பின்பற்றுபவர்கள்

21 அக்டோபர், 2013

சிங்கப்பூர் கோவில்கள் தானே எழுந்தவையா ?

இன்னிக்கு சிங்கப்பூரில் மாரியம்மன் கோவில் தீமிதி, பெருமாள் கோவில் செரங்கூன் சாலையில் இருந்து டாங்க் சாலை வரை கிட்டதட்ட 4 கிமி சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரவுக்கு இடையூரா வண்ணம், தீ மிதிக்கு அன்பர்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து பாதுகாவலர்களையும் அமர்த்தி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அரசு சார்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது சிங்கப்பூர் அரசு, இது போன்று தைபூசம் காவடிக்கும் அரசு தரப்பு சிங்கப்பூர் வாழ் தமிழர்களை மதித்து ஏற்பாடுகளை செய்யும், சாலை போக்குவரத்தில் குறிப்பிட்ட மணிகளுக்கு ஒரு சில மாற்றங்களையும் செய்துகொடுப்பார்கள். தமிழர்கள் சிறுபான்மை சமூகமாக வாழும் சூழலில் இத்தகைய ஏற்பாடுகள் (மலேசியா தவிர்த்து) வேறு நாடுகளில் எங்கும் கிடைக்காத ஒன்று. 

இன்றைக்கு 4000 ஆண்கள் தீ மிதிக்கிறார்களாம். வெறும் முற்போக்கு சிந்தனை என்றால் 'என்ன கருமாந்திரம், நாடுவிட்டு நாடு வந்து வாழ்ந்தாலும்' தீ மிதி சாமியாடுவது, தீச்சட்டி என்று பழமையிலே வாழ்கிறார்களே என்கிற எண்ணம்  எனக்கு இருந்திருக்கும், ஆனால் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி அதைத் தொடர இங்கு குடியேறியவர்கள் எத்தகைய முயற்சிகளையெல்லாம் எடுத்திருக்கக் கூடும் என்று நினைக்க அவர்களை பாராட்டவும், பெருமை கொள்ளவும் நேர்கிறது, சிங்கப்பூர் இந்திய சமூகம் என்பவை இன்றைக்கு எங்களைப் போன்று படித்தவர்களாக பாதுக்காப்புடன் குடும்பமாக குடியேறியவர்களும் அல்லர், வெள்ளைக்காரனின் எடுபிடி ஆட்களாக இங்கேயே தங்கும் சூழலில் கலப்பினங்களை மணந்து உறவுகளைப் பெருக்கிக் கொண்டும், தமிழகத்தில் இருந்து உறவுக்காரர்களை மணந்து பெருகிக் கொண்டர்வளாகவும் பெருகியவர்கள் தாம். 

தம்மை பெருளாதாரத்தில் வளர்த்துக் கொள்ளாவிட்டாலும் சமூமாக முன்னேறுவதன் மூலம், வரும்கால வாரிசுகள் சமூகம் ஏற்படுத்தி வைக்கும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டு முன்னேறும் என்ற  நம்பிக்கையுடன் தமிழ் சார்ந்த அமைப்புகளையும், கோவில்களையும் ஏற்படுத்து வைத்துள்ளனர், இங்கும் சாதிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில்கள் உள்ளன என்றாலும் யார் யார் கோவிலுக்கு வரலாம் என்ற வரையறையெல்லாம் எதுவும் கிடையாது கோவிலுக்கு ஏற்ற உடையுடன் செருப்பு அணியாமல் யார் வேண்டுமானாலும் கோவில்களுக்கு சென்று வரலாம், சிங்கப்பூர் இந்தியர்களில் (தமிழர்களில், இவர்களெல்லாம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே வந்தவர்கள், ஏன் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் இந்தியர்கள் என்கிறார்கள் என்பதற்கு காரணம் பெரிய நிலப்பரப்பை சொல்வது சமூகம் சார்ந்த அடையாளத்தில் கூடுதல் மதிப்பை தரும் என்கிற எண்ணமாகக் கூட இருக்கலாம்) இந்துக்கள் மட்டுமின்றி, தமிழ் கிறித்துவர்கள் மற்றும் தமிழ் இஸ்லாமியர்களுக்கும் தேவலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளன.



கடந்த 30 ஆண்டுகளுக்கு எங்களைப் போன்று குடியேறியவர்கள் முன்பு குடியேறியவர்கள் அமைத்துள்ள வசதி வாய்ப்புகளைத் தான் பயன்படுத்திக் கொள்கிறோம், சிங்கப்பூரில் முருங்கைகாயும், பனங்கெழங்கும் கிடைக்கிறதென்றால் அவற்றை விற்பனை செய்யும் கடைகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவானவைதான், செரங்கூன் சாலைக்கு சென்றால் தமிழகத்தின் பகுதி போல் தோன்றும், மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இவையெல்லாம் ஒரே இரவில் உருவானவை அல்ல.  இவற்றை இன்னும் மிகுதிப்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவகளில் 50 விழுக்காட்டினருக்கும் மேல் சேற்றில் ஒரு காலும் ஆற்றில் ஒருகாலுமாக இங்கே ஈட்டுவதை தமிழத்தில் சொத்துவாங்குவது அங்கு 'சிங்கப்பூர்காரர்' என்ற புகழுடன் வாழ்வதையே விருப்பமாகக் கொண்டு செயல்பட்டதால் சீனர்களைப் போல் மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவோ, சிங்கப்பூரில் சொத்து வைத்திருப்பவர்களாகவோ இந்திய சமூகம் பெரிய அளவில் வளர்ந்திருக்கவில்லை, சீனர்களில் பணக்காரர்கள் 10 விழுக்காடு என்றால் 10 விழுக்காடே வசிக்கும் இந்தியர்களில் பணக்காரர்கள் 1000ல் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே.

முகவரிடம் பணம் கட்டி தனியாக வேலைக்கு வந்தவர்கள் தவிர்த்து, சிங்கப்பூரில் குடும்பமாக வசித்தவர்கள் இந்தியாவில் சொத்துவாங்காமல் இங்கேயே முதலீடு செய்திருந்தால் இந்திய சமூகம் தன்னிறைவு அடைந்திருக்கும், ஆனால் எங்கு கடைசிகாலம் என்பதை குழப்பி குழப்பி இந்தியாவில் சொத்து வாங்கி அங்கேயும் சென்று வசிக்காமல், தானும் அனுபிக்காமல் சொந்தக்காரனை சொத்து அனுபவிக்கவிட்டவர்களால் தான் நம்மால் பெரிய அளவில் சமுக உயர்வை பெற முடியவில்லை என்பதை இங்குள்ள பெரிசுகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில் படித்து அங்கு சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இங்கே வந்து இங்குள்ள இந்தியர்கள் கழிவறைகளில் வேலைபார்ப்பதைப் பார்க்கும் பொழுது முகம் சுளித்து (நம்ம சமூகத்திற்கு தலைகுணிவு என்றெண்ணி அவர்களுடன் பேச விரும்பாதவர்களே மிகுதி. இங்கேயே பிறந்தவர்கள் ஏன் இந்த வேலையை செய்கிறார்கள் என்று வருபவர்கள் யாரும் சிந்திப்பதே கிடையாது, கழிவறையில் வேலைபார்க்கும் சிங்கப்பூர் இந்தியர்கள் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே, அவற்றிற்கும் கீழே உள்ளவர்களில் படிக்காதவர்கள் ஓட்டுனர் வேலைக்கும், பாதுகாவலர் வேலைக்கும் சென்றுவிடுகிறார்கள், ஆனால் தற்பொழுது 25க்கு உட்பட்ட இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருமே படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதுடன் நல்ல வேலைக்கும் செல்கிறார்கள்.

தற்போதைய குடியேறிகளான எங்களுக்கு உறவுக்காரர்கள் கூட இல்லை என்பதைத் தவிர்த்து பெரிதாக குறை எதுவும் இல்லை, அதும் இன்றைய அலைபேசி வசதியிலும் தீர்ந்துவிடுகிறது, பட்ஜெட் விமானத்தில் ரூபாயில் 10,000 நேரடியாக சென்று பார்த்துவிடலாம், இணையத்திலும் வீடியோ வழியாக பார்க்க முடிகிறது, 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் நிலமை ?

வெளிநாடுகளில் எங்கேயாவது நம் பண்பாட்டு சார்ந்த வழிபாட்டுத் தளங்களுக்கு சென்றால் அங்கு உள்ள கடவுளை கும்பிடுவதற்கு முன் இவற்றை நமக்காக ஆக்கி வைத்திருப்பவர்களையும் நன்றியோடு நினையுங்கள். நான் சொல்வது சென்னைக் கூட பொருந்தும், படித்துவிட்டு சென்னைக்கு குடியேறுபவர்கள் சென்னைக்காக எதை கிள்ளிப் போட்டார்கள் ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்