பின்பற்றுபவர்கள்

ஈழத் தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத் தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 நவம்பர், 2008

இன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதில்லை !

இனவெறுப்பு எப்போதும் இருமுனை கத்தி போன்றதே... ஆரிய இனவெறியில் யூதர்களுக்கு எதிராக ரத்த தாண்டவம் ஆடிய ஹிட்லர் அழிந்தது உலக வரலாறு, மக்கள் இனமாக அறியப்பட்ட காலகட்டங்களிலிருந்தே இயற்கை சீரழிவுகள் தவிர்த்து தனி இன வெறுப்புக்கு எந்த இனமும் முற்றிலும் அழிந்துவிடவில்லை. ஆஸ்திரேலிய பழங்குடிகள் அங்கு கூடிய வெள்ளையர்களால் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு கொன்று குவித்த பிறகும் அந்த இனம் இன்றும் அழியாமல் தான் இருக்கிறது, தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்ட வெள்ளையின அரசு தற்பொழுது அவர்களை மூத்த குடிகளாக அறிவித்து நல்ல முறையிலேயே நடத்துகிறது.

இந்தியாவில் ஊடுறுவிய ஆரியர்கள் திராவிடர்களிடம் போரிட்டு முற்றிலும் அழிக்க முடியாது என்பதால் தங்களை முற்போக்கு சமூகமாக மாற்றிக் கொண்டது மட்டுமின்றி ஆரிய - திராவிட கலப்பில் பிறந்தவர்களையெல்லால் பார்பனர் ஆக்கிக் கொண்டு இன்றும் பெரும்பாண்மை திராவிடர்களிடையே தான் வாழ்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் கொள்ளையடித்துவிட்டு திரும்ப ஓடிக் கொண்டு இருந்த கஜினி முகமது போன்ற இஸ்லாமிய வேற்று நில மன்னர்களுக்கு பிறகு வந்த இப்ராஹிம் லோடி, அவரை வென்ற பாபர் இங்கு கொள்ளையடித்து செல்வதைவிட இந்தியவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செலுத்துவது சிறந்ததாகப் பட்டது, ஆரம்பத்தில் இந்தியர்களை இஸ்லாமியர் ஆக்கும் கடும் முயற்சிக்கள் போன்றவை பலனளிக்காமல் போகவே, பேரரசர் ஹுமாயுனின் மகன் அக்பர் அவர் காலத்தில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இருவரை இணைக்கும் தீன் இலாகி என்ற புதிய மதத்தை உருவாக்கினார் ஆனால் அவரது காலத்துக்கு பிறகு அது வெற்றிபெறவில்லை, என்றாலும் இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம், வாளால் பரப்பபட்டது என்ற குற்றச் சாட்டுகளெல்லாம் அதன் பிறகு அடங்கியது எனலாம்.

நாடுகளாக அறியப்படாத காலகட்டத்தில் இனக்குழுக்கள் மட்டும் தான் இருந்தது, இன்றைய நாடுகள் அனைத்துமே மொழி வாரி மாநிலங்களைப் போல் தனிமொழியும், தனி இன அடையாளமும் கொண்டவை, குடியேறிய நாடுகளில் மட்டும் தான் பல்வேறு மொழிகளும், பல்வேறு இனங்களும் இருக்கும், அந்த நாடுகள் எந்த ஒரு இனத்துக்கும் சொந்தமான இடமாக இருந்தது இல்லை என்பதால் அங்கு சென்ற இனக்குழுக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பதத்தை அரசியல் கொள்கையாக ஆக்கிக் கொண்டது, அதிலும் ஆதிக்க இனங்களே ஆதிக்கம் செலுத்தியது. எந்த இன வெள்ளையராக இருந்தாலும் தோலை வைத்துதான் அந்த அரசியலும் அதாவது வெள்ளைத் தோல் உள்ளவர் அனைவரும் ஓர் இனம் என்ற உணர்வாக வெள்ளையர்கள் அனைவரும் செயல்பட்டனர். இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் இந்த வெள்ளைத் தோல் என்னும் இன அடிப்படையில் தான்.

மற்ற உருவான நாடுகள், சிங்கப்பூர் போன்று உருவான நாடுகளில் அது இல்லை, பல்வேறு ஆசிய மக்கள் ஒன்று கூடி நீண்ட நாள் வாழ்ந்த இடம் என்பதால் சொந்த நாட்டுக்குச் செல்லாமல் அந்த நாட்டையே சொந்த நாடாக ஆக்கிக் கொண்டனர். சீனர்கள் பெரும்பான்மையினர் பவுத்த சமயத்தினராக இருப்பதால் சமய அடிப்படையில் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுத்தால் ஈழத்தமிழர் நிலமை இன்னும் மோசமாகும். நல்லவேளை பார்பன பணியா இந்துத்துவ அரசியல் போல் அதனை மதம் சார்ந்தவையாக சீனர்கள் கொண்டு நினைக்காமல் இருப்பதற்குக் காரணம் மனிதனும் மதமும் ஒன்றல்ல என்று நினைப்பதேயாகும்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ செல்கிறது.....

இன அழிப்புகளால் முற்றிலும் முடியவே முடியாது என்பதால் தான் பல்வேறு நாடுகள், தங்கள் இன நலனுக்கான அரசியலை மதத்துக்கு திருப்பிவிட்டு, மத அரசியலுக்கும் மத வெறியைத் தூண்டுவதில் ஈடுபடுகின்றன.

தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்கிற இலங்கை அரசின் கனவெல்லாம் என்றுமே நிறைவேறாது, ஏனெனில் ஈழத்தமிழர்கள் ஈழத்தைவிட வெளிநாடுகளில் தான் மிகுதியாக இருக்கின்றனர். அண்மையில் உலகம் முழுவதும் ஒலிம்பிகின் போது சீனர்களிடம் திபத்தை மீட்க திபத்தியர்கள் ஆர்பாட்டம் செய்து பல இடங்களில் ஒலிம்பிக் ஜோதியை பறித்து அணைத்து எதிர்ப்பைக் காட்டியது போல், கனன்று கொண்டு இருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலைத் தீ இலங்கையில் அனுமார் வாலினால் தீக்கிரையாக்கிய கதை போல், இலங்கை பூசல்கள் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கும்...எப்போதும் அமைதியை திரும்பவே விடாது. பேச்சு வார்த்தை அல்லது ஈழவிடுதலை இரண்டில் ஒரு தீர்வுதான் இலங்கையில் அமைதி திரும்ப வழிவகுக்கும். இன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதே இல்லை.

5 அக்டோபர், 2008

தமிழன் என்றால் இளிச்ச வாயனா ?

தேசிய வியாதிகள் எப்போதும் சொல்லும் வசனம் 'இந்திய இறையாண்மைக்கு பங்கம்'. இந்த வாதம் இவர்களாலேயே தோற்றுப் போய்தான் இருக்கிறது. இந்திராகாந்தியைக் கொன்றவர்கள் பஞ்சாபிக்காரர்கள் என்பதற்காக ஒட்டுமொத்த இந்தியர்களும் அவர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டார்களா ? சரியாக இருபது ஆண்டுகள் முடிவதற்குள்ளேயே மன்மோகன் 'சிங்' பிரதமர் ஆனதை எவராவது அவர் பஞ்சாபி, சிங் என்பதற்காக நிராகரித்தார்களா ? தேசிய அவமானம் என்று கருதினார்களா ? குஜராத் மோடி ஆட்சியில் நடந்த மதப்படுகொலைகளை யாராவது தேசிய அவமானம் என்று கருதினார்களா ? வழக்கம் போல் எல்லாமும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது ஜீரணிக்க முடியாத குற்றம் என்றாலும் அதற்கு ஈடாக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் நலனையும் அடகு வைப்பது மட்டும் என்ன ஞாயம் ? இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடாமல் இருந்தாலே போதும் என்று தான் ஈழத்தமிழர்கள் நினைக்கிறார்கள். ஆதரவு வேண்டாம் என்றாலும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருவதை எந்த ஒரு ஈழத்தமிழனும், தன்மானமுள்ள, இனமானமுள்ள தமிழகத தமிழர்களும் அதை வரவேற்கவில்லை.

இந்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து நடந்துவருவது கவலை அளிக்கிறது. பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று கலைஞர் எச்சரிக்கை அடைந்திருப்பது பாராட்டத்தக்கது என்றாலும் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அதைச் சொன்னால் வெறும் சொற்கள் அல்ல என்று தமிழர்கள் நம்புவார்கள். முஷ்ரப் தூண்டுதல் என்று நம்பப் படும், பாகிஸ்தானால் வேண்டுமென்றே, திட்டமிட்ட இந்திய தாக்குதலாக, நடத்தப்பட்ட கார்கில் போரில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்த இந்தியா அடுத்த ஓரிரு ஆண்டுகளில் முஷாரப்பை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரித்ததையும், கோடிக்கணக்கில் செலவு செய்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அவருக்காக அவர் வாழ்ந்த பழைய வீட்டையெல்லாம் புதுப்பித்ததை நாம் மறந்திவிடலாகாது. பிஜேபி அரசு செய்த இவையெல்லாம் இந்திய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களுக்குச் செய்யப்பட்ட துரோகம் இல்லையா ? இவையெல்லாம் தேச நலன் என்ற பெயரில், நட்புறவு என்ற பெயரில் தானே நடத்தப்பட்டது.புரட்ச்சி என்றால் கூறப்பட்டு சிலாக்கிப்பட்டது. தேசிய வியாதிகளான காங்கிரஸ்காரர்களும், பிஜேபியினரும் இவற்றையெல்லாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்