பின்பற்றுபவர்கள்

28 டிசம்பர், 2013

குட்டி இந்தியா கலவரம் பற்றி ...

சிங்கையில் இவ்வளவு நடந்திருக்கிறது, சிங்கையில் இருக்கும் இவரு ஏன் வாயத்திறக்காமல் இருக்காருன்னு பலர் நினைக்கக் கூடும், நேரமின்மைத் தவிர்த்து, இந்தியசார்பு ஊடகங்களில் இவை எவ்வாறெல்லாம் திரித்து எழுதப்பட்டு, உணர்ச்சி தூண்டுதலை உருவாக்குகிறார்கள் என்று கவனித்து வந்தேன்.

சென்ற டிச 9 ஆம் தேதி அலுவலகம் சென்ற பிறகு தான் முதல்நாள் இரவு குட்டி இந்தியாவில் கலவரம் நடந்தது பற்றி தெரியவந்தது. இந்தியர்கள் குறிப்பாக ஒப்பந்த பணிக்கு முகவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கட்டி வந்தவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது தெரிய வந்ததும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது, 'உங்காளுங்க ...?' என்பது போல் பிற இனத்தவரும், வட இந்தியர்களும் நம்மைப் பார்த்து பார்வையிலேயே கேட்கும் பொழுது விட்டுக் கொடுக்க முடியாமலும், மென்று விழுங்க முடியாமலும் கொஞ்சம் அவமானமாக கூனிக்குறுகியது உண்மை.

ஒப்பந்த வேலைக்கு வந்தவர்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் அங்கு சென்றிருக்கும் சீனர்களை தாக்கி இருந்தால் நிலமையின் விபரீதம் குறித்து அச்சமுற்றேன். கலவரம் ஏற்படுத்தியவர்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது, என்னைக் கேட்டால், எடுத்துக்காட்டிற்கு ஒரு சிலர் குடித்திருக்கும் ஒரு பெரிய கூட்டத்தில் கல் எரியும் போது ஏற்படும் கொந்தளிப்பிற்கு பிறகு அவற்றை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்தமாக ஏற்படும் கோபம் அதனால்  'உணர்ச்சிவசப்படுதல்' என்பது தவிர்த்து பெரிய காரணம் இல்லை. ஒரு விபத்தில் / விபத்தாக ஏற்பட்ட மரணமும், அதில் இரத்த்தை கண்டதால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கோபமும் இந்த  கலவரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கருதுகிறேன்.

இங்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் எதுவும் ஒப்பந்த ஊழியார்களுக்கு சிங்கப்பூரின் கட்டுப்பாடுகள் குறித்து தெளிவாக சொல்வது கிடையாது, இங்கு எந்த ஒருகாரணத்திற்காகவும் வேலை புறக்கணிப்பு அல்லது எந்த போராட்டமும் செய்வதற்கு அனுமதி இல்லை, குறைகளை மனித வள அமைச்சிடம் தெரிவிக்கலாம். எந்த ஓரு ஆயுதம் ஏந்திய தாக்குதல் என்றாலும் கடுமையான தண்டனைகள் உண்டு இதற்கு சிங்கப்பூர்வாசிகளுக்கும் சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. சிங்கப்பூரில் குப்பைப் போடக்கூடாது, எச்சில் துப்பக் கூடாது என்று வேலைக்கு எடுப்பவர்களிடம் முகவர்கள் சொல்கிறார்களே அன்றி, வேலை புறக்கணிப்பு போராட்டம் மற்றும் கலவரம் செய்தால் கிடைக்கும் தண்டனைகள் குறித்து தெளிவாக அறிவுறுத்துவதில்லை, இதற்கு காரணம் இவ்வாறெல்லாம் நடக்காது என்கிற அசட்டுதனமான நம்பிக்கை அல்லது முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம்.

சிங்கபூரின் பொருளாதாரம் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், சுற்றுலாத் துறை இவற்றை நம்பியே இருக்கிறது, தவிர தனிமனித பாதுகாப்புக்கும், அவர்களது உடமைகளுக்கும் முதன்மைத்துவம் கொடுப்பதால் பெண்களால் இரவு இரண்டு மணிக்கு மேல் கூட வேலையில் இருந்து வீட்டுக்கு தனியாகவே திரும்ப முடிகிறது, இவை அனைத்தையும் கெடுக்கும் துவக்கமாக கலவரம் நடந்ததுவிட்டதோ என்று நினைக்க சிங்கப்பூரின் எதிர்காலம் / பொருளாதாரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, இவற்றை ஒடுக்கவேண்டும், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்தியர்கள் / தமிழர்கள் கூட்டமாக இருந்தாலும் கலவரம் செய்யமாட்டார்கள் என்று நம்பித்தான் அரசு அவர்களை பொது இடத்தில் கூடவும், குடிப்பதைக் கூட கண்டும்காணமால் இருந்தது, இப்படிக் கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துவிட்டார்கள் என்பதே தமிழர்களின் மனநிலையாக உள்ளது, இவர்களால் அந்தப்பகுதி வியாபாரிகளுக்கும் பெருத்த நட்டம், நிலைமை பழையபடிக்கு திரும்ப ஆறுமாதகாலம் கூட ஆகலாம், ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை குட்டி இந்தியாவிற்கு செல்வதையே பலர் தவிர்க்கும் பொழுது அந்த எண்ணிக்கையை மேலும் மிகுதியாக்கிவிட்டது இந்த நிகழ்வு.

இந்த பிரச்சனையில் அறிக்கைவிடுகிறேன் என்கிற பெயரில் தமிழக அரசியல்வாதிகளும், சன் தொலைகாட்சியில் நடந்து கொண்டது மிகவும் அநாகரீகம், பொத்தாம் பொதுவாக இனக்கலவரம், தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், முடங்கிக்கிடக்கிறார்கள் என்றெல்லாம் அறிக்கைவிட்டார்கள், இந்தியாவில் / தமிழகத்தில் கலவரத்திற்கு பிறகு நடக்கும் 'விசாரணைகளை' ஒப்பிட லிட்டில் இந்தியா பகுதிகளிலும், ஒப்பந்தப் பணியாளர்கள் தங்கி இருந்த விடுதிகளிலும் நடந்த விசாரணைகள் மிகவும் கண்ணியமானவை. அமைச்சரே நேரில் சென்று தவறு செய்யாதவர்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்று ஆறுதல் கூறிவந்தார்.


அடிப்பட்டு உருக்குலைந்த ஆம்புலென்ஸ் உள்ளிட்டு, அங்கு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உண்டு என்பதால் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம்

இந்திய ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சிங்கையில் மத / இனப்பாகுபாடுகள் பார்த்து சிங்கை அரசு செயல்படுவது கிடையாது, திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிட குடியுரிமை பெற்ற / நிரந்தரவாச இந்தியர்கள் / தமிழர்கள் பாதுகாப்புடனும், நல்லவசதியுடனும் மகிழ்வுடனும் இருக்கிறார்கள். வெளிநாட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கும் வேலை இடத்தில் முறையான பாதுகாப்பும், ஊதியத்தேதிக்கு அன்றே ஒப்பந்தம் செய்த ஊதியம் அளிக்கப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பது தவிர்த்து ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இவ்வெறெல்லாம் இந்தியா உள்ளிட்ட வேறுநாடுகளிலும் நடக்கிறதா என்பதே கேள்விக்குறி. எனவே அரசியல்வாதிகளும் தமிழக செய்தி இதழ்களும் கண்ணியத்துடனும் உண்மைகளை விசாரித்த பிறகே எழுதவும், தேவையற்ற இனப்பூசல்களுக்கான தூபம் சிங்கப்பூருக்கு வெளியே ஏற்படுத்துவது ஒரு நாட்டினரின் மேல் இருக்கும் பொறாமை / பெறுப்பின்மை என்று நினைக்கத் தோன்றுகிறது.

நடந்த கலவரத்தை பெரிதுபடுத்தாமல் சிங்கப்பூரும் சிங்கப்பூர் வாழ்தமிழ்மக்களும் மென்மேலும் வளருவார்கள்.

6 டிசம்பர், 2013

சத்தமில்லாமல் பணம் சு(ருட்)டும் பட்ஜெட் விமான சேவைகள் !

கட்டுபடியான கட்டண சேவை என்ற அளவில் பட்ஜெட் விமான சேவைகள் கொடிகட்டி பறக்கின்றன, இதன் மூலம் நடுத்தர வர்கம் விமான சேவையைப் பயன்படுத்தி ஓரளவு பிற நாடுகளையும் பார்த்து உள்நாட்டிலும் பயணிக்க வசதியாக உள்ளது. ஆனால் பட்ஜெட் விமானங்களுக்கு குறைந்த கட்டணம் எப்படி வாய்ப்புக் கூறு ஆகிறது என்று பார்த்தால் மயக்கம் போடும் அளவுக்கு அதன் பின்புலன்கள் நம்மை வியக்க வைக்கின்றன. 

ஒரு பட்ஜெட் விமானத்தில் முன்பே திட்டமிருந்தால் ஒரு ஆண்டுக்கு முன்பு முன்பதிவு செய்துவிட்டால் கட்டணம் மிக மிகக் குறைவு.ஆனால் இவ்வாறு திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் மிகக் குறைவே, இதனை தூண்டும் விதமாக 75 வெள்ளிக்கு சென்னை - சிங்கப்பூர் என்று குறிப்பிட்ட தேதிக்கான சிறப்புக் கட்டணம் என்று கூறி ஆறுமாதம் முன்பு விளம்பரம் செய்வார்கள், 75 வெள்ளிகள் என்றால் இந்திய ரூபாய்க்கு 3750. இது ஒருவழிக்கு மட்டுமே திரும்பும் கட்டணம் 75 வெள்ளி ஆக 7500 ரூபாய். பொதுவான விமானக் கட்டணம் 15,000 ரூபாய் என்றால் இது அதில் பாதி அளவே என்பதால் சரி முன்பதிவு செய்வோம் என்று முண்டியடித்து பலர் முன்பதிவு செய்துவிடுவார். விமான சிறப்பு கட்டண விளம்பரத்தில் தெளிவாக தேதி மாற்ற முடியாது மாற்றினால் கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது என்பதையும் குறிப்பிட்டுவிடுவார்கள்.

இவ்வாறு முன்பதிவு செய்தவர்களில் குறிப்பிட்ட தேதியில்  பயணிக்க விடுப்பு மற்றும் உடல் நிலை ஒத்துழைப்பு கிடைப்பவர்கள் சரிபாதியோ அல்லது அதற்கு சற்று மேலும் கூட இருக்கலாம். குறிப்பிட்ட நாளில் விமான சேவைக்கு தடங்கல் ஏற்பட்டால் வேறு தேதிக்கு பயணச் சீட்டு தருவார்கள் என்றாலும் அன்றைக்கும் செல்ல முடிந்தவர்கள் கனிசமாக குறைந்துவிடுவர். முன்பதிவு செய்தவர்களில் 50 விழுக்காட்டினர் வரமுடியாத நிலையில் விமானம் பறக்கும், வரமுடியாதவர்கள் கட்டியப் பணம் அம்பேல் தான். 75 வெள்ளி பயணச் சீட்டில் 25 வெள்ளி இருக்கைக்கும், 50 வெள்ளி அரசாங்க வரிக்கும் செல்லும், பயணி வராத நிலையில் 50 வெள்ளியை அரசாங்கத்திற்கு செலுத்த தேவை இல்லை என்ற விதி இருப்பதால், அவையும் சேர்த்தே விமான நிறுவன பாக்கெட்டிற்கு சென்றுவிடும்.

இவ்வாறு பயணிகள் பயணிக்காமல் விமான சேவை அரசு வரியாக பட்ஜெட் விமான நிறுவனங்களுக்கு கிடைக்கும்  பணம் ஆண்டுக்கு பல மில்லியன்கள். எந்த அரசும் பயணிக்காத விமான சீட்டுக்கு வரி வாங்க முடியாது என்பது விதி எனவே பட்ஜேட் விமான நிறுவனங்கள் பணத்தால் நிறம்பியே இருக்கும்.

பயணச் சீட்டுக்கு வரியாக கட்டிய பணத்தை திரும்பப் பெரும் உரிமை முன்பதிவு செய்தவருக்கு உண்டு என்றாலும், அவற்றை தந்திரமாக தன் வசம் வைத்திக் கொள்ளவும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் பல வழிகளை கையாளுக்கின்றன, பயணிக்க இயலாத நிலையில் 50 வெள்ளி வரியாக செலுத்திய பணத்தை திரும்ப பெறலாம் என்று நிறுவனத்தை அழைத்தால், கண்டிப்பாக தருவோம் ஆனால் அதற்கு நடைமுறைக் கட்டணம் (Process / Admin Fee) 100 வெள்ளி ஆகும் என்று கூறுவார்கள், யாராவது 50 வெள்ளியை திரும்ப வாங்க 100 வெள்ளி செலவு செய்ய முன்வருவார்களா ? அவ்வாறு வந்தாலும் அதிலும் பட்ஜெட் விமானங்கள் இன்னும் ஒரு 50 வெள்ளியை கரந்துவிடும்.

இந்த குளறுபடி ஏமாற்று எல்லாம் உலகில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் தெரிந்தாலும் எல்லோருமே ஒட்டுமொத்தமாக மவுனியாகத்தான் இதனை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவரால் குறிப்பிட்ட தேதியில் பயணிக்க முடியாமல் போனால் குறிப்பிட்ட விமான பயணச்சீட்டை வேண்டாம் (Cancel) என்று பதிந்துவிட்டால் வரியில் ஒருபகுதி அரசிற்கு செல்லுமாம், இல்லை என்றால் மொத்தமாக அரசுக்கும், பயணிக்கும் பட்டை நாமம்.

இப்ப தான் தெரிகிறது நம்ம தமிழ் நாட்டு சகோதரர்கள் ஏன் பட்ஜெட் விமான நிறுவன சேவையிலும் கால் பதித்தார்கள் என்பதே.

தொடுப்புகள் :

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்