பின்பற்றுபவர்கள்

வடமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வடமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஆகஸ்ட், 2014

கணிணிக்கு ஏற்றமொழி என்னும் புரட்டு !

மனிதர்களுக்கு விளங்காது, ஆனால் தேவர்களுக்கு விளங்கும் மொழி அதனால் தான் தேவ பாஷை என்றார்கள், ஆனாலும் வடமொழியை வளர்த்து எடுக்க முடியவில்லை, மனிதர்கள் மனிதர்களோடு உரையாட தேவ பாஷை எதற்கு என்பதாலோ அல்லது அதன் கடின இலக்கண வரையரைகளினாலோ, அண்மைய இலக்கியத்தின் உரைநடை, புதுக்கவிதை போன்ற புதிய உத்திகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத தாலோ, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் ஆங்கிலம் என்கிற பிழைப்பு சார்ந்த மொழியை நாடிய தாலோ வடமொழியை 19 ஆம் நூற்றாண்டில் வளர்த்து எடுக்க முடியவில்லை, எனக்கு தெரிந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புதிய நூல்கள் என்று எதுவுமே வடமொழியில் இல்லை, இருந்தால் தெரிவிக்கவும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன், தற்பொழுது தான் சங்கரமடம் உள்ளிட்ட வடமொழி பற்றாளர்களால் வடமொழியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, புரியாவிட்டாலும் வடமொழி 'ஸங்கீதத்தை' தலையாட்டி ஆட்டி கேட்பது போல் ஒரு கூட்டம், ஒருவேளை சொர்கத்தில் பலன் தரக்கூடும் தேவர்களுடன் பேச பயன்படக் கூடும், தவறவிடக்கூடாது என்று கேட்கின்றனர். 

மற்றபடி அண்மைய கணக்கு எடுப்பின்படி வடமொழி பேசுவர்களின் எண்ணிக்கை 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதுடன், நாளடைவில் அதுவும் குறைந்து பேசப்படாத வெறும் வழிபாட்டு மொழி என்கிற நிலையை அடையலாம், மாறாக பலரும் கூறும் கருத்து வடமொழி என்றைக்குமே மக்களால் பேசப்பட்ட மொழி கிடையாது, அந்த 15 ஆயிரம் பேரும் வேண்டுமென்றே வடமொழியை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தான் பேசுகின்றனர் என்கின்றனர்.

நான் அறிந்த அல்லது படித்து தெரிந்த வரையில் வடமொழிக்கு தமிழுக்கு இருப்பது போன்று பிராமி (தமிழி) எழுத்து பின்னர் வட்டெழுத்து என்று தொன்று தொட்டாக, வரலாற்றின் தொடர்ச்சியாக எழுதும் முறைகள் கிடையாது, திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழுக்கு எழுத்துகள் பயன்படுத்தப்படுவதால் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...' என்று குறளில் எழுத்துகள் பற்றியும் எழுத முடிந்திருக்கிறது, மீன் இலட்சினை சிந்து சமவெளி நாகரீகத்தில் விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தற்கால அல்லது பண்ணெடுங்காலமாக தமிழில் விண்மீனை  வான் மீன் என்ற இடப்பெயர் சொல்லாக மீன் என வழங்கும் வழக்கும் உள்ளது தவிர சிந்துசமவெளி மக்களின் சிவ வழிபாடு திராவிட வழி வந்தவை என்பதாலும் வேறு சில சான்று அடிப்படையில் சிந்துவெளி நாகரீகம் பண்டைய திராவிட நாகரீகம் தான் என்று ஐராவதம் மகாதேவன் மற்றும் ஐரோப்பிய ஆய்வளர்கள் உரைக்கின்றனர்,  திராவிட மொழிப்பிரிவில் ஒன்றான Brahui மொழி பேசுவர்கள் தற்காலத்திலும் சிந்துசமவெளி அமைந்த பாகிதான் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர், வடமொழியில் வேதகாலம் முதலாக / முன்பாக மீன் என்ற சொல் 'மச்ச' என்றும்.  வின்மீன் 'நக்‌ஷத்திர' என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.


அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத மற்றும் ஆண்குறி வழிபாடு என்று சிவ வழிப்பாட்டை வேதங்களினால் பழித்த வடமொழிக்கு சிந்துவெளி நாகரீக தொடர்பு இருக்க கூறுகளே இல்லை என்கிறனர், சிந்துவெளியில் பயன்படுத்தப்பட படக்குறி (சித்ர / Symbol) எழுத்துகளின் தொடர்ச்சியாக திராவிட எழுத்து முறையான பிராமியும், அதே பிராமியில் கூடுதல் எழுத்துக்களுடன் மாற்றம்  செய்து 'அசோகர் பிராமி' பாலி மொழியில் அசோகர் காலத்து கல்வெட்டுகள் எழுதப்பயன்பட்டதாக ஆய்வாளர்கள் கூற்று, முதலில் வடமொழிக்கு எழுத்து முறைகள் தோன்றி அது தமிழுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாமும் 31 எழுத்துகளுக்கு (உயிர், மெய் மற்றும் ஆய்தம்) மாற்றாக 51 எழுத்துகளைத் தான்  பயன்படுத்தி இருப்போம், எனவே தமிழ் பிராமி எந்த மொழியிலும் இருந்தும் பெறப்படவில்லை மாறாக அவை தமிழுக்காக உருவாக்கப்பட்டது என்கிறனர்.

வடமொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்ததே 11 ஆம் நூற்றாண்டுகளில் தான், அதற்கு முன்பு (10 நூற்றாண்டு) வரை குறிப்பாக தஞ்சாவூர் கல்வெட்டுகளில் கூட வடமொழியை தமிழ் எழுத்தில் தான் எழுதி வந்திருக்கின்றனர், விக்கிப்பீடியாவில் வடமொழி தொடர்பான சான்றாவணமாக தமிழ் எழுத்தில் எழுதப்பட்டதைத் தான் காட்டுகின்றனர்,


( இது தற்பொழுது விக்கியில் நீக்கப்பட்டுள்ளது)



அது மட்டும் தான் முதன் முதலில் வடமொழி எழுத்துவடிவாக அமைந்ததற்கான தகவல், பின்னர் தேவநகரி என்னும் (தற்போது உள்ள) எழுத்துவடிவம் 51 எழுத்துகளுடன் அமைக்கப்பட்டு அவற்றை 11 ஆம் நூற்றாண்டுகள் முதல் வடமொழியை எழுதப் பயன்படுத்துகின்றனர். ஒரு பேச்சுக்கு சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வடமொழி / வேத நாகரீகத்திற்கும் தொடர்பு இருந்தால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு எழுத்துகளே இல்லாது போனது ஏன் ? என்று நினைக்க, 'ஸ்மிருதி' அல்லது மனனம் செய்யும் அடைப்படையில் மட்டுமே வடமொழி வழி வழியாக பயிற்று விக்கப்பட்டுவந்திருப்பது தெளிவாகிறது. ஆசிரியர் - மாணவர்கள், பின்னர் அவர்களின் மாணாக்கர்கள் என தொடர்ந்து அவை பாதுக்காப்பட்டது அன்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று அல்ல, வால்மிகிக்கு காலத்தில் ஓலைச் சுவடிகளில் வடமொழியை எழுதி வாய்ப்பிருக்கவில்லை, அதாவது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலத்தில் செங்கற்களில் 'राम' (ராம்) என்று 11 ஆம் நூற்றாண்டில் உருவான எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக காட்டுவதே ஒரு மோசடியும் முரண்பாடானதும் ஆகும், ஸ்வஸ்திக் சின்னம் தவிர ॐ உள்ளிட்டவை தேவநகரி எழுத்து உருவான பின்பு பயன்படுத்தப்படுவையே. வடமொழியின் எழுத்து வரலாற்றின் சுருக்கம் இவை. 

வடமொழி கணிணிக்கு வேறெந்த மொழியைக்காட்டிலும் ஏற்ற மொழி என்றும், அதை நாசா உறுதி செய்துள்ளதாகவும் இணையம் பொதுப்பயன்பாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கட்டுரைகள் குப்பைகளாக குவிந்துள்ளன, இதையெல்லாம் எந்த சுனாமியும் தூக்காது என்கிற இறுமாப்பில் தொடர்ந்து பரப்புகின்றனர், எந்த வகையில் கணிணிக்கு சிறந்தது என்பதற்கு இவர்கள் வடமொழியில் உள்ள வேற்றுமை உருபுகளாக (they call it is vibhakti) காட்டும் சான்றுகள் அனைத்தும் திராவிட மொழிகள் அனைத்திற்குமே பொதுவானது.

அதாவது பெயரெழுத்தின் விகுதியை மாற்றி வரிகள் அமைப்பது

இராமனை அடைந்தனர்,
இராமனால் கொல்லப்பட்டான்,
இராமனுக்கு பசித்தது,
இராமனின் வேண்டுகோள்,
இராமனது வில்
இராமன்கண் விடப்பட்டது
இராமனிடம் வந்து சேர்ந்தனர்,
இராமனே கொன்றான்,
( ஐ, ஆல், கு, இன், அது, கண், இடம் மற்றும் விளி வேற்றுமை)

இதில் கண் வேற்றுமையும்,  இட வேற்றுமையும் தற்போதைய இலக்கணத்தில் ஒன்றாகவே பயன்பாட்டில் உள்ளது,

ஆக எட்டு வேற்றுமைகள் தமிழிலும் உள்ளது. இதே எட்டு வேற்றுமைகள் தான் வடமொழியிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்று பெயர் சொற்களை மாற்றி வரிகள் அமைப்பது கடினம், Belong to Ram > Ram's (இது கூட அண்மையில் ஏற்பட்டவையே) Raamaa feel hungry, Raavana Killed by Raamaa, Raamaa Request... இது போல் இராம் தனித்து மட்டுமே வரும், தவிற ஒவ்வொரு செயலுக்கும் வினைச் சொற்கள் மாறுபடும்m முன்னிலையின் (Subject) விகுதி மாறாது,  இந்த பெயர்ச் சொல் விகுதி மாற்றம் என்னும் வேற்றுமை உருபு இலக்கணம் மட்டும் ஆங்கிலத்தில் மாறுபடுகிறது, இதனால் ஆங்கிலத்தை விட வடமொழி கணிக்கு Object Oriented Program, மற்றும் Class' எழுத மிகவும் பயனுள்ளது, அதனால் கணிக்கு மிகவும் ஏற்ற மொழி என்கிறார்கள். இவர்களுக்கு வடமொழி தவிர்த்து திராவிட மொழியும் அதன் இலக்கண அமைப்பு குறித்து கொஞ்சமும் தெரியாது அல்லது அவற்றை மறைத்துவிட்டு வடமொழியே சிறந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றனர்.

வடமொழியில் ஒன்றின் பால், இரண்டின் பால், பலவின்பால் என்கிற இலக்கண விதிகள் உண்டு, அதாவது, Baaley (குழந்தையினுள் - Singular) , Baalayo (குழந்தையருள் Dual ), Baaleshu (குழந்தைகளுக்குள் Plural), காலப்போக்கில் தமிழில் உள்ள இருமை 'ர்' விகுதி மதிப்புக்காகப் பயன்படுத்துவதால் தந்தையர், தாயார் என்று ஒருமை சார்ந்த விகுதியாவிட்டது,

குழந்தை அழுதது (Singular)
குழந்தையர் அழுதனர் (Dual)
குழந்தைகள் அழுதனர்  (Many / Plural)

ஒன்றிற்கு மேற்பட்டவை பல என்பதால் தற்காலத்தில் திராவிட மொழிகளில் இருமை குறிப்புகள் எழுவாயின் விகுதியாக வருவதில்லை.

மற்றபடி தமிழிலோ, திராவிட மொழிகளிலோ, இருமை விகுதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை, அதுவும் வடமொழிக்கான தனிச்சிறப்பும் இல்லை, பயன்பாட்டில் இல்லாத மொழியின் தனிச்சிறப்புகள் என்பவை வானவில்லின் வண்ணம் போன்றவை அவற்றை எடுத்து வந்து கலந்து சுவற்றில் பூசமுடியுமா ? எனக்கு தெரிந்து வடமொழியில் திராவிட மொழிகளைக்காட்டிலும் அணி இலக்கணங்கள் ஏனெனில் அணி (உவமை அணி, இல்பொருள் உவமை அணி...போன்றவை)  சற்று கூடுதல், அதனால் அது கணிக்கு ஏற்ற மொழி என்று கூற ஒன்றும் இல்லை, அணி இலக்கணத்திற்கும் Computer Program or Object Oriented Program க்கும் எந்த ஆணித் தொடர்பும் இல்லை.

மேலும் 'I Love You' என்பது போன்ற ஆங்கில வரியின் சொற்களை இடம் மாற்றினால் 'You Love I', Love I You' போன்றவை ஆங்கிலத்தில் பொருள் தராது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும், வடமொழியில் எழுதப்பட்டும் வரிகளின் சொற்களை மாற்றினால் பொருள் மாறாது, இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை அதனால் வடமொழியே ஆங்கிலத்தைக்காட்டிலும் சிறந்த மொழி என்கிறார்கள், அதனால் வடமொழியைப் பயன்படுத்துவதால் கணிணியின் விரைவுத் திறன் கூடுமாம், திராவிட மொழிகளிலும் சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாராது,

இராமதாசு மரத்தை வெட்டினார்,
இராமதாசு வெட்டினார் மரத்தை,
மரத்தை வெட்டினார் இராமதாசு,
மரத்தை இராமதாசு வெட்டினார,
வெட்டினார் மரத்தை இராமதாசு,
வெட்டினார் இராமதாசு மரத்தை ,


ஆறுவகையாக இடம்மாற்றில் எழுதினாலும் இதில் எங்காவது பொருள் மாறுகிறதா ? ஆக சொற்களை இடம் மாற்றி பொருள் மாறாமல் இருக்கும் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளுக்கும் பொதுவானதாகும் எனவே வடமொழி மட்டும் தான் கணிணிக்கு ஏற்ற மொழி என்பது முற்றிலும் புறக்கணிக்கக் கூடிய கூற்றாகும், ஒருவேளை அவ்வாறு அவற்றை பலரும் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்ள நேர்ந்தாலும் கணிக்கு ஏற்ற மொழிகள் இந்திய மொழிகள் அனைத்துமே என்பதே சரியானதாக இருக்கக் கூடும். 

என்னைக் கேட்டால் இன்றைய மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிகவிரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்திப் பெறப்படும் விரைவுத் திறன் குறித்த கூற்றெல்லாம் இன்றைய தொழில் நுட்பத்திற்கு முன்பு ஒன்றுமே இல்லை. ஒருவேளை இவர்கள் இந்த பொய்களை பரப்பும் காலத்தில் இருந்த 8 Bit CPU, 16MB Memory க்கு மேல் எதிர்காலத்தில் மேம்பட வாய்ப்பே ஏற்படாது என்று தவறாக நினைத்திருக்கக் கூடும். மற்றபடி இந்த 'வடமொழி மட்டுமே கணிக்கு ஏற்ற மொழி' என்பது முற்றிலும் அடைப்படை அற்ற கூற்று, மற்றும் புறந்தள்ள வேண்டியதும் ஆகும்.

கணிணிகள் பொதுப் புழக்கத்திற்கு (Even Before Internet) வந்த பிறகு வடமொழி கணிக்கு ஏற்ற மொழி என்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பரப்பட்டுவருகிறது, இந்திய அரசுகள் கோடிக்கணிக்கில் மக்கள் வரிப்பணைத்தை வாரி இறைத்து வடமொழி வளர்ச்சிக்கு செலவிட்ட போதிலும் அந்த 36 விழுக்காடு நாசா பொறியார்களில் ஒருவரும் வடமொழியை கணிணியில் ஏற்றி இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் முயற்சிக்கவில்லை,  தவிர இவ்வாறு தவறான கூற்றை பரப்புவர்களும் இதுவரை அதை செய்து காட்டவும் இல்லை, வெறும் பரப்புரையாக மட்டுமே இவை நம்ப வைக்கப்படுகிறது.



அகண்டபாரதம் இருந்தால் நல்லா இருக்குமே என்பது போன்ற வெறும் கற்பனை கனவே கணிணியில் வடமொழி ஏறும் என்பதும், சிறந்த கணிணி மொழியாக திகழும் என்பதும். இதை மறுப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் வந்து வடமொழியே கணிணிக்கு சிறந்தது என்று கூறலாம். எனக்கு மனத்தடை எதுவும் இல்லை.

பின் இணைப்பு :

http://www.vedicsciences.net/articles/sanskrit-nasa.html (புரட்டு 1)
http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (புரட்டு 2)

Similarities between Sanskrit and Programming Languages (புரட்டு 3)

http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (எதிர்வினை)
http://mushafiqsultan.com/nasa-and-sanskrit-hoax/ (எதிர்வினை)

12 ஆகஸ்ட், 2014

வடமொழி கிழமை கொண்டாட்டம் !

நான் தனிப்பட்டு எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை, ஆனால் மொழித் திணித்தலும் பண்பாட்டு அழித்தலும் ஒன்றில் ஒன்று தொடர்புடையது என்கிற புரிதல் உள்ளவன், ஒருவர் விருப்பப்பட்டு எந்த மொழியையும் எத்தனை மொழியையும் கற்கலாம், அவை வரவேற்கத்தக்கது, ஆனால் எந்த ஒரு பலனும் முன்னே இல்லாத ஒரு மொழியை பெரும்பான்மையினர் பேசுகின்றனர் என்று சிறுபான்மையினரிடம் திணிப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கதே.

சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு, பாமரர்களும் பேச எளிமையான வடிவில் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, மாறாக அவரவர் தாய்மொழி கல்வி இரண்டாம் மொழியாக அனைவருக்குமே பயிற்றுவிக்கப்படுகிறது, சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு அதன் நில அமைப்பு, மக்களின் உழைக்கும் திறன் தவிர்த்து தொடர்பு மொழி ஆங்கிலம் என்பதால் ஆசியாவில் அமைந்த ஐரோப்பிய நாடு என்கிற எண்ணத்துடன் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் முதலீடு செய்து சிங்கப்பூரை வளமாக்கினார்கள்.

இது போல் அல்லாமல் எந்த ஒரு வகையிலும் பயனிளிக்காத இந்தியையும், வடமொழியையும் அனைத்து மாநிலங்களிலும் திணித்தே தீருவோம் என்று பொறுப்பேற்றுள்ள மோடி அரசு முதலில் இந்தியை அரசு சமூக ஊடகத் தொடர்பு மொழியாக அறிவித்து, பின்னர் எதிர்ப்பு கிளம்பவே வடமொழியை முன்னிருத்துகிறார்கள், வடமொழியில் இராமயண ம(ஹா)பாராத கதைகள், மற்றும் வேத உபநிசத்து, காம சாத்திரம், பிற இந்து சமயம் சார்ந்த நூல்களே உள்ளன, அது தவிர்த்து வடமொழி கற்றுக் கொள்வதால் வேறெதையும் புதிதாக அறியமுடியாது, வடமொழியில் அன்றாட செய்தி இதழ்களோ, கிழமை இதழ்களோ, திங்கள் இதழ்களோ வெளி வருவது கிடையாது, இந்தியை வடமாநிலங்கள் முன்னெடுத்த போதே வடமொழி வளர்ச்சி என்பது முற்றிலும் நின்று விட்ட ஒன்றாகும், ஆனால் வடமொழி காணாமல் போனதற்கு அல்லது புழக்கமற்று போனதற்கு கருணாநிதியை குறை சொல்கின்றனர், கருணாநிதி காரணமென்றால் இந்தியா என்பது தமிழ்நாடு அல்லது கருணாநிதியின் செல்வாக்கு இந்திய துணைகண்டத்தில் ஆளுமை மிக்கதாக இருக்க வேண்டும், இவற்றில் எதுவுமே உண்மை கிடையாது. வடமொழி வழக்கொழிந்து போனதற்கு இந்தியை வட மாநிலங்கள் தாங்கிப் பிடித்ததே ஆகும்,

ஏற்கனவே வடமொழி சார்ந்த நூல்களில் காமசூத்திரம் உள்ளிட்டவை ஆங்கிலத்தில் மொழி பெயர்கப்பட்டுவிட்டன, மாபாரதம் உள்ளிட்டவை ஆங்கில அசைபடங்களாக வெளிவந்துவிட்டன, ஆங்கிலம் அறிந்தவர்களும் அவையே போதுமானதாக உள்ளது, நான் பார்த்த லிட்டில் கிருஷ்ணா அருமையாக ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள், எனவே வடமொழி அறிந்து வடமொழியை அறிந்தால் மட்டுமே வடமொழியில் உள்ளவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதில் யாதொரு உண்மையும் கிடையாது. தவிர வடமொழியை அறிவதால் அந்த நூல்களை படிக்க முடியும் என்பது தவிர்த்து பெரும் பயன் எதுவும் இல்லை. ஏற்கனவே வேதம் படிக்கிறவர்கள் பார்பனர் அல்லாதவர்கள் என்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தவேண்டும் என்று சொல்லி இருப்பதை வடமொழி அறிந்து படிப்பதால் அம்மொழி மீது மேலும் வெறுப்பே மிஞ்சும். மற்றபடி பாரம்பரியம், நமது இந்திய மொழி போன்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய்விட்டன.

விக்கிப்பீடியாவில் வடமொழி இந்தோ - ஐரோப்பிய பிரிவை சார்ந்தது என்று தெளிவான சான்றுகளுடன் சொல்லி இருக்கிறார்கள், எந்த ஒரு வடமொழி ஆர்வளரும், மொழியாளரும் அதை இதுவரை மறுக்க முடியவில்லை, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் வடமொழிச் சொற்கள் கனிசமான அளவில் இருப்பதற்கு வாய்ப்பும் அம்மொழியின் தாயகம் இந்தியாவாக இருக்கமுடியாது என்பதால் தான் என்றே சொல்லுகிறார்கள்,

இன்றைக்கு இந்திய மொழிகளில் ஆங்கிலம் நீக்கமற கலந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை திரிப்பது போன்று தான், வடமொழி பல்வேறு மொழிகளில் கலந்து அவற்றை சிதைத்தது, மற்றபடி வடமொழி இந்திய மொழிகளுக்கும் தாய் என்பது தவறான மற்றும் புறந்தள்ளக் கூடிய கூற்றுமாகும், அதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை, மொழியைப் பற்றி பெருமை பேசுபவர்கள் மொழி ஆராய்ச்சியாளர்களாக மட்டுமே இருந்தால் இது போன்ற தவறான கூற்றுகள் ஏற்பட்டிருகாது, மொழிப்பற்றாளார்கள், தம்மொழி மீது பெருமை கொண்டவர்கள் இட்டுக்கட்டிக் கூறித் திரித்தவையே இவையாகும். 

வடமொழி தென்னிந்திய மொழிகளில் கலந்ததற்கு எனக்கு தெரிந்து இருவாய்ப்புகள் தான், தென்னிந்தியாவில் பார்பனர்களின் பரவல், மற்றும் இராமயண மாபாரத இதிகாசங்களின் சொற்பொழிவுகள். கோவிலை பிழைப்பிடமாகக் கொண்ட வடமொழி கற்ற பார்பனர்கள் பிறருடன் உரையாடும் போது கலந்தவை, இராமயண, மாபாரத சொற்பொழிவுளில் அதன் செய்யுளை வடமொழியில் சொல்லி பின்னர் வட்டார மொழியில் கதைவிளக்கம் கொடுப்பார்கள், இராமயணக் கதை ஊடுருவல் என் டி ஆரை கிருஷ்ணராகவே பார்க்க வைத்துள்ளது என்றால் அந்த கதையின் தாக்கம் தெலுங்கில் எந்த அளவில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் வடமொழி கலப்பு குறைந்ததற்கு வில்லிபாரதம் தமிழில் எழுதப்பட்டதும், கம்ப இராமயணம் தமிழில் மொழிமாற்றப்பட்டதும் ஆகும், இல்லை என்றால் மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளைப் போல் 50க்கு 50 என்ற கணக்கில் தமிழ் சிதைந்திருக்கக் கூடும், உரைநடைகள் வளர்ந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வடமொழி கலப்பு மிகுந்திருந்தது, ஏனெனில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் வேலையில் குருகுலம் அமைத்த்து பார்பனர்கள் தான் அதனையும் செய்துவந்தனர், அவர்களிடம் தமிழ் கற்றவர்களின் பேச்சு வழக்கில் இயல்பாகவே வடமொழி கலப்பு ஏற்பட பெரியார் உள்ளிட்டவர்களின்  மேடைப்பேச்சில் நீங்கள் வடமொழிக்கலப்பு மிகுந்திருப்பதைப் பார்க்கலாம், பின்னர் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகே அவை முற்றிலுமாக களையப்பட்டு, செந்தமிழ் இல்லாவிட்டாலும் நல்ல தமிழில் எழுத முடிந்தது.

இந்தி போன்ற பெரும்பான்மையினர் பேசும் ஒரு மொழியை திணிப்பது அல்லது படிக்கச் சொல்லி அறிவுறுத்துவது தவறா ? இந்தியர்களுக்கு பொதுவான இந்திய மொழி ஒன்று இருந்துவிட்டு போகட்டுமே ? கொஞ்சம் சிந்தித்துப்பாருஙகள், எந்த ஒரு மொழியும் தகவல் தொடர்பு என்ற அளவில் இருந்தால் கெடுதல் இல்லை, ஆனால் தற்கால தொலைகாட்சி மற்றும் திரை ஊடகங்களின் தாக்கம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, நன்கு திறமையானவர்கள், நாம் ஏன் 6 கோடி தமிழர்கள் மட்டும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை படைக்க வேண்டும் ? என்ற கேள்வியில் பெரும்பான்மையினர் பாராட்டுகளே முதன்மையானது என்று மாற்றிக் கொள்வார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவருமே இந்தி பேசும் பெரும்பான்மையினருக்காக உழைக்க முடிவெடுத்தால், தமிழை பாமரனும் தாய்மொழியாக வீட்டில் பேசுபவன் மட்டுமே வாழ வைக்க முடியுமா ?

தமிழ் மற்றும் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்திபடம் இயக்க வேண்டும் என்பதே கனவு. அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டால் நமக்காக படம் எடுப்பவர் யார் ? ரஜினியோ கமலோ இந்தியில் தொடர்ந்து வென்றிருந்தால் அவர்கள் தமிழ் சூப்பர் ஸ்டார்களாக நம் முன் நிற்கமாட்டார்கள், அவர்களுக்கு இந்தி பேசத் தெரிந்தாலும் பெரிதாக வரவேற்பு இருக்க வில்லை, ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இந்தியில் வெற்றிக்கொடிகட்டுகின்றனர், முதல் போடுபவர் இந்திகாரராக இருக்கும் பொழுது படமும் வெற்றி என்னும் பொழுது இயக்குனரின், இசை அமைப்பாளரரின் திறமையை நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பது போல் தான் அவர்கள் வரவேற்கின்றனர்.  வட இந்தியர்கள் தென்னிந்தியரின் முகத்தை திரையில் பார்க்க விரும்பமாட்டார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்

இந்தியா முழுவதும் இந்தி மயமாகிவிட்டால், தமிழ் படம் என்று வரவே வராது, தமிழ் சார்ந்த செய்திதாள்களின் எண்ணிக்கை குறைந்து போகும், தமிழ் சார்ந்த கலைகளோ தொண்மங்களோ வளராது. தமிழின் வளர்ச்சி முற்றிலுமாக நின்று போய்விடும், அண்டை மாநிலங்களில் அவ்வாறு நடைபெற வில்லையே ?

கன்னடப் படங்கள் நன்றாக ஓடுவது குறைவு, அதனால் தான் கன்னட திரையுலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை பிற மொழி படங்களின் மீது விதிக்கிறது. தெலுங்குக்கு அந்த நிலமை வர சற்று காலம் எடுக்கலாம் ஆனால் நடக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை. கேரளத்தினர் தம்படைப்புகள் மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்களும் தப்பி வருகின்றனர், அதுவும் எவ்வளவு நாள் என்று சொல்ல முடியாது.

ஒரே சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், பிரபு தேவா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்திபட வாய்ப்பும் தமிழ் பட வாய்ப்பும் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் அவர்களை மொழி பற்று இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் தமிழனாக இல்லாமல் 'இந்தியானாக' வெற்றி பெருவதையே அவர்கள் விரும்புவார்கள், ஊடகங்களில் பிற மொழி நுழைந்தால் தாய் மொழியின் வளர்ச்சி குறைந்து கொண்டே நாளடைவில் நின்று போகும், இது தான் இந்தி மொழி வளர வளர வடமொழி வளர்ச்சி தடைபட்டு நின்று போனதற்கும் காரணம்.

தமிழகத்தில் பிறமொழி தாக்கம் ஏற்பட ஏற்பட அவற்றை அறிந்தவர்களின் ஊடகத் தேர்வும் அம்மொழியை நோக்கியும் திரும்பும். நாளடைவில் தமிழ் வெளிநாடுகளில் மட்டுமே வாழும் மொழியாகிவிடும். வடமொழி வளர்ச்சி நின்று போனது ஏன் என்று விடை அறிந்துவிட்டு பின்னர் வடமொழி கிழமை (வாரம்) கொண்டாடுங்கள்.

20 ஜூலை, 2013

ஆங்கில மோகமும் சமஸ்கிருத தாகமும் !

இந்தியாவில் ஆங்கிலம் நுழைந்ததால் எல்லாம் கெட்டுவிட்டது என்று பழைய பல்லவியை மறுபதிப்பு (ரீமேக்) செய்துள்ளது பாஜக,

"ஆங்கில மொழி இந்தியாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. நாம் நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நாட்டில் சமஸ்கிருதத்தில் பேசுபவர்கள் வெறும் 14 ஆயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர். ஆங்கிலத்தின் மூலம் நாம் அறிவைப் பெறுவதில் தவறில்லை. ஆனால் இளைஞர்களிடம் ஆங்கில கலாச்சார மோகம் ஊடுருவுவது ஆபத்தானது" - ராஜ்நாத்சிங் 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/20/india-row-erupts-over-rajnath-singh-anti-english-remarks-179514.html

ஆங்கிலத்தில் இருந்து அறிவை மட்டும் பெற்றுக் கொள்ளலாமாம், ஆங்கிலம் படிக்காமல் அறிவை மட்டும் எப்படி பெறுவது என்பதை அந்த மேதை விளக்கவில்லை, அவரது கவலையெல்லாம் சமஸ்கிரதம் பேசுவோர் எண்ணிக்கை 14 ஆயிரம் பேர் மட்டும் தான் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும், அதற்குக் காரணமாக ஆங்கிலத்தை கூறி உள்ளார்,  இந்த 14 ஆயிரம் என்பது ஆண்டு 2001 கணக்கெடுக்கின்படி வரும் எண்ணிக்கை என்பதை விக்கிப்பீடியா குறிப்பிட்டுள்ளது, இடைப்பட்ட 13 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு தான் வாய்ப்பே அன்றி கூடுவதற்கான வாய்ப்பு எப்பொழுதும் இல்லை. மொழி வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் மக்கள் தொகை உயர்வு என்பதைத் தாண்டி, அதை படித்தால் பயனுண்டு என்று படிப்பவர் இருந்தால் மட்டுமே வாய்ப்புள்ளது. 

 எந்த மொழியும் அன்றாடப் பயன்பாட்டில் இல்லை என்றால் அது அழிவதன் துவக்கத்தில் பயணம் செய்யும், இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல் அப்பன் மகன் பேரை ஒன்றாகப் பார்த்தால் மட்டுமே தற்பொழுது ஒருவரை பெயரை வைத்து தமிழர் என்று அறிய முடிகிறது, இன்னும் 40 ஆண்டுகளில் அதுவும் கடினம், கருப்பையா ரமேஷ், தந்தை பெயர் கருப்பையா, மகன் பெயர் ரமேஷ், ரமேஷுக்கு தமிழ் பெயர்கள் பற்றி பெரிதாக ஆர்வம் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளுக்கும் எதோ ஒரு மொழியில் உதாரணத்திற்கு ஞானேஷ் என்று பெயர் வைக்க, முகத்தை பார்க்காமல் 'ரமேஷ் ஞானேஷ் 'என்ற பெயரை நாம் பட்டியலில் படித்தால் எந்த மாநிலத்துக்காரர் என்றும் தெரியாது, ஒருவேளை முகத்தைப் பார்த்தாலும், பேசாவிட்டால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எண்டு கண்டுப்பிடிப்பதும் கடினம். நான் பொதுவாக வழியுறுத்துவது, தமிழிலும் அழகான எளிமையான பெயர்களை உருவாக்கலாம், இருக்கிறது, அவற்றை பயன்படுத்துங்கள், உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டுவதால் தமிழை இன்னும் ஒரு 80 ஆண்டுகளுக்கு (சராசரி வாழ்நாள்) 'பெயரளவில்' ஆவது புழக்கத்தில் வைக்கக்  உங்களால் செய்யப் படக் கூடிய சிறு துரும்பு.

நான் சமஸ்கிரத்திற்கோ வேறெந்த மொழிக்கோ எதிரானவன் இல்லை, எனக்கு எல்லா மொழிகளும் பிடித்தமானவையே, நான் மொழிகளை விரும்பிப் படிப்பதை பொழுதுபோக்காகவும் வைத்துள்ளேன், ஒரு மொழியை அறிவதன் மூலம் அம்மொழி பேசுபவர்களைப் பற்றி அவர்களது பண்பாடுகளை அறிய முடியும் என்பது நான் மொழிகளை படிப்பதன் மூலம் நேரிடையாக அறிந்து கொண்ட ஒன்று. மொழி பற்றிய எந்த அறிவும் இல்லாமல், மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகம் என்று கூறுபவர்களை நான் எப்போதும் புறம் தள்ளுவேன், முடிந்தால் அது அவ்வாறு இல்லை என்றே கொஞ்சம் விளக்கிச் சொல்வேன், மொழிகள் என்பது அறிவுக் கருவூலங்கள், அவை பண்பாடுகளை தலைமுறை தாண்டி எடுத்துச் செல்லும், ஒரு மொழி அழியும் பொழுது அவற்றை பேசியவர்களின் பண்பாடு மற்றும் கலை ஆகியவையும் சேர்ந்தே அழியும், ஒரு மொழியின் ஆளுமை மற்றொரு மொழியினரின் பண்பாடுகளை எவ்வாறு அழிக்கும் ? 

நாம் வேட்டிக் கட்டுவதை கைவிட்டு பேண்டுக்கு மாறி ஒரு 50 ஆண்டு காலம் ஆகி இருக்குமா ? நாம் தமிழ் நாட்டில் பேண்ட் அணிவதன் தேவை என்ன ? ஒன்றுமே இல்லை, ஆனால் படித்தவனின் ஆடை, அலுவலக ஆடை என்ற அடையாளத்தில் நம் உடை முற்றிலும் மாறிவிட்டது அல்லவா ? இப்போது பண்டிக்கைக்கும், திருமணத்திற்கும் வேட்டிக்கட்டும் பழக்கம் இன்னும் ஒரு 50 ஆண்டுகள் நீடித்தாலே பெரிது, என்னுடைய நண்பர் ஒருவர் வேட்டிக்கட்ட வெட்கப்பட்டு,  அதை வேட்டிக்கட்டத் தெரியாது என்று காரணமாகக் கூறி மணமேடையில் பேண்ட் அணிந்தே தாலி கட்டினார், பண்பாடு கலாச்சாரம் குறிப்பாக அதிக விலையிலானது என்பதால் பெண்கள் விடப்பிடியாக பட்டுப்புடவை கட்டிவருவது ஆறுதல். அதுவும் இல்லம் சார்ந்த விழாக்களில் மட்டும் தான், எப்போதாவது அலுவலகத்திற்கும் கட்டிச் செல்கிறார்கள், ஆனால் இன்றைய சூழலில் நாம் வேட்டிக்கட்டி பொது நிறுவனம் எதற்குள்ளும் வேலைபார்க்க சென்றுவிட முடியாது. வேட்டிப் போச்சு. ஆங்கிலம் அலுவலக மொழியாகும் பொழுது அதற்கான ஆடைகளும் மாறிவிடுகிறது, நமது அடையாளம் பிட்சா, பர்கர்னு கொஞ்சம் கொஞ்சமாக பிறவற்றிலும் இப்படித்தான் மாறிப் போகும்.

இன்றைய கல்வி மற்றும் பொருளாதார சூழலில் ஆங்கிலம் படிப்பதை நம்மால் தவிர்க்கவே முடியாது, எல்லாவற்றையும் தமிழிலேயே படித்தால் நமக்கு வேலையும் கிடைக்காது, குறைந்த அளவாக தமிழர்களிடையே தொடர்பு மொழியாக தொடர்ந்து பேச ஒரு வாய்ப்பு என்ற அளவில் 10 ஆம் வகுப்பவரையிலாவது தமிழை படிப்பது மொழி அழிவை தடுக்க நாம் செய்யும் கைமாறு, அதைத் தவிர்த்து தமிழை தொடர்ந்து படித்தால் நமக்கு எந்த பயனும் இல்லை, ஒரு வேளை எழுத்தாளன் ஆகலாம், அதற்கும் தமிழை கல்லூரிப்படிப்பாகத்தான் படிக்க வேண்டும் என்பதுமில்லை. ஏனென்றால் நமது வேலை வாய்ப்புகள் என்பவை தமிழ் சார்ந்தவை இல்லை, இதை புரிந்து கொள்ள மறுப்பவர் வைக்கும் வாதங்கள் எவையும் ஏட்டுச் சுரைக்காய் போன்றதே.

ஒரு மொழியின் வளர்ச்சி என்பவை அவற்றை பேசுபவர்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கி வெளிநாட்டினருக்கும் அந்த வாய்ப்புகளை வசதியாக்கி தந்தால் அந்த மொழியின் மீது பிற மொழிப் பேசுபவர்களுக்கு நாட்டம் ஏற்படும், உதாரணத்திற்கும் சீனாவில் 80 விழுக்காட்டிற்கும் மேல் பொது மொழியான மேன்டரின் பேசப்படுகிறது, சீனா தற்பொழுது பண்ணாட்டு நிறுவனங்களுக்கு கதவையும் திறந்து விட்டுள்ளது, சீனாவில் வர்தக தொடர்பு அல்லது  தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் என்று நினைக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள் சீனாவிற்கு செல்லும் தனது அலுவலர்களை சீன மொழியை படிக்கக் கோறும், அவ்வாறு இல்லை என்றால் அங்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பேச வாய் இருந்தாலும் சொல் இருக்காது, சீனாவில் வேலை செய்யும் பெரும்பாலான ஐரோப்பியர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள், சீனா இன்னும் வல்லரசாகி அண்டை நாடுகளை ஆளுமைக்குள் கொண்டு வந்து அந்த அந்த பகுதிகளின் அலுவல் மொழியாக சீனமொழியை அறிவித்துவிட்டால் வேறு வழியின்றி சீன மொழியை அடிமைபட்ட நாடுகளும் அரசிடம் வேலை செய்ய கற்றுக் கொள்வர், இதைத் தான் வெள்ளைக்காரன் அன்று செய்தான் ஆங்கிலம் காமன்வெல்த் நாடுகளின் தொடர்பு மொழியானது, ஒருவேளை உலகப் போரில் ஜப்பான் காரன் வெற்றிபெற்றிருந்தால் நாம் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஜப்பான் மொழியில் படித்து வேலைபார்ப்போம், மொழி பரவுவதற்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.

இந்த புரிதலின்றி பலர் ஆங்கிலம் போல் தமிழும் பல மொழிச் சொற்களை கடன் வாங்கிக் கொண்டால் தமிழ் வளர்ச்சி பெரும் என்று அறியாமையால் நம்புகிறார்கள், பல மொழியில் கடன் வாங்கி தமிழில் வைத்துக் கொள்வதற்கு மாற்றாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு ? குறைந்தது தமிழ் மொழியாவது தன்மை மாறாமல் இருக்கும், நான் எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ பயணித்துவிட்டேன்.

ஆங்கிலத்தின் வளர்ச்சி ஆங்கிலத்தில் போதிய சொற்கள் இல்லாததால் பிறமொழியில் அவை கடன்வாங்கி அகராதியை நிரப்பிக் கொண்டே வரும், ஏனென்றால் ஆங்கிலத்தின் மூலம் பரவலான அறிவை கொண்டுவர முடியும் என்று நம்புகிறார்கள், 2 மில்லியன் சொற்கள் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் நன்றாக ஆங்கிலம் தெரிந்தவருக்கு அவற்றில் பாதி அளவு அகராதியை புரட்டாமல் தெரியுமா என்பதே ஐயம், குறிப்பாக மருத்துவம் சார்ந்த சொற்களுக்கு ஆங்கிலம் நிறையவே கடன்வாங்கியுள்ளது. ஒரு நூல் ஆங்கிலத்தில் முழுமையடைய ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை கடன் வாங்காமல் முடியாது என்பதால் ஆங்கிலத்திற்கு பிறமொழியின் சொற்களை கடன் பெறுவது இயல்பு. ஆங்கிலத்தின் முழுவளர்ச்சி இந்த நூற்றாண்டாடில் ஏற்பட்டு மிகுதியாகவும் மாற்றம் கண்டுள்ளது, இன்றைய கணிணி உலகில் ஆங்கிலம் 1000க் கணகான புது சொற்களை இணைத்துக் கொண்டது. இவை பெரும்பாலும் லத்தீன், கிரேக்கம், ரோமன் மொழிகளின் கலவையே.

இந்த நூற்றாண்டில் ஆங்கில உருவாக்கம் வளர்ச்சி என்பது போல் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மொழிகளை கடன் பெற்று பண்பட்ட மொழி என்ற புதிய மொழி உருவாக்கமாக சமஸ்கிரதம் உருவானது, ஆனால் அதை எழுதுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தினார்களேயன்றி அன்றாட பேச்சு மொழியாக இருந்திருக்கவில்லை, இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றையும், இலக்கிய நூல்களை எழுதவும் அதை பிறமொழிப் பேசுபவற்களிடம் பரப்பவும் ஒரு கருவியாக சமஸ்கிரதம் இருந்துவந்தது, அந்த நூலின் புழக்கம், அவற்றை சொற்பொழிவு செய்பவர்களின் (பிரசங்கம்)  செய்பவர்களால் புழக்கத்தில் விடப்பட்டு வட்டார மொழிகளில் கலக்க பல்வேறு மொழிகளாக அவை உருவானது, தென்னிந்திய மொழிகள் ஒருகாலத்தில் வட்டார மொழிகளாக (நெல்லை, கோவை தமிழ் போல்) இருந்து பின்னர் சமஸ்கிரத கலப்பு விழுக்காட்டு வேறுபாடுகளில்  தென்னிந்திய மொழிகள் தனித்தனி வடிவம் பெற்றன. மற்றபடி சமஸ்கிரத்தில் இருந்து எந்த தென்னிந்திய மொழியும் வேர் சொற்களை பெற்றிருக்கவில்லை, தோன்றவில்லை, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் பொதுவான தென்னிந்திய மொழியின் சிதைந்த வடிவம் என்று சொல்லலாம்.

சமஸ்கிரதம் படிப்பதால் இன்றைய தேதியில் என்ன பலன் ? ஒன்றும் இல்லை இராமயணம் உள்ளிட்ட வடமொழி நூல்களின் மொழிப் பெயர்ப்பு எல்லா மொழிகளிலும் வந்துவிட்டன. வேதம் உபநிசத் ஆகியவற்றை கோவில் கருவறைக்குள் வைத்து பார்பனர்கள் பூட்டிக் கொண்டுள்ளனர், சமஸ்கிரதத்தை முழுமையாக கற்று தேர்ந்தாலும் பார்பனர் அல்லாதவர்களுக்கு கோவிலில் அர்சகர் வேலையும் கிடைக்காது என்ற நிலையில் அதைப் படிப்பதனால் என்ன பயன் ? அர்சகர் அர்சனையின் போது கருமாதி மந்திரம் சொல்லாமல் இருக்காரா என்று தெரிந்து கொள்ளலாம், வேறு பயன் எதுவும் இல்லை,  சமஸ்கிரதம் பேசும் போது அதிரும் புதிரும் என்றால் எச்சிலும் தெறிக்கும் என்பதையும், பல கோவில்கள் பாழடைந்து சாய்ந்ததற்கு அர்சகர் ஓதிய மந்திரத்தின் அதிர்வு தான் காரணமாக இருக்குமோ என்று கேட்கத் தோன்றுகிறது.

இதையெல்லாம் வீட 'நாசாவுக்கு தண்ணீர் காட்டிய திருநள்ளாறு' என்று எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் ஒரு கட்டுரை எழுதி இன்னும் கூட அவை முக நூல்களில் பரிந்துரைக்கப்பட்டு பல்வேறு அப்பாவிகளால் அப்படியா என்று கேட்க வைக்கப்பட்டு லைக்கப் படுகிறது, அது போல் நாசா சமஸ்கிரத ஒலியை விண்வெளிக்கு அனுப்பி அதன் எதிரொலியை பதிவு செய்கிறது, என்று ஒரு தகவலை பரப்பிவிட்டு இருக்கிறார்கள், முதலில் அவ்வாறு செய்வதால் என்ன பலன் என்பதை கட்டுரை எங்கும் விளக்கவில்லை, அதைவிட நாசா அவ்வாறு செய்ததற்கு ஆதாரணமான எந்த சுட்டியும் அதில் காணும். நானும் நாசா வலைத்தளத்தையும் வலைபோட்டேன் அப்படி எதுவும் அகப்படவில்லை. இன்னும் கூட பலரால் கணிணிக்கு ஏற்ற மொழி சமஸ்கிரதம் என்று பரப்பப்படுகிறது ஆனால் எந்த விதத்தில் ?  8 Bit ஆக இருந்த ASCII code இன்றைக்கு 64 Bit ஆக மாறியுள்ளது ஏலியன் மொழியைக் கூட அதில் ஏற்றி வைத்து கணிணியை இயக்க முடியும். கணிணியை இயக்க எந்த மொழியாக இருந்தாலும் உள்ளுக்கு இயங்குவது இரண்டடிமானம் (Binary) தான், சமஸ்கிரத்தை கணிணி மொழியாக மாற்றி பயன்படுத்துவதால் என்ன பலன் ? ஆங்கிலத்தில் 26 எழுத்து, அதை வைத்து தமிங்கிலத்தில் கூட விரைவாகவே தட்டச்சுவிடுகிறோம், சமஸ்கிரத அறிவியல் பேசுபவர்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை.

இப்போதே ஆங்கிலம் பல்வேறு வட்டார ஆங்கிலமாகத்தான் இருக்கின்றது,  3000 ஆண்டு பழமையான சமஸ்கிரதம் புழக்கம் முற்றிலும் குறைந்து போய் வெறும் 14,000 பேர் தான் பேசுகிறார்கள் என்றால் ஆங்கிலத்திற்கு அந்த நிலை வர 200 ஆண்டுகள் ஆகலாம், ஏனெனில் இன்றைய தகவல் தொடர்பும் மக்கள் பரவலாக்கமும் மொழிகளில் மாற்றத்தை வெகுவிரைவாகவே ஏற்படுத்திவிடும். உலகமொங்கும் எளிமையான ஆங்கிலம் பரவலாகவும் வாய்ப்புள்ளது.

ஆங்கில மோகம் தான் சமஸ்கிரதம் அழிந்ததற்கு காரணம் என்பது பொய்யான முதிர்ச்சி அற்ற வாதம், சமஸ்கிரதம் ஆங்கிலேயார்கள் உள்ளே நுழையாத காலத்திலும் கூட பெரிதாக மக்களால் பேசப்படவில்லை, அது ஒரு பூசை மொழி என்று பரிந்துரைக்கப்பட்டு பொதுப் புழக்கத்தில் இருந்து உள்நோக்கத்துடன் தடுக்கப்பட்டே வந்தது, இந்தியை வலுகட்டாயமாக நுழைக்க முயற்சிப்பதும், முதலில் ஹிந்தி ஒட்டகத்தின் கழுத்தை நுழைத்து சமஸ்கிரத்த்தை மீட்டு எடுக்கலாம் என்பதன் முயற்சியே, அதுவெற்றி பெறாது ஏனெனில் ஹிந்திபடிப்பதனால் வேலை வாய்ப்பு கூடும் என்ற அளவில் எந்த வேலை வாய்ப்பும் கிடையாது., ஹிந்தி தெரிந்தவனும் பிறமாநிலங்களில் பாம்பே மிட்டாய் தான் விற்கிறான் என்பதை நினைக்க ஹிந்தி வாங்கிதரும் வேலை வாய்ப்புகள் பூஜ்ஜியம்.

16 ஜூலை, 2009

ஆங்கிலமும் சமஸ்கிரதமும் !

பொத்தி பொத்தி வைக்கப்படும் எதுவும் பயன்படாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமஸ்கிரதம் எனப்படும் வடமொழி. சமஸ்கிரதம் புழக்கத்தில் இருந்து மறைந்து போனதற்கு முழுப் பொறுப்பும் பார்பனர்களுடையது. இன்றைய ஆங்கிலத்தில் நூல்கள் எழுதுபவர்கள் அனைவருமே வெள்ளைக்காரர்கள் கிடையாது. பிறமொழிகளை தாய்மொழியாக் கொண்ட ஆங்கிலப் புலமைப் பெற்றவர்கள் எழுதும் நூல்கள் வெள்ளைக்காரர்கள் எழுதும் நூல்களை விட மிகுதியானவை.

பிராகிரதம் எனப்படும் வேதமொழி கிட்டதட்ட ஐரோப்பிய மொழிகளின் ஒலியமைப்பையும் இலக்கணத்தையும் ஒத்திருந்ததை வரலாற்று மொழி ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. ஐரோப்பிய மொழி ஒப்புமைகள் பழைய சமஸ்கிரத மொழியில் இருந்ததை வைத்துதான், சமஸ்கிரதம் இந்தியாவின் மொழி அல்ல, வெளியில் இருந்து வந்தது என்று குறிப்பிட்டு ஆரியர்கள் வருகைப் பற்றிய கருத்துகள் எழுந்தன.

விக்கிபீடியாவில் இருந்து,

Sanskrit is a member of the Indo-Iranian sub-family of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Old Persian and Avestan.[9] Within the wider Indo-European language family, Sanskrit shares characteristic sound changes with the Satem languages (particularly the Slavic and Baltic languages), and also with Greek.[10]
In order to explain the common features shared by Sanskrit and other Indo-European languages, many scholars have proposed migration hypotheses asserting that the original speakers of what became Sanskrit arrived in what is now India and Pakistan from the north-west some time during the early second millennium BCE.[11] Evidence for such a theory includes the close relationship of the Indo-Iranian tongues with the Baltic and Slavic languages, vocabulary exchange with the non-Indo-European Finno-Ugric languages, and the nature of the attested Indo-European words for flora and fauna.[12]
The earliest attested Sanskrit texts are Hindu texts of the Rigveda, which may be located in the Punjab region and dated to the mid-to-late second millennium BCE. No written records from such an early period survive.

இன்றைய தேதியில் ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு அதை ஆங்கிலப்படுத்திக் கொள்கிறதோ அதே போன்றே பழைய சமஸ்கிரதமும் பல்வேறு திராவிட மொழிகளின் சொற்களை சமஸ்கிரத ஒலிப்பிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டது. கிமு 4 ஆம் நூற்றாண்டுவரை சமஸ்கிரதம் லட்சக்கணக்கில் சொற்களை ஏற்று வளர்ந்து கொண்டிருந்தது. அதை முறைப்படுத்தவும், கட்டுக்குள் கொண்டுவரவும் பனானி என்கிற பண்டிதரால் சமஸ்கிரதத்திற்கு இலக்கணம் எழுதப்பட்டு, எழுத்து வழக்கிற்கு பயன்படும் ஒரு மொழியாகியது. கிமு 5 ஆம் நூற்றாண்டு வரை காலத்தில் சமஸ்கிரத்திற்கு எழுத்துகள் தோன்றி அல்லது அமைப்பட்டு இருக்கவில்லை. புத்தரின் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது, அதற்கு முன்பு எழுத்தில் இருந்தவை திராவிட மொழிகளும், பாலி மொழியும் தான். அசோகர் தனது கல்வெட்டுகள் அனைத்தையும் பாலி மொழியில் தான் எழுதினார். நாளந்தா போன்ற பழைய பல்கலைக் கழகங்களில் பாலி மொழியில் பயிற்றுவிக்கப்பட்டது. புத்த மதத்தை தகர்க்க மாற்று வேண்டும் என்று முன்னின்றவர்கள் மாற்றுமொழியாக அதுவும் எழுத்து வழக்கு மொழியாக முன்வைக்கப்பட்டது தான் சமஸ்கிரதம். பார்பனர் மட்டுமல்லாது பவுத்த மதத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் சமஸ்கிரத்தில் எழுதுவது பாரதம் முழுதும் பரவும் என்கிற கருத்தில் சமஸ்கிரத்தில் எழுதத் தொடங்கினர். சமஸ்கிரத நூல்களில் பார்பனர்களின் பங்களிப்பை விட பார்பனர் அல்லோதோரின் பங்களிப்பே மிகுதி.

மனு ( நான்காம் நூற்றாண்டு) க்கு பிறகு பார்பனர்கள் இந்து சமயத்தை வருண பேதத்தின் சாக்கிட்டு கையில் எடுத்துக் கொண்டபடியால், ஆளுமை செலுத்தும் நோக்கில் பிற மொழியை தாய் மொழியாக உடையவர்களுக்கு சமஸ்கிரதம் பயிற்றுவிப்பதைத் தவிர்த்தனர். பார்பனர் அல்லாதோரின் பங்களிப்புகளும் குறைய தொடங்கியது. ஞானசம்பந்தர் காலத்தில் பக்தி இயக்கம் வளர்க்கிறேன் என்ற பெயரில் புத்தமததினருக்கு எதிராக தமிழ் மொழியை பலரும் முன்னெடுக்க, தமிழ்நாட்டில் சமஸ்கிரத பயன்பாட்டிற்கும் சேர்த்தே ஆப்பு வைத்துவிட்டனர். இருந்தாலும் முடிந்தவரை வடமொழி தமிழில் கலக்கச் செய்ய மணிப்ரளவம் என்னும் உத்தி கையாளப்பட்டது, அதன் தாக்கமாக மலையாளம் என்னும் புதிய மொழிப் பிறந்ததைத் தவிர்க்க முடியாமல் போனது.

இவை பழைய வரலாறு என்ற போதிலும், மறைமலை அடிகள் காலத்தில் தமிழின் தூய்மை படுத்த தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தமிழில் வடமொழிக்கலப்பு மிகுதியாகவே களையப்பட்டது.

வெள்ளைக்காரர்கள் வடமொழியின் மூலம் குறித்து ஆராய்ந்த போது, அடி மடியில் கைவைக்கிறார்களே என்கிற பதற்றத்தில் வடமொழி தேவ பாஷை என்னும் கட்டுக்கதைகளெல்லாம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கிளப்பி விடப்பட்டு இருக்க வேண்டும். எந்த ஒரு பழைய இலக்கியத்திலும் வடமொழி குறித்து அப்படி ஒரு கருத்து இருந்தது இல்லை.

வடமொழி புழக்கம் குறைந்ததற்கு அது பொத்தி வைக்கப்பட்டதும், மிகவும் உயரியதாக காட்ட பிற மொழிகளை தூற்றியதே வடமொழி மீதான பிறர் வெறுப்புக்காரணம். என்னைக் கேட்டால் உலக அளவில் பலரின் நாக்கு, தொண்டை இவற்றின் ஒலிக்கு ஏற்ப பேசப்படும் ஆங்கிலத்துக்கு மாற்றாக முன்வைக்க் கூடிய தகுதிகள் உடைய சிறந்த மொழிகளில் சமஸ்கிரதமும் ஒன்று. மிகவும் புனிதம் பூசி மறையச் செய்துவிட்டார்கள்.

இப்பவும் கூட வடமொழியின் மேன்மை என்கிற பெயரில் பரப்பரப்படும் கருத்துகளில் ஒன்று, 'ஆங்கிலத்தில் மிகுதியான சமஸ்கிரதச் சொல் இருக்கிறது, ஆங்கிலமே சமஸ்கிரத்தில் இருந்து பிறந்தது, சமஸ்கிரதம் உலக மொழிகளின் மூலம்' - இது எப்படி இருக்கிறதென்றால் தன்னைப் போல் இருப்பவன் ஒருவனைப் பார்த்து வியப்பது போல் ஆகும், இருவரின் பெற்றோர்கள் பற்றி தீரக் கேட்டுப் பார்த்தால் தான் தெரியும் அவர்களின் பெற்றோர் இருவரும் எதோ காரணங்களினால் முன்பே பிரிந்த அண்ணன் தம்பிகள் என்றும் இவர்கள் இருவரும் வாரிசுகள் என்கிற உண்மை. அதாவது சித்தப்பா மகனைப் பார்த்து அவன் சித்தப்பா மகன் என்று அறியாமல் தன்னைப் போலவே இருக்கிறான் என்கிற வியப்பும், ஒருவேளை தந்தையின் இரத்தத்தில் பிறந்தவனோ என்கிற ஐயம் ஏற்படுவது போல் ஆகும். ஆனால் சமஸ்கிரதம் - ஆங்கில ஒப்பீட்டில் இவை ஆங்கிலத்தில் பலசொற்களில் வடமொழி சொற்கள் இருப்பதால் இருப்பதால் அது வடமொழியில் இருந்து பிறந்ததாகக் பெருமையாகப் பேசப்படுகிறது.

இன்றைய ஆங்கிலம் என்பது லத்தீன், கீரேக்க மொழிகளின் கலவை, கூடவே உலக மொழிகளின் சொற்களை ஏற்றுக் கொள்கிறது, அதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே செய்தது சமஸ்கிரதம், தமிழில் மிகுதியான (தேவையான என்ற பெயரில் சொல்லப்படும்) பிற மொழிச் சொற்களை ஆங்கிலம் போல் ஏற்றால் என்னவாகும் என்பதை சற்றேனும் சிந்தித்து பாருங்கள். பிறமொழியில் இருக்கும் அனைத்து சொற்களையும் ஏற்கவேண்டுமென்றால் அதை அந்த மொழியிலேயே படித்துவிடலாம், அதை ஏன் தாய்மொழியிலும் சேர்க்க வேண்டும் ?

வெள்ளைக்காரர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஆங்கிலம் வெள்ளையர்களின் மொழி என்று கூறி பிறர் படிப்பதைத் தடுத்தால் ஆங்கிலம் வளருமா ? மறையுமா ? பிறர் படிக்கக் கூடாது என பார்பனர்களால் சமஸ்கிரதம் இவ்வாறு தான் தடுக்கப்பட்டது.

இணைப்புகள் : சம்ஸ்கிருதம் - சில கேள்விகள்

Sanskrit - From Wikipedia, the free encyclopedia

3 செப்டம்பர், 2008

முதன் முதலாக வலையில் வலம் வரும் ஒரு செம்மொழி ..... !

தேவ பாஷை, கம்யூட்டர் ( லக்ன யந்த்ரா ?) பாஷை, மருத்துவ பாஷை மற்ற மொழிகளை ஒன்றாக இணைத்து ஒட்டும் பசை என்றெல்லாம் புகழ் பெற்ற வடமொழி எனப்படும் சமஸ்கிரதம் முதன் முதலாக (என்ன கொடுமை ?) இணையத்தில் நாளிதழாக வருகிறதாம். ஒரு செம்மொழி முதன் முறையாக இணையத்தில் ஏறுவது பெருமைக் குரியது தானே ?


தினமலர் பெருமையோடு தரும் இந்த செய்தியை உங்களுடன் பகிர்கிறேன் :

மைசூரு : பேச்சுவழக்கிலிருந்து அடியோடு அழிந்து விட்ட பழம்பெரும் மொழி சம்ஸ்கிருதத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிதழ் "சுதர்மா' இப்போது " இ - பேப்பராக' வெப்சைட்டில் வெளிவருகிறது.மைசூரிலிருந்து இரண்டு பக்கம் கொண்டதாக இந்த நாளிதழ் சில ஆண்டுகள் முன் ஆரம்பிக்கப்பட்டது. மைசூரை சேர்ந்த பிரபல சம்ஸ்கிருத பண்டிட் வரதராஜ அய்யங்கார், இந்த நாளிதழை நடத்தி வந்தார்.



கடந்த 1990 ல் அவர் மறைந்தபோது, அவர் மகன் சம்பத் குமார், மருமகள் ஜெயலட்சுமி இருவரும், அவருக்கு கொடுத்த வாக்குறுதி படி, பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வந்தனர்.மாத சந்தா 250 ரூபாய் வசூலித்தாலும், போதுமான அளவில் விளம்பரம் கிடைக்காததால் பத்திரிகையை நடத்த முடியாமல் திணறினர். அப்போது தான் அவர்களுக்கு வெப்சைட் யோசனை தோன்றியது.சமீபத்தில் வெப்சைட் ஆரம்பித்து அதில் "இ - பேப்பராக' சுதர்மாவை வெளியிட ஆரம்பித்தனர். மைசூரில் மட்டும் மூன்றாயிரம் பிரதிகள் விற்பனை ஆனது போய், இப்போது உலகம் முழுவதும் "இ - பேப்பரை' பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விளம்பரங்களும் வரத்துவங்கி விட்டன.

இந்த பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்கள் இந்துக்கள் தான். சம்ஸ்கிருதத்தை படிக்க அதில் அடிப்படை அறிவு வேண்டும். (அது பற்றிய எழுத்தறிவும், பொருள் புரிதலும் போதாதா ? அறிவுக்கு இதில் தொடர்பேது... ? இப்படித்தான் பெருமை பேசியே பொத்தி வச்சு அழிச்சிட்டாங்க... ) மொழி தெரியாமல் படிக்க முடியாது. இந்தவகையில் அச்சிட்டு தந்த பிரதிகளை விட, வெப்சைட்டில் அதிகம் பேர் பார்ப்பதும் தெரியவந்தது.பத்திரிகையில், மற்ற நாளிதழ்களில் வரும் செய்திகள் போல எல்லா துறை சம்பந்தப்பட்டதும் வெளியிடப்படுகின்றன. சம்ஸ்கிருத மொழியுடன் ஆங்கிலமும் சேர்த்து வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் யாரும் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.


"அமெரிக்காவில் 10 லட்சம் இந்துக்கள், ஐரோப்பாவில் உள்ள 15 லட்சம் இந்துக்கள் மற்றும் ட்ரினிடாட், டுபாக்கோ (டுப்பாக்கூர் இல்லை), கென்யா உட்பட சில ஆப்ரிக்க நாடுகளிலும் எங்கள் பத்திரிகையை இந்துக்கள் பார்ப்பர் என்று எண்ணுகிறோம். "சம்ஸ்கிருதம் என்பது அறிவியல் மொழி. அதனால் பலரும் மீண்டும் சம்ஸ்கிருத மொழியை குழந்தைகளுக்கு கற்பித்து வருகின்றனர். அதனால், எங்கள் வெப்சைட்டுக்கு வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை' என்று சம்பத் குமார் கூறினார்.சம்ஸ்கிருத மொழியை வளர்ப்பதில் சம்ஸ்கிருத பாரதி உட்பட சில அமைப்புகள் சேவை செய்து வருகின்றன. இந்நிலையில், சம்ஸ்கிருத நாளிதழ் வெப்சைட்டில் வருவது இதுவே முதன் முறை. சம்ஸ்கிருத பத்திரிகையின் வெப்சைட் முகவரி: http://sudharma.epapertoday.com/

*****************************

சமஸ்கிரத பற்றாளர்கள் தேவ பாஷைக்கு சந்தா செலுத்தக் கூட மனமில்லாமல் ஏன் தான் வீண் பெருமை மட்டும் பேசுகிறார்களோ ? ஒரு மொழி உருவாவதற்கு குறைந்தது 500 ஆண்டுகளாவது ஆகும், சமஸ்கிரதமும் பழம்பெருமை வாய்ந்த மொழிதான். பவுத்தர்கள், சமணர்கள் தங்கள் இலக்கியங்களை பாலி மற்றும் சமஸ்கிரதத்தில் ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
சமஸ்கிரத ஆயுர்வேத குறிப்புகளில் பெளத்த / சமணர்களின் பங்கு மிகப் பெரியது. எந்த மொழியும் அழிகிற நிலைக்குச் செல்வதன் காரணம் அதைப் பேசும் மக்களின் பொறுப்பின்மையே. மொழிகளின் அழிவில் / ஆக்ரமிப்பில் நான் உடன்பட்டவன் அல்ல. எல்லா மொழிகளுமே உருவாக்குவதற்கு அரியவைகள் (பொக்கிஷங்கள்) தான். சமஸ்கிரத பற்றாளர்கள் தமிழைத் தூற்றுவதற்கு பதிலாக வடமொழியின் அழிவை காப்பாற்றுவதே அவர்களின் மொழிக்கு ஆற்றவேண்டிய மிகப் பெரிய சேவை.

கர்மண்யேவ அதிகாரஸ்தே ! ( அதைச் செய்ய மட்டுமே உனக்கு உரிமை இருக்கு)

இந்திய அரசு சமஸ்கிரத வளர்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவளிக்கிறது என்று சொல்கிறார்கள். அதை வைத்து சமஸ்கிரதத்தில் ஒரு நாளிதழ் கூட வழங்க முடியவில்லை என்றால்....பருப்பும், நெய்யும் விலை உயர்ந்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.... ...ஹூம்

ஆங்கிலத்தில் 'வெப்சைட்டு' என்பதற்கு....தமிழில் இணையதளம் என்று யாராது தினமலருக்கு காயிதம் போடுங்கோ....... :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்