உன்னைப் படித்ததும் தான் அறிந்தேன்
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
கம்ப ராயமயணத்தை சொல்லால்
வளைத்த கொம்பன் நீ !
தனை மறைந்து தாக்கிய இராமனுக்கும்
நீ, நினைந்து மறை தந்த மற்றோர்
ஆன்றோர் நேயன் !
நீ எழுதியவை
துட்டுக்கு பாட்டா மெட்டுக்கு பாட்டா ?
விட்டுத் தள்ளிவிட்டு சொல்லாம், அவை
எம் செவி மொட்டில்
விழுந்த தேன் சொட்டு !
நீ தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு
வாழ்ந்த காலங்களிலேயே
வாழ்த்தப்பட்டவன்
நீ !
புதுமைக்கவிஞன் இவன் என்று
போற்றப்பட்டவன் நீ !
விந்தை நீ, புதுக்கவிதைகளின்
தந்தை நீ.
உன்னிடத்தில் சிக்காத சொற்கள் இல்லை,
அவற்றில் சொக்காத சொற்கள் இல்லவே இல்லை !
உன்னிடத்தில் சொற்கள் அடைந்தன
நிறம், அவை பெற்றன
சாகா வரம் !
தமிழும், தமிழரும் நம்பிய மற்றோர்
தாடி நீ,
இன்றைய கவிஞர்களின்
டாடி நீ !
மாண்ட பொழுதில் தமிழ்தாய் பெரிதும்,
வேண்டும் இவன் வேண்டும் இவன்
மன்றாடி புலம்பப் பெற்ற மற்றோர்
சான்றோன் நீ,
தமிழ் சான்றோர்களின் சான்று நீ !
இன்னொரு முறை இவனே பிறப்பானா ? என்று எம்
தமிழ்தாய் இழந்து ஏங்கும்
குழந்தைகளில் இன்னொருவன் நீ !
இப்பவும் நம்புகிறோம்,
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
வாலி வாலி லாலி.............
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
கம்ப ராயமயணத்தை சொல்லால்
வளைத்த கொம்பன் நீ !
தனை மறைந்து தாக்கிய இராமனுக்கும்
நீ, நினைந்து மறை தந்த மற்றோர்
ஆன்றோர் நேயன் !
நீ எழுதியவை
துட்டுக்கு பாட்டா மெட்டுக்கு பாட்டா ?
விட்டுத் தள்ளிவிட்டு சொல்லாம், அவை
எம் செவி மொட்டில்
விழுந்த தேன் சொட்டு !
நீ தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு
வாழ்ந்த காலங்களிலேயே
வாழ்த்தப்பட்டவன்
நீ !
புதுமைக்கவிஞன் இவன் என்று
போற்றப்பட்டவன் நீ !
விந்தை நீ, புதுக்கவிதைகளின்
தந்தை நீ.
உன்னிடத்தில் சிக்காத சொற்கள் இல்லை,
அவற்றில் சொக்காத சொற்கள் இல்லவே இல்லை !
உன்னிடத்தில் சொற்கள் அடைந்தன
நிறம், அவை பெற்றன
சாகா வரம் !
தமிழும், தமிழரும் நம்பிய மற்றோர்
தாடி நீ,
இன்றைய கவிஞர்களின்
டாடி நீ !
மாண்ட பொழுதில் தமிழ்தாய் பெரிதும்,
வேண்டும் இவன் வேண்டும் இவன்
மன்றாடி புலம்பப் பெற்ற மற்றோர்
சான்றோன் நீ,
தமிழ் சான்றோர்களின் சான்று நீ !
இன்னொரு முறை இவனே பிறப்பானா ? என்று எம்
தமிழ்தாய் இழந்து ஏங்கும்
குழந்தைகளில் இன்னொருவன் நீ !
இப்பவும் நம்புகிறோம்,
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
வாலி வாலி லாலி.............