பின்பற்றுபவர்கள்

25 பிப்ரவரி, 2011

இந்தத் தேர்தலில் நடக்கப் போகும் உள்ளடி வேலைகள் !

வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதன்மைக் கட்சிகளைடையே கூட்டணி பேரங்கள் களைகட்டியுள்ளன. இல்லாத செல்வாக்கு வளர்ந்துவிட்டதாக இராஜபக்சே ஆதரவு புகழ் காங்கிரசு கட்சி திமுகவுக்கு நெருக்கடிக் கொடுத்துவருகிறது. அந்தப்பக்கம் சென்ற தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றிபெற்ற விஜய்காந்து கட்சி 48 இடங்களுக்கு அதிமுக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. ஸ்பெக்டரம் விவகாரத்தில் கருத்து கூறாமல் மவுனம் காத்த பாமக எதிர்பார்த்தபடியே திமுக கூட்டணியின் முதுகில் ஏறிக் கொண்டுள்ளது. மதிமுக அம்மாவின் அரவணைப்பிலேயே தொடர்கிறது, வைகோ சிரஞ்சீவியைப் பின்பற்றி அதிமுகவுடன் கட்சியையே இணைத்துக் கொள்ளலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரசை எதிர்க்கும் தன்னுடைய தேசிய அரசியல் நிலைப்பாட்டில் அதிமுகவுடன் நெருங்கி பேச்சுவார்த்தையை தொடர்கிறது. ஜெவின் நக்கல்களைப் பொருத்துக் கொண்டு சீட்டுக் கேட்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு தயக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கம்ப் போல் தேசிய அரசியலில் செல்வாக்கு உள்ள பாஜக ஆதரவற்றக் கட்சியாக தனி ஆளாக தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த அணைத்துக்கட்சிகளும் கொள்கை என்று எதையோ சொல்லிக் கொண்டாலும் தனிச் செல்வாக்கு எந்த்க்கட்சிக்கும் இல்லை, அவை அவை தனித்து நின்றால் வெற்றி வாக்கு வேறுபாடுகள் பெரிதாக ஒன்றும் இருக்காது. அப்படி தனித்து நிற்கும் வாய்ப்பே இல்லாத வண்ணம் கொள்கையிலும் நீர்த்து கொள்ளையிலும் பெருகியதால் கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே தமிழகத்தை கூறுபோட்டுப் பிரித்துக் கொள்ளமுடியும் என்கிற புரிந்துணர்வு நிலையில் கூட்டணியாக களம் காணுகின்றன.

முதலில் அதிமுக கூட்டணியில் இணையும் விகாந்து கட்சியைப் எடுத்துக் கொண்டால், தன்னை 'கருப்பு எம்ஜிஆர்' என்று சொல்லிக் கொண்டு அதிமுகவினரிடையே வெறுப்பாகப் பார்க்கப்பட்டவர், மேலும் அதிமுக கட்சி தலைவியால் கடந்தகாலத்தில் 'குடிகாரன்' என்று விமர்சனம் கிடைக்கப் பெற்றவர். விஜயகாந்தின் வாக்குகள் பெரும்பாலும் திரை ரசிகர்களான வாக்காளர்கள் வாக்குகள், அவற்றில் கனிசமானவை எம்ஜிஆருக்கு கிடைத்தவையாக இருந்ததால் மதுரை உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் அதிமுக வாக்குவங்கி பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வாக்காளர்களை வளைத்த வளர்ந்த விஜயகாந்து 48 சீட்டுகள் கொடுத்தாலும் அவற்றின் வெற்றிக்கு அதிமுக முனையுமா என்பது ஐயமே, தேமுதிகவையோ, பாமகவையோ ஒரு அரசியல் சக்தியாக வளர்வது தங்களுக்கு ஆபத்து என்றே திமுக அதிமுக உணர்ந்தாலும் அவர்கள் எதிரணிக்கு செல்வதைவிட தங்களது கூட்டணியிலேயே தொடர்வதை ஒரு சகிப்புத் தன்மையாக் கொண்டு தான் அவர்களை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்கிறார்கள். விஜயகாந்து கூட்டணியில் இணைந்தாலும் அதிமுகவினரின் முழு ஆதரவுடன் போட்டியிட்ட இடங்களில் பெரும்பான்மையானவற்றில் வெல்வது ஐயமே. ஆனால் சென்ற முறை கிடைத்த ஒரு இடத்தைவிட இந்த முறை இரண்டு இடங்களில் வென்றாலும் தேமுதிகவிற்கு அது வெற்றி வளர்ச்சியே என்றாலும் அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சியில் அது வீக்கம் தான்.

அடுத்து அடுத்தவன் இலையில் இருந்து எடுத்து திண்ணும் முடிவுக்கு வந்திருக்கும் காங்கிரசைப் பார்ப்போம், 80 சீட்டுகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்பதாக கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரசு காய் நகர்த்துவருகிறது. இதைப் பெற்றுக் கொள்ளும் முனைப்பில் ராசா கைது போன்ற நெருக்கடிகளைக் கொடுத்து திமுகவை பணிய வைக்க முயன்று கொண்டிருக்கிறது. பொறியில் அடைபட்ட எலி பொறிகடலையில் பங்குகேட்டால் தரமாட்டேன் என்று சொல்லுமா என்ன ? திமுக காங்கிரசின் வேண்டுகோளை மறுக்காமல் திணறுவதற்கு அவர்கள் அதிமுக பக்கம் சாய்வார்கள் என்கிற ஐயம் என்பதெல்லாம் 2005க்கு முன்பிருந்த திமுகவிற்கு இருந்திருக்கலாம், இப்போது இருப்பது ஸ்பெக்டரம் புகழ் திமுக. சிரஞ்சீவியின் பிராஜராஜ்யம் போல் திமுக கட்சியை தங்களுடன் இணைத்துக் கொள்ள காங்கிரஸ் நெருக்கடி கொடுக்காதவரை திமுகவிற்கு கவுரமே (திமுகவிற்கு லாபம் என்று சொல்லவரவில்லை, லாப / நட்டக் கணக்கிளெல்லாம் தற்போதிய திமுகவின் இலக்கணமே இல்லை). திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது ஸ்பெக்டரம் ஊழலில் திமுகவின் குற்ற உணர்வு மற்றும் காங்கிரசின் தமிழக ஆட்சி ஆசை ஆகியவற்றால் ஏற்படும் நிர்பந்தக் கூட்டணி. அதாவது ஒப்பந்தத்துடன் உறவு கொண்டு பின் கர்பமாக்கிவிட்டு ஓடியவனை பிடித்து வந்து கட்டிவைத்து கட்டிக்கச் சொல்வது போன்றது தான். ஊடகங்களுக்கு நீராராடியவுடனான பேரம் குறித்த திமுகவினர் கனிமொழி உள்ளிட்டோரின் பேச்சுகளை மத்திய அரசு நிறுவனங்களின் வழியாக கசிய விட்டு திமுகவிற்கு தலைகுனிவு, ராசா கைது, கலைஞர் தொலைகாட்சி சிபிஐ சோதனை உள்ளிட்ட என நம்பிக்கைத் துரோகங்கள் நிறைந்த கூட்டணி. காங்கிரஸ் கேட்கும் 80 தொகுதிகளை நிர்பந்ததால் திமுக கொடுத்தாலும் திமுவினரின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது ஐயமே, காங்கிரசார் திமுகவை மேடைகளில் சீண்டியதைப் போல் திமுகவினர் காங்கிரசாரை தாக்கிப் பேசாமல் போனாலும் திமுக - காங்கிரஸ் உறவு சீர்கெட்டால் திமுகவிற்கு அரசியல் ரீதியான ஆபத்து என்பதால் திமுகவினர் அடக்கியே வாசித்தனர். ஆனால் அந்த கடுப்பையும், வெறுப்பையும் கண்டிப்பாக தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிராக காட்டுவதற்கு திமுகவினர் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. காங்கிரசு நிற்கும் தொகுதிகளில் காங்கிரசு வாக்களிப்பதிவிட சுயேட்சைகளுக்கோ அல்லது அதிமுகவினருக்கோ வாக்களிப்பதையோ திமுகவினர் விரும்புவர்.

அதே போன்று அதிமுக அணியில் இடம் பெறும் விஜயகாந்தின் தேமுதிகவிற்கும் நடக்க வாய்ப்புள்ளது. எந்த முறையும் இவ்வளவு குழப்பங்களுடன் தமிழகம் தேர்தலை சந்தித்தே இல்லை. காரணம் ஒன்றை விட்டால் இன்னொன்று என்ற ஆறுதல் இருந்தது, ஜெயலலிதா ஊழல்வாதி என்ற வெளிப்படையாகத் தெரிந்த பிறகு திமுகவிற்கு வாய்ப்புக் கொடுத்தனர், பின்பு பணப்புழக்கம் இல்லை என்று மறுமுறை அதிமுகவிற்கு வாய்ப்புக் கொடுத்தனர். இந்த முறை தேர்தலை சந்திக்கும் எந்தப் பெரியக்கட்சியும் மக்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. சசிகலா குடும்பம் தமிழகத்தை பயமுறுத்தியதைவிட பலமடங்கு பயத்தை தமிழக மக்களுக்கு 'நிதி' குடும்பம் ஏற்படுத்திவிட்டிருக்கிறது. தேமுதிக மற்றும் காங்கிரஸ் இந்தத்தேர்தலுடன் காணாமல் போவதற்கான வாய்புகள் நிறைய உள்ளன.

இந்தத் தேர்தலில் கூட்டணிகள் பல்வேறு முரண்பாடுகளுடனும், நம்பிக்கையின்மையுடனும் இணைந்திருக்கின்றன, இவற்றின் வெறுப்புகளின் விகிதம் தேர்தல் முடிவுகளுடன் சேர்ந்தே தெரியவரும்.

19 பிப்ரவரி, 2011

சிங்கையில் திருமதி துளசி கோபால் !


நான்கு நாள் பயணமாக துளசி அம்மா என்கிற திருமதி துளசிகோபால் சிங்கைக்கு வந்துள்ளார், சிங்கைப் பதிவர்கள் சார்பில் நாளை துளசி அம்மாவுடன் பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது

இடம் : எக்ஸ்பளனேட் பார்க் (Connaught Dr)

நாள் நாளை (ஞாயிறு 20 /பிப்/2011)

நேரம் : மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை.

தொடர்பு கொள்ள : 98 767 586 (கோவி.கண்ணன்)


(அங்கு அருகில் இருக்கும் மெரினா பே - வில் மாலை 7 மணிக்கு லேசர் மற்றும் பிற ஒளிக்கற்றை காட்சிகள் நடைபெறுவதை இல்லத்தினரோடு வருபவர்கள் பார்த்து மகிழமுடியும்)

சிங்கைப்பதிவர்களும் வலைப்பதிவு வாசகர்களும் மற்றும் தமிழார்வளர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

*****

திருமதி துளசி கோபால் 8 ஆண்டுகளாக துளசி தளம் என்கிற தன்னுடைய வலைப்பதிவிலும், 10 ஆண்டுக்கு மேலாக பல்வேறு இணையத்தளங்களில் எழுதிவருபவர், பயணக்கட்டுரைகள் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் குறித்த நூல்களை எழுதியும், தொடர்ந்தும் எழுதிவரும் எழுத்தாளர். நியூசிலாந்து இடம் பெயர்ந்தவர் அவ்வப்போது சிங்கை, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு கணவர் திரு கோபாலுடன் வந்து செல்வார்.

சிங்கையில் திருமதி துளசிகோபால் தொடர்பு எண் : 84 373 242

18 பிப்ரவரி, 2011

முட்டை சைவமா ?

முதலில் சைவம் / அசைவம் விளக்கம் சொல்லிவிடுகிறேன். வலி உணரக் கூடிய நரம்பு மண்டலங்களை உடைய, உயிருக்கு உலை என்னும் போது எதிர்த்து போராடவோ, விலகி ஓடி தப்பிக்கவோ முயற்சிக்கும் விலங்கினங்களை கொன்று உண்பது அசைவம். இதை சங்ககாலத்தில் புலால் உணவு என்பார்கள். இதற்கு மாற்றாக இடம்பெயராத, வலி உணரக் கூடிய நரம்பு மண்டலம் இல்லாத, எதிர்ப்புக் காட்டாத தாவிரங்களையும் அவற்றின் பகுப்பு பொருள்களை உணவாக உட்கொள்வது சைவம் அல்லது சாத்வீக உணவு எனப்படும். தாவிரங்களை உட்கொள்வது எப்படி சைவம் என்றாகியது ? சைவம் என்பது ஒரு சமயம் அல்லது மதம் தானே ? என்பது பலருக்கு ஐயமாக இருக்கலாம். தன்னைப் போல் அலைந்து திரிந்து, வலி உணரக் கூடிய, வாழும் உரிமையுடைய சக உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது தவிர்க்க வேண்டியதே என்ற கொள்கையில் புலால் மறுப்பை கொள்கையாகவே வைத்திருந்தன சமணமும், பவுத்தமும். உயிர்களின் மதிப்பைப் போற்றுபவர்கள் என்பதால் புலால் மறுப்பாளர்களுக்கு சமூகத்தில் 'உயிர்களின் மீதான நல விரும்பிகள்' என்ற நற்பெயர் நீடித்தது. அவர்கள் சொல்வதை மக்கள் காது கொடுத்துக் கேட்டனர். தாம் சொல்வதைப் பிறர் கேட்கவேண்டுமென்றால் தாமும் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொள்வதே சிறந்த அறமாகும் என்கிற முடிவில் சனாதனப் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொள்வதற்குத் துவங்கின.

இந்திய சமயங்களில் புலால் மறுப்பு போற்றப்படுவதற்கு அனைத்துப் பிரிவுகளும் அதனை ஏற்றுக் கொண்டதே காரணம். சிவனடியார்கள் உணவு என்பதாக மரக்கறி உணவுகள் ஆறாம் நூற்றாண்டுகளில் சொல்(வது) வழக்காகி, சிவ உணவாகி, சைவ உணவு என்பதாக மருவி. புலால் மறுப்பு என்பது சைவ உணவு என்று பெயர் பெற்றது. மற்றபடி சைவ உணவிற்கும் சைவ சமயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை. சமணர்கள் தாவிர உணவு வகைகளிலும் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை விலக்கிக் கொண்டனர், இவை ஜைன உணவு எனப்படும். வைணவர்கள் சைவ சமயத்தை மறுத்து உருவாகியவர்கள் என்றாலும் சைவ உணவின் பெயரை அப்படியேத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள். வைணவ உணவு என்று சொல்வதில்லை. சைவம் என்பது சமயமாக அறியப்படுவதைக் காட்டிலும் அது ஒரு உணவு வகை என்ற புரிதலை பொதுமக்கள் வைத்திருக்கட்டுமே என்று விட்டுவைத்தார்களோ ! :). ஆறாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் சனாதனத்தில் இருந்து பிரிந்த சமைய(ல்) வகையல் இன்றைய காலகட்டத்தில் 'இந்து' மதம் என்ற பெயரில் ஐக்கியம் ஆனதால், இன்றைய தேதிக்கு சைவம் என்பது சமயமல்ல அது புலால் மறுத்தல் அல்லது தாவிர வகை உணவின் பெயர் மட்டுமே.

முட்டை சைவமா ?

உண்ணத்தக்க தாவிரவகைகளை அல்லது அவற்றின் விதை உணவாக்கிக் கொள்வது தான் சைவ உணவு. அந்த வகையில் பார்த்தால் முட்டை என்பது விலங்குகளின் மறு உற்பத்திக்கான விதை தான். முட்டையில் கரு இருந்தாலும் அவற்றில் நரம்பு மண்டலங்களோ, வலி உணரக் கூடிய மூளைப் பகுதியோ இல்லை. ஒரு முட்டை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எதிர்ப்புக் காட்ட அவற்றில் வளர்ந்த நிலையிலான, அசையக் கூடிய உயிர்த்தன்மை இல்லை, அடைகாக்காத முட்டை என்பது முளைக்கக் காத்திருக்கும் விதை போன்றதே. அவற்றை உணவாகக் கொள்வது அசைவ உணவு என்னும் பகுப்பில் வராது என்றே நினைக்கிறேன். மதவாதிகள் கருத்தடைகளையும், தற்காலிக கருத்தடைகளை ஏற்றுக் கொள்ளும் போது வளராத கரு உடைய முட்டையை சைவம் என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த பவுத்த சைவர்கள் பிற விலங்கின உணவுகளைத் தவிர்த்தாலும் முட்டையை உணவாக்கிக் கொள்கிறார்கள்

இருப்பினும் சைவ உணவு என்பது வெறும் தாவிர உணவு தொடர்புடையது மட்டுமின்றி மன நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதால் வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணர்வு சுரப்பிகளை மிகுதியாகத் தூண்டக் கூடிய உணவுகளையும் சேர்த்தே தவிர்த்தனர் ஜைனர்கள். உணவு உணர்வுகளை தூண்டுமா ? என்ன கோவியாரே உளறுகிறீர்களா ? வெறும் பார்லி தண்ணீர் தான் பியர், பியர் பாட்டலில் சைவ முத்திரை கூட குத்தப்பட்டிருக்கும் அதை அளவுக்கு மிகுதியாக குடித்துவிட்டால் உணர்வுத் தூண்டலில் ஆடும் ஆட்டம் வெளிப்படையானது தானே. வெங்காயம், பூண்டு உணவு வகைகளைப் போன்றே முட்டைக்கும் சுரப்பிகளைத் தூண்டும் ஆற்றல் உண்டு. பெற்றோர் பழக்க வழக்கம் என்னும் வெறும் கொள்கைகாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு முட்டை கூட சைவம் தான், உணவாக ஏற்கலாம் என்பது எனது பரிந்துரை. மற்றபடி சாத்வீகம், அமைதி இவற்றின் நலவிரும்பிகளுக்கு வெங்காயம், பூண்டு இவற்றுடன் முட்டை கூட அசைவமே.

17 பிப்ரவரி, 2011

மங்குனியின் ஒப்புதலும் சகுனியின் தந்திரமும் !

பிரதமர் மற்றும் அமைச்சர் பதவிகள் என்பது கூட்டாக ஏலம் எடுத்த ஏலத்திற்கு வந்த தனியார் சொத்து உடைமைகள் போலவும், ஏலம் எடுத்தவ்ர்களில் சிலர் அவங்க பங்குக்கு அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தினார்கள் அதற்கும் எங்களுக்கும் தொடர்போ தட்டிக் கேட்கும் பொறுப்போ இல்லை என்பதை நேற்றைய பேட்டியில் மன்மோகன் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதில் பாராட்டத்தக்கது 'ஊழல் நடை பெற்றதை ஒப்புக் கொண்டு தான். கபில் சிபில் போன்ற காங்கிரசு கைத்தடிகள் ஊழல் நடைபெறவே இல்லை என்று பேசியதன் மறுப்பாக பிரதமரே ராசாவையும் ராசாவுக்கு தொலை தொடர்பு பதவி கொடுக்கச் சொன்ன திமுகவையும் நேரடியாகவே போட்டுக் கொடுத்துள்ளார். இந்த பிரபஞ்சத்தின் மகத்தான ஊழலை செய்தி இதழ்கள் வெளிக் கொணர்ந்ததற்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார். அத்தோடு இல்லாமல் ஊழலை பெரிதுபடுத்தாமல் நாட்டின் பிற நல்லத் திட்டங்களை பாராட்டவும் வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்திருக்கிறார். ஊழல் குறித்து ராசாவை (திமுகவை) கைக்காட்டியதும், செய்தித்தாள்களையும் பாராட்டியது மன்மோகன் தலைமையிலான கூட்டாச்சி அரசின் ஒப்புதல் வாக்கு மூலமாகும். கூட்டணி கட்சிகளின் செயல்களில் தலையிட முடியாமல் போனதன் கையாலாகத நிலைமைதான் எங்களது நிலைமை என்று சொல்லிக் கொண்டது, நாட்டின் வளர்ச்சியை விட காங்கிரசார் எங்களுக்கு பதவிகளே முதன்மையானவை என்பதும் அதில் சொல்லாமல் சொல்லப்படும் தகவல் ஆகும். இது போன்ற வெளிப்படையான பேச்சுகளை பாராட்டலாம், ஆனால் இந்த ஒப்புதல்கள் ஊழல்களை முற்றிலும் பல முனைகளில் இருந்தும், நீதி மன்றமும் தலையிட்ட பிறகே நடந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது கையும் களவுமாக பிடிபட்டவனின் ஒப்புதல் போன்றது தான் என்பதால் ஒப்புக் கொள்ளும் மனநிலைக்கு பாராட்டாலாம். ஆனாலுன் கருணாநிதியும் கைத்தடிகளும் ராசா வசமாக மாட்டிக் கொண்டாலும் இன்னும் ஊழலை ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மன்மோகனின் பேட்டி பல செய்தி இதழ்களில் வந்து பல்வேறு தரப்பு மக்கள் குறிப்பாக தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் இன்றைய தேதியில் இவற்றை உடனடியாக அறிந்து கொள்வதை தடுக்கவே 'மீனவர்கள் கைதிற்கான போராட்டங்களை' திமுக அரசு நடத்திப்பார்க்கிறது. இதன் நோக்கம் மீனவர் நலன் குறித்து அல்ல. மீனவர்களை கைது செய்திருக்கிறார்கள், முன்பைப் போல் சுட்டுக் கொல்லவில்லை. சுட்டுக் கொன்ற போதெல்லாம் மீனவர்களுக்கான எந்த போராட்டத்தையும் நடத்தி இருக்காத திமுக ஆதரவாளர்கள், கைதுகளுக்கு போராடி கனிமொழி உள்ளிட்டோர் சிறை செல்வதாக செய்தி போடுவதால் மன்மோகனின் ஒப்புதல் வாக்குமூலம் பல்வேறு தரப்பை அடைவதை தடுக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

சிபிஐ விசாரணைகள் ராசாவிடம் விசாரணை நடத்தி உண்மைகளைப் பெருகிறதோ இல்லையோ தனக்கும் கீழ் பணி புரிந்தவரின் ஊழல் குறித்து பிரதமரே வாய் திறந்த பிறகு ராசா குற்றவாளியே இல்லை என்று திமுக தரப்பில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இப்பவும் ராசா குற்றவாளி இல்லை என்று திமுக தரப்பு உறுதியாக நம்பினால் பிரதமர் பொய் சொல்லுகிறார் என்று குற்றம் சாட்டி காங்கிரசுக்கு எதிராக மத்திய அரசு அலுவலங்கள் முன்பு போராட்டம் நடத்தலாமே. மன்மோகன் மற்றும் சோனியாவின் உருவ பொம்மைகளை திமுகவினர் எரித்து போராடலாமே ? முன்வருவார்களா ? கருணாநிதியின் திமுக ஆதரவாளர்கள். மன்மோகன் திமுக - காங்கிரசு சட்டமன்ற கூட்டணி வெற்றி பெரும் என்று வெளிப்படையாகக் கூறினாலும் திமுகவுடன் கூட்டணி தேர்தல் வரையிலும் தொடருமா என்பது ஐயமே. ஒரு மாநிலத்தில் கிடைக்கும் வெற்றிகளை விட ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவு காங்கிரசுக்கு தேவை என்பதால் தான் ராசாவின் கைது நடவடிக்கையும், பிரதமரின் ஒப்புதலும் நடந்தேறி இருக்கிறது, இந்த ஆதரவுகளை தக்கவைத்துக் கொள்ள காங்கிரசு தன் கையைப் பிடித்திருக்கும் திமுகவின் கையை உதறினாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. காங்கிரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது, எனவே திமுகவை கழட்டிவிடுவதன் மூலம் தனக்கு 'இமேஜ்' கிடைக்கும், அல்லது 'இமேஜை' தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று நம்புகிறது.

இதையெல்லாம் பார்த்து கணக்கு போடும் கருணாநிதி மகளை மீனவர்போராட்டத்தினால் கைது செய்வதன் மூலம் மகளை கைது செய்து மான்பு மிகு மன்னவன்' பட்டம் கிடைக்குமா? மீண்டும் திமுக அரியணை ஏறுமா என்று பார்க்கிறார். இனத்துரோகம், இமாலய ஊழல், வாரிசு(ருட்டிக்கொள்ளும்) அரசியல் என தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு ஓட்டைகளுடன் திமுக கப்பல் தேர்தல் கடலில்.... தேறுவது ஐயமே. ராசாவின் ஊழல் அம்பலம் பார்பன சதி, தலித் விரோதம் என்றெல்லாம் கதைவிட்டுப்பார்க்கும் முதல்வர், இன்னும் என்ன என்ன நாடகம் நடத்தி மேலும் மேலும் பெயரிழுக்குப் படப் போகிறாரோ !

14 பிப்ரவரி, 2011

முஸ்லிம்களும் மூன்றாம் பாலினமும் !

ஒரு சில மீன் வகைகள், தவிர இனங்கள் தவிர்த்து ஆண் / பெண் இருத்தன்மை ஒன்றாக அமையப்பட்ட உயிரினம் மிகக் குறைவு. ஒரு செல் உயிரிகளுக்கு பால் அமைப்புகள் கிடையாது அவை தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும். உயிரின இனப் பெருக்கத்திற்கு உயிர்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் உயிர்களை எப்போதும் உற்பத்தி செய்து கொண்டிருக்க முடியும் என்கிற விதியில் ஏற்பட்ட பிரிவுகளே ஆண் / பெண் அமைபு. ஈர்ப்பு என்பது இன்பமாகவும் அதன் விளைவுகள் இனப் பெருக்கம், அவ்வாறு பெருகும் இனத்திற்கு பாதுகாப்பான தாயன்பு என்கிற இணைப்பு அவற்றின் பருவ வயது வரையிலான வளர்ச்சிக்கு இயற்கை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு அமைப்பே ஒரே உயிரினத்தின் பால் வேறுபாடுகள். உடலமைப்பும், இனப்பெருக்க உறுப்புகளும் ஒரு உயிரனத்தை ஆண் பெண் என்று காட்டுகின்றன என்றாலும், இந்த இரண்டு பிரிவும் ஒன்றை ஒன்று உற்பத்தி செய்யும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. பால் உறுப்புகள் தவிர்த்து ஒரு ஆண் தன் வடிவத்தைப் போன்ற பெண்ணிற்கு தந்தையாவதும், ஒரு தாய் தன் உருவத்தை ஒத்த ஆணைப் பெற்றெடுப்பதற்கும் இயற்கை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. இவ்வாறு உருவம் பெற்றிருக்கும் உயிரினங்கள் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் அறிந்து கொள்ள முதல் காரணம் அவற்றின் உடலமைப்பு தான். மனித இனத்தில் மனிதன் சமூகமாக மாறவில்லை என்றால் இந்த ஆண் / பெண் பிரிவுகளில் உடலும் மனமும் சரியாகவே பொருந்தி இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்வதற்கும், ஒரு பெண் தன்னை ஆணாக உணர்வதற்கும் உடல் குறித்த காரணங்களை விட சமூகம் குறித்தக் காரணங்களே முதன்மையாகிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சமூக அமைப்பில் தான், இவற்றை மீறிய மூன்றாம் பாலினமாக மனிதர்கள் தோன்றுகிறார்கள்.

ஆண் பெண் பாகுபாடின்றிய காட்டுவாசிகளிடமோ, நரிக்குறவ்ர்களிடையோ மூன்றாம் பாலினர் உற்பத்தி ஆகுவதில்லை என்றே நினைக்கிறேன், அங்கே இனப் பெருக்கம் மட்டும் அதைச் சார்ந்த ஈர்ப்பு என்பதைத் தவிர்த்து ஆண் / பெண் மனங்கள் எதுவும் கிடையாது, வேட்டையாடுதல், தொழில்கள் ஆகியவற்றை இருவரும் சேர்ந்தே செய்கிறார்கள். நாகரீக வளர்ச்சி பெற்ற சமூகத்தில் தான் பெண்ணுக்கான இலக்கணமும், ஆணுக்கான இலக்கணமும் புழக்கத்தில் இருந்து வாழ்க்கைத் தரமாக ஆகிவிட்ட படியால், உடலும் மனமும் ஒன்றிணைந்து மூன்று வயதின் பிறகு ஒரு குழந்தை தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைக்கத் துவங்குகிறது. பருவ வயதினில் ஏற்படும் உடலியல் மாற்றங்களில் அதை உறுதி செய்து கொள்கிறது. எதிர்பாராவிதமாக ஒரு சிலரின் பருவமாற்றங்களில் ஏற்படும் கோளாறுகள் வேறுமாதிரியான (சுரப்பிகளைத் தூண்ட அல்லது கட்டுப்பட்டு) விருப்பங்களை ஏற்படுத்த தன்னுடைய பாலினம் உறுதி செய்ய முடியாத சிக்கலுக்குச் செல்லவே அவர்கள் குழப்பத்தில் சென்று புதிய முடிவுகளை எடுக்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இவர்கள் தான் மூன்றாம் பாலினர். இவ்வாறு ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணாக நினைத்து மூன்றாம் பாலினர் நிலை அடைவது என்பது அவராக விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை இல்லை, உடல் மற்றும் மனச் சூழலலால் அமையப் பெற்றதே. பிறக்கும் போது ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தாலும் அதன் முழுமை என்பது பருவ மாற்றங்களினால் பெறப்படுவதே. ஆகையால் ஒருவர் ஆணா பெண்ணா என்பதை பிறப்பு முடிவு செய்வதில்லை அதை பருவ வயதே முடிவு செய்கிறது. இவற்றை மதம் மற்றும் குரான் வசனங்களைக் காட்டி இஸ்லாமிய சமூகம் ஒப்புக் கொள்வதில்லை. காரணம் அல்லாவின் படைப்பு ஆணையும் பெண்ணையும் தான் படைக்கிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவரை அல்லா படைக்கவே இல்லை என்கிறார்கள்.

ஒரு சில கட்டுபாடுகளை மூன்றாம் பாலினத்தினர் மீது இஸ்லாமிய நாடுகள் விதித்திருக்கிறது. அதாவது மூன்றாம் பாலினம் என்கிற சொல்லே இஸ்லாத்திற்கு எதிரானது ஆகவே மூன்றாம் பாலினத்தில் ஆணுறுப்பு உடையவர்கள் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அழைத்துக் கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போன்ற தீவிர இஸ்லாமிய நாடுகளில் மூன்றாம் பாலினர் தன்னை பெண்ணாக அறிவித்துக் கொள்ள ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டவராக இருக்க வேண்டும், இதற்கு சட்டத்திலும் அனுமதி உண்டு. ஆனால் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்களுக்கு பெண்களைப் போன்று நடந்து கொள்ள அனுமதி கிடையாது. . மலேசிய உள்ளிட்ட வேறு சில நாடுகளில் ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டாலும் அரசு ஆவணங்களில் அவர்களின் பாலினம் ஆண் என்றே இருக்கும். மதம் சாராத அரசுகள் ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ அறிவித்துக் கொள்ள உரிமை வழங்குகிறது. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் நாட்டின் ம்த உணர்வின் ஆழங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் திருநங்கை அல்லது மூன்றாம் பாலினத்தினர் பற்றிய புரிந்துணர்வு இருந்தாலும் அவர்களை சக மனிதனாக மதிக்கும் நிலை இன்னும் வரவில்லை. அண்மையில் தமிழகத்தில் மூன்றாம் பாலினமாக ஆன ஒருவரை 'இஸ்லாத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்' என்று அவரது உறவினரான முஸ்லிம் இளைஞரால் ஓட ஓடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமூகத்தில் மூன்றாம் பாலினர் பற்றிய ஒரு தெளிவோ, வழிகாட்டுதலோ சரியாக அமையவில்லை காரணம் இஸ்லாம் உடல் உறுப்புகளை வைத்து தான் ஆண் பெண் என்று முடிவு சொல்கிறது, அதற்கு மாற்றாக அறிவித்துக் கொள்ள குரானிலோ, ஹதீசீலோ வழிகாட்டுதல் கிடையாது, தடையே நிலவுகிறது.

மூன்றாம் பாலினர் மட்டுமின்றி மனவளர்ச்சி இன்றி பிறந்தக் குழந்தைகள் குறித்து இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு இத்தகைய படைப்பு அல்லாவின் குறைதானே என்று கேட்டால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், பெற்றோர் கர்பம் அடைந்த போது தவறான மருந்துகளை உட்கொண்டிருப்பார்கள் அதனால் இத்தகைய குழந்தை பிறந்திருக்கலாம் மற்றபடி 'அலக்' என்ற நிலையில் கருவுறச் செய்வதுடன் அல்லாவின் வேலை முடிந்துவிட்டது என்கிறார்கள். அல்லா நன்கு அறிந்தவன் என்றால் நாளைக்கு இந்தக் குழந்தை பிறந்தால் இப்படி ஆகிவிடும் என்று அந்த கருவுறுதலையே தடுத்து இருக்கலாமே ? என்ற என்போன்றவரின் அப்பாவித் தனமான கேள்விகள் அல்லாவின் படைப்புத் திறனை என்றுமே குறைத்து மதிப்பிடாது என்றே நினைக்கிறேன். மூன்றாம் பாலினரை மூன்றாம் பாலினர் என்று அழைக்காவிட்டாலும் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொள்கிறார்களே என்பது மகிழ்ச்சியான ஒன்று தான். என்னைப் பொருத்த அளவில் மூன்றாம் பாலினப் பெருக்கத்தை ஆண் / பெண் சமூக இலக்கணங்களை சரி செய்தால் குறைக்க முடியும் என்றே கருதுகிறேன், ஆணாக பிறந்த ஒருவர் விரும்பி பெண் உடைய அணிந்து கொள்ள முதல் காரணம் பெண்ணிற்கான உடை இவைகள் என்பதை சமூகம் முடிவு செய்திருப்பதும், பெண் என்பவள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்ற இலக்கணங்கள் போன்றவையாகும், உடல் ரீதியான பருவ மாற்றங்கள் ஒரு ஆணை பெண்ணாக உணரவைத்தாலும், சமூகம் பால் வேறுபாடின்றி இருக்க தனக்குத் தானே ( ஆண் பெண்ணாக மாறும் ஆசை) தூண்டல் உடல் மற்றும் மன ரீதியில் பயணப்பட ஒன்றும் இருக்காது. மற்றபடி மத ரிதியான கட்டுப்பாடுகளோ, மருந்துகளோ இந்த உணர்வுகளை குறைத்து மூன்றாம் பாலின உற்பத்தியை குறைத்துவிடாது. ஆண் பெண் மன ரீதியான பாகுபாடு இல்லாத இனங்களில், உயிரினங்களில் இத்தகைய இரட்டை தன்மை உடைய மூன்றாம் பாலினம் அரிது அல்லது இல்லை என்றே கூறிவிடலாம்.

மூன்றாம் பாலினத்தினரையும் ஓரின சேர்கையாளர்களையும் ஒன்றாகவே பார்த்து நிராகரிக்கிறது இஸ்லாம்.

பின்குறிப்பு : கட்டுரையில் ஏதும் தவறானவை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், மாற்றிக் கொள்கிறேன்.

9 பிப்ரவரி, 2011

மாயாவதியின் காலணியும் இந்துத்துவமும் !

மாயாவதியின் காலணியை விருது பெற்ற காவலர் துடைப்பதாக படங்களுடன் செய்திகள் வெளி வந்துள்ளன. மாயாவதி ஒரு ஆண் முதல்வராக இருந்தால் இந்த அளவு பெரிதுபடுத்தப்பட்டு இருக்குமா என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். இது போன்ற மனிதனை இழிவு படுத்தும் செயல் ஒன்றேயெனினும் அதில் தொடர்புடைய நபர்கள் ஆணா பெண்ணா என்பதால் அது வெளிச்சம் பெருகிறது. ஒரு பெண்ணுக்கு அதுவும் தலித் பெண்ணுக்கு காலணி துடைப்பது எத்தகைய இழி செயல் என்பதைத் தான் அந்த செய்திகள் பரப்ப முற்படுகின்றன. நான் மாயாவதியின் செயல் சரி என்று வாதிட இதை எழுதவில்லை. மாறாக நானும் மனித உரிமை மீறல் என்கிற நிலையில் அதை கண்டிக்கிறேன். ஆனால் இவற்றை விமர்சிப்பவர்களின் நிலை குறிப்பாக தயிர்சாத மற்றும் உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்வோரின் வன்கொடுமைகளை கண்டிக்கத் துணிவு இல்லாத செய்தி இதழ்களின் மனித உரிமை கரிசனம் எத்தகையது எதனுடன் தொடர்புடையது என்பதை எண்ணிப் பார்க்க அவர் ஒரு பெண் மேலும் அவர் ஒரு தலித் என்பதால் இவை பரபரப்பாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

தலித்துகள் பொது இடத்தில் காலணி அணிய இன்னும் கூட சில கிராமங்களில் தடை இருக்கின்றன. தோலில் துண்டு போட்டுக் கொள்ள முடியாது, இடுப்பைச் சுற்றி அணிந்து கொள்ள வேண்டும், இரட்டை தம்ளர். அவர்கள் வேலை பார்க்கும் வீட்டின் கழிவறையைக் கூட அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி இல்லை. குறிப்பிட்ட கோவில்கள், சுடுகாடு, சர்ச்சுகள் எங்கும் அவர்களுக்கு அனுமதி மறுப்பு. ஒரே ஒரு (தலித்) பெண் காலணியைத் துடைக்க வைத்துவிட்டாள் என்று துடிக்கும் இவர்கள் தலித்துகளுக்கு தொடரும் சமூகக் கொடுமைகளைக் களைய என்றாவது முயற்சிக்கிறார்களா ? கர்ம யோக அடிப்படையில் ஒருவன் தன் தொழிலை அதாவது தலையில் மலக் கூடை சுமக்கும் ஒரு தலித் மறுபிறவியில் சுவர்க்கத்தை அடைவான் என்றார் குஜராத்தின் மோடி. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து 'தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைகள்' கூகுளில் தேடினால் அவலங்களையும், அவமானங்களையும் துப்பிக் காட்டுகிறது கூகுள்.

புதிய ஏற்பாட்டு பைபிளில் இருந்து ஏசு நாதர் கூறுவதாக ஒரு குறிப்பு கொஞ்சம் மாற்றத்துடன்,

"உங்களில் யார் தலித் வன்கொடுமையாளர்கள் மற்றும் வன்கொடுமைக்கு ஆதரவானவர்கள் இல்லையோ அவர்கள் மாயாவதி மீது கல்வீசுங்கள்"

இணைப்பு : பாஜகவின் தலித் விரோத பரிசோதனைக்கூடம்(குஜராத்)!

6 பிப்ரவரி, 2011

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ?!

'மிஸ்டர் க்ளீன்' காங்கிரசு கட்சி தன் பகடையை நன்றாகவே உருட்டுகிறது. பிகாரில் புறமுதுகு காட்டிய கோ மகன் ராகுல் காந்தி தமிழக சட்ட(ச)பைக்கு 90 இடங்கள் வரை பேரம் பேசுவதாக நாளிதழ் செய்திகள் அறிவிக்கின்றன. அந்த 90ம் ஏ,பி,சி என்ற பிரிவுகள் அடிப்படையில் அதாவது ஏ - காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள், பி - காங்கிரஸ் கூட்டணியாக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள், சி - இழுபறி தொகுதிகள். கருணாநிதியின் இலவச அறிவிப்புகளை வைத்து திமுக கூட்டணி வெற்றிபெரும் என்கிற (நப்)பாசையில் இவ்வாறு மிகுதியாகக் கேட்கப்படுவதாக நினைக்க முடிகிறது, அதிலும் திமுக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் தனிப்பட்ட கவனமாக ராசா கைது நடவடிக்கைகள் இந்த நேரத்தில் செய்வதன் மூலம் நெருக்குதல் கொடுத்து கேட்டும் சீட்டுகளைப் பெற்றுவிட முடியும் என்று காங்கிரஸ் கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள், இதன் மூலம் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் கனிசமான வெற்றியைப் பெற வாய்ப்புள்ள அதே நேரத்தில் திமுக ஊழல் குறித்த குற்றச் சாட்டில் தோல்வியைச் சந்தித்தால் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு தன் தலைமையில் ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் நம்புவதாக ஐயம் ஏற்படுகிறது.

அதாவது திமுகவின் இலவசத் திட்டங்கள் காங்கிரசை கரையேற்றும் அதே சமயத்தில் திமுகவின் மெகா ஊழல் திமுகவை (மட்டும்) வீழ்த்தும் என்றும் நம்புகிறார்கள் போலும். இதற்கனவே திமுகவின் இலவசத் திட்டங்கள் மத்திய அரசின் மானியத்தில் செயல்படுவதாக இளங்கோவன் உள்ளிட்டோர் கூறுவதை ஒப்பு நோக்கவும். அதாவது ஊழலில் பலனை திமுக அனுபவம் செய்யவும், இலவசத் திட்டங்களின் அறுவடையை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திட்டம் போலும்.

ராசா அப்பழுக்கற்ற உத்தமராசா என்றும் பார்பனப் பத்திரிக்கைகளின் சூழ்ச்சி என்று புலம்பும் தாத்தா நெருக்குதல் தரும் காங்கிரசிற்கு அடிபணிவது 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதை நினைவுப்படுத்துகிறது. தாத்தாவின் நிலை காங்கிரசை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலைதான். தாத்தாவின் நிலை பரிதாபம் என்றாலும் இது எதிர்பார்த்த ஒன்று தான். நேர்மையானவர்கள் வளைய மாட்டார்கள்.

தாத்தாவுக்கும் நமக்கும் தெரிந்தவையில் தாத்தா மவுனம் சாதிப்பவை :

1. ஸ்பெக்டரம் டேப் விவகாரத்தில் ராசா - நிராடியா தொடர்புடைய உரையாடலை மத்திய அரசின் கீழ் உள்ள தொலை தொடர்பு நிறுவனமே வெளியிட்டது. இதில் காங்கிரசின் கைங்கரியம் இருக்கிறது என்றும் தெரிந்தும் தாத்தாவின் மவுனம்

2. நீராராடியாவுன் மத்திய அமைச்சர் பதவிகளுக்கான போரம் குறித்த உரையாடல், இது ஒரு நரித்தனமான காங்கிரசின் அரசியல் அசிங்க விளையாட்டு, நீராராடியா டெலிபோன் பேச்சுகளில் திமுகதரப்பின் பேச்சுகளை மட்டுமே வெளியிட்டுவிட்டு, நீரா ராடியா காங்கிரசின் எந்த பிரமுகருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை வெளியிடாமல் காங்கிரஸ் தற்காத்து கொண்டது, நீரா ராடியா காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரா ? அவர் கண்டிப்பாக திமுக அமைச்சர் பதவிகளுக்கு இன்னொரு காங்கிரஸ் பெருந்தலைகளிடம் தானே பேசு இருப்பார் அது ஏன் வெளிவரவில்லை. இதை ஏன் தாத்தா இதுவரை கேட்காமல் வெறும் பார்பன பத்திரிக்கை சதி என்றே கூறி வர அதற்கு போயாஸ் தோட்டத்து முன்னாள் பூசாரி (மானமிகு வீரமணி ஐயா) ஜிங்க்சா அடிக்கிறார் ? பொதுமக்களுக்குத் தோன்றும் இந்தக் கேள்விகள் திமுகவினருக்கு தோன்றாதா ?

திமுக காங்கிரசை கேள்வி கேட்காததற்கு ஸ்பெக்டரம் ஊழலில் பெரும் பங்கு திமுகவிற்கு இருப்பதே காரணம், அதற்கான வழுவான ஆதாரமும் காங்கிரஸ் வசம் உள்ளது. தயாநிதி மாறன் தொலைதொடர்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இராசா அமர்ந்த பிறகு ராசாவின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு அதன் பிறகான மத்திய அரசு தேர்தல் முடிகளுக்கு பிறகு மத்திய அமைச்சர் பேரமும் பதியப்பட்டுள்ளது. ஆக ஸ்பெக்டரம் விவகாரம் காங்கிரசிடம் இலங்கைப் போருக்கு முன்பே சிக்கி இருக்க, திமுகவை காங்கிரஸ் தன் இலங்கை அதிபரின் ஆதரவுக்கும் பயன்படுத்தி இருக்கிறது, இதன் பிறகும் தாத்தா போர் நிறுத்தத்திற்கு ஆடியவை வெறும் நாடகம் தான். ஒராண்டாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடிக்கக் காரணம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிறது என்பதால், இதில் திமுகவுக்கு நெருக்கடிக் கொடுத்து மிகுதியான இடங்களைப் பெற்று வென்றால் தன் தலைமையில் ஆட்சி அமைத்துவிட்டு திமுகவை கழட்டிவிடலாம் என்பதே காங்கிரசின் எண்ணமாக இருக்கவேண்டும். முதலில் திமுகவின் விரல்களைப் பயன்படுத்தியும் தமிழர்களின் கண்களில் குத்திய காங்கிரஸ் பிறகு திமுகவின் கையைக் கொண்டே திமுகவை குத்திக் கொள்ளும் நிலைக்கு பகடை ஆடிவருகிறது.

திமுகவின் ஊழல் குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை, அதனால் இலவச திட்டங்களினால் திமுக வெல்லும் என்று உடன்பிறப்புகள் பரப்பி நம்பி வந்தாலும், திமுகவின் இலவசத் தொலைகாட்சி வழியாகவே திமுகவின் ஊழல்களையும் அறிந்துள்ளார்கள் பெருவாரியான மக்கள். ஈழ மற்றும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவானர்களின் எழுச்சி காங்கிரசுக்கு எதிராக பலமாகவே வேர்விட்டிருக்கிறது. எனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அது ஒரு உடன்கட்டை கூட்டணி தான். இதில காங்கிரஸ் தன் தலைமையில் கூட்டணி ஆட்சி என்னும் கனவுக்கு உரமாக உருட்டி விடுவது பகடையா? அல்லது தனக்குத் தானே கட்டிக் கொள்ளும் (பீகாரில் தோற்றோடியதைப்) போன்ற பாடையா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்