பின்பற்றுபவர்கள்

சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 செப்டம்பர், 2010

தற்கொலை தாக்குதல்களும் மரண தண்டனைகளும் !

கொலைக்கு கொலை தண்டனையாகாது என்கிற விருமாண்டி வசனங்களைப் பேசிய கமல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் கொலைக்கு தண்டனை கொலை செய்யப்பட்டு மரணம் என்பதாக தீர்ப்பு எழுதிய போது திரை உலகம் வழியாக சொல்லப்படும் நீதிகள் என்பவை நடிகர்களின் பிழைப்பு வாதம் என்பதாக புரிந்து கொண்டேன். மற்றபடி கொலைகளும் அதற்கு மரண தண்டனைகளும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அரசுகளின் மரண தண்டனை என்பது கொலைகளின் எண்ணிக்கையைப் பொருத்ததே. ஒரே ஒரு கொலை செய்தால் பெரும்பாலும் மரண தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட என்கிற போது கொலையாளிகள் வாழத்தகுந்தவர்கள் இல்லை என்பதாக அரசுகள் தீர்ப்பு எழுதுகின்றன. இதிலும் கூட அரசியல்வாதிகளின் தூண்டுதலில் நடைபெறும் கலவரங்களினால் அப்பாவிகள் கொல்லப்படும் போது பெரிய தூண்டுதலுக்குக்காரணமான தலைவர்களுக்கு எந்த ஒரு தண்டனையும் கொடுக்கப்படுவதில்லை. அம்புகளை தண்டிக்கும் தீர்ப்புகள் என்பதாக அவை அமைந்துவிடுகின்றன என்பதால் இவ்வகை மரண தண்டனைகள் நீதியை நிலை நாட்டுகிறது என்பதாக நம்பப்படுவை நம்மை நாமே ஏமாற்றிப் பார்த்துக் கொள்ளும் சமூகப் பார்வை என்று புரிந்து கொள்கிறேன்.

மரண தண்டனைகளை பாதிக்கப்படுபவர்களின் மன நிலையில் இருந்து பார்க்கவேண்டும், மற்றும் நம் உறவினர்கள் பாதிக்கப்பட்டால் நாம் மரண தண்டனைகளுக்கு எதிராக பேசுவோமா ? என்றெல்லாம் கூட சிலர் வியாக்கானம் கூறுகிறார்கள். என்னைப் பொருத்த அளவில் பாதிப்பு அடைந்தவர்கள் அதே போன்ற பாதிப்பு, பாதிப்பு ஏற்படுத்தியவர்களும் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்பதாக சொல்லுகிறார்கள் என்று புரிந்து கொள்கிறேன். மரணம் அதன் வலியும் கொலைகாரர்களின் குடும்பங்களுக்கும் ஏற்பட்டால் தனக்கு ஏற்பட்ட மன வலிகள் ஆறும் என்பதாகக் கொள்ள வேண்டுமாம். பலிவாங்கும் மனநிலையால் காயங்கள் ஆறும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கிட்டதட்ட என் வாரிசுகள் உன்னை கொன்றுவிட சம்மதம் என்றால் என்னை கொன்றுவிட உன்னை நான் அனுமதிக்கிறேன் என்பது போன்ற கொலைகளை அங்கீகரிக்கும் மறைமுக ஒப்புதல் போன்றவையே பலிக்கு பலி சரி என்பதான மனநிலைகள்.

மரண தண்டனைகள் என்பவை மன்னர் ஆட்சி முறைகளின் நீட்சியாகத் தொடர்கிறதே அன்றி இன்றைய சமூக சூழலில் இன்றும் அவை தேவையான சட்டம் என்று சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை. நிரபராதிகள் தண்டிக்கப்பட்ட பிறகு அவற்றை சரிசெய்ய 'மவுனம், வருத்தம்' என்பது தவிர நம்மிடம் எந்த வித சட்டங்களும் இல்லை என்னும் போது கொலையாளிகளுக்கான மரண தண்டனைகள் சட்டங்கள் என்ற அளவில் நாம் சரி என்பது, எந்த விதத்தில் மனித உரிமைக்கான சட்டங்கள் தான் மரண தண்டனை சட்டங்கள் என்று கொள்ள முடியும் ?

கொலைக்கு கொலையாக மரண தண்டனை சரி என்றால் (அரசுகளின் தண்டனைக்கு பயந்து முன்கூட்டியே) கொலைகளை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதோ, மனித வெடிகுண்டுகளின் செயல்களையோ கண்டிக்க நமக்கு என்ன ஞாயாமோ, உரிமையோ, பொருளோ இருக்கிறதா ? மரண தண்டனைக்கும் பயப்படுபவன் கொலை செய்யமாட்டான் என்றால் தற்கொலை தாக்குதல்களை எந்த வகை கொலையில் சேர்ப்பது ? மரண தண்டனைகளினால் சமூகக் குற்றங்கள் குறைந்துவிட்டதற்கான ஆதாராங்கள் எதுவுமே இல்லை, உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்வதும், சூழலால் கொலை செய்வதும் எங்கும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது. சமூகக் கொடுங்கோலர்களை தடுக்க அவர்களை நிரந்தரமாக தனிமை படுத்துவதைத் தவிர்த்து நிரந்தரமாக கொலை செய்வது கொலையாளிகளின் செயல்களுக்கும் அரசுகளின் செயல்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. குற்றத்திற்கான தண்டனைகள் குற்றவாளிகள் மனம் திருந்த வாய்ப்பு, அதன் மூலம் அவர்களின் தொடர் குற்றங்களை தடுக்கலாம் என்பதே அடிப்படை சட்டங்களின் நோக்கம்.

மரண தண்டனை சட்டங்களுக்கு ஞாயம் பேசுபவர்கள் பெரும்பாலும் மதவாதிகளாகவே இருக்கின்றனர். ஏனென்றால் பவுத்தம் தவிர்த்து பிற அனைத்திலுமே மரண தண்டனை சட்டங்களை கடுமையாக ஆதரிக்கும் மதங்களாகும். மேலும் அரசியல் சார்பு வாதிகளின் நிலைப்பாடுகள் அதைவிடக் கேவலம். ஈழமக்களின் ஒட்டுமொத்தப் படுகொலைக்கான தண்டனைகள் குறித்து எதுவும் பேசாதவர்களும், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகான 3000 சீக்கியர்களின் படுகொலைக்கு ஒரே ஒரு செருப்பு வீச்சு தவிர்த்து எந்த ஒரு தண்டனையும் அதில் ஈடுபட்டவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை, இவ்விரு அரசியல் சார்பு நிலைபாடுகள் கொண்டவர்கள் கூட பேருந்து எரிப்பில் மாணவிகள் கொலையில் ஈடுபட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனைகள் நீதி வழங்கி இருப்பதாக குறிப்பிடுவது நகை முரண் அன்றோ ? தினகரன் அலுவலக படுகொலைக்களுக்கான மரண தண்டனைகள், சங்கர இராமன் படுகொலைக்கான மரண தண்டனைகள் வேண்டும் என்று குறிப்பிடுவர்களுக்கு அரசியல் நிலைப்பாட்டுத் தன்மையோடு மரண தண்டனை குறித்து சரி என்று ஞாயம் பேசுவோர் எந்த ஒரு பதிலையும் வைத்திருப்பதில்லை. எனவே அரசியல், மதவாதிகளின் மரண தண்டனை குறித்த கருத்துகளை நான் புறம் தள்ளுகிறேன். காந்தி கூட மகாத்மாவாக இல்லாவிட்டால் கோட்சேவை இந்த நாட்டின் இந்துத்துவ நிலைப்பாட்டால் தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார்கள்.

இடுகையில் ஒட்டு மொத்தமாகச் சொல்ல வந்தது, பொதுவானவர்கள், சமூக நோக்கர்கள் 'கொலைகளுக்கு மரண தண்டனை சரி' என்றால் மனித நேயம் பேசி மனித வெடிகுண்டுகளின் செயல்களையோ, தற்கொலை தாக்குதல்களையோ நிறுத்த, கண்டனம் தெரிவிக்க யாருடைய உயிர் என்றாலும் மனித உயிர் மேன்மையானது என ஒப்பீட்டு அளவில் சொல்ல நமக்கு எந்த ஒரு வழியோ, ஞாயமோ தென்படவில்லை என்பதும் சரிதானே ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்