பின்பற்றுபவர்கள்

கணிணி வைரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணிணி வைரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 மே, 2010

*வைரஸ்* - தமிழ் ஓவியா வலைத் தளத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் !

திக தலைவர் கி.வீரமணி அவர்களின் புகழ்பாடும் பதிவர் திரு தமிழ் ஓவியாவின் வலைதளத்தில் வைரஸ் புகுந்துள்ளது. அந்த வலைதளத்திற்கு செல்லுவோர்களை வைரஸ் தாக்கக் கூடும், ஜெயமோகன் வலைத்தளத்தில் இருந்தது போன்ற அதே வைரஸ்.

* தமிழ் ஓவியாவின் வலைதளம் கூகுள் ப்ளாக் ஸ்பாட் என்றாலும் இணைத்திருக்கும் ஏதேனும் ஒரு பாடாவதி விட்ஜெட் வைரஸ் வழங்கும் சேவையையும் சேர்த்தே வழங்குகிறது என்று நினைக்கிறேன்.

* தமிழ் ஓவியா தேவையில்லாத விட்ஜெட்டுகளை நீக்கினால் வைரஸ் சரியாகிவிடும்

* தமிழ் ஓவியாவின் தளத்தை ஆண்டவனே (சிவனோ, விஷ்னுவோ, அல்லாவோ, ஜீஸஸோ அல்லது சோ இராமசாமியோ, நித்யானந்தமோ) தண்டித்துவிட்டார்கள் என்போர்களின் வலைதளம் கூட ஒருநாள் தேவையற்ற விட்ஜட்டுகளினால் பாதிக்கப்படலாம்.

* வைரஸ் பிரச்சனை சரியாகிவிட்டது என்று தமிழ் ஓவியா அறிவிப்பு வெளியிடும் வரை யாரும் செல்லாதீர்கள், அதையும் மீறி படிக்க ஆவல் கொண்டால் நேரடியாக விடுதலை இணையத்தளத்திற்கு சென்று படிக்கலாம். அண்ணன் தமிழ் ஓவியா விடுதலையில் இருந்து எடுத்து தான் 90 விழுக்காடு இடுகைகள் போடுகிறார்

21 ஏப்ரல், 2010

ஜெயமோகன் வலை தளத்தில் கணிணி வைரஸ் !

நான் நெருப்பு நரி இணைய உலாவி பயன்படுத்துகிறேன். நேற்று ஜெயமோகன் வலைத்தளத்திற்கு சென்ற போது மால்வேர் எனப்படும் இணைய தளம் வழியாக பரவும் மென்பொருள் கிருமியின் பக்கம் தானாகவே திறந்து 'உன் கணிணியில் வைரஸ் இருக்கு.....சரி பார்க்கவா ?' என்று கேட்டது. உடனேயே எச்சரிக்கையுடன் நெருப்பு நரியின் கழுத்தை பிடித்து நெறித்துவிட்டேன். (Task Manager > Processes > Firebox > End Task) . ஒருவேளை வேறு இணையத்தளத்தில் இருந்து வந்திருக்காலம் என்கிற முடிவில் விட்டுவிட்டேன். இன்று மறுபடியும் ஜெயமோகன் வலைப்பதிவுக்குச் சென்றால் அதே மென்பொருள் கிருமி (packupdate_build30_2045.exe)அதே வேலையைக் காட்டி உன் கணிணியில் நிறுவட்டுமா ? என்று கேட்டது. அது உலவியில் காட்டும் படம் நம் கணிணியில் வைரஸ் இருப்பது போன்று வெறும் தோற்றம் தான். ஆனால் அதை நம்பி நாம் அதை (packupdate_build30_2045.exe) க்ளிக் செய்துவிட்டால் அப்பறம் கணிணியில் கிருமி சம்மணம் போட்டு அமர்ந்துவிடும்.
(படத்தின் மீது அழுத்தி பெரிதாகப் பார்க்கவும், அது வெறும் ப்ளாஸ் இமேஜ் தான்... உண்மையில் உங்கள் கணிணியில் பிரச்சனை எதுவுமே இருந்திருக்காது, இது காட்டும் ஐபியும் தவறான ஐபி)

கிருமி எதிர்ப்பு மென்பொருளை (Anti-Virus) கணிணியில் நிறுவாதவர்கள், ஜெயமோகன் வலைத்தளத்திற்கு தற்காலிகமாக செல்வதைத் தவிர்க்கவும், விரைவில் வலைத்தள நிர்வகிக்கும் பொறுப்பாளர்களிடம் சொல்லி அதை ஜெயமோகன் சரி செய்வார் என்று நம்புகிறேன்.

கணிணியில் அந்த மென்கிருமி நுழைந்தால், கணிணி நினைவகம் பாதிப்புக்கு உள்ளாகும், ஸ்பேம் சர்வராக மாறி அந்த கணிணியில் இருந்து நிமிடத்திற்கு 1000 ஸ்பேம் (வியாபார, விளம்பர) மின் அஞ்சல்களை இணையம் வழியாக அனுப்பத் துவங்கும், அதற்கே ப்ராசரின் முழு பலமும் தேவைப்படும் என்பதால் கணிணியின் மற்ற வேலைகள் மிக மிக மெதுவாக நடைபெறும். நீக்குவதற்கு Anti-Virus மென் பொருளை நாட வேண்டி இருக்கும், இல்லை என்றால் முழு இயங்கியையுமே ( Operating System) நீக்கிவிட்டு (Format), திரும்பவும் நிறுவ (Install) நேரிடலாம்.

ஜெயமோகன் வலைத்தளத்தில் கிருமி என்று அவரது வாசகர்கள் அவருக்கு தகவலைக் கொண்டு சேர்த்து அதனைச் சரி செய்யச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்