சற்றுமுன் முடிவடைந்த உலக கோப்பையில் இந்தியா பாக்கிஸ்தானை 5 ஓட்ட வேறுபாட்டில் வீழ்த்தியது.
முன்னதாக இந்தியா 157 /5
அடுத்து ஆடிய
பாகிஸ்தான் 152/10
வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !
பின்பற்றுபவர்கள்
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
24 செப்டம்பர், 2007
27 மார்ச், 2007
கிரிக்கெட் வீரர்களை எந்த அளவுக்கு நம்பலாம் ?
விளையாட்டு வீரர்கள் ஆகட்டும் சினிமா நடிகர்கள், அரசியல் வாதிகள் ஆகட்டும் நம்ம ஆளுங்க அவங்களுக்கு ரசிக கண்மணிகள் ஆகிவிட்டால் அதன் பிறகு இவர்கள் அவர்களை கடவுள் அளவுக்கு உயரத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். இதில் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் வெறி எடுத்தவர்கள் என்று சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. அது போல இந்திய அளவுக்கு கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு ஆதரவு அடியார்கள் இருக்கிறார்கள்.
சச்சினுக்கு வயது ஆகிவிட்டது அவரால் விளையாட்டில் முன்னைப் போல் முனைப்புடன் விளையாட முடியாது. கிரிக்கெட், கால்பந்து ஆகிய பல விளையாட்டுக்களில் புது இரத்தங்களால் தான் சாதனை படைக்க முடியும். அதிக ரன் குவித்தவர் என்பதற்காக இந்த உலக கோப்பை கால் இறுதி போட்டி வாய்பைக் கூட சச்சின் போன்றவர்களின் காலடியில் வைத்துவிட்டு தலை குணிகிறது கிரிக்கெட் வாரியம். விளையாட்டு போன்ற துறைகளில் திறமைக்குத்தான் மதிப்பு கொடுக்க வேண்டும் அனுபவத்துக்கு அல்ல. கிரிக்கெட் வீரர்கள் சம வயது உடைய வீரர்களிடமே மோதுகிறார்கள் என்று சொல்லவே முடியாது. இவர்களுடைய கடந்த கால தவறுகளை புதியவர்கள் நன்றாக படித்தே வந்து இருப்பார்கள். எனவே அனுபவ மிக்கவர்களை வீழ்த்துவது என்பது அவர்களுக்கு மிகவும் எளிது. புதியவர்களின் அனுகுமுறை எவ்வாறு அமையும் என்பது அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு புரியாமல் போவதால் எளிதில் பெவிலியனுக்கு திரும்பி விடுகிறார்கள்.
100 கோடி இந்தியர்களில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களே இல்லை என்பது போல் பழம் பெருச்சாளிகளையே அனுப்பி தோல்வியை சந்தித்து இருப்பது வெட்கக் கேடு. வாய்ப்புக்காக காத்திருப்போர் பலர் இருக்கையில் சச்சின், கங்குலி போன்றவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கி அதிக ரன் குவித்தவீரர் என்ற உயரத்தை எவரும் தொடாத வண்ணம் அவர்கள் மேலும் மேலும் அடைய செய்வது தான் சாதனையா ?
கிரிக்கெட் வாரியத்தை ஏமாற்றும் புக்கிகள் போலத்தான் நம்பும் கிரிக்கெட் ரசிகர்களை கிரிக்கெட் வாரியம் ஏமாற்றி வருகிறது.
சச்சின் போல தோற்றம் உடையவர்களை தேடி தேடி உதைக்கிறார்கள் என்பது கண்டனத்துக்கு உரியது. அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்ட ஆட அவர் சொன்னாரா ? அவரின் சக்தியை மீறி அவரை நம்பிவிட்டதற்கு அவர் எப்படி காரணமாக முடியும். இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை ரசிகர்கள் நிறுத்திவிட்டு நன்றாக ஆடக் கூடியவர்கள் எவராக இருந்தாலும் அது பாகிஸ்தான் வீரராக இருந்தாலும் பாராட்டுவது நலம். இந்தியா வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதாது, சம பலம் உள்ளவர்களிடம் மோதுகிறோம் என்று விளையாட்டை விளையாட்டாக நினைக்க வேண்டும். இங்கு பிரார்தனைகள் யாகங்கள் இவையெல்லாமே வீரர்களின் தன்னம்பிக்கையை குறைப்பது என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. இது போன்ற தேவையற்றதை செய்வதைவிட வீரர்களின் தன்னம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் அவர்கள் தோல்வியை தழுவும் போது பாராட்டி தட்டிக் கொடுப்பது நல்லது.
தோல்விக்கு காரணமாக வீரர்களை மட்டும் குறை சொல்வது என்னைப் பொருத்த அளவில் கண்டனத்துக்கு உரியது. குருவி தலையில் பனம்பழம் போல் பெரும் சுமையை ஏற்றிவிட்டு அவரகளை மட்டும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல.
சச்சினுக்கு வயது ஆகிவிட்டது அவரால் விளையாட்டில் முன்னைப் போல் முனைப்புடன் விளையாட முடியாது. கிரிக்கெட், கால்பந்து ஆகிய பல விளையாட்டுக்களில் புது இரத்தங்களால் தான் சாதனை படைக்க முடியும். அதிக ரன் குவித்தவர் என்பதற்காக இந்த உலக கோப்பை கால் இறுதி போட்டி வாய்பைக் கூட சச்சின் போன்றவர்களின் காலடியில் வைத்துவிட்டு தலை குணிகிறது கிரிக்கெட் வாரியம். விளையாட்டு போன்ற துறைகளில் திறமைக்குத்தான் மதிப்பு கொடுக்க வேண்டும் அனுபவத்துக்கு அல்ல. கிரிக்கெட் வீரர்கள் சம வயது உடைய வீரர்களிடமே மோதுகிறார்கள் என்று சொல்லவே முடியாது. இவர்களுடைய கடந்த கால தவறுகளை புதியவர்கள் நன்றாக படித்தே வந்து இருப்பார்கள். எனவே அனுபவ மிக்கவர்களை வீழ்த்துவது என்பது அவர்களுக்கு மிகவும் எளிது. புதியவர்களின் அனுகுமுறை எவ்வாறு அமையும் என்பது அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு புரியாமல் போவதால் எளிதில் பெவிலியனுக்கு திரும்பி விடுகிறார்கள்.
100 கோடி இந்தியர்களில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களே இல்லை என்பது போல் பழம் பெருச்சாளிகளையே அனுப்பி தோல்வியை சந்தித்து இருப்பது வெட்கக் கேடு. வாய்ப்புக்காக காத்திருப்போர் பலர் இருக்கையில் சச்சின், கங்குலி போன்றவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கி அதிக ரன் குவித்தவீரர் என்ற உயரத்தை எவரும் தொடாத வண்ணம் அவர்கள் மேலும் மேலும் அடைய செய்வது தான் சாதனையா ?
கிரிக்கெட் வாரியத்தை ஏமாற்றும் புக்கிகள் போலத்தான் நம்பும் கிரிக்கெட் ரசிகர்களை கிரிக்கெட் வாரியம் ஏமாற்றி வருகிறது.
சச்சின் போல தோற்றம் உடையவர்களை தேடி தேடி உதைக்கிறார்கள் என்பது கண்டனத்துக்கு உரியது. அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்ட ஆட அவர் சொன்னாரா ? அவரின் சக்தியை மீறி அவரை நம்பிவிட்டதற்கு அவர் எப்படி காரணமாக முடியும். இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை ரசிகர்கள் நிறுத்திவிட்டு நன்றாக ஆடக் கூடியவர்கள் எவராக இருந்தாலும் அது பாகிஸ்தான் வீரராக இருந்தாலும் பாராட்டுவது நலம். இந்தியா வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதாது, சம பலம் உள்ளவர்களிடம் மோதுகிறோம் என்று விளையாட்டை விளையாட்டாக நினைக்க வேண்டும். இங்கு பிரார்தனைகள் யாகங்கள் இவையெல்லாமே வீரர்களின் தன்னம்பிக்கையை குறைப்பது என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. இது போன்ற தேவையற்றதை செய்வதைவிட வீரர்களின் தன்னம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் அவர்கள் தோல்வியை தழுவும் போது பாராட்டி தட்டிக் கொடுப்பது நல்லது.
தோல்விக்கு காரணமாக வீரர்களை மட்டும் குறை சொல்வது என்னைப் பொருத்த அளவில் கண்டனத்துக்கு உரியது. குருவி தலையில் பனம்பழம் போல் பெரும் சுமையை ஏற்றிவிட்டு அவரகளை மட்டும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல.
25 மார்ச், 2007
இந்திய அணிக்காக இன்னுமொரு யாகம் செய்யலாம்

கடைசியாக ஒரு சான்ஸ் இருக்காம், இந்திய அணிகிட்ட தோத்த பெர்முடாவும், இந்திய அணிக்கிட்ட ஜெயச்ச பங்களா தேசும் நாளைக்கு மோதுறாங்களாம். இதுல பங்களா தோத்தால் இந்தியா 8 க்கு போகும் இல்லாட்டி வீட்டுக்கு போகுமாம்.
அதுனால இரவோடு இரவாக பெர்முடா ஜெயிக்கனும்னு 'சரியான' ஒரு யாகம் வளர்த்தா ஜெயிக்க சான்ஸ் இருக்காம்.
பழசெல்லாம் ஞாபகம் வருது
படத்தில் தினமலர் 14000 ரன்கள் எடுத்தாரென்று ஹலைட் பண்ணி இருக்கிறது படிக்க தவறாதீர்கள். இது புகழ்ச்சியா இகழ்ச்சியான்னு ஒன்னும் புரியல. பாலிட்டிக்ஸ் தெரிஞ்சவங்கதான் சொல்லனும். :)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்