தமிழகத்தில் ஒகனேகல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா ? அல்லது இரைச்சல் இல்லாமல் நடைபெறுகிறதா என்பது சரியாக தெரியவில்லை. ஆனல் கர்நாடக அரசு அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் பிரதமரை சந்தித்து திட்டத்தை நிறுத்தச் சொல்லி கோரிக்கை எழுப்பப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தென்னைமரத்தில் தேள் கொட்டிய பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப் போகும் ஒரு திட்டத்திற்காக அதனால் எந்தவித பாதிப்பும் அடையாத ஒரு மாநிலம் எதிராக இருப்பது இந்தியாவிலேயே இதுவே முதன்முறை. அதற்கும் முன்பு அவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பல்வேறு அணைகளை உயர்த்திய போது, தமிழகத்திற்கு பாதிப்பு என்று தெரிந்தும். தமிழகத்தின் சார்பில் வெறும் கண்டன போராட்டத்துடனேயே (தமிழர்களுக்குள் அவ்வளவுதான் ஒற்றுமையோ / சக்தியோ) நிறுத்திக் கொண்டார்கள். முல்லை பெரியார் அணை உயரம் கூட்டுவதில் இன்னும் கூட கேரள மாநிலம் சிக்கலை ஏற்படுத்தியே வருகிறது.
நாமும் கன்னடர்களைப் போல் உணர்ச்சிவசப்பட்டால் மலையாளிகளை ஓட ஓட விரட்டி இருப்போம். மாநில பிரச்சனையை மொழிப்பிரச்சனையாக்காது, தனிமனித வாழ்கையுடன் தொடர்பு படுத்தாது நடந்து கொள்ளும் கண்ணியம் அவர்களுக்கெல்லாம் இல்லை. தமிழர்கள் இதுவிசயத்தில் தெளிவடைந்து அனைத்துக் கட்சியனரும் சேர்ந்தே ஒற்றுமையாக ஒகனேகல் திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். இது போன்ற நேரங்களில் தமிழக எதிர் கட்சிகள் ஒத்துழைப்புக் கொடுத்தால் திட்டம் வெற்றியடைந்து அதன் நற்பெயர் ஆளும் கட்சிக்குச் சென்றுவிடுமோ என்றே நினைத்து மக்கள் நலனை புறக்கணித்து தூய அரசியல் செய்து வருகின்றனர்.
கலைஞர் அணைத்துக்கட்சியனரின் ஒத்துழைப்போடு இந்த திட்டத்தை துரிதமாக முடுக்கிவிட வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளாத கட்சிகளை மக்கள் மன்றம் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
சேது திட்டத்தை இராமன் பெயரை வைத்தாவது நிறைவேற்ற விடுங்கள் என்று சொல்லிய கலைஞர் ஒகனேகல் திட்டத்தை 'ஜெயலலிதா கூட்டுக் குடிநீர் திட்டம்' என்ற பெயரிலாவது நிறைவேற்றியே ஆகவேண்டும். கண்டிப்பாக தமிழர்கள் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கும், நலமான நாகரீக அரசியலுக்கு முன்னோடியாக இருந்தார் என்ற பெயர் நிலைக்கும். இதனை செய்துவிட்டால் கூட்டணிக்காக ஓடிய கட்சிகளையெல்லாம் சேர்த்துக் கொண்டு தான் தேர்தலை சந்திக்க முடியும் என்ற நிலை மாறி மக்கள் ஆதரவுடனேயே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்.
செய்வாரா கலைஞர் ?
பின்பற்றுபவர்கள்
ஒக்கனேகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒக்கனேகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
26 ஆகஸ்ட், 2008
6 ஏப்ரல், 2008
ஒகனேகல் திட்டத்தை தமிழக பாஜக நிறைவேற்றப் போகிறதா ?
தமிழக முதல்வர் 'எலும்பு நொறுங்கினாலும் நிறைவேற்றுவேன்' என்று பேசி இருக்கக்கூடாது, முதல்வர் நாகரீகம் இன்றி நடந்துவிட்டார், பெங்களூர் கலவரங்களுக்கு காரணம் கலைஞரின் முதிர்சியற்ற பேச்சு என்று பலரும் குற்றம் சுமத்தினார்கள்.
அத்துமீறி ஒக்கேனகல் தமிழக பகுதியில் நுழைந்த இடையூறப்பாவை தடுக்காமல் கலைஞர் அமைதியாக இருந்தது தமிழகத்தைச் சேர்ந்த பலரையும் எரிச்சல் ஏற்படுத்தியது. இது முழுக்க முழுக்க வரப்போகும் கர்நாடகமாநில தேர்த்தலை நோக்காகக் கொண்டது என்பதாலேயே கைது செய்தால் ஒகெனேகல் தியாகியாக கர்நாடக பாஜக சொல்லிக்
கொள்ளப் போகிறது என்பதை உணர்ந்தே அமைதிகாத்தார் என்பதை அரசியல் நோக்கர்கள் (பதிவர் ரத்னேஷ் உட்பட) சிலர் மிகச் சரியாகச் சொல்லி இருந்தனர். அவ்வளவு அமைதியாக இருந்தும், பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரினான வன்முறை தொடரவே, இதெற்கெல்லாம் நாங்கள் அஞ்சி நடுங்கிவிட மாட்டோம் என்ற ரீதியில் கலைஞர் பேட்டி அளித்தார், அதைச் சாக்கிட்டு பெங்களூர் தமிழர்களுக்கு மேலும் தொல்லை கொடுத்தனர் ( அந்த போரட்டத்தை ஏன் தமிழக ஒக்கனேக்கல் / ஓசூர் பகுதியில் இடையூறப்பா முன்பு நுழைநத்து போல் நுழைந்து போராடவில்லை) தமிழ் திரைப்பட திரையரங்கு்கள் இலக்குக்கு எட்டும் தொலைவில் இருக்கிறது என்பதிலும், பெங்களூரில் வாழும் தமிழர்கள் பகுதியில் மட்டுமே அவர்களது வீரத்தைக் காட்ட முடிந்தது.
பெங்களூர் தமிழர்களுக்கு ஆதரவாக சிற்சில விரும்பத்தாக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தது, பெரிய அளவில் சென்றிருக்க வேண்டியது, தமிழர்கள் அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை ( இதை சுரணைக் குறைவு என்றும் சிலர் சொல்கிறார்கள்) நிலைமை கட்டுக்குள் தான் இருந்தது. இது தீவிரம் அடைந்தால் இருபக்கமும் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாது, மேலும் இதை திட்டமிட்டு தூண்டிய பாஜகவின் தேர்தல் நோக்கை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் (நாடாளுமன்ற கூட்டணி தேமுவில் இருப்பதால்) கலைஞர் தேர்தல் முடியும் வரை இதை தள்ளி வைத்ததாக அறிவித்தார். முன்பு கலைஞர் 'எலும்பு' பேச்சு தூண்டியதாக குற்றம் சுமத்தியவர்களில் சிலர் தவிர்த்து பலரும் தற்போது கலைஞர் திட்டத்தை முடக்கிவிட்டார் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். தமிழக பாஜக இதை வெளிப்படையாக குற்றமாகவே சொல்கிறார்கள். இதற்கு மறைமுக காரணம் இந்த கலவரங்கள் தொடர்ந்து நடந்தால் தான் பாஜக கர்நாடகத்தில் வெற்றி பெரும் என்கிற நப்பாசை. தமிழக / கர்நாடக மக்கள் ரத்தம் சிந்தினாலும் பரவாயில்லை பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே இவர்களது எண்ணமாக இருக்கிறது, தமிழக பாஜக இது குறித்து அறிக்கையும் வெளி இட்டுள்ளது.
இவர்களுக்கு ஒக்கனேக்கல் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால் மத்தியில் இருக்கும் அத்வானிஜியிடம் சொல்லி கர்நாடக பாஜாகவை அடங்கி இருக்கச் சொல்லலாமே, ( சோனியா சொல்லி எஸ் எம் கிருஷ்ணா கொஞ்சம் அடக்கிதானே வாசிக்கிறார்) காங்கிரஸ் போன்றே பாஜக தேசிய வியாதி கட்சியாயிற்றே.
இன்னும் கூட ஒன்று கேட்க ஆசை, இல.கனேசன் அண்ணாச்சி, உங்களுக்கு இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப் படவேண்டும் என்ற உண்மையான ஆசை இருந்தால், கலைஞரிடம் சொல்லி, இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உடனடியாக சாதித்துக் காட்டுகிறோம் என்று சொல்லாமே ? முதல்வர் பதவி / பிரதமர் பதவியை எங்களிடம் கொடுங்கள் தமிழகத்தை / இந்தியாவை ஒளிர வைக்கிறோம் என்று மக்களிடம் தேர்தல் நேரத்தில் சொல்ல முடிகிறது, இந்த பிரச்சனையை மக்களிடம் சொல்லி இதை நாங்கள் நிறைவேற்றுகிறோம், கருணாநிதி அதற்கு சம்மதிப்பாரா ? என்று கேட்கும் துணிவும், அந்த திட்டத்தைப் பற்றிய உண்மையான அக்கறையும் இருக்கிறதா ?
நான் முன்பு சொன்னது போலவே இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை எதிர்கட்சியினரிடம் விட்டுவிடலாம் :)
அத்துமீறி ஒக்கேனகல் தமிழக பகுதியில் நுழைந்த இடையூறப்பாவை தடுக்காமல் கலைஞர் அமைதியாக இருந்தது தமிழகத்தைச் சேர்ந்த பலரையும் எரிச்சல் ஏற்படுத்தியது. இது முழுக்க முழுக்க வரப்போகும் கர்நாடகமாநில தேர்த்தலை நோக்காகக் கொண்டது என்பதாலேயே கைது செய்தால் ஒகெனேகல் தியாகியாக கர்நாடக பாஜக சொல்லிக்
கொள்ளப் போகிறது என்பதை உணர்ந்தே அமைதிகாத்தார் என்பதை அரசியல் நோக்கர்கள் (பதிவர் ரத்னேஷ் உட்பட) சிலர் மிகச் சரியாகச் சொல்லி இருந்தனர். அவ்வளவு அமைதியாக இருந்தும், பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரினான வன்முறை தொடரவே, இதெற்கெல்லாம் நாங்கள் அஞ்சி நடுங்கிவிட மாட்டோம் என்ற ரீதியில் கலைஞர் பேட்டி அளித்தார், அதைச் சாக்கிட்டு பெங்களூர் தமிழர்களுக்கு மேலும் தொல்லை கொடுத்தனர் ( அந்த போரட்டத்தை ஏன் தமிழக ஒக்கனேக்கல் / ஓசூர் பகுதியில் இடையூறப்பா முன்பு நுழைநத்து போல் நுழைந்து போராடவில்லை) தமிழ் திரைப்பட திரையரங்கு்கள் இலக்குக்கு எட்டும் தொலைவில் இருக்கிறது என்பதிலும், பெங்களூரில் வாழும் தமிழர்கள் பகுதியில் மட்டுமே அவர்களது வீரத்தைக் காட்ட முடிந்தது.
பெங்களூர் தமிழர்களுக்கு ஆதரவாக சிற்சில விரும்பத்தாக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தது, பெரிய அளவில் சென்றிருக்க வேண்டியது, தமிழர்கள் அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை ( இதை சுரணைக் குறைவு என்றும் சிலர் சொல்கிறார்கள்) நிலைமை கட்டுக்குள் தான் இருந்தது. இது தீவிரம் அடைந்தால் இருபக்கமும் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாது, மேலும் இதை திட்டமிட்டு தூண்டிய பாஜகவின் தேர்தல் நோக்கை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் (நாடாளுமன்ற கூட்டணி தேமுவில் இருப்பதால்) கலைஞர் தேர்தல் முடியும் வரை இதை தள்ளி வைத்ததாக அறிவித்தார். முன்பு கலைஞர் 'எலும்பு' பேச்சு தூண்டியதாக குற்றம் சுமத்தியவர்களில் சிலர் தவிர்த்து பலரும் தற்போது கலைஞர் திட்டத்தை முடக்கிவிட்டார் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். தமிழக பாஜக இதை வெளிப்படையாக குற்றமாகவே சொல்கிறார்கள். இதற்கு மறைமுக காரணம் இந்த கலவரங்கள் தொடர்ந்து நடந்தால் தான் பாஜக கர்நாடகத்தில் வெற்றி பெரும் என்கிற நப்பாசை. தமிழக / கர்நாடக மக்கள் ரத்தம் சிந்தினாலும் பரவாயில்லை பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே இவர்களது எண்ணமாக இருக்கிறது, தமிழக பாஜக இது குறித்து அறிக்கையும் வெளி இட்டுள்ளது.
இவர்களுக்கு ஒக்கனேக்கல் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால் மத்தியில் இருக்கும் அத்வானிஜியிடம் சொல்லி கர்நாடக பாஜாகவை அடங்கி இருக்கச் சொல்லலாமே, ( சோனியா சொல்லி எஸ் எம் கிருஷ்ணா கொஞ்சம் அடக்கிதானே வாசிக்கிறார்) காங்கிரஸ் போன்றே பாஜக தேசிய வியாதி கட்சியாயிற்றே.
இன்னும் கூட ஒன்று கேட்க ஆசை, இல.கனேசன் அண்ணாச்சி, உங்களுக்கு இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப் படவேண்டும் என்ற உண்மையான ஆசை இருந்தால், கலைஞரிடம் சொல்லி, இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உடனடியாக சாதித்துக் காட்டுகிறோம் என்று சொல்லாமே ? முதல்வர் பதவி / பிரதமர் பதவியை எங்களிடம் கொடுங்கள் தமிழகத்தை / இந்தியாவை ஒளிர வைக்கிறோம் என்று மக்களிடம் தேர்தல் நேரத்தில் சொல்ல முடிகிறது, இந்த பிரச்சனையை மக்களிடம் சொல்லி இதை நாங்கள் நிறைவேற்றுகிறோம், கருணாநிதி அதற்கு சம்மதிப்பாரா ? என்று கேட்கும் துணிவும், அந்த திட்டத்தைப் பற்றிய உண்மையான அக்கறையும் இருக்கிறதா ?
நான் முன்பு சொன்னது போலவே இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை எதிர்கட்சியினரிடம் விட்டுவிடலாம் :)
5 ஏப்ரல், 2008
கர்நாடகத்தில் யாருடைய அரசு - கலைஞர் எடுத்த முடிவு !!!
இடையூறப்பா வேண்டுமென்றே நடத்திக்காட்டிய ஒக்கனேகல் கிறுக்குத்தனம், மேலும் கர்நாடக அரசியல் வாதிகளின் தேர்த்தல் நோக்கத்தில் நடந்த கேலிக் கூத்தை தனது அறிவு கூர்மையால் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் கலைஞர். ஒகனேகல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக தேர்த்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப் போவதாக அறிவிப்பை வெளி இட்டுவிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி கர்நாடக மாநிலம் தழுவி நடக்கவிருந்த கடையடைப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரம் என்னும் தேனடைக்கு எச்சில் ஒழுகி காத்திருந்த கர்நாடக தேசிய வாதக் கட்சிக்களுக்கு, குறிப்பாக 'இடையூறப்பா'வுக்கு பெரும் பின்னடைவு, காங்கிரஸ் சார்பில் அதே உத்தியில் களம் இறங்கிய எஸ் எம் கிருஷ்ணாவுக்கு பெரும் பின்னடைவு. வரும் தேர்த்தலில் ஒக்கனேக்கல்லை முன்னிருத்தி ஓட்டு வேட்டையாடிவிடலாம் என்று கர்நாடக மாநில கட்சிகள் போட்ட மிக மோசமான நாடகம் பாதியில் முடிவுக்கு வந்திருக்கிறது.
இப்படி ஒரு பிரச்சனை கிளம்பாது என்று எண்ணி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய போது கலைஞர் அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கர்நாடகா தேர்த்தலை சந்திக்கும் நிலை இருந்ததாலேயே இந்த பிரச்சனையை இடையூறப்பா தொடங்கி வைத்தார். நினைத்தபடி எல்லாம் நடக்கும் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் காவேரி ஆற்றின் மண் விழுந்துவிட்டது. அடுத்து என்ன திட்டம் போடுவார்களோ!!!
கலைஞரின் அறிவிப்பை தொடர்ந்து கடையடைப்பை தள்ளி வைத்தைததைத் தொடர்ந்து ஒக்கனேகல் யாருக்கு சொந்தம் என்பதை விட அதில் தண்ணீர் சேமிப்பதில் தான் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. என்ன மாதிரி ஒரு மட்டமான எண்ணம், அதில் தேங்கும் தண்ணீர் அங்கிருந்து வரும் உபரி நீர்தான், அதையும் சேமிக்கக் கூடாது என்றால் தமிழ்நாட்டின் மீது தமிழர்கள் மீதும் உள்ள வெறுபிற்காரணம் தமிழர்கள் எல்லாவிததிலும் முன்னோடியாக எப்போதுமே இருப்பது தான்.
மொழி உணர்வு சரியாக புரிந்து கொண்டு அதன் வளர்ச்சி நோக்கிய எண்ணம் இல்லை என்றால் அது மொழி வெறியாக மாறி பகை அரசியலையே வளர்க்கும், முன்பு தமிழ் தீண்டத்தகாத மொழி என்று வடமொழி / இந்தி மொழி வெறியர்களால் தமிழகத்திலேயே சொல்லிக் கொண்டு பகையை வளர்த்துக் கொண்டார்கள் என்பது கண்கூடு, தமிழ் மொழியை தாங்கிப் பிடிக்க நாம் இனரீதியிலான தாக்குதல் நடத்தாமல் மொழிக்கலப்பை வெற்றிகரமாக களையெடுத்து, விலக்கி வைத்து தமிழை வளர்ந்தோம். இதில் நாம் தனித்தன்மையுடன் இருப்பது அவர்களுக்கெல்லாம் எரிச்சல் தான், தமிழனை தள்ளிவைக்கிறார்களா ? அவர்கள் யார் நம்மை தள்ளி வைக்க ? அவர்களின் வெளிப்படையான காழ்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். தமிழன் என்றும் பின்னடையவும் மாட்டான் தாழ்ந்துவிடவும் மாட்டான்.
கலைஞரின் இந்த தற்காலிக முடிவு பாரட்டத்தக்கது, நடந்த விரும்பத்தக்காத நிகழ்வுகள் தான் தமிழன் தன்னை உணர்ந்து கொள்ளவும் தமிழர்களுக்குள் ஒற்றுமையையும், மாற்று மொழி பேசுபவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதை உணர்த்தவும் வாய்பாக அமைந்துவிடுகிறது. தமிழர்களைப் போல் கன்னடர்களும் புரிந்து கொள்ள காலம் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கட்டும்.
எது எப்படியோ, கர்நாடகத்தில் அடுத்த ஆட்சியை தமிழர்கள் மீது உள்ள வெறுப்புணர்வை / கன்னட மொழி வெறியைத் தூண்டி அமைத்துக் கொள்ள முடியாது என்ற அளவில் பக்கத்து மாநில முதல்வர் யார் என்பதை கலைஞரின் செயல் தான் தீர்மானித்து இருக்கிறது.
ஆட்சி அதிகாரம் என்னும் தேனடைக்கு எச்சில் ஒழுகி காத்திருந்த கர்நாடக தேசிய வாதக் கட்சிக்களுக்கு, குறிப்பாக 'இடையூறப்பா'வுக்கு பெரும் பின்னடைவு, காங்கிரஸ் சார்பில் அதே உத்தியில் களம் இறங்கிய எஸ் எம் கிருஷ்ணாவுக்கு பெரும் பின்னடைவு. வரும் தேர்த்தலில் ஒக்கனேக்கல்லை முன்னிருத்தி ஓட்டு வேட்டையாடிவிடலாம் என்று கர்நாடக மாநில கட்சிகள் போட்ட மிக மோசமான நாடகம் பாதியில் முடிவுக்கு வந்திருக்கிறது.
இப்படி ஒரு பிரச்சனை கிளம்பாது என்று எண்ணி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய போது கலைஞர் அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கர்நாடகா தேர்த்தலை சந்திக்கும் நிலை இருந்ததாலேயே இந்த பிரச்சனையை இடையூறப்பா தொடங்கி வைத்தார். நினைத்தபடி எல்லாம் நடக்கும் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் காவேரி ஆற்றின் மண் விழுந்துவிட்டது. அடுத்து என்ன திட்டம் போடுவார்களோ!!!
கலைஞரின் அறிவிப்பை தொடர்ந்து கடையடைப்பை தள்ளி வைத்தைததைத் தொடர்ந்து ஒக்கனேகல் யாருக்கு சொந்தம் என்பதை விட அதில் தண்ணீர் சேமிப்பதில் தான் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. என்ன மாதிரி ஒரு மட்டமான எண்ணம், அதில் தேங்கும் தண்ணீர் அங்கிருந்து வரும் உபரி நீர்தான், அதையும் சேமிக்கக் கூடாது என்றால் தமிழ்நாட்டின் மீது தமிழர்கள் மீதும் உள்ள வெறுபிற்காரணம் தமிழர்கள் எல்லாவிததிலும் முன்னோடியாக எப்போதுமே இருப்பது தான்.
மொழி உணர்வு சரியாக புரிந்து கொண்டு அதன் வளர்ச்சி நோக்கிய எண்ணம் இல்லை என்றால் அது மொழி வெறியாக மாறி பகை அரசியலையே வளர்க்கும், முன்பு தமிழ் தீண்டத்தகாத மொழி என்று வடமொழி / இந்தி மொழி வெறியர்களால் தமிழகத்திலேயே சொல்லிக் கொண்டு பகையை வளர்த்துக் கொண்டார்கள் என்பது கண்கூடு, தமிழ் மொழியை தாங்கிப் பிடிக்க நாம் இனரீதியிலான தாக்குதல் நடத்தாமல் மொழிக்கலப்பை வெற்றிகரமாக களையெடுத்து, விலக்கி வைத்து தமிழை வளர்ந்தோம். இதில் நாம் தனித்தன்மையுடன் இருப்பது அவர்களுக்கெல்லாம் எரிச்சல் தான், தமிழனை தள்ளிவைக்கிறார்களா ? அவர்கள் யார் நம்மை தள்ளி வைக்க ? அவர்களின் வெளிப்படையான காழ்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். தமிழன் என்றும் பின்னடையவும் மாட்டான் தாழ்ந்துவிடவும் மாட்டான்.
கலைஞரின் இந்த தற்காலிக முடிவு பாரட்டத்தக்கது, நடந்த விரும்பத்தக்காத நிகழ்வுகள் தான் தமிழன் தன்னை உணர்ந்து கொள்ளவும் தமிழர்களுக்குள் ஒற்றுமையையும், மாற்று மொழி பேசுபவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதை உணர்த்தவும் வாய்பாக அமைந்துவிடுகிறது. தமிழர்களைப் போல் கன்னடர்களும் புரிந்து கொள்ள காலம் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கட்டும்.
எது எப்படியோ, கர்நாடகத்தில் அடுத்த ஆட்சியை தமிழர்கள் மீது உள்ள வெறுப்புணர்வை / கன்னட மொழி வெறியைத் தூண்டி அமைத்துக் கொள்ள முடியாது என்ற அளவில் பக்கத்து மாநில முதல்வர் யார் என்பதை கலைஞரின் செயல் தான் தீர்மானித்து இருக்கிறது.
கருணாநிதி 'பேசாமல்' எதிர்கட்சியிடம் ஒப்படைத்துவிடலாம் !
ஒகனேக்கல் விவாகாரம் கர்நாடகத்தைப் பொருத்து முழுக்க முழுக்க ஓட்டுப் பொறுக்கி அரசியலைச் சேர்ந்தது என்பதை பிறந்ந்த குழந்தைக் கூட சொல்லும். இந்திய அரசியிலில் படுகேவலத்தனத்தின் / பொறுக்கித்தனத்தின் முதல் மாதிரியாக திகழும் கர்நாடக அரசியல் அராஜாகங்களுக்கும் அருவெருப்புக்கு தமிழகம் பாடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அரசியலில் சிறிதேனும் நாகரீகம் இருக்கிறது என்று காட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கும் குறிப்பாக ஆளும் கட்சி திமுகவிற்கு பொன்னான வாய்ப்பு.
அதாவது ஒக்கனேக்கல் குடிநீர் திட்ட கர்நாடக எதிர்ப்பை மீறி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்து, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதாவை அதற்கு தலைமை ஏற்கச் செய்யவேண்டும். இதைச் செய்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் ஆதரவும் பெற்று திட்டம் விரைவில் நிறைவேறும், நமது ஒற்றுமையைப் பார்த்து கன்னட வெறியர்கள் கதிகலங்குவார்கள், அங்குள்ள தமிழனைக் கண்டால் பதுங்கி ஒதுங்கி செல்வார்கள்.
வெறும் அறிக்கைகளும், உணர்வை தூண்டுவதுமட்டுமே எந்த செயலை முடித்துவிடாது, அதில் உயிரிழப்புகள் இருபக்கமும் கூடுதலாக இருந்து வரலாற்றில் இரத்தக் கரையையும், மறக்கமுடியாத காயங்களை ஏற்படுத்திவிடும். முடிந்த அளவுக்கு தமிழக அரசியல்வாதிகள் தேவையற்ற தூண்டுதல்களை தவிர்த்துவிட்டு, ஒற்றுமையில் இதை சாதிக்க முயற்சிக்க வேண்டும், இதைச் செய்தால் தமிழகத்தில் வாழும் கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னடர்களே பெங்களூர் கன்னடர்களை அடக்கி வைப்பார்கள். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் எதுவுமே மோசமான விளைவையே தரும். தமிழகத்தில் இயக்குங்கும் கன்னட வங்கிகளையும் (மைசூர் பேங்க், கனரா வங்கி), நிறுவனங்களையும் தமிழக மக்கள் புறக்கணித்தாலே போதும்.
குட்டிக் கொண்டு இருப்பவன் தன்னை மடையன் என்று சொல்லிக் கொண்டு தான் குட்டிக் கொண்டு இருக்கிறான், தற்போது குட்ட குட்ட குனிபவன் தான் மடையனல்ல.. வாங்கப் பிறந்தவர்களல்ல கொடுக்கவும் தெரியும் என்று காட்ட வேண்டும். அரசியல் காழ்புணர்வுகளை மறந்து கலைஞர் தலைமையிலான திமுக அரசு உடனடியாக எதிர்கட்சி தலைமையில் குழுவை அமைத்து செயல்பட்டால் வெறும் கண்ணீர் சிந்தாமல், நல்ல காரியம் ஆற்றினார் என்ற பெருமை அவருக்கு கிடைக்கலாம். எல்லாம் அரசியல் நோக்கில் செய்து பழக்கப்பட்ட தமிழக அரசியல் வாதிகள் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக ஒன்று சேர்ந்து செயல்பட்டால், தமிழக அரசியல் வாதிகள் மீது உள்ள அருவெருப்பு நீங்கும். மக்கள் உணர்வுகளைத் தூண்டுவதை விட மக்களின் கவனைத்தைப் பெற்றால் பேராதரவுடன் இந்த திட்டம் வெற்றிபெறும், கன்னட நிறுவனங்களை புறக்கணிப்பு செய்வதன் மூலம் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை நமது ஒற்றுமையின் வழிகாட்டினால் பெங்களூர் வாழ் தமிழகளுக்கு போதிய பலம் கிடைக்கும், கன்னட வெறியர்களுக்கு அவர்களின் இடத்திலேயே மரண அடி கொடுக்க தமிழர்களின் மக்கள் தொகை அங்கு போதுமான அளவில் தான் இருக்கிறது.
ஆளுங்கட்சி இந்த பிரச்சனையை எதிர்கட்சிகளிடம் விட்டுவிட்டு போதிய அளவு அரசு ஆதரவு கொடுத்தால், எந்த எதிர்ப்பையும் மீறி நாம் சாதிக்க முடியும். கலைஞர் பேசுவதுதான் பிரச்சனை என்பது போல் செய்திகள் பரபரப்பாகாது.
அதாவது ஒக்கனேக்கல் குடிநீர் திட்ட கர்நாடக எதிர்ப்பை மீறி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்து, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதாவை அதற்கு தலைமை ஏற்கச் செய்யவேண்டும். இதைச் செய்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் ஆதரவும் பெற்று திட்டம் விரைவில் நிறைவேறும், நமது ஒற்றுமையைப் பார்த்து கன்னட வெறியர்கள் கதிகலங்குவார்கள், அங்குள்ள தமிழனைக் கண்டால் பதுங்கி ஒதுங்கி செல்வார்கள்.
வெறும் அறிக்கைகளும், உணர்வை தூண்டுவதுமட்டுமே எந்த செயலை முடித்துவிடாது, அதில் உயிரிழப்புகள் இருபக்கமும் கூடுதலாக இருந்து வரலாற்றில் இரத்தக் கரையையும், மறக்கமுடியாத காயங்களை ஏற்படுத்திவிடும். முடிந்த அளவுக்கு தமிழக அரசியல்வாதிகள் தேவையற்ற தூண்டுதல்களை தவிர்த்துவிட்டு, ஒற்றுமையில் இதை சாதிக்க முயற்சிக்க வேண்டும், இதைச் செய்தால் தமிழகத்தில் வாழும் கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னடர்களே பெங்களூர் கன்னடர்களை அடக்கி வைப்பார்கள். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் எதுவுமே மோசமான விளைவையே தரும். தமிழகத்தில் இயக்குங்கும் கன்னட வங்கிகளையும் (மைசூர் பேங்க், கனரா வங்கி), நிறுவனங்களையும் தமிழக மக்கள் புறக்கணித்தாலே போதும்.
குட்டிக் கொண்டு இருப்பவன் தன்னை மடையன் என்று சொல்லிக் கொண்டு தான் குட்டிக் கொண்டு இருக்கிறான், தற்போது குட்ட குட்ட குனிபவன் தான் மடையனல்ல.. வாங்கப் பிறந்தவர்களல்ல கொடுக்கவும் தெரியும் என்று காட்ட வேண்டும். அரசியல் காழ்புணர்வுகளை மறந்து கலைஞர் தலைமையிலான திமுக அரசு உடனடியாக எதிர்கட்சி தலைமையில் குழுவை அமைத்து செயல்பட்டால் வெறும் கண்ணீர் சிந்தாமல், நல்ல காரியம் ஆற்றினார் என்ற பெருமை அவருக்கு கிடைக்கலாம். எல்லாம் அரசியல் நோக்கில் செய்து பழக்கப்பட்ட தமிழக அரசியல் வாதிகள் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக ஒன்று சேர்ந்து செயல்பட்டால், தமிழக அரசியல் வாதிகள் மீது உள்ள அருவெருப்பு நீங்கும். மக்கள் உணர்வுகளைத் தூண்டுவதை விட மக்களின் கவனைத்தைப் பெற்றால் பேராதரவுடன் இந்த திட்டம் வெற்றிபெறும், கன்னட நிறுவனங்களை புறக்கணிப்பு செய்வதன் மூலம் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை நமது ஒற்றுமையின் வழிகாட்டினால் பெங்களூர் வாழ் தமிழகளுக்கு போதிய பலம் கிடைக்கும், கன்னட வெறியர்களுக்கு அவர்களின் இடத்திலேயே மரண அடி கொடுக்க தமிழர்களின் மக்கள் தொகை அங்கு போதுமான அளவில் தான் இருக்கிறது.
ஆளுங்கட்சி இந்த பிரச்சனையை எதிர்கட்சிகளிடம் விட்டுவிட்டு போதிய அளவு அரசு ஆதரவு கொடுத்தால், எந்த எதிர்ப்பையும் மீறி நாம் சாதிக்க முடியும். கலைஞர் பேசுவதுதான் பிரச்சனை என்பது போல் செய்திகள் பரபரப்பாகாது.
2 ஏப்ரல், 2008
தமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே காரணம்.
பெங்களூருவில் நடக்கும் வன்முறைக்கு தண்ணீர் பிரச்சனைதான் காரணமா ? அது வெறும் போக்குகாட்டுவதற்கான சாக்குதான். தமிழர்கள் புலம் பல இடங்களுக்கு பெயர்ந்தது, குறிப்பாக பெங்களூருவுக்கு பஞ்சம் பிழைக்கத்தான் என்றாலும் நாளடைவில் தமிழன் முன்னேறி இருக்கிறான். நம்மிடம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இன்று பொருளியல் வளர்ச்சி பெற்றுவிட்டார்கள் என்ற பொறாமை உணர்வே காரணம். பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் இடங்கள் ஒன்று குடிசைகள் நிறைந்த இடங்களாக (Slum) இருக்கும் இடம், அங்கு ஆட்டோ ஓட்டுனர்கள், நாள் கூலிகள் முழுவதும் தமிழர்களாகவே இருப்பார்கள், பெங்களூருவின் ஒதுக்குபுரங்களில் பல இடங்களில் இதைப் பார்க்கலாம், அது போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று வந்திருக்கிறேன். அடுத்து நகரியம் ஆக்கப்பட்ட இடங்களில் வசதிவாய்ப்போடு கூடுதலாக வாழ்ப்பவர்களும் தமிழர்கள் தான். குறிப்பாக அல்சூருக்கு அடுத்து கிருஷ்ணராஜ புரம், இந்திரா நகர் போன்ற விரிவடைந்த புதிய நகர்களில் தமிழர்களே கூடுதலாக வசிக்கின்றனர். மேலும் பெங்களூரு மென்பொருள் பூங்காக்களில் 60 விழுக்காடு தமிழக தமிழர்களே மென்பொருள் வல்லுனர்களாக இருக்கின்றனர்.
பெங்களூர் விரிவடைந்து வந்த போதுதான் அங்குள்ள தமிழர்கள் வளர்ந்து இருப்பதை அக்கம் பக்கம் உள்ள கன்னடர்கள் உணர ஆரம்பித்தார்கள். அவர்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாது போனதாலும், அரசியல் லாபநோக்கத்திற்க்காகவும் கன்னட அமைப்புகள், தமிழர் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டன. அதற்கு முழுவதும் பயன்படுத்தப்பட்டவர்கள் ராஜ்குமாரின் அப்பாவி ரசிகர்கள் தான். ரஜினி வியர்வைக்கு தங்ககாசு, தமிழ்பால் என்று தமிழ் ரசிகர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போலவே, தமிழகத்தில் பிறந்தாலும் கன்னட திரைநட்சதிரமாக உயர்ந்துவிட்டதாலும் கன்னட அரசியலை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக மாறினார் இராஜ்குமார். இதற்கு ஆதரவாக தமிழகத்தில் பிறந்த வாட்டாள் நாகராஜ் போன்றோரும் அரசியல் முதன்மைத்துவம் பெற வேண்டும் என்று ஒத்துழைத்தனர். தமிழக ரசிகர்கள் ரஜினி மீது மயக்கம் கொண்டிருப்பதைப் போன்றே, இராஜ்குமார் ரசிகர்களும் அவருடைய விரல் அசைவுக்கு விட்டம் தாவினார்கள். இன்றும் கன்னட திரையுலகம் இராஜ்குமாரின் மூன்று மகன்களின் கையில் இருக்கிறது.
நாளடைவில் தமிழ்திரையுலம் வளர்ந்து தரமான படங்கள் பெங்களூரிலும் வெற்றி நடை போட்டு கன்னடர்களாலும் விரும்பிப் பார்க்கப்பட்டதாலும், இந்தி திரைபடங்களின் ஆதிக்கத்தாலும் கன்னட திரையுலகம் பெரிய இழப்பை சந்தித்தது. அதன் காரணியே தமிழர்களுக்கு எதிரான நடவெடிக்கையை தூண்டிவிடுவதாகும் அமைந்தது. ஏற்கனவே தமிழர்களின் வளர்சியினால் புகையாக இருந்த எதிர்ப்புணர்வு, நெருப்பாக மாறி 1990 களில் தான் முதன் முதலில் பெங்களூரூவில் கலவரம் வெடித்தது. தமிழர்கள் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதன் பிறகும் கன்னட படங்களுக்கு வரவேற்பு எதுவும் இல்லை. 1992ல் வந்த ரோஜா படமும், ஏஆர்ரகுமான் இசையும் கன்னடர்களை மீண்டும் தமிழ் திரைப்படங்கள் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது. இவற்றைச் சமாளிக்க தமிழர்களுக்கு எதிரான உணர்வை ஈரம் போகமல் வைத்திருப்பதற்க்காகவே காவேரி பிரச்சனையில் தமிழகம் உரிமை கோருவது தவறனது என்றும் அபகரிப்பு போன்று கன்னடர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. ஞாயங்கள் என்பது இருந்தாலும் தமிழகத்துடன் உடன்பாடு செய்து கொண்டால் கன்னடர் - தமிழர் பிரச்சனை இன்றி அரசியல் செய்யமுடியாது என்பதால் தான் காவேரி ஆணையத்தின் தீர்ப்பையும் குப்பையில் போட்டனர்.
தற்பொழுது தேர்தலை சந்திக்க இருப்பதால் தேசியவாதக் கட்சியான பாஜகவின் 'இடையூற'ப்பா ஒக்கனேகல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தடுப்பதன் மூலம் பாஜக அரசு அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தமிழர் எதிர்ப்பு உணர்வுக்கு கர்நாடகத்தில் உள்ள ஒட்டுமொத்த கன்னடர்களின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அதே உத்தியில் சென்றால் கிடைக்கப் போகும் ஓட்டு உண்டியல் கனிசமாக நிரையும் என்றும், தமிழர் எதிர்புணர்வின் பலனை பாஜக மட்டுமே பங்கு கொண்டுவிட்டால் ஆட்சி அமைத்துவிடும் என்ற சிக்கல் இருப்பதால், காங்கிரஸ் தலைமையிலான நடுவன் அரசும் கூட வெளிப்படையான தீர்வு சொல்லாமல் இருபக்கம் மனுவை வாங்கிக் கொண்டு மவுனம் சாதிக்கிறது. இதெல்லாம் விட பெரிய கூத்து மகாராஷ்டிராவில் ஆளுனாராக இருக்கும் (இருந்த?) சரோஜா தேவி காதல் புகழ் எஸ் எம் கிருஷ்ணாவும் இதில் நேரடியாக களத்தில் குதித்து இருக்கிறார் என்றால் அதற்கு நடுவன் அரசின் ஆதரவு இல்லாமல் செய்திருப்பாரா என்று யோசிக்கவும் வேண்டி இருக்கிறது. ஆளுனர் என்பவர் அரசு பதவி வகிப்பவர் அவர் அரசியல் நிலை எடுப்பது பிரச்சனைக்குறியது.
பெங்களூர்வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தண்ணீர் காரணமாக சுமத்தப்பட்டாலும் அவர்கள் வளர்ந்ததால் பொறுக்க மாட்டாத தமிழர்களுக்கு எதிரான வெறுப்பும், தமிழ் திரைப்படங்கள் பெங்களூருவில் வெற்றிநடை போட்டதும் தான் முதன்மை காரணங்கள். இதில் கன்னட திரைப்படத்துறை நஷ்டம் அடைந்ததால் கன்னட ரசிகர்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடுவது எளிதாக ஆகி இருக்கிறது. சவுக்கார் பேட்டை சேட்டுக்களைப் பார்த்து தமிழர்கள் பொறுமுவதைப் போலவே தமிழர்களின் வளர்ச்சியே அவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வழுப்படுத்தும் காரணியாக அமைந்துவிட்டது.
இதற்கும் ரத்னேஷ் அண்ணா சொல்லி உள்ள தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - என்று சொல்லி இருப்பதற்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. தமிழர்கள் பின்னடையவும் இல்லை, பின்வாங்கவும் இல்லை. திராவிட என்ற சொல்லுக்கும் கூட தொடர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பெங்களூர் வாழ்தமிழர்கள் காவேரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள கன்னட அமைப்புகளுக்கு நன்கு தெரியும். வெறுப்புணர்வுக்கு காரணம் தமிழனின் வளர்ச்சி மற்றும் தமிழன் தன் அடையாளத்தை துறந்துவிடாமல் லோக்கல் தமிழ்நாளிதழ், தமிழ்சேனல்கள், தமிழர்பண்டிகை எதையும் விட்டுக் கொடுக்காமல் தமிழனாகவே இருப்பதும் அவர்களுக்கு உறுத்தல் தான். தமிழ்சார்ந்தவற்றில் பெங்களூர் தமிழர்கள் பற்றுதல் வைத்திருக்கிறார்கள், அதைத்தவிர கர்நாடகமாநிலத்தார் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கன்னடப்பாடத்திட்டத்தைதான் பயிற்றுவைக்கிறார்கள். நான் பார்த்தவரையில் பெங்களூர் வாழ்தமிழர்கள் பெங்களூரை பற்றி, கர்நாடக அரசாங்கத்தை பற்றிய ஆதரவு நிலையில், கர்நாடக மாநில உணர்வில் தான் இருக்கிறார்கள். தமிழகத்திலும் திரைப்படத்துரையினர் இதற்கு முனைப்புக் காட்டுவதும் கூட பெங்களூரில் தமிழ் திரைப்படம் ஓடுவதற்கு தடை என்பதால் ஏற்பட்ட வெறுப்பே.
பெரியாரின் நடவடிக்கையால் பார்பனிய கட்டுமானம் உடைந்து தமிழர்கள் விழிப்பு பெற்று முன்னேறியதால் தமிழர்களால் தந்தைப் பெரியார் என்று அழைக்கப்படுபவரை திராவிட கலகக்காரர் என்றும் மாமா என்றும் பல பார்பனர்கள் தூற்றுகிறார்களே அது போன்ற காழ்புணர்வு அரசியல் தான் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதற்கும் 'திராவிட' அரசியலுக்கும் துளியும் தொடர்பு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. :)
பெங்களூர் விரிவடைந்து வந்த போதுதான் அங்குள்ள தமிழர்கள் வளர்ந்து இருப்பதை அக்கம் பக்கம் உள்ள கன்னடர்கள் உணர ஆரம்பித்தார்கள். அவர்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாது போனதாலும், அரசியல் லாபநோக்கத்திற்க்காகவும் கன்னட அமைப்புகள், தமிழர் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டன. அதற்கு முழுவதும் பயன்படுத்தப்பட்டவர்கள் ராஜ்குமாரின் அப்பாவி ரசிகர்கள் தான். ரஜினி வியர்வைக்கு தங்ககாசு, தமிழ்பால் என்று தமிழ் ரசிகர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போலவே, தமிழகத்தில் பிறந்தாலும் கன்னட திரைநட்சதிரமாக உயர்ந்துவிட்டதாலும் கன்னட அரசியலை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக மாறினார் இராஜ்குமார். இதற்கு ஆதரவாக தமிழகத்தில் பிறந்த வாட்டாள் நாகராஜ் போன்றோரும் அரசியல் முதன்மைத்துவம் பெற வேண்டும் என்று ஒத்துழைத்தனர். தமிழக ரசிகர்கள் ரஜினி மீது மயக்கம் கொண்டிருப்பதைப் போன்றே, இராஜ்குமார் ரசிகர்களும் அவருடைய விரல் அசைவுக்கு விட்டம் தாவினார்கள். இன்றும் கன்னட திரையுலகம் இராஜ்குமாரின் மூன்று மகன்களின் கையில் இருக்கிறது.
நாளடைவில் தமிழ்திரையுலம் வளர்ந்து தரமான படங்கள் பெங்களூரிலும் வெற்றி நடை போட்டு கன்னடர்களாலும் விரும்பிப் பார்க்கப்பட்டதாலும், இந்தி திரைபடங்களின் ஆதிக்கத்தாலும் கன்னட திரையுலகம் பெரிய இழப்பை சந்தித்தது. அதன் காரணியே தமிழர்களுக்கு எதிரான நடவெடிக்கையை தூண்டிவிடுவதாகும் அமைந்தது. ஏற்கனவே தமிழர்களின் வளர்சியினால் புகையாக இருந்த எதிர்ப்புணர்வு, நெருப்பாக மாறி 1990 களில் தான் முதன் முதலில் பெங்களூரூவில் கலவரம் வெடித்தது. தமிழர்கள் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதன் பிறகும் கன்னட படங்களுக்கு வரவேற்பு எதுவும் இல்லை. 1992ல் வந்த ரோஜா படமும், ஏஆர்ரகுமான் இசையும் கன்னடர்களை மீண்டும் தமிழ் திரைப்படங்கள் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது. இவற்றைச் சமாளிக்க தமிழர்களுக்கு எதிரான உணர்வை ஈரம் போகமல் வைத்திருப்பதற்க்காகவே காவேரி பிரச்சனையில் தமிழகம் உரிமை கோருவது தவறனது என்றும் அபகரிப்பு போன்று கன்னடர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. ஞாயங்கள் என்பது இருந்தாலும் தமிழகத்துடன் உடன்பாடு செய்து கொண்டால் கன்னடர் - தமிழர் பிரச்சனை இன்றி அரசியல் செய்யமுடியாது என்பதால் தான் காவேரி ஆணையத்தின் தீர்ப்பையும் குப்பையில் போட்டனர்.
தற்பொழுது தேர்தலை சந்திக்க இருப்பதால் தேசியவாதக் கட்சியான பாஜகவின் 'இடையூற'ப்பா ஒக்கனேகல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தடுப்பதன் மூலம் பாஜக அரசு அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தமிழர் எதிர்ப்பு உணர்வுக்கு கர்நாடகத்தில் உள்ள ஒட்டுமொத்த கன்னடர்களின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அதே உத்தியில் சென்றால் கிடைக்கப் போகும் ஓட்டு உண்டியல் கனிசமாக நிரையும் என்றும், தமிழர் எதிர்புணர்வின் பலனை பாஜக மட்டுமே பங்கு கொண்டுவிட்டால் ஆட்சி அமைத்துவிடும் என்ற சிக்கல் இருப்பதால், காங்கிரஸ் தலைமையிலான நடுவன் அரசும் கூட வெளிப்படையான தீர்வு சொல்லாமல் இருபக்கம் மனுவை வாங்கிக் கொண்டு மவுனம் சாதிக்கிறது. இதெல்லாம் விட பெரிய கூத்து மகாராஷ்டிராவில் ஆளுனாராக இருக்கும் (இருந்த?) சரோஜா தேவி காதல் புகழ் எஸ் எம் கிருஷ்ணாவும் இதில் நேரடியாக களத்தில் குதித்து இருக்கிறார் என்றால் அதற்கு நடுவன் அரசின் ஆதரவு இல்லாமல் செய்திருப்பாரா என்று யோசிக்கவும் வேண்டி இருக்கிறது. ஆளுனர் என்பவர் அரசு பதவி வகிப்பவர் அவர் அரசியல் நிலை எடுப்பது பிரச்சனைக்குறியது.
பெங்களூர்வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தண்ணீர் காரணமாக சுமத்தப்பட்டாலும் அவர்கள் வளர்ந்ததால் பொறுக்க மாட்டாத தமிழர்களுக்கு எதிரான வெறுப்பும், தமிழ் திரைப்படங்கள் பெங்களூருவில் வெற்றிநடை போட்டதும் தான் முதன்மை காரணங்கள். இதில் கன்னட திரைப்படத்துறை நஷ்டம் அடைந்ததால் கன்னட ரசிகர்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடுவது எளிதாக ஆகி இருக்கிறது. சவுக்கார் பேட்டை சேட்டுக்களைப் பார்த்து தமிழர்கள் பொறுமுவதைப் போலவே தமிழர்களின் வளர்ச்சியே அவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வழுப்படுத்தும் காரணியாக அமைந்துவிட்டது.
இதற்கும் ரத்னேஷ் அண்ணா சொல்லி உள்ள தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - என்று சொல்லி இருப்பதற்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. தமிழர்கள் பின்னடையவும் இல்லை, பின்வாங்கவும் இல்லை. திராவிட என்ற சொல்லுக்கும் கூட தொடர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பெங்களூர் வாழ்தமிழர்கள் காவேரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள கன்னட அமைப்புகளுக்கு நன்கு தெரியும். வெறுப்புணர்வுக்கு காரணம் தமிழனின் வளர்ச்சி மற்றும் தமிழன் தன் அடையாளத்தை துறந்துவிடாமல் லோக்கல் தமிழ்நாளிதழ், தமிழ்சேனல்கள், தமிழர்பண்டிகை எதையும் விட்டுக் கொடுக்காமல் தமிழனாகவே இருப்பதும் அவர்களுக்கு உறுத்தல் தான். தமிழ்சார்ந்தவற்றில் பெங்களூர் தமிழர்கள் பற்றுதல் வைத்திருக்கிறார்கள், அதைத்தவிர கர்நாடகமாநிலத்தார் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கன்னடப்பாடத்திட்டத்தைதான் பயிற்றுவைக்கிறார்கள். நான் பார்த்தவரையில் பெங்களூர் வாழ்தமிழர்கள் பெங்களூரை பற்றி, கர்நாடக அரசாங்கத்தை பற்றிய ஆதரவு நிலையில், கர்நாடக மாநில உணர்வில் தான் இருக்கிறார்கள். தமிழகத்திலும் திரைப்படத்துரையினர் இதற்கு முனைப்புக் காட்டுவதும் கூட பெங்களூரில் தமிழ் திரைப்படம் ஓடுவதற்கு தடை என்பதால் ஏற்பட்ட வெறுப்பே.
பெரியாரின் நடவடிக்கையால் பார்பனிய கட்டுமானம் உடைந்து தமிழர்கள் விழிப்பு பெற்று முன்னேறியதால் தமிழர்களால் தந்தைப் பெரியார் என்று அழைக்கப்படுபவரை திராவிட கலகக்காரர் என்றும் மாமா என்றும் பல பார்பனர்கள் தூற்றுகிறார்களே அது போன்ற காழ்புணர்வு அரசியல் தான் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதற்கும் 'திராவிட' அரசியலுக்கும் துளியும் தொடர்பு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. :)
பதிவர்:
கோவி.கண்ணன்
at
4/02/2008 10:20:00 PM
தொகுப்பு :
ஒக்கனேகல்,
கட்டுரைகள்,
காவேரி
6
கருத்துக்கள்


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்