பங்கு சந்தை சூறாவளியில் காணாமல் போன நிறுவனங்களில் முதன்மையானவையாக கடன் வழங்கும் வங்கிகளும், காப்பிடு வழங்கும் வங்கிகளுமே ஆகும். லட்சக்கணக்கானோர் சிறுக சிறுக சேமிப்பு + காப்பீடாகப் போட்டவையெல்லாம் வளர்ந்து வாங்கப் போகும் நிலையில் திவாலாகி அவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டது. தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்பது நூற்றாண்டு கால படிப்பினையாக அமையும் என்று எதிர்பார்த்தாலும், மக்கள் எதையுமே அன்றோடு மறந்துவிடுவார்கள் என்கிற லாஜிக் தெரிந்த பொது / தனியார் நிறுவனங்கள் புதுவழியில் மக்களை எப்படியேனும் அனுகிவிடுவர்.
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மேக்சிமா, ரமேஷ் கார் மற்றும் அனுபவ் நிறுவனங்கள் மூலம் நல்ல 24 விழுக்காடு வட்டி வழங்கப்படுவதை நம்பி அடிவாங்கியவர்கள் என்பதால் தமிழக மக்கள் தற்போதைய பங்கு சந்தை பாதிப்பில் பங்கு பெறாதவர்களாகவும், அப்படியே பெற்று பாதித்திருந்தாலும் ஏற்கனவே நடந்தவையே என்றும் தேற்றிக் கொள்வார்கள்.
பலூன் ஊத ஊத பெரிதாகவும் வியப்பாகவும் இருக்கும், காற்று சேர சேர அழுத்தம் மிக பலூனின் பரப்புகள் மெல்லியதாகவும் மாற, அடுத்து காற்று சேர்ந்து கொண்டிருக்கும் போது எந்நேரமும் வெடிக்கலாம் என்ற விதிபோல் தான் பங்கு சந்தையின் வீழ்ச்சிகள் காட்டுகின்றன. வெறும் பணம், அதை பத்திரமாக (Form) மாற்றி பணம் பண்ணிக் கொண்டே இருக்கலாம் என்கிற நினைப்பில் வெண்ணீரைக் கொட்டியதாகவும், பெரும் கோடிஸ்வரனாக உலா வந்தவர்கள் 'பணம் என்பது மாயை' தான் என்று அருளுரை ஆற்றும் அளவுக்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறது. பணமும் அதன் மூலம் கிடைக்கும் புகழும் (குறுகிய) காலம் தொடர்புடையது என்னும் ஆன்றோர் உண்மையை உணர்ந்து கொள்ள கொடுக்கும் பணம் மிகவும் பெரியதுதான். எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்குவது போலவே பணத்தின் மீது இருக்கும் மோகத்தை உணர்ந்து தெளிந்து கொள்ள இப்பணம் கொடுக்கப்படுவதாகவே உணர்ந்து கொண்டால் ஓரளவு அழுத்தத்திலிருந்து மீளலாம். அப்படியும் ஆறுதல் கிடைக்கவில்லை என்றால்,
'எதைக் கொண்டுவந்தாய், எதனை இழக்கிறாய் ?'
'நீ எதைக் கொண்டு வந்தாயோ...அதை,
நீ பங்கு சந்தையிலிருந்தே கொண்டு வந்தாய்'
'இன்று உன்னுடையதாக இருப்பது... பங்கு பரிவர்த்தனை முடிந்த பிறகு
ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்'
என்பதாக கீதாச்சாரத்தை சற்று மாற்றி அமைத்துக் கொண்டு ஆறுதல் அடையலாம்
**********
இங்கே சிங்கையில் தபால் அலுவலகம், வங்கி ஆகியவற்றிற்கும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கும் சென்றால் எதாவது ஒரு காப்பிட்டு முகவர் / கடன் அட்டை முகவர் நம்மை நெருங்கி சிரித்தபடியே ஒரு 20 அடிக்கு கூடவே வருவார். பெரும்பாலும் 'நோ தாங்கஸ்..', இல்லாவிடில் 'எனக்கு வேறொரு நிறுவனத்தில் காப்பீடு இருக்கிறது / கடன் அட்டை இருக்கிறது' என்று சொல்லி சமாளித்து எட்டி வந்துவிடுவார்கள். நான் 2004 வாக்கில் ஒரு தபால் அலுவலகத்திற்குச் சென்ற போது (AI* நிறுவனத்தைச் சேர்ந்த) ஒரு பெண் முகவரிடம் மீளமுடியாமல் சிக்கிவிட்டேன். 'உடனடியாக காப்பீடு எடுக்க முடியாது, வேண்டுமானால் கைபேசி எண்களைத் தருகிறேன், பிறகு பேசுங்களேன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்தேன். தப்பிவந்ததாக நினைத்தேன் ஆனால் சரியாக ஒருவாரத்தில் அழைத்தாள். சும்மா சொல்லி வைப்போமே என்பதற்காக 'இப்ப நிதி நிலமை சரியில்லை, இன்னும் மூன்று மாதம் கழித்து பேசுங்கள்' என்றேன். சரியாக மூன்று மாதம் சென்று அழைத்தாள், அப்போதும் அதே காரணத்தைச் சொல்லி இன்னும் ஒரு ஆறுமதத்திற்கு தள்ளிப் போட்டேன். விடுவாளா ? அடுத்த ஆறுமாதத்தில் அழைத்தாள், அவள் தான் அழைக்கிறாள் என்று சொல்வதற்காக அவளே, 'Kanna Do you remember me, that day angmokyo post office ?", நானும் "yes, yes madam" என்று சொல்வதே வாடிக்கையாக இருக்கும்.
அதன் பிறகு மற்ற சூழல்களையெல்லாம் சொல்லி, அதாவது ஏற்கனவே வெறொரு நிறுவனத்தில் இருக்கும் காப்பீடு அடுத்த ஆண்டு முடிந்துவிடும் அதன் பிறகு பேசு' என்றேன், சரியாக ஒரு ஆண்டில் மீண்டும் அழைத்தாள், கிட்டதட்ட இரு ஆண்டுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்துக் கொண்டே இருந்தாள். இந்த முறை அவளை எப்படி தவிர்பது என்று நினைத்து யோசித்தேன். "Madam, I am going back to india permanently, I am sorry, I cannot signup for any policy" கொஞ்சம் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிந்தது, தொழில் தானே, அதன் பிறகு அவள் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை, மீறி தொடர்பு கொண்டாலும், "I came from India only on last week, I will stay here only for another 2 months" என்று சொல்லலாம் என்றே நினைத்திருக்கிறேன். இதுவரை அவளும் அழைக்கவில்லை. ஒருவேளை எனது கைபேசி எண்ணை அவளது பட்டியலில் இருந்து நீக்கி இருக்கலாம். இதுபோன்ற முகவர்களிடம் பட்டென்று முகத்தில் அடித்தது போல் சொல்வதற்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை.
நல்லவேளை நான் தப்பித்தேன், அவள் முன்மொழியும் வங்கியும் தற்பொழுது திவாலாகி இருக்கிறது, சென்ற ஆண்டு வேறொரு முகவரிடம் வீட்டு பாதுகாப்புக்காக (ஏற்கனவே வேறொரு நிறுவனத்தின் வீட்டு பாதுகாப்பு பத்திரம் House Protection Scheme (HPS) ஒன்று இருக்கிறது) உபரியாக அதே நிறுவனத்தில் 180 டாலர் வரை ஆண்டுத் வைப்புத் தொகையாக கட்டியது ஸ்வாகாதான், பெரிய நட்டமில்லை. 100,000 டாலர் வரை காப்புறுதி வாங்கி இருந்த பல முதியவர்கள் மனம் ஒடிந்து இருக்கிறார்கள். கிணற்று தண்ணீரை ஆற்றுவெள்ளம் அடித்து போகுமா என்று பேச்சு வழக்கு உண்டு சிறுக சிறுக சேமிக்கும் பலரது சேமிப்பை நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி என்னும் சுனாமி அப்படியே விழுங்கிவிட்டது. அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்த நிறுவனங்களில் காப்பீடு செய்யாமால் நிறைய சலுகைகள் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.
சிறுக சிறுக சேமித்து இப்படி ஒரே தடவையில் மாயமாகப் போவதற்கு பதில் 'இருக்கிற வரை Enjoy பண்ணுவோம்' என்ற மனநிலைக்கு மக்கள் சென்று, வரும் காலத்தில் சேமிக்கும் பழக்கம் ஒழிந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை :(
பின்பற்றுபவர்கள்
காப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
16 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்