"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - ஸ்ரீமத் பகவத்கீதை
இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல விளக்கங்கள் நேரடியான பொருள் கொள்ளத்தக்கவாறு இருக்கும். இதே சொற்றொடருக்கு நம் பெரியார் தோழர்களோ, ம.க.இ.க தோழர்களோ வேறு பொருள் கொடுப்பார்கள். அடிமைத்தனத்தின் கட்டுமானம் சரியாமல் இருக்க இந்த சொற்றொடரை பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். அதாவது ஆண்டைகளிடம் அடிமையாக இருப்பவர்கள் கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற சாதாரண ஊதியம் கொடுத்தால், அல்லது ஊதியமே கொடுக்காமல் விட்டால் கூட கடமையை செய் அதன் பலனான ஊதியத்தை எதிர்பார்க்காதே என்று மறுப்பதை இந்த சொற்றொடர் ஞாயப்படுத்தியதாக மாற்றுப் பார்வையில் குற்றம் சுமத்துகிறார்கள். தோழர்கள் சொல்வது சரியே என்றாலும், நான் கீதையின் இந்த சொற்றொடரை அதே பொருளில் கொள்வதில்லை. இது சமூகவியல் (அடிமைத்தன) கட்டுக் கோப்புக்கு எழுதப்பட்டது என்பதை விட (தனிமனித) உளவியலுக்கே இதன் பொருள் சரியாக இருக்கும் என்பது தான் என்னுடைய எண்ணம்.
ஒருவர் விரும்பிச் செய்யும் எந்த செயலிலும் அவரது நோக்கமே முதல் தூண்டுதல், அத்தகைய தூண்டுதல் வெற்றியடைந்த ஒருவரை அல்லது பலரைப் பார்த்து அவருக்கு வந்திருக்கலாம், அல்லது தன் முயற்சியாக இந்த செயலை செய்யவேண்டும் என்ற தூண்டுதல் அவருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.
எனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது அலுப்பாக இருக்கிறது, என்ன தான் உழைத்தாலும் கிடைக்கும் ஊதியம் எனக்கு போதுமான அளவாக இருப்பதில்லை என்று நினைக்கிறேன். நிறுவனங்கள் ஒருவரின் கடுமையான உழைப்பை கவனித்து வந்தால் ஒருவேளை இரண்டு மாத ஊதியத்தை ஆண்டு இறுதியில் அவருக்கு கொடுப்பார்கள், அல்லது பதவி உயர்வு கொடுத்து சற்று ஊதியத்தை கூட்டுவார்கள். இதுதான் பொதுவாக நடப்பது, அது போதிய அளவாக இல்லை, நான் எனது தேவைகளையும், வருங்காலத்திற்கும் சில திட்டமிடல்களை செய்து ஒரு நிறுவனம் தொடங்க இருக்கிறேன், நான் சார்ந்துள்ள வேலையின் நிபுணத்துவம் பெற்றுருக்கிறேன், சிறிய அளவிற்கு நிறுவனம் தொடங்க பணமும் இருக்கிறது அப்படி இல்லை என்றால் வங்கிக் கடன் வாங்கி அடுத்த மாதம் நிறுவனம் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கு, இன்றே முடிவு செய்து, ஒருமாதம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும், என்கிற தற்போது வேலை செய்யும் நிறுவன விதிகளின் காரணமாக, 30 நாட்களின் இறுதியில் விடுவிக்கச் சொல்லி தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு கடிதம் கொடுத்துவிடுகிறேன்.
அடுத்து,
எனது எண்ணப்படி நிறுவனம் தொடங்கிவிட்டேன், இன்னும் ஓர் ஆண்டுக்குள் எனது நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுவரவேண்டும் என்று அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொண்டிருக்கிறேன். ஒரு 8 மாதம் நல்ல வளர்ச்சி, அதன் பிறகு எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய நிறுவனம் ஒன்று நான் தயாரிக்கும் பொருளையே பாதிக்கும் பாதிவிலையில் விற்கிறது, இன்னும் 6 மாதத்திற்கு விற்கலாம் என்று நான் தயாரித்த பொருள்கள் எல்லாம் உற்பத்தி விலைக்குக் கூட போகாத நிலையில் பழைய மாடல் என்று அப்படியே தேங்கிவிடுகிறது, நான் திட்டமிட்டபடி ஓர் ஆண்டுகுள் என் நிறுவனம் அடுத்து வளர்வதற்கான வாய்பே இல்லை, மேலும் நட்டமடையாமல் இருக்க தற்காலிகமாக மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். வங்கிக்கடன் கழுத்தை நெறிக்கிறது. என்ன செய்யலாம் ? வாங்கிய கடனுக்காக தற்கொலை செய்து கொள்ள முடியுமா ?
இலக்கில் வெற்றி என்ற முடிவில் ஒருவித வெறியுடன் செயலாற்றுபவர்கள் எல்லோருமே இதுபோன்ற சூழல்களில் தற்கொலைதான் செய்து கொள்வார்கள். மிகச் சிலரே 'எல்லாம் சரியாகத்தான் செய்தோம், வேறு சிலகாரணங்களினால் எண்ணியபடி நடக்கவில்லை, இதிலிருந்துவிடுபட்டு அல்லது இதில் புதுமையை புகுத்தி எழுந்து நிற்போம் என்று தன்னம்பிக்கையை கொண்டிருப்பார்கள். அதாவது இதைச் செய்தால் இது நடக்கும் என்று பொதுவாக தெரிந்தாலும், இலக்கு இதுதான் இதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்வோம், இடையில் இடற்பாடுகள் வந்தால் மாற்று நடவடிக்கையான இவைகளைச் செய்ய வேண்டும் என்ற பொறுமை வெற்றியை வெறியுடன் அனுகுபவர்களுக்கு இருக்காது. அவர்கள் நோக்கம் முழுவதும் வெற்றி அடைவதைப் பற்றிய எண்ணமாக மட்டுமே இருக்கும், அவை கிடைக்கமல் போகும் போது தளர்ந்துவிடுவார்கள்.
கஜினி 16 முறை 'தோல்வி' அடைந்தான் என்று வரலாற்றில் சொல்லப்படுவதில்லை, அதற்கு மாற்றாக 16 முறை 'முயற்சித்து' 17 ஆவது முறை வெற்றிபெற்றான் என்று சொல்லப்படுகிறது. தோல்விகள் என்பது வெற்றிக்கான முயற்சிகள் என்ற அளவில் புரிந்து கொண்டால் தோல்விகள் எவரையும் பயமுறுத்தாது. அவை மேலும் ஊக்கம் கொடுக்கும். 10 பேர் ஓட்டத்தில் 3 வர் மட்டுமே வெற்றியடைவர், முயற்சி / தகுதி என ஒன்றுமே இல்லாமல் வேடிக்கைப்பார்க்கும் பார்வையாளர்களின் கவனத்தில் மீதம் 7 பேர் முயற்சி செய்தவர்களாகவே தெரிவர்.
ஒரு செயலில் வெற்றி என்பது நம் இலக்கு என்றாலும் சில எதிர்பாராத காரணிகளால் அந்த இலக்கு தடைபடும், நன்றாக தேர்வு எழுதிய மாணவனின் தேர்வுத்தாள், திருத்தப்படும் போது வீட்டில் சண்டையிட்டு வந்த ஆசிரியரின் கையில் கிடைத்து அவன் தோல்வி அடைந்தால் அதற்கு அவன் பொறுப்பு ஏற்று தோல்வி என்று துவண்டு போய் தற்கொலை செய்து கொண்டால் அவன் முட்டாள் தான். தன்னளவில் நான் நன்றாக செய்தேன், இடையில் எதோ தப்பு நடந்திருக்கிறது என்று உணரும் பொறுமை இருந்தால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அவன் முதல் மதிப்பெண் பெற்றிருப்பதை அனைவருக்கும் உணர்த்த முடியும்.
நாம் விரும்பி செய்யும் எந்த செயலும் முனைப்புடன் செய்யப்பட வேண்டும், அவை இலக்கு மட்டுமே, அந்த இலக்கை அடைவது வெற்றி என்று நாம் கருதினால் இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றி என்ற போதை செயல்பாடுகளை தீவிரப்படுத்த பயன்படும். ஆனால் அதே போதையுடன் இலக்கின் முடிவை நோக்கி சென்று அதை அடையவில்லை என்றால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்.
வெற்றி(கள்) என்பது இலக்கு மட்டுமே, அதை அடைந்தால் மகிழ்ச்சி கிடைக்கும், ஆனால் எந்த ஒரு வெற்றியும் நிரந்தாமல்ல. நேற்று தனி ஒரு ஆளாக ஒரு ரவுடி இன்னொரு ரவுடியை பலர் அறிய நடுரோட்டில் வெட்டிக் கொன்று கொக்கறித்து சென்றவனை, 3 மாதம் கழித்து வெட்டிக் கொள்ளப்பட்டவனின் தம்பி, அண்ணனை வெட்டியவனை அதே இடத்தில் தீர்த்துக்கட்டுவான்.
இலக்கு நோக்கி பயணம் செய்யும் செயல் தான் நம்முடையது, அதை அடைகிறோமோ என்பது நம் செயல்களை மட்டுமே உள்ளடக்கிய காரணி அல்ல.
"எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தந்தால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் போய்விட வாய்புகள் உண்டு பலனை எதிர்பாராமல் செய்யும் இலக்கு நோகிய பயணத்தில் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி, இல்லை என்றாலும் முயற்சித்தோம் என்ற மன நிறைவு கிடைக்கும்" - என்பதை மேற்கண்ட கீதை வரிகளினால் புரிந்து கொண்டேன்.
" கடமையைச் செய் பலனை எதிர்பாராதே " - இது ஒரு உளவியல் அருமருந்து, எதிலும் முயற்சி செய்பவர்கள் முன்கூட்டியே இதை அருந்தலாம்.
பின்குறிப்பு : இந்த இடுகையை இந்தவார நட்சத்திர பதிவர் கண்ண(ன்)பிரான் ரவிசங்கருக்கு சமர்பிக்கிறேன். :)
பின்பற்றுபவர்கள்
கீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
23 மார்ச், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்