பின்பற்றுபவர்கள்

பல்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஏப்ரல், 2012

* போகாத ஊருக்கு சில வழி !

ரு இடத்தில் மனிதனின் காலடிபடுவதால் பூமிக்கு ஒண்ணும் பெருமை கிடையாது, மனிதன் காலடிபட்டால் காடுகள் அழிக்கப்படும், மனிதர் தவிர்த்த உயிர்வாழ்க்கைக்கு அங்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை

****

ண்டார்டிக்கா பற்றி பாட நூல்களில் படித்திருக்கிறோம், அதில் எவ்வளவு தகவல்கள் நினைவில் இருக்கின்றன என்று தெரியாது. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்புகளில் அண்டார்டிக்கா ஐந்தாம் இடத்தில் வருகிறது. 96 விழுக்காடு பனிக்கட்டிகளால் பரவி இருக்கும் கண்டம், தென் துருவம் இங்கு தான் அமைந்திருக்கிறது.  தெற்குமுனைப் பெருங்கடலால் முழுவதுமாக சூழப்பட்ட தீவு கண்டம். மொத்தப் பரப்பளவு 1 கோடியே 50 லட்சம் சதுர கிமீ. அண்டார்டிக்கா பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்கா கண்டமும் பூமியின் ஒரே நிலப்பரப்பாக இணைந்திருந்து பின்னர் பிரிந்து சென்றுள்ளதாம். தற்பொழுது ஆண்டுக்கு 10 மீட்டர் என்ற அளவில் தென் அமெரிக்காவின் பக்கமாக நகர்ந்துவருகிறதாம். 


வெப்ப நிலை : அண்டார்டிக்காவின் தட்பவெப்பம் உறை நிலைக்கு கீழேயே ஆண்டு முழுவதும் இருக்கிறது, குளிர் சூறைக்காற்றுடன் குளிர்காலங்களில் அதன் வெப்ப நிலை - 82 டிகிரி, கோடை காலங்களில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 5 டிகிரி வரை இருக்குமாம். முழுவதுமாக பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளதால் பனிப்பாலைவனம் என்றும் சொல்லப்படுகிறது, கடற்கரைப் பகுதிகளில் பென்குயின் மற்றும் சீல் போன்ற கடுங்குளிர் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன, மையம் நோக்கிச் செல்லச் செல்ல அதுவும் கிடையாது, சில பறவை இனங்களும், நுண்ணியிரிகளும் தென்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. அண்டார்டிக்கா என்பதற்கு  (ரோமன் மொழியில்) 'தென் முனையம்' என்பதே மொழிப் பெயர்ப்பாம். உலக நன்னீரின் 70 விழுகாடு அண்டார்டிக்காவில் மட்டுமே பனியாக உறைந்துள்ளதாம். அதெல்லாம் சேர்ந்து உருகினால் கடல் மட்டம் 200 அடிக்கு உயரும் என்கிறார்கள். அண்டார்டிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை ஆனால் உறைந்த நிலையில் ஏரிகள் பல உள்ளனவாம், அவற்றிளுள் துளையிட்டு ஆராய அப்பரப்பு வியாழன் கோளின் சந்திரனை ஒத்து இருப்பதால் ஏரியில் ஏதேனும் உயிரினம் வசித்ததாக கண்டிபிடித்தால் வியாழனின் சந்திரனிலும் உயிர் வாழ்க்கைக்கு வாய்ப்புள்ளது என்று தெரியவருமாம்.

அண்டார்க்டிக்கா பற்றி நாம் முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டியது அதன் கடுங்குளிர், பனிப்பாறைகள் தான் உலகின் அனைத்து கடல்களில் தட்பவெப்பங்களை சரி செய்து நாம் வாழும் நிலப்பரப்புகளின் சுற்றுச் சூழலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது, அண்டார்டிக்காவின் பனி உருகினால் கடல் மட்டம் உயருவதுடன் வெப்பமும் மிகுதியாகும். அதனால் தான் அண்டார்டிக்காப் பகுதி பண்ணாடுகளால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது, பசிபிக் கடலில் நடக்கும் அணுகுண்டு சோதனைகள் அண்டார்டிக்காவில் நடப்பது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் உருகும் பனி கடல் நீரில் சேர்ந்து பின்னர் குளிர்காலத்தில் கடல் நீரிலிருந்தே பனிக்கட்டிகள் உருவாகிவிடுமாம், அதனால் அண்டார்டிக்காவின் வெப்ப நிலை தம்மைத் தாமே சரி செய்து கொள்வதாக சொல்கிறார்கள். வட துருவத்தைக் காட்டிலும் தென் துருவ அண்டார்டிக்காவில் குளிர் மிகுதி ஏனெனில் இது கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் நிலப்பரப்பில் அமைந்திருப்பதால் தான் என்கிறார்கள்.




பகல் இரவு :  ஐரோப்பிய சாலைகள் அனைத்தும் ரோமை நோக்கிச் செல்கிறது என்று சொல்வது போல் அண்டார்க்டிக்காவின் மையத்தில் இருந்து எந்தப் பக்கமும் பயணம் செய்ய அது வட திசை நோக்கியே அழைத்துச் செல்லுமாம், அண்டார்க்டிக்கா தென் முனையமாக இருப்பதால் அதன் எந்த பக்கமும் வட திசை நோக்கியதே.  திசை நோக்கித் தொழ வாய்ப்பு இல்லை, பண்ணாடுகள் அங்கு ஆய்வுக்கூடங்கள் அமைத்துள்ளன, அவர்களையும் சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கும் அங்கு கிறிஸ்துவ தேவாலயங்கள் ஒன்று இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆண்டில் ஒரே ஒரு பகலும் ஒரே ஒரு இரவும் மட்டுமே அங்கு வருகிறது.  அக்டோபர் துவங்கி பிப்ரவரி வரை சூரிய வெளிச்சம் கிடைக்கும், பின்னர் முழுவதுமாக இருட்டு தான், அந்த வேளையில் சூரியன் வட துருவத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டு இருக்கும். பகலாக இருக்கும் பொழுதுகளில் சூரியன் அதிக பட்சமாக 23.5 டிகிரி கோணத்திற்கு மேல் வருவது கிடையாது, நமக்கு தெரிவது போன்று கிழக்கு உதயம் மேற்கு மறைவு போன்ற நிகழ்வுகள் கிடையாது, 0 டிகிரியில் இருந்து 23 .5 டிகிரிவரை மூன்று மாத காலம் உயரவும் பின்னர் குறைந்து அடுத்த மூன்று மாத காலமும் மறையவும் துவங்கும், சூரியன் வட்டப் பாதையில் தரையில் இருந்து வானில் 23.5  டிகிரி சாய்வில் கடிகார திசைக்கு எதிராக வளையமாக சுற்றிவருதாகத் தெரியும். துருவங்களில் சூரியப் புயலினால் தாக்கம் வண்ண வேடிக்கையாகவும், பனித்துகளின் தூசிகளால் பல சூரியன்களும், சூரியனைச் சுற்றி பெரிய ஒளி வட்டமும் (Sun Dog) காட்சிக்கு வருவது இந்தப் பகுதியில் நடக்கும் இயற்கைக் காட்சிகள்.




நேரப் பகுதி : அண்டார்டிக்காப் பகுதியை எந்த ஒரு குறிப்பிட்ட நேரப்பகுதி (Time Zone) பகுதிக்குள் அடக்க முடியததால், தனிப்பட்ட நேரம் கிடையாது, ஆனாலும் வசதிக்காக நியூசிலாந்தின் நேரத்தை ஆராய்ச்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள். 

மக்கள் நடமாட்டம் : அண்டார்டிக்காவில் முதன் முதலாக கால் பதித்தவர்கள் என்கிற பெருமையை 31 அக்டோபர் 1956ல் Admiral George J. Dufek  என்பவரின் அமெரிக்க கடற்படை குழுமம் பெற்றிருக்கிறது, பிறகு பல நாடுகளில் இருந்து அங்கு ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டவர் பலர், டிசம்பர் 30, 1989, Arved Fuchs மற்றும் Reinhold Messner ஆகிய இருவர் அண்டார்டிக்காவின் கடற்கரைப் பகுதியில் இருந்து மையம் நோக்கி நடந்தே சென்று அடைந்துள்ளனர்.  அதன் பிறகு 2009ல் Todd Carmichael என்கிற அமெரிக்கர் 39 நாட்கள் நடைபயணமாக அடைந்திருக்கிறார், பின்னர் மற்றொரு நார்வேகாரர் Hercules Inlet என்பவர் அதே தொலைவை 2011 ஆம் ஆண்டில் 29 நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.  தற்பொழுது 1000 - 5000 பேர் ஆராய்ச்சியாளர்களாக பல நாடுகளைச் சார்ந்தவர்களாக அங்கு தங்கி இருக்கிறார்களாம்.

அண்டார்டிக்கா தனி கண்டம் என்றாலும் மையப்பகுதியில் இருந்து கோணம் கோணமாக பகுத்து அதனை அமெரிக்கா, அர்ஜென்டைனா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் பங்கு போட்டுக் கொண்டுள்ளன, அண்டார்டிக்காவிற்கு தனிப்பட்ட இணைய தள குறியீடாக .aq  (https://www.google.com/search?q=site:aq) உண்டு, அதில் 100க் கணக்கான இணைய தளங்கள் இயங்கிவருகின்றன. அண்டார்டிக்கா பகுதிகள் பல்வேல்வேறு நாடுகளால் பங்கு போட்டுக் கொண்டாலும் அந்த கண்டத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று வரலாம், முழுக்கண்டமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நாட்டின் இராணுவ செயல்பாடுகளும் தடுக்கபப்ட்டுள்ளது. கொஞ்சம் இயற்கை வளங்கள், தாதுத் பொருள்கள் இருந்தாலும் அவற்றை எடுப்பதற்கும் தடை உள்ளது.

ஓசோன் திறந்தவெளி அண்டார்டிக்காவின் மீது உள்ளது, ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகிவருவதால் அண்டார்சிக்காவின் பனி உருகினால் உலமே தண்ணீரில் மூழ்கிவிடும்.

அண்டார்டிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாரும் கிடையாது, பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு முழுவதும் ஆள் மாற்று (ஷிப்ட்) முறையில் மாறி மாறி தங்கிச் செல்கிறார்கள், மற்றபடி சுற்றுலா சாதனையாளர்கள் வந்து செல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள் தவிர்த்து வேறு யாரும் (அதாவது அக்டோபர் - மார்ச்) தவிர இரவு பொழுதுகளில் ஏப்ரல் - செப்டம்பர்) வரை வந்து செல்வது கிடையாது, சில நாட்களில் குறைவான நிலா வெளிச்சம் தவிர்த்து எப்போதும் இருட்டாகவே இருக்கும்.

சிலி நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அண்டார்டிக்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர், அதற்கான சுற்றுலா நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆஸ்திரேலியாவில் இயங்கும் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி வரையில் விமானப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளனர், இந்த விமானங்கள் அண்டார்டிக்காவில் தரையிறங்காது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே இருக்கும் அண்டார்டிக்காப் பகுதியில் தாழ்வாகப் பறந்து வட்டமடித்து திரும்பிச் செல்லும், அண்டார்டிக்காவின் கடும்பனியில் ஓடுதளம் அமைக்கவோ அதனை பரமரிக்கவோ வாய்ப்பில்லை என்பதால் அண்டார்டிக்காவின் குளிர் குறைவாக இருக்கும் காலங்களில் மேலே இருந்து சுற்றிப் பார்க்கும் ஏற்பாட்டை ஆஸ்திரேலியா நிறுவனங்கள் செய்துவருகின்றன.

கோடை காலங்களில் (குறைவான குளிர் காலங்களில் மற்றும் சூரிய வெளிச்சம் உள்ள காலங்ங்களில்) சிலி நாட்டின் புன்டோ ஏரிஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 100 பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமானங்கள் அண்டார்டிக்காவுக்கு அருகே இருக்கும் கிங்க் ஜார்ஜ் தீவிற்கு செல்கிறது, அங்கிருந்து சிறிய கப்பல் வழியாக அண்டார்டிக்கா கடற்பகுதியை அடைகின்றனர், இது 7 நாள் கொண்ட சுற்றுலாவிற்கு அமெரிக்க வெள்ளிகள் 15,000 வரை செலவாகும்.

பூமியின் வியப்புகளில் அண்டார்டிக்கா ஆகப் பெரிய வியப்பு

5 செப்டம்பர், 2008

போனால் மயிராப் போச்சு ... ?

மயிறுதானேன்னு தாழ்வாக நினைக்கிறோம், கர்ணன் கவசகுண்டலத்தோடு பிறந்தான் என்ற கதைப் போல பிறக்கும் போது தலைத் தப்புவதற்கான சிறிய பாதுகாப்பு கவசமாகவே மயிருடன் தான் பிறக்கிறோம், பின்னாளில் பருவ வயதிற்கு ஏற்றார் போல, பருவத்தின் புற அடையாளமாகவே உடலில் பல பாகங்களிலும் மயிர்கள் தோன்றி வளர்கின்றன.

மயிர்வளரும் இடங்கள் ஆண் / பெண் இருபாலருக்கும் பொதுவில் என்றாலும், ஆண்களுக்கான முக அடையாளத்தை வழங்குவது மயிர்கள் தான். முகங்களில், மார்பு பகுதிகளில் வளரும் மயிர்கள் ஆண்களுக்கு மிகுந்த அளவில் சுரக்கும் ஆண்டோரோஜன் எனப்படும் ஆண் தன்மைக்கான சுரப்பிகளின் செயல்பாடுகளைப் பொருத்தே இருக்கிறது. இது கூடுதல் குறைவாக இருக்கும் இருபாலருக்கும் அதன் விளைவுகளாக அந்த பகுதிகளில் இருக்கும் மயிர்களின் எண்ணிக்கை / அடர்த்தி இருக்கும்... தெரிஞ்சது தானே.

மனிதன், விலங்குகள், பறவை இனங்களுக்கு மிகுந்த அளவிலும், பூச்சி இனங்களுக்கு அரிதாகவும் மயிர்கள் உடல்களில் இருக்கின்றன. உடலில் உள்ள மயிர்கள் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் கருவியாகவும்செயல்படுகின்றன. பெரும் வியப்பு, கடும் குளிர் போன்ற நேரங்களில் மயிர்கள் நேராக நின்று கொள்ளும் அதனைத் தானே மயிர்கூச்செரிதல் என்று சொல்லுவோம்

உடல் உறுப்புக்கள் தவிர்த்து மயிர்களால் மனிதனுக்கான நேரடி பயன் எதுவும் இல்லை என்ற கருதியதால், மனித இனம் தேவைப்படும் போது மழித்துக் கொள்ளவும், தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ளவதற்கான பயனாக மாற்றிக் கொண்டுள்ளனர். பண்டைய எகிப்து நாட்டில் தலைகளை எப்போதும் மொட்டையடித்துக் கொண்டே இருப்பார்களாம், சென்ற நூற்றாண்டு வரை இந்திய ஆண்கள் பெண்களைப் போலவே நீளமாக மயிர்களை வளர்த்து கொண்டை முடிந்து வந்திருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும் அல்லவா. அதற்கு காரணம் இன்றைய மழிக்கும் முறைகளைப் போல் அல்லாமல் முடிகளை அடிக்கடி மாற்றி அமைத்துக் கொள்வதற்கான சாதனங்கள் குறைவாக இருந்திருக்க வேண்டும். முடித்திருந்தம் என்பவை இந்த நூற்றாண்டில் அழகுக் கலைகளில் ஒன்றாகவே பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. மதப் பழக்க வழங்கங்களில் ஒன்றாக யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மறைவிட மயிர்களை அவ்வப்போது மழித்துக் கொள்வர். நகமும், மயிரும் வெட்டுவதற்காகவும், வெட்டினாலும் வளரக்கூடியது தானே. நவநாகரீக உலகில் பருவமடைந்தவர்கள் அனைவருக்குமே சுகாதாரத்திற்காக அவற்றை அவ்வப்போது அகற்றிக் கொள்ள வழியுறுத்தப்படுகின்றன.

ஒருவரின் தோற்றம் குறிப்பாக ஆண்களின் தோற்றத்தில் தலைமயிர்களின் பங்கு இன்றைய அழகுணர்வில் ஒன்றிப் போய் இருப்பதால் தானே, சூரியனுக்கு தலைகாட்டும் ஆண்கள் புலம்புகிறார்கள் ? எனது நண்பர்கள் சிலருக்கு 25க்குள் திருமணம் விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்திருக்கிறது, காரணம் அவர்கள் தலைகளில் முடிகளின் எண்ணிக்கை விரைவாக குறைய ஆரம்பித்தே. மனித இயற்கை அமைபின் படி 50 வயதுக்கு மேல் பாரம்பரிய தன்மையினால் வழுக்கை இருந்தால் வழுக்கை விழுவே செய்யும் அது இயற்கைதான், அதற்காக புலம்புவது, மன உளைச்சல் அடைவது தேவையற்றது. வழுக்கையும், நரை போன்று பொதுவான முதுமைக்குள் நாம் செல்வதற்கான அறிகுறிதான். இளம் நரை, இளம் வழுக்கை எல்லாம் உடலியலில் உள்ள சிறு குறைப்பாட்டினால் ஏற்படுபவை. அதற்கான மாற்று சிகிச்சை முறைகள் இருப்பதாக விளம்பரப்படுத்தப்பாட்டாலும் 100 விழுக்காட்டு நிவாரணம் என்பது இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று.


சாக்லேட்களில் மனித மயிர்களைச் சேர்க்கிறார்கள் என்று படித்தேன், அதன் பிறகு சாக்லேட் சாப்பிடும் போதெல்லாம் சுவையுடன் சேர்த்து நாக்கில் எதோ தட்டுப்படுவது போலவே உணர்க்கிறேன் :)

மயிர் பாதுக்காப்பு, மயிர் அழுகு இவற்றிற்காக வளர்ந்துள்ள தொழில் நுட்பங்கள், அதற்கான நிறுவனங்கள் உலக அளவில் நல்ல லாபம் ஈட்டும் பெரிய தொழில்களாகவே வளர்ந்து நிற்கின்றன. உணவு, உடை அடுத்து மயிர் பராமரிப்புக்குத்தான் தனிமனிதனின் செலவிடப்படுகின்றன. தன்னிடம் உள்ள ஒன்றை விருப்பம் போல் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றால் அது மயிர்தானே.

தமிழ், இந்திய சூழலில் பெண்களின் கூந்தலைப் புகழாத கவிஞனே இல்லை என்னும் அளவுக்கு பெண்களின் அழகில் மயிர்கள் முதன்மை பங்காற்றி வருவதாகவே கருதுகிறார்கள். இன்றும் கூட தலை அழகை சீர்குலைத்தால் பெண்களின் பால் உணர்வுகள் கட்டுபடும் என்றோ, அல்லது பிறரின் காமப் பார்வையிலிருந்து தப்புவாள் என்பதற்காக பார்பனர் மட்டுமல்லாது பல்வேறு பிரிவினரிடையே இருக்கும் மூடப்பழக்கத்தில் ஒன்றாக கணவனை இழந்த பெண்டீர்களுக்கு தலை மொட்டையடிக்கப்படும் கொடுமை அங்கங்கே இழைக்கப்படுகிறது. அந்த பெண்களுக்கு தலை மயிரை மழிப்பதனால், கணவனை இழந்த பிறகு எல்லாவற்றிற்கும் தீர்வாக அமையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை தானே.

சிங்கம் சிங்கிளாக வந்தாலும் அதற்கு பிடறியில் இருக்கும் கூட்டமான மயிரோடு வந்தால் தான் பெருமிதமான தோற்றமே கிடைக்கும்.

அவரவர் தாய்மொழியில் இருக்கும் சொல்லைப் பயன்படுத்துவதில் என்ன குறையோ, உதிர்ந்த மயிருக்கும் இருக்கும் அதே மதிப்பைத் தான் 'மயிர்' என்ற சொல்லுக்கும் கொடுத்து, அதனை மொழியில், பேச்சில் பயன்படுத்துவதையே இழிவாகவும் தாழ்வாகவும் நினைக்கின்றோம், மயிர் என்று எழுத தயங்கி அங்கெல்லாம் ரோமம் (வடமொழி) அல்லது முடி (கொண்டை முடிதல் என்ற சொல்லின் சுருக்கம்) என்று எழுதுவும் சொல்வதும் நாகரீகம் என்று நினைக்கின்றனர், ஆங்கிலத்தில் கூட நாளடைவில் அறுவெறுப்பாக கருதப்படும் சொற்பரிணாமத்தில் ஒன்றாக லெட்ரீன் > பாத்ரூம் > டாய்லெட் > தற்பொழுது ரெஸ்ட் ரூம் என்று கழிவறைக்குச் சொல் வரையப்படுகிறது. மயிர் என்ற சொல் அருவருப்பானதாக எனக்கு படவில்லை. மயில்களின் வண்ண மயிர்களின் தொகுப்பைத் தானே தோகை என்கிறோம்.

கோவிலுக்கு மயிரைக் காணிக்கையாக்குவதன் மறைமுகக் காரணம் என்னவாக இருக்கும் ? வேண்டுதல் நிறைவேற்றியதற்காக நான் அழகானவன்(ள்) என்பதை உன் பொருட்டு தற்காலிகமாக இழக்கிறேன்... சுறுக்கமாக வேண்டுதல் பொருட்டு தனக்கு முடியினால் கிடைக்கும் அழகை கடவுளுக்காக துறப்பது. இதைத் தவிர வேறு விளக்கம் இருந்தால் சொல்லுங்க.

போனல் மயிராப் போச்சு ... ! என்று மயிர்களை இழிவின் அடையாளம் போல் அதனை பழிப்பு பழமொழியில் பயன்படுத்துகிறோம். மயிர் போனவர்கள் அதனை ஈடுகட்ட, சீர்செய்ய செலவிடப் படும் பணம் உலக பொருளாதாரத்தில் முதன்மை பங்காற்றுகிறது என்பதையும் உணருவோம்.

உடல் வெளுப்பாக இருந்தாலும் மயிர் கருப்பாக இருப்பதைத் தானே அனைவரும் விரும்புகிறார்கள், முடி வெளுக்க ஆரம்பிக்கும் போது மன அளவில் தாக்கம் ஏற்படாதவர்கள் மிகக் குறைவே.

நல்லது... மயிரை பற்றி எழுதினால் அதன் தொடர்புடைய தகவல்கள் மயிரைப் போலவே வளர்ந்து கொண்டே செல்லும். படிப்பவர்கள் அங்கங்கே வெட்டிவிடுவார்கள். ஒரு அளவோடு நிறுத்திக் கொள்கிறேன் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்