க வையுங்க.
:(