பின்பற்றுபவர்கள்

உதவி பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதவி பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மார்ச், 2008

கூகுள் உதவியுடன் உங்கள் வலைப்பதிவிற்குள் தேடுவது எப்படி ?

நாம் எதாவது தரவுகளை தேடும் போது, எதாவது தேடு தளம் (Search Engine) பயன்படுத்துவோம், அப்படி தேடும் போது தொடர்பே இல்லாத பக்கங்களையெல்லாம் சேர்த்து ஒரு பெரிய பட்டியலை அது கொடுக்கும், அதிலிருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால், "டவுசரு கிழியுது, தாவு தீறுது" லக்கி பாணி அலுப்பே மிஞ்சும்.

வலைப்பதிவுகள் மாத அடிப்படையில் எழுதப்பட்ட பக்கங்கள் சேமிக்கப்பட்டு இருக்கும், அதில் குறிப்பிட்ட கட்டுரையை, கவிதையை எடுக்க வேண்டும், ஒரே ஒரு சொல்மட்டுமே நமக்கு நினைவில் இருக்கிறது அதைவைத்து தான் அந்த பக்கத்திற்கு சென்று அந்த பக்கத்தில் உள்ளவற்றை மீண்டும் படித்துக் கொள்ள, அல்லது தரவாக இணைப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்ற சூழலில் எப்படி குறிப்பிட்ட பக்கத்தை அடைவது, ஒவ்வொரு இடுகையாக திறந்து பார்த்து தேடுவதற்குள் கண் பூத்துவிடும். அதற்கு எளிய வழி,

லக்கி பதிவை எடுத்துக் கொள்வோம், அவர் எந்தந்த பதிவுகளில் "டவுசர்" பயன்படுத்தி இருக்கிறார் என்று பார்க்க வேண்டுமென்றால்,

கூகுள் தேடுதல் தளத்திற்கு சென்று "டவுசர்" site:http://madippakkam.blogspot.com என்று தட்டச்சு செய்து தேடு பொத்தானை அழுத்தினால்,எத்தனை டவுசரை கிழித்திருக்கிறார் என்று தெரியும். நான் பார்த்த போது அவரது பதிவில் 36 முறை டவுசர் கிழிபட்டு இருக்கிறது.

எண்ணிக்கை மிகக் குறைவுதான், இன்னும் கூட கூடுதலாக கிழிபட்டு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

அடுத்து ரத்னேஷ் பதிவில் எத்தனை முறை பெண்ணியம் வருகிறது என்று பார்க்க
"பெண்ணியம்" site:http://rathnesh.blogspot.com



6 இடத்தில் தான் 'பெண்ணியம்' வந்திருக்கிறது.



வலைத்தளத்தில் தேடும் முறை இதுதான், தேடுதல் தளத்தில், தேடும் சொற்களை, ஒருங்குறி (யூனிக்கோட்) தமிழ் பயன்படுத்தலாம், சுட்டியை கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் கொடுக்க வேண்டும்.

"Search text" site:blogurl

பொதுவாக புழக்கத்தில் இருக்கும் தேடு(தல்) தளங்கள் :

http://google.com
http://yahoo.com
http://www.msn.com
http://altavista.com
http://alltheweb.com (இது யாகூவைத்தான் பயன்படுத்துகிறது)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்