பின்பற்றுபவர்கள்

29 செப்டம்பர், 2011

அறிந்துக் கொள்ளுங்கள் புங்கை (மரம்) !

நம்மைச்சுற்றி நாம் அன்றாடம் பார்த்துவரும் மரங்களின் பெயர்கள் எத்தனை பேருக்குத் தெரியும் ?. புளி, தென்னை, வாழை, முருங்கை மரங்களை பரவலாக எல்லோரும் அறிந்திருப்பர், நொச்சி (செடி), எருக்கன்(செடி), ஆமணக்கு(செடி), கொடிக்காய் புளி, கருவேலம், நுணா, வாகை, கொன்றை, பின்றை, பூவரசு, ஒதியன், கல்யாண முருங்கை இன்னபிற தென் தமிழ்நாட்டு மரங்களை அறிந்திருந்தாலும் அவற்றை பெயரோடு சேர்த்து அறிந்திருப்பவர்கள் சிலரே. தோட்டக்கலை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், மரங்களின் மீது கொள்ளை காதல் கொண்டோர்களுக்கும் இவை பற்றி ஓரளவேனும் தெரியும்.

அசையா உயிர்த்த தன்மை கொண்டவை அதாவது தானாக இடம் பெயராமை என்பது தவிர்த்து மரங்கள் அனைத்திற்கும் பொதுவான தன்மை கிடையாது, மரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு சில சுற்றுச் சூழலில் மட்டுமே வளர்பவை, அவற்றை இடம் பெயர்த்து வேறொரு சூழலுக்கு கொண்டு செல்லும் போது அவற்றால் அதன் முழுத்தன்மையை வெளிப்படுத்தி வளர இயலாது. இந்தியாவுக்கு பொதுவான, தமிழ்நாட்டுக்கு பொதுவான சில மரங்கள் உண்டு, அவற்றை நாம் பிற நாடுகளிலோ, பிற மாநிலங்களிலோ பார்க்க முடியாது.

அவற்றின் இன்றைய பயன்பாடு இன்மை அல்லது அவற்றின் மதிப்பை அறியாமை ஆகியவற்றால் அவை கவனிப்பின்றி போய் இருக்கலாம், ஆனாலும் இவ்வகை மரங்கள் நிழல், மரப் பலகை, மழைநீர் பாதுகாப்பு ஆகியவற்றை தரும் வள்ளல்களாகத்தான் இருந்தன. அது தவிர்த்து அவற்றின் பட்டைகள், இலைகள், வேர்கள் முதலியன பல்வேறு நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருந்தன. ஆங்கிலத் தோடு ஆங்கில மருத்துவ மோகம் வளராத காலத்தில் எந்த விதப் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்து மூலிகைகளாக பல்வேறு செடிகளும், மரப்பட்டைகளும், மர இலைகளும் பயன்பட்டு வந்தன, சிரத்தை எடுத்து வளர்க்காவிட்டாலும் அவற்றின் பரவல் காம்பவுண்ட் சுவர் இல்லாத காலங்களில் வேலிகளாகவும், நிழல் தரம் மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வந்தன. தாவிர வகைகளில் பயனற்றவை என்பவை மிக மிக அரிதான ஒன்று அல்லது அவற்றின் பயனை நாம் முழுதாக அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

எளிதாக அழியக் கூடிய அல்லது விலங்கினங்கள் தின்று தீர்க்கும் செடி, கொடி, மரவகைகளில் இயற்கையாகவே முட்கள் நிறைந்து காணப்படும், அவற்றில் தூதுவேளைப் போன்ற மூலிகைச் செடிகளும் அடக்கம். பயன் நிறைந்து காணப்படும் செடி கொடி வகைகளில் அவ்வகை முட்கள் பாதுகாப்புகள் எதுவும் இருக்காது ஏனெனில் அவற்றின் விதைப் பரவல்கள் மனிதர்களால் விரும்பியே செய்யப்படுகிறது, குறிப்பாக நல்ல அடர்த்தியான நிழல் தரும் மரங்கள் விரும்பியே வளர்க்கப்படுகிறது என்பதால் அவற்றைப் பரவச் செய்ய இயற்கை வெறெந்த அமைப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும், நல்ல நிழல் தரும் மரங்களில் புங்கை மரமும் ஒன்று.

(படம் நன்றி தினகரன்)
வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்தது ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, அடர்த்தியானவை, இம்மர இலைகள் ஊடுறுவும் காற்றை தடுக்காமல் நன்றாக அசைத்துவிடுவதால் அதன் சுற்றுச் சூழலை குளிர்த்தன்மையுடன் வைத்துக் கொள்வதுடன், அடர்த்தியான நிழலையும் தருகிறது. மழைகாலத்தில் இலைகள் முற்றிலும் கொட்டிப் போகமல் இருக்கும் போதே துளிர்கள் வந்துவிடும், இம்மரம் பருவகாலத்திற்கு ஏற்றவகையில் தம்மை வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. அதன் கொத்து கொத்தான பூக்கள் தேன்செறிந்து இருப்பதால் அவை பூக்கும் காலங்களில் வண்டுகளுக்கு கொண்டாட்டம் தான். வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூப் போன்று காணப்படும். இம்மரப் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயனளிக்கிறது, இதன் காய்கள் புருவம் சேர்த்த ஒரு கண் அளவுக்கு வளர்ந்து, உள்ளே ஒன்று அல்லது இரண்டு பருப்புகள் (விதைகள்) அமையப் பெற்றிருக்கும், பச்சை நிறத்தில் இருந்து முதிர்ந்த நிலையில் பொன் மஞ்சள் நிறத்திற்கு மாறி முற்றியதும் தானாகவே கீழே விழுந்துவிடும்.

புங்கை விதைகள் ஆமணக்கு போன்று எண்ணெய் தன்மை கொண்டவை, அவற்றின் எண்ணைகள் எரிசக்தி கொண்டவை, மருந்தாகவும், பயோ டீசலாகவும் பயன்படுத்தலாம், அவற்றின் சக்கை (புண்ணாக்கு) நட்சுத் தன்மையற்ற உர வகையாக பயன்படுத்தப்படுகிறது. புங்கை அடிமரம் ஓரளவு நார்த்தன்மையுடன் உறுதியானவை, அவை பலகைகளாக அறுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் நிறைய ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக் கூடியதாம்.

புங்கை மரம் தமிழ்நாட்டின் பழமையான மரங்களில் ஒன்று, புங்கை மரங்கள் குறித்த பழங்கதைகள் (புராணங்கள்) கூட உள்ளன. திருமுறை பாடல்களில் அவை குறிப்பிடப்பட்டுள்ளது.



இணைப்புகள் :

முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்த மில்லா அடிகள் அவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
- திருஞானசம்பந்தர்.



திருப்புன்கூர் திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது புங்கமரமாகும். பளபளப்பான கரும்பச்சை இலைகளையும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொரி போன்ற பூக்களையும் நீள்சதுரக் காய்களையும் உடைய மரம். இம்மரம் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் தன்மை கொண்டது. நிழலுக்காகவும் இம்மரம் சாலையோரங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, வேர், பால், நெய் ஆகியவை மருத்துவக் குணமுடையவை. இது தோல் நோய் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. (நன்றி : சைவம்)

பொன் தரும் புங்கை (தட்ஸ் தமிழ் கட்டுரை)

புங்கை

புங்கமரம் - திரு குப்புசாமி

புங்கை இலையின் மகத்துவம்

தாவர எரிபொருள் காடுகள் வளர்ப்புதாவர எரிபொருள் காடுகள் வளர்ப்பு - ஒரு சிறுதொழில்.


பின்குறிப்பு : சென்ற முறை சொந்த ஊருக்குச் சென்ற போது, கடற்கரையை ஒட்டிய ரயில் தண்டவாளம் அருகே காய்த்துக் குலுங்கிய புங்கை மரத்தைக் கண்டவுடன் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது, படம் பிடித்துக் கொண்டேன், புங்கை பற்றி தெரிந்த வரையில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், அடுத்த சில நாட்களில் புங்கை பற்றிய கட்டுரை ஒன்று தட்ஸ் தமிழில் வந்திருந்தது தற்செயல் என்றாலும் கூட 'நாம் நினைப்பதை மற்ற ஒருவரும் ஏற்கனவே நினைத்துள்ளார் என்ன ஒரு ஒற்றுமையான நிகழ்வு' என்றே வியக்க வைத்தது.

28 செப்டம்பர், 2011

வலைப்பதிவு நண்பர் ஸ்வாமி ஓம்கார் !

வலையுலகையில் நான் கண்ட வரையில் என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து கொண்டோர் தான் என்னிடம் நல்ல நெருக்கம் வைத்துள்ளனர், மதிப்பும் அன்பும் வைத்துள்ளனர். மனித மனம் ஆன்மீகம், மதம், நாத்திகம் இவற்றையெல்லாம் தாண்டி நல்ல மனிதர்களையே நாடுகிறது என்பதை என் நட்புகளால் நான் அறிந்துள்ளேன், எந்த ஒருவரின் தனியான கொள்கைகள், நம்பிக்கைகள் புதிய நட்புகளுக்கு தடைவிதிப்பது இல்லை.ஒரே குடும்பத்தில் பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களுக்குள் சகோதரச் சண்டைகள் வந்துவிடுமா என்ன ?

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் தொடர்பு தான் எனக்கும் ஸ்வாமி ஓம்காருக்கும், அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் பிறை வந்துவிடும் அதனால் அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் மறைமுகத் தொடர்பு உண்டு. ரொம்ப மொக்கையா இருக்கா ? ஸ்வாமி ஓம்காரின் பதிவுகள் தற்பொழுது தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை, ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் தொடர்பில் சொந்த 'பிஸ்னஸ்' ஆக எழுதுகிறார் என்ற குற்றச் சாட்டில் அவரது வலைப் பதிவை தமிழ்மணம் தடை செய்திருக்கிறதாம். தமிழ்மணத்தில் இணைத்திருக்கும் நிறையப் பதிவர்கள் சுய விளம்பரத்திற்கும், பதிவுகளில் விளம்பரங்களை வெளியிட்டும் பலன் தேடிவரும் போது ஓம்கார் அந்த அளவுக்கெல்லாம் எதுவும் செய்யவில்லை. தமிழ்மணம் கட்டண சேவையில் முகப்பில் அவரது வலைதளத்தை இணைப்பதற்கான விவரம் கேட்டிருந்தாராம், தமிழ்மணம் 'ஆஹா கமர்சியல் வலைத்தளம்' என்று கண்டு கொண்டு முடக்கிவிட்டார்கள். தமிழ்மணம் திரட்டியின் வழியாக நிறைய நண்பர்களைப் பெற்று இருக்கிறேன், எனவே தமிழ்மணத்தின் திடிர் நடவடிக்கை எனக்கு வருத்தம் அளிக்கவில்லை என்று கூறினார்.

தான் தேர்ந்தெடுத்துள்ள சாமியார் வாழ்க்கையில் மந்திரம் தந்திரம் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்காமல் 'போஜனத்திற்காக' விரும்புவோருக்கு மட்டும் ஜோதிடம் சொல்லி வருகிறார், ஜோதிட, தியான, யோகா வகுப்புகளை நடத்துகிறார். இதை அவர் செய்யவில்லை என்றால் 'ஸ்வஸ்தப்படுத்தும்' வேலை செய்து பெரும் பொருளீட்டி கார்ப்ரேட் சாமியார் அந்தஸ்தை அடைந்திருப்பார், தன்னைத் தேடிவரும் பினாமி வாய்ப்புகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு சாமியார் தொழிலின் இலக்கணமே தெரியாமல் சாமியார் ஆகிவிட்டாரே என்கிற பரிதாபம் தான் என்னை அவர் பக்கம் ஈர்த்தது. எனக்கும் அவருக்கும் கொள்கை ரீதியாக உடன்பாடு இல்லை, 'மரம் சீடியை படிக்கும்', 'அஹம் பிரம்மாஸ்மி' போன்ற அவரது கூற்றுகளை நான் ஏற்றுக் கொள்வதும் இல்லை. ஒரு சாமியாரிடம் நான் எதிர்பார்காதவைத் தவிர்த்து அவரிடம் தமிழ் பற்றும், அதனைப் பற்றிய திருமூலரின் திருமந்திரம் உள்ளிட்டவைகளில் அவரது ஈடுபாடு எனக்கும் அவருக்குமான நட்பிற்கான இணைப்பாக இருந்தது. என்னைப் பொருத்த அளவில் தமிழை முன்னிறுத்தும் ஆன்மிகவாது நாத்திகமாவது இரண்டுமே போற்றத் தக்கவை தான். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அறிஞர் அண்ணாவின் பேச்சுகளில் கட்டுண்டு போவது போலவே சுகி.சிவம் உள்ளிட்டோரின் பேச்சுகளிலும் ஈர்க்கப்பட்டிருப்பேன். இவற்றையெல்லாம் விட மனித நேயம் தெரிந்தவர் எந்த இனம், மொழி, மதம் என்றாலும் கூட நம்மை ஈர்த்துவிடுவர் என்பது தானே உண்மை ? ஸ்வாமி ஓம்கார் அடிப்படையில் மனித நேயம் மிக்கவராகவும் இருந்தார், முதல் முறை சந்தித்த போதே தான் அன்றாடம் அருந்தும் ஆப்பிள் ஜூஸை எனக்கும் கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :)

சிங்கைக்கு ஸ்வாமி ஓம்கார் வருவது இது இரண்டாம் முறை, முதல் முறை பயணத்தின் போது 'தினம் தினம் திருமந்திரம்' என்ற தலைப்பில் சிங்கை வடபத்திர காளியம்மன் கோயிலில் ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார், போதிய விளம்பரமின்மை, நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் 'ரெகமண்டேசன்' இல்லாத நிலையிலும் கூட குறிப்பிட்ட அளவினர் கலந்து கொண்டனர், அதில் பதிவர்களும் பலர். சிங்கப்பூருக்கு ஸ்வாமி ஓம்கார் அறிமுகம் என்பதைவிட ஸ்வாமி ஓம்காருக்கு சிங்கப்பூர் அறிமுகம் என்ற அளவில் தான் நடந்தது, அதன் பிறகு ஒன்னரை ஆண்டுகள் கழித்து மீண்டும் சிங்கப்பூர் வந்தார்,




சிங்கப்பூர் இலக்கியம் மட்டும் ஆன்மீக வட்டப் பெரியோர்களான திரு வரதராஜன் மற்றும் திரு கே ஆர் குமார் ஐயா ஏற்பாட்டில் குயின்ஸ்வே ஞான முனீஸ்வரன் கோயிலில் சென்ற 17 செப் 2011 'அன்றாட வாழ்வில் திருமந்திரம்' என்ற தலைப்பில் ஸ்வாமி ஓம்கார் சொற்பொழிவு நடந்தது, 100க்கும் அதிமானோர் கலந்து கொண்டனர், சிங்கையில் 50 பேருக்கு மேல் வருவதே அரிது, ஏனெனில் வார இறுதியில் தான் தமிழ் நிகழ்ச்சிகளை பலரும் நடத்துவர், ஒரே நாளில் பல நிகழ்ச்சிகள் நடக்கும், எனவே ஒரே இடத்தில் நகரின் மையப்பகுதியைத் தள்ளி வெளியே நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு 100 பேர் என்பது நிறைவான கூட்டம் என்றே சொல்லலாம். ஏற்பாட்டாளர்களுக்கு இந்தக் கூட்டம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூட்டம் இடையில் எழுந்து செல்லாத அளவுக்கு ஓம்காரின் பேச்சுகளிலும் கோர்வை இருந்தது.


அதன் பின்னர் மலேசியா ஈப்போ சென்று இருவேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், அந்நிகழ்ச்சிகளை மலேசியாவில் இருக்கும் ஜவஹர் அண்ணன் பார்த்துக் கொண்டார், அங்கும் ஓம்காரின் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்ப்புக் கிடைத்ததாம். பின்னர் சென்ற சனிக்கிழமை சிங்கை தேங்க் சாலை தெண்டாயுதபாணி' கோயிலில் 'திருமந்திரம் என்னும் அருமந்திரம்' என்ற உரை நிகழ்த்தினார். வேறு சில பணிகளால் நான் அதற்குச் செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் அவருக்கும் நல்லோர் பலருக்கும் அறிமுகம் கிடைத்திருக்கிறது

இந்நிகழ்ச்சிகளுக்கு இடையே எங்கள் வீட்டிற்கும் வந்து சென்றார். இன்று சிங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று பின்னர் தொடர் வண்டியில் கோவை செல்கிறார். அவருக்கு அறிமுகமானவர்களிடையே என்னை 'நண்பர்' என்று தான் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். நானும் அவரிடம் ஒரு சாமியாரிடம் பழகுவது போல் பவ்யம் எதுவும் காட்டாமல் இயல்பாகவே பழகிவருகிறேன்.

(உடன் இருப்பவர் பதிவர் வெற்றிக்கதிரவன்)

21 செப்டம்பர், 2011

பக்திப்பட இயக்குனர் ஏபி நாகராஜன் !

திரைப்படங்கள் பொழுது போக்குத் தொழில் என்றாலும் பண்டைய இயல் இசை நாடகக் கலைகளின் தொகுப்பான / நீட்சியான இன்றைய வடிவம் தான் திரைப்படங்கள் என்பதால் அவை வெறும் பொழுது போக்குச் சார்ந்தவை என்று ஒதுக்கிவிட முடியாது. வாழ்வியல், இசை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை மக்களிடம் கற்று அதைத் தொகுத்து மக்களுக்கே அளித்துவருபவை தான் அவை. எல்லாவற்றையும் வியாபாரப் பொருள்களாக ஆக்கிப் பார்க்கும் இன்றைய உலகில் சிக்கிச் சீரழிந்து வருபவைகளில் இந்தப் பொழுது போக்கு கலையுலகும் ஒன்றாகும். எளிதில் மக்களைச் சென்று அடையும் வியாபாரப் பொருள் மற்றும் அதில் அறிமுகம் ஆகுபவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர் ஆகிறார்கள் என்பதால் புகழும் பணமும் ஒரு சேர நாடுவோருக்கு திறமையின் அடிப்படையில் அவற்றை வாரி வழங்குவது திரைப்படத் தொழிலின் சிறப்பாகும். அதில் கிடைக்கும் பேரும் புகழும் அரசியல் நாற்காலியை அசைத்துப் பார்க்கும் அல்லது கைப்பெற்றும் என்பதால் திரையுலகம் மக்கள் வாழ்வியலை, ஆட்சி அதிகாரத்தை மாற்றும் சக்தி படைத்தவை என்றால் அதில் மறுக்க எதுவும் இல்லை. திரைப்படங்கள் மூலம் நல்ல தமிழை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நல்ல உரையாடல்களை எழுதியவர்கள் மிகச் சிலரே, அதில் குறிப்பிடத்தக்கவர் ஏபி நாகராஜன்.

*****

இன்றைய காலகட்டத்தில் படங்களில் உரையாடல்கள் குறைவு காட்சியும் மக்களின் புரிந்துணர்வும் உரையாடல்களின் தேவைகளைக் குறைத்துவிட்டன, தற்போதைய படங்கலில் நீள உரையாடல்கள் வந்தால் மக்கள் விரும்புவதில்லை, 30 ஆண்டுகளுக்கு முன்புவரை உரையாடல்களுக்காகவே பார்க்கப்பட்டவை ஏபி நாகராஜனின் படங்கள். இன்றைக்கும் எப்போதும் பலமுறைப் பார்க்கத் தக்கப் படங்களாகவே ஏபி நாகராஜனின் சரஸ்வதி சபதம், திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகனாம்பாள் படங்கள் உள்ளன. அருவெறுப்பற்ற நகைச்சுவை, செந்தமிழ் கலந்த சொற்கள் இட்டு நிரப்படுவதுடன் காட்சிக்கு ஏற்ற உரையாடல்களை எழுதுவதில் வல்லவராகவே திகழ்ந்தார் ஏபி நாகராஜன்.

நான் இதுவரைப் பார்த்தப்படங்களில் என்றைக்கும் நினைவில் வருபவையும் பார்க்கப் பார்க்க சலிக்காத படங்களில் ஏபி நாகராஜனின் திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகானாம்பாள், தில்லானா மோகானம்பாள் பற்றி தனியாகக் குறிப்பிடத் தேவை இல்லை, தமிழ் திரையில் வரலாறு படைத்த படங்களில் அது முதன்மையானது, நாட்டுப்புறக் கலைஞர்களின் (தமிழ் நாட்டின் தனிப்பெரும் கலையை நாட்டுப்புறக் கலை என்று ஒதுக்கி வைத்துப் பார்க்கும் கேவலமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்) உணர்வுகளை படம் பிடித்ததுடன் தமிழ்நாட்டில் சிலப்பதிகாரத்திற்கு முன்பிருந்தே வாழும் நடனக்கலையான சதிராட்டம் (பரதம்) படத்தின் மையமாக இருந்தது, நடித்தவர்களும் அதில் வாழ்பவர்களாகவே நடித்திருந்தனர்.

பட்டிதொட்டி எங்கும் வசன நடைகளுக்காக பாராட்டுபெற்று இன்றும் அதன் வசனங்கள் 'மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததோ ?' என்று பலரும் பேசும் புகழ்பெற்ற வசனங்கள் இடம் பெற்றத் திரைப்படம், 'அம்மையப்பன் சொல்லுக்கே செவி சாய்க்காத நான், உன் பேச்சைக் கேட்க சற்று நிற்கிறேன் என்றால் அது நீ பேசும் தமிழுக்காகத் தான்' என்று கோவித்துக் கொள்ளும் முருகன் ஒளவைப்பாட்டியிடம் சொல்வதாக கடவுளுக்கும் மேலாக தமிழை பெருமைபடுத்தி இருப்பார் தன் உரையாடல்கள் எனும் பேனா வீச்சால், அதுமட்டுமா தமிழில் இலக்கண இலக்கிய பொருள் பிழைகள் அது கடவுளே செய்தாலும் மன்னிக்க இயலாத ஒன்று என்று நக்கீரன் வழியாக 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று முழங்கி இருப்பார் ஏபி நாகராஜன்.


திருவிளையாடல் திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் அனைத்தும் கவியரசர் கண்ணதாசன் வரிகளில் தெவிட்டாத இசையமுதம இசையில் என்றும் கேட்கவல்லவை. காட்சி அமைப்பு, பாடல்கள்,இசை அனைத்தும் ஒன்றே பொருந்தி பார்பவரை மூன்று மணி நேரம் கட்டிப்போட வைத்திருக்கும் அப்படம், சிவாஜியின் மிகையற்ற நடிப்பு படத்திற்கு மேலும் மெருகு. ஆணவம் மிக்க கர்நாடக சங்கீதப் பாடகராக (ஹேமநாத பாகவதர்) வரும் டிஎஸ் பாலையா மிகச் சிறந்ததொரு நடிப்பை வழங்கி இருப்பார். 'இன்றொரு நாள் போதுமா ?' பாலமுரளியின் இளம் வயதுக் குரல் என்றென்றும் கேட்க இனிமைதான். அதையும் வீழ்த்த அடுத்து டி எம் எஸ் ஆல் பாடப்படும் 'பாட்டும் நானே பாவமும் நானே', இத்தனையும் கோர்த்து நல்லொதொரு சமூகம், பக்தி மற்றும் பொழுது போக்குப்படமாகவே இயக்கி இருந்தார் ஏபி நாகராஜன்.

அக்கம்மாப்பேட்டை பரமசிவன் நாகராஜன் என்ற முழுதான அவர் பெயரின் சுருக்கமே ஏபி நாகராஜன். சிவாஜி கனேசன், எம்ஜிஆர், ஜெமினிகனேசன், சாவித்திரி, பத்மினி மற்றும் ஜெயலலிதா, உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் /நடிகைகளை வைத்து பலப் படங்களையும் இயக்கியும், சில தெலுங்கு படங்களின் கதை / திரைகதை அமைத்துள்ளார்

வடிவுக்கு வலைகாப்பு என்ற 1962ல் தொடங்கிய அவரது இயக்குனர் பயணம் எம்ஜிஆர் நடித்த நவரத்தினம் 1977 வரை நீடித்தது, கிட்டதட்ட 15 ஆண்டுகள் 26 படங்கள் வரை இயக்கியுள்ளார், அவர் இயக்கியவைகளுள் இன்றும் பேசப்படுபவை, பார்க்கப்படுவை அவற்றில் சில

திருவிளையாடல், தில்லானாமோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை ஆகியவை, மேலும் ராஜ ராஜ சோழன், காரைக்கால் அம்மையார், திருமால் பெருமை, திருவருட் செல்வர் உள்ளிட்டவை பக்தி மற்றும் வரலாற்றுப் படங்களாகும், பெரியார் முழுக்கம் தமிழ்நாட்டில் பெரியத்தாக்கம் இருந்தும் ஏபி நாகராஜனின் பக்திப்படங்கள் மிகவும் விரும்பிப்பார்க்கப்பட்டன என்பது இங்கு குறிப்ப்டத் தக்கது, இன்னும் சொல்லப் போனால் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரங்களையும் அதனால் ஏற்பட்ட மக்கள் உணர்வு அலைகளையும் மறைமுகமாக கட்டுப்படுத்தும் வேலையை இவரது வசனங்கள் செய்தன என்றால் அது மிகையல்ல.

பக்திப்படங்கள் மட்டுமல்லாது நவராத்ரி, மேல்நாட்டு மருமகள், குமாஸ்தாவின் மகள் மற்றும் சில சமூகப்படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகனேசனின் முழுமையான நடிப்பாற்றலை வெளிப்பட வைத்த இயக்குனர்களில் இவரே முதன்மையானவராக நினைக்க முடிகிறது.

தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திகாட்டி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கும் பங்காற்றிய ஏபி நாகராஜன் இந்திய அரசால் இன்னும் கவுரவிக்கப்படவில்லை என்பதை பலர் வருத்ததுடன் சொல்கிறார்கள்.
ஏபிநாகராஜனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு அவர் தமிழனாகவும் பிற்பட்டவராகவும் பிறந்தது தான் காரணம் என்றே எண்ண வேண்டியுள்ளது.

தமிழ் கூறும் நல் உலகிலும் ஏபி நாகராஜன் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை, அவரது பிறந்தத் தேதி வயது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை. அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள விக்கிப்பீடியா ஆங்கிலக் கட்டுரையில் அவரது படம் கூட இடம் பெறவில்லை, வரலாறுகள் எழுதப்படாமல் தொலைக்கப்படுவதற்கு நம் அலட்சியமும் காரணம், ஏபி நாகராஜன் பற்றி முழுமையான தொகுப்பை எழுத முடியவில்லை, எதிர்காலத்தில் தகவல்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தகவல் தெரிந்தவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். பின்னர் அவற்றை இடுகையில் சேர்க்கிறேன்.

(From the Web) A. P. Nagarajan is a veteran Tamil film director, who set a trend in film making in Tamil cinema in 1960s. He started his film career as a dialogue writer for Nalvar (1953), in which he also acted. He founded a production with actor V.K. Ramasamy and made Nalla Idathu Sambandham in 1958. When he started directing, his first few films were based on contemporary themes like the one on a boy guide working in Mahabalipuram (Vaa Raja Vaa). In the mid sixties he directed a series of films on religious subjects like Sarasvathi Sabatham (1966), thereby starting a trend in Tamil film making.

16 செப்டம்பர், 2011

64 ஆம் நாயன்மார் தேவநாதர் வரலாறு !

பின்னொரு காலத்தில் தேவநாதரைப் பற்றி அறிந்து கொள்ளவும், தேவநாதரை 64 ஆவது நாயன்மாராக ஆக்க வேண்டுகோள் வைத்துள்ள சிவ அன்பர்களைப் போற்றி, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெறத் தக்க பேறு பெற்ற தேவநாதர் நாயன்மார் வரலாற்றை சுறுக்கமாக எழுதத் தலைப்(ப)பிட்டுள்ளேன்.

முதுபெரும் அரசியல்வாதிகளும், மாமன்னர்களும், சைவ வைணவ சமய குரவர்களும் வாழ்ந்த நற்பூமியாம் பல்லவ நாட்டின் தலைநகராம் காஞ்சி மாநகரம், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமென்பர் அது போல் காஞ்சி மாநகர் குறித்த மற்றொரு முதுமொழி உண்டு, 'காஞ்சிக்கு சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்' என்பதே அது, அதன் பொருள் அறியா மூடர் சிலர், அவர்களின் சோம்பேறிகளாகப் பலர், காஞ்சிக்குச் சென்றால் காலாட்டிக் கொண்டே இருந்தால் சாப்பிட்டுவிடலாம் என்று காஞ்சி வந்து காலாட்டி கால்வீங்கிப் பின்னர் பிச்சைக்காரர்களாக அங்கேயே தங்கிவிட்டனர். மூடர் அறியாரோ முதுமொழி ? என்னும் பழமொழிக்கேற்ப அடே மடையர்களே காஞ்சியில் காலாட்டிப் பிழைப்பது என்பது அவ்வூரில் புகழ்பெற்ற நெசவுத் தொழில் என்பதாம், அஃதாவது கால்களால் ஆட்டி ஆட்டி தறிபோடும் தொழில் தான் காலாட்டிப் பிழைக்கும் தொழில் என்பர். காஞ்சி மாநகருக்கு நெசவு மட்டுமா புகழ் ? உலகுக்கே ஆன்மிகப் பேரொளி வீசம் ஶ்ரீஶ்ரீஶ்ரீ காஞ்சி காமகோடிப் பீடம் அமைந்துள்ள நகர் தான் காஞ்சிமாநகர், ஆதிசங்கரர் நான்முகமாய் நான்கு நகரங்களில் சங்கரமடங்களை நிறுவிவிட்டு பஞ்சரத்தினமாக காஞ்சியில் ஒன்று அமைக்க முடிவு செய்திருந்த போது முக்தி அடைந்தார், ஆதி சங்கரரின் சங்கல்பம் (எண்ணம்) அறிந்த கும்பகோண மடப் பெரியவாக்கள் தங்கள் மடத்தை காஞ்சிக்கு இடம் பெயர்த்து சங்கரரின் சங்கல்பம் பூர்த்தி பெற்று அருளாசி வழங்கிவருகின்றனர். காஞ்சிமடம் எதைச் சேர்ந்தது என்று கேட்டால் வரலாறு தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்றே நான் இந்த பிட்டுகளை இங்கே போட்டு வைக்கிறேன். காஞ்சிக்கு பெருமை மட்டும் தானா ? சிறுமையும் கூட இருக்கிறது, நாத்திகன் ராமசாமியின் சீடன் அண்ணாத்துரை பிறந்து வளர்ந்ததாம் இவ்வூர், நல்லோர் நல்லூரின் நரிகளும் வாழ்ந்திருக்கின்றன என்பதைச் சுட்டவே யாம் இங்கு அண்ணாதுரைப் பற்றிச் சுட்டியுள்ளோம். நல்லது தேவநாதருக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்ப்பு ? ஏன் காஞ்சியைப் பற்றி பெருமை பொங்க எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது அறிவோம்,

சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் நாயன்மார்கள் வரலாறு எழுதும் போது அவர்கள் வாழ்ந்த சென்ற ஊர்களின் பெருமைகளை எழுதி பின் அவர்களைப் பற்றிச் சொல்வது பக்தி இலக்கிய வழக்கம் என்று வழிசொல்லி இருக்கிறார். யாமும் அதைப்பின் ஒற்றியே தேவநாதர் வாழ்ந்துவரும் காஞ்சிமாநகர் தம் பெருமைகளை எடுத்துரைத்தோம். அப்பேரு பெற்ற காஞ்சி மாநகரில் மச்சேஸ்வர நாதர் என்ற பெயரில் உலகாளும் உமையாளின் மனாளன் கோவில் ஒன்றில் குடிகொண்டிருந்தார். அம்மச்சேஸ்வர நாதர் ஆலயத்தில் ஆறுகாலப் பூஜைகளுடன் நடுச்சாம பூஜைகளையும் செவ்வனே செய்து வாழ்ந்து வந்தார் தேவநாதக் குருக்கள், தேவநாதர் தம் பெயருக்கு ஏற்படியே தேவந்திரனை தலைவராக கொண்ட பிராமணச் சமூகத்தில் விளைந்த பிராமண குலக் கொழுந்து, சாதா காலமும் இறைச் சேவை செய்து கொண்டிருந்தாலும் தேவநாதரின் நாட்டம் அர்சனைக்கு வரும் பெண்கள் மீதே இருந்தது. இதனை மச்சேஸ்வரர் அறிவாரா ? உலகாளும் ஊர்த்தாண்டவர் ஒவ்வொரு உயிர்களின் உள்ளத்திலும் ஆடுகிறார், தேவநாதரின் சிந்தை அறியாமல் இருப்பாரோ ?

மச்சேஸ்வரநாதருக்கு பக்தர்களை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பது வழக்கம், பக்தர்களை மட்டுமா ? என்கிறீர்ளே நான் அர்சகர்களையும் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன் என்பதை காட்ட விரும்பிய பெருமானார் மச்சேஸ்வர,ர் ஒரு நாள் பக்தை வடிவில் அர்சனைத் தட்டுடன் வந்தார். அப்போது குருக்கள் பணியில் இருந்த தேவநாதர் 'அப்பப்பா இம்மண்ணுலகில் இவ்வளவு அழகான பெண்ணா ? ' வியந்தார், காமம் தலைக்கேறியது, மயக்கும் மஞ்சளாக செவ்வானம் லேசான தென்றல், மல்லிகை மணம், உள்ளத்தை கொள்ளையடிக்கும் குமரிப் பெண், ஒரே கண் ஜாடையில் சம்மதம் பெற்றார் தேவநாதர். கருவறைக்கு அழைத்துச் சென்று அவள் ஆடையைக் களைய.........ஆவேசம் அடைந்த பெருமானார் பெண் உரு மறைய சடாமுடிகளுடன் தன் உருபெற்று நெற்றிக்கண் திறக்க 'தேவ நாதா நீ என்ன காரியம் செய்கிறாய் ? இது என் கருவறை என்று தெரியாதா ? உன்னை எரித்துவிடுகிறேன்.......என்று சொல்ல, அங்குள்ள மணிகளெல்லாம் கிண் கிண் என அடிக்கின்றன, பதட்டம் அடையாத தேவநாதர் மிகப் பொருமையாக 'ஐயனே தங்கள் தரிசனம் பெற்று பாக்கியம் பெற்றேன், ஆனாலும் நீங்கள் கோபப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை' என்று கூறினார், கருவறையில் கசமுசா செய்வது தவறு என்றே உமக்குத் தெரியாதா ? என்று மேலும் சினமானார் இறைவர். ஐயனே நீர் இல்லாத இடம் ஏது ? என் வீட்டுப் படுக்கையறையிலும் பஞ்சுத் தலையிணையிலும் கூட நீர்தான் இருக்கிறீர். காணும் இடங்களில் எல்லாம் பரம்பிரம்பம் உமை தரிசிக்கும் எனக்கு கருவறை ஒன்றும் தனித்த இடமாகத் தெரியவில்லை, தவறிருந்தால் என்னை மன்னியுங்கள். இருந்தாலும் நான் தவறாக எதையும் செய்துவிடவில்லை என்று கூறினார்.

தேவநாதரின்ன் மெய்யறிவை மெச்சிய பெருமானார் மகிழ்ந்து பார்வதியை வரவழைத்து தம்பதி சகிதமாக காட்சி தந்து 'நீயே உண்மையான சிவ பக்தன்.....வா என்னோடு' என்று கையிலாயம் அழைத்துச் சென்றார்.

கருவறை ஈசனவன் காட்சிதந்தவனைக் கேட்க,
நில்லா இடமென்றோ செல்லா இடமென்றோல்லாமல்
எல்லாவிடத்திலிருக்கும் எம்மீசன், இவ்விடத்தில் மட்டும்
நிற்கானோ என்றுரைத்த தேவநாதன்

தேவநாதர் வரலாறு முற்றிற்று.

*****

தேவநாதருக்கு மச்சேஸ்வரர் காட்சிக் கொடுத்த மார்க்ழி திங்கள் 11 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் தேவநாதர் பிறந்த பழைய சீவாரம் மக்கள் வெகு விமர்சியாகக் கொண்டாடிவருகிறார்கள். ஆண்டு தோறும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு வந்து தேவநாதர் பெயரில் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்கின்றனர்.

சைவ சமயத்தில் மட்டும் தானா இம்மாதிரி கசமுசா கதைகள் உள்ளன ? வைணவத்திலும் உண்டு அவர்களில் சிலர் ஆழ்வார்கள் ஆகியுள்ளனர், 'சிந்தாமணி' என்ற பொதுமகளிடம் 'லீலா சுகர்' என்ற வைணவர் அடிமைப்பட்டிருந்து பின்னர் திருந்தினாரே?​ 'தேவ தேவி' என்னும் விலைமகளிடம் விப்ர நாராயணர் சரணடைந்திருக்க,​​ அரங்கன் அவரை மீட்டாரென்பது வரலாறு

*********

இந்தக் கதைகளை நான் பக்தியாளர், நெறியாளர் ஐயா இராம கோபாலன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். ஏனெனில் அவர் தான் நாத்திகர் அண்ணாதுரைக்கு கோவிலில் வைத்து மரியாதைச் செய்வதை தார்மீக ரீதியில் எதிர்த்து,

அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?: ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பினார்

15 செப்டம்பர், 2011

க்ளவுட் கம்யூட்டிங் - எளிய அறிமுகம் !

கணிணி தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மாறுதல் அடைந்தே வருகிறது, அதற்கான காரணங்களில் முதன்மையானது

போட்டித் தன்மை மிக்க உலகில் வேலையை விரைவாக முடிப்பது மற்றும் குறைந்த செலவில் சேவையை தருவதும் பெறுவதும் ஆகும், இந்த இரண்டு காரணங்களினால் வாடிக்கையாளர்களை தம் வசம் வைத்திருக்க நிறுவனங்கள் விரும்புகின்றன, அதற்காக தொழில் நுட்பங்களை ஆராய்ந்து அவ்வப்போது புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றனர். 'போன் என்றால் பேசுறதற்கும் மட்டும் தான்' என்ற நிலையில் அலைபேசி நிறுவனங்கள் செயல்பட்டு அதில் பல்வேறு வடிவம் அமைப்பு வசதிகளை வைத்து அலைபேசி நிறுவனங்கள் இயங்கிவந்தன, குறிப்பாக நோக்கிய 2006 வரை சக்கைப் போடு போட்டது, பின்னர் வந்த ஆப்பிள் நிறுவனம் 'ஸ்மார்ட் போன்' எனப்படும் ஆப்பிள் மொபைலை அறிமுகப்படுத்தி பல்வேறு செல்பேசி நிறுவனங்களை மூட வைத்தது, 'உள்ளங்கையில் உலகம்' என்பதை ஆப்பிள் நிறுவனம் நிருபனம் செய்த பிறகு பல்வேறு செல்பேசி நிறுவனங்களும் 'போன் என்பது பேசுவதற்கு மட்டும் அல்ல' என்பதாக தற்போது வியாபாரங்களில் கடைவிரித்திருக்கின்றன. இருந்தாலும் ஆப்பிளின் தரத்திற்கு பின்னால் தான் அவர்கள் வருகிறார்கள். நோட்புக் எனப்படும் மடிக்கணிணிகள் கூட அலுவலகம் தவிர்த்து வெளியில் எடுத்துச் செல்வோர் வாங்குவது குறைந்து அந்த இடத்தில் புதிய மிண்ணனு பலகைகள் (ஸ்மார்ட் PAD) பிடித்துக் கொண்டுள்ளன. தற்போது பல்வேறு நிறுவனங்கள் 'ஆண்ட்ராய்ட் செயலி' பயன்படுத்தி பலகைகளை தயாரித்து விற்கிறார்கள், மின்னனு பலகையிலும் ஆப்பில் நிறுவனமே முன்னனியில் நிற்கிறது, காரணம் அது போன்ற பலகைகள் ஏற்கனவே விற்பனையில் இருந்தாலும் ஆப்பிள் போனின் நீட்சியாகவும் அதே தொழில் நுட்பத்திலும் இருப்பதால் ஆப்பிள் நுறுவன பலகைகளே பயன்படுத்த எளிது என்ற வகையில் பலகை விற்பனையிலும் முன்னனியில் உள்ளது. சரி அதற்கும் க்ளவுட் கம்யூட்டிங்க் என்பதற்கும் தொடர்பு என்ன ?

குறிப்பிட்ட சிம்கார்ட் (தனிப்பட்ட தகவல் அட்டை) வர்சன் ஏற்றுக் கொள்ளத் தக்க செல்பேசி மாடல்களில், அந்த சிம்கார்ட் எந்த மாடல் / எந்த நிறுவன செல்பேசியிலும் பொறுத்திப் பேசலாம், அதாவது செல்பேசிகளின் விலைக்கும் சிம்கார்டிற்கும் தொடர்பு இல்லை. அதே போன்று அடிப்படை மின்சாரம் என்பது வீட்டில் இருக்கும் அனைத்து மின் சாதனங்களுக்கும் பொதுவானவை, சிலமாற்றிகள் மூலம் ஒரே மின்சாரத்தைத் தான் அனைத்து மின்சாதனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. தற்போதைய கணிணி ஹார்ட்வேர் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு தான் மென்பொருள் வடிவமைக்கப்படுகிறது, குறிப்பாக பழைய மாடல் கணிணியில் பழைய மென்பொருள் இயங்கும் ஆனால் புதிய மென்பெருள் இயங்காது, இதை லீகசி சாப்ட்வேர் என்பர், நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்களுக்கு உடனடியாக மாறாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய மென்பொருள் புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு இருப்பதில்லை என்பதால் தான். மேலும் ஒவ்வொரு தொழில் நுட்ப மாற்றத்தின் போது பயனீட்டாளர்கள் அல்லது பயன்படுத்துபவர்களுக்கு பயிற்சி கொடுத்தாகவேண்டும் பெருள் செலவு மிகுதியாகப் பிடிக்கும்.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் பலகைகள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு பொதுவாக அலுவலகத்தில் பயன்படுத்தும் மென்பொருள்களை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை, காரணம் அவற்றின் தொழில் நுட்பங்கள் வேறுவேறானவை. இந்த சூழலில் மடிக்கணி, அலுவலகக் மேசைக் கணிணி மற்றும் ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றில் இயங்கக் கூடிய ஒரே தொழில் நுட்பம் வடிவமைக்க முயற்சித்து இன்றைய இணைய வேகத்தின் நீட்சியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதே க்ளவுட் கம்ப்யூட்டிங்க் எனப்படும் புதிய கணிணி தொழில் நுட்பம். இது ஏற்கனவே இருந்த வெப்பேஸ்ட் அப்ளிகேசன்' என்பதன் நீட்சி தான் என்றாலும். அதைத் தாண்டிய பயனீடாக பல்வேறு மென்பொருள்களை இயக்கிக் கொள்வதுடன் அவற்றை கணிணி அல்லது கைபேசியில் நிரந்தரமாக நிறுவத் தேவை இல்லை என்பதை க்ளவுட் கம்யூட்டிங்க் நுட்பம் சொல்கிறது,

இதன்படி எக்சல், வேர்ட், பவர் பாயிண்ட் எழுதி மென்பொருள் போன்றவையும் ஆட்டோகேட், போட்டோ ஷாப் போன்ற வரைவு மென்பொருளையும் ஒருவர் பயன்படுத்த அவற்றை நிறுவிக் கொள்ளத் தேவை இல்லை என்பது தான் இதன் சிறப்பு. டேட்டா சென்டர்கள் எனப்படும் சேவைக்கணிக் கூடங்களில் தேவையான அனைத்து மென்பொருள்களும் நிறுவப்பட்டு, Pay By Service என்ற அடிப்படையில்
தேவைப்படுவர்கள் தங்கள் கணிணியின் இணைய உலாவி வழியாகவே அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும், மேலும் பயனீட்டாளர் பயன்படுத்தும் கணிணிகள் எந்த வகை தொழில் நுட்பம் இருந்தாலும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும், கணிணிகள் அல்லாது ஸ்மார்ட் போன்கள் மற்றும் பலகைகள் வழியாகவும் அந்த மென்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதனால் பயன் என்ன ?

ஒவ்வொரு மென்பொருளுக்கும் லைசன்ஸ் (உரிமம்) வாங்கத் தேவை இல்லை, அவற்றைப் பயன்படுத்த ஆண்டு / மாத / மணித்துளிகளுக்கான சந்தா செலுத்தினாலே போதும், இவை உரிமப் பெற கொடுத்த விலையைவிட பல்மடங்கு குறைவானது, எடுத்துக்காட்டுக்கு ஒருவர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் வாங்க 8000 ரூபாய் செல்வளிக்கிறார் என்றால் க்ளவுட் சேவை வழியாகக் கிடைக்கும் அதே சேவைக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவாக செலுத்தினாலே போதும் (இது வெறும் உதாரணம் தான்)

குறிப்பாக இந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் இதை என்ன செய்து விற்பனை செய்கிறார்கள் என்றால் இதற்கு மறுபெயர் க்ரீன் கம்யூட்டிங். இந்த தொழில் நுட்பம் பயனீட்டாளர்களின் ஹார்ட்வேர் தேவைகளை வெகுவாகக் குறைக்கிறது, அதாவது நீங்கள் மிகப் பெரிய சேமிப்பு அளவு உள்ள ஹார்ட் டிஸ்க் வாங்குவதைத் தவிர்க்கலாம், அல்லது பயன்படுத்தும் மென்பொருளுக்கும் ஏற்ற ஹார்ட்வேர்கள் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். அதாவது ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒருவர் இரண்டாவதாக மடிக்கணிணி வாங்கத் தேவை இல்லை. இதன் மூலம் பயன்படுத்திய எலக்ட்ரானிக் கழிவுகள் வெகுவாக குறையும் என்கிறார்கள்.

தற்போது இணையத்தின் விரைவு (ஸ்பீட்) முன்னேற்றத் தொழில் நுட்பங்களால் அனைத்தும் இணைய வழியான சேவையாக மாறிவருகிறது, விரைவில் டிஸ் ஆண்டனாக்கள் மற்றும் செட்டப் பாக்ஸுகள் ஒழிந்துவிடும் என்றே நினைக்கிறேன். விரைவில் உலக தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் இணைய வழியாகவே கிடைக்குமாறு தொழில் நுட்ப முன்னேற்றம் ஏற்படும், அப்போது எங்கும் எப்போதும் எவரும் தொலைகாட்சிகளில் விருப்ப சேனல்களைப் பார்க்க முடியும்.

க்ளவுட் கம்ப்யூட்டிங்க் நிறுவனங்களை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகளில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரே தளத்தில் தனது நிறுவனம் தொடர்பான அனைத்து பணிகளையும் இணைத்துக் கொண்டு செயல்பட முடியும் என்கிறது இந்த புதிய தொழில் நுட்பம், ஏற்கனவே வெப் பேஸ்டு அப்ளிகேசன் எனப்பட்டவைகள் இருந்தாலும் அவை அனைத்தும் கணிணி மற்றும் அதில் இயங்கும் மென்பொருளைச் சார்ந்தே இயங்கி வந்தது, க்ளவுட் கம்யூட்டிங்க் அந்த குறையை தவிர்க்கும் விதமாக அனைத்து வகை ஹார்ட்வேர் நுட்பங்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக உள்ளது. நாம் வாங்கும் கணிணி குறைந்த செயல்திறன் மிக்கதாக இருந்தாலே போதும் என்ற அளவில் க்ளவுட் கம்யூட்டிங்க் நுட்பம் அதற்கு கைகொடுக்கிறது.

இதிலும் சில குறைகள் உண்டு, தன்னுடைய நிறுவன தகவல்கள் பாதுகாப்பாக இருக்காது என்று அச்சம் தெரிவிக்கின்றனர் நிறுவன உரிமையாளர்கள், ஆனாலும் இந்த பாதுகாப்புக் குறைபாடு அவர்களுக்கும் அவர்கள் எடுத்திருக்கும் டேட்டா சென்டரின் சேவைத் தரத்திற்கும் உள்ள பிரச்சனை தான் அவை.

டேட்டா சேமிப்பு எனப்படும் தகவல் சேமிப்புகளை க்ளவுட் கம்யூட்டிங்க் வழங்கும் சேவை நிறுவனங்களே கவனித்துக் கொள்கின்றன என்பதால் கணிணி பழுதடைந்து பயனற்றதாகப் போனாலும் அவற்றை வேறொரு கணிணி / ஸ்மார்ட் போன் வழியாக பயன்படுத்தமுடியும். தற்போது மின் அஞ்சல் மற்றும் இணையப் பக்கம் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு மட்டுமே பிற டேட்டா செண்டர்களில் நிறுவனங்கள் கணக்கு வைத்திருக்கின்றனர், விரைவில் தங்களது பணித் தொடர்பான அனைத்து மென்பொருள்களின் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளத் துவங்குவர்.

இது பழைய தொழில் நுட்பம் சிந்தனை தான் என்றாலும் இதனை செயல்படுத்த விரைவான வேகம் கொண்ட இணையம் தேவைப்பட்டது, தற்போது பைபர் (மென்னிலை) இண்டர்நெட் வசதிகளினால் 300 மெகபைட் அளவுக்குக் கூட இணைய வேகம் வாய்ப்பாகி இருப்பதால் தற்போது க்ளவுட் கம்யூட்டிங்க் தொழில் நுட்பம் பரவிவருகிறது

*****

அதற்கு ஏன் க்ளவுட் கம்யூட்டிங்க் என்ற பெயர் வந்தது ? க்ளவ்ட் என்பது இணையத்தைக் குறிப்பிட பயன்படுத்தும் மற்றொரு சொல்லாம் அவ்வளவு தான். இண்டர்நெட் வழியாக / பயனாக வழங்கப்படும் தொழில் நுட்பம் என்பதே அதன் பொருள்.

இந்த நுட்பம் முழுமையான செயல்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம், முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் போது உரிமம் முறையில் மென்பொருள் விற்பனை செய்யும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் குறையும்.

இது தொடர்பான விக்கிப்பீடிய ஆங்கிலக் கட்டுரை.

8 செப்டம்பர், 2011

தங்க ஏ(மா)ற்றம்.....!

அமெரிக்க நாணயம் மதிப்பு இழந்துவருவதால் தங்கத்தில் முதலீடே பாதுகாப்பானது என்கிற நடைமுறைக்கு உலக மக்கள் மாறியுள்ளனர், இதன் காரணமாக தங்கம் விலையும் தாறுமாறாக உயரத் துவங்கிச் சென்று கொண்டு இருக்கிறது. 2000 ம் ஆண்டும் 16 வெள்ளிக்கு (அப்போது 1 வெள்ளி - 26 ரூபாய்) விற்ற கிராம் தங்கம் இன்றைய நிலையில் கிராம் ஒன்றுக்கு 70 - 72 வெள்ளி (தற்போது ஒரு சிங்கப்பூர் வெள்ளி 38 ரூபாய்). கிட்டதட்ட கிராமுக்கு ரூ 2500க்கும் மிகுதி. இது 916 எனப்படும் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலை, தூயத்தங்கம் இன்னும் விலை மிகுதி.

சிலவாரங்களாகவே செய்திகளில் நகைக்கடைகள் கொள்ளைப் போவது வாடிக்கையாகக் காட்டுகிறார்கள், நகைக்கடைகள் மட்டுமல்லாது நகையை அடகு வைக்கும் அடகுக் கடைகள் கூட கொள்ளைப் போகிறதாம்.

தமிழகத்திலோ, இந்தியாவிலோ வாங்கிய தங்கங்கள் பெரும்பாலும் விற்கப்படுவதில்லை, தற்காலிகமாக அடகு வைத்து கடன் பெற்று பின்னர் மீட்கிறார்கள். ஆனால் ஜப்பான் (டோக்கியோ), தாய்லாந்து (பேங்காக்) போன்ற நகரங்களில் தங்கத்தின் விலை உயர்வு உச்சமாக கருதப்பட்டு தன்னிடம் இருக்கும் பொட்டு நகைகளைக் கூட விற்க வருகிறார்களாம் பொது மக்கள், தங்கத் துகள்களை அரித்து எடுக்கும் வேலைக்கும் பலர் செல்கிறார்களாம். அதானால் நாள் ஒன்றுக்கு 100 டாலர் முதல் 1000 டாலர் வரை அவர்களால் ஈட்ட முடிகிறதாம்.

இன்னொரு புள்ளீவிவரமாக சொல்லுகிறார்கள் மறுவிற்பனை தங்கம் சென்ற ஆண்டின் 30 விழுக்காட்டை ஒப்பிட இந்த ஆண்டு வெறும் 5 விழுக்காடு தானாம், இதற்குக்காரணம் இன்னும் கூட விலை உயரலாம் என்று காத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகுதியாம்.

தங்கம் தொடர்பான வழிப்பறிகள், கொள்ளைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன, துபாய், மொரோக்கோ, தென்னிந்தியா நகரங்களில் தங்கம் கொள்ளைப் போவது நாள் தோறும் தொடர்கிறதாம். தங்கச் சங்கிலி பறிப்பு அமெரிக்கா, சீனா , இங்கிலாந்து, இந்திய நாடுகளில் நடக்காத நாளே இல்லை. வடக்கு வியட்நாமில் தங்க நகைக்கடைக்காரர் குடும்பத்தையே கொலை செய்திருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த முதல் ஆறுமாதத்தில் மட்டுமே 183 முறை ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களால் கொள்ளை நடந்துள்ளது. தங்கம் முதலீட்டுக்கு எவ்வளவு பாதுகாப்பானதோ அந்த அளவுக்கு கொள்ளைக்காரர்களுக்கு அது சொர்க்கவாசலின் கதவு போன்றது என்கிறார்கள்,



ஒரு சின்னக் கணக்கு: என் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியின் (24 கேரட்) சின்ன தங்க டாலர் 2.5 கிராம் பழையதாகிப் போனதால் கொக்கி அறுந்து விட்டது, அதை நான் பத்தாண்டுக்கு முன்பு வாங்கும் போது 45 வெள்ளிகள், சரி அதே எடைக்கு புதிதாக மாற்றலாம் என்று வாங்கினால் எனது பழைய டாலரை 150 வெள்ளிக்கு எடுத்துக் கொண்டு புதியதை 225 வெள்ளிக்கு கொடுத்தார்கள், அதாவது நான் கையில் இருந்து 75 வெள்ளிகள் கொடுத்தேன்.

இப்ப திரும்பவும் விற்றால் எனக்கு 150 வெள்ளிகள் தான் கிடைக்கும், இந்த 150 தில் ஏற்கனவே கையில் இருந்து கொடுத்த 75 கழித்தால் எனக்கு மீதம் கிடைப்பது 75 தான், அத்துடன் பழைய விலை 45 ஐ கழிக்க நான் பத்தாண்டு இந்த டாலரை வைத்திருந்ததால் கிடைப்பது வெறும் 30 வெள்ளிகள் தான். ஆனால் இன்றைய விலை 225 என்பது பழைய விலை 45 ஐ விட 5 மடங்கு அதிகம். எனக்கு கிடைப்பது 3.3 மடங்கு அதுவும் மாற்றி வாங்காமல் இருந்தால் மட்டுமே. மாற்றி வாங்கினால் சொற்ப லாபமே. நகை விலை உயர்வினால் விற்பவர்களை விட, அதனை வாங்கும் கடைக்காரர்களுக்குத் தான் கொள்ளை லாபம்.

இணைப்பு : AsiaOne

7 செப்டம்பர், 2011

பயன்பாட்டில் இல்லாத தமிழ் குறியீடுகள் !

உயிர், மெய், உயிர்மெய் மற்றும் ஃ எழுத்து, ஃ - இதை ஆய்தெழுத்தென்பர், மேலும் ஃ - இதற்கு தனிநிலை, அஃகேனம், முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு. ப்பதை தவிர்ப்பது தமிழ்த் தூய்மையை மேலும் பேணும் என்பது எனது பரிந்துரை. இருந்தாலும் இக்கட்டுரையானது ஃ குறித்தது அல்ல. மேற் கூறியபடி தமிழில் 247 குறியீடுகள் இருந்தாலும் அடிப்படை 12 + 18 + 1 ஆக 31 எழுத்துகள் தாம், அவற்றில் உயிரெழுத்து குறில் நெடில் ஆங்கிலம் உட்பட சிலமொழிகளில் ஒன்றாகவே இருக்கிறது, அம்மொழிகள் சொற்களுக்கான ஒலிகள் இப்படித்தான் ஒலிக்க வேண்டும் (Pronounceable) என்று இலக்கணம் வைத்திருக்கிறார்கள், குறில் நெடில் தனித்தனியாக அமைந்திருப்பதால் எழுத்தொலிகளை அறிந்து கொள்ளும் எவரும் தமிழ் சொல்லை எளிதாகப் படித்துவிட முடியும் என்பது தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் இருக்கும் சிறப்பு. ஒரு மொழிக்கு குறைவான எழுத்துகளோ அல்லது மிகுதியான எழுத்துகளோ அம்மொழிக்கு தனிப்பட்ட சிறப்பை வழங்கிவிடாது, மொழியின் சிறப்பென்பது பிற மொழிக்கலப்பின்றி தனித்தியங்குவதையும் அதன் இலக்கிய / இலக்கண வளங்களையும் சார்ந்ததே.

ஓலைச் சுவடிகள் வழியாகவும், கல்வெட்டுகளிலும் எழுதும் காலத்தில் எழுதுவதென்பது எளிதான ஒன்று அல்ல, எனவே முடிந்த மட்டில் சொற்களை குறைத்து எழுதுவதென்பது மிகத் தேவையான ஒன்றாக இருந்தது, 20 ஆண்டுகளுக்கு கூட முன்பு மிக விரைவாக எழுதுவதற்கென்றே சுறுக்கெழுத்து (குறியீட்டு) எழுத்து பலமொழிகளுக்கும் இருப்பது நாம் அறிந்தது தான், அலுவலக கூட்டங்களின் போதும், உரிமையாளர் சொல்லுவதை வைத்து விரைவாக எழுத குறியீட்டு எழுத்துகளை செயலர்கள் / செயலாளர்கள் (stenographer) அறிந்திருப்பர், தற்போது அவை தேவை இல்லை ஏனென்றால் சிறிய அளவு ஒலிவாங்கியின் (MP3 Recorder) மூலம் தகவல் பெற்று அதைக் கேட்டு தட்டச்சில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது மின்னனுயியலின் முழுப் பயன்பாட்டிற்கு முன்பான காலத்தில் சுறுக்கெழுத்து என்பது பல்வேறு மொழிகளுக்கும் இன்றியமையாதவையாகவே இருந்தன.

ஓலைச்சுவடிகாலத்தில் சுறுக்கெழுத்து என்பது பரவலாகப் பயன்படுத்தாவிடிலும் நாள், திங்கள், ஆண்டுகளைக் குறிக்க குறியீட்டுச் சொற்கள் புழக்கத்தில் இருந்தன, சோதிடர்கள் மற்றும் நிலப்பத்திரம் வரைபவர்கள் தேதி(திகதி>திதி>தேதி - இது தான் ஆங்கிலத்திலும் Date என்பதன் மூலம், Old French dade) குறித்த விவரங்களுக்கு குறியீடுகளைப் பயன்படுத்துவர்.

நாள் அல்லது திகதி - ௳
திங்கள் அல்லது மாதங்களைக் குறிக்க - ௴
ஆண்டு அல்லது வருடங்களை குறிக்க - ௵

எண்கள் 1,2,3,4,5,6,7,8,9,10,100,1000 முறையே
௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯,௰,௱,௲

நடைபெறும் திருவள்ளுவர் ௵௧௯௭௧ , தை ௴ ௧௨ என்பது திருவள்ளுவர் ஆண்டு 1981 (ஆங்கிலத்தில் 1950) தை திங்கள் 12 ஆம் நாள் ஆகும். (தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது), திருவள்ளுவர் ஆண்டு அறிமுகம் இல்லாத காலத்தில் விக்ரம ஆண்டு (சாலிவாகன சகாப்தம் என்பார்கள்) முறையில் எழுதப்படும்.

'அ' னாவுக்கு முன்னாடி எழுத்து என்ன ? என்று எனது தந்தையார் சிறுவயதில் புதிராகக் கேட்பார், விழிக்கத் தான் நேரிடும், பிறகு அவரே சொல்லுவார், 'அ' னாவுக்கு முன்னாடி எழுத்து 'எ' என்று கூறி தமிழ் எண்களைக் குறிப்பிடுவார் . அப்படித்தான் எனக்கு ஒரளவு தமிழில் எண்கள் குறித்த குறியீடுகள் அறிமுகம் ஆகி இருந்தன.

அது தவிர்த்து பிற குறியிடுகளும் நில ஆவணங்கள் எழுதும் போது பயன்பட்டு வந்தது, மேற்படி நில உடைமை தாரர் என்னுமிடத்தில் மேற்படி என்றச் சொல்லைக் குறிக்க ௸ யை பயன்படுத்தினர், மேலும் எண்ணைக் குறிக்க தற்காலத்திலும் ஒரு சில இடங்களில் (சிங்கையில் மின் தூக்கிகளினுள், பழுது ஏற்பட்டால் அழைக்க வேண்டியது ௺ 1800-XXXXXXXX) எண் என்பதன் சுறுக்கமாக ௺ பயன்பட்டுள்ளது. மேலும் வரவு செலவு குறியீடுகளாக ௷ வரவு என்பதாகவும் ௶ செலவு என்பதற்கும் பயன்பட்டு வந்தது. ௫ - ரூபாய் நாணாயக் குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டது.

இவைகள் ஏன் மறைந்து போனது ? சோம்பலா ? குறியீடுகளில் எழுதுவது எளிது விரைவானது என்றாலும் அச்சு ஊடகங்கள் ஏற்பட்ட காலத்தில் இவற்றின் புழக்கம் வெகுவாகக் குறைந்தது, காரணம் அவை தாள்களில் அச்சடிக்கப்படுவதால் தாள்களின் விலைக் குறைவு மற்றும் சுறுக்கத்தைவிட சொற்களாக எழுதுவதே எளிதாகப் புரியும் மேலும் குறியீடாக எழுதுவதன் எல்லைக் கோடுகளான எழுத்தாணி (ஓலைச்சுவடி) அழுத்தம், உளி(கல்வெட்டு) அழுத்தம் ஆகியவை அச்சுக் கோர்பின் போது இல்லை. அச்சுக்கோர்ப்பு முறை மாறி தற்போது கணிணி வழியாக எழுத்துகள் நகல் எடுக்கும் போது பழைய குறியீடுகளின் தேவை என்பது கிட்டதட்ட தேவையற்றது என்றாகிவிட்டது.

குறியீடுகளை மீட்டுப் பயன்படுத்தலாமா ? என்னைக் கேட்டால் தேவை இல்லை என்றே சொல்லுவேன், தற்போது கணிணியில் தட்டச்சவோ, தாள்களில் நகல் எடுக்கவோ எழுத்துக் குறைப்பிற்கான, குறிகளுக்கான தேவை மிகவும் வேண்டியதாக இல்லை. குழந்தைகளுக்கு அந்த பழைய குறியீடுகளை அறிமுகப்படுத்தி பாடச் சுமையை ஏற்றுவதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை.

மேலும் தமிழ் எண் குறியீடுகளிலும் இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறேன், வழக்கத்தில் இருக்கும் 0 முதல் 9 வரையிலான எண் குறியீடுகள் கிட்டதட்ட தமிழ் வட்டெழுத்து வடிவத்தையே கொண்டிருக்கிறது, அவற்றை நாம் வாக்கியங்களில் பயன்படுத்தும் போது அவை பிறமொழி எழுத்துகளாக நினைக்கப்படுவதும் இல்லை, மேலும் பழைய எண்களை மறு அறிமுகம் செய்து, இன்று முதல் என்பதாக அனைத்து தரப்பு தமிழர்களையும் படிக்கச் சொல்லுவது என்பது இயலாத ஒன்று, இந்தியா தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் ஒரே ஒரு புதிய நாணயக் குறியீட்டையே உடனடியாக உள்வாங்கக் கடினமாக இருக்க தமிழ் எண்கள் ௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯,௰ மனப்பாடம் செய்து பயன்படுத்துவது / படிப்பது தமிழில் எழுதிப்பழகாதவர்களுக்கு (படிப்பு முடித்து வேலைக்குச் சென்றவர்கள்) எளிதும் அல்ல.

தமிழகம் தவிர்த்த பீற மாநிலங்களின் அம்மாநில மொழி எழுத்துகளை இயல்பாகப் பயன்படுத்துகின்றனர், நமக்கு அந்த மாற்றம் திணிக்கப்படாமல் மெதுவாக ஏற்பட்டு, குறிப்பாக நாளிதழ்கள் வார இதழ்களின் மீள் அறிமுகப்படுத்தப்பட்டு வழக்கிற்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்கலாம்.

சீன மொழி எழுத்துகளின் எண்ணிக்கையை ஒப்பிட தமிழ் எழுத்துகள் மற்றும் குறியீடுகள் அவற்றில் ஐந்து விழுக்காடு கூட இல்லை. தமிழின் தனித்தன்மை பேண தமிழ் எண்களை மீள் பயன்பாடாக பயன்படுத்தத் துவங்கலாம். அதனால் பழைய புத்தகங்களை மீள் பதிப்பு செய்ய எதுவும் தடங்களும் இல்லை எனெனில் ஆங்கிலத்துடன் இன்றைய எண் முறைகளையும் சேர்த்தே தான் படித்துவருகிறோம், அவை பழைய புத்தகங்களில் இருக்கும் போது, அவற்றை புதிதாகப் படிப்பவர் எவரும் புரிந்து கொள்ள இயலாது என்று சொல்லவும் இயலாது.


இணைப்புகள் :
தமிழ் எழுத்துகள்
தமிழ் எண்கள்

6 செப்டம்பர், 2011

தலயின் தறுதலை - மங்காத்தா !

திரைப்படம் என்பது பொழுது போக்கு சார்ந்தது தான், மக்களின் வாழ்வியலுக்கு பாடம் நடத்துபவை அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது மங்காத்தா குழு. கதை நாயகன் திறன் படைத்தவனாக இருந்தால் போதும் நல்லவனாக இருப்பது தேவையற்றது என்று காட்சிக்கு காட்சி சொல்லி நகர்த்தி இருக்கிறார்கள், நாயகனின் பெண்கள் மீதான தொடர்பு காமம் அல்லது தன் நலம் சார்ந்த ஒன்றாகவே காட்சிகள் நகர்கின்றன. படம் முழுவதும் மது மற்றும் சிகெரெட் புகை. அன்புமணி ராமதாஸ்கள் ஏன் இன்னும் போர்கொடித் தூக்க வில்லை என்று தெரியவில்லை. பணத்தின் மீதே குறி கொண்ட ஒருவருக்கு ஒழுக்கங்கள் எதுவும் இருக்காது என்பதாகத்தான் காட்சிகள் அதை ஞாயப்படுத்துகின்றன. படம் முழுவது டிஸ்யூம் டிஸ்யூம் துப்பாக்கிச் சண்டை, இறைச்சல்.

புலிவேசம் படம் செட்டியார்களை அவமானப்படுத்துகிறது என்று போர்கொடித் தூக்கிய செட்டியார் சமூகம், இங்கு ஒட்டுமொத்தமாக கோவணம் உருவப்படுவதை கண்டு கொண்டார்களாத் தெரியவில்லை, படத்தில் வரும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை வைத்து தொழில் செய்யும் புக்கியாக செட்டியார் வருகிறார், படமும் அவர் அரசை ஏமாற்றி சூதாட்டப்பணத்தை பிரித்துக் கொடுப்பவராகத்தான் காட்டுகிறார்கள், பெரும்பாலும் சமூகவிரோதிகள், அரசை ஏமாற்றுபவர்கள், தீவிரவாதிகள் என்பதற்கு ரெடிமேடாகவே முஸ்லிம் பாத்திரம் ஒன்றை கதைகளில் வைத்திருக்கும் திரை உலகம், இதில் ஒரு முஸ்லிம் இளைஞரை செட்டியாரின் அடியாளாகக் காட்டுகிறது.

ஆகஸ்ட் 15ல் பிறந்ததற்காக தேசப் பக்தி படங்களாக நடித்துத் தள்ளிய அர்ஜுன் போலிஸ் அதிகாரியாக வந்து கொள்ளைப் பணத்தில் பங்கு பிரிக்கும் அஜித்தின் நண்பர் என்பதை இறுதிக்காட்சியில் சொல்கிறார்கள், அர்ஜுனின் தேசபக்தி கோவணம் முற்றிலுமாக அவிழ்ந்து தொங்குகிறது, பணத்திற்காக நண்பர்கள் அடித்துக் கொள்வதாகவும் துரோகம் செய்வதாகவும், காதலியை ஏமாற்றுவதாகவும் காட்டிய படத்தில் அர்ஜுன் மற்றும் அஜித் நல்ல நண்பர்கள் என்று சொல்லி அவர்களின் திட்டபடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு, ஸ்விஸ் வங்கியில் பாதுகாப்பு உகந்ததல்ல அதனால் லண்டன் பேங்குகளில் பணம் போடப்பட்டதாக அர்ஜுன் அஜித்திடம் சொல்லுகிறார். அர்ஜுன் வரும் காட்சிகளெல்லாம் அர்ஜுனின் வேறு படத்தில் இருந்து இந்தப்படத்திற்கு ஊடுறுவி வந்து செல்வது போன்று இருந்தது. பாலியல் வண்புணர்ச்சி காட்சிக்கு மணிரத்னம் முதலியோர் பிரியாமணியை நாடுவது போல் படுக்கை அறையில் கண்ணீர் விடும் காட்சிக்கு அஞ்சலி நல்ல தேர்வு. மற்றப்படி படத்தில் அவருக்கு வேலை இல்லை. ஹாலிவுட் படங்களில் வரும் நாயகிகள் போல் ஆண்டிரியாவும், லட்சுமிராயும் வந்து போகிறார்கள். போக்குவரத்து விளக்குகளை ஹேக் செய்வது உள்ளிட்ட ஹைட்டெக் காட்சி அமைப்பதாக எடுக்கப்பட்ட காட்சிகள் சரியான சொதப்பல்கள்.

மாமனார் - மருமகள் உறவு பற்றிய சொல்லி சிந்துசமவெளி , செல்லவராகவனின் துள்ளுவதோ இளமை ஆகியவை ஒரு சிலரின் எதார்த்தங்களை படமாக்கியது போல் இந்த படமும் தாவூத் இப்ராஹிம் போன்ற பணத்தை குறியாக வைத்து செயல்படும் ஒருவரைப் பற்றிய ஒருவரிக் கதையாக நகர்ந்து முடிகிறது, அழுகாச்சி, செண்டிமென்ட் ஆகியவற்றைப் புறந்தள்ளும் கதைகள் தமிழில் வரத் துவங்கி இருகின்றது. பொழுது போக்குகளில் சமூகம் நலம் என்ற கோட்பாடுகளில் திரப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது போன்ற படங்கள் உவர்பாகத்தான் இருக்கும். பொழுது போக்கு திரைப்படம் என்ற அளவில் ஓகே. கெட்டவனை கெட்டவனாகவே காட்டி முடிப்பது பின் நவீனத்துவா இல்லையா ? இலக்கிய ஆர்வலர்களின் ஆராய்ச்சிக்கு உரியது.

நான் பார்த்த அளவில் இந்தப்படம் நாயகனின் குணம், கதை முடிவு வரை சினிமா மரபுகளை உடைத்துள்ளது. பணத்தீன் மீது வெறி கொண்டு அலைபவர்களின் இலட்சனம் இது தான் என்று காட்ட முயன்று இருக்கிறார்களா ? தெரியவில்லை. நீலப்படங்களில் எதாவது மெஜேஜ் இருக்கும் என்று நம்பினால் இந்தப்படத்திலும் அது போன்று எதாவது இருக்கலாம். அஜித் - அர்ஜுன் இந்தப் படத்தில் நடித்தது துணிச்சலான முடிவு. துப்பாக்கிச் சத்தங்களும், சிகிரெட் புகைகளும், மதுக்கூடமும் உங்களுக்கு பிடித்து இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம். மங்காத்தா ஆடுபவர்களுக்கு பணம் ஒன்று தானே குறிக்கோள், அது தான் படத்தின் கதையும், தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் நோக்கமும், அஜித் பில்லாவுக்கு பிறகான தொடர் தோல்விகளால் துணிச்சலாகவே இப்படத்திற்கு மங்காத்தா ஆடி வெற்றி பெற்றுள்ளார். மரண தண்டனைக்கு எதிராக 'விருமாண்டி' படத்தில் கூவிய கமலஹாசன், மரண தண்டனையை ஞாயப்படுத்தி உன்னைப் போல் ஒருவன் செய்யவில்லௌயா ? எல்லாம் பணத்தை நோக்கிய மங்காத்தாவே. படத்தில் பஞ்சு வசனத்திற்கு அடிமையாகும் ரசிகர்கள் தான் புரிந்து கொள்வதில்லை,.

நான் எவ்ளவு நாளைக்குத்தான் நல்லவனாக இருப்பது திமுகவினரால் நெருக்கடிக்குள்ளான அஜித் தயாநிதி அழகிரி தயாரிப்பிலேயே அதை நொந்து வெளிப்படுத்தி இருப்பதற்கு பாராட்டுகள். தலை தறுதலையாகவே நடித்திருக்கிறார்.

சரோஜா படத்தைப் போலவே ப்ளாஸ் பேக்கில் படம் முழுவதையும் மாற்றிச் சொல்வது வெங்கட் பிரபுக்கு இது இரண்டாவது படம், இனி தொடர்ந்தால் பல்பாகத் தான் அமையும்.

1 செப்டம்பர், 2011

இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள் !

முன் எப்போதும் இல்லாத ஒரு காலத்தில் மாண்டுகன் என்ற ராட்ஷதன் வாழ்ந்து வந்தான், அவன் பல பராக்கிரமங்களைப் பெற்று இருந்தான். மிகவும் துஷ்டன், மஹா கிராதகன், அவனுக்கு மூன்று லோகத்தையே ஆளவேண்டும் என்ற பேராசை அவா எழுந்தது, அதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா ? மூவுலகையும் கைப்பெற்றும் உபாயம் யாது ? என்று கேட்டு காட்டில் கடும் தவம் செய்த ரிஷிகளையெல்லாம் கட்டித் தூக்கி வந்து கட்டிப் போட்டு, உபாயம் சொல்லாதவர்களின் தலைக்கு தீ வைத்தான், எவருக்கும் மூவுலகை கைப்பற்றும் உபாயம் தெரியவில்லை, முனிவர்கள் கண்கலங்கினார்கள், அந்தக் கொடுமைகளையெல்லாம் ஆகாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நாரதர், 'நாராயணா நாராயணா லோகத்தில் கலி முத்திடுச்சு.......நாம தான் இந்த சண்டாளனை ஒழிக்க வழிதேடனும்' என்று புறப்பட்டார்

"நாராயணா மாண்டுகனின் அட்டகாசம் பார்த்தீர்களா ? அஜித் படம் அட்டகாசமே நான் பார்க்கல, மாண்டுகன் வேற சினிமாவெல்லாம் நடிக்கிறானா ? என்று குதர்கமாக கேட்காமல் நாரதா, நானே நரகாசுரனை அழித்த நரக வேதனையாக ரொம்பவும் சோர்வாகி படுத்துருக்கேன், என் மச்சான் சிவபெருமானை வேண்டுமானால் பாரேன் என்று பொறுப்பாக பதில் சொன்னார், பகவானாச்சே.....!

அதற்குள் அந்த மாண்டுகன் பிரம்மரிஷி என்னும் ஜடாமாமுனியிடம் உபாயம் கேட்டு, சிவபெருமானை நோக்கி 300 ஆண்டுகள் தவம் முடித்து இருந்தான், அவன் தவத்தை மெச்சிய சிவபெருமான், பக்தா என்ன வரம் வேண்டும் கேள், எனக் கேட்க மாண்டுகனும் தந்திரமாக 'விலங்குகளாலும் மனிதர்களாலும் எனக்கு மரணமே நடக்காமல் இருக்க வேண்டும்' எனக் கேட்க, அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு உச்சிக்காலப் பூசைக்குச் சென்றுவிட்டார்.

வரம் பெற்ற மாண்டுகன் விடுவானா ? உடனே இந்திர லோகம் சென்று இந்திரனை துவைத்து எடுத்தான், தேவக் கன்னிகைகள் ரம்பை ஊர்வசி மேனகையை அந்தப்புரத்திற்கு தூக்கிவந்தான், இந்திர லோகம் பிடிப்பட்டது....விண்ணுலகு இந்திரலோகம் மண்ணுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கு நானே அதிபதி என்று கொக்கரித்தான், தேவர்களுக்கு கிலி பிடித்தது, இதனை பாதிவழியில் வந்து கொண்டிருந்த நாரதர் பார்க்க, இறங்கி வந்து அவர்களைத் தேற்றினார்.

அங்கிருந்து புறப்பட்ட நாரதர் கையாலம் வந்து, 'நாராயணா நாராயணா......பெரபோ......சிவபெருமானே நீங்கள் தான் மாண்டுகனிடம் இருந்து மூன்று லோகங்களையும் மீட்டுத் தந்து தேவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினார்.

'வரம் கொடுத்த நான் இனி ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கேன்' என்று கையைப் பிசைய. அவரது கையை இழுத்துக் கிள்ளி, நான் பார்த்துக் கொள்வதாகக் கூறினாள் அன்னைப் பார்வதி.

'அதாகப் பட்டது எனது சக்தியை ஒன்று திரட்டி உங்கள் சக்தியை பூசி மொழுகி, நான் விநாயகரை உருவாக்கப் போகிறேன், அவன் அந்த மாண்டுகனை அழிப்பான் என்று கூறினாள். பகவான் பகவதி எண்ணமாச்சே.... பலிக்காமல் போய்டுமா ? அன்னிக்கு நிறைஞ்ச அம்மாவாசைக் கழிஞ்ச நாலாம் நாள், சதுர்த்தி. மனுசாள் உடம்பு, கஜ முகத்தோடு விநாயகர் பொறந்துட்டார், மனுசனும் இல்லை மிருகமும் இல்லை, மாண்டுகனை அழித்தார், துஷ்டன் ஒழிந்தான் என்று கூறி தேவர்கள் அன்றிருலிருந்து விநாயகரைக் கொண்டாடினார்கள், அதே காரணத்திற்காக பகவானை சேவிக்கிற நாமெல்லாம் இன்னிக்கு விநாயகரைக் கொண்டாடுகிறோம்.



கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

பிகு: இது விஜய் டிவியில் காலையில் பக்தி பார்த்துவருவதன் எஃபெக்ட், விஜய் டிவில யாரோ ஸ்திரி பிராம்ணாள் , நன்னா ஸ்பஷ்டமாக படிச்சுக் கொடுக்கிறா, நன்னா இருக்கு. இந்த பிள்ளையார் கதையை ஏதேனும் புருட புராணத்தில் சேர்த்தால் காஃபி ரைட் பிரச்சனை எதுவும் வராது என்று நான் உறுதி அளிக்கிறேன். ஏன்னா இந்த மேற்கண்ட (மொக்கை) கதையை நான் தான் எழுதினேன்.

சிபிஐயை ஏமாற்றிய ஹிரிதிக்கின் தந்தை !

மேக்ஸிமா, ரமேஷ்கார் இன்னும் எத்தனையோ 24% விழுக்காடு வட்டித் தருவதாக பொதுமக்களிடம் சுருட்டி மூடிக் கொண்ட நிருவன உரிமையாளர்கள் தண்டனைப் பெற்றார்களா என்று தெரியவில்லை. காவல்துறை தண்டனைவாங்கித் தருவதெல்லாம் அமாவாசைத் திருடர்கள், பிக்பாக்கெட் அடிக்கிறவன், ப்ளாக்கில் சினிமா சீட்டு வைக்கிறவன் இவர்கள் தான், இரட்டிபாக்கித் தருவதாக பணமோசடிக் கும்பல்கள் ஆண்டு தோறும் உருவாகுவதும், அதில் பொதுமக்கள் பணத்தை இழப்பதும் வாடிக்கையாகத் தொடர்வதே. இவற்றை துவக்கத்திலேயே கண்டுபிடிப்பதோ, சிக்கியவர்களை தண்டிப்பதோ சட்டப்படி எதுவும் நடைபெறுவதே இல்லை, இந்திய ஊழல் வழக்குகெல்லாம் நீதிமன்றகளில் நீர்த்துப் போகின்றன. ராசாவும் கனிமொழியும் கூட விடுதலை ஆகிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்.....குண்டு. அதாவது சட்டமெல்லாம் சராசரி வருமான பொதுமக்களுக்குத்தான். பணமுதலைகள் சட்டத்தையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.

நேற்றைய ஒரு செய்தி, 'ஹிருத்திக் தந்தையிடம் 50 லட்சம் மோசடி' இவ்ளோ பெரிய பணக்காரன் கூட ஏமாறுகிறானோ ? என்ற ஆவலில் செய்தியைப்
படித்தேன்.

**********

"நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தந்தையிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த 2 போலி சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.


பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன். நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தந்தை. கடந்த 20 வருடங்களுக்கு முன் ராகேஷ் ரோஷன் தயாரித்த ஒரு திரைப்பட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

சமீபத்தில் ராகேஷ் ரோஷனை சந்தித்த 2 பேர் தாங்கள் சிபிஐ அதிகாரிகள் எனவும் மேல்குறிப்பிட்ட வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டு தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 50 லட்சம் தந்தால் அந்த வழக்கை முடித்துவிடலாம் எனவும் கூறினர். இதை நம்பிய ராகேஷ் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சிபிஐ துணை இயக்குநர் ரிஷி ராஜ் சிங்கிடம் புகார் அளித்தார். விசாரணையில் அவர்கள் 2 பேரும் போலி எனத் தெரியவந்தது"

**********

- இதைப் படிக்கும் பொது புத்தி ஹிரிதிகின் தந்தை புத்திசாலித்தனமாக செயல்பட்டதாகத்தான் நினைக்கும், சினிமா பின்புலம், பணக்காரன் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்ற ரீதியில் தான் செய்திகள் சேகரிக்கப்பட்டு, தலைப்பிடப்பட்டு வெளி இடப்படுகின்றன, அந்த ஆவலில் படிக்கும் நாமும் மையச் செய்தியை அவ்வாறே படித்துத் தெரிந்து கொள்கிறோம், அவ்வளவே.

ஹிரிதிக் தந்தை 50 லட்சத்தை லஞ்சமாகக் கொடுக்க முன்வந்து வழக்குகளை முடித்துக் கொள்ள முன்வருகிறார் என்பதும் அதில் இருக்கும் தகவல் தான், இவன் ஏன் என்ன மயித்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க முன்வரனும் ? இவன் அடித்த கோடிகளில் ஒரு பங்காக இந்த 50 லட்சம் இவனுக்கு ஒரு மதிப்பே இல்லை என்பது தான் அதில் இருக்கும் மற்றொரு தகவல், ஹிரிதிகின் தந்தை நேர்மையாளராக இருந்திருந்தால் 50 லட்சத்தின் மதிப்பு உணர்ந்தவர் என்றால் இவர் ஏமாற்றப்பட்டிருப்பார் ?

அல்லது இவரை ஏமாற்ற நடந்த முயற்சி நடந்திருக்குமா ? வாய்ப்பே இல்லை.

நாட்டு நலனில் அக்கரை உள்ள புலனாய்வுத்துரை உண்மையிலேயே ஏமாற்றியவர்களை கைது செய்தது போலவே இவரையும் 'சிபிஐக்கு லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்துக் கொள்ள விரும்பியவர் என்று கைது செய்து இருக்க வேண்டும். ஆனால் சிபிஐ அதிகாரிகள் இவரது செல்வாக்கை வைத்து குற்றவாளிகளை மட்டுமே தேடிக் கண்டுபிடித்து இழந்த பணத்தில் பகுதியை மீட்டுக் கொடுத்திருக்கின்றனர். அன்னா ஹசாரேக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்த ஒரு சட்டமும் தண்டனையும் ஏழைபாழைகளுக்கு மட்டுமேயன்றி அவர்களைச் சுரண்டும் பணக்கார வர்கத்திற்கு கிடையாது.

அரசியல் சட்டங்கள் என்பது பணக்கார வீட்டு நாய்கள் போன்றது

வாழ்க முதாலாளித்துவம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்