பின்பற்றுபவர்கள்

சாதி வெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி வெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஜனவரி, 2013

எனக்கு வந்த கோவத்திற்கு.....


வழக்கமாக தைப்பூசம் என்றால் குட்டி இந்தியா பக்கம் எட்டிப் பார்ப்பதுண்டு, பொதுவாகவே காவடி குட்டி இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து...இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல், தமிழகத்தில் தான் சைவத்திற்கும் அசைவத்திற்கும் ஆகாது, அதாவது சிவன் தொடர்புடைய கோவில் நிகழ்வுகள் அல்லது பட்டையடிக்கும் கோவில் நிகழ்வுகளுக்கும் வைணவ கோவில்களுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது, ஒரு ஐயங்காரை சிவன் கோவிலுக்கு கூப்பிட்டுப் பாருங்கள், பெருமாளை சேவிக்கிறவா சைவாள் கோவிலுக்கெல்லாம் வரமாட்டா, அபச்சாரம்' என்பார்கள். சிங்கப்பூரிலும் பெருமாள் கோவிலுலும் நாமம் போட்ட ஐயங்கார்ஸ் தான் இருக்கிறார்கள் என்றாலும் தைப்பூசத்திற்கு தெண்டபாணி முருகன் கோவிலுக்கு காவடிகள் பெருமாள் கோவிலில் இருந்து தான் துவங்கும், இங்கே உள்ளவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக காவடிச் சீட்டு, பால்குடம் என்று புறப்படும் ஒவ்வொன்றுக்கும் கட்டணச் சீட்டு விற்பார்கள், வருமானம் தான், தவிர சின்ன ஊரில் சைவம் - அசைவம் பிரச்சனை செய்தால் ஒரு பய கோவிலுக்குள் எட்டிப்பார்க்க மாட்டான்.

எங்கே விட்டேன் ? குட்டி இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து 5 கி.,மி தொலைவில் உள்ள தெண்டபாணி முருகன் கோவிலுக்கு இடைபட்ட இடத்தில் இறங்கி அதனை பார்வையிட்டபடி காவடி செல்லும் திசைக்கு எதிர்பக்கமாக நடந்து குட்டி இந்தியாவரை நடந்து வந்து பார்த்துவிட்டு திரும்புவேன், நாகையில் இருக்கும் வரை ஆண்டுக்கு இருமுறை இது போன்ற காவடி நிகழ்வுகளைப் பார்த்து அதில் கலந்து கொண்டு வந்ததால் சிங்கப்பூரில் அத்தகைய நிகழ்வுக்கு சென்று வருவது ஞாபகங்களை மீட்டுத் தரும், மற்றபடி சிங்கப்பூர் தைபூச நிகழ்வுகளில் என்னை ஈர்க்கும் படி பெரிதாக இல்லை, இங்கே காவடிக்கு மேளம் அடிப்பது உள்ளிட்ட கொண்டாடம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை, தவிர காவடிகள் அனைத்தும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கும், ஒரே வேறுபாடு, சீனர்களில் ஒரு சிலர் கூட காவடி எடுத்துவருவார்கள், 



இந்த ஆண்டு பாஞ்சாபி குடும்பம் ஒன்று காவடி எடுத்து வந்தது. நான் வழக்கமான இடத்தில் இறங்கி செல்லாமல் இன்றைக்கு முன்கூட்டிய திட்டம் எதுவும் இடாமல் ஞாயிற்றுக் கிழமை வழக்காமாக கறிகாய் வாங்கச் செல்லும் மாலை ஏழு மணிக்கு நேராக லிட்டில் இந்தியாவில் பெருமாள் கோவில் அருகே இறங்கினேன், முத்ல் நாள் நள்ளிரவு துவங்கும் காவடிகள் மறுநாள் இரவு 9 - 10 மணி வரை கூட சென்று கொண்டு இருக்கும், எடுத்துப் போன அலங்கார காவடிகளை திரும்ப எடுத்து வந்து மற்றவர்களும் எடுத்துச் செல்வார்கள், சிங்கப்பூர் இந்து இந்தியர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு ஊழியர்களாக தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் சிலரும், இங்கு நிரந்தரவாசியாக இருப்பவர்களும் வேண்டுதல் தொடர்சியாக இங்கேயே காவடி எடுப்பார்கள், அன்று ஒரு நாள் மட்டும் குட்டி இந்தியாவில் கண்டுகொள்ளப்படாத குப்பை மயமாக இருக்கும், 

பெருமாள் கோவில் அருகே இறங்கிப் பார்த்தால் கட்டுகடங்காத கூட்டமும் காவடி ஊர்வலத்தின் ஆரவாரமும், வாய்குள் முனுகுவது போல் கொட்டு அடித்துக் கொண்டு ஆடல் பாடல் என வெகு அமர்களமாக காவடிகள் சென்று கொண்டிருந்தது, சிறிது நேரம் பார்வையிட்டுவிட்டு வந்த வேலையை முடிக்க கறிகாய்களை வாங்கிவிட்டு காவடி செல்லும் திசையை குறுக்காக அடைந்து குட்டி இந்தியா பகுதிக்குள் சென்று விட்டேன், சாலையை முற்றிலும் முடக்காமல் ஒருபக்கம் தடுப்பு அமைத்து காவடிகளுக்கு வழிவிட்டு ஆங்காங்கே தற்காலிக காவலர்களை நிற்க வைத்து பார்வையாளர்களும், பொருள் வாங்க வந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமை சந்திப்புகளுக்காக குட்டி இந்தியாவில் கூடியவர்களும் சாலையைக் கடக்க ஏற்பாடு செய்திருந்தனர், அப்படியே சாலையைக் கடந்துவிடலாம் என்று ஒரு அதற்கான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன், காவடிகள் சென்று கொண்டு இருந்தன, 

ஒவ்வொரு காவடியுடனும் எடுப்பவர்களின் உறவினர் நண்பர்கள் என ஒரு 20 பேராவது உடன் செல்வார்கள்  அவர்களில் சிலர் ஆடியும் பாடியும்,  விசிலடித்தும் செல்வார்கள், பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு காவடியுடன் வந்த காவடி எடுப்பவரின் உறவுக்காரரான நடுத்தரவயது பெண், தற்காலிக பாதுகாவலுக்கு இருக்கும் ஒரு பணியாளரிடம் (அவர் இந்தியாவில் இருந்து வந்தவர் என்று பார்ததும் தெரிவதால்) நீ போக்குவரத்தை ஒழுங்கு செய்யாமல் காவடி எடுப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் நான் 'கொம்ப்ளய்ண்ட்' பண்ணிடுவேன் என்று மிரட்டல் தொணியில் இரண்டு முறை சொன்னார்,  நீல சீருடை அணிந்த சிங்கப்பூர் காவலர்களிடம் இதுபோல் இந்தம்மா பேசுமா ? எளக்காரம் தானே என்று எரிச்சலாக நினைத்தேன்,  அந்த பெண்ணும் அந்த காவடியும் நகர்ந்த உடன் அந்த  போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியாளர் என்னைப் பார்த்து சிரித்தார் , நானும் சிரித்தேன், அருகில் இருந்த மற்றொருவர் 'எல்லாம் நம்ம நேரம்' என்றார். சிரித்தேன், ஆனால் இன்னொருவன் இன்னொன்னு சொன்னான் பாருங்க......

'அவ மூஞ்சியப் பார்த்தால் பறச்சி மாதிரி தெரியுது......எப்படி பேசிட்டுப் போறா.......'  அதைக் காதில் கேட்டவுடன் எனக்கு 'சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று கோவம் தலைக்கேறியது, அப்படிக் கேட்டவர் பார்க்க வேலை அனுமதிச் சீட்டில் கட்டிட வேலை அல்லது குறைந்த ஊதிய பணிக்கு வந்தவர் போல் தான் இருந்தார்.

'மற்றதெல்லாம் ஓகே......இங்க வந்து எதுக்கு சாதியைப் பேசுறிங்க, மனுசங்க எல்லோருக்கும் கையு காலு எல்லாம் ஒண்ணு தான், அவங்க சாதிகாரன் வேறயாராவது இதை காதில் கேட்டு உங்களை செருப்பால் அடித்தால் வாங்கிக் கொள்ள தயாரா ?' என்று திரும்பி முறைத்து சற்று கோபமாகவே கேட்டேன், கேட்ட நபர் உடனேயே அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான், அங்கே நின்ற மற்றவர்களிடம் 'பொழைக்க வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே, இங்க வந்து ஏன் மற்றவர்களை தாழ்த்திப் பேசனும் ?' நீங்கச் சொல்றது சரிதான் என்றனர், அதற்குள் சாலையைக் கடக்க வழிகிடைக்க நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

தமிழகத்தில் பறையர்கள் பன்றி சாப்பிடுகிறார்கள் என்று தான் அவர்கள் மீது தீண்டாமையுடன் தாழ்த்தியும் வைத்திருந்தினர் . சாப்பிடுவது விலங்குகள் என்ற வகையில் ஒருத்தன் பன்றியை சாப்பிட்டால் என்ன ? மாட்டை சாப்பிட்டால் என்ன ? ஆடுகோழியை சாப்பிட்டால் என்ன ? கேடுகெட்ட சாதிவெறிப்பிடித்த நாய்கள் இன்றும் சாதியைப் பற்றி பேசினாலும் அதை தாழ்த்தும் பொருளுடன் பேச என்ன தேவை ? சீனன் கழுவதுகிடையாது, பேப்பரில் துடைத்து தான் கொள்கிறான், வேலைக்கு என்று வந்து பன்றியை விரும்பி உண்ணும் சீனனுக்கு சலாம் போட்டு, அவனுக்கு பயந்தபடியே வேலை பார்க்கும் நம்மவர்கள் சீனன் என்றால் கழுவி விடக் கூடத் தயாராக இருக்கும் பொழுது ஒரு சமுகம் எதனால் தள்ளி வைக்க்கப்பட்டது ? என்ற எந்த ஒரு அறியாமையும் இன்றி 'பறையன், பறைச்சி' என்று முகத்தைப் பார்த்து எடைபோட்டு பேசும் அளவுக்கு சாதிவெறியில் மூளை மழுங்கடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் ?

உயர் கல்வி, நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு என்று தன்னைப் பற்றி எந்த ஒரு உயர்ந்த நிலையையும் இல்லாத ஒரு நபர் கூட ஒருவரை தாழ்த்த அல்லது ஒருவரை கேவலப்படுத்த சாதியென்னும் ஆயுதத்தை எடுத்து வீசுகிறாகளே ? நாம் பிறந்த நாட்டைப் பற்றி நாம் என்ன தான் பெருமை பேசினாலும் அவை வீண் பெருமை தான் என்றாகிறது.

சிங்கப்பூர் இந்தியர்களால் எள்ளலாகச் சொல்லப்படும் "ஊர்காரன்" மட்டுமல்ல, தமிழகத்தில் பிச்சைக்காரன் கூட உயர்ந்த பதவியில் உள்ள பறையர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை 'போடாப் பறப்பயலே' என்று தூற்றி கூணிக் குறுக வைக்க முடியும்...........இந்த நிலை நாடுகளை தாண்டியும் நம்மவர் இடையே உள்ளது,. தமிழன் முன்னேறாமலும் உலகினருக்கு சான்றாக இல்லாததற்குக் காரணம் அவனவனிடம் உள்ள எல்லைகளற்ற, காலத்தால் அழியாத சாதிப்பற்றும், சாதிவெறியுமே யாகும்.

12 நவம்பர், 2012

சாதிவெறி கிராமத்தில் மட்டும் தானா ?


தலித் ஆடவர் வன்னிய பெண்ணை காதலித்து மணந்து கொண்டார் என்பதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ள அவரது உறவினர்கள் கிளர்ந்தெழுந்த பெரும் கலவரத்தில் தலித் உடமைகள், வீடுகள் எரிக்கப்பட்டு இருக்கிறது. சாதியத்தின், வருணாசிரமத்தின் கொடுமைகளின் கோரமுகங்கள் அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகளில் வழியாக தற்போதும் வெளிப்பட்டு இருக்கிறது, இதைத் தவிர்த்து இதற்கு வேறென்ன முக்கியத்துவம் ?

இருக்கிறது. ஆம் தமிழகத்தில் கலப்பு திருமணங்கள் நடக்காமல் இல்லை, ஆனால் அவை அனைத்தும் தலித்துகளுடன் தொடர்பில்லாமல் பல்வேறு சாதியத் திருமணங்கள் நடந்தேறிவிடுகின்றன, நாடார் மனமகனை முதலியார் பெண் மணந்துவிட்டாள், தேவர் சாதி ஆண் செட்டியார் பெண்ணை மணந்துவிட்டான் என்பதெல்லாம் சாதிப் பிரச்சனையாகுவதோ, கலவரங்களை உருவாக்குவதோ இல்லை, ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்த பிற சாதிய கலப்பு மணங்கள் ஓரளவு சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, எங்கள் உறவினர்களில் பல்வேறு சாதியைச் சார்ந்தவர்களுடன் திருமணங்கள் நடந்தேறியுள்ளன, அவையெல்லாம் எந்த ஒரு காலத்திலும் பிரச்சனையாகிப் போனதுமில்லை, இவற்றில் காதல் திருமணங்களும், பார்த்து வைத்த திருமணங்களும் கூட உண்டு, ஆனால் தலித் ஆடவர் ஒருவருடன் ஓடிய உறவுக்காரப் பெண்ணையும் அவரது தாயாரையும் இதுவரை எங்கள் உறவினர்கள் சேர்த்துக் கொண்டதே இல்லை, நான் தலித் சமூகம் சார்ந்தவன் இல்லை என்று வெளிச்சம் போட இதை நான் எழுதவில்லை, இதை எழுதுவதையே கூச்சமாகக் கருதுகிறேன்,  ஒரு நாடாரையும், ஒரு பத்தரையும், ஒரு நாயுடுவையும், தஞ்சாவூர் கள்ளரையும் , ஒரு பார்பனரையும் திருமண சம்பந்ததில் வைத்திருக்கும் எங்கள் உறவினர்கள் தலித்துகளுடன் ஏற்பட்ட திருமண பந்தத்தை மட்டும் அவமானகரமாக நினைக்கிறார்கள்.

காலம் காலமாக தாழ்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் இறந்த விலங்குளை உண்ணுபவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம், அவர்களை சம்பந்தியாக்கிப் பார்பதில் உடன்படுவதில்லை என்பது தவிர்த்து வேற எந்த காரணமும் தெரியவில்லை, ஒரு காலத்தில் தீண்டத்தகாத சமூகமாக கருதப்பட்டு தோள் சீலை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் சமூகங்கள் அந்த நிலையை மிகுந்த ஒற்றுமையுடன், பொருளியல் ரீதியாக முன்னேற அவர்கள் மீதான சாதிய தாழ்வு நிலையை அவர்கள் என்றோ கடந்து வந்துவிட்டார்கள், ஆனால் தலித்துகள் ஏன் அவ்வாறு வளரவில்லை ? சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் நிலை மாறவில்லையா ? கண்டிப்பாக மாறி இருக்கிறது, ஆனால் அவர்களுடைய சாதிப்பிரிவு நான்காம் பிரிவில் வருவதே காரணம். தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பிற சாதியினர் குடியானவர்கள், 'சாதி தமிழர்கள்' என்கிற அடைமொழியை தனக்கு தாமே கொடுத்துக் கொண்டு வைசிய, சத்திரிய பிரிவை கிட்டதட்ட பிராமணப் பிரிவுக்கு இணையாக உயர்த்திக் கொண்டார்கள், இதில் பார்பனர்கள் பங்கு என்று எதுவும் கிடையாது, தனக்கு கீழே ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இருந்தால் தன் சாதி தாழ்ந்ததல்ல என்கிற எண்ணத்தில் அனைத்து சாதிகளுமே தலித்துகளின் முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டதும் இல்லை, அவர்களை அரவணைத்துக் கொண்டதுமில்லை.

எட்டணா காசைக் கீழே வைத்தால் கும்பிடு போட்டு குணிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு போவான், இன்னிக்கு பேண்டு போட்டுவந்து சரிக்கு சமமாக நின்னு கூலிய தெனாவெட்டாகக் கேட்கிறான், வெட்டியானுக்கு திமிரைப் பாருங்க என்றெல்லாம் தன் தவறை உணராது கூழைக் கும்பிடு போடாத தலித்துகளை 'திமிர்' தனம் என்று சொல்லும் சுடுகாட்டுக் காட்சிகளை நேரில் பார்த்தே இருக்கிறேன்,  எங்கள் சாதி சமூகத்தில் எவனும் பிச்சை எடுத்ததில்லை, விபச்சாரம் செய்ததில்லை, மாமா வேலைப் பார்த்ததில்லை என்று சொல்லும் நிலையில் எந்த சாதியும் இல்லை என்பதே உண்மை, பட்டினி சாவை எந்த சாதியாவது தடுத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, டாஸ்மாக் எச்சில் க்ளாசில் சாராயம் குடிக்கும் பொழுது அதற்கு முன் அதில் குடித்தவன் எந்தசாதி (தற்பொழுது பேப்பர் டம்ப்ளர் வைத்திருக்கிறார்கள்), வேற ? எந்த சாதி பாலியல் தொழிலாளியிடம் செல்லுகிறோம் என்றேல்லாம் அவ்வாறு செல்பவர்கள் ஆராய்ச்சி நடத்துவதும் இல்லை, ஆனால் திருமணம் நீண்டகால பந்தம் என்று நம்புவதால் அதற்கு மட்டும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் சாதி என்றால் முகம் சுளிக்கிறார்கள், 

நாங்கள் சாதிக் கொடுமைகள் எதையும் செய்வதில்லை என்று பார்ப்பனர்கள் மார் தட்டுகிறார்கள், ஆனால் /பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை; என்னும் அவர்களது அறிவிப்பு பலகைகள் அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதாதைக் காட்டுகிறது, பார்பனர்கள் சாதிக் கொடுமை செய்யாததற்கு அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை, ஆனால் இதுபோன்ற குழுசார்ந்த கொடுமைகள் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு ஆள் பலம் போதாது என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை, வெளிமாநிலங்களில் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தே வருவாதால் தமிழ் நாட்டு பார்பனர்கள்  திருந்திவிட்டார்கள் என்பது மாற்றம் என்றாலும் அந்த மாற்றத்திற்கு காரணம் எண்ணிக்கை தான், அதையும் ஒப்புக் கொள்ள மனமில்லை என்றால் பெரியாரைத்தான் காரணாமாகச் சொல்ல முடியும், பெரியாரின் பெண் விடுதலையால் முழுக்க முழுக்க பயன்பெற்றவர்கள் பார்பனப் பெண்களே, மொட்டை அடித்துக் கொண்டு காவி புடவையுடன் தென்படும் பார்பனப் பெண்கள் கனிசமாக குறைந்து மறைந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுதியாகிவிட்டார்கள், இது பிறமாநிலங்களை ஒப்பு நோக்க தமிழகத்தில் மிக அதிகம்,

சென்னையிலோ, திருச்சி போன்ற பெருநகரங்களிலோ கலப்பு திருமணங்கள் பெரிய அளவில் கலவரமாக வெடிப்பதில்லை, ஏனெனில் சாதிய பெரும்பான்மையுடன் ஒரு இடத்தில் வசிக்கும் வாய்ப்பு நகரங்களில் குறைவு, கிராமங்களில் சாதி வாரியாக சிறுபான்மை பெரும்பான்மை என்று வசிப்பதால் அங்கு இவை அன்றாடப் பிரச்சனையாகிப் போகிறது. மற்றபடி நகரத்தில் வசிப்பவர்கள் நாகரீகம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை.

பிரசன்னவோ அல்லது சினேகாவோ அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் அவர்களுடைய சாதி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருசாதி வழக்கப்படி திருமணம் நடந்திருக்குமா ?

இன்றைய தேதிக்கு பார்பனர்கள் மட்டுமே உயர் சாதியினர் இல்லை, தலித்துகள் அல்லாத அனைத்து சாதிகளுமே தங்களை உயர்சாதியாக நினைத்துக் கொண்டும், அவர்களுக்கு நேர் எதிர் தாழ்ந்த சாதியாக ஒட்டுமொத்த தலித்பிரிவுகளையும் வைத்துள்ளனர், என்னைக் கேட்டால் இதற்கு நிரந்தர தீர்வு தலித்துகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறி இவர்கள் முகத்தில் காரி உமிழ்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும். 

தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ளும் வரையில் தலித் விடுதலை சாத்தியமற்றது, அதைப் பெரும்பான்மை பிறசாதிகள் கொடுத்துவிடவும் மாட்டார்கள்.

*******

அனைவருக்கும் தோழர் நரகாசூரன் நினைவு நன்னாள் வாழ்த்துகள்.

20 டிசம்பர், 2010

ஆதீனமும் ஆசனவாய் சாதியும் !

இன்றைய தேதிக்கு சாதிப் பெயரில் பெருமை ஒன்றும் இல்லை, சாதி வெளியே சொன்னால் காரித் துப்பும் நிலைதான். இந்திய சாதி அமைப்பின் அடிப்படைத் தவறு சாதிகளில் ஏற்றத் தாழ்வு, இந்திய சாதி அமைப்பு முறை வீழ்ச்சி அடையவும், பிற நாடுகளின் இது போன்ற அமைப்பைப் பின்பற்ற முடியாமல் போனதற்கும் இதுவே காரணம். தொழிற் பெயராக உருவாகிய சாதி, அந்தந்த குறிப்பிட்ட சாதிக் கென வேலைகளை வைத்து அந்த வேலையைச் செய்த மக்கள் குறிப்பிட்ட சாதி என்று அழைக்கப்பட்டு வந்தனர். தொழில்களில் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் சாதி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கின்றன. எனக்கு தெரிந்த வகையில் 1330 திருக்குறளில் சாதி அமைப்பைக் கண்டிக்கும் திருக்குறள் இல்லை. பின்னர் வந்த அவ்வையார் பாடல்களில் 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்ற சொற்றொடர்கள் ஏற்பட்டிருக்கின்றன. வள்ளுவருக்கு பின்னான காலகட்டங்களில் குறிப்பிட்ட தொழில்களை இழிவாகக் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றும் கூட குற்றவாளிகளுக்கான தண்டனை என்பதாக இழி தொழில்கள் செய்விக்கப்படுகின்றன. மேற்கண்ட குறிப்பிட்ட காலத்தில் சமூகக் குற்றங்களைப் புரிந்தவர்களை ஒதுக்கி வைத்து அவர்களுக்கென்றே சில தொழில்களை தண்டனையாகக் கொடுத்து, பின்னர் அவர்களுடைய வாரிசுகளையும் அவ்வாறே இழிதொழில்களை செய்யப் பணித்திருக்க வேண்டும். அல்லது போரில் பிடிக்கப்பட்டவர்களை இழிதொழில் செய்யப் பணித்திருக்க வேண்டும். நாளடைவில் அந்தத் தொழில்களை செய்வோரை இழிவாகக் கருதும் வழக்கம் ஏற்பட்டிருக்க, அவ்வாறு செய்யலாகாது என ஒளவையார் உள்ளிட்டோர் கண்டிததற்கான சுட்டிகளே 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்னும் மூதுரை. சாதி அமைப்புகள் உயர்வு தாழ்வு பார்க்கத் துவங்கிய காலங்களிலேயே தமிழ்நாட்டில் அவை வன்மையாகக் கண்டிப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆண்டைகளும், ஆள்வோர்களும் வல்லவன் வகுத்ததே சட்டம் என்கிற கோட்பாட்டில் சாதி வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

இன்றைய தேதியில் சாதி அமைப்பின் பயன்பாடுகளாக குலதெய்வ வழிபாடு மற்றும் பெண் கொடுத்து / எடுப்பது, மற்றும் ஒரு சில குலம் சார்ந்த பண்டிகைகள் விழாக்கள் மட்டுமே. மற்றபடி சாதிப் பெருமை பேசுபவர்கள் எவரும் செருப்படி வாங்கக் கூடிய தகுதி உடையவர்கள் தான். திருமண உறவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் வாரிசுகளைத் தரும் உத்தியில் அமைக்கப்பட்டு இருப்பதால் சாதிகள் பிறப்பின் வழியாகப் பிண்ணப்பட்டுள்ளது, எனவே அதனை ஒரு சில நூற்றாண்டுகளில் அழிப்பதும் கடினம் தான். இருந்தாலும் சாதிப் பெருமை என்பதும்,. வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்பதால் தமிழ் நாட்டில் 99 விழுக்காட்டினர் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளப்படுத்திக் கொள்வதை பெரியாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு ஒருவாரு ஏற்றுக் கொண்டு தவிர்த்துள்ளனர். ஒரு சிலர் தவிர்த்து சாதி வெளியே தெரிவது அவமானம் என்றே நினைக்கின்றனர். இத்தகைய அவமானம் பார்ப்பனருக்கும் பறையருக்கும் ஒன்றே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. கொண்டைப் பார்டி, பூணூல் பார்டி என்று சொல்லிவிடுவார்கள் என்பதற்காக பார்பனர்கள் சாதிப் பெயரை வெளியே சொல்லிக் கொள்வதில்லை, பறையர் சமூகப் பொருளாதார நிலை இன்னும் தாழ்வாக இருப்பதால் அவர்களும் சாதியை தங்களாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அரசியல் ஆதாயம் உடையவர்கள் மட்டுமே தாம் இன்னின்ன சாதி என்றும், குறிப்பிட்ட சில சாதிகளை மேலே கொண்டு வந்து சாதி சமூக பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டும் என்பதற்காக சாதிப் பெயரில் கட்சிகளை, சங்கங்களை அமைத்திருக்கிறார்கள். மற்றபடி இந்த சாதி சங்களை வைத்து பிற சாதி தனிமனிதனை கீழாகக் கொள்ள எந்த ஒரு முகாந்தரமும் இல்லை, அப்படி செய்யும் இடங்களில் சாதிக்கலவரங்களே வெடிக்கின்றன. இன்றைய தேதிக்கு சாதி என்பது குறிப்பிட்ட தெருவோடு அல்லது வீட்டோடு முடிந்துவிடுகிறது. சாதி சார்பில் நெருக்கமானோம் என்கிற நிலை நட்புகளுக்குள்ளேயும் மிகக் குறைவு.

குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதி சமூகங்கள் தவிர்த்து பிறர் சாதி அமைப்பாகத் தொடர்வதற்குத் தேவையான காரணங்கள் மிகக் குறைவு. காரணம் குலம் சார்ந்த தொழில் என்று எதுவும் தற்போது இல்லை. முடித்திருத்தகங்கள், ப்யூட்டி பார்லர் என்பதாக பெயரை மாற்றி பார்பனர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் நடத்துகின்றனர். எனக்கு தெரிந்து கொத்தனார் சித்தாள் வேலையை செய்யாத சாதியினரே கிடையாது. கொத்தனார் - சித்தாள் தொழில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தொழில் என்பதாக இல்லை. அது போன்று தச்சு வேலை, பர்னிசர் ஷோரூம் இவை எதுவும் குறிப்பிட்ட சாதியினரால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. நகைசெய்யும் தொழில்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினரால் தொடர்ந்து நடைபெறுகிறது, ஆனாலும் நகைக்கடைகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரின் தொழிலாக இல்லை. துவக்கத்தில் உணவகத் தொழில் கொடிகட்டிப் பறந்த பார்பனர்கள், பின்னர் நாடார் சமூகத்தினரால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். நாடார் சமூகத்தினர் செய்யாத தொழிலே இல்லை.

பாலியல் தொழில் உட்பட பணம் கொழிக்கும் தொழில்களை அனைத்து சமூகத்தினரும் செய்து வருகின்றனர். சாதி என்பது தற்போதைய சூழலில் குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்திருக்கவில்லை என்னும் போது தற்போதும் சாதி அமைப்பு தொடர்வதற்கு பெண் கொடுத்து எடுப்பது என்பது தவிர்த்து, குறிப்பிட்ட குலதெய்வ வழபாடுகள் என்பதாகச் சுருங்கிவிட்டன. இந்த சூழலில் ஒருவர் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதற்கான தேவை என்ன ?

சாதி ஏன் தொடர வேண்டும் என்று ஒரு சாக்கடை சாமியார் சொல்கிறான், குறிப்பிட்ட சாதிப் பெயர்களைக் கூட்டினால் எண் 9 வருகிறதாம்,

"முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள்" - மதுரை ஆதினம்

இந்த ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது ? அது தானே முக்கியமான சாதி, காலில் இருந்து பிறந்தவன் என்று கற்பித்து ஒதுக்கிவைக்கப்பட்ட இந்திய சாதி அமைப்புச் சூழலில், ஆதீனம் குறிப்பிடும் ஒன்பது ஓட்டைக்குள் ஒன்றாக ஆசனவாய் சாதி இதுதான் என்று அடையாளப்படுத்தினால் களேபரம் ஆகாதா ? அந்த மூட்டாள் பய ஆதினம் ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது என்று தெளிவு படுத்துவானா ? ஆதீனமாம்...... ஆதீனம் நல்லா வருது வாயில.

தொடர்புடைய சுட்டி.

20 நவம்பர், 2009

சாதீ...யம் சில எண்ணங்கள் !

இந்தியாவின் மையப் பிரச்சனை என்றாலும் இப்போது அரசியல்வாதிகள், சாமியார்கள் மறைமுகமாக ஆதரவுக் கொடுத்து வளர்த்துவிடும் ஒன்றாகவும் சாதி இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சிப் பின்னலாகவே பிரிவினைக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் சாதி மற்றும் கற்பு என்கிற சொல்லாடல்கள் சமூகத்தில் அழுத்தமாக பதிந்து கிடக்கின்றன. கற்பு பற்றிய புரிதல் குறித்த மாற்றம் சமூகத்தில் ஏற்பட்டு இருக்கிறது, ஏனெனின்றால் பாலியல் வன்முறை செய்தவனையே திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி பெண்களின் கற்பை மீட்டுக் கொடுக்கும் பழக்கம் தற்போது இல்லை அல்லது மிகக் குறைவு, அதே போன்ற வன்முறையால் (கணவன் தவிர்த்து) பிறரால் பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள், கணவனுக்காக வைத்திருந்தது களவாண்டு போய்விட்டதே என்று தூக்கில் தொங்குவதோ, தீக்குளிப்பதோ நடப்பது இல்லை, மாறாக அப்படி பாலியல் வன்முறை செய்தவர்களை கடுமையான சட்டம் கொண்டே தண்டிக்கிறார்கள், நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்பதாக பாதிக்கப்பட்ட பெண்களில் மன நிலையாக மாறி வந்திருக்கிறது.

(ஆண் ஆளுமை) சமூகத்தில் பெண்கள் மீது பழிபோட்டு அவர்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் சமூக சித்தாந்தமான 'கற்பு நெறி' தூற்றி நல்ல மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினார் பெரியார். பாலியல் வன்முறைக்கு தான் உள்ளானதாக முறையிட்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்கிற மதவாத சட்டங்கள் முசாரப் ஆட்சிக்கு முன்புவரை கூட பாகிஸ்தானில் அமுலில் இருந்ததாம், இதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர முடியாமல் போனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுமாம். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் முறையிட்டு, நான்கு சாட்சிகள் இல்லை என்கிற காரணத்தால் 80 விழுக்காட்டுப் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் முஷ்ரப் ஆட்சியின் போது விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு நூலில் படித்தேன். பெண்கள் தனித்து வெளியே போகக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் இருந்த அந்த காலத்தில் சாட்சியோடு பாலியல் வன்முறைக்கு வாய்ப்பு இருந்திருக்கலாம், இன்றைக்கு பெண்களும் வேலைக்கு, வெளியிடங்களுக்கு செல்லும் போதும் பாலியல் வன்முறை செய்பவன் சாட்சி வைத்துக் கொண்டு செய்வானா ? இந்த ஷரியத் சட்டம் சரியானது தானா ? என்பதை இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நன்று.

சாதி பேதமற்ற சமூகம் அமைப்போம் என்று ஒரு சிலர் உண்மையேலேயே பேசினாலும், சாதி பற்றாளர்களின் புதிய சித்தாந்தம் என்னவென்றால் சாதி அமைப்பு சரியானதே, பின்னால் வந்தவர்கள் அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிட்டார்கள், அதை சரி செய்துவிட்டால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதாக கூறிவருகிறார்கள். நான் சாதிவெறியர்கள் பற்றி குறிப்பிடவில்லை, சாதிவெறியர்களின் சித்தாந்தம் சாதி கடவுளால் படைக்கப்பட்டது, விதிப்பயனால் அவன் உயர்ந்த அல்லது தாழ்ந்த சாதியில் பிறக்கிறான், சாதியைத் தாழ்த்தி வைப்பதும், உயர்த்திச் சொல்வதும் ஏற்றத்தாழ்வை போற்றும் ஆண்டவனின் ஏற்பாடு என்கிறார்கள். ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள் என்பதை இஸ்ரேலிய யூதர்கள் என்றுமே சொல்லிவருவார்கள், அதே போல் பார்பனர்களின் பலர் 'ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள், அதாவது பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள்' என்கிற சித்தாந்ததை நம்புகிறார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்கள் சமூக ஏற்றத்தாழ்வை என்றுமே ஆதரிப்பவர்கள், அவர்களுடைய கருத்துக்கள் படி ஒரு பொதுச் சமூகம் என்றுமே உருவாகிவிட முடியாது, உருவாகக் கூடாது என்பதும் அவ்ர்களின் எண்ணம், அதனால் சாதிவெறியர்களின் சாதி குறித்த சிந்தாந்தம் மிக வெளிப்படையானது என்பதால் அதனை பேசுவது பயனற்றது, அவர்களை மாற்றவும் முடியாது.

அடுத்து சாதிப் பற்றாளர்கள், இவர்கள் அவ்வளவு தீவிரமாக சாதிவெறி கொண்டிருக்காவிட்டாலும் இவர்கள் சாதிக்கு ஆதரவாக கூறும் காரணங்களில் அடிப்படை சாதி ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டது என்றே நம்பினாலும் சாதிய சமூகத்தில் இருக்கும் ஏற்றதாழ்வு களையப்பட வேண்டும், சாதியை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் ஏற்றத்தாழ்வை கடவுள் திணிக்கவில்லை, மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் ஏற்றத்தாழ்வை அதில் நுழைத்துவிட்டார்கள் என்பதே அவர்களின் சாதி குறித்த பார்வையாக இருக்கிறது.
இவர்கள் சொல்லுவது நல்லெண்ண அடிப்படையில் என்றாலும் இவர்களும் சாதி அமைப்புகள் தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், சாதியற்ற சமூகம் அமைத்தால் அவரர்களுக்கான பண்பாடுகள் தொலைந்துவிடும் என்பதாக இவர்கள் அலறுகிறார்கள்.

சாதி முட்களின் மீது சமூக சீலையை உளர்த்திய பின், சேலை கிழியாமல் அதை எடுக்க முடியுமா ? உயர்வு தாழ்வு அற்ற சாதி அமைப்பு வேண்டும் அல்லது சாதிகளில் ஏற்றதாழ்வு தேவை இல்லை என்பது எந்த காலத்திலும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? "சாதி சொல்லி தாழ்த்துவது" என்பது சாதிகள் இருந்தும் உயர்வு தாழ்வு அற்ற சமூகத்தால் சாத்தியப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். 'என் சாதிக்காரனை அடிச்சிட்டான் அந்த சாதிக்காரன்' என்கிற நிலமை ஏற்படாமல் இருக்க சாதி உயர்வு தாழ்வு பாராட்டாத சாதிய சமூகத்தால் ஏற்படுத்திவிடமுடியுமா ? சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இனக்குழுக்கலாக மாறிவிடும் என்பதைத தவிர்த்து, சாதி அமைப்பு முறையில் ஏற்றதாழ்வுகளை மட்டுமே அகற்றுவதால் வேறெதுவும் நிகழ்ந்துவிடாது.

சாதி அமைப்பு சரியானது, அதில் (சாதிய) ஏற்றத் தாழ்வு தேவை இல்லாதது என்ற கூற்றுகள் என்னைப் பொருத்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியாதும், என்றுமே சமூக மாற்றத்திற்கு எந்த ஒரு பயனையும் ஏற்படுத்தாத கூற்று ஆகும். உதிரங்களும் உறுப்புகளும் தேவைப்படும் போது பல்வேறு சாதிகள் என்று நம்பப்படும் மக்கள் ஒருவருக்கொருவர் தேவையின் காரணமாக மாற்றிக் கொள்ளும் இந்த காலத்தில் கண்ணுக்கு தெரியாத வலையாக நம்மீது பின்னப்பட்டு இருக்கும் சாதி என்கிற மாயவலையே தேவையற்றது.

‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’ - இன்றைய தேதியில் சாதி பற்றிய பல்வேறு தரப்பினரின் எண்ணங்கள் பற்றி பதிவர் நண்பர் ஆழியூரான் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

19 நவம்பர், 2008

அப்பாடா.....இடது கையைப் பார்த்து சுடுங்க...!

1989ல் ஒரு இரவில் சென்னையில் இருந்து நாகையை நோக்கிய பேருந்து பயணம், முன் இருக்கையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் அப்படியே தூங்கிப் போனேன். திடிரென்று காதைப் பிளக்கும் இடியொலி. தலையெல்லாம் கற்கண்டு அபிஷேகமாக கண்ணாடிச் சிற்கள். பயந்து விழித்துப் பார்த்தால் பெரிய கும்பல் வரிசையாக பேருந்துகளை நிறுத்தி பேருந்து கண்ணாடிகளை உருட்டுக் கட்டையால் நொறுக்கிக் கொண்டிருந்தது... எங்கும் அலறல் ஒருபக்கம் ...எங்கும் 'அடிங்கடா...நொறுக்குங்கடா... கொலை வெறி கோஷம் இன்னோர் பக்கம்... திண்டிவனம் தாண்டி மேல்மருவத்துத்தூர் அருகில் தான் அந்த இடம்... வன்னியர்களின் போராட்டம் என்றார்கள். ஒரு இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு கண்களை குருடாக (கண்ணாடி இன்றி) பேருந்துகள் புறப்பட்டன. வீட்டிற்குச் சென்று தலையைச் சுரண்டும் போதெல்லாம் இரத்தத் துளிகளுடன் சிறு கண்ணாடி சிற்களை எடுத்துக் காட்டினேன். மேல்சட்டை பாக்கெடிலெல்லாம் கண்ணாடி துண்டுகள், வீட்டில் இருந்த பெற்றோர் பயந்து போனார்கள். கண்ணாடி உடைப்புடன் இல்லாமல் பேருந்தையே எரித்து இருந்தால்...நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும்.

இந்த போராட்டக்காரர்களுக்கெல்லாம் ஏன் அரசு பேருந்தே எதிரியாகத் தெரிகிறது ? ஆத்திரம் அடங்கவில்லை என்றால் பெட்ரோலை வாங்கி தலையில் கொட்டிக் கொண்டு தீக்குளிப்பு போராட்டம் நடத்தலாமே, எவனோ எங்கோ செல்லும் பேருந்தை வழிமறித்து கொளுத்திவிடும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது ? இந்த அறிவீனர்களின், காட்டுமிராண்டிகளின் செயலால் 3 மாணவிகள் உயிருடன் எரிந்தது போதாதா ? இப்பவும் எதாவது சாதிக் கலவரம், கட்சிக் கலவரம் என்றால் உடனடியாக பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி தீ வைக்கிறார்கள். எதையாவது கொளுத்தி தான் போராட்டத்தின் கவனத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்றால் தன்னையே கொளுத்திக் கொள்ள வேண்டியதுதானே.

இதைத் தடுப்பதற்கு எளிய வழியாக, எந்த கட்சி சார்பில் பேருந்து கொளுத்தப்பட்டாலும் இருமடங்கு பேருந்தின் விலையை அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து இரு பேருந்துகளை வாங்கிவிட வேண்டும். கூடவே கொளுத்தியவர்களுக்கு 4 ஆண்டுகள் வரையில் சிறைதண்டனை அளிக்கலாம், சாதிக் காரர்களின் போராட்டம் என்றால் அந்தந்த சாதி சங்கத்திடமிருந்து அதே போல் வசூல் செய்யவேண்டும், மீறினால் அந்த சாதி சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஓர் ஆண்டுகள் வரை கடும்காவல் தண்டனையும், 4 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும். பேருந்து எரிப்பின் போது யாராவது உயிரிழக்க நேரிட்டால் போராட்டக் காரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கவேண்டும்.

தற்பொழுது முதல்முறையாக பேருந்து எரிப்பில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு வந்திருக்கிறதாம். இடது கையைப் பார்த்து சுடுங்க, காலம் முழுவதும் அவன் ஒரே கையால் தான் கழுவனும், அதே கையால் தான் சாப்பிடனும், அதைவிட பெரிய தண்டனை கொடுக்க முடியாது, உணர்ச்சிவசத்தில் பொதுச் சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கும், பொதுமக்களின் உயிரையும் உடமையையையும் துறும்பாக நினைக்கும் மடையர்களுக்கு பாடமாக அமையும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்