பின்பற்றுபவர்கள்

கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜூலை, 2013

வாலி வாலி லாலி !

உன்னைப் படித்ததும் தான் அறிந்தேன்
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?

கம்ப ராயமயணத்தை சொல்லால்
வளைத்த கொம்பன் நீ !

தனை மறைந்து தாக்கிய இராமனுக்கும்
நீ, நினைந்து மறை தந்த மற்றோர்
ஆன்றோர் நேயன் !

நீ எழுதியவை
துட்டுக்கு பாட்டா மெட்டுக்கு பாட்டா ?
விட்டுத் தள்ளிவிட்டு சொல்லாம், அவை
எம் செவி மொட்டில்
விழுந்த தேன் சொட்டு !

நீ தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு
வாழ்ந்த காலங்களிலேயே
வாழ்த்தப்பட்டவன்
நீ !

புதுமைக்கவிஞன் இவன் என்று
போற்றப்பட்டவன் நீ !

விந்தை நீ, புதுக்கவிதைகளின்
தந்தை நீ.

உன்னிடத்தில் சிக்காத சொற்கள் இல்லை,
அவற்றில் சொக்காத சொற்கள் இல்லவே இல்லை !

உன்னிடத்தில் சொற்கள் அடைந்தன
நிறம், அவை பெற்றன
சாகா வரம் !

தமிழும், தமிழரும் நம்பிய மற்றோர்
தாடி நீ,
இன்றைய கவிஞர்களின்
டாடி நீ !

மாண்ட பொழுதில் தமிழ்தாய் பெரிதும்,
வேண்டும் இவன் வேண்டும் இவன்
மன்றாடி புலம்பப் பெற்ற மற்றோர்
சான்றோன் நீ,
தமிழ் சான்றோர்களின் சான்று நீ !

இன்னொரு முறை இவனே பிறப்பானா ? என்று எம்
தமிழ்தாய் இழந்து ஏங்கும்
குழந்தைகளில் இன்னொருவன் நீ !


இப்பவும் நம்புகிறோம்,
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?

ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
வாலி வாலி லாலி.............

24 ஜூன், 2010

இனியவை 40 - இன்னா 400 !

போர்வாள்களாகத் துணியவில்லை,
கேடயங்களாக இருக்கத்தான் இயலவில்லை,
காயங்களை ஆற்றவும் மனமுமில்லை,
காயங்கள் தானே ஆறுவதற்குள் பொறுமையுமில்லை,
ஊர்வலத்தின் முன்பே தெரியும்
ஊர் அவலக்காட்சிகள்
மறைக்க மனத்திரை ஒன்றை
மாநாட்டில் தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை...
இன்றைய இனியவை நாற்பதின்
மயிலாடும் முகத்தின் மறைவில்
நேற்றைய மறக்க முடியாத
காட்சிகளாக தொடர்காட்சிகளாக.........இன்னா நானுறு !


3 அக்டோபர், 2007

நினைவு தடங்க'ல்' !

எதிர்ப்பார்பில் விளைவதல்ல
நட்பும், காதலும் !
காதலுக்கென்று கூட எதிர்ப்பார்ப்பு
இருக்கிறது, கைகூடினால்
காமமாம்.

நட்பு ?
கொடுக்கல் வாங்கலல்ல நட்பு
என்று புனிதம் பேசினாலும்
ஒருகை தட்டி ஓசை
வரவைக்க முடியுமா ?

எனக்கு உன்னைப் பிடிக்கிறதென்பதற்காகவே
நீ வேண்டுமென்றே
சொல்லுவது 'குற்றமே' என்றாலும்
அதையும் ஏற்றுக் கொள்வேன்
என்று என்மீது 'சுமத்துவது' தான் நட்பா ?

நட்பின் அளவுகோள்
எதையும் ஏற்றுக் கொள்வதா ?
அப்படி என்றால் நான்
ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை
நீ ஏன் ஏற்கவில்லை ?
என்ற என் எதிர்கேள்வியில்
தொலைந்து போனது
நட்பு.

நினைவில் மறந்தாலும், அடிக்கடி
என் இரவு கனவை நிறப்பிவிட்டுச்
செல்கிறது அந்த நட்பு !
--
அன்புடன்,

கோவி.கண்ணன்




எனது கவிதைகள் வலைப்பூ ஸ்பேம் என்று தகவல் வருது, அதனால் எதையும் அதில் போட முடியவில்லை.
:(((

WARNING
This blog has been locked by Blogger's spam-prevention robots. You will not be able to publish your posts, but you will be able to save them as drafts.

Save your post as a draft or click here for more about what's going on and how to get your blog unlocked.

2 அக்டோபர், 2007

மகாத்மாவின் கனவு ராஜியம் !





காந்தி கண்ட கனவு தேசமாம்
'இராம இராஜ்ஜியம்'
கைக் கெட்டும் தொலைவில்...

இராமன் பிறந்த(?) அயோத்தி
கையகப்படுத்தி யாயிற்று !

இராமன் நடந்து(?) போன
சேது, நாசா உதவியுடன்
கண்டுபிடித்தாகி விட்டது !

இன்றைய இராம ராஜியத்தில்
வாழ்வதற்கு காந்திக்கு
வயதின் காரணமாக
கொடுத்து வைக்காது என்று
எண்ணியும்...

ஈஸ்வரன் அல்ல அல்லா...
இதை உணர்ந்து கொள்ளச்
சொல்லி
நாது 'ராம்' கோட்சே,
அண்ணல் காந்தியை
அன்றே அனுப்பிவைத்தான்
இராமனின் திருவடிக்கு(?) !

ஹே ராம்.....!

காந்திஜியின் புகழ்வாழ்க !

18 ஜூலை, 2006

கருடா சவுக்கியமா ?


நல்ல பாம்புகள் என்றாலும்
நாக்கில் இருப்பது விசமல்லவா ?
நடராஜனின் கழுத்தை சுற்றிக் கொண்டு
நடமாடும் இந்த பாம்புகள்,
நஞ்சு மட்டுமா கக்குகின்றன கூடவே
நஞ்சை விடக் கொடும் விசமத்தையும் தான் !
நச்சுப் பாம்பை அடிக்கலாமா ? கூடாது !
நடராஜனிடம் இருக்கும் போது
நாடவேண்டாம் தெய்வ நிந்தனை !
நம்மைப் போலவே நடராஜனைத்தான் இந்த
நல்ல பாம்புகளும் நம்பியிருக்கின்றன !
நம்பினார் கெடுவதில்லை ! என்ற
நான்கு மறை தீர்ப்பு பொய்துவிடும் !
நஞ்சு தீண்டப்பட்ட நான் என்ன செய்யட்டும் ?
நல்லப் பாம்பை நமஸ்காரம் பண்ணட்டுமா ?
நஞ்சுண்ட நாதனை நாமும் பின்பற்றி
நல்லப் பாம்பிற்கும் நல்லதையே நினைப்போம், ஆனால்
நாளை நம்மை மீண்டும் கடித்தாலும் கடிக்கும், எனவே
நச்சுப் பல்லைப் பிடிங்கினால் போதும், மற்றதை
நடராஜன் பார்த்துக் கொல்வான் !

பிகு: பாம்புகள் எல்லாமே விசம் உள்ளது பாம்புகளை கொல்லவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, புற்றில் 'சிவனே' என்று படுத்துறங்கும் பாம்புகளும் உண்டு, விஷ(ம)ம் அற்ற பாம்புகளும் உண்டு. அவைகளை நாம் போற்றலாம், கோவில் பாதுகாப்பில், கோவிலில் நாம் ஊற்றும் பாலை குடித்துவிட்டு, முட்டையும் கேட்கும் பாம்புகள், நாம் தெய்வத்தை கும்பிட வருவதை தெரிந்தும் சீறி கடித்தால் மட்டுமே இந்த உபாயம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்