தன் விருப்பம் போன்ற வாழ்க்கை என்னும் தன்னல வாழ்வின் எச்சமாக திகழ்பவை முதியோர் இல்லங்கள் என்று சொன்னால் அது மிகச் சரிதான் என்றே நினைக்கிறேன். மேலை நாடுகளில் பிள்ளைகளுக்கும் பெற்றேர்களுக்கும் கடமை என்ற ஓர் உணர்வைத் தவிர்த்து எந்த பற்றுதலும் இல்லை. வாரிசுகள் கவனித்துக் கொள்ளும் என்ற நப்பாசையில் வாரிசுகளை உருவாக்கிக் கொள்ளும் எண்ணத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சமூகத் தொடர்ச்சிக்கான ஒரு கடமை என்ற அளவில் பெற்றுக் கொண்டு அந்த குழந்தைக்கு தேவையானதைச் செய்து வயது வந்த பிறகு விருப்படி படிப்பையும் வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்ள பெற்றோர்கள் தடையாக நிற்பதில்லை. மாறாக அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துவிடுவார்கள். பழம் பழுத்துவிட்டால் மரம் அதனை உரிமை கொண்டாடுவதில்லை, கோழிக் குஞ்சு வளர்ந்துவிட்டால் கோழிகள் அதனை அதன் போக்கில் விட்டுவிடும் என்பதாகவே வெளிநாட்டினரின் இல்ல அமைப்புகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் முதியோர் இல்லங்கள் இருக்கின்றன, பெற்றோர்களே நோய்வாய்ப்படும் போது அங்கே சேர்த்துவிட சொல்லுவார்கள். மிகச் சிலரே சொத்துக்களை இழந்து முதியோர் இல்ல அரவணைப்பில் வாழ்வின் கடைசி பகுதியை கழிக்கிறார்கள்.
ஆனால் இந்திய இல்ல அமைப்பில் அனைத்தும் பெற்றோர்களின் கட்டுப்பாட்டினால் தான் நடக்கிறது, என்ன படிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இன்றும் 90 விழுக்காடு பெற்றோர்களே முடிவு செய்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட உலகளாவிய பண்பாட்டின் தாக்கம் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களையும் வாரிசுகளையும் முற்றிலும் விலக்கிவிடுக்கிறது. பெற்றோர்களால் இதை இசைந்து கொள்வது கடினம் என்ற நிலையில், கிட்டதட்ட சமூக மாற்றத்தில் சிக்கிக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். வரும் காலத்தில் பெற்றோர்கள் இந்த அளவுக்கு வாரிசுகளின் மீது பற்றுதல் கொண்டிருந்தால் இதே நிலைதான் தொடர்ந்தும் இருக்கும். ஏனென்றால் ஆண்வாரிசு என்பதே இன்றும் பலரது விருப்பமாக இருக்கிறது. முதியோர் இல்லங்கள் பெருகியதோ இல்லையோ, அதில் சேரும் முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய தேதியில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகாள் கூட 3 வயதிலிருந்தே பாலர் பள்ளிகளில் முழுநாளும் கழிக்கின்றன. பிள்ளைகளையே அப்படி விடும் போது முதியவர்களை பாதுகாப்பு கருதி முதியோர் இல்லங்களில் விருப்பமின்றி விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் முதியோர் இல்லங்களுக்குச் செல்லும் எல்லா முதியவர்களும் நிலையும் அப்படி அல்ல சிலர் வலுக்கட்டாயமாகவும், சிலர் வழியின்றியும் அங்கே வருகிறார்கள்
*****
இலவச அன்னச் சத்திரங்களை தொழில் முறை ஹோட்டல்களாக மாற்றிய பெருமை 'சோ' கால்ட் முற்பட்ட வகுப்பினருக்கே உண்டு. வழிப்போக்கர்க்களுக்கு உணவு அளிப்பதற்கென்றே ஒருகாலத்தில் இலவச உணவு சத்திரங்கள் இயங்கிவந்தன. பல்வேறு சாதி அமைப்புகளும் தனித்தனியாக உணவு சத்திரங்கள் வைத்து உணவை இலவசமாக அளித்து இளைப்பாரும் வசதிகளெல்லாம் செய்துவந்தனர். ஆங்கில ஆதிக்கத்திற்கு பிறகே இலவச உணவு சத்திரங்கள் மறைய ஆரம்பித்து, வியாபாரமாக நரசூஸ் காஃபியுடன் ஆரிய பவன்கள் தோன்றியது. இன்று எல்லா சமூகத்தினருமே ஓட்டல் தொழில் ஈடு(லாபம்) உள்ளதாக கருதி அதனைச் செய்கின்றனர். எதையும் லாப நோக்காகவும் தொழிலாகவும் கொண்டு செல்லும் போது அதனை நல்ல செயல், சேவை என்றெல்லாம் புனிதம் கற்பித்துவிட முடியாது, வெறும் வயிற்றுப்பாட்டிற்கான பிழைப்பு அவ்வளவுதான்.
லாப நோக்கங்களுக்கு மனதில் முதன்மைத்துவம் கொடுக்க கொடுக்க, நாளடைவில் நம் குடும்பம் என்று கூட்டுக் குடும்பமாக இருந்த இல்வாழ்க்கை, என் குடும்பம் என்று சுறுங்கியது, அதில் பெற்றோர்களை மட்டும் சேர்த்துக் கொண்டனர், அதன் பிறகு அதற்கும் பங்கம் ஏற்பட்டு, 'கிழடுகளைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதா ? நம் வாழ்க்கை முதியோர்களுக்கு பணிவிடை செய்து கழிந்துவிடக் கூடாது' என்ற மேற்கத்திய சித்தாந்ததில் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களுக்கு துறத்தப்பட்டனர். அடிப்படைவாதம் தவிர்த்து பிற சமூக மாற்றம் எதையும் ( மன முறிவு, மறுமணம் போன்றவற்றை) வாழ்க்கையில் விரைவாக உள்வாங்கிக் கொள்ளூம் முற்பட்ட சமூகமே குறிப்பாக பார்பன சமூகத்தினரிடையே (எல்லோரும் அல்ல) பிற சமூகத்தினரைவிட இந்த மாற்றம் விரைவாகவே ஏற்பட்டு இருக்கிறது. பார்பன முதியோர்களுக்கென்றே விஷ்ராந்தி என்கிற முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது.
உறவுகளின் துரோகம்: முதியோர் (விஷ்ராந்தி) இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!
இராஜம் கிருஷ்ணன் வாரிசுகளால் கொண்டுவந்துவிடப் படவில்லை என்பது ஆறுதலான ஒன்று, காரணம் அவருக்கு வாரிசுகளே இல்லை.
விஷ்ராந்தி பார்பன முதியோர்களுக்கு என்றே அறிகிறேன். முதியோர்களாக இருந்தாலும் அங்கும் தீட்டுப்படமால் ஆச்சாரத்துடன் தான் இருப்பதற்கான ஏற்பாடும் போலும். சாகிற வரை சாதியைக் கட்டிக் கொண்டு :(
பிற்காலத்தில் அனைத்து சாதி சமூகங்களும் தங்களின் அன்னச் சத்திரங்களுக்கு மாற்றாக ஓட்டல்கள் தொழில் தொடங்கியது போல் இதனைப் பார்த்து பல்வேறு சாதிகளும் தங்களுக்கான சாதிய அடிப்படையில் முதியோர் இல்லங்களை கட்டிக் கொண்டு அதில் பெற்றோர்களை தள்ளிவிட்டாலும் வியப்பொன்றும் இல்லை.
பிற சமூகத்தினரும் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை தள்ளிவிடுகின்றன என்ற போதிலும் விழுக்காட்டு அளவில் முற்பட்ட சமூகத்தினரை விட அது மிகக் குறைவுதான்.
முதியோர் இல்லங்கள் தவறு அல்ல, சூழ்நிலை எதுவுமே இல்லாமல், வெறும் பெரும் சுமை என்று கொண்டு வந்து தள்ளப்படும் முதியோர் இல்லங்களும், அவற்றை வைத்து பணம் பண்ணுவதும் தவறுதான்.
பின்பற்றுபவர்கள்
முதியோர் இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதியோர் இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
24 நவம்பர், 2008
முதியோர் இல்லங்கள் இனி பெருகுமா ?
பதிவர்:
கோவி.கண்ணன்
at
11/24/2008 03:24:00 PM
தொகுப்பு :
கட்டுரைகள்,
சமூகம்,
முதியோர் இல்லம்
17
கருத்துக்கள்


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்